Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
+4
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ரபீக்
8 posters
Page 1 of 1
மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும், கூடுதலான வருமானத்திற்காகவும் கணவரை போலவே வேலைக்கு செல்லும் பெண்கள் இன்றைய சூழ்நிலையில் அதிகம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளை அவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவிகள் நிலைதான் தலைகீழ்! கணவன் உற்சாக படுத்தியதால் சாதித்தவர்களும் இவர்களில் உண்டு; கணவன் கண்டுகொள்ளாததால் ஏதோ வாழ்ந்துவிட்டு போனவர்களும் உண்டு.
அதனால், குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் மனைவியரின் மனதிற்குள் என்னென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பதை அறிய வேண்டிய பொறுப்பு கணவர்களுக்கு வேண்டும்.
அதற்காக ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. யதார்த்தமான சூழ்நிலையில் கூட மனைவியின் திறமை பளிச்சிடலாம்.
`மிதத்தல் விதி’யை கண்டுபிடித்த ஆர்க்கிமிடிஸ் யதார்த்தமான சூழ்நிலையில் தான் அதை கண்டறிந்தார். அவர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் சைரகூஸ். புதிதாக தங்கக் கிரீடம் ஒன்று செய்து, அதை, தான் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்பது மன்னரின் ஆசை. சில நாட்களில் தங்கக் கிரீடத்தை தயார் செய்து கொடுத்தனர், அமைச்சர்கள்.
தன்னுடைய விருப்பபடிதான் அந்த கிரீடம் தயார் செய்யபட்டு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய மன்னன், அந்த தங்கக் கிரீடத்தின் ஒட்டுமொத்த அளவையும் தெரிந்து கொள்ள ஆசைபட்டார். ஆனால், அவருக்கு அதை எப்படி அளவெடுப்பது என்று தெரியவில்லை. அதுபற்றி யோசித்தவருக்கு குழப்பம்தான் மிஞ்சியது.
உடனே, ஆராய்ச்சியாளர் ஆர்க்கிமிடிசை வரவழைத்தார். நடந்த விஷயத்தை சொன்னார். மன்னர் சொன்னபடி பல நாட்கள் யோசித்து… யோசித்து… அவரும் குழம்பி போனதுதான் மிச்சம். கிரீடத்தின் வெளி அளவுகளை வேண்டுமானாலும் அளந்து விடலாம், மொத்த கொள்ளளவையும் எப்படி கண்டுபிடிப்பது என்று பரிதவித்தார்.
ஒருநாள் குளியலறையில் நீர் நிரப்பபட்டு இருந்த தொட்டிக்குள் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தார் ஆர்க்கிமிடிஸ். அப்போது சிறிதளவு தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறி கொட்டியது. அப்போதுதான் அவரது மூளையில்
அந்த ஐடியா பளிச்சிட்டது. தங்கக் கிரீடத்தின் மொத்த கொள்ளளவை கண்டுபிடிக்க உதவிய `மிதத்தல் விதி’யை கண்டறிந்தார்.
அந்த மகிழ்ச்சியில், குளியலறையில் இருந்து எழுந்த ஆர்க்கிமிடிஸ், தான் ஆடையின்றி இருப்பதைக்கூட மறந்து மகிழ்ச்சியில் மன்னரின் சந்தேகத்திற்கு தீர்வு சொல்ல ஓடினார் என்ற தகவலும் உண்டு.
ஆக, பல நாட்கள் குழம்பித் திரிந்த ஆர்க்கிமிடிஸ், ர் நிரம்பிய தொட்டியில் குளித்ததால்தான் மிதத்தல் விதியை கடறிந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு யதார்த்தமாகவே அமைந்தது.
இதேபோன்று அமைந்தது தான், உலகின் மிகபெரிய இந்துக் கோவிலான அங்கோர்வாட் கோவிலை கண்டறிந்த சூழ்நிலையும்.
கம்போடியாவின் காடுகளுக்குள் அமைந்திருந்த இந்த பிரமாண்ட கோவில் கி.பி.1860-ம் ஆண்டு வெளிலக வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, பட்டுபூச்சி சேகரிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி முகோட் என்பவர் கம்போடியா காடுகளுக்குள் நுழைந்தார்.
ஒருநாள் அவரது பார்வையில் வினோதமான பட்டுபூச்சி தென்பட்டது. அதை பிடித்தே தீருவது என்று அதை பின்தொடர்ந்து ஓடினார். அந்த பட்டுபூச்சி அவரை காட்டுக்குள் வெகுதூரம் அழைத்துச் சென்று விட்டது.
ஒருகட்டத்தில் பட்டுபூச்சியை பிடிக்க முடியாமல் போனவர், இடிபாடுகள் நிறைந்த இடத்திற்குள் சிக்கிக்கொண்டார். அடர்ந்த காட்டுக்குள் எப்படி கட்டிடங்கள் இருந்து, இடிந்துபோன சுவடுகள் இருக்க முடியும்? என்று யோசித்தவர், பட்டுபூச்சியை மறந்து, அந்த இடிபாடுகள் பற்றி ஆராய ஆரம்பித்துவிட்டார்.
அந்த ஆராய்ச்சியின் பயனாக, 38 சதுர மைல் பரப்பளவில் அமைந்த உலகிலேயே மிகபெரிய பண்டைய கோவிலான அங்கோர்வாட் கோவிலையும், அந்த நகரையும் கண்டுபிடித்தார்.
ஹென்றி முகோட்டுக்கு முன்பே இந்த பகுதி இடிபாடுகள் பற்றி அறிந்த சிலர், அதை குறிப்புகளாக மாத்திரம் எழுதி வைத்திருந்தனர். ஆனால், `முயற்சி திருவினையாக்கும்’ என்பதை நி ருபித்தவர் ஹென்றி முகோட் தான். அதிர்ஷ்டம் எப்போதாவது ஒருமுறைதான் கதவைத் தட்டும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மீண்டும் அதிர்ஷ்டம் வராது என்பார்கள். அதுபோன்றதுதான், சாதனை படைக்க தேவையான சூழ்நிலைகளும்.
அதுபோன்ற சூழ்நிலைகளை ஒவ்வொரு கணவன்மார்களும், தங்களது மனைவியருக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், இல்லத்தரசிகளும் சாதனை அரசிகளாக ஜொலிப்பார்கள். என்ன செய்யலாம்? சில பெண்கள் குடியிருக்கும் வீட்டை அழகாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் கற்பனை நிறையவே கொட்டிக்கிடக்கும். அதை, எப்படி வெளியில் உபயோகிப்பது என்று தெரியாமல், வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களை சரியாக ஊக்கபடுத்தினால், `இன்டீரியர் டெகரேஷன்’ எனப்படும் உள்அரை அலங்காரத்தில் ஜொலிப்பார்கள். சிலர், தங்களது கற்பனைக்கு ஏற்ற பொருட்களை, குபையில் வீசப்படும் பொருட்களை பயன்படுத்தியே உருவாக்கி விடுவார்கள். இவர்களை கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடங்கள், கைவினை பொருட்கள் விற்கபடும் ஷோ ரும்களுக்கு அழைத்துச் சென்று ஊக்கபடுத்தினால் இன்னும் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். அந்த துறையில் தொழிலதிபராக வரக்கூடிய வாய்புகளும் உண்டு. சில இல்லத்தரசிகள் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள். வேலைக்கு செல்லாத காரணத்தால் அவர்களது திறமைகள் அவர்களுக்குள்ளாகவே முடங்கிபோய் கிடக்கும். இவர்களிடம் ஆங்கில பேச்சாற்றல் திறன் இருந்தால், `ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பு நடத்தவோ, அல்லது பிற பாடங்களுக்கு `டியுஷன்’ எடுக்கவோ ஊக்குவிக்கலாம். இன்றைய பெரும்பாலான இல்லத்தரசிகள் எம்ராய்டரிங், டெய்லரிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எம்ராய்டரியில் எவ்வளவோ லேட்டஸ்ட் டிசைன்கள் வந்துவிட்டன. அந்த டிசைன் ஆடைகள், படங்கள் போன்றவற்றை இவர்களுக்கு வாங்கிக்கொடுத்து ஊக்குவிக்கலாம். டெய்லரிங்கிலும் அப்படித்தான். எந்தவொரு வித்தியாசமான ஆடைக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால், அவர்களது கற்பனையை மெருகூட்டும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். அவ்வப்போது மனைவியை சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பது, அவரது மனதில் புதிய ஆரோக்கியமான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். எதற்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்தால், உடனே உற்சாகம் பிறந்துவிடும். உங்கள் மனைவி செய்யும் சின்னச்சின்ன சாதனைகளைக் கூட பிரமாதமாய் வரவேற்றிடுங்கள். உங்களது இந்த வரவேற்பு, அவரை பல சாதனைகளைச் செய்யத் தூண்டும்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளை அவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவிகள் நிலைதான் தலைகீழ்! கணவன் உற்சாக படுத்தியதால் சாதித்தவர்களும் இவர்களில் உண்டு; கணவன் கண்டுகொள்ளாததால் ஏதோ வாழ்ந்துவிட்டு போனவர்களும் உண்டு.
அதனால், குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் மனைவியரின் மனதிற்குள் என்னென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பதை அறிய வேண்டிய பொறுப்பு கணவர்களுக்கு வேண்டும்.
அதற்காக ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. யதார்த்தமான சூழ்நிலையில் கூட மனைவியின் திறமை பளிச்சிடலாம்.
`மிதத்தல் விதி’யை கண்டுபிடித்த ஆர்க்கிமிடிஸ் யதார்த்தமான சூழ்நிலையில் தான் அதை கண்டறிந்தார். அவர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் சைரகூஸ். புதிதாக தங்கக் கிரீடம் ஒன்று செய்து, அதை, தான் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்பது மன்னரின் ஆசை. சில நாட்களில் தங்கக் கிரீடத்தை தயார் செய்து கொடுத்தனர், அமைச்சர்கள்.
தன்னுடைய விருப்பபடிதான் அந்த கிரீடம் தயார் செய்யபட்டு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய மன்னன், அந்த தங்கக் கிரீடத்தின் ஒட்டுமொத்த அளவையும் தெரிந்து கொள்ள ஆசைபட்டார். ஆனால், அவருக்கு அதை எப்படி அளவெடுப்பது என்று தெரியவில்லை. அதுபற்றி யோசித்தவருக்கு குழப்பம்தான் மிஞ்சியது.
உடனே, ஆராய்ச்சியாளர் ஆர்க்கிமிடிசை வரவழைத்தார். நடந்த விஷயத்தை சொன்னார். மன்னர் சொன்னபடி பல நாட்கள் யோசித்து… யோசித்து… அவரும் குழம்பி போனதுதான் மிச்சம். கிரீடத்தின் வெளி அளவுகளை வேண்டுமானாலும் அளந்து விடலாம், மொத்த கொள்ளளவையும் எப்படி கண்டுபிடிப்பது என்று பரிதவித்தார்.
ஒருநாள் குளியலறையில் நீர் நிரப்பபட்டு இருந்த தொட்டிக்குள் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தார் ஆர்க்கிமிடிஸ். அப்போது சிறிதளவு தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறி கொட்டியது. அப்போதுதான் அவரது மூளையில்
அந்த ஐடியா பளிச்சிட்டது. தங்கக் கிரீடத்தின் மொத்த கொள்ளளவை கண்டுபிடிக்க உதவிய `மிதத்தல் விதி’யை கண்டறிந்தார்.
அந்த மகிழ்ச்சியில், குளியலறையில் இருந்து எழுந்த ஆர்க்கிமிடிஸ், தான் ஆடையின்றி இருப்பதைக்கூட மறந்து மகிழ்ச்சியில் மன்னரின் சந்தேகத்திற்கு தீர்வு சொல்ல ஓடினார் என்ற தகவலும் உண்டு.
ஆக, பல நாட்கள் குழம்பித் திரிந்த ஆர்க்கிமிடிஸ், ர் நிரம்பிய தொட்டியில் குளித்ததால்தான் மிதத்தல் விதியை கடறிந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு யதார்த்தமாகவே அமைந்தது.
இதேபோன்று அமைந்தது தான், உலகின் மிகபெரிய இந்துக் கோவிலான அங்கோர்வாட் கோவிலை கண்டறிந்த சூழ்நிலையும்.
கம்போடியாவின் காடுகளுக்குள் அமைந்திருந்த இந்த பிரமாண்ட கோவில் கி.பி.1860-ம் ஆண்டு வெளிலக வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, பட்டுபூச்சி சேகரிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி முகோட் என்பவர் கம்போடியா காடுகளுக்குள் நுழைந்தார்.
ஒருநாள் அவரது பார்வையில் வினோதமான பட்டுபூச்சி தென்பட்டது. அதை பிடித்தே தீருவது என்று அதை பின்தொடர்ந்து ஓடினார். அந்த பட்டுபூச்சி அவரை காட்டுக்குள் வெகுதூரம் அழைத்துச் சென்று விட்டது.
ஒருகட்டத்தில் பட்டுபூச்சியை பிடிக்க முடியாமல் போனவர், இடிபாடுகள் நிறைந்த இடத்திற்குள் சிக்கிக்கொண்டார். அடர்ந்த காட்டுக்குள் எப்படி கட்டிடங்கள் இருந்து, இடிந்துபோன சுவடுகள் இருக்க முடியும்? என்று யோசித்தவர், பட்டுபூச்சியை மறந்து, அந்த இடிபாடுகள் பற்றி ஆராய ஆரம்பித்துவிட்டார்.
அந்த ஆராய்ச்சியின் பயனாக, 38 சதுர மைல் பரப்பளவில் அமைந்த உலகிலேயே மிகபெரிய பண்டைய கோவிலான அங்கோர்வாட் கோவிலையும், அந்த நகரையும் கண்டுபிடித்தார்.
ஹென்றி முகோட்டுக்கு முன்பே இந்த பகுதி இடிபாடுகள் பற்றி அறிந்த சிலர், அதை குறிப்புகளாக மாத்திரம் எழுதி வைத்திருந்தனர். ஆனால், `முயற்சி திருவினையாக்கும்’ என்பதை நி ருபித்தவர் ஹென்றி முகோட் தான். அதிர்ஷ்டம் எப்போதாவது ஒருமுறைதான் கதவைத் தட்டும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மீண்டும் அதிர்ஷ்டம் வராது என்பார்கள். அதுபோன்றதுதான், சாதனை படைக்க தேவையான சூழ்நிலைகளும்.
அதுபோன்ற சூழ்நிலைகளை ஒவ்வொரு கணவன்மார்களும், தங்களது மனைவியருக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், இல்லத்தரசிகளும் சாதனை அரசிகளாக ஜொலிப்பார்கள். என்ன செய்யலாம்? சில பெண்கள் குடியிருக்கும் வீட்டை அழகாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் கற்பனை நிறையவே கொட்டிக்கிடக்கும். அதை, எப்படி வெளியில் உபயோகிப்பது என்று தெரியாமல், வீட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களை சரியாக ஊக்கபடுத்தினால், `இன்டீரியர் டெகரேஷன்’ எனப்படும் உள்அரை அலங்காரத்தில் ஜொலிப்பார்கள். சிலர், தங்களது கற்பனைக்கு ஏற்ற பொருட்களை, குபையில் வீசப்படும் பொருட்களை பயன்படுத்தியே உருவாக்கி விடுவார்கள். இவர்களை கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடங்கள், கைவினை பொருட்கள் விற்கபடும் ஷோ ரும்களுக்கு அழைத்துச் சென்று ஊக்கபடுத்தினால் இன்னும் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். அந்த துறையில் தொழிலதிபராக வரக்கூடிய வாய்புகளும் உண்டு. சில இல்லத்தரசிகள் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள். வேலைக்கு செல்லாத காரணத்தால் அவர்களது திறமைகள் அவர்களுக்குள்ளாகவே முடங்கிபோய் கிடக்கும். இவர்களிடம் ஆங்கில பேச்சாற்றல் திறன் இருந்தால், `ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பு நடத்தவோ, அல்லது பிற பாடங்களுக்கு `டியுஷன்’ எடுக்கவோ ஊக்குவிக்கலாம். இன்றைய பெரும்பாலான இல்லத்தரசிகள் எம்ராய்டரிங், டெய்லரிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எம்ராய்டரியில் எவ்வளவோ லேட்டஸ்ட் டிசைன்கள் வந்துவிட்டன. அந்த டிசைன் ஆடைகள், படங்கள் போன்றவற்றை இவர்களுக்கு வாங்கிக்கொடுத்து ஊக்குவிக்கலாம். டெய்லரிங்கிலும் அப்படித்தான். எந்தவொரு வித்தியாசமான ஆடைக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால், அவர்களது கற்பனையை மெருகூட்டும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். அவ்வப்போது மனைவியை சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விப்பது, அவரது மனதில் புதிய ஆரோக்கியமான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். எதற்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்தால், உடனே உற்சாகம் பிறந்துவிடும். உங்கள் மனைவி செய்யும் சின்னச்சின்ன சாதனைகளைக் கூட பிரமாதமாய் வரவேற்றிடுங்கள். உங்களது இந்த வரவேற்பு, அவரை பல சாதனைகளைச் செய்யத் தூண்டும்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
அருமையான கட்டுரை ரபீக்... பகிர்ந்தமைக்கு நன்றி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
இனிமேல் நானும் பட்டுப் பூச்சிகளைப் பிடிக்கச் செல்லலாம் என இருக்கிறேன் ரபிக்!
மனைவியின் திறமையை ஆண்கள் மறுக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ள இயலாது! மனைவியின் திறமையால் மகிழும் ஆண்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்! ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்!
பயனுள்ள கட்டுரைக்கு நன்றி!
மனைவியின் திறமையை ஆண்கள் மறுக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ள இயலாது! மனைவியின் திறமையால் மகிழும் ஆண்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்! ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்!
பயனுள்ள கட்டுரைக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
பகிர்வுக்கு நன்றி தோழரே....
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
சிவா wrote:இனிமேல் நானும் பட்டுப் பூச்சிகளைப் பிடிக்கச் செல்லலாம் என இருக்கிறேன் ரபிக்!
மனைவியின் திறமையை ஆண்கள் மறுக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ள இயலாது! மனைவியின் திறமையால் மகிழும் ஆண்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்! ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்!
பயனுள்ள கட்டுரைக்கு நன்றி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
அற்புதமான விளக்கம் உண்மையில் எதையும் எதார்த்தமாக யோசித்தால் சுலபமாக தீர்வும் கிடைத்து விடுகிறது
பகிர்வுக்கு நன்றி றபீக்
பகிர்வுக்கு நன்றி றபீக்
நேசமுடன் ஹாசிம்
Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
சிவா wrote:இனிமேல் நானும் பட்டுப் பூச்சிகளைப் பிடிக்கச் செல்லலாம் என இருக்கிறேன் ரபிக்!
மனைவியின் திறமையை ஆண்கள் மறுக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ள இயலாது! மனைவியின் திறமையால் மகிழும் ஆண்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்! ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்!
பயனுள்ள கட்டுரைக்கு நன்றி!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்!
அருமையான கட்டுரை....நன்றி
asksulthan- இளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
Similar topics
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» இவர்கள் திறமையை பாருங்கள்...!
» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» இந்த சிறுவர்களின் திறமையை பாருங்கள்..!
» இவர்கள் திறமையை பாருங்கள்...!
» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» இந்த சிறுவர்களின் திறமையை பாருங்கள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|