புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சோதிடம் Poll_c10சோதிடம் Poll_m10சோதிடம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதிடம்


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Wed Jun 23, 2010 8:03 am

சோதிடம்
"பொதுவாகவே சோதிடம் இன்ன பிற மர்மமான விஷயங்கள் குறித்த நம்பிக்கைகள் எல்லாம் ஒரு பலவீனமான மனதின் அடையாளங்கள். எனவே இத்தகைய விஷயங்கள் உங்கள் மனதில் பிரதானமாக விளங்க ஆரம்பித்ததென்றால் உடனே நல்ல மருத்துவரை பார்த்து நன்றாக உணவருந்தி ஓய்வெடுங்கள் " - சுவாமி விவேகானந்தர் .

கோள்கள் வானில் உலவிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். விண்துகள்கள் என்ற நுண் அணுக்களின் கூட்டம்தான் கோள்கள். இந்தக் கோள்கள் சூரியனை மையமாகக் வைத்து, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இவைகளின் சுழல்வேகம், தொலைவு மற்றும் தற்சுழல் வேகம் ஆகியவைகளைக் கணக்கிடுவது வானியல் (ASTROLOGY) ஆகும். நமது சூரியக் குடும்பம் போல் பல சூரியக் குடும்பங்கள் உள்ளன. அவைகளையெல்லாம மேஷம், ரிஷபம் போன்ற பெயரிட்டு வைத்துள்ளனர். அவைகளையும் ராசிகள் என்ற வகையில் மொத்தம் 27 நட்சத்திரம் உள்ளன. பிறக்கும்போது என்ன நட்சத்திரமோ, அது எந்த ராசியைச் சேர்ந்ததோ, அதுவே லக்னம் என கூறப்படுகிறது. சோதிடம் என்பது வானியலையும் உள்ளடக்கியதே.

கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்தையும் பஞ்ச அங்கம் என்கிறோம். அதைக் கூறும நூல்களை பஞ்சாங்கம் என்கிறோம். வாரத்தில் ஏழுகிழமைகள் (நாட்கள்) உள்ளன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை திதி என்று கூறுகிறோம். பிரதமை முதல் பவுர்ணமி அல்லது அமாவாசை முடிய 15 திதிகள் உள்ளன. சஷ்டி, அஷ்டமி, நவமி முதலியன பெரும்பாலானோருக்குத் தெரிந்த திதிகள்; நட்சத்திரங்கள் 27. கரணம் என்பது திதியில் பாதி, பயிர்த்தொழில் தொடர்பான பலன்களைக் கண்டறிய உதவும் கணக்கு, யோகம் என்பது சூரியனும் சந்திரனும் ஒரு குறித்த இடத்திலிருந்து செல்லும் மொத்த தூர அளவைக் கணக்கிட்டுப் கூறுவது. மொத்தம் 27 யோகங்கள் உள்ளன

சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது.

வெப்ப மண்டல சோதிடம் Uranus, Neptune மற்றும் Pluto கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு கேது கோள்களையும் 27 நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.
இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.

சோதிடம் ஞாயிறு(சூரியன்) குடும்பத்தின் மையம் புவி(பூமி) என்று சொல்கிறது. அதன் மையம் ஞாயிறு என்பது நாம் அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை .சூரியன் ஒரு விண்மீன் இதுதான் அறிவியல் உண்மை ஆனால் சோதிடம் சூரியன் போன்ற விண்மீனையும் நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது .

சோதிடத்தில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் இடம் முக்கியமானது. ஆனால் குழந்தையின் பிறப்பு என்னும் பொழுது அது குழந்தை கருவறையில் இருக்கும் பொழுது உயிர் ஏற்பட்ட நேரமா? பிறக்கும் பொழுது தலை வெளியில் தெரிந்த நேரமா? கால் தரையில் படும் நேரமா? மருத்துவச்சி கையில் எடுத்த நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? மருத்துவர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? குழந்தையின் முதல் மூச்சா? அல்லது அழுகையா? இதில் எது என்பதில் சோதிடர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. இரண்டொரு மணித்துளி நேர வித்தியாசம் ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவானத்தில் எழுகிற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இலக்கினம், சந்திரன் நின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இராசி, பிறப்புக் காலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருந்ததோ அந்தப் பிறப்பு (ஜென்ம) நட்சத்திரம் ஆகியவை வேறு வேறாக மாறி விட வாய்ப்பு இருக்கிறது.

புவி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும்பொழுது தளம்பல் ஏற்படுகிறது. அதனால் ஞாயிறு தனது பயணத்தில் புவியின் நடுவட்டக்கோட்டைக் கடக்கும் பொழுது முந்திய ஆண்டைவிட மறு ஆண்டு சற்று மேற்கு நோக்கிக் கடக்கிறது. இந்த வேறுபாட்டை வெப்ப மண்டல சோதிடம் கணக்கில் எடுப்பதில்லை. இரண்டுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இன்று ஏறத்தாழ 24 பாகையை (24 நாள்களை) எட்டி இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால் அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? பல கோடி கல் அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?

புவியின் நடுவட்டக்கோட்டுக்கு அண்மித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தார்ப்பரியம் என்னவென்றால் நடுவட்டக்கோட்டுக்கு வடக்கே Alaaska, Norvey, Finland, Greenland போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணித்தியாலத்துக்கு ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆட்டங்கண்டு விடுகிறது.

ஏழரைச்சனி: சனியானது ஒரு ராசிக்கும் ஒரு சுற்று சுற்றி வர 30 ஆண்டுகளாகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து புறப்பட்டு வட்டப் பாதையில் சுமார் 88 கோடி மைல் தொலைவில் சூரியனை ஒருமுறை சுற்றிவர சனி எடுத்துக் கொள்ளும் காலம் தான் இந்த 30 வருடங்கள். சனியானது சந்திரன், அதற்கு முன்னும் பின்னுமுள்ளது என மூன்று நிலைகளையும் கடக்க தலா 21 ஆண்டுகள் வீதம் மொத்தம் 71 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. இதைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்று கூறுகிறோம்.

சாதகப் பொருத்தத்தில் செவ்வாய் தோசம் பெரும் குறையாகக் கருதப்படுகின்றது. சாதகத்தில் செவ்வாய், இலக்கினம், சந்திரன், சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இருக்கிறது என்று பொருள். இலக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்க்கு தோசம் ஏற்படுகிறது. மணப்பெண், மணமகன் இருவர் சாதகத்திலும் இந்த இடம் அமையாவிட்டால் நல்லது. இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தாலும் நல்லதுதான்.

மிதுனம், கன்னி ஆகிய வீடுகளில் 7 அல்லது 8 ஆம் இடமாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் கடும் தோசம் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு நடப்பு திசை செவ்வாயாக இருந்தால் மிகவும் பாதிக்கப்படுவர்.

மேடம், கடகம், விருச்சிகம், மகரங்களில் செவ்வாய் குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோசம் இல்லை.

செவ்வாய் தோசம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதைப் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டால் அந்த திசை புத்தி நேரங்களில் கணவரையோ அல்லது மனைவியையோ இழக்க நேரலாம். அல்லது பிரிய நேரலாம். திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இந்தச் செவ்வாய் திசை முடிந்துவிட்டால் சிக்கல் இல்லை.

மேற்கூறிய 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் கீழ்க்கண்ட வீடுகளாக இருந்தால் தோசம் இல்லை. அவைகளாவன:

1) மேடம், விருச்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இந்த இரு வீடுகளும் செவ்வாய்க்கு ஆட்சி வீடு என்பதால் தோசமில்லை.
2) மகரம், கடகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இதில் மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடு என்பதாலும் கடகம் நீச வீடு என்பதாலும் தோசமில்லை.
3) தனுசு, மீனம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இது நட்பு வீடாக இருப்பதால் தோசமில்லை.
4) கும்பம், சிம்மம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை இதில் கும்பம் சனி வீடாகவும், சிம்மம் சூரியனின் வீடாகவும் இருப்பதால் செவ்வாய் தோசம் அடிபடுகிறது.
5) சந்திரனுடன் செவ்வாய் இணைந்திருந்தால் சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இதனால் செவ்வாய்க்குத் தோசம் இல்லை.

விவாகப் பொருத்தம் பற்றிச் சொல்லும் வாக்கிய பஞ்சாங்கம் பிராமணருக்கு அதிபதியும், சத்திரியருக்குக் கணமும், வைசியருக்கு பெண் தீர்க்கமும் சூத்திரர்க்கு யோனியும் பிரதானமாகப் பொருந்த வேண்டும் என்கிறது.

விவாகப் பொருத்தத்தில் கூட வேதங்களின் ஓர் அங்கமான சோதிடம் நால்வருணத்தைப் புகுத்தி இருக்கிறது. கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஒருவன் பிராமணன், ஒருவன் சத்திரியன், ஒருவன் வைசிகன், ஒருவன் சூத்திரன் என்ற வருண வேறுபாடு தெரியுமா?

சாத்திரமானாலும் சடங்கானாலும் எங்கும் வருணவேறுபாடு சோதிட சாத்திரம் எழுதியவர்களால் திட்டமிட்டுப் புகுத்தப் பட்டுள்ளது. கோள்களை வருண அடிப்படையில் வகுத்திருக்கிறார்கள்.

நமது சூரிய மண்டத்திலுள்ள கோள்களிலிருந்து வரும் அலைகள் நம் உடலில் சிறு உறுப்புகளுடன் தொடர்புடையவையாக உள்ளன. இவை கூடும் போதோ, குறையும்போதே அந்த உறுப்புகளில் பாதிப்பு உண்டாகும்.

சூரியன் - எலும்பு; புதன் - தோல்; சுக்கிரன் - உயர்ச்சக்தி; சந்திரன் - இரத்தம்; செவ்வாய் - மஜ்ஜை; குரு - மூளை; சனி - நரம்புகள்; ராகு, கேது - மனம்

உதாரணமாய் புதனின் காந்த அலைக்கதிர்கள் போதிய அளவு கிடைக்காதபோது தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். இவைகளைச் சரிசெய்ய புதனின் சக்தியைப் பெற ஒரு சில இடங்களைக் கண்டறிந்து, நவக்கிரக தலங்கள் என்று வாழிபாட்டுத் தலங்களாக விட்டுச் சென்றுள்ளனர். நம் முன்னோர். அங்கு சென்றால், புதனின் காந்த அலைக்கதிர்களைப் பெற்று பாதிப்புகள் விலகும் வாய்ப்பு உண்டு.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 23, 2010 9:59 am

அட போங்கப்பா. இந்த அறிவியல் யுகத்துல போய் ஜோதிடம்,ஜாதகம்ன்னுட்டு. முன்னேறின நாட்டுல எவனாச்சும்
ஜோதிடம் பார்க்குரானா என்ன? நம்ம நாட்டுலயும் இப்ப இதெல்லாம் பார்க்குறவங்க குறைஞ்சுகிட்டே வர்றாங்க.




சோதிடம் Uசோதிடம் Dசோதிடம் Aசோதிடம் Yசோதிடம் Aசோதிடம் Sசோதிடம் Uசோதிடம் Dசோதிடம் Hசோதிடம் A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jun 23, 2010 10:16 am

உதயசுதா wrote:அட போங்கப்பா. இந்த அறிவியல் யுகத்துல போய் ஜோதிடம்,ஜாதகம்ன்னுட்டு. முன்னேறின நாட்டுல எவனாச்சும்
ஜோதிடம் பார்க்குரானா என்ன? நம்ம நாட்டுலயும் இப்ப இதெல்லாம் பார்க்குறவங்க குறைஞ்சுகிட்டே வர்றாங்க.
அப்படியில்லை உதயாகா இன்று ஊடகங்கள் மூலமாகவும் இணையதளம் மூலமாகவவும்
ஜோதிடம் பற்றி அனைவரும் அறிகின்றனர்.இதை நம்பா விட்டால் பின்பேதற்கு
தினசரி நாளேட்டில் ராசிபலன் பக்கம் , அனைத்து பண்டிகைக்கும் சிறப்பு
ராசிமலர்



தீதும் நன்றும் பிறர் தர வாரா சோதிடம் 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 23, 2010 11:46 am

உதயசுதா wrote:அட போங்கப்பா. இந்த அறிவியல் யுகத்துல போய் ஜோதிடம்,ஜாதகம்ன்னுட்டு. முன்னேறின நாட்டுல எவனாச்சும்
ஜோதிடம் பார்க்குரானா என்ன? நம்ம நாட்டுலயும் இப்ப இதெல்லாம் பார்க்குறவங்க குறைஞ்சுகிட்டே வர்றாங்க.

நீங்க சொன்ன முன்னேறின நாட்டுல இருக்குறவணுங்க எல்லாம் இப்ப தான் , இத பத்தி தெரிஞ்சுக்குற ஆவலோட இந்தியாவுக்கு வராணுங்க.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 1:30 pm

என்னமோ சொல்றாங்க இதை பத்தி செம்மொழி மாநாட்டுல பேசணும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 23, 2010 1:32 pm

maniajith007 wrote:என்னமோ சொல்றாங்க இதை பத்தி செம்மொழி மாநாட்டுல பேசணும்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 1:33 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:என்னமோ சொல்றாங்க இதை பத்தி செம்மொழி மாநாட்டுல பேசணும்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஏன் இந்த கொலை வெறி நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக