ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்வினை தன்னைச் சுடும்

+5
கலைவேந்தன்
சாந்தன்
பிளேடு பக்கிரி
நவீன்
சிவா
9 posters

Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty தன்வினை தன்னைச் சுடும்

Post by சிவா Mon Jun 14, 2010 1:16 pm

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களில் சதம் எனப்படும் பிரபந்தவகையும் உண்டு.

பல உலக நீதிக் கருத்துக்களையும், யதார்த்தமாக நாம் உலகில் பார்ப்பதையும், உலகநடப்புகளையும், மக்களின் இயல்புகளையும் - பொதுவாக உலகியல் உண்மைகளையும் சொல்லக்கூடிய பாடல்கள் நூறைக் கொண்டது, சதகம். குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை மிகவும் பிரபலமானவை.


தண்டலையார் சதகத்திலிருந்து ஒரு பாடல்:

மண்ணுலகில் பிறர் குடியை வஞ்சனையிற்
கெடுப்பதற்கு மனத்தினாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே
கெடுவன் என்பதுண்மையன்றோ
தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீ
ணெறியாரே தெரிந்து செய்யும்
தன்வினை தன்னைச்சுட வோட்டப்பம் வீட்
டைச்சுடவுந்தான் கண்டோமே


பிறர்குடியை வஞ்சனையாகக் கெடுப்பதற்கு மனதினால் நினைத்தாலும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கூறினாலும்கூட அவனே தானாகக் கெட்டுப்போவான் என்பது இப்பாடலின் கருத்து.

தென்னவன் - பாண்டியன், சோழன் ஆகிய முடிவேந்தர்கள் தண்டலை நீள்நெறியாரை வழிபடுகிறார்கள். சேரன் இதில் கூறப்படவில்லை.

இதில் வரும் பழமொழி:

'தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'.

இந்தப் பழமொழிக்குப் பின்னணியாக ஒரு கதை உண்டு.

பட்டினத்தார் தம்முடைய மகனாக வந்த மருதவாணர், ஒரு ஓலைமுறியில் 'காதற்றவூசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று எழுதி, உடன் ஒரு காதற்ற ஊசியையும் வைத்துக் கொடுக்கச் செய்தபின்னர் எல்லாவற்ரையும் விட்டுவிட்டு துறவியாக மாறினார்.

ஆரம்பத்தில் அவர் அதே ஊரில் இருந்துகொண்டு ம்ண்டபங்களில் தங்கியும் வீடுவீடாகப் பிச்சையெடுத்தும் திரிந்தார்.

அந்த ஊரில் தனவணிகர்கள் மிகவும் செல்வாக்காக இருந்தனர். அவர்களிடையே பெரும் வணிகராக பல கப்பல்கள், வணிகச்சாத்துக்கள் ஆகியவற்றுடன் பெரும் செல்வந்தராக விளங்கியவர் பட்டினத்தார். அவர் குபேரனுடைய அவதாரம் என்றும் சொல்வர்.

அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது அவருடைய உறவினர்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

குறிப்பாக அவருடைய தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை.

தங்கையின் வீட்டில் சம்பந்தம் செய்ய வந்தவர்களும்கூட தங்கையின் பிள்ளைக்குத் தாய்மாமனாகிய பட்டினத்தார் பிச்சையெடுப்பதைக் கருத்தில்கொண்டு சம்பந்தத்தையும் தட்டிக் கழித்துவிட்டனர்.

ஆகவே பட்டினத்தாரைக் கொன்றுவிட தங்கை திட்டம் போட்டாள்.

ஒருநாள், "அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டுப் போ" என்று வீட்டிற்கு அழைத்தாள்.

அந்த அப்பத்தில் விஷத்தை கலந்துவிட்டாள்.

அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் விஷம் கலந்திருப்பது பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது.

உடனே, "தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின்மீது வீசி எறிந்தார். உடனேயே வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து அந்தப் பழமொழி ஏற்பட்டது.

--------------------------
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by நவீன் Mon Jun 14, 2010 1:26 pm

[You must be registered and logged in to see this image.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by பிளேடு பக்கிரி Mon Jun 14, 2010 1:29 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by சாந்தன் Mon Jun 14, 2010 2:04 pm

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by கலைவேந்தன் Mon Jun 14, 2010 3:05 pm

அருமையான கருத்து... நன்றி சிவா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by V.Annasamy Tue Jun 15, 2010 3:03 pm

[You must be registered and logged in to see this image.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 3:16 pm

கெடுவான் கேடு நினைப்பான் என்ற கருத்துக்குகேற்ப தன் வினை தன்னைச்சுடும் என்று சொல்லி அதற்கு உதாரணமாக பட்டினத்தாரின் கதை பகிர்ந்தது மிக அருமை சிவா...

அன்பு நன்றிகள் சிவா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by Aathira Thu Jun 17, 2010 8:28 pm

இளைமையில் கேட்ட கதை. என் தாய் சொன்னது.. நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.. சிவா.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Jun 17, 2010 8:40 pm

அருமை..

பகிர்விற்கு நன்றி..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

தன்வினை தன்னைச் சுடும் Empty Re: தன்வினை தன்னைச் சுடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum