புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
62 Posts - 63%
heezulia
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
1 Post - 1%
viyasan
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
254 Posts - 44%
heezulia
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
15 Posts - 3%
prajai
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_m10அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் அதிசயங்கள் -1 : தாவரங்களின் அறிவு!


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 06, 2009 1:16 pm

பேராசிரியர் ஸ்டீபனோ மங்குசா இன்று உலகிலுள்ள தாவரங்களுக்கான ஒரே சோதனைச்சாலையை நடத்தி வருபவர்!

தாவரங்களுக்கான ப்ளாண்ட் நியூரோ பயாலஜி எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது சகாக்களும் தாவரங்களைப் பற்றிய பல மர்மங்களை விடுவிக்கும் ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடலியல், தாவர மூளை உயிரியல்,சுற்றுப்புறச்சூழல் இயல் ஆகிய மூன்று துறைகளையும் கலந்து செய்யும் அபூர்வமான ஆய்வு இவர்களுடையது.

பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அறிவு என்று அறிவிற்கான இலக்கணம் வரையறுக்கப்படுமானால் தாவரங்கள் நமக்குக் கற்பிக்க ஏராளமானவற்றைத் தங்கள் வசம் கொண்டுள்ளன என்கிறார் மங்குசா!

மூளை என்ற ஒரு அங்கம் இல்லாமலேயே அவை ஸ்மார்ட்டாக அற்புதமாக உணர்கின்றன! எப்படி வளர்வது, எப்படி சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது, எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் இவைகள் காண்பிப்பது அலாதி ஆச்சரியத்தை நமக்குத் தருகின்றன என்று மேலும் அவர் கூறுகிறார்!

அறிவு என்பது மூளையினால் மட்டுமே அளக்கப்படும் ஒன்று இல்லை என்பது அவரது திடமான நம்பிக்கை.

வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர். அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை. ஆனால் நவீன தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ரொபாட்டுகளுக்கு இன்று எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவு முக்கியத்துவம் வயல்வெளிகளில் அதேபோல தாவரங்கள் அதிசய செயல்களைப் புரிவதால் உண்டு என்பது மங்குசா தரும் புதிய விவரம்.

உதாரணமாக இன்று இவர்களது சோதனைச்சாலையில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம். தாவர ஆராய்ச்சியின் விளைவாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ப்ளாண்டாய்ட் தான் செடியின் தண்டானது தகவலை அனுப்புவது போல இயந்திர வகையில் ஒன்றான பாட்ஸ் என்பவை செவ்வாய் கிரகத்தின் தரையில் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவலை அனுப்ப முடிவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பல் டாக்டர்களின் வாசல் அறைகளை அலங்கரிக்கும் வெறும் அலங்காரப் பொருளாக செடிவகைகள் இருந்த காலம் மலையேறிப் போனது என்று கிண்டலடிக்கிறார் மங்குசா.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 06, 2009 1:16 pm

சார்லஸ் டார்வினின் தாவரங்களின் இயங்கு சக்தி என்ற போட்டோட்ராபிஸம் பற்றிய பேப்பர் 1880ல் வெளியிடப்பட்டது. ஆனால் தாவரங்களின் இந்த அறிவு பற்றிய விஷயத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் மெதுவாகத்தான் உலகில் பரவலாயிற்று.

மனிதர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகள் தாவரங்களுக்கு உள்ளதா என்பது பற்றி மங்குசா தெளிவாக விளக்குகிறார்.

தி சீக்ரட் லைப் ஆப் ப்ளாண்ட்ஸ் என்ற திரைப்படம் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்ட போது உலகமே வியந்தது. தாவரங்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும் உள்ளன என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய போதிலும் அறிவியல் விஞ்ஞானிகள் அறிவுள்ள தாவரங்கள் பற்றிப் பேசுவதைக் கூடுமான வரையில் தவிர்த்தே வந்தனர்!

சிக்னல் அனுப்புவது, அனுப்பியதை உணர்வது ஆகியவை பற்றிய விஷயங்கள் மூளைக்கு இருக்கும் திறனில் உள்ள அறிவு போல தாவரங்களுக்கும் உள்ளது என்பது பற்றிய ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன!

மங்குசா சர்ச்சைக்குரிய தாவர மூளை உயிரியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ப்ளாண்ட் நியூரோபயாலஜி என்ற இந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் மனித நரம்பு அமைப்பில் உள்ளது போலவே தாவரங்களுக்கும் அமைப்பு உள்ளது தான் காரணம்!

பத்து லட்சம் யூரோக்கள் இதுவரை இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு பணம் இந்த ஆராய்ச்சிக்குக் கொட்டப்படுவானேன்?

இயற்பியல் விஞ்ஞானியான பேராசிரியர் போலோ ப்ளாஸி, இந்த ஆராய்ச்சி ஒரு போலி அறிவியல் ஆராய்ச்சியாக இதுவரை (சிலரால்) கருதப்பட்டு வந்த போதிலும் இனிமேல் அப்படி கருதப்பட நிச்சயமாக முடியாது என்கிறார்.

செடிகளின் மீது இசையின் தாக்கம் நிரூபணமான ஒன்று! இப்போது புவி ஈர்ப்பு விசையை உணர்வது, தொலைதூர தகவல்களை சிக்னல் மூலம் அனுப்புவது ஆகியவற்றில் தாவரங்களின் திறன் வியக்க வைக்கும் அளவில் உள்ளது நிரூபணமாகி விட்டது.

அடுத்த ஆண்டு ஜப்பானில் பன்னாட்டு விஞ்ஞானிகளின் குழு தாவரங்களின் அறிவு பற்றி உலகளாவிய அளவில் கூடி விவாதிக்கப் போகிறது! இந்த ஒன்றே இதன் முக்கியத்துவத்திற்குச் சரியான சான்று ஆகும்!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 06, 2009 1:18 pm

பேராசிரியர் மங்குசா தாவரங்கள் தங்களுடைய தகவல் தொடர்பை இரசாயனப் பொருள்கள் மூலம் பரிமாறிக் கொள்கின்றன என்கிறார்! எச்சரிக்கை அறிவிப்பு, ஆரோக்கிய உணர்வு போன்றவற்றை அறிவதற்கு நம்மிடம் அகராதிச் சொற்கள் இருப்பது போல அவைகளிடமும் உள்ளன என்பது அவரது கணிப்பு!

ஆனால் மங்குசாவிற்கு முன்னாலேயே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நம் நாட்டைச் சேர்ந்த சர் ஜகதீஸ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதைச் சோதனைகள் வாயிலாகச் செய்து காட்டி நிரூபித்திருக்கிறார்!

வங்காளத்தில் பிறந்த ஜகதீஸ் சந்திர போஸ் (பிறப்பு 18-11-1858 மறைவு 23-11-1937) இங்கிலாந்தில் படித்தவர். தாய்நாடு திரும்பியவுடன் கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் விரிவுரையாளரானார். 1894ல் கல்லூரியில் பாத்ரூமுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய அறையைத் தன் சோதனைச்சாலையாக மாற்றித் தன் ஆராய்ச்சிகளைத் தொடங்கலானார். மார்க்கோனி ரேடியோ அலைகளைக் கண்டுபிடிக்கும் முன்னரே 1895ம் ஆண்டு அவர் இதைப் பொதுமக்களிடம் பகிரங்கமாக செயல்முறை வடிவில் நிரூபித்துக் காட்டினார்.

இதற்காக அவர் ஒரு விசேஷ கருவியை உருவாக்கினார். இதற்கு ரெஸோனேட் ரிகார்டர் (Resonate Recorder) என்று பெயர். இந்தக் கருவி தாவரங்களுக்கும் நாடித்துடிப்பு உண்டு என்பதைத் துல்லியமாக நிரூபித்துக் காட்டியது! இந்தச் சோதனையை நடத்துவதற்காக மிகுந்த கவனத்துடன் அவர் ஒரு செடியை வேருடன் தோண்டி எடுத்து அதைத் தன் கருவியுடன் இணைத்தார். செடியை புரோமைட் அடங்கிய ஒரு பாத்திரத்தில் அப்படியே தண்டுடன் வைத்தார்.

கடிகாரப் பெண்டுலம் அங்கும் இங்கும் ஊசலாடுவது போல ஆடிய அந்தக் கருவியின் முள் திடீரென்று சீரற்றதாக மாறி வேகமாக அங்கும் இங்கும் ஆடியது. பிறகு வேகமாக நடுநடுங்கி ஆடத் துவங்கியது. சடக்கென ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நின்றது. அதன் உயிர் போனதை இவ்வாறு அது தெரிவித்தது! விஷத்தால் அதன் உயிர் போனது.
1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒரு மகாநாட்டிலும் பிறகு இங்கிலாந்திலும் தனது சோதனைகளை அவர் நடத்திக் காட்டினார். செடிகள் வெட்டப்பட்ட போது அவைகள் துடிதுடித்து அழுவதை அவர் காண்பித்த போது உலகமே அதிசயித்தது!

போஸ் காட்டிய வழியில் இப்போது அறிவியல் வெகுவாக வளர்ந்து விட்ட இன்றைய உலகில் பல்வேறு விதமான அதிசய சோதனைகளை இன்னொரு விஞ்ஞானிச் செய்து காட்டி வருகிறார். இவர் பெயர் க்ளீவ் பாக்ஸ்டர். (Cleve Backster) இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

லை டிடெக்டர் (Lie Detector) என்ற பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாள் இந்த லை டிடெக்டரை ட்ராகன் ட்ரீ (Dracaena) எனப்படும் அரக்க மரத்துடன் அவர் இணைத்துப் பார்த்தார். வேரில் தண்ணீர் ஊற்றப்படும் போது இலைகள் அதை எவ்வளவு நேரத்தில் உணர்கின்றன என்று கண்டுபிடிப்பதே அவர் ஆய்வின் நோக்கம்.
கொள்கை ரீதியாகப் பார்த்தால் ஒரு தாவரமானது நீரை உறிஞ்சியவுடன் தடையைத் (Resistance) தளர்த்திக் கடத்தலை (Conductivity) அதிகரிக்க வேண்டும். ரிகார்டரில் இதற்கான வளைவு மேல் நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் உண்மையில் நடந்ததோ வளைவு ரிகார்டரில் கீழ் நோக்கிச் சென்றது!

அதாவது லை டிடெக்டரை ஒரு மனிதனுடைன் இணைத்துச் சோதனை செய்யும் போது அது அவனது மூட் எனப்படும் நிலைகளுக்கு ஏற்றார் போல கருவியில் வெவ்வேறு வளைவுகளைக் காண்பிக்கும்.

ட்ராகன் ட்ரீயில் ஏற்பட்ட விளைவு மனிதனிடம் ஏற்படும் நிலை மாற்றத்தால் உருவாகும் வளைவுகளைப் போல அமைந்திருப்பதைக் கருவி உணர்த்தியது! நீரை உறிஞ்சியவுடன் அது சந்தோஷமாக இருப்பதை அது காட்டியது!
ஈ.எஸ்.பி. (ESP - Extra Sensory Perception) எனப்படும் அதீத புலன் உணர்வு கூட தாவரத்திற்கு உண்டு. இதையும் நிரூபிக்கும் வகையில் அவர் பல சோதனைகளை நடத்திக் காட்டினார்!

ஒரு மனிதனை திடீரென பயமுறுத்தினால் அவனிடம் அது ஏற்படுத்தும் விளைவு அவனை நிலைகுலையச் செய்வதன் மூலம் காண்பிக்கும். உடனடி எதிர்விளைவைக் காண பயமுறுத்திப் பார்ப்பது ஒரு சிறந்த வழி என்பதை பாக்ஸ்டர் உணர்ந்திருந்தார்.
ஆகவே செடியினுடைய இலைகளை சூடான காப்பியில் அமுக்கிப் பார்த்தார்.

ஆனால் விளைவுகள் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. சரி, இன்னும் சற்றுக் கடுமையான சோதனையைச் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.


இலைகளை எரித்து விட்டால் என்ன என்று எண்ணி அவர் ஒரு தீப்பெட்டியை எடுத்தது தான் தாமதம், லை டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த கிராப் பேப்பரில் ஒரு வளைவு வேகமாகத் தோன்றியது! கொளுத்தப்பட்ட தீக்குச்சியுடன் அவர் இலைகளை நெருங்கியவுடன் இன்னொரு வளைவு இன்னும் வேகமாக உருவானது!

நிச்சயமாக ஒரு மனிதன் தன்னை எரிக்கப் போகிறான் என்ற உணர்வு செடிக்கு ஏற்பட்டு உறுதியானவுடன் அது தன் பயத்தை வேகமாகக் காட்டியது.


ஆனால் எரிப்பது போல பாவனை செய்தாலோ அல்லது சற்று தாமதப்படுத்தினாலோ அது தன் பயத்தைக் காண்பிக்கவில்லை! ஆகவே மனித மனதில் தோன்றும் உண்மையான எண்ணத்தை புலன் கடந்த அதீத புலனாற்றலால் அது உணர்கிறது என்பதை அவர் கண்டார். இந்த அதிசய அனுபவம் அவரை மேலும் பல சோதனைகளைச் செய்ய வழி வகுத்தது


தொடரும்........................

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக