புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசூர் வம்சம் (நாவல்)
Page 6 of 17 •
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17
First topic message reminder :
பாயிரம்
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.
அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.
அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.
குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.
எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.
வாசலில் செருப்புச் சத்தம்.
திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.
முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.
எழுது.
பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.
என்ன எழுதட்டும் ?
இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.
பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.
எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.
ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.
முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.
அரசூரும் இருக்கிறது.
ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.
இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.
எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.
நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.
பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.
கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.
வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.
மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.
இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?
இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.
பாயிரம்
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.
அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.
அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.
குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.
எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.
வாசலில் செருப்புச் சத்தம்.
திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.
முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.
எழுது.
பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.
என்ன எழுதட்டும் ?
இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.
பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.
எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.
ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.
முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.
அரசூரும் இருக்கிறது.
ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.
இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.
எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.
நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.
பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.
கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.
வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.
மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.
இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?
இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.
ராஜாவுக்கும் ஆசையாக இருந்தது அவளைப் பார்க்க. அவள் தான் பழுக்காத் தட்டை எல்லாம் ராப்பகலாகச் சுழல விட்டுச் சங்கீதம் கேட்கிறாளோ ?
பின்னால் யாரோ குதிரை போல் கனைக்கும் சத்தம்.
திரும்பிப் பார்த்தார் ராஜா. பனியன் சகோதரர்கள்.
சாப்பிட்டாங்களா ரெண்டு பேரும் ?
ராஜா பிரியமாக விசாரித்தார்.
ஆச்சு என்றார்கள்.
இந்த வினோத வாகனத்தைப் பாதை நெடுக ஓட்டிக் கொண்டு வந்ததில் சிரமம் ஏதாவது இருந்ததா ?
இல்லையாம்.
குழந்தைகள் பயந்து போய்ப் பின் வாங்கிக் குலை தெரிக்க ஓடினார்கள். மற்றப் பேருக்கு ஜீவனோபாயம் பற்றின கவலை. வெள்ளைக்கார மகாராணி வந்தால் கூட லட்சியம் பண்ண மாட்டார்கள்.
எதையாவது சொல்லி எங்கேயாவது பேச்சை இழுத்து, இன்னும் காசுக்கு அடி போடுவார்கள்.
சரி அது கிடக்கட்டும். கருப்புப் பெட்டியைச் சித்தம் செய்து வைத்துக் கொள்ளூங்கள். இந்தக் கிழவரின் படத்தை ஆன மட்டும் நேர்த்தியாக எழுதிப் போட வேணும்.
ராஜா அவசரமாக உத்தரவிட்டபடி வாசலுக்குப் போனார்.
பனியன் சகோதரர்கள் அவரைத் தொடர்ந்து நடந்து வண்டியில் வைத்திருந்த கருப்புப் பெட்டியையும், முக்காலியையும் எடுத்துக் கொண்டு உ ள்ளே வந்தார்கள்.
வாசலுக்குப் பக்கம் தாரை தப்பட்டையோடு நீர்மாலை ஊர்வலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
புது வேட்டியை நனைத்து உயர்த்தி நாலு முனையிலும் உலரப் பிடித்துக் கொண்டு ஆண்கள். குளத்தில் முங்கி எழுந்த படிக்குக் குடம் நிறையத் தண்ணீருமாய்த் தொடரும் பெண்கள் அப்புறம். மேளக்காரன் ஆனந்தமாக வாசித்துக் கொண்டிருந்தான்.
இந்தக் கோலாகலத்தைப் படமாக்கச் சொல்லலாமே என்று ராஜா நினைத்தார். அவர் உள்ளே திரும்பிப் பார்க்க, பனியன் சகோதரர்கள் கூடத்து ஓரமாக மர முக்காலியை நிறுத்தி அதன் மேல் எதையோ வைத்துக் கருப்புத் துணி போட்டு மூடி இருந்தார்கள்.
நெட்டை பனியன் முட்டாக்கு போல் துணியைத் தலையைச் சுற்றி இழுத்து விட்டபடி ஏதோ குழல் மூலமாகக் கீழே விறைப்பாகக் கிட்ந்த புஸ்தி மீசைக் கிழவனைப் பார்ப்பது தெரிந்தது. பார்த்தது எப்படி யந்திரத்தில் படமாகப் போய் உட்காரும் என்று தெரிந்து கொள்ள ராஜாவுக்கு ஆசை. இவன்கள் கைகட்டி வேலை பார்க்கிற சிப்பந்திகள். கேட்டால் கவுரவக் குறைச்சல்.
அந்த இழவெடுப்பான்கள் நடுக் கூடத்தில் யாருமில்லாத நேரத்தில் என்ன பண்ணுகிறான்கள் ? அசந்தால், அப்பார் காதில் கடுக்கனைக் கழட்டிக் கொண்டு போய் விடுவான்கள்.
ராணி பக்கத்தில் வந்து சொன்னாள்.
அவர்கள் துஷ்டர்களோ துன்மார்க்கர்களோ இல்லை. என்னை நம்பு. என் மாமனாரை சகல கெம்பீரத்தோடும் படம் எடுத்து நாம் என்னென்னைக்கும் கும்பிட்டு நிற்கத் தக்க வகையில் கொடுப்பார்கள். அதற்கான முஸ்தீபுகளைத் தான் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆமா கிழித்தான்கள். பக்கத்து வீட்டைப் பொசுக்கிப் போட முடியாத பயல்கள். நீங்களும் உத்தரவு போடுவது இல்லை.
கள்ளும் கறியும் கேட்கும் பக்கத்து வீட்டுப் பாப்பாத்தியம்மாள் விவகாரத்தை இவளிடம் பிரஸ்தாபிக்கலாமா என்று ராஜாவுக்குத் தோன்றியது.
வேண்டாம். உசிதமான நேரம் இது இல்லை. புஸ்தி மீசைக் கிழவனைக் குளிப்பாட்டப் பெண்கள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.
நம்ம மரியாதையும் வந்தாச்சு.
ராணி தூரத்தில் கையைக் காட்டினாள். மாட்டு வண்டி நிறையப் பூவும் மாலையுமாக வந்து கொண்டிருந்தது.
சருகணியிலே சொல்லி புது மல்லியப்பூ மாலை கட்டி வரச் சொல்லி இருந்தேன். இங்கே வரைக்கும் வாசனை தூக்குது பாருங்க.
நாற்றம் பிடித்த கிழவன் கழுத்தில் கிடந்து வாடப் போகிறது அது என்று ராஜா நினைத்தார்.
வாசல் பக்கம் ஒதுங்கி நின்ற யாரோ ராஜாவைக் குனிந்து வணங்கினார்கள்.
கொலைச் சிந்து பாட வந்திருக்கோம் தொரே.
என்ன பாட்டு ? ராஜா ஆவலாகக் கேட்டார்.
நீர்மாலை வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
ஊரோட பஞ்சம் வந்து ஊருணிக் கிணத்துலே உசிர விட்ட குருக்களய்யா மக்களோட தற்கொலைச் சிந்து.
அவர்கள் சொன்னது பாதி மட்டும் கேட்டபடி ராஜா உள்ளே கெத்தாக நடந்தார்.
பின்னால் யாரோ குதிரை போல் கனைக்கும் சத்தம்.
திரும்பிப் பார்த்தார் ராஜா. பனியன் சகோதரர்கள்.
சாப்பிட்டாங்களா ரெண்டு பேரும் ?
ராஜா பிரியமாக விசாரித்தார்.
ஆச்சு என்றார்கள்.
இந்த வினோத வாகனத்தைப் பாதை நெடுக ஓட்டிக் கொண்டு வந்ததில் சிரமம் ஏதாவது இருந்ததா ?
இல்லையாம்.
குழந்தைகள் பயந்து போய்ப் பின் வாங்கிக் குலை தெரிக்க ஓடினார்கள். மற்றப் பேருக்கு ஜீவனோபாயம் பற்றின கவலை. வெள்ளைக்கார மகாராணி வந்தால் கூட லட்சியம் பண்ண மாட்டார்கள்.
எதையாவது சொல்லி எங்கேயாவது பேச்சை இழுத்து, இன்னும் காசுக்கு அடி போடுவார்கள்.
சரி அது கிடக்கட்டும். கருப்புப் பெட்டியைச் சித்தம் செய்து வைத்துக் கொள்ளூங்கள். இந்தக் கிழவரின் படத்தை ஆன மட்டும் நேர்த்தியாக எழுதிப் போட வேணும்.
ராஜா அவசரமாக உத்தரவிட்டபடி வாசலுக்குப் போனார்.
பனியன் சகோதரர்கள் அவரைத் தொடர்ந்து நடந்து வண்டியில் வைத்திருந்த கருப்புப் பெட்டியையும், முக்காலியையும் எடுத்துக் கொண்டு உ ள்ளே வந்தார்கள்.
வாசலுக்குப் பக்கம் தாரை தப்பட்டையோடு நீர்மாலை ஊர்வலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
புது வேட்டியை நனைத்து உயர்த்தி நாலு முனையிலும் உலரப் பிடித்துக் கொண்டு ஆண்கள். குளத்தில் முங்கி எழுந்த படிக்குக் குடம் நிறையத் தண்ணீருமாய்த் தொடரும் பெண்கள் அப்புறம். மேளக்காரன் ஆனந்தமாக வாசித்துக் கொண்டிருந்தான்.
இந்தக் கோலாகலத்தைப் படமாக்கச் சொல்லலாமே என்று ராஜா நினைத்தார். அவர் உள்ளே திரும்பிப் பார்க்க, பனியன் சகோதரர்கள் கூடத்து ஓரமாக மர முக்காலியை நிறுத்தி அதன் மேல் எதையோ வைத்துக் கருப்புத் துணி போட்டு மூடி இருந்தார்கள்.
நெட்டை பனியன் முட்டாக்கு போல் துணியைத் தலையைச் சுற்றி இழுத்து விட்டபடி ஏதோ குழல் மூலமாகக் கீழே விறைப்பாகக் கிட்ந்த புஸ்தி மீசைக் கிழவனைப் பார்ப்பது தெரிந்தது. பார்த்தது எப்படி யந்திரத்தில் படமாகப் போய் உட்காரும் என்று தெரிந்து கொள்ள ராஜாவுக்கு ஆசை. இவன்கள் கைகட்டி வேலை பார்க்கிற சிப்பந்திகள். கேட்டால் கவுரவக் குறைச்சல்.
அந்த இழவெடுப்பான்கள் நடுக் கூடத்தில் யாருமில்லாத நேரத்தில் என்ன பண்ணுகிறான்கள் ? அசந்தால், அப்பார் காதில் கடுக்கனைக் கழட்டிக் கொண்டு போய் விடுவான்கள்.
ராணி பக்கத்தில் வந்து சொன்னாள்.
அவர்கள் துஷ்டர்களோ துன்மார்க்கர்களோ இல்லை. என்னை நம்பு. என் மாமனாரை சகல கெம்பீரத்தோடும் படம் எடுத்து நாம் என்னென்னைக்கும் கும்பிட்டு நிற்கத் தக்க வகையில் கொடுப்பார்கள். அதற்கான முஸ்தீபுகளைத் தான் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆமா கிழித்தான்கள். பக்கத்து வீட்டைப் பொசுக்கிப் போட முடியாத பயல்கள். நீங்களும் உத்தரவு போடுவது இல்லை.
கள்ளும் கறியும் கேட்கும் பக்கத்து வீட்டுப் பாப்பாத்தியம்மாள் விவகாரத்தை இவளிடம் பிரஸ்தாபிக்கலாமா என்று ராஜாவுக்குத் தோன்றியது.
வேண்டாம். உசிதமான நேரம் இது இல்லை. புஸ்தி மீசைக் கிழவனைக் குளிப்பாட்டப் பெண்கள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.
நம்ம மரியாதையும் வந்தாச்சு.
ராணி தூரத்தில் கையைக் காட்டினாள். மாட்டு வண்டி நிறையப் பூவும் மாலையுமாக வந்து கொண்டிருந்தது.
சருகணியிலே சொல்லி புது மல்லியப்பூ மாலை கட்டி வரச் சொல்லி இருந்தேன். இங்கே வரைக்கும் வாசனை தூக்குது பாருங்க.
நாற்றம் பிடித்த கிழவன் கழுத்தில் கிடந்து வாடப் போகிறது அது என்று ராஜா நினைத்தார்.
வாசல் பக்கம் ஒதுங்கி நின்ற யாரோ ராஜாவைக் குனிந்து வணங்கினார்கள்.
கொலைச் சிந்து பாட வந்திருக்கோம் தொரே.
என்ன பாட்டு ? ராஜா ஆவலாகக் கேட்டார்.
நீர்மாலை வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.
ஊரோட பஞ்சம் வந்து ஊருணிக் கிணத்துலே உசிர விட்ட குருக்களய்யா மக்களோட தற்கொலைச் சிந்து.
அவர்கள் சொன்னது பாதி மட்டும் கேட்டபடி ராஜா உள்ளே கெத்தாக நடந்தார்.
அரசூர் வம்சம் - அத்தியாயம் பதினெட்டு
கூடம் எல்லாம் நனைந்து வெள்ளம் போல் தெப்பக்குளத் தண்ணீர். மீன் வாடையும், நாணல் வாடையும் பிணவாடையுமாக அது புஸ்தி மீசைக் கிழவனை தலையோடு பாதம் கழுவி பெருக்கெடுத்துப் போனது.
ஒவ்வொரு பெண்ணும் குடத்தைக் கவிழ்க்கும்போது வரவழைத்துக் கொண்ட துக்கத்தோடு ஓவென்று குரலெடுத்து அழுதபோது திருப்தியோடு ஏப்பம் விட்டுக் கொண்டு ராஜா பனியன் சகோதரர்கள் பக்கமாக ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இதை எடுத்துடலாமா ?
பனியன்காரர்கள் ராஜாவை மரியாதை விலகாமல் விசாரித்தார்கள்.
செய்யுங்களேன். தண்ணி ஊத்தற பொண்ணுங்க மாராப்புச் சேலை விலகினது தெரியாமப் படம் வரணும்.
ராஜா கிசுகிசுத்த குரலில் சொன்னார்.
அவர் சட்டமாக நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பது அதுக்காகவும் கூடித்தான் என்றாலும் நாலு பேர் பார்க்க எடுத்த படத்தில் குடும்பப் பெண்களும், பணி எடுக்கும் பெண்டுகளும் கச்சையைக் காட்டிக் கொண்டு நிற்பது சரியில்லை.
தண்ணியை ஊத்தற மாதிரி யாராவது பொம்பளையை சமூகம் அப்படியே நிக்கச் சொல்லி உத்தரவாகணும். எடுத்துடலாம்.
குட்டை பனியன் சொன்னான்.
சேடிப் பெண் தண்ணீர்க் குடத்தோடு வந்தபோது ராஜா அவளை அப்படியே குடத்தைத் தூக்கிப் பிடித்தபடி நிற்க உத்தரவு பிறப்பித்தார்.
அவள் என்னத்துக்காகவோ அழ ஆரம்பித்திருந்தாள். பூப்படையாமல் கல்யாணம் கழிந்த ஒரே வருடத்தில் இவளைத் துறந்து கொல்லன் மகளோடு ஓடிப்போன புருஷனை நினைத்தா, அப்புறம் அவளே ராஜா அவளுக்குக் கால்பிடித்து விட்டபோது சொன்ன தொடுப்பு எல்லாம் விழலுக்கு இரைத்த நீராக ஒரு காசும் பிரயோஜனப்படாமல் போனது குறித்தா அல்லது புஸ்தி மீசைக் கிழவன் கேட்ட உபசாரம் குறித்த விசனத்தாலா அதுவும் அல்லது குற்றேவல் புரிந்த வகையில் இரண்டு மாதப் பணம் வந்து சேராமல் இருப்பதாலா இல்லை ராஜா கால் பிடித்து விட்டு வெகுநாள் ஆனதால் முழங்கால் நோவதாலா அந்த அழுகை என்று ராஜாவுக்கு விளங்கவில்லை.
அழுகை இருக்கட்டும். நிறுத்திப் போட்டு, அந்தக் குடத்தை முழுக்கக் கவிழ்க்காமல் அப்படியே நில்லடி.
நின்றாள்.
குரலும் பாதி அழுகையில் உடைந்து வாயின் கோணலில் உறைந்து போனது.
குட்டை பனியன் அதிர்வேட்டுப் போல் எதையோ நீட்டிப் பிடித்துக் கொளுத்த படார் என்று வெடிச்சத்தம். அப்புறம் கண் கூசும் வெளிச்சம்.
புஸ்தி மீசைக் கிழவன் விரைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். யார் யாரோ அப்பூ நீரு செத்துட்டாரு என்று சொல்லி அவனைத் தரையோடு மல்லாத்திக் கிடத்தினார்கள்.
முடிந்தது என்று தலையை அசைத்தபடி நெட்டை பனியன் கறுப்புத் துணிக்குள் இருந்து தலையை வெளியே எடுத்தான். கூடம் முழுக்கப் படிந்த ஈரம் காலில் நனைத்ததைச் சுண்ணாம்பு பூசிய சுவரில் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டிருந்த அவனை ராணி பார்த்த பார்வையில் விரோதம் இருந்தது.
இது என்ன கங்கா தீர்த்தமா அவன் தலையில் தெளித்துக் கொண்டு அனுபூதியோடு குதித்துக் கூத்தாட ? பிணம் கழுவிய தண்ணீருக்கு மீன் கழுவிய தண்ணீரை விட அதிக மரியாதை கொடுக்க முடியுமா என்ன என்று ராஜா யோசித்தார்.
அந்தப் படம் வந்து சேர்ந்ததும் பார்க்க வேண்டும். புஸ்தி மீசைக் கிழவனின் ஈரத்தில் கிடக்கும் உடம்புக்காக இல்லை. உருண்டையான தோள்களோடு கையை உயர்த்தி நின்றவளின் அங்க லாவண்யத்துக்காக.
பொம்பளைப் புள்ளைங்க எல்லாரும் விலகிப் போங்க. தாத்தனைத் தொடச்சுக் கோடி உடுத்தப் போறோம். கன்னி கழியாத குமரு இருந்தா காணக் கூடாத எதையாவது ஏடாகூடமாப் பாத்துட்டுப் பயந்துடப் போவுதுங்க.
வாலிபப் பையன்கள் நாலைந்து பேர் சுறுசுறுப்பாக முன்னே வர இடுப்பில் வெறும் குடத்தோடு பெண்கள் சிரித்தார்கள்.
ஆமா அப்பு. என்னத்துக்கு வம்பு. வாய்ச்சதைப் பத்தி வக்கணயாத் தெரியும். இப்பப் பார்த்ததோடு வச்சு அளந்தா, சுண்டு விரல் தண்டி சமாச்சாரம் எல்லாம் அதுல்லே சேத்தியா, அடச் சேன்னு வெறுத்துப் போயிடும் இல்ல.
காது வளர்த்த கிழவி இளக்காரமாகச் சொல்ல, அடுத்து இன்னும் பலமான சிரிப்பு.
அப்பத்தா, நீ பாத்ததை மட்டும் வச்சுப் பேசு. பாக்காததைப் பத்தி வாயைத் திறக்காதே.
முந்தாநாள் வரைக்கும் டொண்டொண்டானு மணி அடிச்சுக்கிட்டுத் திரிஞ்ச பயலுக. சொட்டச் சொட்ட நான் தூக்கி வளத்தவனுங்க தானேடா நீங்க எல்லோரும்.
கிழவி விடாமல் பிடிக்க, பெண்கள் அந்தப் பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு சிரித்தார்கள்.
ராணி பக்கம் நகர்ந்து அவள் காதில் யார் அது என்று ராஜா விசாரித்தார்.
சிறுக்கி முண்ட. அம்மா இருக்கும்போதே அப்பாரு ஊருக்கு ஒரு வப்பாட்டி வச்சிருந்தாரு. அவ போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் எங்கே பதுக்கி வச்சிருந்தாரோ. இப்பதக்கு இங்கே என்னத்தைச் சுருட்டிட்டுப் போகலாம்னு முந்தியை விரிச்சுட்டு அலையறா கிழட்டுத் தேவிடியா.
ராணி பல்லைக் கடித்தாள்.
நம்ம கல்யாணத்திலே பாத்ததா நினப்பு இல்லையே ?
முப்பது வருடம் முந்திய சமாச்சாரத்தை அசை போட்டபடி சொன்னார் ராஜா.
பாத்துட்டு என்ன பண்ணியிருப்பீங்க ? கூப்பிட்டு வச்சு.
அவள் தாழ்ந்த குரலில் முடிக்கும் முன் அகன்று போய் பனியன் சகோதரர்கள் பக்கமாய் நின்றார் ராஜா.
பெண்கள் எல்லோரும் கூடத்துக்கு வெளியே போக பேரப்பிள்ளைகள் புஸ்தி மீசைக் கிழவனை நக்னமாக்கி உடம்பு துடைக்க ஆரம்பித்தார்கள்.
ஏ மருது. தாத்தனை இடுப்புக்குக் கீழே அழுத்தித் தொடைக்காதே. பொங்கிப் பூரிச்சு எளுந்துடுவாரு. அப்புறம் குழிக்குள்ளே உடம்பு போகாது.
திரும்ப சிரிப்பு அலையாக எழ ராஜா கால் அங்குலம் ஒரு புன்னகையைச் சிந்தினார்.
புஸ்தி மீசைக் கிழவனுக்குக் கோடி உடுத்தி, நெற்றியில் திருநீற்றைக் குழைத்துப் பூசி, குங்குமமும் சந்தனமும் இட்ட பிறகு யாரோ சொன்னதால் மீசைக்கு நெய் தடவி நீவி விட்டார்கள்.
பெருத்த அழுகையோடு காது வளர்த்த கிழவி உள்ளே இருந்து வந்து கிழவனை மடியில் போட்டுக் கொண்டு லட்சணமாக ஒப்புச் சொல்ல ஆரம்பித்தாள். பழுக்காத் தட்டு சங்கீதம் போல் வெகு நளினமாக இருந்தது அது ராஜா காதுக்கு.
அப்பத்தா. போதும். எந்திரு. தாத்தன் மறுபடி எழுந்தா நீ மாங்கா கடிக்க வேண்டிப் போகும்.
இந்தத் தடவை கிழவிக்கே கூச்சம் வரும்படி சிரிப்பு கூரையைப் பொத்துக் கொண்டு போனது.
இதாண்டா கல்யாணச் சாவு. சிரிச்சுக்கிட்டே இருக்கோம் பாரு.
ராஜா முதல் தடவையாக வாயைத் திறந்தபோது ஆமா என்று அங்கீகரித்து எல்லோரும் தலையை ஆட்டினார்கள்.
நெட்டை பனியன் ராஜா பக்கத்தில் வந்து குனிந்து புத்தி என்றான்.
என்ன என்றார் ராஜா கெத்தாக.
பெரிய தொரையை நாக்காலியிலே உக்கார வச்சு குடும்பத்தோடு இன்னொரு படம் பிடிச்சுக்க சமூகம் உத்தரவு தரணும்.
ராஜா யோசித்தார். ஏற்கனவே விரைத்துக் கொண்டு வருகிற இவனை எப்படி நாற்காலியில் உட்கார வைப்பது ?
மைத்துனர்களின் மகன்கள், அது என்ன சிரமம் நாங்க பாத்துக்கறோம் என்றார்கள்.
நாற்காலியில் பிடித்து இழுத்து உட்கார்த்தி இடுப்போடு கயிறு கட்டி, அது தெரியாமல் தொடையில் சரிகைச் சல்லாத் துணி போட்டு மூடினார்கள். வெற்றிலையை கூழாக அரைத்து எடுத்து வந்து கிழவன் உதட்டில் பூசிவிட்டார்கள்.
நல்லா சாப்பிட்டு ஆண்டு அனுபவிச்சுப் போன களை படத்துலே வரணும் அப்பு.
அவர்கள் பனியன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்ல, செஞ்சுடலாம் என்றார்கள் இருவரும்.
பெண்டு பிள்ளைகளை தாத்தன் காலடியிலே உக்காரச் சொல்லுங்க.
ராஜா கட்டளையிட்டார்.
குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லி விட்டாள் ராணி. அவளுக்குப் பிறக்காததால் அவற்றின் மேல் வெறுப்பு என்று இல்லை. பயந்து விடும் என்றே அது வேண்டாம் என்று தடுத்தாள் அவள் என்று ராஜாவுக்குப் பிரிந்தது.
அப்பத்தா, நீ பாத்ததை மட்டும் வச்சுப் பேசு. பாக்காததைப் பத்தி வாயைத் திறக்காதே.
முந்தாநாள் வரைக்கும் டொண்டொண்டானு மணி அடிச்சுக்கிட்டுத் திரிஞ்ச பயலுக. சொட்டச் சொட்ட நான் தூக்கி வளத்தவனுங்க தானேடா நீங்க எல்லோரும்.
கிழவி விடாமல் பிடிக்க, பெண்கள் அந்தப் பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு சிரித்தார்கள்.
ராணி பக்கம் நகர்ந்து அவள் காதில் யார் அது என்று ராஜா விசாரித்தார்.
சிறுக்கி முண்ட. அம்மா இருக்கும்போதே அப்பாரு ஊருக்கு ஒரு வப்பாட்டி வச்சிருந்தாரு. அவ போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் எங்கே பதுக்கி வச்சிருந்தாரோ. இப்பதக்கு இங்கே என்னத்தைச் சுருட்டிட்டுப் போகலாம்னு முந்தியை விரிச்சுட்டு அலையறா கிழட்டுத் தேவிடியா.
ராணி பல்லைக் கடித்தாள்.
நம்ம கல்யாணத்திலே பாத்ததா நினப்பு இல்லையே ?
முப்பது வருடம் முந்திய சமாச்சாரத்தை அசை போட்டபடி சொன்னார் ராஜா.
பாத்துட்டு என்ன பண்ணியிருப்பீங்க ? கூப்பிட்டு வச்சு.
அவள் தாழ்ந்த குரலில் முடிக்கும் முன் அகன்று போய் பனியன் சகோதரர்கள் பக்கமாய் நின்றார் ராஜா.
பெண்கள் எல்லோரும் கூடத்துக்கு வெளியே போக பேரப்பிள்ளைகள் புஸ்தி மீசைக் கிழவனை நக்னமாக்கி உடம்பு துடைக்க ஆரம்பித்தார்கள்.
ஏ மருது. தாத்தனை இடுப்புக்குக் கீழே அழுத்தித் தொடைக்காதே. பொங்கிப் பூரிச்சு எளுந்துடுவாரு. அப்புறம் குழிக்குள்ளே உடம்பு போகாது.
திரும்ப சிரிப்பு அலையாக எழ ராஜா கால் அங்குலம் ஒரு புன்னகையைச் சிந்தினார்.
புஸ்தி மீசைக் கிழவனுக்குக் கோடி உடுத்தி, நெற்றியில் திருநீற்றைக் குழைத்துப் பூசி, குங்குமமும் சந்தனமும் இட்ட பிறகு யாரோ சொன்னதால் மீசைக்கு நெய் தடவி நீவி விட்டார்கள்.
பெருத்த அழுகையோடு காது வளர்த்த கிழவி உள்ளே இருந்து வந்து கிழவனை மடியில் போட்டுக் கொண்டு லட்சணமாக ஒப்புச் சொல்ல ஆரம்பித்தாள். பழுக்காத் தட்டு சங்கீதம் போல் வெகு நளினமாக இருந்தது அது ராஜா காதுக்கு.
அப்பத்தா. போதும். எந்திரு. தாத்தன் மறுபடி எழுந்தா நீ மாங்கா கடிக்க வேண்டிப் போகும்.
இந்தத் தடவை கிழவிக்கே கூச்சம் வரும்படி சிரிப்பு கூரையைப் பொத்துக் கொண்டு போனது.
இதாண்டா கல்யாணச் சாவு. சிரிச்சுக்கிட்டே இருக்கோம் பாரு.
ராஜா முதல் தடவையாக வாயைத் திறந்தபோது ஆமா என்று அங்கீகரித்து எல்லோரும் தலையை ஆட்டினார்கள்.
நெட்டை பனியன் ராஜா பக்கத்தில் வந்து குனிந்து புத்தி என்றான்.
என்ன என்றார் ராஜா கெத்தாக.
பெரிய தொரையை நாக்காலியிலே உக்கார வச்சு குடும்பத்தோடு இன்னொரு படம் பிடிச்சுக்க சமூகம் உத்தரவு தரணும்.
ராஜா யோசித்தார். ஏற்கனவே விரைத்துக் கொண்டு வருகிற இவனை எப்படி நாற்காலியில் உட்கார வைப்பது ?
மைத்துனர்களின் மகன்கள், அது என்ன சிரமம் நாங்க பாத்துக்கறோம் என்றார்கள்.
நாற்காலியில் பிடித்து இழுத்து உட்கார்த்தி இடுப்போடு கயிறு கட்டி, அது தெரியாமல் தொடையில் சரிகைச் சல்லாத் துணி போட்டு மூடினார்கள். வெற்றிலையை கூழாக அரைத்து எடுத்து வந்து கிழவன் உதட்டில் பூசிவிட்டார்கள்.
நல்லா சாப்பிட்டு ஆண்டு அனுபவிச்சுப் போன களை படத்துலே வரணும் அப்பு.
அவர்கள் பனியன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்ல, செஞ்சுடலாம் என்றார்கள் இருவரும்.
பெண்டு பிள்ளைகளை தாத்தன் காலடியிலே உக்காரச் சொல்லுங்க.
ராஜா கட்டளையிட்டார்.
குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லி விட்டாள் ராணி. அவளுக்குப் பிறக்காததால் அவற்றின் மேல் வெறுப்பு என்று இல்லை. பயந்து விடும் என்றே அது வேண்டாம் என்று தடுத்தாள் அவள் என்று ராஜாவுக்குப் பிரிந்தது.
ராணி, அவளுடைய நாத்திமார், உறவுக்காரப் பெண்கள், அப்புறம் மைத்துனர்கள், அவர்கள் பிள்ளைகள் என்று எல்லோரும் புஸ்தி மீசைக் கிழவன் காலடியில் உட்கார்ந்தார்கள். காது வளர்த்த கிழவி அவன் காலை மடியில் போட்டுக் கொண்டு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.
வலது கோடியிலே வெத்து இடமா இருக்கே. படத்துலே அப்படியே வந்தா நல்லா இருக்காதே.
குட்டை பனியன் சொல்ல, ராஜா உள்ளே பார்த்து சேடிப் பெண்ணைக் கை காட்டி அழைத்தார்.
அவள் உட்கார்ந்த பிறகு, பனியன் சகோதரர்கள் திரும்ப வெடி வெடித்தார்கள். மின்னல் தாக்கிய வெளிச்சத்தில் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டபோது தடால் என்று சத்தம்.
புஸ்தி மீசைக் கிழவன் நாற்காலியிலிருந்து சரிந்து ஓரமாகச் சேடிப் பெண் மடியில் விழுந்து கிடந்தான்.
வங்காப்பய கிளவா. புத்தியக் காட்டிட்ட பாரு.
ராஜா மனதுக்குள் அவனை வைது தீர்த்தார்.
இன்னொரு தடவை எடுக்கணுமா ?
யாரோ கேட்டார்கள்.
வேணாம். நான் எடுத்து முடிச்சுட்டேன்.
நெட்டை பனியன் தீர்மானமாக அறிவித்தான்.
அப்ப பல்லக்கை சித்தம் பண்ணுங்க. கொட்டுக் காரங்க எங்கப்பா. தூங்கிட்டாங்களா ? அதிர்வேட்டு என்ன ஆச்சு ?
பேரப்பிள்ளைகளும் பிள்ளைகளும் உறவுக்காரர்களும் உள்ளேயும் வெளியேயும் ஓட, கிழவனை வெளியே எடுத்துப் போய்ப் பல்லக்கில் படுக்க வைத்தார்கள்.
ராத்திரி நிலவு வெளிச்சத்தில் குளிர்ச்சியான காற்று வாங்கிக் கொண்டு குளித்து வெகு சுத்தமாகப் படுத்திருந்தான் அவன்.
அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்.
பனியன் சகோதரர்கள் கருப்புப் பெட்டியை மூடி, முக்காலியைச் சுமந்து கொண்டு கிளம்பினார்கள்.
அடுத்த வாரம் படத்தோட வாரோம்.
அவர்கள் பல்லக்கைத் தொடர்ந்து வாசலுக்குப் போய் வண்டிக் கதவைத் திறந்தார்கள்.
ஏப்பு, நாலுகோட்டை தாயாதிங்க வரல்லியே. பரவாயில்லேயா. எடுத்திடலாமா ?
காது வளர்த்த கிழவி பேரப் பிள்ளை யாரையோ அக்கறையாக விசாரித்தாள்.
நீ சும்மா இரு அப்பத்தா. அவனுக வல்லடி வமபடியா தகராறு பண்றானுங்க. இன்னிக்கு கேதம் விசாரிக்க வரக் கூடாதுன்னு சோசியன் சொல்லிப் போட்டானாம். சும்மாப் பம்மாத்து. நாளைக்கு லேஞ்சி கட்ட வருவானுங்க இல்லே. முகத்திலே அடிச்ச மாதிரி அதை எடுத்து கோமணமாக் கட்டிட்டுப் போங்கடா நாய்ப்பயகளான்னு சொல்லப் போறேன் பாரு.
அவன் படபடக்க, ராணி முன்னால் வந்து அடக்கினாள்.
போதும்டா இதை எல்லாம் பொதுவிலே தான் வச்சுக்கணுமா ? நானும் மாப்பிளத் துரையும் மல்லியப்பூ மாலை போட்டு மரியாதை செஞ்சதும் எடுத்துட்டுப் போக வேண்டியதுதான். யார் வந்தாலும் வராட்டாலும் இனிமே ஒரு நொடி கூடக் காத்திருக்கக் கூடாது.
அவள் குரலின் கண்டிப்பு ராஜா முதல் கொண்டு எல்லோரையும் கட்டிப் போட்டது.
மாலை மரியாதை ஆன பிறகு பத்து அதிர்வேட்டும் வாணவேடிக்கையாக மேலே சீறிப் பாய்ந்து பூச்சிதறிய அவுட்டுக்களுமாக கிழவனைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு போனபோது நடு ராத்திரி கடந்து போயிருந்தது.
பனியன் சகோதரர்கள் கார் பக்கம் பல்லக்கு வந்தபோது கிழவன் நகர மறுத்து விட்டான். பல்லக்குத் தூக்கிகள் கால் மாறி நின்று திணறிக் கொண்டிருக்க, காது வளர்த்த கிழவி என்ன என்று பக்கத்தில் போய்ப் பார்த்தாள்.
அவள் பேரப்பிள்ளைகள் காதில் ஏதோ சொல்ல, அவர்கள் சிரித்துக் கொண்டே பல்லக்கைத் தாழ்வாக இறக்கிப் பிடிக்கும்படி பல்லக்குத் தூக்கிகளைக் கேட்டுக் கொண்டார்கள்.
புஸ்தி மீசைக் கிழவனின் கை பல்லக்குக்கு வெளியே நீண்டது. பனியன் சகோதரர்களின் ஆஸ்டின் காரில் பெரிதாக நீட்டிக் கொண்டிருந்த உருண்டு திரண்ட ரப்பர் ஹாரனை ஆசையோடு பற்றி வருடி மெல்ல அழுத்த பாம் பாம் என்று சத்தம்.
கொண்டுக்கிட்டுப் போங்க.
ராஜா சொன்னார். இவன் மேலே போய்க் கையைக் காலை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமே என்று அவருக்குக் கவலையாக இருந்தது.
வலது கோடியிலே வெத்து இடமா இருக்கே. படத்துலே அப்படியே வந்தா நல்லா இருக்காதே.
குட்டை பனியன் சொல்ல, ராஜா உள்ளே பார்த்து சேடிப் பெண்ணைக் கை காட்டி அழைத்தார்.
அவள் உட்கார்ந்த பிறகு, பனியன் சகோதரர்கள் திரும்ப வெடி வெடித்தார்கள். மின்னல் தாக்கிய வெளிச்சத்தில் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டபோது தடால் என்று சத்தம்.
புஸ்தி மீசைக் கிழவன் நாற்காலியிலிருந்து சரிந்து ஓரமாகச் சேடிப் பெண் மடியில் விழுந்து கிடந்தான்.
வங்காப்பய கிளவா. புத்தியக் காட்டிட்ட பாரு.
ராஜா மனதுக்குள் அவனை வைது தீர்த்தார்.
இன்னொரு தடவை எடுக்கணுமா ?
யாரோ கேட்டார்கள்.
வேணாம். நான் எடுத்து முடிச்சுட்டேன்.
நெட்டை பனியன் தீர்மானமாக அறிவித்தான்.
அப்ப பல்லக்கை சித்தம் பண்ணுங்க. கொட்டுக் காரங்க எங்கப்பா. தூங்கிட்டாங்களா ? அதிர்வேட்டு என்ன ஆச்சு ?
பேரப்பிள்ளைகளும் பிள்ளைகளும் உறவுக்காரர்களும் உள்ளேயும் வெளியேயும் ஓட, கிழவனை வெளியே எடுத்துப் போய்ப் பல்லக்கில் படுக்க வைத்தார்கள்.
ராத்திரி நிலவு வெளிச்சத்தில் குளிர்ச்சியான காற்று வாங்கிக் கொண்டு குளித்து வெகு சுத்தமாகப் படுத்திருந்தான் அவன்.
அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்.
பனியன் சகோதரர்கள் கருப்புப் பெட்டியை மூடி, முக்காலியைச் சுமந்து கொண்டு கிளம்பினார்கள்.
அடுத்த வாரம் படத்தோட வாரோம்.
அவர்கள் பல்லக்கைத் தொடர்ந்து வாசலுக்குப் போய் வண்டிக் கதவைத் திறந்தார்கள்.
ஏப்பு, நாலுகோட்டை தாயாதிங்க வரல்லியே. பரவாயில்லேயா. எடுத்திடலாமா ?
காது வளர்த்த கிழவி பேரப் பிள்ளை யாரையோ அக்கறையாக விசாரித்தாள்.
நீ சும்மா இரு அப்பத்தா. அவனுக வல்லடி வமபடியா தகராறு பண்றானுங்க. இன்னிக்கு கேதம் விசாரிக்க வரக் கூடாதுன்னு சோசியன் சொல்லிப் போட்டானாம். சும்மாப் பம்மாத்து. நாளைக்கு லேஞ்சி கட்ட வருவானுங்க இல்லே. முகத்திலே அடிச்ச மாதிரி அதை எடுத்து கோமணமாக் கட்டிட்டுப் போங்கடா நாய்ப்பயகளான்னு சொல்லப் போறேன் பாரு.
அவன் படபடக்க, ராணி முன்னால் வந்து அடக்கினாள்.
போதும்டா இதை எல்லாம் பொதுவிலே தான் வச்சுக்கணுமா ? நானும் மாப்பிளத் துரையும் மல்லியப்பூ மாலை போட்டு மரியாதை செஞ்சதும் எடுத்துட்டுப் போக வேண்டியதுதான். யார் வந்தாலும் வராட்டாலும் இனிமே ஒரு நொடி கூடக் காத்திருக்கக் கூடாது.
அவள் குரலின் கண்டிப்பு ராஜா முதல் கொண்டு எல்லோரையும் கட்டிப் போட்டது.
மாலை மரியாதை ஆன பிறகு பத்து அதிர்வேட்டும் வாணவேடிக்கையாக மேலே சீறிப் பாய்ந்து பூச்சிதறிய அவுட்டுக்களுமாக கிழவனைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு போனபோது நடு ராத்திரி கடந்து போயிருந்தது.
பனியன் சகோதரர்கள் கார் பக்கம் பல்லக்கு வந்தபோது கிழவன் நகர மறுத்து விட்டான். பல்லக்குத் தூக்கிகள் கால் மாறி நின்று திணறிக் கொண்டிருக்க, காது வளர்த்த கிழவி என்ன என்று பக்கத்தில் போய்ப் பார்த்தாள்.
அவள் பேரப்பிள்ளைகள் காதில் ஏதோ சொல்ல, அவர்கள் சிரித்துக் கொண்டே பல்லக்கைத் தாழ்வாக இறக்கிப் பிடிக்கும்படி பல்லக்குத் தூக்கிகளைக் கேட்டுக் கொண்டார்கள்.
புஸ்தி மீசைக் கிழவனின் கை பல்லக்குக்கு வெளியே நீண்டது. பனியன் சகோதரர்களின் ஆஸ்டின் காரில் பெரிதாக நீட்டிக் கொண்டிருந்த உருண்டு திரண்ட ரப்பர் ஹாரனை ஆசையோடு பற்றி வருடி மெல்ல அழுத்த பாம் பாம் என்று சத்தம்.
கொண்டுக்கிட்டுப் போங்க.
ராஜா சொன்னார். இவன் மேலே போய்க் கையைக் காலை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமே என்று அவருக்குக் கவலையாக இருந்தது.
அரசூர் வம்சம் - அத்தியாயம் பத்தொன்பது
ராஜா நாற்காலி போட்டுத் திண்ணையில் குந்தி இருந்தார். எதிர்த் திண்ணையில் கேதத்துக்கு வந்தவர்கள் அவருடைய மூத்த மைத்துனனுக்குத் தலையில் பரிவட்டமாக லேஞ்சி கட்டிக் கொண்டிருந்தார்கள்.
காலையில் ஆரம்பித்தது உச்சிப் பொழுதுக்கு அப்புறமும் நீண்டு கொண்டே போகிறது. அத்தனை பங்காளிகளை புஸ்தி மீசைக் கிழவன் சம்பாதித்து வைத்து விட்டுப் போயிருக்கிறான்.
புதுசாக மொட்டை போட்ட தலையில் நரம்பு புடைத்துத் தெரிய காதெல்லாம் முடியோடு கிழவனினின் மூத்த மகன் உட்கார்ந்திருந்தான். மீசையை மழித்து, மொட்டைத் தலையோடு அவன் ராஜாவின் அன்ன சாத்திரத்தில் ராத்திரிச் சாப்பாட்டுக்குக் காத்திருக்கும் பரதேசி போல் இருந்தான்.
அவனா பரதேசி ? தாமிரவருணிப் பக்கம் காணி காணியாக நிலம் நீச்சும் தென்னந்தோப்பும், வாழைத்தோட்டமும் வைத்திருக்கிறவன். எல்லாம் அவன் கட்டிய புலியடிதம்மம் பெண்பிள்ளை கொண்டு வந்தது. ராஜாவுக்கு அவள் எதோ உறவு முறையில் சகோதரமாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் அவருக்கு புலியடிதம்மம் சம்பந்தம் வாய்த்திருக்கும். சட்டமாக நிலத்தில் வேலையாட்களை விரட்டிக் கொண்டு, தோப்பில் தேங்காய் பிடுங்கிப் போடுவதைக் கணக்குப் பண்ணிக் கொண்டு முழங்காலுக்கு மேலே கட்டிய ஒற்றை வேட்டியும் மேலே தறித் துண்டுமாக நின்றிருப்பார்.
அரண்மனையில் உட்கார்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்வதை விட உசத்தியா என்ன அதெல்லாம் ?
இல்லை என்று உறுதியாகத் தலையசைத்து எதிர்த் திண்ணையில் உட்கார்ந்திருந்த மொட்டையனைக் கனிவோடு பார்த்தார் அவர்.
எல்லோருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய கடமைப்பட்டவர் அவர்.
கட்டலாமா ?
யாரோ கேட்டார்கள். மொட்டையன் தலையை ஆட்டுகிறான். உருமால் தலையில் ஏறுகிறது. வந்தவன் துக்கம் ஏற்பட்டது போல் முகத்தை வீங்க வைத்துக் கொண்டு எழுந்து கொட்டகையில் இட்டலி தின்னப் போகிறான்.
காலையிலிருந்து இதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பது அலுப்புத் தட்ட ஆரம்பித்தது ராஜாவுக்கு. எழுந்து கொஞ்சம் காலாற நடமாடி விட்டு வந்தால் என்ன ?
செம்மண் நிறத்தில் அலையடித்துக் கொண்டிருந்த நல்ல தண்ணி ஊருணி மனதில் வந்தது. ரம்மியமான பிரதேசம். போன தடவை இங்கே வந்தபோது புஸ்தி மீசைக் கிழவன் ஜீவியவந்தனாக இருந்ததால், ஒரு சாயங்கால வேளையில் குதிரையில் ஆரோகணிக்க வைத்துக் கூட்டிக் கொண்டு போய் வெகு வினோதமாகக் காட்டினான் அந்த நீர்நிலையை.
முரண்டு பிடிக்கும் குதிரையும், லகானைப் பிடித்தபடி கூடவே வந்த சிப்பாயும், ஊருணிக்குப் பக்கம் அனுமார்சாமி கோவிலும் அங்கே சுக்காக உலர்ந்த வடைகளைக் சணல் கயிற்றில் கட்டி சாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாகக் கொடுத்த கன்னட பாஷை பேசும் குருக்களும் நினைவில் வரத் தவறவில்லை.
எச்சில் படாமல் விண்டு வாயிலிட்டு வடைகளை ருசித்துக் கொண்டு, ஊருணியில் தண்ணீர் தூக்கிப் போன படி இருந்த பெண்களின் கால்களைப் பார்த்துக் கொண்டு இருட்டும் வரை உட்கார்ந்திருந்த அந்த இடத்துக்கு இன்னொரு முறை போய் வந்தால் என்ன என்று ராஜா யோசித்தார்.
தொரெ
குனிந்து வணங்கி ஒரு பணியாள் தாம்பாளாத்தில் வாழை இலை பரத்தி அதன் மேல் எதையோ வைத்து இன்னொரு இலையால் மூடிக் கொண்டு வந்து நீட்டினான்.
மேல் இலையை மெல்லத் தூக்கிப் பார்த்தார் ராஜா. லட்டு உருண்டை நாலும் கார சேவும்.
வக்காளி, சாப்பிட வச்சே ஒழிச்சுடுவானுங்க போல இருக்கே. அதுவும் முழுச் சைவமான பதார்த்தங்கள். எண்ணெய்ப் பலகாரங்கள். நொடிக்கொரு தரம் இப்படித் தின்றால் ஊரில் இருக்கப்பட்ட ரோகம் எல்லாம் எங்கே எங்கே என்று உடம்பில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்புறம் சந்ததியாவது விருத்தியாவது. வைத்தியன் மூத்திரக் கொல்லையில் இடது கையால் பறித்த கண்ட பச்சிலையையும் சாறு பிழிந்து பவ்யமாக வணங்கிக் குடிக்கக் கொடுப்பதை விழுங்குவதை விட மயானம் போவதே மேல்.
அந்தத் தட்டை நீட்டியவன் நீட்டியபடியே குனிந்து நின்றிருந்தான். வேண்டாம் என்று மறுக்கவும் மனம் இல்லாமல் ராஜா ஒரு லட்டை எடுத்து உதிர்த்து அசை போட ஆரம்பித்தார். கூட அந்த அனுமார்சாமி கோவில் வடை இருந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு வண்டியை உடனே சித்தம் பண்ணுங்கள். நல்ல தண்ணி ஊருணிப் பக்கம் போய் வர வேணும்.
ராஜா நேராகப் பார்த்துக் கொண்டு உத்தரவு செய்தார். யாராவது செய்து விடுவார்கள் என்று தெரியும்.
மூன்று லட்டு உருண்டைகளும் கால் வீசை கார சேவும் வாயில் அரைபட்ட பிறகு பின்னால் சத்தம் கேட்டது.
சாவுத் தீட்டு இருக்கும் போது சாமி கோவிலுக்கு யாராவது போவார்களா ? உங்களுக்கு ஏன் புத்தி இப்படித் தறிகெட்டுப் போகிறது ?
ராணிதான். பக்கத்தில் குனிந்து சொல்லவே, காதை உஷ்ணம் தகித்துப் போட்டது.
அது எனக்குத் தெரியாதா என்ன ? கோயிலுக்குள் எல்லாம் போக மாட்டேன். அந்த ஊருணிக் கரையில் கொஞ்சம் லாந்தி விட்டு வந்தால் உடம்புக்கு இதமாக இருக்கும். காலையில் இருந்து உட்கார்ந்து உட்கார்ந்து பிருஷ்டம் தேய்ந்து போயிடுத்து பெண்ணே.
சின்ன மைத்துனனின் பிள்ளைகள் அதற்குள் குதிரை வண்டியைச் சித்தம் பண்ணிக் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருந்தார்கள்.
விரசா வந்துடுங்க. துஷ்டிக்கு வந்தவர்கள் ஒருத்தொருத்தராக் கிளம்புவார்கள் இனிமேல். சொல்லிக் கொண்டு போக முடியாதில்லையா ? கண்ணசைத்து உங்களின் மேலான உத்தரவு இல்லாமல் அவர்களெல்லாம் பிரயாணம் கிளம்புவது உசிதமாக இருக்காதே.
பக்கத்தில் யாராவது சூழ்ந்து நிற்கும்போது ராணி தனக்குரிய மரியாதையைத் தரத் தவறுவதில்லை என்ற ஆசுவாசத்தோடு அதெல்லாம் நான் பாத்துக்கறேன் என்பது போல் கையை ஆட்டியபடி ஓரடி நடந்தார் ராஜா. குடுகுடுவென்று யாரோ முன்னால் ஓடி வந்து அவருடைய பாதரட்சைகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்.
செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டிருக்கும்போது பெரும் கூச்சலாக எதிர்த் திண்ணையி இருந்து எழுந்தது.
'லேஞ்சியும் வேணாம். மசிரும் வேணாம். எளுந்து போலெ '
மொட்டையன் தலையைப் பின்னால் வலிக்க, யாரோ அவனுக்கு முன்னால் பரிதவிப்பும் பதட்டமுமாக நின்று அவன் தலையில் பரிவட்டம் கட்ட முனைந்து கொண்டிருந்தான்.
தம்பி, நான் வரத் தாமதமாயிடுச்சு. நெசந்தான். பாளாப் போன வயித்துக் கடுப்பு. நெலப் படி தாண்டினாலே வேட்டி நனைஞ்சு போய் நாய் மாதிரிக் கிடந்தேன் மூணு நாளா. மருதையன் போய்ச் சேர்ந்த தாக்கல் வந்தபோது கழிச்சல்லே போற நான் என்ன ஏதுன்னு கூடக் கேட்க முடியாம மயக்கம் போட்டுச் சுருண்டு கெடந்தேன். சாமி சத்தியமா, நம்ம குலதெய்வம் சத்தியமா.
மொட்டையன் முன்னால் நின்று மன்றாடிக் கொண்டிருந்தான் முக்கால் கிழவன் ஒருத்தன். அவனுக்கும் வசதியாக ஒரு இடத்தைப் புஸ்தி மீசையான் தான் போய் விழுந்த இடத்தில் பிடித்து வைக்கலாம்.
பெரியண்ணே, மாமன் சொல்றது நிசம்தான். பாவம் ரொம்பத் தளர்ந்து போயில்லே வந்திருக்காரு. பாரு.
ராணி சமாதானம் செய்து வைக்கப் போனாள்.
உனக்குத் தெரியாது தங்கச்சி. இந்தாளு மருதையிலே சீமைச் சாராயம் அடிச்சுட்டு மேல மாசி வீதி முச்சூடும் இடுப்புலே துணி தங்காமே உருண்டுட்டுக் கிடந்தானாம். கேதம் சொல்லப் போனவங்க சொன்னாங்க.
மொட்டையன் இல்லாத மீசையை நீவிக் கொண்டான். உலகத்தின் துக்கமெல்லாம் மொத்தமாகத் தன்மேல் கவிந்தது போலவும் அதைக் கொஞ்சம் நகர்த்திக் கூடத் தோ:ள் கொடுக்க யாரும் முன்னால் வரவில்லை என்ற ஆதங்கத்தோடும் அவன் குரல் ஓங்கி ஒலித்தது.
ஐயோ யாரோ பொரணி பேசற தாயோளி சொல்லியிருக்கான் அப்படி. மருதையாவது மானாமருதையாவது. கொல்லையிலே போய்க் குத்த வைக்கவே உடம்பிலே சக்தி இல்லே. பாரு, வைத்தியனையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்கேன்.
வந்த கிழவனோடு அவசரமாக வந்து ஒட்டிக் கொண்ட வைத்தியன் கெச்சலாக, சுறுசுறுப்பாக இருந்தான். இவனிடம் சிட்டுக் குருவி லேகியம் இருக்கா என்று கேட்கலாமா என்று ராஜா ஒரு வினாடி யோசித்தார்.
வண்டிக்காரன் கும்பிட்டுக் கொண்டே நிற்க, குதிரை அலைபாய ஆரம்பித்திருந்தது. அதை நிறுத்திப் பிடித்திருந்தவர்கள் ராஜா எப்போது வண்டி ஏறுவார் அடுத்த வேலைக்குப் போகலாம் என்று காத்திருந்தார்கள்.
வம்பு வழக்கைத் திரும்பி வந்து வேடிக்கை பார்க்கலாம் என்று உத்தேசித்து ராஜா வண்டியேறினார். இவன்கள் வேறு வேலை இல்லாத காரணத்தால் இதையே வைத்து நடுராத்திரி வரை அடித்துக் கொள்வார்கள்.
அவர் ஊருணிக் கரைக்கு வந்தபோது இடமே அமைதியாக இருந்தது. ராஜா தண்ணீருக்கு வெகு பக்கத்தில் ஆலமரத்தடி மேடையில் உட்கார்ந்தபடி கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாத் திசையிலும் பார்த்தார்.
செம்மண் தண்ணீர். மரம். கோவில். மேலே எவ்விப் பறக்கும் காக்கைகள். தரையில் தத்தும் மைனா, கிளி, குருவிகள். எல்லாம் இருந்தது. தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் எங்கே ?
ஒருத்தர் கூடவா இல்லை ? ஊரோடு காணாமல் போனார்களா ? இல்லை தான் வருவது தெரிந்து, தூர்த்தன் வருகிறான். துன்மார்க்கன் வருகிறான். ஓடிப் போய் ஒளிந்துகொள் என்று கண்ணுக்கு மறைவாகப் போனார்களா ?
அவர் உள்ளக் குறிப்பைப் புரிந்து கொண்டதுபோல் சேவகன் முன்னால் வந்து வணங்கி புத்தி என்றான்.
என்னடா பயலே ?
இன்னிக்குக் கோயில்லே பிரதோசமாம். சனம் எல்லாம் அங்கேதான்.
இந்தக் களவாணிகளுக்கு ராஜாவின் நினைப்பு எல்லாம் அத்துப்படி.
அவர் மெளனமாகப் புன்சிரித்தபோது காலடியில் ஏதோ ஊர்கிற மாதிரி இருந்தது. அவசரமாகக் காலை மேலே ஏற்றிக் கொள்ள, ஒரு செருப்பு தண்ணீருக்குள் விழுந்தது.
அடடா நல்ல தண்ணி ஊருணிக்குள்ளாற விழுந்துடுச்சே.
கவலைப்பட்டவனை எரிச்சலோடு பார்த்தார் அவர்.
எத்தனை வீர சாகசக் கதைகளில் படித்திருக்கிறார். ராஜ விசுவாசியான வீரர்கள் உயர்ந்த மலைகளில் இருந்தும், அருவியின் நீர்ப்பெருக்குக்கு இடையிலும், பாலைப் பிரதேசங்களிலும் உயிரைத் துச்சமாக மதித்து அரசனின் குறிப்பறிந்து பணியாற்றுவது வழக்கமில்லையோ.
இவன்களுக்கு ஒரு செருப்பை ஊருணிக்குள் கைவிட்டு அளைந்து எடுக்கக் கூடத் துப்பில்லை. போதாக்குறைக்கு எஜமானனையே குற்றம் சாட்டுகிற மாதிரிப் பேச்சு வேறு.
தேர்ந்தெடுத்து நாலு வசவுகளைச் சொன்னார். அதெல்லாம் கலந்து எழுந்து காற்று கெட்ட வாடை அடிக்க ஆரம்பித்தபோது திரும்ப வண்டியேறினார். இன்னொரு கால் செருப்பைச் சுமந்து கொண்டு லொங்கு லொங்கென்று வண்டியோடு கூட ஓடி வந்தவனை அவர் லட்சியம் செய்யவே இல்லை.
சாவு வீட்டில் விளக்கு வைத்து, கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். நடுவே இருக்கிறவர்களை எங்கோ பார்த்த நினைவு ராஜாவுக்கு.
கொலைச் சிந்து பாட வந்தவர்கள். புஸ்தி மீசைக் கிழவனைக் கூடத்தில் கிடத்திக் குளிப்பாட்ட நீர்மாலை எடுத்து வந்தபோது வாசலில் நின்று மரியாதையாகக் கும்பிட்டவர்கள்.
யாரோ எடுத்து வந்து ஓசையில்லாமல் பின்னால் நகர்த்திய மெத்தை வைத்த ஆசனத்தில் ராஜா ஆரோகணித்தார். நாலைந்து தீப்பந்தங்கள் இலுப்பை எண்ணெய் வாடையோடு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்க, கொலைச் சிந்துப் பாடகர்கள் பாட ஆரம்பித்தார்கள்.
பக்கத்தில் யாராவது சூழ்ந்து நிற்கும்போது ராணி தனக்குரிய மரியாதையைத் தரத் தவறுவதில்லை என்ற ஆசுவாசத்தோடு அதெல்லாம் நான் பாத்துக்கறேன் என்பது போல் கையை ஆட்டியபடி ஓரடி நடந்தார் ராஜா. குடுகுடுவென்று யாரோ முன்னால் ஓடி வந்து அவருடைய பாதரட்சைகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்.
செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டிருக்கும்போது பெரும் கூச்சலாக எதிர்த் திண்ணையி இருந்து எழுந்தது.
'லேஞ்சியும் வேணாம். மசிரும் வேணாம். எளுந்து போலெ '
மொட்டையன் தலையைப் பின்னால் வலிக்க, யாரோ அவனுக்கு முன்னால் பரிதவிப்பும் பதட்டமுமாக நின்று அவன் தலையில் பரிவட்டம் கட்ட முனைந்து கொண்டிருந்தான்.
தம்பி, நான் வரத் தாமதமாயிடுச்சு. நெசந்தான். பாளாப் போன வயித்துக் கடுப்பு. நெலப் படி தாண்டினாலே வேட்டி நனைஞ்சு போய் நாய் மாதிரிக் கிடந்தேன் மூணு நாளா. மருதையன் போய்ச் சேர்ந்த தாக்கல் வந்தபோது கழிச்சல்லே போற நான் என்ன ஏதுன்னு கூடக் கேட்க முடியாம மயக்கம் போட்டுச் சுருண்டு கெடந்தேன். சாமி சத்தியமா, நம்ம குலதெய்வம் சத்தியமா.
மொட்டையன் முன்னால் நின்று மன்றாடிக் கொண்டிருந்தான் முக்கால் கிழவன் ஒருத்தன். அவனுக்கும் வசதியாக ஒரு இடத்தைப் புஸ்தி மீசையான் தான் போய் விழுந்த இடத்தில் பிடித்து வைக்கலாம்.
பெரியண்ணே, மாமன் சொல்றது நிசம்தான். பாவம் ரொம்பத் தளர்ந்து போயில்லே வந்திருக்காரு. பாரு.
ராணி சமாதானம் செய்து வைக்கப் போனாள்.
உனக்குத் தெரியாது தங்கச்சி. இந்தாளு மருதையிலே சீமைச் சாராயம் அடிச்சுட்டு மேல மாசி வீதி முச்சூடும் இடுப்புலே துணி தங்காமே உருண்டுட்டுக் கிடந்தானாம். கேதம் சொல்லப் போனவங்க சொன்னாங்க.
மொட்டையன் இல்லாத மீசையை நீவிக் கொண்டான். உலகத்தின் துக்கமெல்லாம் மொத்தமாகத் தன்மேல் கவிந்தது போலவும் அதைக் கொஞ்சம் நகர்த்திக் கூடத் தோ:ள் கொடுக்க யாரும் முன்னால் வரவில்லை என்ற ஆதங்கத்தோடும் அவன் குரல் ஓங்கி ஒலித்தது.
ஐயோ யாரோ பொரணி பேசற தாயோளி சொல்லியிருக்கான் அப்படி. மருதையாவது மானாமருதையாவது. கொல்லையிலே போய்க் குத்த வைக்கவே உடம்பிலே சக்தி இல்லே. பாரு, வைத்தியனையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்கேன்.
வந்த கிழவனோடு அவசரமாக வந்து ஒட்டிக் கொண்ட வைத்தியன் கெச்சலாக, சுறுசுறுப்பாக இருந்தான். இவனிடம் சிட்டுக் குருவி லேகியம் இருக்கா என்று கேட்கலாமா என்று ராஜா ஒரு வினாடி யோசித்தார்.
வண்டிக்காரன் கும்பிட்டுக் கொண்டே நிற்க, குதிரை அலைபாய ஆரம்பித்திருந்தது. அதை நிறுத்திப் பிடித்திருந்தவர்கள் ராஜா எப்போது வண்டி ஏறுவார் அடுத்த வேலைக்குப் போகலாம் என்று காத்திருந்தார்கள்.
வம்பு வழக்கைத் திரும்பி வந்து வேடிக்கை பார்க்கலாம் என்று உத்தேசித்து ராஜா வண்டியேறினார். இவன்கள் வேறு வேலை இல்லாத காரணத்தால் இதையே வைத்து நடுராத்திரி வரை அடித்துக் கொள்வார்கள்.
அவர் ஊருணிக் கரைக்கு வந்தபோது இடமே அமைதியாக இருந்தது. ராஜா தண்ணீருக்கு வெகு பக்கத்தில் ஆலமரத்தடி மேடையில் உட்கார்ந்தபடி கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாத் திசையிலும் பார்த்தார்.
செம்மண் தண்ணீர். மரம். கோவில். மேலே எவ்விப் பறக்கும் காக்கைகள். தரையில் தத்தும் மைனா, கிளி, குருவிகள். எல்லாம் இருந்தது. தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் எங்கே ?
ஒருத்தர் கூடவா இல்லை ? ஊரோடு காணாமல் போனார்களா ? இல்லை தான் வருவது தெரிந்து, தூர்த்தன் வருகிறான். துன்மார்க்கன் வருகிறான். ஓடிப் போய் ஒளிந்துகொள் என்று கண்ணுக்கு மறைவாகப் போனார்களா ?
அவர் உள்ளக் குறிப்பைப் புரிந்து கொண்டதுபோல் சேவகன் முன்னால் வந்து வணங்கி புத்தி என்றான்.
என்னடா பயலே ?
இன்னிக்குக் கோயில்லே பிரதோசமாம். சனம் எல்லாம் அங்கேதான்.
இந்தக் களவாணிகளுக்கு ராஜாவின் நினைப்பு எல்லாம் அத்துப்படி.
அவர் மெளனமாகப் புன்சிரித்தபோது காலடியில் ஏதோ ஊர்கிற மாதிரி இருந்தது. அவசரமாகக் காலை மேலே ஏற்றிக் கொள்ள, ஒரு செருப்பு தண்ணீருக்குள் விழுந்தது.
அடடா நல்ல தண்ணி ஊருணிக்குள்ளாற விழுந்துடுச்சே.
கவலைப்பட்டவனை எரிச்சலோடு பார்த்தார் அவர்.
எத்தனை வீர சாகசக் கதைகளில் படித்திருக்கிறார். ராஜ விசுவாசியான வீரர்கள் உயர்ந்த மலைகளில் இருந்தும், அருவியின் நீர்ப்பெருக்குக்கு இடையிலும், பாலைப் பிரதேசங்களிலும் உயிரைத் துச்சமாக மதித்து அரசனின் குறிப்பறிந்து பணியாற்றுவது வழக்கமில்லையோ.
இவன்களுக்கு ஒரு செருப்பை ஊருணிக்குள் கைவிட்டு அளைந்து எடுக்கக் கூடத் துப்பில்லை. போதாக்குறைக்கு எஜமானனையே குற்றம் சாட்டுகிற மாதிரிப் பேச்சு வேறு.
தேர்ந்தெடுத்து நாலு வசவுகளைச் சொன்னார். அதெல்லாம் கலந்து எழுந்து காற்று கெட்ட வாடை அடிக்க ஆரம்பித்தபோது திரும்ப வண்டியேறினார். இன்னொரு கால் செருப்பைச் சுமந்து கொண்டு லொங்கு லொங்கென்று வண்டியோடு கூட ஓடி வந்தவனை அவர் லட்சியம் செய்யவே இல்லை.
சாவு வீட்டில் விளக்கு வைத்து, கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். நடுவே இருக்கிறவர்களை எங்கோ பார்த்த நினைவு ராஜாவுக்கு.
கொலைச் சிந்து பாட வந்தவர்கள். புஸ்தி மீசைக் கிழவனைக் கூடத்தில் கிடத்திக் குளிப்பாட்ட நீர்மாலை எடுத்து வந்தபோது வாசலில் நின்று மரியாதையாகக் கும்பிட்டவர்கள்.
யாரோ எடுத்து வந்து ஓசையில்லாமல் பின்னால் நகர்த்திய மெத்தை வைத்த ஆசனத்தில் ராஜா ஆரோகணித்தார். நாலைந்து தீப்பந்தங்கள் இலுப்பை எண்ணெய் வாடையோடு பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்க, கொலைச் சிந்துப் பாடகர்கள் பாட ஆரம்பித்தார்கள்.
வந்தனம் ஐயாமாரே
வாருமம்மா தேவியரே
சாமித்துரை புண்ணியவான்
சீமைத்துரை ஆவதற்கு
பல்லக்கு பரிவட்டம்
பாங்கான தப்புக் கொட்டு
நல்ல தண்ணி நீர்மாலை
நாக்குலேதான் வாக்கரிசி
எல்லாமும் கவுரதையாய்
எசமான்கள் செய்துதந்து
வழியனுப்பி வச்சாரே
வமிசம் செழிக்க வாழ்த்துவீரே.
ஐயாமார் எல்லாம் அவனுக்கு முன்னால் கால் மடித்து உட்கார்ந்திருந்தார்கள். தேவியர் எல்லோரும் முற்றத்தின் விளிம்புகளில் பாதி மறைந்தும் மறையாமலும் வெகு அழகோடு அமர்ந்திருந்தார்கள். தீப்பந்த வெளிச்சத்தில் அவர்கள் எல்லோருமே அப்சரஸ்களாக ராஜாவுக்குத் தெரிந்தபோது புஸ்தி மீசைக்காரனின் ஆசைநாயகியான காது வளர்த்த கிழவி நான் கூடவா என்று சிரித்து வாயில் புகையிலைக் கட்டையை அடக்கிக் கொண்டாள்.
யாரோ முன்னால் குந்தியிருந்த பாட்டுக்காரன் காதில் ஓதிவிட்டு வர அவன் சங்கடமாகப் பார்த்தான். இன்னும் நாலு பேர் எழுந்தார்கள். எல்லோரும் சின்ன வயசு. அவர்களும் பாட்டுக்காரனிடம் ஏதோ கேட்டார்கள்.
அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு புராணக்கதை சொல்ல ஆரம்பித்தான்.
முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா.
கச்சு அகற்றிப் பழம்போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்.
கொட்டி முழக்கினார்கள். ராஜாவுக்குக் கொஞ்சம் பசியெடுத்தது.
நிறுத்துலே.
சாயந்திரம் பரிவட்டம் கட்ட மன்றாடியவன் எழுந்து சத்தம் போட்டான்.
இதெல்லாம் இப்போ வேணாம். மொதல்லே கொலைச் சிந்து. அப்புறம் மத்ததெல்லாம். சம்பிரதாயத்தை மீறக்கூடாதுன்னேன். என்ன நான் சொல்றது ?
அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராஜாவின் மைத்துனன் மொட்டையன் ஆமா ஆமா என்று பலமாகத் தலையாட்டினான். எழவெடுத்தவன்கள் சமாதானமாகப் போய்விட்டார்கள். ராஜாவுக்கு எரிச்சல் வந்தது.
வாருமம்மா தேவியரே
சாமித்துரை புண்ணியவான்
சீமைத்துரை ஆவதற்கு
பல்லக்கு பரிவட்டம்
பாங்கான தப்புக் கொட்டு
நல்ல தண்ணி நீர்மாலை
நாக்குலேதான் வாக்கரிசி
எல்லாமும் கவுரதையாய்
எசமான்கள் செய்துதந்து
வழியனுப்பி வச்சாரே
வமிசம் செழிக்க வாழ்த்துவீரே.
ஐயாமார் எல்லாம் அவனுக்கு முன்னால் கால் மடித்து உட்கார்ந்திருந்தார்கள். தேவியர் எல்லோரும் முற்றத்தின் விளிம்புகளில் பாதி மறைந்தும் மறையாமலும் வெகு அழகோடு அமர்ந்திருந்தார்கள். தீப்பந்த வெளிச்சத்தில் அவர்கள் எல்லோருமே அப்சரஸ்களாக ராஜாவுக்குத் தெரிந்தபோது புஸ்தி மீசைக்காரனின் ஆசைநாயகியான காது வளர்த்த கிழவி நான் கூடவா என்று சிரித்து வாயில் புகையிலைக் கட்டையை அடக்கிக் கொண்டாள்.
யாரோ முன்னால் குந்தியிருந்த பாட்டுக்காரன் காதில் ஓதிவிட்டு வர அவன் சங்கடமாகப் பார்த்தான். இன்னும் நாலு பேர் எழுந்தார்கள். எல்லோரும் சின்ன வயசு. அவர்களும் பாட்டுக்காரனிடம் ஏதோ கேட்டார்கள்.
அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு புராணக்கதை சொல்ல ஆரம்பித்தான்.
முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா.
கச்சு அகற்றிப் பழம்போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்.
கொட்டி முழக்கினார்கள். ராஜாவுக்குக் கொஞ்சம் பசியெடுத்தது.
நிறுத்துலே.
சாயந்திரம் பரிவட்டம் கட்ட மன்றாடியவன் எழுந்து சத்தம் போட்டான்.
இதெல்லாம் இப்போ வேணாம். மொதல்லே கொலைச் சிந்து. அப்புறம் மத்ததெல்லாம். சம்பிரதாயத்தை மீறக்கூடாதுன்னேன். என்ன நான் சொல்றது ?
அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராஜாவின் மைத்துனன் மொட்டையன் ஆமா ஆமா என்று பலமாகத் தலையாட்டினான். எழவெடுத்தவன்கள் சமாதானமாகப் போய்விட்டார்கள். ராஜாவுக்கு எரிச்சல் வந்தது.
ஆமாமா, கொலைச் சிந்துதான் பாடணும் அப்பூ.
துரைத்தனத்தார் போல் சட்டமாகச் சொன்னாள் காது வளர்த்த கிழவி. ராஜாவுக்குள் பிரம்மாண்டமாக ஒரு பசி எழுந்து கொண்டிருந்தது.
தொரே ஒத்தச் செருப்பை என்ன பண்ணனும்னு உத்தரவாகணும்.
சேவகன் காதருகே குனிந்து வேண்டிக் கொண்டான்.
சுட்டு எடுத்துட்டு வாடா. பிச்சுத் தின்னுக்கறேன்.
ராஜா சொன்னது பக்கத்தில் கேட்டிருக்கும்.
சரி பெரிசுங்க சொல்றபடிக்குக் கொலைச் சிந்து மொதல்லே. பொட்டைப் புள்ளைங்க எல்லாம் சாப்பிட்டுப் படுத்தப்புறம் நடுராத்திரிக்கு ரிசிபத்தினி கதை.
மைத்துனனில் பிள்ளைகளில் ஒருத்தன் சத்தமாகச் சொல்ல இளவட்டங்கள் ஏக ஆரவாரமாகச் சிரித்தார்கள்.
பாட்டுக்காரர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் குரலில் சலிப்பு குடியேறி இருந்ததாக ராஜாவுக்குத் தோன்றியபோது, சமூகம் ஆகாரம் பண்ண வர உத்தரவாகணும் என்றார்கள் யாரோ இருட்டில் பின்னால் குனிந்து.
காயடிக்கப் பட்டவனாக இருந்தாலும் அவன் வம்சம் நாலு தலைமுறை வாழட்டும் என்று மனதில் நினைத்தபடி ராஜா எழுந்தார்.
தாது வருசப் பஞ்சம் வரப்போவுதுன்னு வரப்போவுதுன்னு சோசியன் சொல்றான். அது வரும்போது நாம இருப்போமோ இல்லாம மண்ணோட மண்ணா மக்கிப் போவோமோ தெரியலைங்க தொரகளே, தொரசானிகளே. வர்ற கதையைச் சொல்ல நமக்கு வார்த்தை போதாதுங்க. போன கதையைச் சொல்றோம். செவி கொடுக்க வேணும்.
ஒற்றை தப்பட்டை அடக்கி ஒலிக்க குரல் வேண்டுகோளாக எழுந்து வரப் போகும் சுவாரசியத்தைக் கோடி காட்டி, உக்காருங்க என்று கையைப் பிடித்து இழுத்து உட்கார்த்தியது எல்லோரையும்.
நூறு வருசம் முந்தி தரணியெல்லாம் காஞ்சு போன ஜனங்கள் பசியோடு பரிதவிச்சுச் செத்த கொடும் பஞ்சம் ஒண்ணு வந்தது.
கொலைச் சிந்துக்காரர்கள் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அது எப்போ ஏற்பட்டிருக்கும் ? ராஜா யோசனை பண்ணிப் பார்த்தார். நினைப்பு எல்லாம் இட்டலி, தோசை, கறிச்சோறு என்றுதான் போனது.
ராஜா உள்கட்டில் உட்கார்ந்தபோது இலை நிறையச் சோறைப் பரிமாறி வாழைக்காயைக் கறியாக்கி வைத்து, புளிக்குழம்பையும் மேலே புத்துருக்கு நெய்யையும் போதும் போதும் என்று கைகாட்ட நிறுத்தாமல் ஊற்றினான் சமையல் காரன். அரண்மனை சமையல்காரனை விடச் சுத்தமாக இருந்தான். அய்யனாக இருப்பானோ ? மாரில் நூலைக் காணலை. அவன் யாராவது வேணுமானாலும் இருந்து போகட்டும். மணமும் ருசியுமாகச் சமைத்திருக்கிறான். அது போதும்.
பிரும்ம குலக் கன்னியகையும் கூடப் பிறந்தவனும் பஞ்சம் பிழைக்க ஊர் விட்டுப் போய் பாழுங்கிணத்துலே விழுந்து உயிரை விட்ட சரித்திரம் இது. கல் மனசையும் கரைக்கும் கதையிதனைக் கேட்பீரே எஜமான்களே.
திரும்ப தப்பட்டைகள் உச்சத்தில் முழங்கின. ராஜாவுக்குத் திருப்தியாக இருந்தது. பழுக்காத் தட்டில் ஒப்பாரிப் பாட்டு கேட்கக் கொடுத்து வைக்காத குறைச்சலை கொலைச் சிந்துப் பாடகர்கள் நீக்கி விட்டிருந்தார்கள்.
மழையில்லை தண்ணியில்லே
மரமில்லை செடியில்லே
வானம் பார்த்து வானம் பார்த்து
வாயழுத வயல்காடு
கட்டாந் தரையாச்சு
கரையெல்லாம் கத்தாழை.
அவன் பாட்டுக் குரலை மீறிக் கொண்டு திடாரென்று இன்னொரு குரல் எழுந்தது.
ஆமடா. மழையில்லை. தண்ணியில்லை. கட்டாந்தரையாக் காடு. பஞ்சம் பிழைக்க நான் தான் ஊரை விட்டுக் கிளம்பினேன். பாழும் கிணத்துலே தவறி விழுந்தேன். உசிரை விட்டேன். இப்போ வந்திருக்கேண்டா. பக்கத்துலே தான் இருக்கேன். சாமாவுக்குப் பொண்டாட்டிடா நான். சாமிநாத சிரவுதிகள் தெரியுமா ? ஆத்துக் காரன் பெயரைச் சொல்லக் கூடாதாமே. சொன்னா என்ன ? அவனும் அல்பாயுசிலே போவானோ ? போகட்டுமே. நான் போகலியா என்ன ? ஆனாக்க, கேட்டுக்கோடி எடுபட்டவளே. நீ பாக்கச் சொன்னே. என் கொழுந்தன் பாத்தான். அம்புட்டுத்தான். வீட்டோட கொளுத்திப் போடணும்னு மட்டும் நினைக்காதே. அழிஞ்சிடுவே. வம்சத்தோட.
ராணி குரல் அது.
ராஜா சாப்பிட்டது தொண்டையில் அடைக்க அங்கேயே நின்றது.
துரைத்தனத்தார் போல் சட்டமாகச் சொன்னாள் காது வளர்த்த கிழவி. ராஜாவுக்குள் பிரம்மாண்டமாக ஒரு பசி எழுந்து கொண்டிருந்தது.
தொரே ஒத்தச் செருப்பை என்ன பண்ணனும்னு உத்தரவாகணும்.
சேவகன் காதருகே குனிந்து வேண்டிக் கொண்டான்.
சுட்டு எடுத்துட்டு வாடா. பிச்சுத் தின்னுக்கறேன்.
ராஜா சொன்னது பக்கத்தில் கேட்டிருக்கும்.
சரி பெரிசுங்க சொல்றபடிக்குக் கொலைச் சிந்து மொதல்லே. பொட்டைப் புள்ளைங்க எல்லாம் சாப்பிட்டுப் படுத்தப்புறம் நடுராத்திரிக்கு ரிசிபத்தினி கதை.
மைத்துனனில் பிள்ளைகளில் ஒருத்தன் சத்தமாகச் சொல்ல இளவட்டங்கள் ஏக ஆரவாரமாகச் சிரித்தார்கள்.
பாட்டுக்காரர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் குரலில் சலிப்பு குடியேறி இருந்ததாக ராஜாவுக்குத் தோன்றியபோது, சமூகம் ஆகாரம் பண்ண வர உத்தரவாகணும் என்றார்கள் யாரோ இருட்டில் பின்னால் குனிந்து.
காயடிக்கப் பட்டவனாக இருந்தாலும் அவன் வம்சம் நாலு தலைமுறை வாழட்டும் என்று மனதில் நினைத்தபடி ராஜா எழுந்தார்.
தாது வருசப் பஞ்சம் வரப்போவுதுன்னு வரப்போவுதுன்னு சோசியன் சொல்றான். அது வரும்போது நாம இருப்போமோ இல்லாம மண்ணோட மண்ணா மக்கிப் போவோமோ தெரியலைங்க தொரகளே, தொரசானிகளே. வர்ற கதையைச் சொல்ல நமக்கு வார்த்தை போதாதுங்க. போன கதையைச் சொல்றோம். செவி கொடுக்க வேணும்.
ஒற்றை தப்பட்டை அடக்கி ஒலிக்க குரல் வேண்டுகோளாக எழுந்து வரப் போகும் சுவாரசியத்தைக் கோடி காட்டி, உக்காருங்க என்று கையைப் பிடித்து இழுத்து உட்கார்த்தியது எல்லோரையும்.
நூறு வருசம் முந்தி தரணியெல்லாம் காஞ்சு போன ஜனங்கள் பசியோடு பரிதவிச்சுச் செத்த கொடும் பஞ்சம் ஒண்ணு வந்தது.
கொலைச் சிந்துக்காரர்கள் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அது எப்போ ஏற்பட்டிருக்கும் ? ராஜா யோசனை பண்ணிப் பார்த்தார். நினைப்பு எல்லாம் இட்டலி, தோசை, கறிச்சோறு என்றுதான் போனது.
ராஜா உள்கட்டில் உட்கார்ந்தபோது இலை நிறையச் சோறைப் பரிமாறி வாழைக்காயைக் கறியாக்கி வைத்து, புளிக்குழம்பையும் மேலே புத்துருக்கு நெய்யையும் போதும் போதும் என்று கைகாட்ட நிறுத்தாமல் ஊற்றினான் சமையல் காரன். அரண்மனை சமையல்காரனை விடச் சுத்தமாக இருந்தான். அய்யனாக இருப்பானோ ? மாரில் நூலைக் காணலை. அவன் யாராவது வேணுமானாலும் இருந்து போகட்டும். மணமும் ருசியுமாகச் சமைத்திருக்கிறான். அது போதும்.
பிரும்ம குலக் கன்னியகையும் கூடப் பிறந்தவனும் பஞ்சம் பிழைக்க ஊர் விட்டுப் போய் பாழுங்கிணத்துலே விழுந்து உயிரை விட்ட சரித்திரம் இது. கல் மனசையும் கரைக்கும் கதையிதனைக் கேட்பீரே எஜமான்களே.
திரும்ப தப்பட்டைகள் உச்சத்தில் முழங்கின. ராஜாவுக்குத் திருப்தியாக இருந்தது. பழுக்காத் தட்டில் ஒப்பாரிப் பாட்டு கேட்கக் கொடுத்து வைக்காத குறைச்சலை கொலைச் சிந்துப் பாடகர்கள் நீக்கி விட்டிருந்தார்கள்.
மழையில்லை தண்ணியில்லே
மரமில்லை செடியில்லே
வானம் பார்த்து வானம் பார்த்து
வாயழுத வயல்காடு
கட்டாந் தரையாச்சு
கரையெல்லாம் கத்தாழை.
அவன் பாட்டுக் குரலை மீறிக் கொண்டு திடாரென்று இன்னொரு குரல் எழுந்தது.
ஆமடா. மழையில்லை. தண்ணியில்லை. கட்டாந்தரையாக் காடு. பஞ்சம் பிழைக்க நான் தான் ஊரை விட்டுக் கிளம்பினேன். பாழும் கிணத்துலே தவறி விழுந்தேன். உசிரை விட்டேன். இப்போ வந்திருக்கேண்டா. பக்கத்துலே தான் இருக்கேன். சாமாவுக்குப் பொண்டாட்டிடா நான். சாமிநாத சிரவுதிகள் தெரியுமா ? ஆத்துக் காரன் பெயரைச் சொல்லக் கூடாதாமே. சொன்னா என்ன ? அவனும் அல்பாயுசிலே போவானோ ? போகட்டுமே. நான் போகலியா என்ன ? ஆனாக்க, கேட்டுக்கோடி எடுபட்டவளே. நீ பாக்கச் சொன்னே. என் கொழுந்தன் பாத்தான். அம்புட்டுத்தான். வீட்டோட கொளுத்திப் போடணும்னு மட்டும் நினைக்காதே. அழிஞ்சிடுவே. வம்சத்தோட.
ராணி குரல் அது.
ராஜா சாப்பிட்டது தொண்டையில் அடைக்க அங்கேயே நின்றது.
அரசூர் வம்சம் - அத்தியாயம் இருபது
ஏகக் கோலாகலமாகக் கிளம்பினார்கள் சங்கரனுக்குப் பெண் பார்க்க.
மொத்தம் இரண்டு கோஷ்டி. கல்யாணி அம்மாளின் ஒன்று விட்ட சகோதரன் கச்சேரி ராமநாதய்யர், ஜோசியர் நாணாவய்யங்கார், சுப்பிரமணிய அய்யரின் அம்மான்சேயான அறுபது வயது கரம்பக்காடு கிருஷ்ணய்யர் (உத்தியோகம் சுகஜீவனம்), அய்யரின் அத்தான் பிரம்மஸ்ரீ சுந்தர கனபாடிகள், இவர்கள் எல்லோருடைய அகத்துக்காரிகள், அப்புறம் நித்திய சுமங்கலி சுப்பம்மாள் என்று ஒரு குழு. இது ஊர் எல்லாம் சுற்றிக் கொண்டு அம்பலப்புழை போய்ச்சேர ஏற்பாடு.
சுப்பிரமணிய அய்யர், சங்கரன், கல்யாணி அம்மாள் என்று இன்னொரு கோஷ்டி. இது விசேஷத்துக்கு இரண்டு நாள் முன்னால் கிளம்பிப் போய்ச் சேருவதாகத் திட்டம். கடையை ஒரு வாரத்துக்கு மேல் வியாபாரம் இல்லாமல் முடக்கி வைக்க சங்கரனுக்கு இஷ்டம் இல்லை.
முதல் கோஷ்டி அரசூரில் இருந்து கிளம்பி குறைந்த தூரத்துக்கு மாட்டு வண்டி குடக்கூலிக்குப் பிடித்துக் கொண்டும், காலாற நடந்தும் அங்கங்கே தங்கி இளைப்பாறியும் வழியில் கோவில்களில் தரிசித்துக் கொண்டும் கொல்லம், ஆலப்புழை வழியாக அம்பலப்புழை சேர்வது என்று திட்டம் பண்ணிக் கொண்டு இருபது நாள் முன்னாடியே கிளம்பி விட்டார்கள் இவர்கள்.
தூரம் நின்று போன ஸ்திரீகள் என்பதால் பெண்டுகளைக் கூட்டிப் போக நாள் கணக்கு எதுவும் ரகசியமாக விரல் மடக்கிப் பார்க்க வேண்டியிருக்கவில்லை. சுப்பம்மாள் மூத்த குடிப் பெண்டுகளை அழுது தொழுது வேண்டிக் கொண்டு அவர்களில் எவளொருத்திக்காகவும் இன்னும் இரண்டு மாச காலம் தூரத்துணியை அரையில் கட்டிக் கொள்ளத் தேவையிலை என்று சத்தியப் பிரமாணம் வாங்கி விட்டாள்.
அவள் இப்போதெல்லாம் சுப்பிரமணிய அய்யர் வீட்டுக்கு வருவதே குறைந்து போனது. அந்த ராட்சசி துர்மரணப் பெண்டு மற்ற நித்திய சுமங்கலிகளை எல்லாம் அடித்துத் தள்ளிக் கொண்டு சுப்பம்மாள் மேலேறி அவளை இம்சிக்கிறது தாளாமல் எடுத்த முடிவு இது.
சுப்பம்மாள் வேண்டிக் கொண்டதால் ஜோசியர் நாணாவய்யங்கார் ஏகப்பட்ட கிரந்தங்களைப் பரிசீலித்துச் செப்புத் தட்டில் ஒரு யந்த்ரம் செய்து கொடுத்தார். கழுத்திலோ காதிலோ கட்டித் தொங்கப் போட்டுக் கொள்கிற தோதில் செய்து தருவதாக அவர் சொல்லி இருந்தாலும், மூலைக்கு ஒன்றாகத் தேவதைகளை நிறுத்தியதில் ஏகப்பட்ட இட நெருக்கடி உண்டாகி, அந்தச் சதுரத் தகடு முக்காலே மூணு மாகாணி அடி நீள அகலத்தில் முடிந்தது.
ஒன்று ரெண்டு தேவதைகள் ஆவாஹனம் பெறாவிட்டால் பரவாயில்லை என்று சுப்பம்மாள் சொல்லிப் பார்த்தாள். யந்திரத்தின் அளவு அதிகமாகிப் போகிறது தவிர, ஜோசியருக்குத் தர வேண்டிய காசும் கூடிக் கொண்டு போகிறது என்பதும் அதற்கு ஒரு காரணம்.
ஒவ்வொரு தேவதையும் ஒவ்வொரு பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிற்பதால் செப்புத் தகட்டை அளவு குறைக்க முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் ஜோசியர்.
அந்த யந்திரத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டபோது விலகு - இது என்னோட இடம் - இது எனக்கு என்று தேவதைகள் அடிபிடி சண்டை போட்டது அவள் காதுகளில் கேட்டது. மூத்த குடிப் பெண்டுகள் அவர்களைச் சமாதானம் செய்து வைத்து எல்லோரும் கால் ஊன்றிக் கொள்ள வழி பண்ணினார்கள்.
கழுத்தில் எல்லாத் தேவதைகளும், சுற்றி மூத்த குடி நித்திய சுமங்கலிகளும் இருந்தபோது சாமாவைப் பிடித்தவள் சுப்பம்மாள் பக்கம் வரவில்லை தான். ஆனால், பத்து இருபது பேரைக் கட்டிச் சுமக்கும் போது சுப்பம்மா கிழவிக்குத் தாங்க முடியாத தோள் வலியும், இடுப்பில் நோவும் ஏற்பட்டது. மூத்திரம் சரியாகப் பிரியாமல் வயிறு கர்ப்ப ஸ்திரி போல் ஊதிப் போனது.
பாறாங்கல்லைக் கழுத்தில் கட்டி எடுத்துப் போவது போல் நடக்க சிரமப்பட்டு அங்கங்கே தடுமாறி விழும்போதெல்லாம் மூத்த குடிப் பெண்டுகள் பரிவோடு தூக்கி விட்டார்கள்.
அப்புறம் அவர்கள் ஆலோசனை சொன்னபடிக்கு தச்சு ஆசாரி சுப்பனிடம் சொல்லி ஒரு மர வண்டி செய்வித்து வாங்கிக் கொண்டாள் சுப்பம்மாள். இடுப்பில் கோர்த்த ஒரு கொச்சக் கயிறால் பிணைத்த அந்த வண்டி பின்னால் உருண்டு வர அவள் நடந்தபோது முதல் இரண்டு நாள் தெருவில் விநோதமாகப் பார்த்து அப்புறம் அடங்கிப் போனது.
மரப்பாச்சியைப் பொம்மைச் சகடத்தில் வைத்து இழுத்து வரும் குழந்தை போல் நாணாவய்யங்கார் ஸ்தாபித்த யந்திரத்தைச் சக்கரங்களுக்கு மேலே இருத்தி இழுத்துப் போவதை தேவதைகள் ஆட்சேபித்தார்கள். தெருவில் திரிகிற நாய்கள் பக்கத்தில் வந்து மோந்து பார்க்கும். காலைத் தூக்கும். குழந்தைகள் விஷமம் செய்வார்கள். எங்களுக்கு இது சரிப்படாது.
திரும்பவும் சுப்பம்மாள் சார்பில் மூத்த குடிப் பெண்டுகள் வாதாடி, பிரதிஷ்டையான தேவதைகளைச் சம்மதிக்க வைத்தார்கள். இன்னும் கொஞ்ச நாள். அப்புறம் அந்தப் பீடை தொந்தரவு அடியோடு ஒழிந்து விடும். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் வேண்டியபோது அவர்கள் சார்பில் சுப்பம்மா நடுத்தெருவில் ஒவ்வொரு திசையாகப் பார்த்து புழுதியில் விழுந்து கும்பிட வேண்டிப் போனது.
இந்தப் பக்கம் மூத்த குடிப் பெண்டுகளும் பின்னால் கட்டி இழுத்துக் கொண்டு தேவதைகளுமாக அவள் நடந்தபோது ஒரு நிமிஷம் நின்று குரலெடுத்து அழுதாள். காசியில் எதை எதையோ விட்டதுக்குப் பதில் உசிரை விட்டுவிட்டு வந்திருந்தால் இந்த ஹிம்சை எல்லாம் இருக்காதே என்று ஒரே ஒரு நிமிஷம் தோன்றியதை மாற்ற மூத்த குடிப் பெண்டுகள் அவள் நாக்கில் இருந்து கொண்டு வலசியதி கிண்கிணி என்று அஷ்டபதி பாடி அவளைக் குதித்துக் கூத்தாட வைத்தார்கள்
நடுவில் ஒரே ஒரு நாள் யந்திரம் இல்லாமல் ஒரு பகல் பொழுதில் கல்யாணி அம்மாளைப் பார்க்க அவசரமாக அவள் போனபோது வாடி தேவிடியாளே என்று அந்த லங்கிணி சுப்பம்மாள் மேலே வந்து உட்கார்ந்து விட்டாள்.
நாணாவய்யங்கார் சுப்பிரமணிய அய்யருடன் உட்கார்ந்து சங்கரன் ஜாதகத்தையும், அம்பலப்புழை குப்புசாமி அய்யன் இளைய சகோதரி பகவதிக்குட்டி ஜாதகத்தையும் வைத்து நவாம்சமும் அலசிக் கொண்டிருந்த நேரம் அது.
இந்தச் சோழியன் உன்னை வச்சுண்டு இருக்கானா ?
சுப்பம்மாள் உள்ளே நுழைந்ததுமே வேறு குரலில் அலறிக் கொண்டு நாணாவய்யங்காரின் குடுமியைப் பிடித்து இழுத்து முகத்தில் அறைந்தாள். அவருடைய வற்றிய மாரில் எட்டி உதைத்துதாள். காரி வரவழைத்த சளியை முகத்தில் உமிழ்ந்தாள். பூணூலைக் கால் விரலில் மாட்டி அறுப்பது போல் போக்குக் காட்டினாள்.
அப்புறம் யாரோ சொன்னது போல் ஐயங்காரை உதட்டில் முத்தமிட யத்தனிக்க, ஜோசியர் ஏட்டை எடுத்துக் கொண்டு சமயம் சரியில்லே அய்யர்வாள். உங்காத்துக்குப் ப்ரீதி நடத்தணும். நான் வெகு சீக்கிரம் நடத்தித் தரேன். இந்தக் கிழவி பண்ணிக் கொடுத்த யந்திரத்தோடு சதா இருந்தா இதெல்லாம் நடக்காது என்று சொல்லி வெளியே அவசரமாகக் கிளம்பிப் போனார்.
சுப்பம்மா அவர் கொடுத்த யந்திரத்தை வைத்துக் கொள்ளப் புது இடம் கிடைத்து விட்டதாக அறிவித்து இடுப்புக்குக் கீழே காட்டிச் சிரித்தாள்.
இப்படி யந்திரத்தோடு போனால் ஒரு மாதிரியும் போகாவிட்டால் இன்னொரு மாதிரியும் அவஸ்தை தொடர்ந்ததால் சுப்பம்மாள் புகையிலைக்கடை அய்யர் வீட்டுக்கு வருவது குறைந்தே போனது.
இருந்தாலும் சங்கரனுக்குப் பொண்ணு பார்க்க மலையாளக் கரைக்குப் போக வேணும். க்ஷேத்ராடனமாக மதுரை, பாணதீர்த்தம், சுசீந்திரம் எல்லாம் தரிசித்துக் கொண்டு ஆலப்புழைக்குப் போகலாம் என்று சுந்தர கனபாடிகள் சொன்னதும் வேறு எதுவும் யோசிக்காமல் சரி என்று விட்டாள் அவள்.
ஆனாலும் ஜோசியர் நாணுவய்யங்கார் யோசனைப்படி, மடிசஞ்சியில் அந்த யந்திரத்தைப் பத்திரமாக எடுத்துப் போக மறக்கவில்லை அவள்.
எல்லோரும் சுப்பிரமணிய அய்யரின் வீட்டில் இருந்து புறப்படுவதாகத்தான் ஏற்பாடு. ஆனாலும் மாட்டு வண்டியை எதிர்பார்த்து சுப்பம்மாள் நாலு தெரு சந்திப்பிலேயே நார்ப்பெட்டியும், சஞ்சியுமாக நின்றாள்.
ஐயர் வீட்டுக்குள்ளே போய் அந்தப் பழிகாரி பிடித்துக் கொண்டு விட்டால் கெட்டது குடி என்று பயந்தே அவள் அந்தப் பக்கம் போகவில்லை. ஆனாலும் சுப்பிரமணிய ஐயர் அவள் கைச்செலவுக்கும் சேர்த்து சுந்தர கனபாடிகளிடம் கொடுத்திருந்ததோடு பயணம் வைக்க முந்தின நாள் சாயந்திரம் அவள் வீட்டுக்கும் போய் அதைத் தெரியப் படுத்தி இருந்தார்.
சாமாவைத் தனியா விட்டுட்டுப் போகணுமான்னு இருக்கு எனக்கு. ஆனா உள்ளே வந்தாலே அந்தக் கடன்காரி மேலே வந்து பீ மாதிரி ஒட்டிக்கறாளே. நான் என்ன பண்ணட்டும்.
அவள் கண் கலங்கியபோது சுப்பிரமணிய ஐயர் தேற்றினார்.
அவனைக் கவனிச்சுக்க ஐயணையை ஏற்பாடு பண்ணி இருக்கேன். பாடசாலையிலே வித்யார்த்திகளுக்குப் பண்ற சமையலை அங்கே இருந்து ராமலச்சுமிப் பாட்டி கொண்டு வந்து வச்சுட்டுப் போயிடுவா. மூணு வருஷம் அவன் சாப்பிட்ட சமையல் ஆச்சே. அதைத் திரும்பச் சாப்பிட்டாலாவது அவன் பழையபடி ஆறானான்னு பார்ப்போம்.
ஆக மாட்டான் என்று சுப்பம்மாள் காதில் மூத்த குடிப் பெண்டுகள் சொன்னார்கள்.
ஆக வேண்டும் என்று அவர்களையும், மடிசஞ்சி யந்திரத்தில் ஏறிய தேவதைகளையும் பிரார்த்தித்துக் கொண்டு அவள் பயணம் போக வண்டிக்காக ஒரு நாழிகை சந்தியில் நின்று கொண்டிருந்தாள்.
அது ஆடி அசைந்து வந்தபோது அவள் ஏகத்துக்குச் சேர்ந்திருந்தாள்.
பிரம்மஹத்தி. உசிரை வாங்கிட்டான். பிச்சுண்டு கிளம்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து.
நாணாவய்யங்கார் அரண்மனையைத் திரும்பிப் பார்த்தபடி சொன்னார்.
இந்தப் பக்கம் மூத்த குடிப் பெண்டுகளும் பின்னால் கட்டி இழுத்துக் கொண்டு தேவதைகளுமாக அவள் நடந்தபோது ஒரு நிமிஷம் நின்று குரலெடுத்து அழுதாள். காசியில் எதை எதையோ விட்டதுக்குப் பதில் உசிரை விட்டுவிட்டு வந்திருந்தால் இந்த ஹிம்சை எல்லாம் இருக்காதே என்று ஒரே ஒரு நிமிஷம் தோன்றியதை மாற்ற மூத்த குடிப் பெண்டுகள் அவள் நாக்கில் இருந்து கொண்டு வலசியதி கிண்கிணி என்று அஷ்டபதி பாடி அவளைக் குதித்துக் கூத்தாட வைத்தார்கள்
நடுவில் ஒரே ஒரு நாள் யந்திரம் இல்லாமல் ஒரு பகல் பொழுதில் கல்யாணி அம்மாளைப் பார்க்க அவசரமாக அவள் போனபோது வாடி தேவிடியாளே என்று அந்த லங்கிணி சுப்பம்மாள் மேலே வந்து உட்கார்ந்து விட்டாள்.
நாணாவய்யங்கார் சுப்பிரமணிய அய்யருடன் உட்கார்ந்து சங்கரன் ஜாதகத்தையும், அம்பலப்புழை குப்புசாமி அய்யன் இளைய சகோதரி பகவதிக்குட்டி ஜாதகத்தையும் வைத்து நவாம்சமும் அலசிக் கொண்டிருந்த நேரம் அது.
இந்தச் சோழியன் உன்னை வச்சுண்டு இருக்கானா ?
சுப்பம்மாள் உள்ளே நுழைந்ததுமே வேறு குரலில் அலறிக் கொண்டு நாணாவய்யங்காரின் குடுமியைப் பிடித்து இழுத்து முகத்தில் அறைந்தாள். அவருடைய வற்றிய மாரில் எட்டி உதைத்துதாள். காரி வரவழைத்த சளியை முகத்தில் உமிழ்ந்தாள். பூணூலைக் கால் விரலில் மாட்டி அறுப்பது போல் போக்குக் காட்டினாள்.
அப்புறம் யாரோ சொன்னது போல் ஐயங்காரை உதட்டில் முத்தமிட யத்தனிக்க, ஜோசியர் ஏட்டை எடுத்துக் கொண்டு சமயம் சரியில்லே அய்யர்வாள். உங்காத்துக்குப் ப்ரீதி நடத்தணும். நான் வெகு சீக்கிரம் நடத்தித் தரேன். இந்தக் கிழவி பண்ணிக் கொடுத்த யந்திரத்தோடு சதா இருந்தா இதெல்லாம் நடக்காது என்று சொல்லி வெளியே அவசரமாகக் கிளம்பிப் போனார்.
சுப்பம்மா அவர் கொடுத்த யந்திரத்தை வைத்துக் கொள்ளப் புது இடம் கிடைத்து விட்டதாக அறிவித்து இடுப்புக்குக் கீழே காட்டிச் சிரித்தாள்.
இப்படி யந்திரத்தோடு போனால் ஒரு மாதிரியும் போகாவிட்டால் இன்னொரு மாதிரியும் அவஸ்தை தொடர்ந்ததால் சுப்பம்மாள் புகையிலைக்கடை அய்யர் வீட்டுக்கு வருவது குறைந்தே போனது.
இருந்தாலும் சங்கரனுக்குப் பொண்ணு பார்க்க மலையாளக் கரைக்குப் போக வேணும். க்ஷேத்ராடனமாக மதுரை, பாணதீர்த்தம், சுசீந்திரம் எல்லாம் தரிசித்துக் கொண்டு ஆலப்புழைக்குப் போகலாம் என்று சுந்தர கனபாடிகள் சொன்னதும் வேறு எதுவும் யோசிக்காமல் சரி என்று விட்டாள் அவள்.
ஆனாலும் ஜோசியர் நாணுவய்யங்கார் யோசனைப்படி, மடிசஞ்சியில் அந்த யந்திரத்தைப் பத்திரமாக எடுத்துப் போக மறக்கவில்லை அவள்.
எல்லோரும் சுப்பிரமணிய அய்யரின் வீட்டில் இருந்து புறப்படுவதாகத்தான் ஏற்பாடு. ஆனாலும் மாட்டு வண்டியை எதிர்பார்த்து சுப்பம்மாள் நாலு தெரு சந்திப்பிலேயே நார்ப்பெட்டியும், சஞ்சியுமாக நின்றாள்.
ஐயர் வீட்டுக்குள்ளே போய் அந்தப் பழிகாரி பிடித்துக் கொண்டு விட்டால் கெட்டது குடி என்று பயந்தே அவள் அந்தப் பக்கம் போகவில்லை. ஆனாலும் சுப்பிரமணிய ஐயர் அவள் கைச்செலவுக்கும் சேர்த்து சுந்தர கனபாடிகளிடம் கொடுத்திருந்ததோடு பயணம் வைக்க முந்தின நாள் சாயந்திரம் அவள் வீட்டுக்கும் போய் அதைத் தெரியப் படுத்தி இருந்தார்.
சாமாவைத் தனியா விட்டுட்டுப் போகணுமான்னு இருக்கு எனக்கு. ஆனா உள்ளே வந்தாலே அந்தக் கடன்காரி மேலே வந்து பீ மாதிரி ஒட்டிக்கறாளே. நான் என்ன பண்ணட்டும்.
அவள் கண் கலங்கியபோது சுப்பிரமணிய ஐயர் தேற்றினார்.
அவனைக் கவனிச்சுக்க ஐயணையை ஏற்பாடு பண்ணி இருக்கேன். பாடசாலையிலே வித்யார்த்திகளுக்குப் பண்ற சமையலை அங்கே இருந்து ராமலச்சுமிப் பாட்டி கொண்டு வந்து வச்சுட்டுப் போயிடுவா. மூணு வருஷம் அவன் சாப்பிட்ட சமையல் ஆச்சே. அதைத் திரும்பச் சாப்பிட்டாலாவது அவன் பழையபடி ஆறானான்னு பார்ப்போம்.
ஆக மாட்டான் என்று சுப்பம்மாள் காதில் மூத்த குடிப் பெண்டுகள் சொன்னார்கள்.
ஆக வேண்டும் என்று அவர்களையும், மடிசஞ்சி யந்திரத்தில் ஏறிய தேவதைகளையும் பிரார்த்தித்துக் கொண்டு அவள் பயணம் போக வண்டிக்காக ஒரு நாழிகை சந்தியில் நின்று கொண்டிருந்தாள்.
அது ஆடி அசைந்து வந்தபோது அவள் ஏகத்துக்குச் சேர்ந்திருந்தாள்.
பிரம்மஹத்தி. உசிரை வாங்கிட்டான். பிச்சுண்டு கிளம்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து.
நாணாவய்யங்கார் அரண்மனையைத் திரும்பிப் பார்த்தபடி சொன்னார்.
- Sponsored content
Page 6 of 17 • 1 ... 5, 6, 7 ... 11 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 17
|
|