புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_m10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_m10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_m10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_m10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_m10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_m10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_m10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_m10பல் நலம் காத்து பல்லாண்டு வாழ Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் நலம் காத்து பல்லாண்டு வாழ


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:24 pm

எத்தகைய சுத்தமானவருக்கும் வாயில் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கும். வாய் சுத்தம் மிகவும் முக்கியமானது. வாய் சுத்தம் இல்லாவிட்டால் பலவித நோய்கள் உண்டாகும். சின்ன பிள்ளைகளுக்கு பற்சொத்தை போன்ற பிரச்சினைகள் வரும். நாற்பது வயதாகிவிட்டால் தொடர்பான நோய்கள் வரும். பாதிப்பு நீரிழிவினாலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்பால் இதய நோய்களும் வரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வாயினுள் அதிகமான பாக்டீரியாக்கள் வளருவதாக சொல்கிறார்களே அது ஏன்? என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். வாயிலிருந்து சுரக்கும் திரவங்களில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். இது பாக்டீரியா போன்ற பிற கிருமிகளும் வளர்வதற்கு ஏற்றதாக இருப்பதால்தான் வாய்க்குள் கிருமிகள் அதிகம் உருவாகின்றன. இவை ரத்தநாளங்கள் வழியாக சென்று ரத்தக் கொழுப்பை உறைய வைத்து ரத்தத்தை உறையச் செய்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரச்சினையுள்ளவர்களின் ரத்தத்தில் பைப்ரினோஜென் (fibrinogen) என்ற பொருள்தான் ரத்தத்தை உறைய செய்துவிடுகிறது.

பற்களை (வாயை)பாதுகாப்பதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். அதை எந்த வயதிலிருந்து தொடங்குவது என்பதுதான் பிரச்சினையா? பல் முளைக்க ஆரம்பிப்பதில் இருந்தே பற்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளுக்கு முளைப்பது பால் பற்கள். இவற்றின் எண்ணிக்கை -20. இவை விழுந்து முளைப்பதுதான் நிலைப்பற்கள். இவற்றின் எண்ணிக்கை-32. பால் பற்கள் மெல்லுவதற்கு முக்கியம். உரிய நேரத்தில் இவை விழுந்து விட்டால் அடுத்து வரும் பற்கள் இடைவெளியை நோக்கி வளர்ந்து இடுக்குப் பற்களை உருவாக்கும். இதனால் மன அளவிலும் பாதிப்பு ஏற்படும்.


பால் பற்கள் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தை எதையாவது சாப்பிட்டால் ஈரில் குத்தி வலிக்கும் என பயந்து சாப்பிட மறுக்கும். இதனால் ஊட்டச்சத்துக்குறைவு உண்டாகும். பால் பற்கள் திடமாக இருக்கவேண்டுமானால் பிள்ளைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை தரவேண்டும். இது தாடை எலும்பையும் உறுதியாக வைத்திருக்கும். பல் பாதிப்பு என்றாலே முதலில் வருவது பற்சிதைவுதான். இதற்கு முக்கியக் காரணம், பற்களின் மேற்பரப்பில் அமைந்துள்ள குழிகளிலும், பற்களின் இடையில் உள்ள சந்துகளிலும் பாக்டீரியாக்கள் தங்கி அமிலத்தை சுரப்பதுதான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:26 pm

பற்சிதைவு வந்துவிட்டால் பற்களின் மேற்புறம் பழுப்பாகவோ, கருப்பாகவோ நிறம் மாறும். நோயாளியின் பற்கள் மீது குளிர்ச்சியாகவோ, சூடாகவோ, இனிப்பாகவோ எது பட்டாலும் உறுத்தல்கள் ஏற்படும். பாதிப்பு பற்கூழை அடைந்துவிட்டால் அங்குள்ள நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை சிதைந்து வலியெடுக்கும். பற்களை பிடித்துள்ள அத்தனை கட்டமைப்புகளும் ஆட்டம் கண்டுவிடுவதோடு, வலி, வீக்கம், சீழ் அல்லது ரத்தம் கலந்து வருதல் போன்றவை ஏற்படும். இவற்றை தடுப்பதற்கு பால் பற்களானாலும் சரி, நிலைப் பற்களானாலும் சரி, அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

பற்சிதைவு வராமல் இருக்க, புரோட்டின் உள்ள பழங்கள், சாலாடுகள், கொட்டைகள் ஆகியவற்றை சாப்பிடலாம். சாப்பிட்டதும் பற்களை சுத்தமாக கழுவவேண்டும். கார்போஹைட்ரேட் (மாவுச் சத்து) பொருட்களை தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடலாம். உணவில் கடைசியாக இனிப்பு, ஐஸ்கிரிம் ஆகியவற்றை சாப்பிடாமல் பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். தினமும் இருவேளை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பற்களை குச்சியால் குத்துவது போன்றவற்றை செய்யாமல், கறைகள் இல்லாமலிருக்க மருத்துவரை நாடி, பற்சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளின் பற்சிதைவுக்கு பெரும்பாலும் பெற்றோர்களே காரணம். குழந்தை அழும்போது பால் புட்டியை அதன் வாயில் திணித்துவிடுவார்கள். குழந்தை அதை வாயில் வைத்துக் கொண்டே உறங்கும். இதனால் பல் முளைக்கும்போதே பாதிக்கப்பட்டு சிதையும். குழந்தைகளுக்கு புட்டிப்பால் புகட்டுவதை தவிர்க்கவேண்டும். பாலில் அதிகமாக சர்க்கரை சேர்ப்பதையும் விடவேண்டும். இந்த பிரச்சினைக்கு நர்சிங் பாட்டில் டீகே (Nursing bottle decay) என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டரை வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை நாமே தவிர்த்து விடலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:27 pm

கிருமிகள் எப்படி பற்களை பாதிக்கும்? நல்ல கதையாக இருக்கிறதே என்பவர்களும் உண்டு. நாம் சாப்பிடும் பழங்கள், பால், ரொட்டிகள், காய்கறிகள் ஆகியவற்றில் சர்க்கரையும், ஸ்டார்ச்சும் உண்டு. உணவுத்துகள்கள் பற்களில் ஒட்டும்போது பாக்டீரியாக்கள் அவற்றின் மீது செயல்பட்டு அமிலங்களை உருவாக்கி பல்லின் எனாமல் பகுதியை அரிக்க ஆரம்பிக்கும். உண்ட உணவுத் துகள்கள் நீண்டநேரம் வாயிலிருந்தால் பாதிப்பின் அளவு அதிகமாகும். சாப்பிட்டதும் வாய் கொப்புளிக்கும் பழக்கத்தால் இதை சரிசெய்யலாம். சரி, பிரச்சினைகள் வந்தால் என்ன செய்வீர்கள்?

ஈறு பிரச்சினையால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 90% பேர் பாதிக்கப்படுகிறார்கள். பற்களின் மேல் படிந்துள்ள கிருமிகள் பற்களைச் சுற்றி கறையாக உருவெடுக்கும். தேனடை போன்று ஒட்டிக் கொள்ளும் பாக்டீரியாக்களுடன் மேலும் மேலும் பாக்டீரியாக்கள் சேரும். இதனோடு புகைப்பழக்கம் மற்றும் பான்மசாலா போன்றவற்றை சுவைக்கும்போது அந்த கறைகளும் சேர்ந்துகொண்டு பற்களை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும். நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால் இந்த காரணங்களே நோயை அதிகப்படுத்தி தவிர, பல் எலும்புவரையில் பாதிப்பை உண்டாக்கி தொல்லை தரும்.


ஈறுகள் பற்களை கவசம்போல மூடி பாதுகாக்கின்றன. இல்லாவிட்டால் பற்கள் எலும்போடு ஒட்டிக்கொண்டு எலும்புக்கூடுபோல தெரியும். பாதிக்கப்படும்போது அழற்சி அதாவது சிவந்து வீங்கும். ஈறை தொடும் போது அல்லது பல் தேய்க்கும்போது ரத்தம் வரும். இவ்வாறு இருந்தாலே ஈறில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை தெரிந்துகொள்ளலாம். கவனிக்காமல் விடும்போதுதான் பற்சிதைவு, பல்தண்டு சிதைதல்,பற்கள் ஆடுதல், வாய் துர்நாற்றம், பற்கள் விழுதல் என பல பிரச்சினைகள் வரும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:45 pm

ஈறு நோய்களில் அழற்சி முதலாவது. வீங்கி ரத்தம் வருதல். இதை நாமாகவே சரிசெய்துகொள்ளலாம். கவனிக்காவிட்டால் பிரியோடான்டிஸ் [Periodontitis (pyorrhea)]எனப்படும் நோயாக மாறும். பிரியோடான்டிஸ் நோயில் பல்லைப்பிடித்திருக்கும் எலும்புகள் பாதிக்கப்படும். மூன்றாவது அட்வான்ஸ்ட் பிரியோடான்டிஸ். இதனால் ஏற்கனவே பல பற்கள் இழப்பும், பல் தண்டு இழப்பும் உண்டாகும். மூன்றாவது நிலையில் ள் சிதைந்து பற்களின் இடையே நிறைய இடைவெளி தோன்றும். இந்த மூன்று நிலைக்கும் சிகிச்சைகள் உள்ளன. மூன்றாவது நிலைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.


ஈறில் ரத்தம் வருவது ஒரு சீரியசான பிரச்சினை. பிரஷ்ஷை வேகமாக வைத்து தேய்ப்பதாலோ, பற்குழிவினாலோ, ஈறுகளை பாக்டீரியாக்கள் தாக்குவதாலோ உண்டாகும். லுகேமியா (Leukemia) எனப்படும் ரத்தப்புற்று, ரத்தக் கோளாறுகள், ரத்த செல் தட்டுக்கள் பிரச்சினை, ரத்தத்தை இளக்கும் மருந்துகள், வைட்டமின் சி மற்றும் கே குறைபாடுகள், கர்ப்பம், பருவநிலை மாறுதல், ரசாயன நொதிகள் போன்றவற்றின் காரணமாக ஈறில் ரத்தம் வரும். பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஈறில் ரத்தம் வருவதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத நிலையில் மருத்துவ சிகிச்சை தேவை.


பல் சார்ந்த நோய்களால் வேறுவித நோய்களும் வருவதாக ஆரம்பத்தில் பார்த்தோமல்லவா? அவற்றுள் முக்கியமானது பல்மொனரி ஆக்டினோமைகோசிஸ் (Actinomycosis) என்ற நோய். இது அக்டினோமைசெஸ் இஸ்ரேலி (Actinomyces israeli) என்ற பாக்டீரியாவால் வருகிறது. வாய் மற்றும் உணவுக் குழாயில் காணப்படும் இப்பாக்டீரியா மார்பு, வாய், தாடை மற்றும் இடுப்புப் பகுதி நோய்கள் வரக்காரணமாகிறது. இந்நோய் வந்தால் எடைகுறைவு, காய்ச்சல், கோழையுடன் கூடிய சளி, தொடர் மூக்கு ஒழுகல், இரவில் வியர்த்தல், மூச்சிரைப்பு, மார்பு வலி ஆகியவை வரும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Sep 28, 2008 1:51 pm

ஈறு நோய்கள் வராமல் தடுக்கவேண்டுமானால் பற்களை சுத்தமாக்கி, ஈறுகளை மசாஜ் செய்யவேண்டும். உணவுக்குப் பிறகு வாயை கொப்புளிக்கவேண்டும். பற்களை மேலும் கீழும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். புகைத்தல், பான்பராக் மெல்லுதல் ஆகியவற்றை விடவேண்டும். ஊசி, குண்டூசி கொண்டு பற்களை குத்துவது, உணவுத் துணுக்குகளை இவற்றால் எடுப்பது ஆகியவற்றை செய்யக்கூடாது. சரிவிகித சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். முறையாக பல் மருத்துவரை அணுகி பல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி பல் மருத்துவரிடம் சுத்தம் செய்வதால் பற்சிதைவு ஏற்படும் என்பது தவறான கருத்தாகும்.


தெற்றுப் பற்கள் சிலருக்கு இருப்பதை அறிவீர்கள். இதற்கு காரணம், பரம்பரை, சிறுவயது நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள், வாய் வழியே சுவாசிப்பது, வாய் சூப்புதல், உதடு கடித்தல், குறித்த காலத்திற்கு முன்பே பால்பற்கள் விழுந்துவிடுதல், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் பால்பற்கள் விழாத நிலை, அதிகப்படியான பற்கள் இருப்பது அல்லது குறைவான பற்கள் இருப்பது போன்றவற்றால் தெற்றுப்பற்கள் வருகின்றன. இவற்றால் பேச்சுக் குறைபாடுகள், வாய் சுத்தம் செய்ய இயலாமை, பற்சிதைவு, நோய்கள் போன்றவை தோன்றுகின்றன.


வாயில் தோன்றும் பிரச்சினைகளுள் முக்கியமானது வாய்ப்புற்றுநோய். புற்றுநோயாளர்களுள் 7 சதவிகிதம் பேர் வாய்ப்புற்றுநோயால் இறக்கிறார்கள். வாயில் ஏற்படும் புண்கள், புகைப்பழக்கம், பான் மசாலா, குட்கா போடுதல், புகையிலை மெல்லுதல் ஆகியவை வாய்ப்புற்றுநோய்க்கு காரணம் என கூறப்படுகிறது. துவக்கத்தில் வாயில் வலியற்ற புண்கள் தோன்றும். இரண்டு வாரத்திற்கு மேலும் ஆறாத புண்கள், உண்ண-குடிக்க-விழுங்க சிரமம், ஆகியவை வாய்ப்புற்றுநோயின் சில அறிகுறிகள். லூக்கோபிளேக்கியா, வாய் கன்ன சளிச்சவ்வு புற்று ஆகியவை இவற்றில் முக்கியமானவை.


வாய் பகுதியில் தோன்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல் மருத்துவர் இருக்கிறார் என்பதால் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. யானை பல் தேய்க்கிறதா? நாம் ஏன் தேய்க்கவேண்டும் என்பது போல வெட்டி வேதாந்தம் பேசி பற்களை சுத்தம் செய்யாமல்விடாதீர்கள். தற்போது பற்களில் ஏற்படும் அனைத்துவித குறைபாடுகளை நீக்கி, பற்களையும் முகத்தையும் அழகுபடுத்தும் அதிநவீன பல்-முக சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக