புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
48 Posts - 43%
heezulia
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
2 Posts - 2%
prajai
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
414 Posts - 49%
heezulia
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
28 Posts - 3%
prajai
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_m10நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 1:28 pm

நான் ஓய்வெடுக்க கோடநாட்டிற்கு வரவில்லை. சதா சர்வ காலமும் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன் எனறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நான் முதன் முதலாக தொண்டர்களை சந்தித்து மனுக்களை வாங்கினேன் என்றும், இது எனது 'கன்னி சந்திப்பு' என்றும், ஒரு மணி நேரம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு நான் போய்விட்டேன் என்றும், இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்து விட்டதாகவும், 22 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் மனு வாங்கும் படலம் என்றும் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நான் வந்த பிறகே கூட்டம்:

நான் 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்ததில் இருந்து இன்று வரை கழக உடன்பிறப்புகளிடமிருந்து தினந்தோறும் மனுக்களை பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். 1982ம் ஆண்டு நான் தலைமைக் கழகம் செல்ல ஆரம்பித்த பிறகு தான், தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது.

1983ம் ஆண்டு கழக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் தினமும் தலைமைக் கழகத்திற்கு சென்று அங்கு வரும் கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களது குறைகளை கேட்டறிந்தேன்.

தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள்...:

அதற்கு முன்பு புரட்சித் தலைவர் அமைச்சரவையில் இருந்த எந்த ஒரு அமைச்சரும் தலைமைக் கழகத்திற்கு சென்று என்னைப் போன்று கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களை பெற்றதும் கிடையாது, அவர்களது குறைகளை கேட்டறிந்ததும் கிடையாது என்று கழக உடன் பிறப்புகளே என்னிடம் தெரிவித்து இருக்கின்றனர். கழகத் தொண்டர்கள் தான் அமைச்சர்களை தலைமைச் செயலகத்திற்கோ அல்லது அவர்களது இல்லத்திற்கோ சென்று பார்ப்பார்களே தவிர, அமைச்சர்கள் யாரும் தலைமைக் கழகம் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.

எம்ஜிஆருடன் மதிய உணவு:

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காலையில் கோட்டைக்குச் சென்றுவிட்டு மதிய உணவிற்காக மாம்பலம் ஆற்காடு சாலையில் இருந்த அலுவலகத்திற்கு வருவார்கள். நானும் தலைமைக் கழகத்தில் காலை முதல் மதியம் வரை தொண்டர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு மாம்பலம் அலுவலகத்திற்குச் செல்வேன். அங்கு புரட்சித் தலைவரோடு நானும் மதிய உணவு அருந்துவேன். பின்னர், கழக உடன்பிறப்புகள் என்னிடம் கொடுத்த மனுக்களை, கோரிக்கைகளை புரட்சித் தலைவரிடம் தெரிவிப்பேன். இதன் விளைவாக கழக உடன் பிறப்புகளின் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

என் கால் படாத இடங்களே இல்லை:

1983ல் கழக கொள்கை பரப்புச் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் என் கால் படாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் நான் தொடர்ந்து இடைவிடாது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அப்போது ஒவ்வொரு ஊரிலும் என்னை சந்தித்த கழக உடன்பிறப்புகளின் மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களது குறைகளை பொறுமையாக கேட்டுக் கொள்வேன்.

“புரட்சித் தலைவரின் வாரிசு”:

இந்த அளவுக்கு கட்சிப் பணியை நான் ஆற்றியதன் காரணமாகவும், கழக உடன் பிறப்புகளின் கோரிக்கைகளை நான் நிறைவேற்றியதன் காரணமாகவும் தான் கழக உடன் பிறப்புகள் “புரட்சித் தலைவரின் வாரிசு” என்று என்னை ஏற்றுக் கொண்டார்கள். உண்மையான கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இந்த உண்மைகள் தெரியும். எம்.ஜி.ஆர். இருந்தவரை, அதாவது 1987ம் ஆண்டு வரை பதிவு செய்திருந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 17.50 லட்சம். இன்றோ கழக உடன் பிறப்புகளின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடி ஆகும்.

இன்று, கழகம் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது!!:

எந்த ஒரு கட்சியின் பொதுச் செயலாளரும் அத்தனை பேரிடமும் ஒரே நாளில் மனுக்களைப் பெற்று அவர்களது குறைகளை நேரில் கேட்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். ஏனென்றால் இன்று, கழகம் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது. இருப்பினும், அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து மனுக்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். தினசரி தொண்டர்கள் தலைமைக் கழகத்திற்கும், எனது இல்லத்திற்கும் வருகின்றார்கள். கழகத் தொண்டர்கள் கொடுக்கும் மனுக்கள் முறையாக பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அனைத்துக் கடிதங்களுக்கும் பதில்கள் அனுப்பப்படுகின்றன.

என் வயது 62...:

எல்லோரையும் நான் நேரில் பார்த்து மனுக்களைப் பெறவில்லை என்று குறை சொல்பவர்கள், ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 1982ல் என்னுடைய வயது 34. இன்று எனக்கு வயது 62 என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இருப்பினும், கழக தொண்டர்கள் எல்லோரும் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்புவதால், மாவட்ட வாரியாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தால் சரியாக வராது என்பதால், ஒன்றிய வாரியாகவோ, நகர வாரியாகவோ, அல்லது சட்டமன்றத் தொகுதி வாரியாகவோ சந்திக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சட்டமன்றத் தொகுதி வாரியாக சந்திப்பை ஏற்பாடு செய்தால் கூட, 234 நாட்கள், அதாவது கிட்டத்தட்ட ஒர் ஆண்டு காலம் ஆகும். அப்போதும் ஒவ்வொரு தொகுதியிலும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் வருவார்கள். இருந்தாலும், இதற்கு என்ன வழி என்பதை சிந்தித்து, விடா முயற்சியோடு தொண்டர்களுக்கு நிச்சயம் திருப்தி ஏற்படும் வகையில் செயல்படுவேன்.

எந்த நேரமும் கழகப் பணி:

கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு வராமல் இருந்தால் தான் செய்தி. நான் தலைமைக் கழகத்திற்கு வந்தால் அது தான் செய்தி என்று சொல்லியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு சென்று திமுக தொண்டர்களை தினசரி சந்தித்து இருக்கிறாரா? அதற்கு அத்தாட்சி இருக்கிறதா? நான், போயஸ் கார்டனில் இருந்தாலும், தலைமைக் கழகத்தில் இருந்தாலும், கோடநாட்டில் இருந்தாலும், எந்த நேரமும் கழகப் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறேன்.

அறிவாலயம் வெறிச்சோடியே இருக்கும்:

கருணாநிதி தலைமைக் கழகத்திற்குச் சென்று கட்சிக்காரர்களை சந்திக்கிறார் என்றும், நான் தலைமைக் கழகத்திற்குப் போவதற்கு விளம்பரம் கொடுக்கப்படுகிறது என்றும் பேசி இருக்கிறார் மு.க. அழகிரி. கருணாதியானாலும், அழகிரியானாலும், ஸ்டாலின் ஆனாலும் இவர்கள் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் போது ஆட்கள் யாரும் வருவதில்லை. ஏனென்றால் மக்களை ஈர்க்கக் கூடிய சக்தி இவர்களிடம் இல்லை. அறிவாலயம் எப்போதும் கூட்டம் இன்றியே வெறிச்சோடி இருக்கும். ஏதாவது குறிப்பிட்ட நிகழ்ச்சி இருந்தால் தவிர அங்கு கூட்டம் வருவதில்லை.

'வொர்க்கிங் ப்ஃரம் ஹோம்':

ஆனால், நான் தலைமைக் கழகத்திற்குச் செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகின்றார்கள். தலைமைக் கழகம் சென்றால், அவர்களை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் என்பதால், நான் வீட்டில் இருந்தபடியே முக்கியமான கட்சி வேலைகளை கவனிக்கிறேன்.

ஒய்வெடுக்கவா செல்கிறேன்?:

அடுத்தபடியாக நான் கோடநாடு சென்றாலே, “ஒய்வெடுக்க செல்கிறேன்” என்று பத்திரிகைகள் தவறாமல் செய்தியை வெளியிடுகின்றன. கோடநாடு தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டமே குளிர்ந்த பிரதேசம் தான். அப்படியென்றால், இங்கே இருப்பவர்கள் யாரும் எந்த வேலையும் செய்யாமல் சதா சர்வ காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாமா?

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். காவல் துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அப்படியானால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகுமா? நீலகிரி என்றாலே ஓய்வு என்று அர்த்தமா? ஆக, நான் ஓய்வெடுக்க கோடநாட்டிற்கு வரவில்லை. சதா சர்வ காலமும் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் தினமும் காலை முதல் மாலை வரை தேயிலை பறிக்கின்றார்கள். குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்வதாலேயே, அவர்கள் சதா சர்வ காலமும் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா? அப்படி கூறுவது அபத்தமாகாதா? அது போலத்தான் கோடநாட்டில் நான் தங்கினால், நான் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பேன் என்று சொல்லுவது அபத்தமான கூற்றாகும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்தையில் கூறியுள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 1:30 pm

நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் 502589 நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 1:32 pm

நீங்கள் ஓய்வெடுகிறீர்கள் என்று யார் கூறியது?

தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சிறு வயதிலிருந்தே உழைத்து வரும் பெண்மணியல்லவா நீங்கள்!

நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் 128872



நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 14, 2010 1:44 pm

சிவா wrote:நீங்கள் ஓய்வெடுகிறீர்கள் என்று யார் கூறியது?

தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சிறு வயதிலிருந்தே உழைத்து வரும் பெண்மணியல்லவா நீங்கள்!

நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் 128872

அண்ணே அம்மாவை பத்தி தப்பா பேசாதிங்க அவங்க தான் அடுத்த பிரதமர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 1:47 pm

maniajith007 wrote:
சிவா wrote:நீங்கள் ஓய்வெடுகிறீர்கள் என்று யார் கூறியது?

தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் சிறு வயதிலிருந்தே உழைத்து வரும் பெண்மணியல்லவா நீங்கள்!

நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் 128872

அண்ணே அம்மாவை பத்தி தப்பா பேசாதிங்க அவங்க தான் அடுத்த பிரதமர்

"கூறையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம்” - இது இந்த அம்மாவுக்குப் பொருந்தும்!



நான் கோடநாட்டில் ஓய்வா எடுக்கிறேன்?-ஜெ கேட்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 3:26 pm

சபாஷ் சரியான வார்த்தை சிவா...!

- கோழிக்குழம்பு சாப்பிடும் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக