ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி

3 posters

Go down

ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Empty ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி

Post by சிவா Thu Jun 24, 2010 9:24 am

பெயருக்குப் பொருத்தமாகவே அணைப்பட்டி என்ற அக்கிராமத்தில் ஒரு சிற்றணை உள்ளது. இயற்கை எழிலுக்கு மேலும் வனப்பூட்டும் பச்சை வயல்வெளிகள் மதுரையை அடுத்த அவ்வூருக்கு செழிப்பான பூமி என்று சான்றளித்தது. ஆனால் உண்மையில் பலர் அங்கே போதிய எழுத்தறிவின்றி வறுமையில் உழன்று கொண்டிருந்தனர். 1989ம் ஆண்டில் அங்கோர் புதுமையான நிகழ்ச்சி. தாய்மார்கள் ஒரு மழைலையர் பள்ளி முன்பு அணியணியாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பு ஒரு வானொலிப்பெட்டி. அதுதான் அந்நிகழ்ச்சியில் முக்கிய நபர். டிவிக்களின் படையெடுப்பு கிராமங்களை எட்டிப்பார்க்காத காலமது. ``போலியோ நோய்க்கு பெரிதும் காரணம் பெற்றோரே’’ என்ற தலைப்பில் வழக்காடுமன்ற நிகழ்ச்சி அதில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று அந்நிகழ்ச்சியில் வார்த்தைகளை அம்பாகத் தொடுத்துக் கொண்டிருந்தது. "என் அப்பா அம்மா எனக்கு உரிய நேரத்தில் சொட்டு மருந்து கொடுத்திருந்தால் நான் இன்று இப்படி முடமாகிப் போயிருப்பேனா?" என்று நடுவரைக்கேட்டு, எதிர் வழக்காடுபவரைத் திக்குமுக்காடச் செய்தது. கேட்டுக்கொண்டிருந்த அணைப்பட்டித் தாய்மார்கள் மத்தியில் முழு நிசப்தம். நடுவரின் முடிவு என்னவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரின் முகத்திலும் தெரிந்தது. தாம் எந்தப் பக்கத்திற்குச் சாதகமாக இருக்கிறோம் என்பதை அதுவரை எள்ளளவும் வெளிப்படுத்தாமலேயே நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்திக் கொண்டிருந்த நடுவர், இறுதியில் ``பெற்றோரின் அலட்சியமே போலியோவுக்குக் காரணம்’’ என்று தீர்ப்பளித்தார். தாய்மார்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். ஆனால், ஒரேயரு தாய்மட்டும் விசும்பியவாறு அமர்ந்திருந்தார். அணையுடைத்த வெள்ளமாக அவர் கண்களில் கண்ணீர். தாரைதாரையாக வடியும் அக்கண்ணீரை காரணம் புரியாமல் ஒருவிதக் கலவரத்துடன் உற்று நோக்கியது அவர் கையிலிருந்த இரண்டு வயது பிஞ்சுக் குழந்தை. அதனைக் கண்டதும் தாயின் அழுகைக்குக் காரணம் புரிந்தது. போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமாகிப்போன குழந்தையது.

சோகம்தான். தன் குழந்தையின் வயதையத்த இதர மழலையர் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடும்போது, தனது குழந்தை மட்டும் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பது என்றால் வேதனைதானே. தடுக்கக்கூடிய நோய்தான் அது. ஆனால், பாதிக்கப்பட்டு விட்டால் பின்னர் மீள்வதற்கு வழியில்லை. வருமுன் காப்பது மட்டுமே தற்போது இருக்கும் ஒரேவழி. போலியோ என்னும் இளம்பிள்ளை வாதநோயின் விளைவுகள் மிகவும் கொடுமையானவை. ஆனால், அதனை சொட்டு மருந்திட்டுத் தடுப்பது சுலபம். அதனைப் பயன்படுத்தி பல நாடுகளில் இந்நோயே கிடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். இந்தியா உட்பட ஏழு நாடுகளில் மட்டும்தான் போலியோ நோயின் தாக்கம் தற்போது உள்ளது. நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து, நைஜர், சோமாலியா ஆகியவை இந்நோய்த்தொற்று காணப்படும் இதர நாடுகளாகும்.

போலியோ நோய்க்கான சொட்டு மருந்து முதன் முதலில் ஜோனாஸ் சால்க் என்னும் அறிவியலாளரால் 1955ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதுவரை உலகம் முழுவதும் சுமார் 50 இலட்சம் குழந்தைகளின் ஊனத்திற்கும் உயிரிழப்புக்கும் போலியோ மையலிடிஸ் வைரஸ் காரணியாக இருந்து வந்தது. ஊசிமூலம் செலுத்தப்படும் ஜோனாஸ் சால்க்கின் இந்த தடுப்பு மருந்தைவிட சக்தி வாய்ந்த சொட்டு மருந்து 1962ம் ஆண்டு ஆல்பர்ட் சாபின் என்பவரால் உருவாக்கப்பட்டது. அதன்பின்பு இந்நோயின் தாக்கம் வேகவேகமாகக் குறைந்துகொண்டே வந்தது.

1988ம் ஆண்டில் போலியோவை ஒழிப்பதற்கு உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இந்நோய் அமெரிக்கக் கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக 1994ஆம் ஆண்டிலும், ஐரோப்பாவில் 2002லும் சான்றளிக்கப்பட்டது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்புவரை இந்நோய்க்கிருமிகள் சீனாவில் ஆண்டுக்கு பத்தாயிரத்துக்கும் மேல் குழந்தைகளை முடக்கிப்போட்டு வந்தது. ஆனால் இன்று சீனாவிலும் போலியோவுக்கு விடைகொடுத்தாயிற்று. ஆப்பிரிக்க கண்டத்தில்கூட பல நாடுகளில் போலியோ கிடையாது. பொதுவாக ஒரு ஆண்டில் முதன் முறையாக எந்தக் குழந்தைக்கும் போலியோ பாதிப்பு ஏற்படாதிருந்தால், அதைத்தொடர்ந்து வரும் மூன்றாண்டுகளுக்கு கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அம்மூன்றாண்டுகளிலும் எந்தக்குழந்தைக்கும் இந்நோய் தொற்றாத நிலை ஏற்பட்டால், அந்நாடு அக்கிருமிகள் இல்லாத நாடாக சான்றளிக்கப்படுகிறது.

இதனை உருவாக்கும் வைரஸ் கிருமிகள் குழந்தைகளின் வாய்வழியாக உடலில் புகுகிறது. குழந்தைகளின் குடலில் அமர்ந்து கொண்டு அவை வேகவேகமாகப் பெருகுகின்றன. பின்னர் அவர்களின் மலத்துடன் அக்கிருமிகள் வெளியேறி, மண்ணிலோ நீரிலோ கலந்து, பிற குழந்தைகளை சென்று சேர்கின்றன. சில குழந்தைகளிடம் அவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமலேயே வெளியேறி விடுகின்றன. ஆனால் சில குழந்தைகளின் உடலில் அவை இரத்தத்துடன் கலந்து, பின்பு நரம்பு மண்டலத்தை அடைகின்றன. அதைத்தொடர்ந்து மூளை, தண்டுவடம் போன்ற முக்கியமான உறுப்புகளைத் தாக்கி, அவர்களின் கால் கைகளை முடக்கி விடுகின்றன. இந்நோய்க்கு அறிகுறிகளாக மருத்துவர்கள் காய்ச்சல், வாந்தி, சோர்வு, தலைவலி போன்றவற்றை குறிப்பிடுகிறார்கள். ஆனால் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொண்ட குழந்தைகள் இந்நோய் குறித்து பயமடையத் தேவையில்லை. ஏனெனில் அச்சொட்டு மருந்து அக்குழந்தையின் குடலில் போலியோ வைரசை தங்கவிடாமல் மொத்தமாக வெளியேற்றிவிடுகின்றன.

ஆனால் ஒரு ஊரில் சில குழந்தைகள் மட்டும் போலியோ சொட்டு மருந்து எடுத்து, பிற குழந்தைகள் எடுக்காமலிருந்தால், மருந்து எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுக்கு அந்நோய்க் கிருமியின் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். குறிப்பாக, சுகாதார வசதிகள் இல்லாத நெரிசலான கிராமங்களிலும் குடிசைப்பகுதிகளிலும் இதற்கான அபாயம் மிகவும் அதிகம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். நாடுமுழுவதும் குழந்தைகள் ஒரேநாளில் சொட்டு மருந்து எடுத்துக்கொண்டால் அக்கிருமிகள் அனைவரின் உடலிலிருந்தும் ஒரே நேரத்தில் மடிந்து வெளியேறிவிடும். ஆனால் அப்பகுதியில் சொட்டு மருந்து எடுக்காத குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களின் உடலில் காணப்படும் உயிருள்ள போலியோ வைரஸ் வெளியேறி, மீண்டும் பிற குழந்தைகளையும் வந்தடைந்துவிடும். எனவே ஒரு குழந்தைகூட விடுபடாமல் ஒரே நாளில் நாட்டின் அனைத்துக் குழந்தைகளும் சொட்டு மருந்து எடுப்பது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 60 இலட்சம் குழந்தைகள் பிறக்கும் இந்தியாவில் இவ்வாறு எந்தக்குழந்தையும் விடுபடாமல் சொட்டு மருந்து எடுக்கச் செய்வது அத்தனை எளிதல்ல என்று சிலர் கூறினாலும், இப்போதைய நிலையைவிட எழுத்தறிவிலும் பொருளாதாரத்திலும் குன்றியிருந்த காலத்திலேயே பெரியம்மை நோயை ஒழித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அந்நோயைப் போலவே போலியோவுக்கும் விடை கொடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக போலியோ பாதிப்பே இல்லாத நிலை பலமாதங்களாக இருந்தபோதிலும் திடீரென 2003 டிசம்பரில் திருச்சி, சென்னை நகரங்களில் தலா ஒரு குழந்தைக்கு இப்பாதிப்பு தொற்றிக்கொண்டது. போலியோவின் தாக்கம் உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களிலேயே அதிகம் காணப்படுகிறது. எனவே இம்மாநிலங்களிலும், தில்லி, அரியானா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் ஆண்டுக்கு நான்கு முறை சொட்டுமருந்து தரப்படுகிறது. இதர மாநிலங்களில் இருமுறை தரப்பட்டு வருகிறது. இந்நோய் ஒழிக்கப்பட்டதாக சான்றளிக்கப்படும் வரை தேசிய அளவில் சொட்டு மருந்து ஒரேநாளில் அளிப்பது தொடர வேண்டியுள்ளது.

1995-96ஆம் ஆண்டு தேசிய போலியோ சொட்டு மருந்து இயக்கம் துவக்கப்பட்டது. முதலில் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து ஐந்து வயது வரையிலான குழந்தைகளும் இச்சொட்டு மருந்து இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது நல்ல பயனைத் தந்தது. 2001இல் நாடு முழுவதும் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 268 ஆகக் குறைந்தது. அதனைத் தொடர்ந்து சொட்டு மருந்திடும் நாட்களின் எண்ணிக்கை பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மூன்றாகக் குறைக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 2008இல் பாதிப்பு மளமளவென உயர்ந்து, 3600 குழந்தைகளை முடக்கி விட்டது. எனவே, மாநில அரசுகளும் மத்திய அரசும் இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் மேலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

போலியோ எளிதில் தவிர்க்கப்படக் கூடிய நோயாகும். ஆனால், ஒருமுறை அந்நோய் தாக்கிவிட்டால், அதன் பின்னர், அதன் தீய விளைவுகளிலிருந்து மீள்வது கடினம். நன்றாக இருந்த குழந்தைகள், பெற்றோர் கண்களுக்கு முன்பாக ஏன் திடீரென்று ஊனமாக வேண்டும். வாழ்நாள் முழுவதும் ஊனத்தால் விளையும் கண்ணீர்த் துளிகளைத் தவிர்க்க, போலியோ சொட்டு மருந்திடும் நாட்களில் குழந்தைகளுக்கு அவற்றை அளிப்பதும், அளிக்க வைப்பதும் அவசியமாகும்.


ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Empty Re: ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி

Post by Aathira Thu Jun 24, 2010 10:23 am

//இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து, நைஜர், சோமாலியா ஆகியவை இந்நோய்த்தொற்று காணப்படும் இதர நாடுகளாகும்//.
முழுமையான போலியோ அற்ற நாடாக விரைவில் இவையும் மாறும் என எதிர்பார்ப்போம்....
நல்ல பகிர்வுக்கு மிக்க நன்ரி சிவா. ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 678642 ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 154550


ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Aஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Aஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Tஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Hஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Iஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Rஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Aஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Empty Re: ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி

Post by சபீர் Thu Jun 24, 2010 1:35 pm

Aathira wrote://இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து, நைஜர், சோமாலியா ஆகியவை இந்நோய்த்தொற்று காணப்படும் இதர நாடுகளாகும்//.
முழுமையான போலியோ அற்ற நாடாக விரைவில் இவையும் மாறும் என எதிர்பார்ப்போம்....
நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சிவா அண்ணா. ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 678642 ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 154550
ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி Empty Re: ஊனத்தை வெல்வதற்கோர் எளிய வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum