ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்வினை தன்னைச் சுடும்

+5
கலைவேந்தன்
சாந்தன்
பிளேடு பக்கிரி
நவீன்
சிவா
9 posters

Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty தன்வினை தன்னைச் சுடும்

Post by சிவா Mon Jun 14, 2010 1:16 pm

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களில் சதம் எனப்படும் பிரபந்தவகையும் உண்டு.

பல உலக நீதிக் கருத்துக்களையும், யதார்த்தமாக நாம் உலகில் பார்ப்பதையும், உலகநடப்புகளையும், மக்களின் இயல்புகளையும் - பொதுவாக உலகியல் உண்மைகளையும் சொல்லக்கூடிய பாடல்கள் நூறைக் கொண்டது, சதகம். குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை மிகவும் பிரபலமானவை.


தண்டலையார் சதகத்திலிருந்து ஒரு பாடல்:

மண்ணுலகில் பிறர் குடியை வஞ்சனையிற்
கெடுப்பதற்கு மனத்தினாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே
கெடுவன் என்பதுண்மையன்றோ
தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீ
ணெறியாரே தெரிந்து செய்யும்
தன்வினை தன்னைச்சுட வோட்டப்பம் வீட்
டைச்சுடவுந்தான் கண்டோமே


பிறர்குடியை வஞ்சனையாகக் கெடுப்பதற்கு மனதினால் நினைத்தாலும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கூறினாலும்கூட அவனே தானாகக் கெட்டுப்போவான் என்பது இப்பாடலின் கருத்து.

தென்னவன் - பாண்டியன், சோழன் ஆகிய முடிவேந்தர்கள் தண்டலை நீள்நெறியாரை வழிபடுகிறார்கள். சேரன் இதில் கூறப்படவில்லை.

இதில் வரும் பழமொழி:

'தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'.

இந்தப் பழமொழிக்குப் பின்னணியாக ஒரு கதை உண்டு.

பட்டினத்தார் தம்முடைய மகனாக வந்த மருதவாணர், ஒரு ஓலைமுறியில் 'காதற்றவூசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று எழுதி, உடன் ஒரு காதற்ற ஊசியையும் வைத்துக் கொடுக்கச் செய்தபின்னர் எல்லாவற்ரையும் விட்டுவிட்டு துறவியாக மாறினார்.

ஆரம்பத்தில் அவர் அதே ஊரில் இருந்துகொண்டு ம்ண்டபங்களில் தங்கியும் வீடுவீடாகப் பிச்சையெடுத்தும் திரிந்தார்.

அந்த ஊரில் தனவணிகர்கள் மிகவும் செல்வாக்காக இருந்தனர். அவர்களிடையே பெரும் வணிகராக பல கப்பல்கள், வணிகச்சாத்துக்கள் ஆகியவற்றுடன் பெரும் செல்வந்தராக விளங்கியவர் பட்டினத்தார். அவர் குபேரனுடைய அவதாரம் என்றும் சொல்வர்.

அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது அவருடைய உறவினர்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

குறிப்பாக அவருடைய தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை.

தங்கையின் வீட்டில் சம்பந்தம் செய்ய வந்தவர்களும்கூட தங்கையின் பிள்ளைக்குத் தாய்மாமனாகிய பட்டினத்தார் பிச்சையெடுப்பதைக் கருத்தில்கொண்டு சம்பந்தத்தையும் தட்டிக் கழித்துவிட்டனர்.

ஆகவே பட்டினத்தாரைக் கொன்றுவிட தங்கை திட்டம் போட்டாள்.

ஒருநாள், "அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டுப் போ" என்று வீட்டிற்கு அழைத்தாள்.

அந்த அப்பத்தில் விஷத்தை கலந்துவிட்டாள்.

அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் விஷம் கலந்திருப்பது பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது.

உடனே, "தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின்மீது வீசி எறிந்தார். உடனேயே வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து அந்தப் பழமொழி ஏற்பட்டது.

--------------------------
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by நவீன் Mon Jun 14, 2010 1:26 pm

[You must be registered and logged in to see this image.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by பிளேடு பக்கிரி Mon Jun 14, 2010 1:29 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by சாந்தன் Mon Jun 14, 2010 2:04 pm

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by கலைவேந்தன் Mon Jun 14, 2010 3:05 pm

அருமையான கருத்து... நன்றி சிவா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by V.Annasamy Tue Jun 15, 2010 3:03 pm

[You must be registered and logged in to see this image.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 3:16 pm

கெடுவான் கேடு நினைப்பான் என்ற கருத்துக்குகேற்ப தன் வினை தன்னைச்சுடும் என்று சொல்லி அதற்கு உதாரணமாக பட்டினத்தாரின் கதை பகிர்ந்தது மிக அருமை சிவா...

அன்பு நன்றிகள் சிவா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by Aathira Thu Jun 17, 2010 8:28 pm

இளைமையில் கேட்ட கதை. என் தாய் சொன்னது.. நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.. சிவா.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Jun 17, 2010 8:40 pm

அருமை..

பகிர்விற்கு நன்றி..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum