புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
62 Posts - 43%
heezulia
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
6 Posts - 4%
prajai
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
21 Posts - 5%
prajai
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10வெங்காயமும் பெருங்காயமும் Poll_m10வெங்காயமும் பெருங்காயமும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயமும் பெருங்காயமும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 1:45 pm

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்!
ஏரகத்துச் செட்டியாரே!

இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள். சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக் கொண்டவர்களாக விளங்கினர். சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும். சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர்.

பலவகையான உணவுக்கட்டுப்பாடுகள், ஹடயோக, ராஜயோகப் பயிற்சிகள், சமாதிநிலைகள், மருந்துகள் முதலியவற்றின் உதவியால் அவ்வாறு உடலைப் பக்குவப் படுத்துவார்கள். இதனைக்"காய சித்தி" அல்லது "காயகல்பம்" என்று கூறுவார்கள்.

காயம்" என்பது உடல்.

இறவாமையை நாடும் சிலர், அவ்வாறு நீண்ட காலம் இருந்தபின்னர், ஏதோ காரணம் பற்றி அவர்களுடைய உடலை மேலும் யன்படுத்த முடியாமற் போனால், அந்த உடலைபோட்டு விட்டு, வேறொரு உடலுக்குள் பிரவேசித்துவிடுவார்கள். அவ்வுடலிலேயே வாழ்வார்கள். இந்த முறையை "பரகாயப்பிரவேசம்" அல்லது "கூடு விட்டுக் கூடு பாய்தல்" என்று கூறுவார்கள்.

காயகல்பத்தில் பயன்படுத்தும் மருந்துகள் பல இருக்கின்றன.அவற்றில், வீரம், பூரம், அயம் எனபவை சில.

அயம் என்றால் இரும்பு.

இரும்பை நெருப்பில் வேக வைத்து, "அய காந்த செந்தூரம்" போன்ற செந்தூரங்களைச் செய்து உட்கொள்வார்கள்.

வேக வைத்த இரும்பு = வெந்த அயம் = செந்தூரம்
வேறு வகையான சித்தர்கள், ரிஷிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் வந்த வேலையை மட்டுமே பார்ப்பார்கள்.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையைச்செய்துவிட்டு, அவர்களுடைய கர்மவினைகளைக் கழித்துவிட்டு வந்த வழியே போகவேண்டிய இடத்திற்குப் போய் விடுவார்கள்.

பட்டினத்தார், ரமணர்,பரமஹம்ஸர் போன்றோர். இவ்வகைச்சித்தர்கள் உடலைப் பாரமாக நினைப்பார்கள்.கடைசியில் நான்கு பேர் தூக்கவேண்டிய பாரத்தை ஒருவனாகத் தூக்க வேண்டியிருக்கிறதே என்று துக்கிப்பார்கள். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர் பாடியதாக அமைந்ததே இந்தப் பாடல்.


வெங்காயம் = வெறுமையான, கூடான உடல்
சுக்கு = உலர்ந்த இஞ்சி; சரக்குகளிலேயே மிக நீண்ட நாட்களுக்குக்
கெடாமல் இருக்கக் கூடியது சுக்குதான்.
எகிப்திய பிரமிடுகளில் ஐயாயிரம் ஆண்டு வயதான சுக்கு கிடைத்திருக்கிறது. சித்தர் பரிபாஷையில் சுக்கை "சுப்பிரமணி" என்றுதான் அழைப்போம்.
வெங்காயம் சுக்காவது = வெறும் உடம்பு காயகல்பமாகி விடுவது
வெந்தயத்தால் ஆவது = அதன் பின்னர் வெந்த அயம் போன்ற Tonic மருந்துகளும் தேவையில்லை.


ஆனாலும், இவ்வாறு காயகல்பமாகிவிட்ட இந்த சா£ரத்தில் நீண்ட நாள் உயிர் வாழ்வதால்தான் என்ன பயன்? இது ஒரு வீண் பாரம்தானே? ஆகவே,

இங்கு ஆர் சுமந்திருப்பார் இச்சரக்கை - இந்த உடலை?

ஏரகம் என்பது சுவாமிமலை.
குருவாய் இருந்து உபதேசம் புரிந்த இடமல்லவா அது.

முருகனை "செட்டி" என்று குறிப்பிடும் வழக்கு ஒன்று இருக்கிறது.

தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார்,
"செட்டியப்பன்" என்று சிவனைக் குறிப்பிடுகிறார்.
செட்டியாகிய முருகனின் அப்பன் சிவன்.

அருணகிரிநாதர் பல இடங்களில் செட்டி என்று முருகனைக் கூறுவார்.

செட்டியென்று மனமேவி இன்பரச
சத்தியின் செயனினாளை அன்புறாகத்
தெட்டிவந்து புலியூரின் மன்றுள் வண் பெருமாளே!

-சேவல் விருத்தம்


புத்திப்ரியத்தன் - வெகு
வித்தை குணக்கடலன் - புகழ்
செட்டி சுப்பிரமணியன்

- திருப்புகழ்


இனமெனத் தொண்டரோடும்
இணக்கிடும் செட்டி காக்க

- ஷண்முகக் கவசம்
பாம்பன் சுவாமிகள்


சீரகம் = சீர் அகம் = மோட்சத்தைக் குறிப்பது பெருங்காயம் என்பது பல பிறவிகளில் ஏற்படும் பல வகையான உடல்களைக் குறிக்கும். முருகன் மோட்சத்தைக் கொடுத்துவிட்டால் பிறவி எடுக்க வேண்டியிராதல்லவா?

ஏதோ ஒரு பலசரக்குக்கடைச் செட்டியாரிடம் கடைச்சரக்கைக் குறிப்பிடுவது போல் பாடல் அமைந்திருக்கிறது அல்லவா?

------------------------------
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 1:53 pm

[You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jun 14, 2010 2:25 pm

[You must be registered and logged in to see this image.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 14, 2010 2:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 2:51 pm

அப்ப பெரியார் வெங்காயம்னு சொன்னது அர்த்தமுள்ளது தானா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 9:07 pm

முருகனைச் செட்டி என்று குறிப்பிடக் காரணம் அவன் தந்தையும் செட்டி.. செட்டி என்றால் வணிகன் என்ற பொருள்.. சிவன் வளையல், விரகு விற்ற வணிகரே.. இந்தப்பாட்டை வைதது நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளே சிவா.. பகிர்வுக்கு மிக்க நனறி..



[You must be registered and logged in to see this link.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 17, 2010 9:19 pm

கலை wrote:அப்ப பெரியார் வெங்காயம்னு சொன்னது அர்த்தமுள்ளது தானா...?

சரியான கேள்வி .... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக