புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
366 Posts - 49%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
25 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 15 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:28 pm

அதைத் தவறவிடாமல் இருத்திக் கொள்ள முடிவு செய்து சங்கரன் எல்லாம் ரொம்ப நெருங்கின உறவு மாதிரித்தான் என்றான். ஊரிலேயே பெரிய நாட்டியமணி என்றும் அப்புறம் நினைவு வந்தது போல் கூட்டிச் சேர்த்தான்.

படுவா, தேவிடிச்சி தொடுப்பெல்லாம் உண்டாடா உனக்கு என்று வைத்திசார் அவன் விலாவில் இடிக்க, அதில்லே வைத்தி சார், ஆப்தர்கள்லே ஒருத்தர் என்றான்.

லட்சணமாத்தான்டா இருக்கா. கைத்தண்டையிலே புசுபுசுன்னு மயிர் மட்டும் இல்லாட்ட வெள்ளைக்கார ரதியெல்லாம் பிச்சை வாங்கணும். நீ பட்டணத்துலே வெள்ளைக்காரிகளைப் பக்கத்துலே வச்சுப் பார்த்திருக்கியோ. நீயெங்கே அதெல்லாம் பாத்து அனுபவிச்சிருக்கப்போறே பாவம். வெள்ளைக்காரி மாதிரி உடம்பு வாகு லோகத்திலேயே கிடையாதுடா. வழுவழுன்னு வாழத்தண்டு மாதிரி என்னமா ஒரு தேககாந்தி என்றான் வைத்தி.

சங்கரனுக்குச் சிரிப்பு வந்தது. வைத்தி சாருக்குத் தெரியாத வெள்ளைக்காரி உடம்பு முழுக்கச் சங்கரனுக்குத் தெரியும். வைத்தியிடம் அதைச் சொல்ல முடியாதுதான். அவனிடம் மட்டும் என்ன ? சுலைமானிடம், கருத்தானிடம், பகவதிக் குட்டியிடமும் தான்.

நினைக்கும்போதே பகவதிக்குட்டிக்கு துரோகம் பண்ணினது போல் பெரிதாக அவமானமும் குற்றபோதமும் மறுபடியும் கிளம்பி வருகிறது.

ஆனாலும் கொட்டகுடித் தாசிக்கு எல்லாம் சாங்கோபாங்கமாக விவரித்ததில் அன்றைக்கு ஒரு நாள் மட்டும் மனம் லேசானது நிஜம். அவளோடு இன்னொரு ராத்திரி இருக்க முடியுமானால் உடம்பும் நினைப்பும் சுளுக்கெடுத்து விட்டதுபோல் விண்ணெண்று நிமிரும். பாழாய்ப் போன ஜோசியன் அய்யங்கார் யந்திரத்தை எசகுபிசகாக நிறுத்தி அவளுக்குச் சம்போகத்திலேயே இஷ்டம் இல்லாமல் பண்ணி விட்டான். சங்கரன் சொல்லச் சொல்ல அவள் அதை வைத்து எப்படி நூதனமாகப் பாட்டாக ஏற்படுத்திக் கொடுத்தாள் ? அவள் புத்தி சாதுர்யம் ஊரில் யாருக்கு வாய்க்கும் ?

எல்லா ராத்திரி இப்படி ஆசிரியப்பாவும் வெண்பாவும் எழுதிக் கொண்டிருப்பதாக அவள் சொன்னது நினைவு வந்தது சங்கரனுக்கு. அதுவும் கொக்கோகம் பற்றிக் கிஞ்சித்தும் இல்லையாம். எல்லாம் பகவத் விஷயமாம்.

வைத்தி சார், உமக்குத் தமிழ்ச் செய்யுள் பிடிக்குமா என்று கேட்டான் சங்கரன்.

செஞ்ஜார்ஜ் கோட்டையிலே கிளார்க் உத்யோகம் பண்றதுக்கும் உன் மன்னியோட படுக்கறதுக்கும் அதெல்லாம் எதுக்குடா அனாவசியமா என்றான் வைத்தி.

ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே அம்பலப்புழைக்குக் கிளம்ப முஸ்தீபுகள் ஆரம்பித்தன. விசாலமாக, நாலு பேர் உட்கார்ந்து பயணம் போகவும், நடுவிலே அதில் ஒருத்தர் இரண்டு பேர் கால்மாடு தலைமாடாகக் கிடந்து சிரம பரிகாரம் பண்ணவுமாக ஐயணை ஏழெட்டு வண்டி கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

கோமதி மன்னியின் குழந்தைகள் கடைக்கு வந்து தெரு வேடிக்கையில் லயித்துப் போய் உட்கார்ந்திருந்தபடி ஊருக்கெல்லாம் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதுவும் அந்தத் தலையாட்டி பொம்மையை விட்டுவிட்டு வர மனசேயில்லை அதுகளுக்கு.

ஊர்லேயிருந்து இங்கே வந்ததும் பொம்மையைக் கள்ளிப் பெட்டியிலே போட்டு நம்மாத்துக்கு எடுத்துண்டு போயிடலாம் என்று வைத்திசார் ஆசை வார்த்தை காட்டிக் குழந்தைகளைப் பயணத்துக்குச் சித்தப்படுத்தினான். கையில் முடி இல்லாவிட்டால் அவன் கொட்டகுடித் தாசியையும் கள்ளிப்பெட்டியில் வைத்து எடுத்துப் போய்விடுவானாக்கும்.

கிளம்புகிறபோது சுப்பம்மாளிடமும் அப்படியே கல்யாணி அம்மாள் கண் விழித்திருந்தால் அவளிடமும் சீக்கிரம் நவ வதுவோடும் புத்திரனோடும் திரும்பி வரப்போவதாகவும் யாதொன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் பிரயாணம் சொல்லிக்கொண்டு வரப்போனார் சுப்பிரமணிய அய்யர்.

சுப்பம்மாளைப் பார்த்த மூத்த குடிப் பெண்டுகள் அய்யரின் நாக்கில் இருந்து பெருங் குரல் எடுத்து ஓவென்று அழுதார்கள். கல்யாணி அம்மாள் களைத்துப் போய் நித்திரை போயிருப்பதால் அவளைத் தொந்தரவு படுத்தக் கூடாது என்று அவர்களில் ஒருத்தி கூற, குரல் அடக்கி அப்புறம் பேசினார்கள்.

அழாதீங்கோ, நான் கல்யாணியைப் பாத்துக்கறேன். போய்ட்டுச் சீக்கிரம் வந்துடுங்கோ. பாவம் இந்தப் பிராமணர். இப்படிப் புருஷாளாப் பார்த்து மேலே வராம வேறே யாராவது பொம்மனாட்டியாப் பாத்துண்டா சிலாக்கியமா இருக்குமில்லியோ ?

சுப்பம்மாள் கேட்க அவர்கள் வேறே சொந்த பந்தம், நெருங்கிய மனுஷர் என்று யாரும் கிடைக்கவில்லையாதலால் கொள்ளுப்பேரன் எள்ளுப்பேரனான சுப்பிரமணிய அய்யரோடு இப்போதைக்குப் போவதாகவும், அழுவது அதற்காக இல்லை என்றும் சொன்னார்கள்.

அப்புறம் எதுக்காக அழுகை ? போற எடத்துலே எல்லோரும் க்ஷேமமா இருப்பா தானே ?

சுப்பம்மாள் சங்கடத்தோடு கேட்டாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:29 pm

ஒரு செளகரியத்துக்கும் யாருக்கும் குறைச்சல் இல்லேடி சுப்பம்மா.

சுப்பிரமணிய அய்யர் குரல் கம்மக் கம்மப் பெண்குரலில் பேசியபோது, கச்சேரி ராமநாதய்யர் உள்ளே எட்டிப் பார்த்துப் போகலாமா என்றார்.

ராமய்யா, நீ கிளம்புடா. ஊர் எல்லைக்குப் போய்ச் சேர்ந்து பிள்ளையார் கோவில்லே சிதறுதேங்காய் போடறதுக்குள்ளே சுப்பாணி வந்துடுவான். சிதறுகாய்க்கு எடுத்து வச்ச பெரிய காய் வேணாம். அது அழுகின மாதிரி இருக்கு. சமையல்கட்டுலே கர்ப்போட்டக் காய் இருக்கு பாரு அதை எடுத்து வச்சுக்கோ. எல்லாம் அம்சமா நடக்கும்.

மூத்தகுடிப் பெண்டுகள் ஏக குரலில் நல்ல வார்த்தை கூற, ராமநாதய்யர் சரியென்று சொல்லிக் கிளம்பினார்.

சுப்பிரமணிய அய்யர் கல்யாணி அம்மாள் தேகநிலை குறித்து சுப்பம்மாளிடம் எப்போதும்போல் விசனப்பட்டார்.

யாதொரு கவலையுமில்லாமல் போய்ட்டு வாங்கோ எல்லாரும். சங்கரனும் பொண்டாட்டியுமா கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்க வரும்போது கல்யாணி நிச்சயம் எழுந்து உக்காந்திருப்பா.

சுப்பம்மாள் பாட ஆரம்பித்தாள். அது ஒரு நலங்குப் பாட்டாக இருந்தது. இரண்டு அடி சொந்தக் குரலில் பாடுவதற்குள் குரல் பிசிறு தட்டி இருமலாக இழுத்துப் போய் நிற்க, மூத்தகுடிப் பெண்டுகள் சுப்பிரமணிய அய்யர் மூலம் அந்தப் பாட்டை வெகு அழகாகப் பாடி முடித்தார்கள்.

புது வீட்டுலே தம்பதிகளைக் குடிவைக்கும்போது இதைப் பாடணும் என்றாள் சுப்பம்மாள். சுப்பிரமணிய அய்யர் கண் கலங்கினார்.

எனக்கு விட்டுட்டுப் போறதுக்குப் பயமா இருக்கு அத்தை. நான் வரவரைக்கும் இவ உசுரோட இருப்பாளா ? இந்த அகம் இருக்குமா ? போன தடவை போய்ட்டுத் திரும்பினபோது கரிக்கட்டையா சாமா கிடந்தான். இப்போ கல்யாணியா ?

அவர் குரல் உடைந்து அழுவதற்குள் மூத்தகுடிப் பெண்டுகள் குறுக்கிட்டுத் திரும்பவும் நல்ல வார்த்தை சொன்னார்கள். எல்லாம் சுபமாக, செழித்துத் தழைத்து வளரும் என்றவர்கள் குரலில் சந்தோஷத்தை மீறிய சோகம் இழையோடியது.

எல்லா வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளம்பிப் போவதை ஜன்னல் பக்கம் நின்றபடி கவனித்தாள் சுப்பம்மாள். எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் சங்கரன் கல்யாணம் முடிய, நார்ப்பெட்டிக்குள் இருந்த யந்திரத்து தேவதைகளையும், மூத்த குடிப் பெண்டுகளையும் ஒருசேர வேண்டிக் கொண்டாள் அவள்.

சூரியன் மேற்கில் இறங்கிக் கொண்டிருந்த சாயங்காலப் பொழுதில் அரண்மனைத் தோட்டத்தில் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் நிறுத்தி வைத்த பெரிய யந்திரம் அவள் கண்ணில் பட்டது. அதில் இருக்கும் தேவதைகளையும் அவள் மனதில் கும்பிட்டாள்.

சுப்பம்மா, இருட்டினதும் அந்த மகாயந்திரம் பக்கத்துலே குத்து விளக்கு ஏத்தி வை. உன்னோட சம்புடத்தையும் அங்கேயே வச்சுடு. இன்னிக்கு நாள் நன்னா இருக்கறதாலே இந்தத் தேவதைகளும் அங்கேயே ஏறிக்கட்டும்.

வண்டிக்குள் இருந்து சுப்பிரமணிய அய்யர் பெண்குரலில் சொன்னபோது, வைத்தியின் குழந்தைகள் சிரித்தார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு வந்தது.

குளிக்கும் பெண்டுகளைப் பார்க்கலாமோ ?

பக்கத்து வண்டியில் இருந்தபடிக்குச் சுப்பிரமணிய அய்யர் சங்கரனைப் பார்த்துப் பாட ஆரம்பிக்க அவனுக்குத் துணுக்கென்றது.

இந்த மூத்தகுடிப் பெண்டுகள் வேறு என்ன எல்லாம் பார்த்தார்களோ. அவனோடு பட்டணம் வந்திருப்பார்களோ ? கப்பலில் ஏறியிருப்பார்களோ ? வெள்ளைக்காரிக் குட்டிகளோடு உல்லாசமாக இருந்ததை எல்லாம் நொடிப் பொழுதும் கண்ணசையாமல் பார்த்துக்கொண்டு கப்பலோடு ஆடியபடி இருந்திருப்பார்களோ ? கொட்டகுடித் தாசி வீட்டுக்கு அவன் போனபோதும், அவனுக்கு முன்னாலேயே அங்கே இருந்தார்களோ ?

சங்கரனும் கச்சேரி ராமநாதய்யரும் இருந்த வண்டி வைத்தியநாதன் குடும்பம் இருந்த வண்டியைத் தொடர்ந்து விரைய, சுப்பிரமணிய அய்யர் குரல் மாட்டு மணிச் சத்தத்தில் அமுங்கிப் போனது.

குளிக்கும் பெண்டுகளை.

இதென்னடா கஷ்டமாப் போச்சு சுப்பாணி, சித்தெ இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக்கோ. பெண்டுகள் இருக்கப்பட்ட இடம் என்று சுந்தர கனபாடிகள் சொன்னார். மூத்த குடிப் பெண்டுகள் என்னதான் மூத்தவர்களாக இருந்தாலும் ஒரு வைதீகனான தனக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று குறைச்சல் அவர் குரலில் உஷ்ணமாக ஏறி இருந்தது.

சும்மா இரேண்டா. மாட்டுக்கண்ணா. சங்கரன் கல்யாணம் ஆனப்புறம் நாங்க யார் வழிக்கும் வரப்போறதில்லே. எல்லாரும் க்ஷேமமா இருங்கோ.

கனபாடிகள் அப்புறம் வாயைத் திறக்கவில்லை.

எல்லைக்கல் பிள்ளையாருக்குச் சிதறு தேங்காய் உடைத்து, விக்கினம் இல்லாமல் பிரயாணமும் மேற்கொண்டு ஆகவேண்டியதுமெல்லாம் அமைய வேண்டிக்கொண்டபோது ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

துணிப்பையில் வஸ்திரங்கள் போக, கையிலே ஓலைக் கூடைக்குள் எதையோ பிடித்திருந்தார் அவர்.

வேறென்ன வேலை சோழியனுக்கு. யந்திரம்தான். பொண்ணாத்துலே ஸ்தாபிக்க அச்சாரம் வாங்கியிருக்கானே.

சுப்பிரமணிய அய்யர் பெண்குரலில் சொன்னபோது சுந்தர கனபாடிகள் அதிர்வேட்டுப் போல சிரித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:30 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்தாறு



குத்துவிளக்கும் இன்னொரு கையில் நார்ப்பெட்டியில் ஜோசியர் கொடுத்த யந்திரமுமாகச் சுப்பம்மாள் அரண்மனைத் தோட்டத்துக்கு வந்தபோது நட்சத்திரங்கள் இல்லாமல் வானம் இருண்டிருந்தது. சீக்கிரம் மழை வந்துவிடும் என்று சந்தோஷச் சேதி சொல்லிக்கொண்டு ஒரு காற்று செடிகொடிகளின் மேல் குதித்துக் கொண்டு நடந்தது.

விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் சிந்தாமல் சிதறாமல், அதில் முக்கி வைத்த வாழைப்பூத்திரி கீழே விழுந்துவிடாமல் சுப்பம்மாள் ஜாக்கிரதையாக அடிமேல் அடி எடுத்து வந்து கொண்டிருந்தாள்.

எண்ணெய்க் கிண்டியைத் தனியாக எடுத்துப் போய் அப்புறம் வார்த்திருக்கலாம் தான். கையில் தேவதைகளையும் தூக்கிக் கொண்டு போக வேண்டி இருந்ததால் அதைச் செய்யமுடியாமல் போனது.

மூத்தகுடிப் பெண்டுகள் சுப்பிரமணிய அய்யர் குரலில் வந்து சொன்னபடிக்கு இப்படித் தேவதைகளை இங்கே மகாயந்திரத்துக்கு முன்னால் விட்டுவிட்டுப் போவது சரியா என்று அவள் மனதில் குழப்பம்.

அவள் தான் என்ன செய்வாள் ? சோழியன் அண்ணாசாமி அய்யங்கான் இந்தோ அந்தோ என்று சுப்பம்மாளிடம் கொடுத்த யந்திரத்து தேவதைகளைக் கரையேற்ற நாளைக் கடத்திக்கொண்டே போய், இப்போ சங்கரன் கல்யாணம் என்று வேஷ்டிக்குப் பின்னால் மண்ணைத் தட்டிக்கொண்டு ஓடியே போய்விட்டான். அங்கே பொண்ணுவீட்டில் நிர்மிக்க இன்னொரு யந்திரம். அதிலே உதிரியான இன்னும் சில தேவதைகள். அதற்காகத் தட்சிணை.

முப்பது முக்கோடி தேவதைகள் இருக்கிற வரைக்கும் ஒவ்வொரு யந்திரத்துக்கும் சிலதைக் கூப்பிட்டுவந்து நிறுத்தி அண்ணாசாமி அய்யங்கார் யந்திரப் பிரதிஷ்டையில் இன்னும் நிறையக் காணி நஞ்சையும் புஞ்சையும் வாங்கிப் போட்டுவிட முடியும். ஆனாலும் அவர் யந்திரம் செய்கிற வேகத்துக்கு, அந்த முப்பது முக்கோடியும் தீர்ந்துபோய் புதிதாகத் தேவதைகளை உற்பத்தி செய்ய நேரிடலாம் என்று பட்டது சுப்பம்மாளுக்கு.

இந்த மாதிரி யோசனை தரிகெட்டு ஓடும் நேரங்களில் பேச்சுக் கொடுக்க வரும் மூத்தகுடிப் பெண்டுகள் இல்லாமல் மனம் வெறிச்சென்று இருந்தது. அது பயத்தையும் ஏற்படுத்தியது அவளுக்கு.

என்னதான் அவளைச் சங்கரனின் புகையிலைக்கடைப் பொம்மை போல் ஆட்டிவைத்து அவர்களின் சந்தோஷத்துக்காகக் களியாக்கி, தூரத்துணியை இடுப்பில் கட்டி வைத்து, வாயில் துடுக்கான பாட்டை, வார்த்தையை எல்லாம் ஏற வைத்துக் கொட்டம் அடித்தாலும் ஒரு பெரிய சிநேகிதக் கூட்டமே இல்லாமல் போனதுபோல் இருந்தது அவர்கள் சுப்பிரமணிய அய்யரோடு புறப்பட்டுப் போனபிறகு.

இப்போது இந்த நார்ப்பெட்டி தேவதைகளும் போய்ட்டு வரேன் என்று கிளம்பி விடுவார்கள். போகிறபோது அவர்களுக்குக் கொடுக்க மஞ்சளும், குங்குமமும் நாலு பூவன் பழமும் நார்ப்பெட்டியிலேயே வைத்துச் சுப்பம்மாள் கொண்டு வந்திருந்தாள். தேவதைகள் ஆனால் என்ன ? அவளை அண்டி வந்த பெண்டுகள் அவர்கள் எல்லோரும்.

நாளை முதல்கொண்டு சுப்பம்மாள் விடிகாலையில் எழுந்து கிணற்றடிக்கு ஓடவேண்டாம். இறைத்து இறைத்துத் தண்ணீர் சேந்தி குளிரில் விறைத்துப்போய் ஸ்நானம் செய்து விட்டுப் பால் வாங்கப் போகவேண்டாம். கிழக்கு நோக்கி யந்திரத்தை நிறுத்தி, வாசல் கதவைப் புருஷர்கள் வந்து நிற்காமல் அடைத்துத் தேவதைகளைக் குளிப்பாட்டி, வஸ்திரம் உடுத்தக் காத்துக்கொண்டு இருந்துவிட்டு அவர்கள் வயிற்றுக்குப் படைக்க வேண்டாம்.

ஜோசியன் சொல்லாமலே நான் இப்படி உங்களை விட்டுட்டுப் போறேனே. சரிதானா ?

சுப்பம்மாள் கேட்டபோது பெட்டிக்குள் தேவதைகள் மெளனமாக இருந்தார்கள். அவர்கள் தூங்கியிருக்கலாம்.

சுப்பம்மாள் நார்ப்பெட்டியை நந்தியாவட்டைச் செடிக்கு அடியில் வைத்தாள். குத்துவிளக்கை மெல்ல மகாயந்திரத்துக்கு முன்னால் வைத்துவிட்டு நார்ப்பெட்டிப் பக்கம் போனாள். எங்கேயோ குழந்தை அழும் சத்தம் மொணமொணவென்று கேட்டது.

நார்ப்பெட்டியில் இருந்து ஓலைக் கொட்டானை எடுத்தபோது அழுகைச் சத்தம் இன்னும் பலமாகக் கேட்டது. பூனைக் குட்டி சத்தமோ என்று தோன்றியது சுப்பம்மாளுக்கு. பிறந்த பூனைக்குட்டி குரலுக்கும் கைக்குழந்தை குரலுக்கும் அதிக வித்தியாசம் இல்லைதான்.

ஓலைக் கொட்டானில் கொஞ்சூண்டு இருந்த அரிசிமாவு காற்றில் சிந்திச் சிதற யந்திரத்துக்கு முன் நாலு இழை கோலம் இழுத்தாள் சுப்பம்மாள். தீபத்தை ஏற்றுகிறபோது வெறுந்தரையில் அதை வைக்க அவளுக்கு மனம் ஒப்பவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:32 pm

சுப்பம்மா. எப்படி இருக்கேடி பொண்ணே ?

கிணற்றுக்குள்ளிருந்து பேசுகிற மாதிரிச் சத்தம். அது முடியும் முன்னால் திரும்பப் பூனனக்குட்டியோ, சிசுவோ அழுகிறது.

பெட்டிக்குள் தேவதைகள் தூங்கியிருக்கவில்லை போலிருக்கிறது. சுப்பம்மாளுக்குக் கண்ணாமூச்சி காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவளை விட்டுவிட்டுத் திரும்ப மனமில்லையோ ?

காற்றில் தீபம் அணைந்துவிடாமல் ஜாக்கிரதையாக நாலு முகமும் ஏற்றி வைத்தாள் சுப்பம்மாள். குத்து விளக்கு வெளிச்சத்தில் சுற்றுப்புறம் ஒரு வினாடி மெளனமாகப் பிரகாசிக்க, அவள் குனிந்து நிலத்தில் நெற்றிபட நமஸ்கரித்தபோது இன்னொரு அலையாக வந்த காற்று விளக்கை அணைத்துப் போனது.

பாழாப் போன காத்து. என்ன கொள்ளையிலே போற அவசரமோ.

சுப்பம்மாள் வைதபடிக்கு நார்ப்பெட்டியில் இருந்து அண்ணாசாமி அய்யங்கார் கொடுத்த செப்புத்தகட்டை வெளியே எடுத்தாள்.

காத்தை ஏன் பழிக்கறே சுப்பம்மா ? அதது அததுக்கு விதிச்ச காரியத்தைத் தானே பாத்துண்டு இருக்கு ?

பெண் குரல் ஸ்பஷ்டமாகக் கேட்டது இப்போது. சுப்பம்மாள் அதை நொடியில் அடையாளம் கண்டு கொண்டாள்.

சாமிநாதன் கட்டிலுக்குக் கூப்பிட்டுப் போகம் கொண்டாடிய துர்மரணப் பெண்டு.

அவளுக்கு வெடவெடவென்று தேகம் நடுங்கியது. அய்யங்கார் சொன்னபடிக்குக் கேட்காமல் தேவதைகளை இப்படிக் கழித்துக்கட்ட வந்தது தப்புத்தான். இந்தப் பழிகாரி திரும்பவும் ஆட்டிவைக்க இறங்கி விட்டாள்.

ஏண்டி என் வதையை வாங்கறே ? எல்லார் வயத்தெரிச்சலையும் கொட்டிண்டது போறாதா ? என் கொழந்தை சாமாவையும் கூட்டிண்டுட்டே உன்னோடேயே வச்சுண்டு கூத்தடிக்கறதுக்கு. இப்போ என்ன எழவுக்கு வந்து நிக்கறே திரும்பவும், சொல்லுடி நாறப் பொணமே.

சுப்பம்மா, கோபப்படாதே. நான் உன்னைப் படுத்த வரலே. அந்தத் தேவிடியாள் புத்ரன் ஜோசியன் யந்திரத்துலே ஏத்தி அனுப்பிச்சுட்டான் என்னை. இனிமேல்கொண்டு உன்கிட்டேயும் வரமுடியாது. சாமா கிட்டேயும் போகமுடியாது. நான் கர்ப்பத்துலே இருக்கேன்.

சுப்பம்மா, அவளோட அப்புறம் சாவகாசமாப் பேசிக்கலாம். எங்களை வெளியே விடு. மகாயந்திரத்துலே எங்க சிநேகிதிகள் எல்லாம் நிறையப்பேர் இருக்கா. இந்தக் கட்டேலே போற அய்யங்கான் எங்களை மட்டும் இங்கே அடைச்சுத் தொலச்சிருக்கானே. அவன் நாசமாப் போக. எடுத்து விடுடி கிழடி. நாங்களும் எங்க ஜனத்தோடேயே போய்க்கறோம்.

நார்ப்பெட்டியிலிருந்து தேவதைகள் சத்தம் போட்டுச் சுப்பம்மாளைக் கூப்பிட்டார்கள்.

அவாளை எடுத்து அனுப்பிட்டு வா சுப்பம்மா. சாவகாசமாப் பேசணும். கர்ப்பத்துலே மூச்சு முட்டறது. சிநேகாம்பா கர்ப்ப ஸ்திரீன்னு கூடப் பாக்காம இந்தப் பொசை கெட்ட கிட்டாவய்யன் சமயம் கிடச்சபோதெல்லாம் கிரீடை பண்ண வந்துடறான்.

சுப்பம்மாளுக்கு ஒரே கிறக்கமாக இருந்தது. நார்ப்பெட்டியில் இருந்த யந்திரத்தை எடுத்து குத்துவிளக்கில் சாய்த்து வைத்தாள். திரும்ப விளக்கை ஏற்றினாள். இப்போது காற்று மட்டுப்பட்டு அது நிதானமாக எரிந்தது.

தேவதைகள் ஏகக் கோலாகலமாகக் கிளம்ப, சுப்பம்மா, அவாளுக்குக் கொடுக்க மஞ்சள், குங்குமம் கொண்டு வந்தியேடி, கொடுத்து அனுப்பி வை என்றாள் துர்மரணப் பெண்டு.

சுப்பம்மாள் நார்ப்பெட்டியில் இருந்து எடுத்த குங்குமத்தையும் மஞ்சளையும் அவள் முகத்திலேயே தீற்றி விட்டு, வாழைப்பழத்தைக் கூழாகப் பிசைந்து அவள் தலைமுடியில் தேய்த்து விட்டுத் தேவதைகள் சிரித்துக்கொண்டு மகாயந்திரத்தில் ஏறிக்கொள்ள ஓடினார்கள்.

சுப்பம்மா இதுவும் நன்னாத்தான் இருக்கு பார்க்க.

சாமாவோடு கிடந்தவள் சொல்லி முடிக்குமுன்னால் திரும்பக் குழந்தைச் சத்தம்.

தலையில் அப்பிய பழக்கூழைப் புடவை முந்தானையில் துடைத்துக்கொண்ட சுப்பம்மாள் யந்திரத்தில் இருந்த தேவதைகளையும், அங்கே ஏற்கனவே இருந்த தேவதைகளையும் சேர்த்துக் கும்பிட்டாள்.

எல்லாரையும் நன்னா இருக்கப் பண்ணுங்கோடியம்மா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:33 pm

நீ ஏன் கவலைப்படறே சுப்பம்மா ? எல்லோரும் நன்னாத்தான் இருப்பா. நீயும் நானும் எப்படி இருந்தாலும்.

திரும்ப அந்தப் பெண்தான்.

அவள் குரல் இப்போது சுப்பம்மாளுக்கு எந்தப் பயத்தையும் உண்டுபண்ணவில்லை. அவள் உபத்திரவம் கொடுக்க வரவில்லை. சும்மா வார்த்தை சொல்லிப்போக வந்திருக்கிறாள். அதுவும் யாரோ சிநேகாம்பாள் கர்ப்பத்திலிருந்து. அது யார் கிட்டாவய்யன் ? கேட்ட பெயர் மாதிரி இருக்கே ?

அதாண்டி, சங்கரன் பாணிக்ரஹணம் பண்ணிக்கப்போற பகவதிக்குட்டியோட தமையன்.

கொஞ்சம் போல் பல்வரிசை நீண்ட, கீசுகீசென்று பேசும் சிநேகாம்பாளையும், அவள் பர்த்தா கிட்டாவய்யனையும் சுப்பம்மாளுக்கு நினைவு வந்தது.

ஆக, துர்மரணப் பெண்டு அலைந்து திரிந்ததெல்லாம் முடிந்து இருக்கிறது. சோழியன் அண்ணாசாமி அய்யங்கார் உத்தேசித்தோ அல்லாமலோ நடந்துபோனதெல்லாம் நல்லதுக்குத்தான்.

இன்னும் கொஞ்ச நாள். அப்புறம் இதெல்லாம் விட்டுப் போயிடும். ஆம்பளைக் குழந்தையாப் பொறக்கப் போறேன். கையிலேயும் கால்லேயும் ஒவ்வொரு விரல் அதிகம். அதுவும்தான் வித்யாசம். ஆலப்பாட்டுக் கிழவன் வெடிவழிபாட்டுக்காரன் மேலே சாடி விழாம இருந்தா எனக்கும் அதிகமா விரல் இருந்திருக்காது. என்ன பண்ண ? நானா எல்லாத்தையும் தீர்மானிக்கறேன் ? இல்லே நீயா ?

சுப்பம்மாளுக்கு இதெல்லாம் புரியாத சமாச்சாரம். யாரோ எங்கேயோ எத்தனை விரலோடோ, கையோடோ, காலோடோ பிறந்துவிட்டுப் போகட்டும். அவள் திரும்பப் போய்த் தூங்க வேண்டும். அயர்ச்சியும் தளர்ச்சியுமாக அடித்துப் போடுகிறதுபோல் உறக்கம் வருகிறது.

வேதத்துலே ஏறிடுவோம் எல்லோருமா எங்காத்துலே. அது அடுத்த விசேஷம்.

அந்தப் பெண் சொன்னபோது என்ன விசேஷம் அதில் என்று ஏதும் தெரியாமல் சும்மாக் கேட்டுவைத்துக் கொண்டாள் சுப்பம்மாள்.

சுப்பம்மா, உங்காத்துக்காரன்கூட வரப்போறான் தெரியுமோ ?

அதுக்கென்ன ?

சுப்பம்மா சுவாரசியமில்லாமல் கேட்டாள். அவன் வந்தாலும் வராவிட்டாலும் இனிமேற்கொண்டு ஏதும் ஆகப்போவதில்லை அவளுக்கு.

எல்லாரும் சன்னியாசம் வாங்கிண்டு ஹிமாலயம் போனா, இந்தப் பிரம்மஹத்தி குண்டூர்ப்பக்கம் மிளகாய்த் தோட்டத்துக்கு நேர்க்கக் குதம் எரிய ஓலைக்குடிசை போட்டு கொஞ்ச நாள் நியம நிஷ்டை, அப்புறம் தெலுங்கச்சியோட குடித்தனம், கும்மாளம்னு இருந்து திரும்ப சந்நியாசியாகி இங்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணிண்டு இருக்கான்.

செருப்பாலே அடி படவா. இனிமே இங்கே என்ன இருக்குன்னு வரானாம் ?

சுப்பம்மாள் இரைந்தாள்.

அவன் வந்து இங்கே உசிரை விட்டா நீ நித்ய சுமங்கலியா இல்லாமப் போயிடுவேடா சுப்பம்மா. அதான் மூத்தகுடிப் பெண்டுகள் எல்லாம் பம்மிப் பம்மி உங்கிட்டேச் சொல்லினது. அப்புறம் அவா யார்மேலே ஏறிக் கூத்தடிக்கறது ? புகையிலைக்கடை அய்யன் எல்லாம் அவாளுக்கு எத்தனை நாள் சரிப்பட்டு வரும் சொல்லு ? ஏற்கனவே அவனுக்குப் பொண்ணு குரல்லே பேசியும் பாடியும் தொண்டை கட்டிப் போச்சு.

யாரும் எக்கேடும் கெட்டுப் போகட்டும். நீ கர்ப்பத்திலே குழந்தையா லட்சணமாப் படு. எதெது எப்போ நடக்கணுமோ அதது அப்பப்போ நடக்கட்டும்.

சுப்பம்மாள் காலி நார்க்கூடையோடு எழுந்தாள். அவளுக்கு யார்மேல் என்றில்லாமல் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.

இந்த மூத்தகுடிப் பெண்டுகள் லேசுப்பட்டவா இல்லேடி கொழந்தே சுப்பம்மா. அந்தத் தெலுங்கச்சியைக் கிளப்பிவிட்டு அவனை அங்கேயே இழுத்துப் பிடிச்சு வச்சுக்கப் பாக்கிறா எல்லாரும். அப்படியே அவன் போனா, உனக்கு விஷயம் வந்து சேராம எப்பவும் நித்ய சுமங்கலியாவே இருக்கலாம் பாரு.

எதுக்கு இவாளுக்காகத் தூரத்துணியை இடுக்கிக்கவா ? இல்லே மாரைக் குலுக்கி பிருஷ்டத்தை ஆட்டி நடந்து இவா சிரிச்சுச் சீலம் கொழிக்கவா ?

சுப்பம்மா நடக்க ஆரம்பித்தபோது, மகா யந்திரத்தில் தேவதைகள் காது கூச வார்த்தை சொல்லிச் சண்டை பிடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

அந்த யந்திரம் தடாலென்று ஒருபக்கம் சரிந்து விழுந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:35 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்தேழு



ப்ிஷாரடி வைத்தியரும், சின்ன எம்ப்ராந்திரியும் சிநேகிதர்களும் அடைத்து வைத்த கதவுக்கு அப்புறம் வியர்த்து விறுவிறுத்து உட்கார்ந்திருக்க, தெருவில் சங்கரனின் ஜானுவாச ஊர்கோலம் கோலாகலமாக வந்து கொண்டிருக்கிறது.

இது விரமிச்சாத்தான் நமக்குத் தொடங்கலாம்.

படார் படார் என்று வானத்தில் சீறிப்பாயும் வாணங்கள் சில வினாடி அறைக்குள் பிரகாசத்தை விசிறியடித்துச் செல்ல, எம்பிராந்திரி சலித்துக் கொள்கிறான்.

வெடிவழிபாட்டுக்காரன் விந்தி விந்தி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தின் முன்னால் வெடிக்குழாயும் கையுமாக நடந்து போகிறான். துண்டித்துப் போன கால் விரலையும், அது கூடவே வளர்ந்த இன்னும் நாலு விரல்களையும் வைத்துப் போஷித்த சம்புடம் கோயில் துவஜஸ்தம்பம் தாண்டிய புதர்க்குழிக்குள்ளிருந்து காணாமல் போய்விட்ட விசனம் அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்க பிஷாரடி வைத்தியர் வீட்டு அடைத்த கதவைப் பார்த்தபடிக் கடந்து போகிறான் அவன்.

நாதசுவரக்காரன் ஆலாபனையாக ஏதோ சுவரத்தை எடுத்து வீட்டு வாசலில் நின்று விஸ்தாரமாக ஊத, இது வேறே இன்னொரு சல்யம் என்கிறமாதிரி பிஷாரடி சிரிக்கிறார்.

மாப்பிள்ளை அழைப்போட போய்ச் சாப்பிட்டு வந்து சாவகாசமா வச்சுக்கலாமே.

எம்பிராந்திரியின் சிநேகிதன் ஒருத்தன் சொல்ல, எம்பிராந்திரி எரிந்து விழுகிறான்.

சதா போஜனம் தான் நினைப்பெல்லாம் நமக்கு. ஒரு சாஸ்திரத்தை யுக்திபூர்வமா பரீட்சிச்சுப் பார்க்க நமக்கு சந்தர்ப்பம் கிட்டியிருக்கு. பிரயோஜனப்படுத்திக்க வேணாமா அதை ?

எடோ, பப்படமும் பிரதமனும் சோறும் கறியுமாச் சாப்பிட்டு வந்து சாஸ்திரப் பரிசீலனை செய்யக்கூடாதுன்னு யார் சொன்னது ?

சிநேகிதன் சிரிக்கிறான்.

எம்பிராந்திரிக்கும் விருந்துச் சாப்பாடுக்கு எழுந்து போக ஆசைதான். ஆனாலும், அவன் அப்படி எழுந்து போகும் பட்சத்தில் இந்தக் காரியம் இன்னும் தள்ளிப் போகுமே என்ற விசாரம் கட்டிப் போடுகிறது.

எல்லாம் அரசூர் ஜோசியர் வரவோடு ஆரம்பித்தது.

கல்யாண கோஷ்டியில் ஒருத்தராக வந்து இறங்கிய அவர் வெகுவான துன்பத்தோடு கூடி இருந்தார். அரசூர் அரண்மனையில் அவர் நிறுத்திய மகாயந்திரம் ஒருக்களித்துச் சாய்ந்ததில் ஏற்பட்டது அது.

மலையாள பூமிக்குள் அவர்கள் வந்த வாகனங்கள் நுழையும்போது அதிகாலை உறக்கத்திலிருந்து அவரை எழுப்பி உட்கார்த்தி வைத்து தேவதைகள் புகார் செய்ததில் தொடங்கிய கஷ்டம்.

ஏண்டா சோழியா, நீ பாட்டுக்கு பின்னம்புறத்து மண்ணைத் தட்டிண்டு விட்டுட்டே சவாரி. அங்கே எங்களை உக்கார வச்ச ஸ்தலம் என்னமாப் போயிருக்கு வந்து பாரு. போதாக்குறைக்கு ஏழெட்டு பிடாரிகள் அந்தச் சுப்பம்மாக்கிழவி கிட்டே நீ பணம் பிடுங்கிண்டு கொடுத்த தகட்டுலே இருந்து ஏறிண்டு அழிச்சாட்டியம் பண்றா. ஒரு நியாயம் வேணாம் ?

அவர்கள் ஏக காலத்தில் இரைய ஜோசியர் அரண்டு போய் அரையை நனைத்துக் கொள்ளாத குறையாகத் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்.

மேளதாளத்தோடு குப்புசாமி அய்யனும் தம்பிமார்களும் அரசூர் வரனையும் குடும்பத்தையும் வெற்றிலை பாக்கும், பருப்புத் தேங்காயும் பழமுமாய் எதிர்கொண்டு வரவேற்றுக் கொண்டிருக்க ஜோசியர் அய்யங்கார் பலர் கண்ணில் படுகிற கூச்சமே அற்றுப்போய் மரத்து நிழலில் மூத்திரம் போய்க் கொண்டிருந்தார்.

ஓய் ஓய் பிராமணரே, இங்கெல்லாம் அசுத்தம் பண்ணக்கூடாது. சுகாதாரத்துக்குக் கேடு வர்த்திக்கும் இப்படி எல்லாம் பண்ணினால்.

சின்ன எம்பிராந்திரி அவரைப் பார்த்து இரைந்தது மேளச் சத்தத்தில் அமுங்கித்தான் போய்விட்டது. அவனை நிமிர்ந்து பார்த்த ஜோசியர் கண்ணில் ஆழப் பாய்ந்திருந்த பயம் எம்பிராந்திரியை யோசிக்க வைத்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:36 pm

ஆலப்பாட்டுக் கிழவனுக்கு தேக உபாதையால் உடம்பு லேசாகிப் பறந்து கோயில் கொடிமரத்தை நனைத்தமாதிரி இந்தப் பிராமணனுக்கு ஏதோ மனக் கிலேசம். இல்லாவிட்டால் இப்படிப் போதம் கெட்டுப் பொது இடத்தில் குத்த வைக்க மாட்டான்.

இவன் குப்புசாமி அய்யன் குடும்பத்தவர்கள் கண்ணில் பட்டால் மந்திரம், பரிகாரம் என்று இழுத்துக்கொண்டு போய் இவனும் நாளைக்குப் பறக்க ஆரம்பித்து விடலாம். மூட ஜனங்கள். இவர்களைப் புத்தி தீட்சண்யத்துக்கும் மெய்யான விக்ஞானத்துக்கும் கைபிடித்து அழைத்துப் போகாவிட்டால் இங்கே இன்னும் நாசம்தான் ஏற்படும்.

அவன் ஜோசியரைக் கையைப் பிடித்துக் கூட்டிப் போனது பிஷாரடி வைத்தியர் வீட்டுக்கு.

பாஷையும் அரைகுறையாகப் புரிய, சொல்வதும் கோர்வையாக வராமல் அய்யங்கார் ஏதோ பரபரவென்று பேசியபடி இருந்தார். பிஷாரடி வைத்தியர் அவர் நாடியைப் பிடித்துப்பார்க்க, சுவாசமும் மற்றதுமெல்லாம் சாதாரண கதியிலே தான் இருந்தது.

இவர் ஏதோ மனக் குழப்பத்தில் இருக்கிறார். கொஞ்சம் தூங்கினால் சரியாகி விடும் என்று சொல்லி வைத்தியர் அபின் கலந்த திரவத்தைக் கண்ணாடிக் குடுவையில் கலக்கினார்.

சின்ன எம்பிராந்திரி அதை ஆசை ஆசையாகப் பார்த்தான். அந்தக் கண்ணாடிக் குடுவைக்குள் இருந்து விக்ஞானம் அவனை அழைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு உலகம் முழுக்க நேர்படப்போவது இந்த அறிவால்தான். பிஷாரடி வைத்தியர் போல் மருத்துவம் படிக்க அவன் சீக்கிரம் கொல்லத்துக்குப் போகப் போகிறான். தகப்பனார் எம்பிராந்திரி சம்மதித்தாலும் இல்லாவிட்டாலும்.

ஜோசியர் அய்யங்கார் பிஷாரடி வைத்தியர் கிரஹத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, குப்புசாமி அய்யன் மனையில் பந்தக்கால் நாட்டி, மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் கிரகத்தில் காலை போஜனத்துக்கான ஏற்பாடுகளைச் சித்தமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

துரைசாமி அய்யன் ஒரு பெரிய பாத்திரத்தோடு வந்து சேர்ந்தான்.

இது காப்பியாக்கும். இங்கெல்லாம் புதுசாப் பழக்கமாயிண்டு வரது. அதிகாலையிலே சாப்பிட்டா புத்தி தீட்சண்யமாகுமாம். உடம்பு வலுவேறுமாம். ஏதேதோ சொல்றா. பெரியவா இஷ்டப்பட்டா பானம் பண்ணலாம்.

சங்கரனுக்கு அப்பாடா என்று இருந்தது. வைத்தியும் கோமதி மன்னியும் அவனோடு சந்தோஷமாக ஆளுக்கு ஒரு குவளை வாங்கி அதை ருஜித்துச் சாப்பிட, பெரியவர்களும் என்னதான் இருக்கு இந்த அமிர்தத்துலே, குடித்துத்தான் பார்ப்போமே என்று குவளைக்காகக் கையை நீட்டினார்கள்.

சுந்தர கனபாடிகள் மாத்திரம் குளிக்காமல் பல்லில் பச்சைத் தண்ணீர் படாது என்று கண்டிப்பாகச் சொல்லிக் குளிக்கக் கிளம்பினார். அவருக்கும் குளித்து விட்டு வந்து இதைக் குடித்துப் பார்க்க ஆசைதான். ஆனால் அதுவரை பாத்திரத்தில் பானம் இருக்க வேண்டுமே ?

ஜோசியர் எங்கே திடும்னு காணாமப் போய்ட்டார் ? அவரையும் கூட்டிண்டு ஸ்நானத்துக்குக் கிளம்பலாம்னு பார்த்தேன்.

அவர் சொன்னதும்தான் அண்ணாசாமி அய்யங்காரைக் காணோம் என்று எல்லோருக்கும் உறைத்தது.

அவர் வழியிலேயே நல்ல தூக்கத்தில் வண்டியிலிருந்து கீழே எங்கேயாவது தவறி விழுந்து விட்டாரோ என்று சுகஜீவனம் கரம்பக்காடு கிருஷ்ணய்யர் சந்தேகத்தைக் கிளப்ப, அச்சானியமாப் பேசாதேடா கிருஷ்ணா என்றார் சுப்பிரமணிய அய்யர். ஏற்கனவே ஏகப்பட்ட கஷ்டம். விபத்து. நஷ்டம். அதுக்கும் மீறி நல்ல காரியம் எல்லாம் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

அதற்குள் சின்ன எம்பிராந்திரி வந்து ஜோசியர் உடம்பு சுகவீனமாகி வைத்தியர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக அறிவித்து ஒருவாய் காப்பி குடித்துப் போனான். இந்தப் பானம் மெய்யான அறிவு வளர்ச்சிக்கு உபயோகமானது என்று வைத்தியர் கருத்துச் சொல்வதாகவும் யாரும் கேட்காமலேயே தகவல் சொல்லிப் போனான் அவன்.

ஜோசியர் அப்போதிலிருந்து வைத்தியர் வீட்டில் தான் கம்பளியைப் போர்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவர் சொன்னதை எல்லாம் ஒருவாறு கிரகித்துக் கொண்டு பிஷாரடி வைத்தியர் தன் சிஷ்ய வர்க்கத்தைக் கூட்டி அறிவித்தது இப்படி இருந்தது -

இந்த மனுஷ்யன் அவனூரிலே ஏதோ செப்புத் தகட்டை முளையடித்துப் பொருத்தி ஒரு உத்யானவனத்திலே நிறுத்தியிருக்கிறானாம். க்ஷேத்ர கணிதத்தில் விற்பன்னனான இவன் அந்தத் திறமையை உலகம் விக்ஞான பூர்வமாக முன்னேறப் பிரயோஜனப்படுத்தாமல் தேவதையைப் பிடிப்பது, அதைத் தகட்டில் ஏற்றி நிறுத்துவது என்ற மூட நம்பிக்கைகளில் பிரயோகித்திருக்கிறான். இப்போது அந்தத் தகடு என்ன காரணத்தாலோ சரிந்து போனதாக அவனுக்குத் தெரிந்திருக்கிறது. யாரோ ஒருத்தரோ இல்லை ஒரு சிறிய கூட்டமோ யோசித்ததில் உண்டான கதிர்கள் இவனை அடைந்து இது விஷயம் தெரிய வந்தது யுக்தி பூர்வமான நிகழ்ச்சிதான். அந்தத் தகடு திரும்ப இவன் வைத்தபடிக்கே நிமிரும்வரை இவன் ஆரோக்யக் குறைவோடும் மனசில் பீதியும் அதன் மூலம் கூடுதல் அசெளகரியமுமாகவே இருப்பான்.

ஆனாலும் தேவதைகள் உண்டு. அவர்கள் தான் என்னிடம் வந்து முறையிட்டார்கள்.

ஜோசியன் பலமாக ஆட்சேபித்தபோது சின்ன எம்பிராந்திரி அவனுக்குத் தகுந்த தர்க்கபூர்வமான பதில் கொடுக்க வாதங்களை அடுக்க ஆரம்பிக்க, ஜோசியனுக்குப் பின்னால் இருந்து பிஷாரடி வைத்தியர் சைகை காட்டினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 3:37 pm

அவன் புத்தி பேதலித்து இருப்பதாகவும் அவன் பேசுவதை லட்சியம் செய்யவேண்டாம் என்றும் அவனைப் பேச விடும்படியுமாகவும் அது இருந்தது.

நீங்கள் யாதொண்ணுக்கும் கவலைப்பட வேணாம். எல்லாம் தானே சரியாகப் போகும். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.

பிஷாரடி வைத்தியன் இன்னொரு குடுவை திரவத்தைக் கலக்க, எம்பிராந்திரி பிரியத்தோடு அதைச் சிறிய சோதனைச்சாலை விளக்கின் மேல் தூக்கினாற்போல் இடுக்கி கொண்டு பிடித்துச் சூடு படுத்தினான். அவன் முகத்தில் பெருமையும் திருப்தியும் நிரம்பி வழிந்த தருணம் அது.

கல்யாண வீட்டில் நிச்சயதார்த்தப் பத்திரிகை படித்துக் கொண்டிருப்பதாக, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த எம்பிராந்திரியின் சிநேகிதன் ஒருத்தன் சொன்னான். நல்ல இட்டலியும், இஞ்சியும், கொத்தமல்லியும் சேர்த்து விழுதாகச் சேர்ந்தரைத்த சம்மந்தியும் காலை விருந்துக்காகத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சொல்லவும்தான் அவன் வந்தது.

அபின் கலந்த மருந்தை இன்னொரு குப்பி மாந்தி அய்யங்கார் திரும்ப உறக்கத்தில் வீழ, யுக்திவாதிகளின் குழு கல்யாண வீட்டுக்குப் போனது அடுத்து. விக்ஞான சிந்தனைகளுக்கும் இட்டிலி மற்றும் கொத்தமல்லிச் சம்மந்திக்கும் எந்தவிதமான தர்க்கபூர்வமான மோதலும் இல்லை என்று சொல்லி பிஷாரடி வைத்தியர் காலைச் சாப்பாட்டுக்கு நடந்தபோது மற்றவர்களுக்கும் அது சரியென்று பட்டது.

போகும் வழியிலேயே யோசித்து வைத்தபடி, ஜோசியர் திரும்ப எழுந்தபோது ஆகாரம் கொடுக்கவும், அப்புறம் அவரை அரசூரிலே யாரையாவது தன் நினைப்பு மூலம் செயல்பட வைத்து யந்திரப் பக்கம் கூட்டி வரச் செய்து அதைத் திரும்ப நிறுத்தி வைப்பது என்றும் முடிவானது.

இந்த யோசனை கொடுத்த தெம்பில் அந்தக் குழு உற்சாகமாகக் கல்யாண வீட்டாரோடு கலந்து பழகியதோடு சங்கரனுக்கும் ஊருக்கு வந்த மாப்பிள்ளைக்கான வரவேற்பு உபசாரப் பத்திரத்தைக் கல்யாணப் பந்தலில் வாசித்து அளிக்க வேண்டும் என்று தீர்மானமும் செய்து கொண்டு திரும்பி வந்தது.

ஆனால் அய்யங்கார் எழும்பி உட்கார்ந்தபோது விஷயம் அத்தனை சுலபமாக இல்லை.

இலைப்பொதியில் கல்யாண வீட்டில் இருந்து கட்டி எடுத்து வந்த இட்லி பதினாலையும் அவர் ஒரே மூச்சில் சாப்பிட்டு முடித்து வயிற்றைத் தடவிக் கொண்டு மலங்க மலங்க விழிக்க, பிஷாரடி நினைப்புக் கதிர்கள் தத்துவத்தை அவருக்கு விளக்க ஆரம்பித்தார்.

க்ஷேத்ர கணிதமாக இதைச் சொன்னால் புரிந்து கொள்ள எளுப்பமாக இருக்கும் என்றார் அய்யங்கார். அது முடியாத பட்சத்தில் தான் ஸ்நானம் செய்து வந்து மடியாக உட்கார்ந்து தியானம் செய்தபின்னால் காதில் ஓதினால் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

அவர் அந்தப்படிக்கே குளித்து மடி வஸ்திரத்தோடு வர, யுக்திவாதிகள் குழு மறுபடியும் வைத்தியர் வீட்டில் கூடியது. நாலு வேளையும் ஊர்க் கல்யாணத்தில் சாப்பிட்டுக் கொண்டு இப்படி விக்ஞான ஆராய்ச்சி நடத்தத் துணைபோய் உலகம் செழிக்க முன்கை எடுப்பதில் அவர்கள் எல்லோருக்கும் பரம திருப்தி.

ஜோசியர் குளித்து வந்த சுறுசுறுப்பில் பிஷாரடி வைத்தியர் சொன்னதில் சரிபாதிக்குப் புரிந்தது என்று திருப்தியாகத் தலையசைத்தார்.

இந்த மனுஷர் இப்போது பருமனான, பெரிய மீசை வைத்த ஒரு நடு வயசுக்காரனை நினைக்கிறார்.

பிஷாரடி வைத்தியர் உற்சாகமாகச் சொன்னார். ஜோசியரின் மூச்சுக் காற்று படும் நெருக்கத்தில், விக்ஞானத் தேடல் மேன்மையுற அதைச் சகித்தபடி அவர் அமர்ந்திருந்ததால், ஜோசியரின் நினைப்புக் கதிர்களை அவரால் முழுக்க உள்வாங்கி அதை அதி வீர்யத்தோடு கடத்தி விட முடிகிறது என்றார் அவர்.

காலைக் கடன் கழிக்க வல்லாரை லேகியம் சாப்பிட்டுக் கொல்லைக்குப் போன ராஜா தன்னையறியாமலேயே நாலடி பின்னால் எடுத்து வைத்தார் அப்போது.

ஏனடா களவாணி, நான் அற்பசங்கைக்குப் போகும்போது என்ன எழவிற்குத் தடுத்து நிறுத்திக் கூப்பிடறே ? உன் அக்காளைக் காட்டெருமையும் அப்புறம் கழுதையும் கலக்கட்டும் என்று சமையற்காரனை வைதார் அவர். அவன் கூப்பிட்டுத்தான் பின்னால் திரும்பி வந்ததாக நினைத்த அவர் திரும்ப நடக்க, சமையற்காரன் நெத்திலிக் கருவாடை இன்னும் தீய்த்து அதில் எச்சில் உமிழ்ந்தான். ராஜாவுக்குக் காலை ஆகாரத்தோடு கொடுக்க அவன் சமைத்துக் கொண்டிருந்தது அது.

அந்த வர்த்தமானங்களை வைத்தியர் ஆதியோடந்தமாக யுக்திவாதக் குழுவுக்கு அறிவிக்க, அங்கே பலத்த சிரிப்பு நிலவியது. அப்புறம் ஒரு பிராமணக் கிழவி, புகையிலைக் கடைக்கு மூக்குத் தூள் வாங்க வந்தவன், எருமை மாட்டைக் கறக்க உட்கார்ந்த ஸ்திரி, கடைத் தெருவில் மாட்டைக் கிடத்தி லாடமடிக்கிறவன், மயிலிறகு எண்ணெய் விற்கிறவன் என்று ஜோசியர் யார் யாரையோ பகல் முழுதும், இப்போது ராத்திரியிலும் நினைத்து அவர்களை நாலடி நடக்க வைப்பதற்குள் அவருடைய கவனம் கலைந்து போகிறது.

ஜானுவாச ஊர்வலம் பிஷாரடி வைத்தியர் வீட்டைக் கடந்து போனபோது அவர் திரும்பவும் அந்தப் பிராமணக் கிழவியை முழுக் கவனத்தோடு நினைக்க, அவள் வீட்டு வாசலுக்கு வந்து நின்றாள். அரண்மனைப் பக்கம் நடக்க ஆரம்பித்தபோது வாணவேடிக்கைக் காரன் வேட்டுப் போட, அவள் மூத்தகுடிப் பெண்டுகளே, இப்படி என்னை வாசலுக்கும் உள்ளுக்கும் அலைக்கழிக்கிறது நியாயம்தானா என்று குறைச்சல் பட்டபடி வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனாள்.

கல்யாண வீட்டில் சதுர்க்கச்சேரி நடக்க ஆரம்பித்த சத்தம். சுநாதமாக எழுந்த அந்தச் சலங்கைச் சத்தமும், மிருதங்கச் சத்தமும் யுக்திவாதிக் குழுவை வாவா என்று பிடித்து இழுத்தது.

யுக்தி வாதம் இருக்கட்டும். எங்கேயும் ஓடிவிடாது. நிரம்பின ஸ்தனபாரமும், உருண்ட தோளுமாகப் பெண்கள் நிருத்தமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் தூங்கறேன். நீங்க சாப்பிட்டு வாங்கோ என்றார் ஜோசியர் இன்னொரு குப்பி திரவத்தை பிஷாரடி வைத்தியரிடம் யாசித்தபடி.

அவருக்கு அபின் வாசனை பிடித்துப் போயிருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:38 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் நாற்பத்தெட்டு



இன்னுமா கிட்டன் வரலே ? எங்கே போனான் இன்னிக்குன்னு பாத்து ? கொஞ்சம் கூட.

குப்புசாமி அய்யன் விசாலாட்சியிடம் இரைய ஆரம்பித்தது வைத்தியநாதன் பெண்டாட்டி கோமதி அழுகிற பிள்ளையைக் கையைப் பிடித்துக் கொண்டு உக்கிராணத்தில் வடை பண்ணியாகிவிட்டதா என்று பார்க்க வந்தபோது நடுவார்த்தையில் நின்றது.

விருந்து சமைத்துக் கொண்டிருந்தவர்கள் இலை நறுக்கில் வைத்துக் கொடுத்த நாலு ஆமவடையோடு அவள் திரும்பும்போது விசாலாட்சி போதுமோ பொண்ணே இன்னும் நாலு எடுத்துக்கறதுதானே. குழந்தை பாவம் பசி பொறுக்க மாட்டாமக் கரையறது போலிருக்கு என்றாள்.

காலம்பற ஆகாரம் சாப்பிடமாட்டேன்னு விளையாடிண்டே இருந்துட்டான் அக்கா. இங்கே தோப்பும் துரவுமா இருக்கோ இல்லியோ ? பட்டணத்துலே இதெல்லாம் எங்கே கிடைக்கறது எங்களுக்கு ? சமுத்திரக் காத்தும் சம்பளமும் இல்லாட்ட மனுஷா இருப்பாளோ அங்கே ?

கோமதி குழந்தைக்கு வடையை விண்டு, சூடாற ஊதி ஊதிக் கொடுத்தபடி சொன்னாள்.

காசியாத்திரை அவசரமாக முடித்துத் திரும்பி வந்திருந்த சங்கரன் மண்டபத்தில் ஊஞ்சலாடி முடித்து, சுமங்கலிகள் சிவப்பும் மஞ்சளுமான சாத உருண்டைகளை வீசி எறிந்தது காலில் ஒட்டப் பந்தலுக்குள் போயிருந்தான். கோத்ரமும், நாலு தலைமுறை விவரமுமாக இரண்டு பக்கத்துக்கும் வம்சாவளி சொல்லிக் கல்யாணத்துக்கு சம்மதம் பெறும் பிரவரம் நடந்து கொண்டிருந்தது பந்தலில்.

குப்புசாமி அய்யனின் சிறிய தகப்பனாரும் பெண்டாட்டியும் பகவதியைத் தாரை வார்த்துச் சங்கரனுக்குத் தர ஆயத்தமாக உட்கார்ந்திருந்தார்கள்.

என்ன, பொண்ணாத்துக்காராளும் பிள்ளையாத்துக்காராளுமா எல்லோரும் இங்கே உக்ராணப் பக்கத்துலே மேற்பார்வை பாத்துண்டு நிக்கறேள் ? பந்தலுக்கு வந்தாத்தானே மத்ததெல்லாம் நடத்தி மங்களகரமா முடிக்க முடியும் ?

ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் பட்டு வேஷ்டியும், மேலே வழிய வழியச் சரிகை உத்தரியமும், நெற்றியில் பளிச்சென்று நாமமுமாக வெகு உற்சாகமாக வந்தவர் குப்புசாமி அய்யனையும் கோமதியையும் மாறி மாறிப் பார்த்துக் கேட்டார்.

அவருக்கு சுடக்கெடுத்து விட்டாற்போல் நேற்று ராத்திரியே உடம்பு நேராகி விட்டிருந்தது. சதிர்க் கச்சேரியின் போது ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க, அவர் தூக்கத்திலேயே எழுந்து உட்கார்ந்து கொட்டகுடித் தாசியை எழுப்பி அரண்மனைக்குச் செலுத்திக் கொண்டிருந்தபோது பிஷாரடி வைத்தியரும் மற்றவர்களும் தாசியாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள்.

அவர்கள் நடுராத்திரிக்குத் திரும்பி வந்தபோது சத்தம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்த ஜோசியர் யந்திரம் திரும்பச் சரியாக வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு மறுபடி நிம்மதியாக நித்திரை போய்விட்டார்.

தான் பக்கத்தில் இல்லாதபோது தனியாகவே ஜோசியர் அதை சாதித்ததில் பிஷாரடி வைத்தியருக்குக் கொஞ்சம் வருத்தம் என்றாலும், நினைப்பைச் செலுத்தி இன்னொருத்தரை இயங்க வைப்பது நடக்கக் கூடிய காரியம் என்று நிரூபணமானதில் மகிழ்ச்சி. அவரும் யுக்திவாதிகள் குழுவும் முழுத் திருப்தியோடு கல்யாணப் பந்தலில் காலையிலேயே வந்து சேர்ந்து எல்லோரோடும் வேடிக்கை விநோதம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மகாவிஷ்ணு போன்ற யுவனே, சுவர்ணப் பதுமை போன்ற என் புத்ரியை, இன்னும் விளையாட்டுத்தனம் போகாத இந்தச் சிறுமியை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவள் இனி உன் பத்னியாவாள். இவள் மூலம் சந்தானம் செழிக்க வம்சவிருத்தி செய்து தேவர்கள் விதித்த கடமைகளை தினமும் குறைவில்லாமல் நிறைவேற்றி செழித்து வாழ்வாயாக.

புரோகிதனின் குரல் ஓங்கி ஒலித்தது.

தாரை வார்க்கற நேரம். வாங்கோ.

அண்ணாசாமி அய்யங்கார் கோமதியின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பந்தலுக்கு ஓட, மாமா வேண்டாம். அவன் குண்டோதரன். கீழே போட்டுடப் போறேள் என்று கோமதியும் பின்னாலேயே ஓடினாள்.

வாங்கோ போகலாம். நம்மளையும் தேடுவா இங்கேயே இருந்தா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 11:40 pm

விசாலாட்சி கையைப் பிடித்து இழுத்துக் கூப்பிட குப்புசாமி அய்யன் குழப்பத்தோடு திரும்பவும் கிட்டன் ஏன் இன்னும் வரல்லே என்றபடி அவளோடு நடந்தான்.

சூர்ய பகவானின் ஆசிகளோடும் அனுமதியோடும், அசுவினி தேவர்கள் பாதுகாக்கும் என் கரங்களால் நீங்கள் வார்த்த நீரை வாங்கி அதோடு இந்தப் பெண்ணையும் என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்.

சங்கரன் மந்திரத்தைக் கூடவே சொன்னபோது, பகவதி அவன் முகத்தை ஒரு வினாடி ஏறிட்டுப் பார்த்துவிட்டுக் குனிந்து கொண்டாள்.

பொண்ணாத்துக்காரா அழணும் இப்போ சாஸ்திரப் பிரகாரம்.

ஆலப்பாட்டிலிருந்து வந்திருந்த நாகலட்சுமியின் தமையன் அகத்துக்காரி சொல்ல, சுந்தர கனபாடிகளின் பெண்டாட்டி குறுக்கிட்டாள்.

கல்யாண வீட்டுலே அழறதாவது. அந்த அச்சானியமான பழக்கமெல்லாம் எங்க பக்கத்துலே கிடையாது.

விசாலாட்சி மன்னி, ஓரகத்தி சிநேகாம்பாள் உட்கார்ந்திருந்த மூலையை நோக்கிப் போனாள். அவள் சுவரில் சாய்ந்து கண்கலங்கியபடி இருந்தது கண்ணில் பட்டது விசாலாட்சிக்கு.

ஏண்டி சிநேகா, எங்கே போனார் உங்களவர் ? ஏன் அழறே ?

ஒண்ணுமில்லே மன்னி. வந்துடுவார்.

சிநேகாம்பாள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். சிரிக்கவும் முயற்சி செய்தாள். அதையும் மீறி முகம் இருளோ என்று கிடந்தது.

கர்ப்பிணிப் பொண்ணு. எதுக்கும் கலங்காதே. சிசுவுக்கு ஆகாது.

விசாலாட்சி கரிசனமாகச் சொல்லியபடி அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுப் பந்தலில் முன்னால் இருக்க நடந்தாள்.

மாமிக்கு வேண்டாம்னா நாங்க எங்காத்து வழக்கப்படி அழறதை நிறுத்த முடியுமா என்ன ?

பகவதிக்கு நேர் மூத்த சகோதரி அலமேலு உரக்கச் சொல்ல, அண்ணா குப்புசாமி அய்யன் அவளை அடக்கினபோது விசாலாட்சி அவனோடு சேர்ந்து நின்றாள்.

அலமு, அவா வேண்டாம்னா அப்படியே இருந்துட்டுப் போகட்டுமே. நம்ம சம்பிரதாயத்தை நாளைக்கு உன் பொண்ணு கல்யாணத்துக்கு வச்சுக்கோயேண்டி.

ஆமா, அதுக்கு இன்னும் எத்தனை நாள் காத்துண்டு இருக்கணுமோ ?

அலமேலு இழுத்தபோது, அவளுக்கு மூத்தவள் லட்சுமி அவள் இடுப்பில் கிள்ளினாள்.

ஏண்டி, உங்காத்துக்காரர் என்ன உத்தேசிச்சிருக்காரோ அதப் பதுக்கத் தெரியப்படுத்து. நாள் நட்சத்திரம் சரியாக் கணக்குப் போட்டுச் சொல்றேன் எப்போன்னு.

பந்தலில் எழுந்த சிரிப்பு திரும்ப எல்லோரையும் சகஜமாக இருக்க வைக்க, அலமேலு வீட்டுக்காரன் சோமநாதன் மனையில் இருந்த பகவதிக்குட்டியை விட அதிகமாக வெட்கப்பட்டான்.

பிராமணோத்தமர்களே, இறப்பாலும், அசுத்தத்தாலும் மாசடையாத தண்ணீரை எனக்குக் கொடுங்கள். தெய்வங்கள் குடிக்கும் நீர். நடுவே அக்னி பொதிந்த நிர்மலமான அந்தத் தண்ணீரின் துளிகள் இந்தப் பெண் தலையில் விழுந்து இவளையும், இவளுக்கு நான் அளிக்கப் போகும் புத்திர பாக்கியங்களையும் பாதுகாக்கட்டும். எல்லா தேவதைகளின் ஆசியோடும் இவள் என் மனையில் அரசியாக வலம் வரட்டும். பசுக்களையும் குதிரைகளையும் பேணிக் காக்கட்டும். என் பெற்றோருக்கும் மற்றோருக்கும் அன்பும் ஆதரவுமாக இருந்து குடும்பத்தை நடத்திப் போகட்டும்.

சங்கரன் சொன்ன மந்திரங்களின் பொருள் சுந்தர கனபாடிகளின் காது வழியே மனதில் போய்த் தட்டிக் கொண்டிருந்தது. இதெல்லாம் உனக்கு அன்னியமானவை. பித்ருக்களைக் கடைத்தேற்றுவதைத் தவிர வேறு எதுவும் பொருட்டில்லை என்று அவர் குரு கூடவே சொல்லிக் கொண்டிருந்தார்.

கூறைப் புடவை உடுத்த பகவதி உள்ளே போனபோது விசாலாட்சி மன்னியும், கோமதியும், அலமேலுவும், பகவதியின் தோழி நாணிக்குட்டியும் உள்ளே ஓடினார்கள். கூடப் போகத் தோன்றினாலும் அசைவே இல்லாமல் சுவரில் சாய்ந்தவண்ணம் சிநேகாம்பாள் அதைப் பார்த்தபடிக்கு இருந்தாள்.

கிட்டாவய்யன் சாவக்காட்டாரை இன்று காலை அவசியமாகக் கண்டே தீர வேண்டும் என்று கிளம்பிப் போனபோது, கல்யாணம் முடிந்து போகலாமே என்றாள் அவள்.

போகாட்ட, பணம் கிடைக்காது. இன்னிக்கு நாள் திவ்யமா இருக்காம். பாதிரியும் வந்து மந்திரிச்சுக் கொடுப்பாராம். எல்லாம் நல்லபடிக்குப் பொங்கிப் பெருகி வருமாம். கொல்லத்துலே சீக்கிரமே சாப்பாட்டுக்கடை ஆரம்பிச்சுடலாம்.

Sponsored content

PostSponsored content



Page 15 of 17 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக