புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பரத நாட்டியம் - Page 3 I_vote_lcapபரத நாட்டியம் - Page 3 I_voting_barபரத நாட்டியம் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரத நாட்டியம்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:08

First topic message reminder :

பரத(நாட்டியம்) நிருத்தியம்

தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.

இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்­கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:36

சிஷ்யன்

1. உத்தமன் (மேலானவன்)
2. மத்திமன் (மத்தியமானவன்)
3. அதமன் (சராசரியைவிடக் குறைவானவன்)
4. அதமாதமன் (தாழ்ந்தவன்)

சிஷ்யனுக்குரிய தகுதிகள்

1. புத்திக் கூர்மை- மேத்தா
2. ஞாபகசக்தி- ஸ்மிருதி
3. போற்றக் கூடிய தகுதி- ஸ்லங்க
4. கலைமீது ஈடுபடும் அர்ப்பணம்- ராக
5. அயராத ஆற்றலும் கடின உழைப்பும்- சங்காஷ
6. ஊக்கம்- உற்சாக

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:36

சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய மேலதிக தகுதிகள்

ஒரு நல்ல மாணவன் ஆர்வத்தோடும் மன ஒருமைப்பாடோடும் கலையைக் கற்பதோடு, அதனைப் பயிற்சி செய்பவனாயும், தன் திறமையால் குருவிற்கும், தன் குடும்பத்திற்கும் நற்பெயர் ஈட்டித்தரும் பொறுப்பு மிக்கவனாகவும,; வௌ;வேறு சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்து ஒத்துப்போகும் குணமுடையவனாகவும், தான் பெற்ற குருவைப்பற்றிப் பெருமையுடன் அவரின் கீர்த்தியை யாவரிடமும் வெளியிடும் துணிச்சல் மிக்கவனாகவும், கலையைப் பயில அதிக நேரம் செலவிடுபவனாகவும் இருப்பான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:39

பரதத்தின் பரிணாமம்

நாட்டியம் அன்றைய நிலை

நாட்டியம் அன்று முற்காலத்தில் பெற்றோர்களில் சிலர், தான் பெற்ற பெண் குழந்தையை ஆண்டவனுக்கே அர்ப்பணிப்பதாக வேண்டிக் கொள்வர். அக் குழந்தைகளைக் கோயிலுக்கு என்றே விட்டு விடுவார்கள். அப ;பெண்கள் கோயிலில் பெருக்குவது, கோலம் இடுவது, மாலை தொடுப்பது, குளத்தில் இருந்து பூஜைக்கு நீர் எடுத்து வருவது, பூப்பறிப்பது போன்ற வேலைகளில் பாடல், வாத்தியம் இசைத்தல் போன்ற கலைகளைக் கற்பார்கள். இவர்கள் தங்களை முழமையாக அலங்கரித்துக் கொண்டு, சந்நிதியின் அருகில் உள்ள உள் பிரகாரத்தில் நடனம் ஆடுவார்கள்.

அப்போது சுவாமியைப் பூஜிக்கும் பூசாரி கூட இவர்களில் நின்று கொண்டு ஆடுபவரின் முதுகுப் பக்கம்தான் நடனத்தைப் பார்க்க வேண்டும். சில காலம் கழித்து நடனம் ஆடுபவர்கள், சுவாமி கோயிலின் உள்புறம் உலா வரும் பொழுது அதனுடன் உள் பிரகாரத்தில் ஆட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு கோயில் மதில் சுவரையொட்டிய வெளிப்பிரகாரத்தில் ஆட ஆரம்பித்தார்கள். இப்படி வெளிப்பிரகாரத்தில் ஆடிவரும் நடனப் பெண்கள், சுவாமி வெளிப்பிரகாரத்தில் ஊர்வலம் வரும் போது சுவாமியை நோக்கியபடியே ஆடி வருவார்கள். ஊhவலத்தில் முதலில் நாதஸ்வரம் வாசிப்பவர்கள் வருவார்கள். ஆவர்களுக்கு அடுத்ததாக நடனம் ஆடும் பெண், அதன் பின் சுவாமியின் பல்லக்கு என்பதாக வரிசையில் வரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:40

நாதஸ்வரம் வாசிப்பவர் சுவாமியை நோக்கி வாசித்துக் கொண்டே வருவார். இவர்கள் பெரிய மேளம் என்றழைக்கப்படுவர் அடுத்ததாக நடனம் ஆடுபவர் சுவாமியை நோக்கியபடியே ஆடி வருவர். இவர்கள் சின்னமேளம் என்று அழைக்கப்படுவார்கள். இப்படியாக சுவாமியின் சந்நிதியில் மட்டும் ஆடி வந்த நடனப் பெண்கள் முறையே உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்று படிப்படியா வெளியில் ஆட ஆரம்பித்தனர். இவர்கள் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர்.

தேவதாசிகள் வெளிப் பிரகாரத்தில் நடனம் ஆட ஆரம்பித்த பொழுது அதை மக்களும் கண்டு களிக்க வாய்ப்புக் கிட்டியது. மக்களோடு அமர்ந்து மன்னர் நடனத்தைப் பார்க்க மாட்டார் என்பதால், மன்னர்கள் இத்தகைய தேவதாசிகளின் நடனத்தைத் தங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க, தேவதாசிகள் அரசவையில் ஆட ஏற்பாடுகள் செய்தனர். இப்படி படிப்படியாக தேவதாசிகளின் நடனம் கோயிலின் உள்ளே இருந்து அரசவைக்கு வந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:40

நடனம் இன்றைய நிலை

தமிழ் நாட்டில் ஆடிய நடன மணிகள் "தேவதாசிகள்" என்றும் அவர்கள் ஆடிய நடனம் "சதிர்;" என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதைப் போலவே, இந்தியாவில் பல மொழி பேசும்- மொழி வாரியாகப் பிரிக்ப்பட்ட பல இடங்களிலும் நடனம் என்பது கோயிலைச் சார்ந்த தேவதாசிகளால் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. ஆது அந்தந்தப் பிரதேசத்திற்கு ஏற்ப மோகினி ஆட்டம், ஒடிசி என்று பெயரிடப்பட்டு இருந்தது. நாட்டியம், நடனம் என்ற கலை கோயிலைச் சார்ந்ததாகவேதான் இருந்து வந்தது.

தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட கலையானது மனிதர்களை மகிழ்விக்க, மனிதர்கள் ரசிக்க என்பதாக மெல்ல மெல்ல மாறிப்; போனது. ஏனவே தேவதாசிகள் நடனம் ஆடும் முறையும், வாழ்க்கை முறையும் கூட மாறிப்போனது. இந்த நடனக்கலையைத் தேவதாசிகள் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்ததால்தான் இன்னும் இது நம்மிடையே உள்ளது. இக் கலையை அழியாமல் காப்பாற்றியதில் முழுப் பங்கும் தேவதாசிகளினுடையதுதான். தேவதாசிகளால் ஆடப்பட்டு வந்த இந்த நடனக்கலை நட்டுவனார்கள் என்று அழைக்கப்படும், அக் குடும்ப ஆண்களால் மற்றவர்களுக்குக் கற்பிக்கப்படவும் ஆரம்பித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:40

மற்றவர்களுக்கும் இக் கலையைக் கற்பித்த நட்டுவனார்களில் முக்கியமானவர்கள் தஞ்சை நால்வர் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் சகோதரர்கள் சின்னையா, பொன்னையா, சதாசிவம், வடிவேலு ஆகியோர். இவர்கள் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆந் நாட்களில் ஆடப்பட்டு வந்த சதிர் என்பது பரம்பரை, அதைச் சார்ந்த குடும்பம் என்று வழிவழியாக வந்தது. அதில் கற்றுக்க கொடுப்பவர், கற்றுக் கொள்பவர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்து வந்தனர். இந்த நடனம் என்பது இக் காலத்தின் நிகழ்கலை என்ற வடிவத்தைப் பெற்று விட்டதாகவே ஆகிவிட்டிருந்தது.

நிகழ்கலையின் வடிவத்தில் வந்துவிட்டிருந்த நடன நிகழ்ச்சியை மேடையில் எப்படி வரிசைப்படுத்தி ஆடப்பட வேண்டும் என வரைமுறைப்படுத்தியவர்கள் தஞ்சை நால்வர் அது ஆடுபவர் பார்வையாளர்கள் இருவரிடையே ஒரு பாலத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. தஞ்சாவூர் சகோதரர்கள் இந்த நிகழ்கலையைப் புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், ஜாவளி, கீர்த்தனை, தில்லானா, ஸ்லோகம் என வரிசைப்படுத்தினர். இந்த வரிசையில் மேடையில் நடனத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை ஏற்படுத்தினார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:41

பரதத்தின் நன்மைகள்

பரத நாட்டியம் கற்பதனால் ஒருவனுடைய திறன்கள் விருத்தியடைகின்றன. உடல் விருத்தி. உள விருத்தி என்பன வளர்ச்சியடைகின்றன. தனி ஒவ்வொருவரையும் மதிக்கும் தன்மையையும், குழு மனப்பான்மை, பகுத்தறிவோடு நடந்து கொள்ளுதல், ஒற்றுமைத் திறன், அறிவாற்றல், கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று ஆயும் திறன் ஆகிய திறன்கள் விருத்தி செய்யப்படுகின்றன. தவிர சமூகப் பழக்கம், நற்குடிமகனாகுதல், மதிப்பிடும் திறன் ஆகியனவும் ஆளுமைப் பண்புகள் என்பதே எனது கருத்து.

மேலும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும் இக் கலை அனுசரணையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டிய விழாவை ஒழுங்கமைப்பது. பரத நாட்டியக் கச்சேரிகளை நடத்துவது, ஒரு கலைக் கண்காட்சியை ஏற்பாடு செய்தல், நாட்டிய நாடகம் ஒன்றை நெறியாள்கை செய்து அரங்கேற்றுவது, பரத நாட்டிய அரங்கேற்ற வைபவங்கள் நடத்துவது, ஒரு நூல் வெளியீட்டு விழாவினை நடத்துவது போன்ற செயற்பாடுகளும் ஒருவனுடைய தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பனவாக உள்ளன. இவை தவிர நடனப் போட்டிகளை நடத்தி, வெற்றியீட்டியவர்களுக்குப் பரிசில்கள் வழங்குவதற்கான ஏற்படுகளைச் செய்தல் போன்ற இன்னோரன்ன செயல்கள் ஒருவனுடைய தலைமைத்துவப் பண்புகளை; வளர்ப்பதற்கு அனுசரணையாக அமைகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:42

குழு நடனங்களின் மூலம் குழுவில் இணைந்து செயற்படுவதற்கும் சமூகத்தோடு இணைந்து வாழவும் கற்றுக் கொடுக்கிறது. "ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்" என்றும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்றும் பழமொழிகள் காணப்படுகின்றன. ஆகவே. சமுதாயத்துடன் இணைந்து வாழவும் சூழ்நிலைககளுக்கேற்ப இசைவாக்கம் பெறவும் நடனக் கல்வி வழி வகுக்கிறகு என்பது எனது முடிவு.

இவை தவிர நடனக் கல்வியானது கேள்வி ஞானத்தை வளர்க்கிறது. எவன் ஒருவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறானோ அவனே கல்விமான் ஆவான். கேள்வியைப் பற்றிப் பாடப்பட்டுள்ள பாடல்களுள் வள்ளுவப் பெருந்தகையின் இரு வரிக் குறட்பாக்கள் நினைவுக்கு வருகின்றன.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம தலை" (திருக்குறள்;:411)


அதாவது ஒருவன் தனது வாழ்க்கையில் அடையக்கூடிய பல செல்வங்களுள் கேள்விச் செல்வமும் ஒன்றானாலும். அது பிற பிற செல்வங்களுள் எல்லாம் சிறப்பான ஒரு செல்வம் என்று அறிய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

இதே போன்று இன்னுமொரு திருக்குறளும் உண்டு.

"செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்" (திருக்குறள்; :412)


இக் குறட்பாவானது செவிக்கு உணவான கேள்விக்கு இடமில்லாத போழ்திலேயே அறிவை நாடுகிறவர்கள் தம் வயிற்றுப் பசியைப் போக்கிச் சிறிதளவு உணவை உட்கொள்வார்கள் என்பதைச் சுட்டுகிறது.

இவை மட்டுமே நடனக் கல்வியினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எனக் கொள்ளலாகாது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:42

மேலும் நடனக் கலையானது ஒருவனுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற வெற்றியையும் தோல்வியையும் சமமாக நோக்குகின்ற மனப்பாங்கினைப் பெற்றுக்கொள்ள வழி சமைக்கிறது. ஒருவனின் வெற்றியானது இன்னொருவனின் தோல்வி யாகவும். அந்த இன்னொருவனின் தோல்வியானது மற்றவனின் வெற்றியாகவும் அமைகிறது. ஆகவே, தோல்வி என்னும் சொல்லுக்கு வாண்மை நிரம்பப் பெற்றவனின் அகராதியில் பொருள் இல்லை. நடனப் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பற்றுகையில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். ஆகையினால் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளாமலும் இருப்பதற்கு பரத நாட்டியக் கலை துணை புரிகின்றது.

வாழ்க்கையில் ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுகின்ற இன்பகரமான துன்பதரமான நிகழ்ச்சிகளில் மூழ்கி விடாது, ஈடேற்றுகிறது. இன்பமும் துன்பமும் ஒருவனது வாழ்க்கையில் இரவு பகல் போல மாறி மாறி வருவது கண்கூடு ஒருவன் தான் பெற்ற அநுபவங்களினால் புடமிட்;ட தங்கம் போல ஆகிவிடுகிறான். இதுவே அவனை வாழ்க்கையில் ஏற்படுகின்ற சகல இன்னல்களையும் இடையூறுகளையும் எதிர்த்து அவற்றினை ஒரு சவாலாகக் கருதிச் செயற்பட வைக்கிறது.

ஒருவனை செயற் திறன் உடையவனாக்குவதற்க்கும் பரத நாட்டியம் அனுசரணையாக அமைகிறது. நடனம் ஒரு ஆற்றுகைக் கலையாதலால் செயல்முறைக் கல்விக்கு அடிகோலுகிறது. இதுவே மனிதனை வாழ்க்கை நடைமுறைக்கொப்ப வாழ வழிவகுக்கிறது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்று ஒரு பழமொழி உண்டு. கற்பனை உலகில் ஒருவனைச் சஞ்சரிக்க விடாமல் நடைமுறைக்கொப்ப வாழ மனிதனுக்கு நாட்டியம் உதவுகிறது. கவலையைப் போக்குகின்ற ஒளடதமாகவும் பரத நாட்டியம் விளங்குகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Oct 2008 - 12:43

வாழ்க்கையில் ஏற்படுகின்ற வெற்றி தோல்விகளை மன அமைதியுடனும் முக மலர்ச்சியுடனும் எதிர்கொள்வதற்கு மனிதன் தயார் படுத்தப் படுகிறான். நடனம் ஆடுகின்ற பொழுது ஆடுபவர் தனது உடற்களைப்பையும். சோர்வினையும் முகபாவத்தால் காண்;பிக்காது சந்தோஷமாக ஆட வேண்டும் என்பது நடனமாடுபவருக்கு இருக்க வேண்டிய பத்துக் குணங்களில் ஒன்றாகும். அப் பத்து இலட்சணங்களும் ஜவஹ. ஸ்திரத்வம். ரேக்கா, ப்றமரீ, த்ருஷ்டி, அஷ்ரமஹ, மேதா, சிரத்தா, வளளசோ, கீதம் என்பனவாம். இதற்குரிய சுலோகம் தரப்பட்டுள்ளது.


சுலோகம் பாத்திரப் ப்ராணாஹ

ஜவஹ்ஸ்திரத்வம் ரேக்காச்ச ப்ரமரீ த்ருஷ்டிரஷ்ரமஹ
மேதா ஷ்ரத்தா வச்சோ கீதம் பாத்ரப் ப்ராணா கஷஸ் ஸ்ம்ருதாஹ


Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக