ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டு வலி பற்றிய விளக்கம்

3 posters

Go down

மூட்டு வலி பற்றிய விளக்கம் Empty மூட்டு வலி பற்றிய விளக்கம்

Post by சபீர் Tue Jun 15, 2010 11:49 am

இயந்திரம் தங்கு தடையின்றி இயங்க வேண்டுமானால், "லூப்ருகேஷன்' (உயவுத் தன்மை) தேவை.
இல்லையென்றால் உராய்வு ஏற்பட்டு, இயக்கம் தடைபடும். தேய்மானமும் அதிகருக்கும்.
அப்போது, தேவைப்படும் உயவு எண்ணெயைப் போட்டால், மீண்டும் சீராக இயங்கும். அதே சமயம்
இவ்வாறு உயவுத் தன்மை வெகு சீக்கிரம் குறைந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இயந்திரத்துக்கு மட்டுமல்ல இந்தப் பராமருப்பு. உடல் என்ற முக்கியமான
இயந்திரத்துக்கும் இது தேவைப்படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்படுவதுதான்
மூட்டு வலி (ஆர்த்தரைட்டீஸ்). ஆயுர்வேத சிகிச்சையை முறையாகச் செய்துகொண்டால்,
ஆர்த்தரைட்டீஸ் நோய் காணாமல் போய்விடும். இனி மூட்டு வலிக்கான ஆயுர்வேத சிகிச்சை
முறை குறித்து ஓர் அலசல்:

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை என்ன?


நமது ஒவ்வொருவருன் உடலும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தன்மைகளைக்
கொண்டவை. அதன் அடிப்படையில்தான் உடல்நிலையும் அமையும்; குணாதிசயம் ௬ட மாறுவதுண்டு.
இது மரபணு அடிப்படையில் அமைவது. இந்த தோஷங்களை "ப்ரக்ருதி' என்று ஆயுர்வேதம்
குறிப்பிடுகிறது.

அதே சமயம் எல்லோரது உடலிலும் மூன்று தோஷங்களும்
இருக்கும். வெவ்வேறு விகிதத்தில் அமைந்திருக்கும். ஒருவருக்கு இருப்பது போல்
இன்னொருவருக்கு இந்த விகிதம் இருக்காது. உணவு, பழக்கவழக்கங்களின் மூலம் இந்த மூன்று
தோஷங்களின் பாதிப்பையும் சமநிலைப்படுத்தலாம்.



மூட்டு வலி ஏன்
ஏற்படுகிறது?


எலும்புகள் இணையும் பகுதிகளில் உழலும் தன்மை எளிதாக இருக்க
எண்ணெய்ப் பசை தேவை. இந்த எண்ணெய் "ஸ்லேஷக கபம்' என்ற திரவமாகும். எண்ணெய்ப் பசை
குறைந்துபோனால், எலும்புகள் எளிதாக உராய முடியாது. அதனால், இயக்கம் தடைபடும்.
மேலும், வெப்பம் ஏற்படும். இந்த உராய்வினாலும், வெப்பத்தினாலும் வலி ஏற்படுகிறது.
வலியின் தொடர்ச்சியாக உடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது.

இது
நீடிக்கும்போது, உடல் உறுப்புகளே விகாரமாகும் அபாயமும் உள்ளது. உதாரணத்துக்கு கால்
மூட்டுவலி முற்றினால், முடங்கிப் போய், ஊனத் தன்மை ஏற்படக்௬டும். இதை "வக்ரம்'
என்கிறது ஆயுர்வேத மருத்துவம். உடலின் மூன்று தோஷங்களில் ஒன்றான வாதம்
அதிகருத்தால், இந்த எண்ணெய்ப் பசை குறைந்து, உலர்ந்துவிடும்.

மூட்டு
வலிக்கான அறிகுறி என்ன?


வழக்கமாக அடிபட்ட இடத்தில் வலிக்கும். உள்
காயத்தாலும் இவ்வாறு வலி ஏற்படும். ஆனால், கை, கால் மூட்டுகள், விரல் இணைப்புகள்,
தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் வலி நாளுக்கு நாள் அதிகருத்து வந்தால், அது
மூட்டு வலிக்கான அறிகுறியாகவே இருக்கும்.

மூட்டு வலிக்கும் முதுமைக்கும்
தொடர்பு உண்டா?


நிறைய இருக்கிறது. மனித வாழ்நாளை மூன்றாகப் பிருக்கலாம்.
"பால்யம்' என்னும் இளமைக் காலம். அதில், கபம் அதிகமாக இருக்கும். எனவே, அது
தொடர்பான வியாதிகளே அதிகம் வரும்.
"மத்யம்' எனப்படும் நடுத்தர வயதுக் காலம்.
அந்த வயதில், பித்தம் அதிகம். ஆகவே, அது தொடர்பான நோய்களே அதிகம் ஏற்படும்.

"வார்த்திக்' எனப்படும் வயோதிகப் பருவம் அல்லது மூப்பு. அப்போது வாத தோஷமே
உடலில் அதிகம் இருக்கும். அதன் அடிப்படையில் நோயும் தோன்றும்.

எனவே,
மூப்புக் காலத்தில்தான் மூட்டு வலி அதிகம் தோன்றும். எனினும், சிலருக்கு 40 வயதில்
௬ட மூட்டு வலி தோன்றுவதுண்டு. அதற்கு அவர்களது உடலில் உள்ள வாத தோஷம் அதிகமாகவும்
தீவிரமாகவும் இருப்பதே காரணம்.

மூட்டு வலிகள் எத்தனை வகைப்படும்? அதற்கு
ஆயுர்வேதம் என்ன காரணத்தைச் சொல்கிறது?

1. "சந்திவாஹம்' என்பது
ஆங்கிலத்தில் Osteo Arthritis எனப்படுகிறது. கால் மூட்டுப் பகுதியில் வருவதால்
முழங்கால் வலி என அழைக்கப்படும்.
2. "அபாபஹுகம்' என்பது தோள்பட்டையில்
ஏற்படுவது. இது ஆங்கிலத்தில் Peri Arthritis எனப்படுவதாகும்.
3. "மன்யாக்ரஹம்'
எனப்படும் நோய் "பிடருவலி' எனத் தமிழில் அழைக்கப்படுகிறது. கமுத்துப் பகுதியில்
தோன்றும் இது Cervical Spondylosis என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இது
கைகளில் மரத்துப் போகும் நிலையை ஏற்படுத்தும்.
4. "கடிகிரகம்' என்ற மூட்டுவலி.
இதை Lumbosaral Spondylosis என ஆங்கில மருத்துவம் ௬றுகிறது. இது இடுப்பில் தோன்றும்
வலியாகும்.
5. "வாத ரக்தம்' எனப்படுவது "கீல் வாயு' என அழைக்கப்படும் மூட்டு
வலியாகும். இது Gouty Arthritis ஆகும். கைவிரல், கால் விரல், குதிகால் ஆகிய
பகுதிகளில் ஏற்படும்.
இவை அல்லாமல், சர்வாங்க வாதம் எனப்படும் நோய் அனைத்துவித
மூட்டு வலிகளையும் உள்ளடக்கியது.

மூட்டு வலி ஆண்களுக்கு அதிகம் வருமா?
பெண்களுக்கு அதிகம் வருமா?


ஒவ்வொரு விதமான மூட்டு வலி அவரவருக்கு ஏற்ப
தோன்றுவதுண்டு. வீட்டு வேலை செய்யும் பெண்கள் நாளொன்றுக்கு அதிக தொலைவு
நடக்கிறார்கள். மேலும், வீட்டில் அதிகமாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வது,
கருத்தடை ஆபரேஷன், கருப்பை அகற்றப்படுவது ஆகிய காரணங்களாலும் முழங்கால் மூட்டு வலி
அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் குழந்தை பெற்ற பெண்களில் பலர் திடீரென்று
உடல் பருமனாகிவிடுகின்றனர். உடல் பருமனும் மூட்டுவலிக்கு முக்கியக் காரணமாகும்.


ஏதாவது ஒரு ஸ்டாண்டின் மீது அளவுக்கு அதிகமாக எடையை வைத்தால், அந்த
ஸ்டாண்டின் இணைப்புப் பகுதிதான் முறியும். அதைப் போல் உடல் எடை அமுத்துவதால்,
முழங்கால் இணைப்பு அதைத் தாங்காமல், உராய்வு அதிகருத்து, வலி ஏற்படுகிறது.


ஆண்களைப் பொருத்தவரையில், அனைத்து விதமான மூட்டுவலியும் வருவதற்கு வாய்ப்பு
உள்ளது. சாலையில் நீண்ட நேரம் கால் கடுக்க நிற்கும் காவலர், வகுப்பறையில் நிற்கும்
ஆசிருயர், அடிக்கடி மாடியில் ஏறி இறங்கி வேலை செய்வோர், விளையாட்டு வீரர்கள், இரு
சக்கர வண்டிகளை ஓட்டுவோர், பொறியாளர்கள் எனப் பலதரப்பட்டோருக்கு இவ்வாறு கமுத்து
வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி எல்லாமே தோன்றும் வாய்ப்பு உள்ளது.


தரையில் காலை மடித்து அமர்ந்தால், மூட்டு வலி அதிகருக்கும் என்று ஆங்கில
மருத்துவம் ௬றுகிறதே?

மூட்டுப் பகுதிகளை அதிகமாக இயக்கினாலும் வலி
ஏற்படும். மூட்டு வலிக்கு உணவு மட்டுமின்றி, வாழ்க்கை முறையும் முக்கிய காரணமாகிறது
என்பதைக் குறிப்பிட வேண்டும். இப்போதைய நிலையில் தரையில் கால் மடித்து அமர்ந்தால்,
மூட்டுவலி தோன்றுவது இயல்பே.

ஏற்கெனவே சொன்னபடி இரு சக்கர வண்டி ஓட்டுவது,
நீண்ட நேரம் கால் கடுக்க நிற்பது, மாடிப்படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவது
ஆகியவையும் இத்தகைய பாதிப்புக்கு வழி வகுத்துவிடுகிறது.

மூட்டு வலிக்கு
செயற்கை மூட்டு பொருத்துவதற்கு அலோபதி சிகிச்சையில் வழியுள்ளது. அதை ஆயுர்வேதம்
ஆதருக்கிறதா?

உடலின் இயல்புக்கு ஒவ்வாத எந்தப் பொருளும் நல்லதல்ல. அதை உடல்
இயல்பாக ஏற்காது. இணைப்புப் பகுதிகளில் மூட்டு வலி ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமான
எண்ணைய்ப் பசை ஏற்பட உதவினால் போதும்.

மூட்டு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை
என்ன?


எண்ணெய்ப் பசை பற்றாக்குறைதான் மூட்டுவலிக்கெல்லாம் முக்கியக்
காரணம். எனவே, அந்தக் குறையைப் போக்குவதற்கு மூட்டு வலி பாதித்த உடல் பகுதியில்
எண்ணைய் தேய்த்து, நீவி விட வேண்டும். அதன் பின், ஒத்தடம் அளிக்க வேண்டும். இதை
"ஸ்நேகஹ; ஸ்வேதஹ' என்று வடமொழியில் குறிப்பிடுகிறார்கள். அதாவது, எண்ணெய்
தேய்க்கும்போது, அது மூட்டு வலிப் பகுதியில் பரவுகிறது.

பிறகு, அங்கே
நீவிவிடும்போது, உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது. இதனால், பசை இல்லாத இடத்துக்கு
எண்ணெய் போய்ச் சேருகிறது.
எண்ணெய்ப் பசை குறைவதற்கு ஒருவரது உணவுப் பழக்கமும்
காரணமாக இருக்கும். அதையும் கண்டறிந்து, பசை குறையாமல் தடுக்கவும், எண்ணெய்ப் பசை
ஏற்படுவதற்கும் உருய வகையிலான உணவுகளை நோயாளி சாப்பிட வேண்டும் எனச் சொல்கிறது
ஆயுர்வேதம். அது மட்டுமின்றி, வாழ்க்கை முறையையும் அதற்கேற்ப மாற்றியமைக்க
அறிவுறுத்துகிறது இச் சிகிச்சை முறை.

சுருக்கமாகச் சொன்னால், மூட்டுவலி
தீர்க்க முடியாத நோயே அல்ல. ஆயுர்வேதம் அதைப் பூரணமாகத் தீர்த்துவிடும்.


மூட்டுவலி வராமல் தடுக்கும் உணவு எது?

வாயுவை அதிகருக்கும்
கிழங்குவகைகள், வாழைக்காய், எண்ணெய் பதார்த்தங்களைத் துறந்துவிடவேண்டும்.
நார்ச்சத்துள்ள உணவு மிகவும் நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கும்
மலச்சிக்கல் இல்லாதவர்களுக்கும் இந்நோய் வரவே வராது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூட்டு வலி பற்றிய விளக்கம் Empty Re: மூட்டு வலி பற்றிய விளக்கம்

Post by சபீர் Tue Jun 15, 2010 11:53 am

மற்றுமொரு விளக்கம்
பொதுவாகக் காணப்படும் ஓர்
உடல்நலப் பிரச்சினை
மூட்டுவலிஆகும். ஏழு பேரில் ஒரு வருக்கு இந்தப்
பிரச்சினை உள்ளது.


மூட்டுவலியில் 100 க்கும் மேற்பட்ட வகைகள்
உள்ளன
; ஒவ்வொரு வகை மூட்டுவலிக்கும் வெவ்வேறு
காரணங்கள்
, அறிகுறிகள், சிகிச்சை முறைகள் உள்ளன.

மூட்டுவலி
வருவதற்கு முன் தோன்றும் எச்சரிக்கை அறிகுறிகள்:


* ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட
மூட்டுக்களில் வீக்கம்.


* காலையில் எழுந்ததும் தொடரும்
விறைப்புத்தன்மை.


* மூட்டுக்களில் வலி அல்லது
அசௌகரியம்.


* இயல்பாக ஒரு மூட்டைச் செயல்படுத்த
இயலாமை.


* மூட்டுப் பகுதி சிவந்தும்
கதகதப்பாகவும் இருத்தல்.


* மூட்டுவலியோடு காரணம் தெரியாத
காய்ச்சல்
, உடல் எடை இழப்பு, பலவீனமாக உணர்தல்.

மூட்டுவலி:
பொதுவாக
மூட்டுவலிஎன்றதும் முழங் கால் பகுதியில்
ஏற்படும் வலி
, வீக்கம், விறைப்புத்தன்மை, அசௌகரியம் போன்றவற்றைப் பற்றி மட்டுமே
கருத்தில் கொள்வோம். ஆனால்
, இந்தப் பகுதியில் நாம் மூட்டுவலிஎன்று குறிப்பிடுவது கை, கால், விரல் ஆகிய மூட்டுகளில் ஏற்படும்
பிரச்சினைகளைப் பற்றி ஆகும்.


மேலே
குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இரண்டு வாரங்களுக்கு மேல்
நீடித்தால்
, நீங்கள் உடனடியாக மருத்துவரைப்
பார்ப்பது அவசியம். சாதாரண வலியிலிருந்து மூட்டுவலியைக் கண்டறிவது சரியான சிகிச்சை
அளிக்க உதவும்.


மூட்டுவலி
ஏற்படப் பல்வேறு காரணங்கள் உள்ளன. மூட்டில் உள்ள மஜ்ஜை தேய்மானம் அல்லது
காயம்
, அலற்சி, தொற்று அல்லது காரணம் தெரியாத
பிரச்சினை போன்றவற் றால் மூட்டுவலி ஏற்படலாம். அழற்சி காரணமாக ஏற்படும் மூட்டுப்
பிரச்சினைகளே
மூட்டுவலிஎன்றழைக்கப்படு கின்றது. மூட்டுவலி
ஆங்கிலத்தில் ஆர்த்ரைட்டிஸ் என்று குறிப்பிடப்படுகிறது. கிரேக்க மொழியில் ஆர்த்ரோன்
என்றால்
மூட்டுஎன்று, இட்ஸ் என்றால் அலற்சிஎன்றும் பொருள்படும். இந்தப் பகுதியில்
பொதுவாகக் காணப்படும் ஒஸ்டியோ ஓத்ரைட்டிஸ் என்கிற மூட்டுவலி பற்றிய விளக்கமும்
அதற்கான சிகிச்சை முறைகளும் கூறப்படுகின்றன. வேறுவித மூட்டுவலிகளுக்கு உங்கள்
மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுங்கள்.


பொதுவாக
உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் நீங்கள் விரும்புவீர்கள்.
உடல்நலம் நன்றாக இருக் கும் பட்சத்தில் உடல் எளிதாக வளையும் தன்மை
, வலிமை, தாக்குப்பிடிக்கும் திறன் போன்றவை
உங்களுக்குக் கிடைக்கும். மருத்துவரின் சிகிச்சையும் தொடர்ந்து மேற்கொள் ளும்
உடற்பயிற்சியும் இணைந்து உங்கள் மூட்டுகள் மேலும் பாதிக்கப் படாமலும்
, மூட்டு இணைப்பு விலகாமலும், விறைப் புத்தன்மை
நீங்கியும்
, வலி குறைந்தும் இருக்க
உதவும்.


மூட்டு
வலியின் வகையைப் பொறுத்து உடற்பயிற்சியும் மாறுபடும். வளையும் திறனை
மேம்படுத்த
, கைகால்களை மெதுவாகவும் முழுவீச்சு
வரையிலும் நீட்டி மடக்க வேண்டும். இவ்வாறு செய்வது சிலவகை மூட்டு வலியை அதிகப்
படுத்திவிடும். எனவே
, வலி ஏற்படும் பட்சத்தில் உங்கள்
மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனை யின்றி உடற்பயிற் சிகளை
தொடராதீர்கள்.


தசைகளுக்கு
வலிமை ஏற்படவும் தாக்குப்பிடிக்கும் திறனை அதிகரிக்கவும் தசைப்பகுதி நிறைந்த
உறுப்புகளுக்கு
15-20 நிமிடங்களுக்குப் பயிற்சி அளியுங்
கள். நடத்தல்
, சைக்கிள், ஓடுதல், நீச்சல், நடனம் போன்றவை நல்ல உடற் பயிற்சிகள்
ஆகும்
; இவற்றில் ஏதாவது ஓர் உடற்பயிற்சியை
மேற்கொள் வதால் மிகக் குறைவான பாதிப்பே மூட்டுக்களுக்கு உண்டாகும். நீங்கள் மிகவும்
குண்டாக இருந்தால் நடப்பதே உங்களுக்குச் சிரமமாக இருக்கும். முதுகு
, இடுப்பு, முழங்கால், பாதம், போன்றவற்றுக்கு நீங்கள் அதிக
அழுத்தத்தைத் தருகிறீர்கள்
; இந்தப் பகுதிகள் எல்லாமே எளிதாக
மூட்டுவலி தோன்றும் இடங்கள் ஆகும். குண்டாக அல்லது சற்றுப் பருமனாக இருப்பதால்
மூட்டுவலி வரும் என்பதற்கு ஆய்வு ரீதியாக ஆதாரம் இல்லாவிட்டாலும் நிச்சயம் அளவுக்கு
மீறிய பருமன் மூட்டுவலிக்கான அறிகுறிகளை மேலும் அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமே
இல்லை.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூட்டு வலி பற்றிய விளக்கம் Empty Re: மூட்டு வலி பற்றிய விளக்கம்

Post by ரிபாஸ் Tue Jun 15, 2010 11:56 am

நல்ல தகவல் தலைவா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூட்டு வலி பற்றிய விளக்கம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மூட்டு வலி பற்றிய விளக்கம் Empty Re: மூட்டு வலி பற்றிய விளக்கம்

Post by GunasekarenS Wed Aug 24, 2016 8:25 pm

மூட்டு வலி பற்றிய விளக்கம் 103459460 மூட்டு வலி பற்றிய விளக்கம் 3838410834
மூட்டு வலி ஏற்பட உணவு சூடாக உண்ணாமல் இருப்பது ஒரு காரணம். மூட்டு வலி உள்ளவர்கள் நடை பயிற்சி செய்யாமல் இருப்பது ஒரு காரணம். நடை பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள், மூட்டு வலி ஏற்பட்டால் நடை பயிற்சி செய்ய வேண்டும்.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

மூட்டு வலி பற்றிய விளக்கம் Empty Re: மூட்டு வலி பற்றிய விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum