Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்
5 posters
Page 1 of 1
உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்,
இஞ்சிக்குடி சுப்ரமணியம் குழுவினரின் மங்கல இசையுடன் நேற்று காலை 9.00
மணிக்கு துவங்கின. முதல் நிகழ்ச்சியாக, "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்
கூட்டம்' என்ற தலைப்பிலான கவியரங்கம், கவிஞர் வைரமுத்து தலைமையில் நடந்தது.
கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நெல்லை ஜெயந்தா, தமிழச்சி தங்கபாண்டியன்,
மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் கருணநிதி, விவேகா,
நா.முத்துக்குமார், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர். பார்வையாளர் அரங்கில்,
முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி
உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியின்
முதல் நிகழ்ச்சி என்பதால், அரங்கில் பல ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.
"யாரை அழைத்து வந்து கவியரங்கத்தை தொடங்கி வைப் பேன்...?' என்ற கவிதை
வரிகளுடன் ஈரோடு தமிழன்பன், கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.
"கலைஞர் என்பது
தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்,
ஆனால்,
அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...
அவரது கபால
களஞ்சியத்தில்
ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால்
கோபாலபுரம் வீட்டை
கொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்
இவர்
இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய
சங்கப்பாடலுக்கு எல்லாம்
இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...'
என, முதல்வர்
மீது தமிழன்பனின் கவிமழை பொழிய, அரங்கம் அதிர கரவோசை எழுந்தது. அடுத்து,
கவியரங்கத்துக்கு தலைமை வகித்த வைரமுத்து முழங்கினார்.
"பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள டீ கடையில் நின்றிருந்தேன்...' என துவங்கி,
தமிழச்சிக்கும் தனக்கும் இடையே நடந்ததாக கற்பனை கவிதை உரையாடலை அடுக்கி,
பலரையும் தன்வசம் ஈர்த்தார்.
அடுத்ததாக, கவிஞர் விவேகா பேசினார். எதுகை மோனையில் முதல்வரை
புகழ்ந்துபாடிய இவர்...
"சென்னைக்கு தெற்கே உள்ள
திருக்குவளையின்
தான்,
தமிழுக்கு கிழக்கு பிறந்தது...'
எனத் துவங்கி, முதல்வர்
கருணாநிதியை ராஜதந்திரி, முந்திரி, பாதிரி, ஒரு மாதிரி என அடுக்கிக்கொண்டே
போனார்.
இவரது பேச்சின் போது, அரங்கில் இருந்தோரில் பலரும் நெளிந்தனர்.
காரணம், இவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, "சமத்துவம் பூக்க...
கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்பது; ஆனால், தலைப்புக்கு
பெரும்பாலும் தொடர்பில்லாமலே இறுதிவரை நேரத்தை கரைத்து முடித்தார்.
அடுத்து "ஆதிக்கம்...' என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் கருணாநிதி,
முதல்வரை பார்த்து... "அய்யா, நீங்கள் நடந்து வரும் போது இருவர் மீது
கைவைத்து வருகிறீர்கள். இதற்கு காரணம், அகவையல்ல (வயது); தம்பிகளின்
இதயங்களையெல்லாம் உங்கள் இதயத்தில் சுமப்பதினால் பாதம் தாங்காமல், இருவர்
தோள் மீது கைவைத்து வருகிறீர்கள்...' என்றார். மேலும், "தமிழர்களே...
பொங்கலுக்கு கரும்பை வைத்து கும்பிடுகிறீர்கள் இனிமேல், தலைவர் தலைவைத்து
படுத்த இரும்புத் தண்டவாளத்தையும் கும்பிடுங்கள்...' என்றார். அடுத்து,
"பகுத்தறிவு தழைக்க...' என்ற தலைப்பில் நா. முத்துக்குமார் பேசினார்.
"சமதர்மம்...' என்ற தலைப்பில் கயல்விழியை பேச அழைத்த வைரமுத்து, "கலைஞர்
வீட்டுச் சொத்து' என வர்ணித்தார். மேலும், "யாருக்கு கிட்டும் இந்த
வாய்ப்பு? தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அம்மா பாராட்ட, சித்தப்பா
சீராட்ட... பாடவா பெண்ணே' என்றழைத்தார்; பார்வையாளர்கள் மத்தியில் பலத்த
கரவொலி.
"அடையாளம் மீட்க...' என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா கவிதை
வாசிக்கையில், செம்மொழி மாநாடு முன்னிட்டு கோவையில் நடந்துள்ள வளர்ச்சிப்
பணிகளை பாராட்டி, புகழ்ந்தார்.
"எத்தனை வேகமாய் எல்லாம் நடந்தது?
மண்ணெடுத்தார்
மாலையிலே
தார் தெளித்தார் இரவினிலே
காலையில் கண் விழுத்து
பார்க்கையிலே
கண்ணாடி போல மின்னியது சாலை.
சருக்கிவிட்ட பள்ளங்கள்
சமச்சீராய் ஆனது
வழுக்கிவிட்ட சாலையிலே வாகனங்கள் போகிறது
வெறிச்சோடி
கிடந்த வீதி சந்துகளும்
குளித்து தலைமுழுகி கலகலப்பாக
இருக்கிறது.
துணைமுதல்வர்
வந்து வந்து
தூண்டிவிட்ட காரணத்தால்
இணையில்லா வெளிச்சத்தில்
ஜொலிக்கிறது
எங்கள் கோவை...' என்றார்.
கொங்கு தமிழில், பொங்கிய இவரது கவிதையை கேட்டு அரங்கமே கரவோசையில்
ஆழ்ந்தது. அடுத்து, "தன்மானம் காக்க...' என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா,
"தாய்த்தமிழ் வளர்க்க...' என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர்
கவிதை வாசித்தனர். மூன்றரை மணி நேரம் முழங்கிய கவியிடி முழக்கத்தை,
முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் ரசித்து கேட்டனர். மாநாட்டு
பந்தலுக்குள் இருந்தாலும் கவிதை மழையில் நனைந்த பல ஆயிரம் பேர், வெயிலில்
உலர்ந்து திரும்ப சிறிது இடைவேளை கிடைத்ததாக கருதி, பட்டிமன்றம் துவங்கிய
நேரத்தில் பரபரப்பாக வெளியேறினர்.
இஞ்சிக்குடி சுப்ரமணியம் குழுவினரின் மங்கல இசையுடன் நேற்று காலை 9.00
மணிக்கு துவங்கின. முதல் நிகழ்ச்சியாக, "கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்
கூட்டம்' என்ற தலைப்பிலான கவியரங்கம், கவிஞர் வைரமுத்து தலைமையில் நடந்தது.
கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நெல்லை ஜெயந்தா, தமிழச்சி தங்கபாண்டியன்,
மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் கருணநிதி, விவேகா,
நா.முத்துக்குமார், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர். பார்வையாளர் அரங்கில்,
முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி
உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியின்
முதல் நிகழ்ச்சி என்பதால், அரங்கில் பல ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.
"யாரை அழைத்து வந்து கவியரங்கத்தை தொடங்கி வைப் பேன்...?' என்ற கவிதை
வரிகளுடன் ஈரோடு தமிழன்பன், கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.
"கலைஞர் என்பது
தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்,
ஆனால்,
அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...
அவரது கபால
களஞ்சியத்தில்
ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால்
கோபாலபுரம் வீட்டை
கொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்
இவர்
இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய
சங்கப்பாடலுக்கு எல்லாம்
இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...'
என, முதல்வர்
மீது தமிழன்பனின் கவிமழை பொழிய, அரங்கம் அதிர கரவோசை எழுந்தது. அடுத்து,
கவியரங்கத்துக்கு தலைமை வகித்த வைரமுத்து முழங்கினார்.
"பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள டீ கடையில் நின்றிருந்தேன்...' என துவங்கி,
தமிழச்சிக்கும் தனக்கும் இடையே நடந்ததாக கற்பனை கவிதை உரையாடலை அடுக்கி,
பலரையும் தன்வசம் ஈர்த்தார்.
அடுத்ததாக, கவிஞர் விவேகா பேசினார். எதுகை மோனையில் முதல்வரை
புகழ்ந்துபாடிய இவர்...
"சென்னைக்கு தெற்கே உள்ள
திருக்குவளையின்
தான்,
தமிழுக்கு கிழக்கு பிறந்தது...'
எனத் துவங்கி, முதல்வர்
கருணாநிதியை ராஜதந்திரி, முந்திரி, பாதிரி, ஒரு மாதிரி என அடுக்கிக்கொண்டே
போனார்.
இவரது பேச்சின் போது, அரங்கில் இருந்தோரில் பலரும் நெளிந்தனர்.
காரணம், இவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு, "சமத்துவம் பூக்க...
கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக்கூட்டம்' என்பது; ஆனால், தலைப்புக்கு
பெரும்பாலும் தொடர்பில்லாமலே இறுதிவரை நேரத்தை கரைத்து முடித்தார்.
அடுத்து "ஆதிக்கம்...' என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர் கருணாநிதி,
முதல்வரை பார்த்து... "அய்யா, நீங்கள் நடந்து வரும் போது இருவர் மீது
கைவைத்து வருகிறீர்கள். இதற்கு காரணம், அகவையல்ல (வயது); தம்பிகளின்
இதயங்களையெல்லாம் உங்கள் இதயத்தில் சுமப்பதினால் பாதம் தாங்காமல், இருவர்
தோள் மீது கைவைத்து வருகிறீர்கள்...' என்றார். மேலும், "தமிழர்களே...
பொங்கலுக்கு கரும்பை வைத்து கும்பிடுகிறீர்கள் இனிமேல், தலைவர் தலைவைத்து
படுத்த இரும்புத் தண்டவாளத்தையும் கும்பிடுங்கள்...' என்றார். அடுத்து,
"பகுத்தறிவு தழைக்க...' என்ற தலைப்பில் நா. முத்துக்குமார் பேசினார்.
"சமதர்மம்...' என்ற தலைப்பில் கயல்விழியை பேச அழைத்த வைரமுத்து, "கலைஞர்
வீட்டுச் சொத்து' என வர்ணித்தார். மேலும், "யாருக்கு கிட்டும் இந்த
வாய்ப்பு? தாத்தா தலையாட்ட, பாட்டி தாலாட்ட, அம்மா பாராட்ட, சித்தப்பா
சீராட்ட... பாடவா பெண்ணே' என்றழைத்தார்; பார்வையாளர்கள் மத்தியில் பலத்த
கரவொலி.
"அடையாளம் மீட்க...' என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா கவிதை
வாசிக்கையில், செம்மொழி மாநாடு முன்னிட்டு கோவையில் நடந்துள்ள வளர்ச்சிப்
பணிகளை பாராட்டி, புகழ்ந்தார்.
"எத்தனை வேகமாய் எல்லாம் நடந்தது?
மண்ணெடுத்தார்
மாலையிலே
தார் தெளித்தார் இரவினிலே
காலையில் கண் விழுத்து
பார்க்கையிலே
கண்ணாடி போல மின்னியது சாலை.
சருக்கிவிட்ட பள்ளங்கள்
சமச்சீராய் ஆனது
வழுக்கிவிட்ட சாலையிலே வாகனங்கள் போகிறது
வெறிச்சோடி
கிடந்த வீதி சந்துகளும்
குளித்து தலைமுழுகி கலகலப்பாக
இருக்கிறது.
துணைமுதல்வர்
வந்து வந்து
தூண்டிவிட்ட காரணத்தால்
இணையில்லா வெளிச்சத்தில்
ஜொலிக்கிறது
எங்கள் கோவை...' என்றார்.
கொங்கு தமிழில், பொங்கிய இவரது கவிதையை கேட்டு அரங்கமே கரவோசையில்
ஆழ்ந்தது. அடுத்து, "தன்மானம் காக்க...' என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா,
"தாய்த்தமிழ் வளர்க்க...' என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர்
கவிதை வாசித்தனர். மூன்றரை மணி நேரம் முழங்கிய கவியிடி முழக்கத்தை,
முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் ரசித்து கேட்டனர். மாநாட்டு
பந்தலுக்குள் இருந்தாலும் கவிதை மழையில் நனைந்த பல ஆயிரம் பேர், வெயிலில்
உலர்ந்து திரும்ப சிறிது இடைவேளை கிடைத்ததாக கருதி, பட்டிமன்றம் துவங்கிய
நேரத்தில் பரபரப்பாக வெளியேறினர்.
Re: உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்
எலேய்! நீ சொன்னதெல்லாம் போருத்துக்களாம்டா, ஆனா "அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்".இப்படி சொன்னியே அதை மட்டும் பொறுத்துக்கவே முடியலடா...
அதியமான் ஏமாந்திருப்பான்".இப்படி சொன்னியே அதை மட்டும் பொறுத்துக்கவே முடியலடா...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்
பிச்ச wrote:எலேய்! நீ சொன்னதெல்லாம் போருத்துக்களாம்டா, ஆனா "அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்".இப்படி சொன்னியே அதை மட்டும் பொறுத்துக்கவே முடியலடா...
என்ன கொடும சரவணன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்
வயதான காலத்துல இப்படி புகழ்ச்சி மழையில் நனையத்தானே இவரு உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்துனாரு. ஏம்பா அது கூட உங்களுக்கு பொறுக்கலையா.
இவரால வேற என்ன செய்ய முடியும்.
இவருதான் இப்படி இருக்காருன்னா நம்ம கவிகள் எல்லாம் ஏன் கவிதை பாடி இருக்காங்க? கவிதைக்கு பொய் அழகு என்பதாலோ?
இவரால வேற என்ன செய்ய முடியும்.
இவருதான் இப்படி இருக்காருன்னா நம்ம கவிகள் எல்லாம் ஏன் கவிதை பாடி இருக்காங்க? கவிதைக்கு பொய் அழகு என்பதாலோ?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிதை மழை : மூன்றரை மணி நேரம் "நனைந்தார்' முதல்வர்
எல்லோரும் மப்புல இருந்ததா வெளிய பேசிக்கிட்டாங்க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
» பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
» செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சிகள்... 3 மணி நேரம் ரசித்த முதல்வர்!
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
» தேநீர் நேரம் – கவிதை
» பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
» செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சிகள்... 3 மணி நேரம் ரசித்த முதல்வர்!
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
» தேநீர் நேரம் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|