ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா?

Go down

கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா? Empty கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா?

Post by சிவா Mon Jul 13, 2009 7:18 am

ஆண்களுக்கு மட்டும் கலாச்சாரம் எண்பாடு எல்லாம் கிடையாதா? சிறந்த மூலிகைகளாகப் பயன்படுத்தப்பட்ட நெற்றிப் பொட்டையும் தாலிக்கயிற்றையும் கலாச்சாரம், பண்பாட்டினுள் திணித்து பெண்களை அடிமைப்படுத்தாதீர்கள்!

தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் தான் என்று பார்க்கும்போது அதில் எப்போதும் ஒரே குழப்பம்தான். கலாச்சாரம் பண்பாடு என்பதைப்பற்றி எங்கும் எப்போது பேசினாலும் அவை பெண்களைச்சார்ந்தே பேசப்படுகின்றன. பெண்களின் உடைகள், அவள் சமூகத்தில் பழகும் முறை, கல்யாணமான பெண் என்றால் அவளது உடைகள், பொட்டு, தாலி என்பன பற்றித்தான் பேசப்படுகின்றது.

அப்படியானால் ஆண்களுக்கு மட்டும் கலாச்சாரம், பண்பாடு என்று பார்க்கும் போது அவற்றுள் எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விடுத்து எமது பட்டிமன்றங்களும் மேடைப்பேச்சுக்களும் பெண்களின் உடையையும் தாலியையும் பொட்டையுமே கலாச்சாரம், பண்பாட்டிற்கான கருப்பொருளாக வைத்து வாதிடுகின்றன. அதையும் தாண்டி போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசகின்றனர்.

ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றி அவர்கள் பேசுவதில்லை. காரணம் இவர்களுக்கு ஆண்கள் மறுமணம் செய்வதென்பது ஒரு அவசியமான விடயமே இல்லை. மனைவி இறந்தவுடன் அந்த வீட்டுக்குள்ளிருந்தே அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப்பெண்ணையே மறுமணம் பேசி நிச்சயித்து விடுகிறார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம் அவனுக்கு கட்டாயம் துணை தேவையாம்.

ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் அவளது பொட்டை அழித்து தாலியைக் கழற்றி வெள்ளைச்சேலை அணியவைத்து இனி உனக்கு ஆசாபாசம் எதுமே வரக்கூடாது என்று ஒரு மூலையில் தள்ளி விடுகிறார்கள். இந்த அநியாயங்களுக்கெல்லாம் எம்மவர்கள் வாய்வலிக்காமல் கூறும் ஒரே ஒரு காரணம் அதுவும் இரண்டு எழுத்தில் அமைந்துவிடும் காரணம் அவள் ஒரு ~பெண்| என்பதுதான்.

பார்த்தீர்களா எம்மவர்களின் நியாயத்தை! ஒரே சமுதாயத்திலுள்ள ஒரு ஆணின் உணர்வுகளை ஆசாபாசங்களை மதிக்கத் தெரிந்த இந்த சமுதாயத்திற்கு ஒரு பெண்ணின் உணர்வுகளையும் ஆசாபாசங்களையும் மதிக்கத்தெரியாமல் போனது வேடிக்கையான விடயம்தான்.கணவனை இழந்துவிட்டால் அவளுக்கு துணை தேவையில்லையாம். ஆசையே வரக்கூடாது. இனி அவளது இறுதிக்காலம் வரை தனிமையிலேயே இருக்கவேண்டும். சுபகாரியங்களிலும் முன்னிற்கக்கூடாது என்றல்லவா பெண்களின் தலையில் இந்தச் சமுதாயம் பெரியதொரு பாறையை வைக்கிறது.

இலங்கையிலாவது ஓரளவு பரவாயில்லை முன்னைய காலங்களில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எல்லாவற்றையும் விட பலபடிகள் முன்னேறி கணவன் இறந்துவிட்டால் மனைவி உடன்கட்டை ஏறும் மிகக் கொடூரமான கொலையும் சம்பிரதாயம்.சடங்கு என்ற பெயரில் நடைபெற்றுள்ளது. கணவனை இழந்துவிட்டால் அவளுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் அவள் கணவன் மீதுகொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் என்றும் கூறிஇந்த உடன் கட்டை ஏறும் பழக்கம் நடைமுறையிலிருந்துள்ளது.

கணவனின் சிதையில் மனைவி ஏற மறுத்தால் அவளையும் சிதையில் ஊரவர்கள் தள்ளிவிட்ட சம்பவம் கூட அண்மையில் இந்தியாவின் ஒரு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.அதேபோல் கடவுளாலேயே மன்னிக்க முடியாத இன்னொரு கொடுமையும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அதுதான் பெண்சிசுக்கொலை. இது என்ன அநியாயம் பார்த்தீர்களா?

பெண்பிள்ளை பிறக்க அதன் அம்மாவும் அப்பாவும் காரணமாக இருக்கும்போது அந்த சிசு என்ன செய்யும் பிறந்து சில மணிநேரங்களில் கண்களைக் கூட திறந்திருக்காத அந்த சிசுவை நீ உலகை பார்க்கவேண்டாம் என்பதுபோல் அந்த ஜீவனையே இல்லாமல் ஆக்கிவரும் இந்தக் கொடூரம் கடவுளாலும் மன்னிக்கமுடியாதது. இந்த நிலைமைகளில்தான் ஆண்கள் போலவே சில வேளைகளிலே பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகிவிடுகிறாள்.

இதேவேளை பெண் ஒன்று பிறந்துவிட்டாலே பொன் வேண்டும். பொருள் வேண்டும். அவளை நல்லவன் கையில் கொடுத்துவிட வேண்டும் என்ற சிந்திக்கத் தொடங்கிவிடுகிறார்கள் பெற்றோர்கள்.தமது ஆசைகளைக்குறைத்து தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண்பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பெண்ணைப் பெற்றுவிட்டு அவளது ஒவ்வொரு வளர்ச்சியிலும் களிக்க வேண்டியவர்கள் நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு வாழ்வது போல தவிப்புடன் வாழ்கின்றார்கள். இல்லை இல்லை வாழ வைக்கப்படுகிறார்கள்.ஒரே ஒரு பெண்குழந்தையைப் பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால் நான்கைந்து பெண்களைப் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை. ஒரு பெண்பிறந்ததே. இன்னொருவன் கையில் பத்திரமாக ஒப்படைப்பதற்காகவும் அவனிடம அடங்கி, ஒடுங்கி, அவனுக்கு ஆக்கிப்போட்டு அவன் அடித்தாலும் உதைத்தாலும் அக்கம் பக்கம் தெரியவிடாது அவன் மானத்தைக் காத்து அவனைத் தாய்மையுடனும் தோழமையுடனும் கவனித்து பிறந்த வீட்டின் பெருமையைக் காப்பதற்காகவும் என்பதுபோல் இருக்கும் எமது பெரியவர்களின் செயற்பாடு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா? Empty Re: கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா?

Post by சிவா Mon Jul 13, 2009 7:20 am

இந்த நியதியில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது. அப்படி மாற்றம் ஏற்படுவதே ஒருதப்பான விடயம் என்பதுபோலவே காலங்காலமாக எல்லாம் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. யாராவது ஒரு பெண் இந்த நிலை மாறவேண்டும் என்று குரல் கொடுத்தாலே அவள் கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் காலுக்குள் மிதிக்கிறாள் என்று கூச்சலிடுகிறது எமது சமுதாயம்.

எமது பண்பாட்டின் படி ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறையான கோட்பாடு மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்றுதான். ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் போது மனதுக்கும் மகிழ்ச்சி நிறைவு முக்கியமாக எயிட்ஸ் பிரச்சினை இல்லை. வேறு பாலியல் சம்பந்தமான நோய்களுக்கும் சந்தர்ப்பம் இல்லை.ஆனால் ஆண்கள் மனைவி இருக்கையில் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டால் ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணி கண்ட இடத்தில் கழுவுவார்கள். பெண்கள் அவற்றைக் கண்டுகொள்ளக்கூடாது என்கிறார்களே....

இதுவும் தமிழர் பண்பாடா? எமது பண்பாட்டில் கலாசாரத்திலும் ஏன் இந்த பாகுபாடு? இவையிரண்டும் பெண்களுக்கு மட்டும்தானா?கல்யாணம் ஆனாலும் சரி ஆகும் முன்னரும் சரி ஒரு பெண் ஆணுடன் கதைத்துவிட்டால் போதும் அது சராசரி நட்பாக இருந்தாலும் இந்த சமுதாயம் அப்படியானதொரு உறவை கொச்சைப்படுத்தியே பேசுகிறது. ஆனால் ஆண்கள் அந்த விடயத்தில் கொடுத்து வைத்தவர்கள்.கலாச்சாரம் என்று பார்க்கும்போது பொட்டு, தாலி உடையலங்காரம் என்பன பற்றிபேசப்படுகின்றன. ஆனால் இவை உருவாக்கப்பட்டதற்கான மூலகாரணங்களை ஆராய எவரும் முன்வந்ததில்லை.

தாலி, பொட்டு

தாலி என்று இன்று விவாதிக்கப்படுகிறதே இந்தத் தாலிக்காய் ஆதிகாலத்தில் வெறும் மஞ்சள் காயாகவே இருந்தது. அதாவது நாம் சமையலுக்குப் பாவிக்கும் மஞ்சள். இந்த மஞ்சள் காயை ஆதிகாலத்தில் தாலியாக பாவித்தது ஏன் தெரியுமா? மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினி.

இருவர் திருமணபந்தத்தில் இணையும் போது ஒருவரில் இருக்கும் தொற்றுக் கிருமிகளோ நோய்களோ மற்றவரை அணுகாமல் இருக்கவும் கிருமிகளைச் சாகடிக்கவுமே இந்த மஞ்சள்காய் பயன்படுத்தப்பட்டது.இதே காரணத்துக்காகத்தான் மணமக்களின் உடைகளில் மஞ்சள் பூசப்பட்டது.ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு அனுப்பப்படும் திருமண அழைப்பிதழுடன் நோய்க்கிருமி சென்று விடாதிருக்கவே அழைப்பிதழில் மஞ்சள் பூசி அனுப்பப்பட்டது. இதுவே நாளடைவில் மஞ்சள் பத்திரிகை என்ற பெயரில் வரத்தொடங்கியது.

மஞ்சள் காயை மஞ்சள்தண்ணீரில் தோய்த்தெடுத்த நூலில் கட்டித்தாலியாக அணிந்த உண்மையான காரணம் இதுவே.ஆனால் அதுவே நாளடைவில் தங்கத்துக்கு மாறிவிட்டது. இப்போது நமது நாட்டிலும் சரி தமிழர் வாழும் வெளிநாடுகளிலும் சரி இந்த சாஸ்த்திரங்களெல்லாம் போய் 10,15,20,25 பவுண்களிலும் தாலிக்கொடி செய்து போட்டுத்திரிகிறார்கள். இதற்குப் போய் கலாச்சாரம் என்று ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் எம்மவர்கள்.

எமது கலாச்சாரம் என்ன 20 பவுணில்கொடி போடச்சொல்கிறதா? இதே நேரத்தில் நவரத்தினங்கள் தங்கள் இவைகளுக்கு சில நோய்கள் எம்மை அணுகாமல் தடுக்கும் தன்மைகளும் சில நோய்களைத்தீர்க்கும் தன்மைகளும் உள்ளன. அதனாலேயே காது குத்துதல், மூக்கு குத்துதல் போன்றவை அக்கப்பஞ்சர் ரீதியிலான நன்மைகளை எமக்குத் தருகின்றன.

தாலி போலவே நெற்றிப்பொட்டும் ஒரு மிகச்சிறந்த வைத்திய முறையே. மூலிகைகள் கொண்டு செய்யப்படும் பொட்டை, நெற்றிப்பொட்டில் வைக்கும்போது அது மருத்துவ ரீதியாக உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் நன்மையையும் தருகிறது.இப்படியான நல்ல காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்ட பல விடயங்கள் இப்போது தடம்மாறி அவரவர் வசதிக்கேற்ப பல அடாவடித்தனங்கள் புகுத்தப்பட்டு கலாச்சாரம் பண்பாடு என்பதற்கு என்ன அர்த்தங்கள் என்று தெரியாமலே பெண்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளன.

கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் எமது பெண்கள் அடக்கப்படுகின்றனர். அடிமைப்படுத்தப்படுகின்றனர். எனவே முதலில் எமது கலாசாரத்தில், பண்பாட்டில் புகுத்தப்பட்ட அடாவடித்தனங்கள் களையப்பட்டு தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப்படவேண்டும்.சில விடயங்கள் காலத்துக்கேற்ப, நேரத்துக்கேற்ப, இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும்.கலாச்சாரம் என்ற முறையில் கட்டிக்காக்க எம்மிடம் வேறு எத்தனையோ நல்ல விடயங்கள் உள்ளன. அவைகளைக் கட்டிக்காப்போமே.

(நன்றி மங்கையர் கேசரி மற்றும் வெப்தமிழன்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா? Empty Re: கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா?

Post by Guest Wed Jul 15, 2009 9:01 am

சூப்பர் அருமையாக இருக்கிறது

இந்த விஷயத்தில் கருத்துக்களை சொல்ல கொஞ்சம் பயமாக இருக்கிறது
avatar
Guest
Guest


Back to top Go down

கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா? Empty Re: கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் அடக்கப்படுவது சரிதானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum