புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_m10மக்கள் தொகை ஆதார வளமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் தொகை ஆதார வளமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 24, 2010 10:04 am

இந்தியா 2000-ம் ஆண்டு மே 11-ம் தேதியன்று 100 கோடி மக்கள் தொகையை எட்டியது. அதாவது உலக நிலப்பரப்பில் 2.4 சதவிகித பரப்பையுடைய இந்தியா 16 சதவிகித உலக மக்கள் தொகையைப் பெற்றது. இதே போக்கு நீடிக்குமானால் 2045-ல் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும். உலகிலேயே அதிக மக்கள் தொகையையுடைய நாடு என்ற பெருமையைப்(?!) பெற்று விடும்.

சென்ற நூற்றாண்டில் உலக மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்தது. 200 கோடியாக இருந்த மக்கள் தொகை 600 கோடியாக உயர்ந்தது. ஆனால், இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 5 மடங்கு கூடியுள்ளது. 23 கோடியிலிருந்து 100 கோடி. தற்போது, 1.58 கோடி மக்கள் தொகை, ஆண்டுதோறும் இந்தியாவின் எண்ணிக்கையில் சேர்ந்து கொண்டே உள்ளது.

உலகின் முதல் மக்கள் தொகை கொள்கை

உலகிலேயே மக்கள் தொகைக்கான தேசிய கொள்கையை அறிவித்த முதல் நாடு இந்தியாதான். 1952-ல் இக்கொள்கையை அறிவித்தது. இது பிறப்பு விகிதத்தை குறைத்து, மக்கள் தொகை பெருக்கத்தை தேசிய பொருளாதாரத்தின் தேவைக்கு ஏற்ப, கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டது. 1952-க்கு பிறகு இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. பிறப்பு விகிதத்தில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. 1983-ல் அரசு அறிவித்த தேசிய சுகாதாரக் கொள்கையில், மொத்த இனவிருத்தி விகிதத்தை 2000-ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியாவின் சாதனைகள்


தேசிய குடும்ப நலத் திட்டத்தை அறிவித்த அரை நூற்றாண்டில் இந்தியா எட்டிய மைல்கற்கள்:

· 1951-ல் 40.8 ஆக இருந்த பிறப்பு விகிதம் 1998-ல் 26.4 ஆக குறைப்பு

· குழந்தை இறப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. 1951-ல் 1000 பிரசவங்களுக்கு 146 ஆக இருந்த இறப்பு விகிதம் 1998-ல் 72 ஆக குறைப்பு

· 1951-ல் 25 ஆக இருந்த இறப்பு விகிதம் 1998-ல் 9 ஆக குறைப்பு

· சராசரி ஆயுட் காலம் 37 ஆண்டுகளில் இருந்து 62 ஆண்டாக கூடியுள்ளது

· குடும்ப கட்டுப்பாடு முறை மற்றும் அதன் அவசியம் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது

· மொத்த இன விருத்தி விகிதம் 1951-ல் 6-ஆக இருந்தது. 1997-ல் 3.3 ஆக குறைந்தது.

தேசிய மக்கள் தொகை கொள்கை 2000


சுகாதார கட்டமைப்பு, மருத்துவப் பணியாளர்கள், தாய்-சேய் நலன், கருத்தடை போன்ற பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதே 2000-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை கொள்கையின் முக்கிய நோக்கமாகும். 2010க்குள் மொத்த இனவிருத்தி விகிதத்தை குறைப்பதும், நீடித்த பொருளாதார வளர்ச்சி, சமுதாய மேம்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்ப 2045-க்குள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதும் இக்கொள்கையின் பிற குறிக்கோள்களாகும்.

2010-க்குள் எட்ட வேண்டிய தேசிய இலக்குகள்

· அடிப்படையான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் தாய்சேய் நல சேவைகளை பூர்த்தி செய்வது

· 14 வயது வரை இலவச மற்றும் கட்டாய பள்ளிக் கல்வி மற்றும் ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவ/மாணவிகள் இடையில் நின்றுவிடுவதை 20 சதவீதத்திற்கும் கீழே குறைப்பது.

· 1000 பிரசவங்களுக்கு 30 என்ற விகிதத்தில் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது.

· ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 100 என்ற விகிதத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்பது

· அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது.

· 18 வயதுக்கு முன்பாக திருமணம் கூடாது, 20 வயதுக்கு பின்பு செய்வது நல்லது

· மருத்துவமனையில் 80 சதவீத பிரசவங்கள் நடக்க ஏற்பாடு செய்வது - 100 சதவீதம் பிரசவங்களை பயிற்சி பெற்ற பணியாளர்கள் பார்ப்பதை உறுதி செய்வது

· இனவிருத்தி, கருத்தடை தொடர்பான தகவல்களும், ஆலோசனைகளும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது

· பிறப்பு, இறப்பு, திருமணம், கருவுறுதல் ஆகிய அனைத்தையும் 100 சதவீதம் பதிவு செய்வது

· எய்ட்ஸ், பாலுறவு மூலம் பரவும் நோய்கள் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது

· தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது. தாய்-சேய் நல மருத்துவத்தில் இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பது மற்றும் அவற்றை மக்களிடம் சென்று சேர்ப்பது


தேசிய மக்கள் தொகை கொள்கை நிறைவேற்றப்பட்ட பின்

தேசிய மக்கள் தொகை முழுமையாக நிறைவேற்றப்பட்டால், 2010-ம் ஆண்டில் 116 கோடியை நோக்கி ராக்கெட் வேகத்தில் செல்லும் மக்கள் தொகை, 110 கோடியிலேயே நின்றுவிடும். அதே போல பிறப்பு, இறப்பு விகிதமும், மொத்த இனவிருத்தி விகிதமும் குறையும். இக்கொள்கை நிறைவேற்றப்பட்டால் 2010-ல் பிறப்பு விகிதம் 21 ஆகவும், குழந்தை இறப்பு விகிதம் 30 ஆகவும், மொத்த இன விருத்தி விகிதம் 2.1 ஆகவும் குறையும்.

நமது நாட்டில் 1.68 கோடி தம்பதிகள் குழந்தை பெறும் தகுதியுடைவர்களாக உள்ளனர். இவர்களில் 44 சதவீதத்தினர் கருத்தடை முறைகளைப் பின்பற்றுகின்றனர். மற்றவர்களுக்கும் கருத்தடை முறைகள், தகவல்கள், மருத்துவ முறைகள் எளிதில், குறைந்த செலவில் கிடைக்கச் செய்ய உடனடி நடவடிக்கைகள் தேவை. சுமார் 5.5 லட்சம் கிராமங்களில் கிட்டத்தட்ட 74 சதவீத மக்கள் வசிக்கின்றனர். இனவிருத்தி தொடர்பான மருத்துவ உள்கட்டமைப்பும், மருத்துவ முறைகளும் கிராமங்களை பெரும்பாலும் சென்றடைவதில்லை.

50 சதவீத பெண்கள் 18-க்கும் குறைவான வயதில் திருமணம் செய்கின்றனர். 33 சதவீத குழந்தை பிறப்பு, மணமான 24 மாதங்களுக்குள் நிகழ்கிறது. இதன் விளைவாக, குழந்தை இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.

இலக்குகளை நிறைவேற்ற நடவடிக்கைகள்

2010-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டிய, பிறப்பு இறப்பு தொடர்பான இலக்குகளை நிறைவேற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம அளவில் திட்டமிடுவது, திட்டத்தை நிறைவேற்றுவது, கிராம அளவில் மருத்துவ சேவைகளை ஒருங்கிணைப்பது, மேம்படுத்தப்பட்ட உடல் நலனையும், சத்துணவையும் பெற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, குழந்தைகளின் உடல்நலனில் கவனம் செலுத்துவது, குடும்ப நல சேவைகளில் நிறைவேற்றப்படாதவற்றை செய்வது, தேவைகளை ஈடுகட்டுவது, நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசிப்போர், மலைவாழ் மக்கள், இடம் பெயர்ந்த மக்கள், வளர் இளம் பருவத்தினர் ஆகியவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்துவது, குழந்தை வளர்ப்பில் ஆண்களையும் பங்கேற்கச் செய்வது, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுவது, இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தைப் பயன்படுத்துவது. தாய்-சேய் நலன் மற்றும் கருத்தடை தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது, வயதானவர்களின் மேல் தனிக் கவனம் செலுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்கள் தொகைக்கான தேசிய ஆணையம்

தேசிய மக்கள் தொகை கொள்கை 2000, பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பெரும்பாலும் செயல்படுத்தப்படவுள்ளது. இவை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இதற்காக பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் மக்கள் தொகைக்கான தேசிய ஆணையத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பிற மத்திய அமைச்சர்கள், துறையினர் இடம் பெறவுள்ளனர். மக்கள் தொகை கொள்கை செயலாக்கப்படுவதை இந்த ஆணையம் கண்காணிக்கும்.

ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் அந்தந்த முதலமைச்சர் தலைமையில் மக்கள் தொகை ஆணையத்தை அமைக்க உத்தேசித்துள்ளன. மாநில ஆணையங்களும், தேசிய ஆணையம் போன்றே இக்கொள்கை செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும்.

இக்கொள்கை தொடர்பாக, பல்வேறு அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைப்பதற்காக திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

மக்கள் தொகை ஆதார வளமா?

நமது நாட்டில் உள்ள ஏராளமான மக்கள் நாட்டின் மிகப் பெரிய வளமாக மாறமுடியும், அவர்களுக்கு ஆரோக்கியமான பொருளாதார ரீதியில் மேம்பட்ட வாழ்க்கை அளிக்கப்படுமானால். புதிய ஆயிரமாவது ஆண்டில், உலக நாடுகள் அவற்றின் குடிமக்கள் நலனை வைத்தே மதிப்பிடப்படும். நாட்டு மக்களின் ஆரோக்கியம், சத்துணவு, கல்வி, உரிமைகள், சுதந்திரம், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, நலிந்தோர் நலன் ஆகியவை இந்த மதிப்பீட்டில் முக்கிய காரணிகளாகத் திகழும். தேசிய மக்கள்தொகைக் கொள்கை, நாடுதழுவிய இயக்கமாக செயல்படுத்தப்படுமானால் நமது நாட்டின் மக்கள் தொகை வலுவான ஆதாரவளமாக நிச்சயம் மாறும்.



மக்கள் தொகை ஆதார வளமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 10:25 am

பகிர்வுக்கு நன்றி சிவா .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 10:33 am

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”(குறள்)

’//நாட்டு
மக்களின் ஆரோக்கியம், சத்துணவு, கல்வி, உரிமைகள், சுதந்திரம்,
குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, நலிந்தோர் நலன் ஆகியவை இந்த மதிப்பீட்டில்
முக்கிய காரணிகளாகத் திகழும். தேசிய மக்கள்தொகைக் கொள்கை, நாடுதழுவிய
இயக்கமாக செயல்படுத்தப்படுமானால் நமது நாட்டின் மக்கள் தொகை வலுவான
ஆதாரவளமாக நிச்சயம் மாறும்.//
நம்புவோமாக...


//50 சதவீத பெண்கள் 18-க்கும் குறைவான வயதில் திருமணம் செய்கின்றனர். // மக்கள் தொகை ஆதார வளமா? 440806 இன்னுமா??

தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு..மிக்க நன்றி சிவா.. மக்கள் தொகை ஆதார வளமா? 678642 மக்கள் தொகை ஆதார வளமா? 154550



மக்கள் தொகை ஆதார வளமா? Aமக்கள் தொகை ஆதார வளமா? Aமக்கள் தொகை ஆதார வளமா? Tமக்கள் தொகை ஆதார வளமா? Hமக்கள் தொகை ஆதார வளமா? Iமக்கள் தொகை ஆதார வளமா? Rமக்கள் தொகை ஆதார வளமா? Aமக்கள் தொகை ஆதார வளமா? Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 11:41 am

அருமையான பதிவு மக்கள் தொகை ஆதார வளமா? 677196




மக்கள் தொகை ஆதார வளமா? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக