புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_m10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_m10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_m10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_m10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_m10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_m10குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 28, 2010 10:24 am

குழந்தைகளிடமாவது பெற்றோர் தமிழில் பேச வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாள் விழாவில் அவர் பேசியது:


தமிழ்ச் செம்மொழித் தகுதி பெற்றதை நினைத்துப் பெருமைகொள்ளும் அதே நேரத்தில், தமிழ் உலக மொழியாக உயர வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் அடுத்து வரும் ஆயிரமாயிரம் ஆண்டுகளிலும் தமிழ்ச் செம்மொழியாகப் போற்றப்பட வேண்டும். ஒரு மொழியின் ஆதாரமே பேச்சுதான். தமிழ் பேசினால்தான் தமிழ் வாழும்.


வழக்கொழிந்த மொழிகள் பல உள்ளன. லத்தீன், பாலி மொழிகள் வழக்கொழிந்துவிட்டன. கிரேக்க மொழியும் வழக்கொழிந்த நிலைக்கு வந்து, தற்போது அம்மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தமிழ் வாழும் மொழி. ஆனால், இன்னும் தமிழ் நீடூழி வாழ, தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியினரும் தமிழில் பேச வேண்டும். அதற்காக அவரவர் தனது தாய்மொழியில் பேசக்கூடாது என்று அர்த்தம் அல்ல. ஆங்கிலம் அல்லது வேறுமொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் பொருள் அல்ல. தவிர்க்க முடியதாத சூழல் விடுத்து தமிழில்தான் பேச வேண்டும்.


குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமாவது தமிழில் பேச வேண்டும். வட்டார வழக்கு மொழியிலும் நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. வட்டார வழக்கு மொழி என்பது எல்லா நாடுகளிலும் உள்ளது. ஆனால், வட்டார வழக்கு மொழி என்று ஒருமொழி சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.



தமிழ்நாட்டில் குறிப்பாக நகரங்களில் இந்தப் போக்கைக் காண முடிகிறது.


அசிங்கமான அர்த்தங்களைச் சொற்களில் புகுத்துவதையெல்லாம் வட்டார வழக்குமொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்குமொழி வழுக்கு மொழியாக மாறி பின்பு இழுக்கு மொழியாக மாறி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.


தமிழில் பேசுவது என்றால் இனிமை ஆகும். அதனால், இனிய தமிழிலில் பேசவும், எழுதவும் வேண்டும். கடும்,சுடும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.


புதிய இலக்கியம் தொடர்ந்து படைக்கப்பட்டால்தான் ஒரு மொழி வாழும் மொழியாக இருக்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே ஒரு மொழியின் வளர்ச்சிக்குப் போதுமானது அல்ல. மிகப் பெரும் பகுதி மக்களின் மொழி பயன்பட்டால்தான் அந்த மொழி வாழும் மொழியாக இருக்கும். லத்தீன், பாலி மொழிகள் வரலாற்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.


இலக்கியத் தமிழ் போன்று, மருத்துவத் தமிழ், சட்டத் தமிழ், பொருளாதாரத் தமிழ், மேலாண்மைத் தமிழ், அறிவியல் தமிழ், தொல்லியல் தமிழ், கணினித் தமிழ் என்று புதிய வகைகளுக்கு ஊக்கம் அளித்தால்தான் தமிழ் பல்லாண்டு ஓங்கி உயர்ந்த செம்மொழியாக இருக்கும்.


நான் குறிப்பிட்ட துறைகளில் போதிய நூல்கள் இல்லை. தமிழில் பல துறைகளிலும் புதிய நூல்கள் காலத்திற்கேற்ப வெளியிடப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் சில இயல்களில் பாடநூல்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன, இது பாராட்டுக்குரியது. ஆனால், இந்த முயற்சி மட்டும் போதாது.


நூலாசிரியர்களே நூல்களை எழுதுங்கள், பாடநூல்களை எழுதுங்கள், பயிற்சி நூல்களை எழுதுங்கள். பாமரர்களும் பயன்பெறும் வகையில் படிக்கக்கூடிய அறிவுசார்ந்த நூல்களை எழுதுங்கள். பதிப்பாளர்களே புதிய நூல்களை வெளியிடுங்கள்.


நூலாசிரியருக்கான சன்மானத்தை நாங்கள் தருகிறோம். முதல் பதிப்பை வெளியிடுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் கொடியசைத்தால் புதிய நூல்கள் நிறைய வெளிவரும். நூலாசிரியருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தர வேண்டும். பதிப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம் பதிப்புச் செலவுகளுக்கு லாபமாகவும் தர வேண்டும்.


ஒரு நூலுக்கு ரு.10 லட்சம் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 புதிய நூல்களை வெளியிடுவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி தேவைப்படும். தமிழக அரசுக்கும் தமிழ்ப் புரவலர்களுக்கும் இது பெரிய தொகை அல்ல. ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவழித்தால் பல்லாண்டுகளுக்குத் தமிழ் மொழி செம்மொழியாக, உலக மொழியாக ஒளி வீசும். இந்தப் பெரும் செயலை முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டிலேயே தொடங்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு அளித்த பெரும் கொடையாக இருக்கும் என்றார் ப.சிதம்பரம்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 28, 2010 10:46 am

இவன் தமிழில் தா பேசறனா ???????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 28, 2010 10:49 am

இவர் மகன் ஆரம்பித்த கருத்து இணையதளத்தில் முழுதும் ஆங்கிலமே உள்ளது! அப்படியெனில் இவர் அவர் மகனிடம் தமிழில் பேசவில்லையோ?



குழந்தைகளிடமாவது தமிழில் பேசுங்கள்: பெற்றோருக்கு சிதம்பரம் வேண்டுகோள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 28, 2010 10:55 am

சிவா wrote:இவர் மகன் ஆரம்பித்த கருத்து இணையதளத்தில் முழுதும் ஆங்கிலமே
உள்ளது! அப்படியெனில் இவர் அவர் மகனிடம் தமிழில் பேசவில்லையோ?


தமிழா விழிதிரு தமிழா ! நம்மை எல்லாம் அழிக்க & அடிமை ஆக்க ஒரு கூட்டம்
உள்ளது அது வேறு யாருமில்லை நம் தமிழக அரசியல்வாதிகள் தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக