புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
51 Posts - 43%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
417 Posts - 49%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:26 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் எட்டு


பகல் நேரம் அரிவாள் மனையில் வெட்டுப்படும் காய்கறிகளும், குடத்திலிருந்து இருப்புச் சட்டியில் வார்த்துச் சுட வைக்கப்படும் தேங்காய் எண்ணெயும், பாகாய் உருகிக் கொண்டிருக்கும் வெல்ல உருண்டையும், வடைக்கு அரைபடும் உளுந்துமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

கிட்டாவய்யன் காலையிலிருந்து நாலு தடவை குடத்தில் நீர் சேந்தித் தலையில் கவிழ்த்துக் கொண்டு விட்டான். ஆனாலும் வியர்வை வெள்ளமாகப் பிரவகித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வியர்வை தலையை முழுக்க நனைத்துக் கண்ணை மறைக்கிறது. உதட்டில் எச்சிலில் கரைந்து நாக்கில் கரிக்கிறது. மூத்திரம் சரியாக இறங்காமல் நோவோடு பிரிகிறது. உடம்பு வலுவெல்லாம் வியர்வையாக வெளியே போய்க் கொண்டிருக்கிறதாக பிரமை.

போகட்டும். போனது எல்லாம் பணமாகத் திரும்பி வரப் போகிறது. கைமள் வீட்டு விசேஷம் முடியும்போது கை நிறையக் கிடைக்கும். எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்த பிறகும் கணிசமாகக் கீசையில் முடங்கும்.

அப்புறமும் இருக்கிறது புனலூரும், கொல்லமும், கருநாகப் பள்ளியும், வடக்கேவிளயும்.

பணம் வேண்டி இருக்கிறது.

தட்டானிடம் வளையல் வாங்க. சீனி மிட்டாய் வாங்க.

மரப்பாச்சி ?

வேண்டாம். தொட்டுத் தடவிப் புல்லரிக்க வைத்துச் சுகித்து புத்திர பாக்கியம் வேண்டும். பின்கட்டில் பிரஷ்டை காதில் ஓசைப்படாமல். பிருஷ்டத்தில் எலி

ஏறி இறங்கி ஓடிப் போகாமல்.

பணம் வேண்டி இருக்கிறது.

கடைசித் தங்கை பகவதியைக் கரையேற்ற. நாளைக்கு மூத்த பெண் திரண்டு குளித்தால் அவளுக்கு வழி பண்ண.

திரும்பிப் பார்ப்பதற்குள் சின்னவளும் அப்புறம் கடைக்குட்டியும் கல்யாணத்துக்குத் தயாராக நிற்பார்கள்.

எல்லாம் ஓய்ந்தால் கட்டையைச் சாய்க்கச் சின்னதாக மங்களூர் ஓடு வேய்ந்து ஒரு வீடு. கையகலமாவது நெல் பாட்டம். நாலு பாக்கு மரமும் தென்னையுமாக பரம்பு. வாய்க்க வேண்டும்.

அதற்கு எல்லாம் முன்னால் ஒரு புத்ரன்.

காலையில் குளித்து சந்தியாவந்தனம் செய்து அம்பலத்தில் தொழுது விட்டு வந்து அடுப்புப் பற்ற வைத்தபோது இதுதான் பிரார்த்தனையாக இருந்தது.

இன்னொரு குடம் நீர் சேந்தித் தலையில் கவிழ்த்துக் கொண்டான் கிட்டாவய்யன்.

குடுமியை அவிழ்த்து அலசியபோது பிரிந்து வந்த இழை வெள்ளியாக மினுமினுத்தது.

வயதாகிக் கொண்டிருக்கிறதா ?

முப்பத்தைந்து எல்லாம் வயதானதில் சேர்த்தியா என்ன ?

குளத்துப்புழை பாலகன் கடாட்சம் இருந்தால் கிட்டாவய்யனுக்கும் புத்திரபாக்கியம் அடுத்த வருடமே வாய்க்கும். எள்ளும் தண்ணீரும் இரைத்துக் கரையேற்ற சந்ததி தழைக்கும்.

என்ன அண்ணா நொடிக்கு ஒருதடவை குளி ? அரி வைப்புக்கு நாழியாகலியா ?

சோமநாதன் நெருங்க வந்து காதில் கிசுகிசுத்தான்.

வா போகலாம்.

அரையில் நனைந்து ஒட்டிய வேட்டியோடு கிளம்பினான் கிட்டாவய்யன்.

ஈர வஸ்திரத்தோடு அரிசி வடிக்கக் கூடாது. அதுவும் சுப காரியம் நடக்கப் போகிற வீட்டில். நீங்கள் தானே எப்பவும் சொல்றது.

வியர்ப்புத் தாங்கலை சோமா. அதான் இப்படி. ஒரு தோர்த்து கொண்டு வா.

சோமன் உள்ளே போய்த் தோர்த்தும் பிரி போல் முறுக்கிய முண்டும் கொண்டு வந்து கொடுத்தான்.

தலையைத் துவட்டிக் கொண்டு கிட்டாவய்யன் வீட்டை ஒட்டி வெளியே பரம்பில் தாவளம் அடித்து இறக்கி ஏற்படுத்தி இருந்த உக்கிராணத்துக்குள் நுழைந்தான்.

என்ன சோமா ஆரையும் காணலே ?

காலியாகக் கிடந்த உக்கிராணத்தில் கண் ஓட்டிக் கொண்டே கேட்டான் கிட்டாவய்யன்.

ஓரமாக உட்கார்ந்து பரங்கிக்காய் நறுக்கிக் கொண்டிருந்த வயசன் தவிர்த்து எல்லோரும் எங்கே போனார்கள் ?

வாசலில் பெருங்கூச்சல் கேட்கிறது. தடார் தடார் என்று தரையதிர யாரோ ஓடும் சத்தம். அப்புறம் கட்டைக் குரலில் பாட்டு. கூட்டமாகப் பாடுகிறார்கள்.

கிட்டாவய்யன் வெளியே வந்து பார்த்தபோது அரையில் தார்பாய்ச்சிக் கட்டிய வேஷ்டியும் மேலே முறுக்கி வளைத்து முடிச்சுப் போட்ட உத்தரீயமுமாகப் பத்துப் பதினைந்து பேர் இரும்பு உலக்கைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

சேர்ந்து பாடுகிறார்கள். சேர்ந்து ஓடுகிறார்கள். பாடிக் கொண்டே ஓடுகிறார்கள்.

தீர் சே போல்

ஜோர் சே போல்

சுபே தக் ராத்

விஸ்வ நாத்.

பாட்டுக்கு நடுவே சொல்லி வைத்தது போல் சேர்ந்து நிறுத்தி இரும்பு உலக்கைகளால் அவரவர்கள் மாரிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து கொள்கிறார்கள். மாரெல்லாம் காய்த்துத் தழும்பேறிப் போயிருக்கிறது. உலக்கைகள் கருத்து நீண்டு பயங்கொள்ள வைக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:26 pm

யார் இதெல்லாம் ?

கிட்டாவய்யன் சோமநாதனைப் பார்வையால் விசாரித்தான்.

வடக்கே இருந்து வரும் பைராகிகள். கோஷ்டியாக ராமேசுவரம் தீர்த்த யாத்திரை போய்ப் பரசுராம பூமியையும் தரிசித்துக் கொண்டு திரும்பிப் போக வந்தவர்கள்.

சோமநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பைராகிகளில் ஒருத்தன் கிட்டாவய்யன் பக்கத்தில் வந்து உருட்டி விழித்துச் சிரித்தான். சடை விழுந்த தலைமுடியைச் சுற்றிச் சின்னச் சின்னதாகக் குளவிகள் பறந்தபடி இருந்தன அவனுக்கு.

குள்ளக் கிட்டாவய்யன் பக்கத்தில் அவன் ஆறடிக்கு மேல் வளர்ந்த பிரம்மாண்டமான சொரூபனாக நிற்கிறான். இந்தக் கையில் உலக்கையையும் அந்தக் கையில் கிட்டாவய்யனையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடத் தயாரானவன் போல் அவன் கை பரபரக்கிறது.

அவன் பாடிக் கொண்டே ஓடுவான். உலக்கையால் மாரில் அரைந்து கொள்வான். கிட்டாவய்யனைக் குப்புறப் புரட்டித் தொடையில் மோதிக் கொள்வான். ஒரு மரப்பாச்சி போல் அவனைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடுவான். தரையில் போட்டு ஓங்கி உயிர்த்தலத்தில் மிதித்து பீஜங்களை நசுக்கிக் கூழாக்குவான். கிட்டாவய்யனுக்குப் பிராணன் போகிற போது எள்ளும் தண்ணீரும் இறைக்கப் பிள்ளை பிறக்க வழி இருக்காது இனி ஒருபோதும்.

அரையில் இரண்டு கையையும் இறுகப் பொத்தியபடி கிட்டாவய்யன் நடுங்கிப் போய் நின்றான்.

பைராகி உலக்கையால் தன் வயிற்றில் மாறி மாறி அடித்துக் கொண்டு கரமுர என்று இந்துஸ்தானியில் ஏதோ சொன்னான்.

அவனுக்குப் பசிக்கிறது. அவன் கூட்டம் முழுவதற்கும் போஜனம் செய்ய வேண்டி இருக்கிறது.

சோமநாதன் கிட்டாவய்யன் காதில் மொழி மாற்றிச் சொன்னான்.

துவாரகைக்கும் வடமதுரைக்கும் போய் வந்த நம்பூத்திரிகளுக்குச் சமைத்துப் போட இரண்டு முறை வடநாடு போயிருக்கும் காரணத்தால் அவனுக்கு அந்த ஊர்ப் பாஷை பிடிபட்டிருக்கிறது.

கிட்டாவய்யன் சமையல்காரன் என்று பைராகி எப்படித் தெரிந்து கொண்டான் ? தொழில் பார்க்க வந்த இடத்தில் இவனுக்கும் இவனுடைய கோஷ்டிக்கும் என்ன கொடுக்க முடியும் கிட்டாவய்யனால் ?

ஒவ்வொருத்தனும் இருக்கிற ஆகிருதியைப் பார்த்தால் நாலு ஆள் சாப்பிடுகிறதை ஒருத்தனே லகுவில் சாப்பிட்டுப் போதாதற்கு அந்த உலக்கையையும் விழுங்கி சுக்குக் கஷாயம் ஒரு சொம்பு முழுக்க எடுத்துக் குடித்துத் தீர்த்து ஏம்பக்கம் விடுவான் போல் தெரிகிறது.

உலக்கையைக் காலுக்கு நடுவே லிங்கம் போல் ஊன்றிக் கொண்டு பைராகி இரண்டு கையையும் விரித்துத் திரும்பவும் ஏதோ சொன்னான். கூட வந்தவர்கள் சுற்றிச் சுற்றி வந்து முதுகிலும் மாரிலும் உலக்கைகளால் அறைந்து கொண்டு விஸ்வநாத் விஸ்வநாத் என்று திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தார்கள். எல்லோர் தலையிலிருந்தும் புறப்பட்ட குளவிகள் ஒன்றை ஒன்று மோதித் தரையில் விழுந்து இறக்கை உரித்து ஊர்ந்தன. காற்று அஸ்தமித்துப் போயிருந்த அந்தப் பகல் பொழுதில் அந்த இறக்கைகள் தீனமாக ஒலி செய்தது கிட்டாவய்யனுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது.

இவர்கள் சாதம் சாப்பிடுவார்களா ? வட்டித்து எடுக்கிற வரை பொறுப்பார்களா ? என்றால் கைமளிடம் சொல்லி முதலில் இவர்களுக்காகத் தனியே இலை போடச் சொல்லலாம்.

பரத கண்டத்தில் இருக்கப் பட்ட சகல புண்ணிய ஸ்தலமும் ஓடி நடந்து தரிசனம் செய்து, நகர்கிற நதியில், சங்கமிக்கும் சமுத்திரத்தில் எல்லாம் தேக, மனசு, ஆத்மாவில் ஒட்டிப் பிடித்த அழுக்கை எல்லாம் கரைத்து நீக்கிப் பரிசுத்தப்பட்டுக் கொண்டு அடுத்த ஜன்மமும் நரக வாதனையும் கூடாதே போகும் வண்ணம் கர்ம பலனான வாதனை எல்லாவற்றையும் சுயமாகவே சதா வழங்கி அனுபவித்துக் கொண்டு, சிக்குப் பிடித்த சடைமுடியும் அதில் ஊர்ந்து நெளியும் குளவியும் பாம்பும் கூட வரச் சொர்க்கம் புகத் தயாரான இந்தப் பைராகிகளின் ஆசீர்வாதத்தோடு கிருஷ்ணனுண்ணி நாயர் புடவை எடுத்துக் கைமளின் மகளுக்குப் புடமுறியாகக் கொடுத்துக் கல்யாணம் கழிப்பது எல்லோருக்கும் உவப்பான காரியமாகவே இருக்கும்.

சாதம் வட்டித்துப் பிடிதுணியால் பற்றிக் கீழே ஆவி பறக்க இறக்கும் வரை இவர்கள் இந்த முற்றத்தில் காத்திருப்பார்களோ ?

அண்ணா இவர்கள் அயல் மனுஷர்கள் சமைத்த பதார்த்தம் எதுவும் சாப்பிடுவதில்லை. அரிசியோ கோதுமை மாவோ கொடுத்தால் கட்டி எடுத்துப் போய் ஊர் எல்லையில் அவர்களே பாகம் செய்து பசி நிவர்த்தி செய்து கொள்வார்கள்.

சோமநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிட்டாவய்யன் அவசரமாக வீட்டுப் பின்வசத்துத் தாவளத்துக்குள் நுழைந்தான்.

அந்த வயசன் இன்னும் கருமமே கண்ணாக உள்ளே வாழைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தான். குத்திருமலால் அவன் திரேகம் குலுங்கிக் கொண்டிருந்தது.

ஒரு வாய் சூடுவெள்ளம் குடித்து மாமரச் சுவட்டில் குந்தி இருந்து ஸ்ரம பரிகாரம் செய்துவிட்டு வாருமே ஓய்.

கிட்டாவய்யன் சொல்லியபடியே வயசன் பக்கமாக நடந்தான். உள்ளூரில் சேர்த்துக் கொள்ளப்பட்ட எடுபிடிக் காரன். விசேஷத்தின் போது மூணு வேளை சாப்பாடும், வெற்றிலை பாக்கும், நாலைந்து சல்லிக் காசும் கொடுத்து இந்த மாதிரி உதிரிகளை அனுப்பி வைக்கிற வழக்கம்.

வயசனுக்குப் பக்கத்தில் தான் கோதுமை மாவும் அரிசி மாவும் உப்பும் வெல்லமும் கோணிச் சாக்கு மூட்டைகளிலும் ஓலைக் கடகங்களிலும் வைத்திருக்கிறது.

முத்தச்சா, மாறிக்கோ.

நாழியால் அளந்து பெரிய துணி சஞ்சியில் கோதுமை மாவைக் கவிழ்க்கும்போது வயசனை உற்றுப் பார்த்தான் கிட்டாவய்யன்.

சட்டென்று பொறி தட்டியது.

ஓய் நீர் சாவக்காட்டு அயல் வேதக்காரன் இல்லியோ.

வயசன் நடுங்கிக் கொண்டு எழுந்து நின்றான். அவன் இருமல் இன்னும் அதிகமாக இருந்தது.

நானும் பிராமணன் தான் அண்ணா. தயவு செய்யுங்கோ. செத்தக் கூட மாட இங்கே பணி எடுக்கறேன். பசி தாளலை. போஜனம் மாத்ரம் போதும்.

அவன் பூணூலை இழுத்துக் காட்டி இரண்டு கைகளுக்கு நடுவில் அதைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, வயதில் தன்னை விட எவ்வளவோ சின்னவனான கிட்டாவய்யனைத் தெண்டனிட்டு நமஸ்கரித்தான்.

கிழவனைக் கிட்டாவய்யனுக்குத் தெரியும். அவனுடைய தமையனார்களுக்கு சாவக்காட்டு கிறிஸ்தியானி பிராமணன்மார் எல்லோரையும் பற்றித் தெரியும்.

எப்போதோ கப்பலில் வந்து இறங்கி புதுசாக வந்த நிஜ வேதம் இது என்று காட்டி, சாவக்காட்டில் ஸ்மார்த்தப் பிராமணர்கள் அர்க்கியம் கொடுக்கும்போது இரைத்த தண்ணீர்த்துளிகளை அந்தரத்தில் நிறுத்தினானாம் ஒரு வெள்ளைத் தோல்காரன். தோமையன் என்று அவனுக்குப் பேர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:27 pm

நீரே எமக்கு ஞான சூரியன். வேதவித்து. பிரம்மத்தை உணர்த்த வந்த குரு.

அந்தப் பிராமணர்கள் நீள அங்கி அணிந்த தோமையன் கூடப் போனாலும் பூணூலைக் கழட்டவில்லை.

ஆனாலும் என்ன ? மற்ற பிராமணர்கள் சாவக்காட்டோடு சம்பந்தப் படுவதை முறித்துப் போட்டார்கள். அது எத்தனையோ தலைமுறைக்கு முந்திய விஷயம்.

மார்க்கம் பிரிச்சா என்ன ? சகோத்ரம் இல்லியா ? மாம்ச பட்சணம் செய்யறதில்லே. பூணூலை இன்னும் போட்டுண்டு தான் இருக்கோம். ஜோதி ஸ்வரூபமா பிரம்மத்தைத் தான் நாங்களும் மனசிலே தியானிக்கறோம். எங்கள்லேயும் ஸ்வகார்யமா பாட்டத்திலே நெல்லு விளைக்கவும், வியாபாரிகள் கிட்டே கணக்கு எழுதவும், சங்கீத சிட்சைக்கும், துபாஷி உத்தியோகத்துக்கும் போய் மத்த ஊர் பிராமணாள் போல் நல்ல ஸ்திதியிலே இருக்கப்பட்டவாளும் உண்டு. என்னைப் போல் பஞ்சத்துலே அடிபட்டு ஜீவிதம் முழுக்க வெறும் சாதத்துக்காக நாடெல்லாம் அலஞ்சு திரியற பாவப்பட்ட ஜீவன்களும் உண்டு. பத்மனாபஸ்வாமி க்ஷேத்ரத்திலே ஊட்டுப்புரையிலே ஒரு வேளையாவது சாப்பிடலாம்னு போய் நின்னேன். அப்ப ஸ்தோத்ரம் செய்தது சத்யமா அந்த பகவானைத் தான். சாவக்காட்டுக் காரன்னு யாரோ சொல்லத் துரத்தித் துரத்தி அடிச்சுக் காலை முடமாக்கிப் போட்டா. அப்புறம் உங்க பிதாவோட கூடத் தேகண்டத்துக்கு எடுபிடியா வந்து.

கிழவன் இருமலுக்கு இடையே பழைய கதை சொல்லியபடி குந்தி உட்கார்ந்தான். அவனுடைய பஞ்சடைந்த கண்கள் கிட்டாவய்யனைத் தொடர்ந்து யாசித்தபடி இருந்தன.

ஆமா. பின்னே இல்லியோ. ஊரை ஏமாத்தறவனாச்சே நீயும் உன் கூட்டரும். எங்க பிதாவோட சிநேகிதன் சிவராம அம்மான் அடிச்சுப் பொறத்தாக்கி நீ உசிரைக் கையில் பிடிச்சுண்டு ஓடினது திருநெல்லியிலே தானே ? முப்பது கொல்லம் முந்தின சமாச்சாரம். கேட்டிருக்கேன். உமக்கு ஓர்மை இருக்கில்லியோ ?

ஸ்வாமி, உங்க பிதா ஒரு மகான். சிவராம அய்யரும் கூடத்தான். எனக்குத் தான் அப்போ நேரம் சரி இல்லே. அப்ப மட்டும் என்ன. எப்பவுமே தான். சாவக்காட்டுலே பிறந்தது என்னோட தப்பா அண்ணா ?

கிழவன் கெஞ்சுகிற குரலில் தொடர்ந்த போது திரும்பவும் இருமல்.

இந்தக் களி எல்லாம் என்னோடு வேணாம். கேட்டியா. கெட்ட கேட்டுக்கு ரோகம் வேறே.

கிழவன் வாயை இறுகப் பொத்தி இருமலை அடக்கிக் கொண்டு எழுந்து நின்றான்.

அய்யோ. அது வரட்டு இருமல் அண்ணா. எனக்குப் பசி ஒண்ணுதான் நோக்காடு. உங்களுக்கு தாசனா ஊழியம் பண்றேன். நித்யப்படி ஒரு வேளை ஒரே ஒரு வேளை வெறும் சாதம் கூடப் போதும். பிண்டம் போடற மாதிரி எறிஞ்சாலும் பிடிச்சு எடுத்து நாவார மனசார வாழ்த்திண்டு பூணலைப் பிடிச்சுண்டு சாப்பிடுவேன்.

அயல் வேதக்காரனுக்கு என்ன எழவுக்குப் பூணல் ? இன்னும் என்ன ஒனக்கு பிராமண வேஷம் கள்ளப் பட்டி மோனே ?

கிட்டாவய்யன் எக்கிக் கிழவனின் பூணூலைப் பிடித்து இழுத்தான். நைந்திருந்த அது கிழவனின் நெஞ்சுக் கூட்டுக்குக் குறுக்கே மாலையாகப் படர்ந்து நழுவித் தரையில் அறுந்து விழுந்தது.

தீர் சே போல்

ஜோர் சே போல்

பின்னால் பெருஞ்சத்தம். பைராகிகள் தாவளத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:27 pm

எடோ கிளவா. நான் சவட்டிப் புறத்தாக்கறதுக்குள்ளே ஓடிப் போ. கண்ட மிலேச்சனும் வந்து தேகண்டத்துக்குக் கரண்டி பிடிக்கற இடம் இல்லே இது. பிராமணன், பிராமணன் மாத்திரம் செய்ய விதிக்கப்பட்ட விஷயம். சுபகாரியத்துக்கு இறங்கி வரும் பிருக்கள் சபித்துப் போடுவா.

அண்ணா. பசி உசிர் போறது. சொல்றேனே. நானும் பிராமணன் தான். வேதம் வேறேயானா என்ன ?

என்னவா ? அந்தத் தோமையன் கூடக் குரிசைப் பிடிச்சுப் போன சாவக்காட்டுப் பிராமணன் எல்லோரும் அத்தோடு செத்துப் போய் வம்சம் நசிச்சாச்சு. நீ கிறிஸ்தியானி.

சரி. கிறிஸ்தியானிப் பிராமணன். அநாதை. பசியோட யாசிக்கறேன். கடாட்சம் பண்ணுங்கோ. புண்ணியமாப் போகும்.

திரும்பத் திரும்பச் சொல்றே என்ன தைர்யம் உனக்கு ? நீ பிராமணனா ? பாதரட்சையாலே அடிப்பேன் கேட்டியா. இறங்கிப் போடா புழுத்து ரோகம் பிடிச்ச கிளவா.

கிட்டாவய்யன் பிடித்துப் பலமாகத் தள்ளியதில் மிளகு விழுது பாதி அரைத்து வைத்திருந்த கருங்கல் அம்மியில் தலை மோத விழுந்தான் வயசன். அவன் நெற்றிக்கு மேல் சிவப்புக் கீற்றாக ரத்தச் சுவடு.

பைராகிகள் தரையில் கிடந்த கிழவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். அந்தப் பூஞ்சை திரேகத்தைக் கடந்து முன்னால் வராமல், சொல்லி வைத்தாற்போல் வந்த வழியே திரும்பி வெறுங்கையோடு நடந்து போனார்கள்.

இருங்கோ. அரிசி மாவு. கோதுமை. வெல்லம். எல்லாம் இந்தோ.

தீர் சே போல். ஜோர் சே போல்.

கிட்டாவய்யன் வார்த்தைகளையும், பைராகிகளின் கோஷத்தையும் மீறிக்கொண்டு வயசனின் தீனமான குரல் தட்டுத் தடுமாறி எழுந்தது.

கிட்டாவய்யன் அவன் வயிற்றில் ஓங்கி உதைத்து வெளியே சவட்டிக் கொண்டு போய்ப் புறத்தாக்கினான்.

பைராகிகள் புழுதியைக் கிளப்பியபடி உலக்கைகளால் நெஞ்சில் அறைந்து கொண்டு கூப்பிடு தொலைவில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அந்தத் திசையில் இருந்து பறந்து வந்து கிட்டாவய்யன் தொடையில் ஊர்ந்த குளவி ஒன்று சாவதானமாக அவன் கால் வழியே கெளபீனத்தில் புகுந்து உறுப்பு நுனியில் உக்ரமாகக் கொட்டியது.

தூரத்தில் இருந்து பைராகி திரும்பிப் பார்த்து சத்தமாகச் சொன்னான்.

உன் பரம்பரையே கிறிஸ்தியானியாகப் போறது.

சோமா, என்ன சொல்றான் பைராகி ?

அரைக்கட்டில் வலி உயிர்போக உயிர்த் தலத்தைப் பொத்திப் பிடித்தபடி கேட்டான் கிட்டாவய்யன்.

சபித்துப் போட்டானோ ?

எனக்குச் சரியாக் கேட்கலை அண்ணா.

சோமநாதன் தள்ளாடி நடந்து போகிற வயசனைப் பார்த்தபடியே சொன்னான். அவனுக்கு எல்லாம் கேட்டுத்தான் இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:29 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் ஒன்பது


ராஜா அரண்மனையின் முன் வசத்தில் இருக்கப்பட்ட விசாலமான மண்டபத்துக்கு நடந்தபோது நீள ஒழுங்கையில் காரை பெயர்ந்து அவர் காலடியில் விழுந்தது.

காரைக் கட்டியை ஓரமாகக் குனிந்து நகர்த்திக் கொண்டிருக்கும்போது காலில் பாதரட்சை இல்லாதது நினைவு வந்தது.

யாரங்கே ?

ராஜா குரல் கொடுத்தார்.

ராணிக்கு விசிறிக் கொண்டிருந்த சேடிப்பெண்ணைத் தவிர வேறு யாரும் அங்கே கூப்பிடு தூரத்தில் இருக்க முடியாதுதான்.

ஆனால், முத்தம்மா என்று அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வேலை ஏவுவது ராஜாவுக்கு விதிக்கப்பட்ட கெளரதையான செயல் இல்லை.

என்ன வேணும் ?

முத்தம்மா கழுத்து வியர்வையைப் புடவையில் துடைத்தபடி கேட்டுக் கொண்டே வந்தாள்.

ராஜா கூப்பிட்டால் கீழடங்கியதுகள் ஓடி வந்து சேவித்து வினயமாக வாய் பார்த்து இருக்கிற காரியம் இல்லைதான் இது.

ஆனால் இந்தச் சேடிப்பெண்ணைக் கோபிக்க முடியாது. வீட்டு விலக்கு நின்று கொண்டிருக்கும் ராணிக்கு சதா வரும் முன்கோபமும் சலிப்பும் இவளுக்கு வருவதில்லை. அவ்வப்போது புழங்க அனுமதிக்கிறபோது அவளுக்குத் தானே அந்தப் பொழுதுகளுக்கான ராணியாகிற சந்தோஷம் இருப்பதே காரணம்.

ராஜா அவள் காலைப் பிடித்துவிட ஒருதடவை ஊஞ்சலில் படுத்து ஓய்வெடுத்திருக்கிறாள். ராணி தூங்கிக் கொண்டிருந்த இம்மாதிரியான பகல் பொழுது அது.

என்ன வேணும்னு கேக்கறேன் இல்லே.

ராஜாவின் நரைமீசையை குதிரை லகான் போல் விளையாட்டாக இழுத்தபடி அவள் திரும்பக் கேட்டாள். இப்போதும் தன்னை ராஜா மடியில் இருத்திக் கொண்டால் இன்னொரு முறை கால் பிடித்து விடச் சொல்லி உத்தரவு போட்டு விட்டுக் கொஞ்சம் தூங்கலாம் என்ற அசதியும் எதிர்பார்ப்பும் கண்ணில் தெரிந்தது.

என் பாதரட்சை எங்கே தொலைஞ்சு போச்சு பெண்ணே ? தேடி எடுத்து வா. சமூகம் கேட்டு வந்தவர்களைச் சந்திக்கப் போகும்போது வெறுங்காலோடு போவது உசிதமில்லை என்று உனக்குத் தெரியாதா என்ன ?

அவள் ஏதோ ரண வேதனை அனுபவிப்பது போல் முணுமுணுத்தபடி உள்ளே போனாள்.

ராஜா அந்த முன் மண்டபத்தில் சுவரில் சாய்ந்து ஒரு மரப்பலகையில் அமர்ந்தார்.

சுற்றிலும் காரை பெயர்ந்த சிதறல்கள்.

கொத்தனை வரச் சொல்லிப் பத்து நாளாகிறது. மராமத்துக் காணாமல் அரண்மனையே க்ஷீணித்துப் போய்க் கொண்டிருக்கிறது.

காசு கொடுத்தால் கொத்தனும், சித்தாளும், நிமிர்ந்தாளுமாக ஒரு பட்டாளமே வரும். இந்த ஓட்டை அரண்மனையை சீர்படுத்துவதென்ன, புத்தம் புதுசாக வெள்ளைச் சுண்ணாம்பும், கோழி முட்டையும், சீமைச் சாந்தும் குழைத்துப் பிரம்மாண்டமாகத் தூண் நிறுத்தி ஒரு பெரிய பங்களாவே நிர்மாணித்து விடமுடியும்.

யாரும் எந்தப் பக்கத்திலும் ஒளிந்திருந்து பார்க்காமல் சுபாவமாக மனம் உற்சாகம் கொள்ளும் வரை ராணி நீராடித் திரும்ப நாலு பக்கத்திலும் பக்கப் பதிய மேற்கூரையோடு குளத்தையும் அமைத்து விடலாம்.

சொன்னால் கிரகித்துக் கொண்டு வேண்டியபடி எல்லாம் நிர்மாணித்துக் கொடுக்க நாடிக் கொத்தனும் அங்கமுத்துக் கொத்தனும் இருக்கிறார்கள்.

ஆனால் கொத்தனார்களுக்குப் பதிவாக வாரத்துக்கு ஒண்ணரை ரூபாயாவது கூலியாகக் கொடுக்க வேண்டும். நிமிர்ந்தாளுக்கு அதில் அரையே அரைக்கால் பாகம். சித்தாளுக்கு கால் பாகம் கூலி.

முழுக்கப் பணமாகக் கொடுக்க முடியாது போனால், பாதிக்குப் பாதி பணமும், மீதிக்கு நெல்லுமாகத் தரலாம். கும்பிடு போட்டுவிட்டு வாங்கிப் போவார்கள்.

ஆனால் இருக்கிற நெல்லைத் தின்று தீர்க்க இங்கேயே ஸ்திரமாக சொந்த பந்தம் என்று ஒரு கூட்டம் அரண்மனைக்குள் இருக்கிறது. போன சாகுபடிக்குக் குடியானவர்கள் கொண்டு வந்து அளந்து போனது இத்தனை நாள் நீடித்திருந்ததே அதிசயம் தான்.

மழையே இல்லாம வரண்டு போய்க் கிடக்குது. இந்த வருஷம் இதுவும் வராது.

போன வாரம் கிராமங்களைக் கண்டு வரப் போயிருந்த காரியஸ்தன் சொன்ன சமாச்சாரம் கவலையை அதிகப்படுத்துகிறதே ஒழிய ஆசுவாசத்தைத் தரவில்லை.

உள்ளதுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும்போது இந்த பனியன் சகோதரர்கள் வேறே.

என்னத்துக்காக வந்திருக்கிறான்கள் ?

நான் தானே நினைத்துக் கொண்டு அவர்களைக் கூப்பிட்டேன். தப்புதான். கம்பங்களி சாப்பிடும் ஆனந்தத்தில் அவர்களை மனதில் அழைத்து பங்களா பற்றி வெற்றுப் பேச்சு பேச நினைத்திருக்க வேண்டாம்.

நல்ல வாய்க்கு ருசியான சாப்பாடும், காதுக்கு இனிமையான சங்கீதமும் மனதை நிலை தடுமாறச் செய்து போடுகிறது.

அரைக்கட்டில் உப்பு சரியாக முடிந்து வைத்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார் ராஜா.

ஆறு மாசக் கர்ப்பிணி போல் ஏற்கனவே பெருத்த வயிறோடு ஒட்டி சின்னக் குவியலாக உப்பும் இடுப்போடு ஒட்டி நறநறத்துக் கொண்டிருந்தது.

அகஸ்மாத்தாகக் கண்டுபிடித்தது தான்.

போன தடவை இவன்கள் வந்தபோது கம்பங்கூழில் உப்புப் போட மறந்து போனான் இழவெடுத்த சமையல்காரன்.

அந்தப் புழுத்த நாயை நாலு தலைமுறைக்குத் திட்டித் தீர்த்து, உப்புக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தார் ராஜா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:30 pm

அவனோ சமுத்திரக் கரைக்கே போய் உச்சி வெய்யிலில் உப்பளத்தில் பூக்க வைத்து எடுத்து வந்ததுபோல் வெகுவாக நேரம் கழித்து உப்பு ஜாடியோடு வந்து சேர்ந்தான்.

ஆட்டுப் பட்டியில் அதுகளோடு கூடி இருந்து சுகிக்கப் போயிருந்தாயோடா களவாணி ?

சமையல்காரனைக் கடிந்து கொண்டு ஒரு சிட்டிகை வலது கையில் அள்ளிக் கொண்டிருக்கும்போது வாசலில் இதுபோல் பனியன் சகோதரர்கள் வந்து நின்று அழைத்தார்கள்.

கூழ் ஆறிப் போயிருக்கு. திரும்பச் சூடாக்கிக் கொண்டுவா. நான் இவர்களோடு சல்லாபம் செய்துவிட்டு வருகிறேன்.

அவன் உப்பு ஜாடி ஒரு கையிலும் கம்பங்கூழ் இன்னொன்றிலுமாக சலித்துக் கொண்டு உள்ளே போனான்.

இந்த உப்பை என்ன பண்ணுகிறதாம் ?

ராஜா அவனைக் கூப்பிடலாமா என்று யோசித்து வேண்டாம் என்று வைத்து அந்த உப்பை இடுப்பில் முடிந்து கொண்டு வெளி மண்டபத்துக்கு வந்தார்.

அன்றைக்கு இவராகச் சொல்லாமல் அவன்கள் எதையும் பற்றி முந்திக் கொண்டு பேச ஆரம்பிக்கவே இல்லை. அவர் நினைப்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது என்ற விஷயமே ஆசுவாசத்தை அளிக்கப் போதுமானதாக இருந்தது ராஜாவுக்கு.

நிலைப்படிக்கு மேலே புதுசாகச் சாந்து குழைத்துப் பூசலாமே என்று மட்டும் யோசனை சொன்னார்கள் பனியன் சகோதரர்கள் அன்று.

அது ராஜா நடந்து வரும்போது காரை பெயர்ந்து உதிர்ந்ததைப் பார்த்ததால் இருக்கும்.

புதுசாகவே ஒரு நல்ல வளப்பான பங்களா எழுப்பலாம். இந்த வருஷம் பருவம் தப்பாமல் மழை பெய்து விளைகிற தானியம் எல்லாம் அமோகமாக விளைந்து கன்றுகாலியெல்லாம் தழைத்துப் பெருகினால், கிஸ்தி கொடுத்ததுபோக மிச்சப்படும் பணத்தில் அரண்மனையை ஒட்டியே புதுசாக இன்னொண்ணு எழுப்பி விடலாம். பெரிய தூண். மதுரையில் நாயக்கர் மஹாலில் இருக்கிறது போல் வழவழத்துப் பெரிசாக எழும்பி.

ராஜா சின்ன வயதில் தனக்குப் போக வித்தை சொல்லிக்கொடுத்த செண்பகவல்லியின் தொடைகளை நினைத்துக் கொண்டார் அப்போது. ஆனாலும் அதைப் பனியன் சகோதரர்கள் கவனித்து எங்களுக்கு நீ என்ன நினைக்கிறாய் என்று தெரியுமே என்ற கள்ளக் குறிப்புப் புலப்பட வார்த்தையாடவில்லை.

உப்பின் மகத்துவம் தான் எல்லாம். மனதில் இருப்பதை இவன்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க ஏதாவது சாதனம் கூடி உருவாக்கவோ மந்திர தந்திரம் செய்து இடுப்பில் அரைஞாண்கொடியில் தகடு அடித்து அணிந்து கொள்ளவோ முடியுமானால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தது அத்தனை எளுப்பமாக ஒரு சிட்டிகை உப்பை மடியில் முடிந்து கொள்வதால் நடக்கக் கூடும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.

புது அரண்மனை பற்றி அவர்களோடு அன்று பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியாமல் சமையல்காரன் நாலு தடவை கம்பங்களி கிண்டி எடுத்து வைத்து அலுத்துப் போய் சமையலடியிலேயே நித்திரை போய் விட்டான்.

புது அரண்மனையில் வசதியான காற்றோட்டமான அறைகள் இருக்கும். விசாலமான முற்றத்தில் மல்லர்கள் யுத்தம் செய்து ராஜாவுக்கு ராத்திரி படுக்கப் போவதற்கு முன் உற்சாகம் ஊட்டுவார்கள். வெளி தேசங்களில் இருந்து வெள்ளைக்காரத் துரைசானிகள் உடுப்பைக் களைந்து விட்டு ஆடி மகிழ்வித்து அந்தப்புரத்துக்கு அனுப்புவார்கள். சும்மா படுக்கப் போனாலும் ஒரு கெத்தோடு உள்ளே நுழையலாம்.

அந்த முற்றத்தில் உள்ளூர் வீணை, குழல் வித்துவான்கள் விஸ்தாரமாக வாத்தியம் வாசித்துத் திறமையைக் காட்டுவார்கள். பாரசீகத்திலிருந்து அபூர்வமான கலைஞர்கள் வருவார்கள். வயிற்றில் நிறையத் தக்க வைத்துக் கொண்டு அபானவாயு வெளியேற்றும்போது அதில் நூதனமான இசையை உண்டாக்கிக் காட்டுகிற வித்துவான்கள் அவர்கள்.

யமகம், பின்முடுகு, முன் புடுகு, திரிபு என்றெல்லாம் எழுத்தெண்ணிக் கிண்ண முலைக் கிண்ண முலைக் கிண்ண முலைக் கிண்ண என்று நீட்டி முழக்கிப் பாடி சிருங்கார ரசம் துளும்பப் பதம் பிரித்துப் பொருள் சொல்லும் வித்துவான்களோடு சல்லாபம் செய்யலாம்.

இதைச் சொன்னபோது பனியன் சகோதரர்கள் தங்களுக்குள் ஒருதடவை பார்த்தபடி மெல்லச் சிரித்தபடி, நாட்டியமாடும் பெண்களோடு சல்லாபம் செய்தாலும் பொழுது இன்பமாகக் கழியும். வத்தலும் தொத்தலுமாக இருக்கும் புலவனோடு என்னத்துக்கு அதைச் செய்வானேன் என்று கேட்டார்கள்.

அவர்கள் காலத்தில் சல்லாபம் என்பதற்கு சம்பாஷணை என்ற பொருள் இல்லாமல் போயிருக்கிறதாம்.

கலிகாலம் என்றார் முன்னோர் பாணியில் ராஜா.

உங்கள் காலத்து செளகரியங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். புது பங்களாவில் அமைத்து விடலாம்.

ராஜா சொன்னார். வயிறு நிறைந்த திருப்தியில் வெறுங்கையில் முழம்போட சுகமாக இருந்தது.

புது பங்களாவில் வீட்டுக்குள்ளேயே மலசலங் கழிக்கக் கழிவறை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அப்போது பனியன் சகோதரர்கள் யோசனை தெரிவித்தார்கள்.

அது அசங்கியமானது. ஆரோக்கியக் குறைச்சலும் கூட என்று சொல்லிவிட்டார் ராஜா.

என்னதான் அவருக்கு ஐம்பது வருடம் கழித்து வருவதாக இருந்தாலும் அந்த மாதிரி ஆபாசத்தை எல்லாம் புத்தி வளர்ச்சியின் சின்னமாக ஊருக்கு முன்னால் ஸ்தாபித்து எல்லோருடைய இளக்காரத்தையும் வாங்கிக் கட்டிக் கொள்ள அவர் தயாராக இல்லை.

பனியன் சகோதரர்கள் புது அரண்மனை நிர்மாணிப்பது பற்றிப் பேச இன்னும் நிறையத் தகவல்களோடு வருவதாகச் சொல்லிப் போனார்கள் அப்போது. கூடவே மலையாளக் கரைக்குப் பயணம் போய் வருவது குறித்தும்.

இப்போது தன்னைப் பார்த்ததும் மலையாளக் கரை பற்றி அவன்கள் ஆரம்பிப்பார்கள். ரகசியமாகக் கூடக் கூட்டிப் போய் மார்பு வளப்பம் பார்த்துக் கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து கழுத்தை நெறித்துக் கொன்று போட்டு மடியில் பணம், இடுப்பில் தங்க அரைஞாண், கழுத்தில் சொர்ணமாலை, காதில் எண்ணெய் ஏறிய கடுக்கன் என்று எல்லாவற்றையும் பறித்துப் போவார்களோ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:30 pm

ராஜா வைரம் ஏறிய தன் தோளைப் பார்த்துக் கொண்டார். இந்த சோனிப் பயல்கள் ஊதினால் விழுந்து விடுவான்கள்.

மலையாளக் கரை பற்றி இப்போது பேச வேண்டாம். ராணி பிறத்தியான் பார்வையில் படாமல் உடம்பு சுத்தி செய்து கொள்ள ஏற்பாடு செய்து தர வேண்டியது பற்றி வேண்டுமானால் அவர்களுடன் பேசலாம்.

மடியில் உப்பு இருக்கிற படியால் ராணியின் பருத்த முலைகளையும் வசீகரம் தீர்ந்து கொண்டிருக்கும் நக்னம் பற்றியுமான தன் யோசிப்புகளைப் பனியன் சகோதரர்கள் அறியாமலேயே போகட்டும்.

பாதரட்சை கொண்டு வர இத்தனை நேரமா ?

சமையல் காரன் உப்புக் கொண்டு வர நேரம் மிகுந்து போய் அவனைப் போன வாரம் கடிந்து கொண்டது நினைவு வந்தது.

சேடிப் பெண்ணை ராஜா கடித்துக் கொண்டார்.

இப்படிக் கண்ட இடத்தில் கடித்தால் ராணியிடம் சொல்லுவேன். இந்த மாதம் நீங்கள் சம்பளமும் படிப் பணமும் கூடக் கொடுக்கவில்லை இன்னும்.

சேடிப்பெண் நிர்த்தாட்சண்யமாகச் சொல்லவே சட்டைப் பையில் கையை விட்டு ஒரு வெள்ளி நாணயத்தை எடுத்து அவள் மேல் துணிக்கு நடுவே போட்டார் ராஜா.

அவள் நெருங்கி வந்து அவருக்கு வாயில் நெத்திலிக் கருவாடு மணக்க ஒரு முத்தம் ஈந்து விட்டு ராணிக்கு விசிற ஓடினாள்.

ராஜா வாயைத் துடைத்தபடி முன் மண்டபத்தில் எழுந்தருளியபோது பனியன் சகோதரர்கள் எழுந்து நின்று வணங்கினார்கள்.

அதில் மூத்தவன் ஒரு எலுமிச்சம்பழத்தை அவர் கையில் கொடுத்தான்.

ஏதும் மந்திரித்த சங்கதியாக இருக்குமோ என்று நினைத்த ராஜா வேண்டாம் என்றார்.

மரியாதைக்குக் கொடுப்பது இது. வாங்கிக் கொள்ளுங்கள்.

குட்டை பனியன் சொன்னான்.

ராஜா கையில் வாங்கி அந்தப் பழத்தை முகரும்போது முன்னோர்களை நினைத்துக் கொண்டார். அவர்கள் அதற்குள் ஏறி ஏதாவது சொல்ல ஆரம்பிப்பார்கள் என்று தோன்றியது.

அமைதியாக இருந்தது எல்லாம். முன்னோர்களும் அயர்ந்து தூங்கும் வேனிற்காலப் பிற்பகல். அவர்கள் காலத்திலிருந்து யாராவது விசிறி விட்டுக் கொண்டிருப்பார்கள். இல்லை அவர்கள் விசிறியை வாங்கி வைத்து விட்டுக் கால் பிடித்து விட்டுக் கொண்டிருப்பார்கள்.

முன்னோர்கள் இந்த நினைப்பு குறித்து நாளைக்கு கோபப்படலாம். போகட்டும். ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்.

பனியன் சகோதரர்கள் இருக்கத் தோதான கொஞ்சம் உயரம் தாழ்ந்த ஆசனங்களைக் காட்டி அவர்களை அவ்விடம் இருத்திவிட்டு ராஜாவும் தனக்கான இடத்தில் இருந்தார்.

பனியன் சகோதரர்களில் மூத்தவன் ஒரு கறுப்புப் பெட்டியை முன்னால் நகர்த்தினான்.

நூதன ஒப்பாரிகளோடு கூடிய பழுக்காத்தட்டுக்களா ? பக்கத்து வீட்டுப் பாப்பாரப் பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கொண்டு வந்தது தானே ?

ராஜா விசாரித்தார்.

அவர்கள் பூடகமாகச் சிரித்தார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:32 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் பத்து



கறுப்புப் பெட்டி நிறைய வட்ட வட்டமாகத் தட்டுக்களை வைத்து எடுத்து வந்திருப்பார்கள் பனியன் சகோதரர்கள்.

நூதனமான, நாய்க் குடை போல் காது விரித்த ஒரு பெட்டியில் வைத்துக் கரகர என்று முன்னால் ஒரு பிடியை முறுக்கிச் சுற்றிவிட்டு உட்கார்ந்தால் நெஞ்சில் பாரமாக ஏறி இடம் பிடிக்கும் பாட்டுக்கள் எல்லாம்.

அந்தத் தட்டுக்களை ராஜா பார்க்க மட்டுமே முடியும். அவற்றை அனுபவிக்க பக்கத்து வீட்டில் எப்போதடா சுழல வைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்.

அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் ராணி குளிப்பதைப் பார்ப்பதற்குக் காத்திருப்பது போல்.

ஆனால் அவர்களிடம் பணம் காசு மெத்த உண்டு. அலுத்துப் போகும் வரை சங்கீதம் பொழிய இந்தத் தடியர்களிடமிருந்து பெட்டி பெட்டியாக வாங்கி வீட்டில் அடுக்கிக் கொள்ளலாம். காலையில் எழுந்து பல் விளக்கும்போதும், சாப்பிடும்போதும், தூங்கும் போதும், மாடியில் இருந்து ராணி குளிப்பதை எட்டிப் பார்க்கும்போதும் அந்த சங்கீதமும் துணைக்கு வரும்படி செய்து வைத்துக் கொள்ளலாம்.

ராணி என்ன அவளை விட வனப்பான பெண்களைப் பக்கத்தில் இருந்தே பார்க்கலாம். கூடி இன்புறலாம். எல்லாம் அந்த இசையைக் கேட்டபடியோ. அல்லது அதைக் கேட்பதற்கான தொடக்கமாகவோ.

பாட்டுப் பாடும் தட்டுத்தானே ? அப்புறம் பார்த்துக் கொள்கிறேன். நபும்சகனுக்கு மார்க்கச்சை கிடைத்தது போல் அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் ?

ராஜா தன்னிரக்கத்தோடு சிரித்தார்.

என்ன அப்படிச் சொல்லி விட்டாங்க. நீங்க நினைச்சால் ஒண்ணு என்ன ஓராயிரம் பாட்டுப் பெட்டியும் மார்க்கச்சையும் வாங்கலாம். சமஸ்தானம் செலவு பண்ண ரொம்ப யோசிக்கிறது.

நெட்டை பனியன் ராஜா கையில் இருந்து எலுமிச்சம்பழத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டே சொன்னான்.

அந்தஸ்தில் உயர்ந்த யாரையாவது சந்திக்கப் போகும்போது அவர்கள் கையில் பழத்தையோ, பூ மாலையையோ கொடுப்பது அவர்கள் கால வழக்கம் போல. கொடுத்த பழத்தை ஒரு தடவை முகர்ந்து பார்த்ததும் திருப்ப வாங்கி வைத்துக் கொள்வதும் அதே கால தேச வர்த்தமானம் அனுசரித்துத்தான் இருக்க வேண்டும்.

கறுப்புப் பெட்டி முழுக்கத் திறக்காமல் உள்ளே பூட்டு சண்டித்தனம் செய்தது. நெட்டை பனியன் போராடிப் பார்த்து விட, குட்டையன் ராஜா அரண்மனைச் சுவரில் அலங்காரமாக வைத்திருந்த வாள், கேடயம், ஈட்டி என்று பழைய ஆயுதத்தை எல்லாம் ஒவ்வொன்றாகப் பரிசோதித்து விட்டு, ஒரமாகக் கச்சைவாரில் தொங்கிய குறுவாளை எடுத்து வந்தான்.

அந்தக் கறுப்புப் பெட்டிக்குப் பக்கத்தில் தரையில் குந்தி இருந்து குறுவாளால் அதன் பூட்டை நெம்ப அது உடனே திறந்து கொண்டது.

கண்டவனும் எடுத்து வந்த உளுத்துப் போகும் மரப்பெட்டியைத் திறக்கவா நாங்கள் வெகு வீரமாக கலகக் காரர்களையும், துஷ்ட ஜந்துக்களையும் பரலோகம் அனுப்பி வைக்க காலம் காலமாக எடுத்தாண்ட குறுவாளை உபயோகிக்கிறது ? அவனுகளுக்குத்தான் புத்தியில்லை என்றால் உன்னுடைய அறிவு உன் விதைக் கொட்டைக்குள் போய் முடங்கி விட்டதா ? அங்கே வேறே ஏதாவது உருப்படியாக உற்பத்தி ஆகியிருந்தால் இன்னேரம் உன் வம்சம் வளர்ந்திருக்குமே.

நாளைக்கு பூஜை செய்ய உட்காரும்போது மூதாதையர்கள் இறங்கி வந்து சொல்லிப் போவார்கள்.

அல்லது நாளை மறுநாள் அமாவாசைக்கு வரும்போது.

அய்யர் கோபித்துக் கொண்டு போனதால் அவர்கள் அமாவாசைக்கு வருவது நிச்சயமில்லை என்று ராஜாவுக்குத் தோன்றியபோது நெட்டை பனியன் கறுப்புப் பெட்டியில் இருந்து பழுக்காத் தட்டுக்களை எடுத்து ராஜா கையில் கொடுத்தான்.

அவற்றை அபிமானத்தோடு வாங்கி நாசிக்கு அருகில் வைத்து தீர்க்கமாக வாடை பிடித்தார் ராஜா.

மனதுக்கு ரம்மியமான சாவின் வாடை.

எப்படியோ இதற்குள் ஒளித்து வைத்திருக்கிறார்கள். பிழியப் பிழிய அழுதாலும் தீராத சோகத்தை எல்லாம் பொழிந்து தீர்க்கும் அந்தத் தட்டுக்களில் ஓடிய வரிகளுக்கு இடையில் எப்படியாவது தன்னை நுழைத்துக் கொள்ள முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

ராஜா ஒப்பாரி பதிந்த அந்தத் தட்டுக்களை மனமேயில்லாமல் திருப்பிக் கொடுத்தார். இதற்குள் பதிந்து வைத்திருப்பதைக் கேட்டு அனுபவிக்க எப்போது வாய்க்குமோ.

ஒரு யாசகனைப் போல் பக்கத்து வீட்டை ஒருவினாடி ராஜா பார்த்தார்.

அவர் கையில் கனமாக ஒரு புத்தகத்தை வைத்தான் குட்டை பனியன்.

ராஜா புத்தகங்களை அறிவார். வெள்ளைக் காரன் தேசத்தில் இருந்து துரைத்தனத்தார் பாஷையில் அச்சுப் போட்டு வருகிறவை. பலதும் அந்த சீமையின் விஞ்ஞானம், தத்துவ சாஸ்திரம், வைத்தியம், சாஹித்தியம் பற்றியதாக இருக்கும் என்று அதைக் கொஞ்சம் போலவாவது படித்தவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு.

தவிரவும், கணக்கு வழக்கு எழுதவும் வெறுமனே காகிதத்தைக் கட்டிப் பொதிந்து வைக்கிறதை துரைத்தனத்தார் கொடுத்து, அரண்மனையில் காரியஸ்தன் கணக்கு எழுத உபயோகிக்க வேண்டி இருக்கிறது.

இப்போது பெரிதாகக் கடைகண்ணி வைத்திருப்பவர்களும் பனைஓலைச் சுவடியில் கணக்கு வழக்கு பதிவதை விட்டுவிட்டு அதே தரத்திலான காகிதப் புத்தகத்தில் தான் எழுதிக் கொண்டிருப்பதை ராஜா கடைத்தெருவில் உலாப் போகும்போது பார்த்திருக்கிறார்தான்.

காகிதத்துக்கு துரைத்தனத்தார் இன்னொரு உபயோகமும் கண்டு பிடித்து வைத்திருப்பதாகக் கேள்வி.

மலசலம் கழித்து வந்தால் அதைத் துடைத்துப் போடவும் காகிதம் தான் பிரயோஜனப் படுமாம்.

பட்டணத்து துரைத்தனத்தார் துரைசானிகளோடு இன்பமாக இருக்கும் நேரம் தவிர மற்றப் பொழுதெல்லாம் இந்த மாதிரி காகிதப் புத்தகங்களோடுதான் காணப்படுவார்களாம்.

துரைசானிகள் காகிதத்தைத் துடைத்துப் போட உபயோகிப்பதில் மும்முரமாக இருக்கும் பட்சத்தில் துரைமார்கள் காகிதத்தில் அச்சடித்துப் போட்டதைக் கவனமாகப் படித்தபடி மிகுந்த நேரம் செலவழிப்பதே உத்தமம் என்று ராஜாவுக்குத் தோன்றியது.

எனக்கு வெள்ளைக் காரன் பாஷை படிக்கத் தெரியாது. கணக்கு எழுதும் வேலையெல்லாம் காரியஸ்தன் பார்த்துக் கொள்கிறான். மற்றப்படிக்கு செம்பில் ஜலம் எடுத்துக் கொண்டு போய்க் கால் கழுவி வருகிறேன். இந்தப் புஸ்தகம் எல்லாம் எனக்கு எதற்கு ? பணம் கொழுத்த புகையிலைக் கடைக்காரப் பிள்ளைகளுக்குக் கொடுத்தாலும் பிரயோஜனமாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:32 pm

ராஜா திருப்பித் தந்த புத்தகத்தை மரியாதையோடு கையில் வாங்கினான் நெட்டை பனியன். அதைப் பிரித்தபடி காட்டித் திரும்ப ராஜா கையில் வைத்தான்.

கண் பார்வை மங்கலாகிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் அந்தப் புத்தகத்தின் விசித்திரம் அவரைப் பிடித்து இழுத்தது.

ஆணும் பெண்ணுமாக விதம் விதமாக உறவு கொள்கிற படங்கள்.

காகிதத்தால் பின்னால் துடைத்துப் போட்டு, வெகு சுத்தமாக ஸ்நானம் செய்து விட்டு வாசனாதி திரவியங்களைத் தேகம் முழுக்கப் பூசிக்கொண்டு இது மாதிரி விஷயங்களில் ஈடுபடுவார்களாக இருக்கும்.

நக்னமாக வெளுத்து சோகை பிடித்திருந்த உடல்களுக்குப் பக்கமாக பழுக்காத்தட்டுக்களைச் சுழல விட்டுக் கிளர்ச்சியூட்டும் இனிமையும் சோகமுமான சங்கீதத்தைப் பொழியும் பாட்டுப் பெட்டி படம் எங்கேயாவது தட்டுப்படுகிறதா என்று ராஜா ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தார்.

விதிக்கப்பட்ட கடமையை ஆற்றுகிறது போல், உறைந்து போன நிசப்தத்தில் துரைத்தனத்தார் தீவிரமாக வம்சவிருத்தியில் ஈடுபடுகிறது தான் பக்கத்துக்குப் பக்கம் விரிந்து கொண்டு போனது.

இதை வைத்திருந்து சாவகாசமாகப் பார்த்து விட்டுக் கொடுங்கள். பக்கத்து வீட்டில் அடுத்த முறை வரும்போது கொடுத்துக் கொள்கிறோம்.

ராஜா வேண்டாம் என்று மறுத்துப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

ராணி பார்த்தால் இது என்ன அசங்கியம் என்று முகத்தைச் சுளிப்பாள். போதாக்குறைக்கு மூதாதையார் ஏதாவது செய்து இதைச் சுட்டெரித்துப் போடவும் சாத்தியம் உண்டு. அப்புறம் யார் இதற்குப் பணம் அழுகிறதாம் ?

இதெல்லாம் எப்படிச் சித்திரக்காரன் வரைவான் ? அது ஏன் கறுப்பும் வெள்ளையுமாக ஒரே மாதிரி இருக்கிறது எல்லாம் ?

ராஜா கேட்க, பனியன் சகோதரர்கள் கபடமாகச் சிரித்தார்கள்.

இது வரைந்த படம் இல்லை.

கறுப்புப் பெட்டிக்குள் மடக்கி வைத்திருந்த ஒரு முக்காலியை எடுத்து விரித்தான் குட்டை பனியன். கண்ணாடி விளக்கு போல் ஏதோ சாதனத்தை எடுத்து அதன் மேல் இருத்தினான்.

இதுவும் பாடுமோ ?

ராஜா கேட்டார்.

பாடாது. ஆனால் படம் எடுக்கும்.

அதென்ன படம் எடுக்கிறது ?

உங்களை இப்படி உட்கார்ந்தபடிக்கே படமாக எடுத்துப் போடும்.

சித்திரக்காரனைக் கூப்பிட்டால் ஏழெட்டு வர்ணத்தைக் குழைத்து திரைச்சீலையில் வரைந்து நான் தான் என்று நம்ப வைத்துக் காசு வாங்கிப் போவானே. இதுக்கெல்லாம் எதற்கு யந்திரம் ?

ராஜா சவத்தைத் தள்ளு என்கிற அலட்சிய பாவனையோடு கையை விலக்கியபடி கேட்டார்.

இது உள்ளதை உள்ளபடியே பிடிக்கக் கூடியது. நீங்கள் சரி என்றால் ஐந்து பத்து நிமிடத்தில் எடுத்து விடலாம்.

ராஜா புரியாமல் பார்த்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:33 pm

துரைகளும் துரைசானிகளும் அந்தப் புத்தகத்தில் செய்கிறதை எல்லாம் தானும் ராணியும் செய்து அதைப் படம் பிடித்துப் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா இந்தத் திருட்டுப் பயல்கள் ?

மடியில் உப்பு நறுநறுத்ததை பரத்திச் சீராக்கிக் கொண்டு செண்பகவல்லியை இதைக் கொண்டு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தார் ராஜா.

அவள் வயோதிகத்தில் செத்துப் போய் ஏழு வருஷமாகி விட்டது.

ராஜா கறுப்புப் பெட்டிக்குப் பக்கத்தில் தரையில் வைத்திருந்த குறுவாளை எடுக்கக் கையில் சின்னதாகக் கீறி ரத்தச் சுவடை உண்டாக்கிக் கொண்டு சொன்னது அது.

முன்னோர்.

உன் வயசுக்கு நாங்கள் எல்லாம் ஈசுவர சிந்தையும், குடிபடைகளைப் பராமரிக்கிறது பற்றிய யோசனைகளுமாக சதா இருந்தோம். நீ சாப்பிடவும் ஒட்டுக் கேட்ட ஒப்பாரிப் பாட்டை ரசிக்கவும், சம்போகம் பற்றி வெறுமனே நினைக்கவும், சேடிப்பெண்ணுக்குக் கால் பிடித்து விடவும் தவிர வேறு என்ன செய்கிறாய் ? போதாக்குறைக்கு இந்த லீலாவிநோதங்களை அச்சுப் போட்ட புத்தகம் வேறே.

குறுவாளின் வளைந்த பிடி கைக்கு அடங்காமல் திமிறி முணுமுணுத்தது.

அவசரமாகக் கையைத் துடைத்துக் கொண்டு சம்போகம் பற்றிய அந்தப் புத்தகத்தை பனியன் சகோதரர்களிடம் கொடுத்து உடனே உள்ளே வைக்கச் சொன்னார் ராஜா.

அந்தப் படம் பிடிக்கும் பெட்டியையும் எடுத்து வையுங்கள். முக்காலியை மடக்கி எடுத்து அந்தாண்டை போங்கள்.

உங்களுக்கு மனநிலமை சரியில்லை என்றால் வேண்டாம் இதொன்றும். நாங்கள் சும்மா இதையெல்லாம் பார்க்கக் காட்டி விட்டு, புதுமனை பற்றிக் கொஞ்சம் கதைத்து விட்டுப் போகலாம் என்று வந்தோம். அப்புறம் அந்த மலையாளக்கரைப் பயணம். இந்த இரும்பு வாகனம் வேண்டாம் என்றால் போகிறது. புகை விட்டுக் கொண்டு நகரும் ஒரு வண்டி இருக்கிறது. அதில் வைத்துக் கூட்டிப் போகிறோம். பரம சுகமாக இருக்கும். துரைத்தனத்தார் இன்னும் சில வருஷங்களில் இங்கே கொண்டு வரப் போவது.

பனியன் சகோதரர்கள் மரியாதையோடு எழுந்து நின்று சொன்னார்கள்.

அப்படியே துரைத்தனத்தார் வார்த்து வெளியிடும் வெள்ளிப் பணத்தையும், தங்கப் பணத்தையும் இவர்கள் கொண்டு வர முடியுமானால் நன்றாக இருக்கும்.

இந்தக் களவாணிகளா ? சொன்னால் அச்சு அசலாக அது போல் செம்பில் காசு அடித்து மேலே வர்ணப் பொடி பூசி எடுத்து வந்து விடுவார்கள்.

ராஜா குறுவாளை வார்க்கச்சையில் வைத்துச் சுவரில் மாட்டும்போது பக்கத்தில் இருந்த கேடயம் உருண்டு தரையில் விழுந்து ஒலி செய்ய அதற்குள் இருந்து இன்னொரு குரல் கேட்டது.

சமயம் சரியில்லை போலிருக்கு. நாங்கள் இன்னொருமுறை வருகிறோம்.

பனியன் சகோதரர்கள் கறுப்புப் பெட்டியை மூடிக் கொண்டு கிளம்பும்போது ராஜா மடியில் இருந்து இரண்டு வெள்ளி நாணயங்களை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.

அவர்கள் தொழுது வாங்கிக் கொண்டார்கள். வாசலில் நிறுத்தி இருந்த வண்டியில் இருந்து இரண்டு பெரிய புட்டியுகளை உள்ளே கொண்டு வந்து வைத்தார்கள்.

சீமைச் சாராயம்.

நாளைக்குத் தானே அமாவாசை ?

அவர்கள் கிளம்பிப் போனதும் அறை முழுக்கக் குரல்கள் ஆர்வமாக விசாரித்தன.

அய்யர் சீமைச்சாராயத்தை எடுத்து எப்படி இவர்களுக்குப் போய்ச் சேரும்படி கொடுப்பார் என்று ராஜாவுக்குப் புரியவில்லை. அவர் வருவாரோ என்னமோ.

பக்கத்து வீட்டைக் கொளுத்த இந்தச் சண்டாளர்களை உபயோகித்துக் கொள்ளலாம் என்று உங்கள் புத்திக்குத் தோன்றவே இல்லையா ?

பகல் தூக்கம் கலைந்து எழுந்து வந்த ராணி சொன்னாள்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக