புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
366 Posts - 49%
heezulia
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
25 Posts - 3%
prajai
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பிறழ்வு....சிறுகதை. Poll_c10பிறழ்வு....சிறுகதை. Poll_m10பிறழ்வு....சிறுகதை. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறழ்வு....சிறுகதை.


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 22, 2010 7:22 pm

ஸ்ரீவத்ஸன் - ஸ்ரீலதா தம்பதிகள் அழகு அறிவு, செலவம், கல்வி
என்ற எல்லாம் நிறைந்து இருப்பவர். ஸ்ரீலதா ஸ்ரீவத்ஸனுக்குப் பொருத்தமா?
அவர்களின் பெயர் போலவே ஸ்ரீவத்ஸன் ஸ்ரீலதாவுக்குப் பொருத்தமா என்று சொல்ல முடியாதபடி பொருத்தம். மேட் ஃபார் ஈச் அதர் என்று ஊரே பேசிக்கொள்ளும். இருவரும் சி.ஏ. படிப்பிலும் பொருத்தம். வசதி என்று எடுத்துக்கொண்டால், கோவை மாநகராட்சியில் இருபத்தைந்து சதவீதம் இவர்களுக்குச் சொந்தமானது. பித்ராஜித சொத்து. ஸ்ரீவத்ஸனின் தந்தை முனிசிபல் கவுன்சிலராக இருந்து அமைச்சராக உயர்ந்தவர்.

தாய், தந்தை, மகன், மருமகள் என்று குடும்ப உறுப்பினர்கள்
நான்கு பேர். ஐந்தாவது உறுப்பினராக அக்குடும்பத்துடன் ஐக்கியமானது
ஜோசியம். எதற்கும் எப்போதும் எந்தச் செயலையும் ஜோசியரிடம் கேட்காமல்
செய்வதே இல்லை அக்குடும்பத்தினர். “ஒரு முறைக்கூடச் சாப்பிடக்கூடாது”
என்று ஜோசியர் சொன்னாலும் தலை ஆட்டுவர். ஒரு நாளைக்கு 108 முறை சாப்பிட வேண்டும் என்று சொன்னாலும் தலை மட்டும் அல்ல இல்லாத வாலையும் ஆட்டுவர் நன்றியுடன். அப்படிப்பட்ட பகுத்தறிவுக் குடும்பம்.

ஸ்ரீவத்ஸனுக்குத் திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப்
பின், அவன் த்ந்தையாகப் பதவி உயர்வு பெறும் நேரம் வந்துள்ளது.
ஸ்ரீலதாவுக்கு இரண்டு நாட்கள் தள்ளிப் போனது. அன்றிலிருந்து தொடங்கியது
ஜோசியர்களின் படையெடுப்பு. ஒவ்வொரு செக்கப் போகும் போதும் நாள்,
நட்சத்திரம் பார்த்தே போவாள். ஐந்தாம் மாதம் கட்டுச்சோறு, ஏழாம் மாதம்
பூச்சூடல், ஒன்பதாம் மாதம் வளைகாப்பு சீமந்தம் எல்லா வைபோகங்களும்
ஒன்றிற்கு ஒன்பது முறை ஒன்பது ஜோசியர்கள் நாள் பார்த்துக் கொடுத்து
நிறைவேறியது. ஒவ்வொரு மாதம் செக்கப்பும் தாய், சேய் ஆரோக்கியமாக வளர்வதாக உறுதி செய்யப்பட்டது.

டாக்டர் சாதாரணமானவர் அல்லர். இதுவரை ஆயிரம் பிரசவம் கண்ட
சுகப்பிரசவ டாக்டர்” என்றுப் பெயர் பெற்றவர். பிரம்மாவுக்கு அடுத்த படியா
கருவை இணைத்து செயற்கை கருத்தரித்தல், வாடகைக் கருப்பையில் உயிர்த்தோட்டம் போட்டு மழலை மலர் பறிக்கும் மருத்துவ வல்லுநர். அவர் ஸ்ரீலதாவை நன்கு பரிசோதித்து, நவம்பர் இருபது முதல் முப்பதுக்குள் சுகப்பிரசவம் நடக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

அடுத்த ஜோசியர் படலம் தொடங்கியது. இருபது முதல் முப்பது வரை
உள்ள எல்லா நாட்களும், நட்சத்திரங்களும் ஆராயப்பட்டன. வருகின்ற
ஜோசியர்களுக்கு சிற்றுண்டி, காபி, உணவு தயாரித்து அலுத்து போனாள் அந்த
வீட்டுச் சமையல்காரி காஞ்சனா. அவளும் பிரசவத்திற்கு இந்த வாரமோ அடுத்த
வாரமோ என்று எதரிபார்த்துக் கொண்டு இருப்பவள்தான். நிறை மாத கர்ப்பிணி.
இரண்டு முறை செக்கப் போனவள் தான். செக்கப் போக பணம அனுமதித்தாலும் இவர்கள் வீட்டின் வேலைப்பலு அனுமதிக்கவில்லை. ஒருபுறம் தன் உடல் அயர்வு, மறுபுறம் கடின உழைப்பு மேலும் கண்ணால் காண முடியாத நாள், கோள் போன்றவற்றை நம்பி இவ்வாறு உழல்கின்றார்களே இவர்கள் என்று எண்ணிய நாத்திகவாதி அவள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லி கடைசியில் உற்சாகமாக வருகிற
பரணி நட்சத்திரம் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சிறப்பு உடையது. அந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தை அகில உலத்தாராலும் தலைமேல் வைத்து எண்ணப்படுவான். பரணி தரணி ஆளும். அதிலும் வரும் பரணி சிறப்பு ஏழுலகையும் ஆளும். பரணி நட்சத்திரத்தன்று குழந்தை பிறந்தால் அவன் எதிர்காலத்தில் பிரதமராக வருவான் என்று அனைவரும் ஒரு மனதாகக் கூறினர்.

ஏற்கனவே பித்துப் பிடித்தவர்கள். அதில் க்ள்ளும் உண்டால் உண்டாகும் நிலைதான் அக்குடும்ப உறுப்பினர்களுக்கு. ஸ்ரீலதா ஏற்கனவே நார்மல் டெலிவரியைவிட சிசேரியன் வலியற்றது என்பதால் பிரசவம் சிசேரியனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டவள். இப்போது நட்சத்திர போதைவேறு. சிசேரியனுக்கு அவர்களை டாக்டரிடம் விண்ணப்பம் போட வைத்தது. இல்லை ஆர்டர் போட வைத்தது.

ஜோசியர் வகுத்துக் கொடுத்த நாளிலுல் அதே நட்சத்திரத்திலும் குழந்தை ரட்சகன் வெளிவந்தான். மகிழ்ச்சி, கோலாகலம் இல்லம் நிறைந்தது. தெரு தாண்டி, ஊரே கொண்டாடிக்கொண்டிருந்தது. ஒருத்தியைத் தவிர. அவள்தான் காஞ்சனா. அதே நாளில் குழந்தை பெற்று மகிழ்ந்த அவள் ஊர் அல்லோல கல்லோலப்
படுவதைத் தன் தாயின் மூலம் கேட்டறிந்தாள்.

அவளது பிரசவம் கொண்டாடக்கூடிய சிறப்புடையது அன்று. ஏற்கனவே
வெந்த புண்ணில் தேளும் கடித்தது போன்றது. ஏனெனில் அவள் பெற்றெடுத்தது
மூன்றாவது பெண். நெஞ்சு நிறைந்த சோகத்துடன் தன் குழந்தையை விரும்பிக்
கேட்ட ஒரு பணக்காரத் தம்பதிக்கு விற்றுவிட்டு, வெறும் கையுடன் பீடு வந்து
சேர்ந்தாள்.

மீண்டும் அதே வேலை, அதே சமையல், அதே ஜோசியர் கூட்டம். அதே
காபி, டிபன். அவர்கள் ரட்சகன் பிரதமர் ஆன பின்புதான் ஓய்வார்கள்..
அப்போதும் ஓய்வார்களா? அடுத்தடுத்து ஆசைகள் வரத்தானே
செய்யும்..என்று...சிந்தித்தபடி காஞ்சனா...

காலங்கள் உருண்டன. அவர்கள் எதிர்பார்த்தது போலவெ எல்லாம்
நடந்தது. அமைச்சரில் இருந்து ஆரம்பித்து இன்று பிரதமருக்குப் போட்டியிடத்
தயாராகிவிட்டான் ரட்சகன். எலெக்‌ஷன் நேரமும் நெருங்கியது.
வேட்பு மனு தாக்கல் செய்த நாள் வெற்றி தேவதையை மகிழ்வூட்டும் நாளாக நன்கு பலமுறை ஆராய்ந்து முடிவானது.

பிரதமர் போட்டியாளர் என்று ரட்சகனுக்குப் புது நாமகரணம்
சூட்டி நாடு முழுவதும் பறைசாற்றப்பட்டது. கட்சியின் மீதும் ரட்சகன் மீதும்
மக்களுக்கு ஏகபோகமாக நம்பிக்கை வந்து விட்டது. ஏனெனில் இதுவரை அவன்
எவற்றிலும் பின்னடைந்ததே இல்லை.

அந்தக் குடும்பத்தின் ஆஸ்தான ஜோசியர்கள் இன்று பார்புகழும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தனர். ரட்சகனின் பிரதமர் பதவி அவர்கள்
அனைவரையும் மேலும் எங்கோ சேர்த்து விடும்.

வேகமான பிரச்சாரம். தாத்தாவால் மட்டும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ”ன்னைப் பிரதமராகப் பார்த்துவிட்டால் நிம்மதியாகக் கண் மூடுவேன்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். ஜோசியர்களோ, “பிரதமராக இந்த முறை மட்டுமல்ல அடுத்த் முறை பதவி ஏற்பதையும் நீங்கள் காண்பீர்கள்” என்று நம்பிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

தேர்தல் வந்தது. நல்ல நேரம் பார்த்து ரட்சகனும் அவன் குடும்பத்தினரும் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையும் துவங்கியது. வெற்றி
அலை ரட்சகனை நோக்கியே வீசிக்கொண்டிருந்தது. மதியம் வரை.

மதியத்திற்கு மேல திடீர் சரிவு. எதிர்க்கட்சி முன்னிலை
அடைந்தது. வெற்றி பெற்றவர்களில் எழுபது சதவீதம் எதிர்க்கட்சியினர்.
தனிக்கட்சியாக ஆட்சி அமைக்கும் அபாரமான வெற்றிச்செல்வி என்று காமினியின இருகரம் கூப்பிய உருவம் காட்டப்பட்டது தொலைக்காட்சியில்.

கோபமாக இருந்த குடும்ப உறுப்பினர்களிடம் “இயற்கையை செயற்கையால் ஒரு நாளும் வெல்ல முடியாது. நாங்கள் குறிப்பிட்ட நாளில் பிறந்தால் பிரதமர் ஆகலாம் என்று கூறினோம். ஆனால் நீங்கள் அந்த நாளில் ரட்சகனைப் பிறக்க வைத்தீர்கள் “ என்று கோபமாக கத்திக்கொண்டிருந்த ரட்சகனின் குடும்ப உறுப்பினர்களிடம் சமாதானம் செய்து கொண்டிருந்தனர் ஆஸ்தான ஜோசியர்கள்.

திடீரென தெருவில் அனைவரது நடமாட்டமும் தடை செய்யப்பட்டது.
சமையல்காரி காஞ்சனாவின் வீட்டின் முன்பு ஏழெட்டு கார்கள் வந்து நின்றன.
முன்னும் பின்னும் அணிவகுத்த கருப்பூனைகளின் நடுவில் நடந்து வந்த காமினி
“அம்மா “ என்று காஞ்சனாவைக் கட்டி அணைத்துக் கொண்டாள். ஒன்று புரியாது
காஞ்சனா விழிக்க, காமினி, “ என் அம்மா இறந்து விட்டார்கள், இறக்கும் போது
நீங்கள்தான் என்னைப் பெற்றவர் என்ற உண்மையைக் கூறினார்கள் “ என்று கூறி
காஞ்சனாவின் தோளில் சாய்ந்து அழுதாள். காலில் விழுந்து எழுந்தாள்.
காஞ்சனாவின் கண்களில் இருந்து நழுவிய கண்ணீர்த்துளிகள் காமினியின் தோள்களை நனைத்தது.


ஜோசியம் பார்க்காமல் ஆனால் அதே நாளில் பிறந்த தன் மகள் பிரதமராகி விட்டாள், என்று எண்ணிய காஞ்சனாவின் நாத்திக மனமும் ஜோசியத்தை நம்பத் தொடங்கியது....



ஆதிரா..
[/justify]



பிறழ்வு....சிறுகதை. Aபிறழ்வு....சிறுகதை. Aபிறழ்வு....சிறுகதை. Tபிறழ்வு....சிறுகதை. Hபிறழ்வு....சிறுகதை. Iபிறழ்வு....சிறுகதை. Rபிறழ்வு....சிறுகதை. Aபிறழ்வு....சிறுகதை. Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக