ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரத நாட்டியம்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பரத நாட்டியம் Empty பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:38 am

பரத(நாட்டியம்) நிருத்தியம்

தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.

இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்­கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:39 am

சதிர்நடனத்திற்கு இன்றியமையாதது வாய்ப்பாட்டு. இது கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டது. மிருதங்கம், இதற்கு ஒரு முக்கியமான பக்கவாத்தியமாகும். நட்டுவனார் ஆட்டுவிக்க உபயோகிக்கும் கைத்தாளம் நடனத்திற்கு இயக்குனர் பயன்படுத்தும் கருவியாகும். நட்டுவனார் என்பவர் குருவாகவும் மேடையில் சொற்கட்டுக்களை சொல்பவராகவும் இருக்கலாம். இந்த சொற்கட்டுகள் பாட்டுக்கு இடையேயும் கூட வரும். நட்டுவாங்கம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், முகவீணை, துத்தி ஆகியவை சேர்ந்து இதற்கு இசைக் குழுவாக விளங்கி வந்தது.

சதிரில் அணியும் ஆடைகள் பல வண்ணங்களில் இருக்கும். தங்க நிறத்தில் அல்லது தென்னிந்திய கலாச்சார வழக்கமான தங்கத்தில் கற்களை பதித்த நகைகளையே அணிவர். வெள்ளி நிறத்தில் உள்ள நகைகளை உபயோகிப்பதில்லை.

பரத நிருத்தியத்தில் முழுமையான தேர்ச்சி பெற்றால் எந்த வகையான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கலாம். பாரதத்திலும் இன்னும் வெளி நாடுகளிலும் கூட இது புகழ் பெற்று விளங்குகிறதென்பது இதற்கு எடுத்துக்காட்டாகும்.

மேலே கூறப்பட்டுள்ள இந்த நடனத்தின் குணாதிசயங்கள் சென்ற இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்து வரும் மரபின் அடிப்படையில் குறிப்பிட்ட விவரங்களாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:41 am

பரதத்தின் பாதை

கவிதை, இலக்கியம், இசை, ஆகியவற்றிலும் ஒருவனுக்கு ஈடுபாடு ஏற்படச் செய்கிறது. தலை சிறந்த நடன ஆசிரியர்கள். ஆட்டக் கலைஞர்கள் இலக்கியத்திலும் சிறிதளவேனும் ஆர்வமும் புலமையும் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக. டாக்டர் பத்தமா சுப்பிரமணியத்தை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல. சிறந்த இசையமைப்பாளரும் கூட. கூடவே இலக்கிய இரசனையும் கொண்டவராகத் திகழ்கிறார். இதனை அவர் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் கம்பன் புகழ் பாடித் தமிழன்னைக்குத் தொண்டாற்றி வரும் கம்பன் கழகத்தினர் நடத்திய கம்பன் விழாவில் நிகழ்த்திய நடனக் கச்சேரி மூலம் உணர்த்தியுள்ளார்.

கம்பநாட்டாள்வாரின் இராமாயணப் பாடல்களுக்குத் தனது பாணியிலேயே நாட்டியம் அமைத்து நடித்துக் காண்பித்தது இன்றும் பார்வையாளர்களின் மனங்களில் அழியா ஒவீயமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டியத்தில் லோக தர்மி, நாட்டிய தர்மி, என்னும் இரு வகை காணப்படுகின்றன. லோக தர்மி மூலம் பத்மா சுப்ரமணியம் கம்பநாட்டாள்வாரின் பாடல்களுக்கு அபிநயம் செய்வதை நாம் மறக்க முடியாது. லோக தர்மியானது நாட்டிய தர்மியைக் காட்டிலும் மக்களைச் சென்றடைகிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது.


டாக்டர் பத்மா சுப்ரமணியம் இருபது ஆண்டுகளுக்கு முன் கொழும்பில் வந்து பரத நாட்டியம் ஆடிய பின். "பத்மாவின் பரதம் நிலைக்குமா?" என இலங்கையிலுள்ள தமிழ் தினசரிப் பத்திரிகைகள் கேள்விகளைத் தொடுத்தன. ஆனால் இன்றுவரை பத்மாவின் பரதம் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:41 am

பரத நாட்டியக் கலையானது மற்றவரின் திறமைகளைப் போற்றவும் இரசிக்கவும் தூண்டுகோலாய் அமைகிறது. மற்றவர்களிடமுள்ள திறமைகளை ஆற்றல்களை இனங்கண்டு மதித்து வாழப் பழக்குகிறது. ஒவ்வொரு கலைஞனிடமும், ஆசிரியரிடமும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. ஒருவர் நடனத்தை சுத்தமாக அதாவது அழுத்தந் திருத்தமாகக் கற்பிப்பதில் கவனஞ் செலுத்தி அதில் பாண்டித்தியம் உடையவராகக் காணப்படுவார் இன்னொருவர் ஆக்கத் திறனுள்ளவராக விளங்குவார். மற்றொருவர் குழு நடனங்களைச் சிறப்பாக அமைக்கும் திறமை உள்ளவராக இருப்பார் இன்னுஞ் சிலர் நாட்டிய நாடகங்களை வெகு நேர்த்தியாக வடிவமைப்பதில் தமது சாமர்த்தியத்தை வெளிக்காட்டுவர். வேறு சிலர், மரபு வழி வந்த பரத நாட்டியத்தைப் பயிற்றுவிப்பதிலும், கிராமிய நடனங்களை வடிவமைப்பதிலும் ஆற்றல் உடையவர்களாக விளங்குகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு நடன ஆசிரியரிடத்திலும் ஒரு தனித்துவம் காணப்படுகிறது. மற்றைய ஆசிரியர்களிடமும் கலைஞர்களிடமும் காணப்படுகின்ற திறமைகளைக் கண்டு அழுக்காறடையாது அவற்றைப் போற்றிப் பெருமைப்பவதற்கு பரத நாட்டியக் கலை வழி வகுக்கிறது.

தவிர மனித ஆளுமைப் பண்புகளில் ஒன்றெனக் கருதப்படும் சொல்வன்மையை விருத்தி செய்வதற்கும் பரத நாட்டியம் உதவுகிறது. திருவள்ளுவரும் தனது குறட்பாவில்

கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாகும்
வேட்ப மொழிவதம் சொல்"
(திருக்குறள்:643)

எனக் கூறியுள்ளார். அதாவது கேட்பவர்களைத் தன்னோடும் பிணைத்துக் கொள்கின்ற கவர்ச்சி உடையதாகவும் பகையுற்றவனும் தன்னை விரும்பச் செய்வதாகவும் பேசுவதே சொல்லாற்றல்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:46 am

மனித ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியம்

மனித ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியத்தின் பங்களிப்பினை நாம் ஆராயு முன். மனிதன் என்பவன் யார் என்பதையும் மனித ஆளுமைக்குரிய வரைவிலக்கணங்கள் யாவை என்பதையும் அறிந்து கொள்ளுதல் அவசியமானதாகும்

மனிதன் என்னும் சொல்லுக்கு "சிந்திக்கும் உயிரி" என்பதே கருத்து. மன் என்னும் சமஸ்க்ருத வினையடியிலிருந்து பிறந்த பதம் தான் மனிதன் என்னும் சொல். மன்- என்றால் சிந்தித்தல் என்று கருத்தாகும். ஆகவே மனிதன் என்பவன் சிந்திக்கும் வல்லமை உடையவன் என்பது தெளிவாகிறது. மனிதன் என்பவன் விலங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவன் என்பதனை டார்வினின் கூர்ப்புக் கொள்கை விளக்குகிறது.

ஆறறிவு உடையவன் மனிதன் எனவம். பகுத்தறியும் திறன் உடையவன் என்பதும் அறிஞர்கள் ஆராய்ந்தறிந்த முடிவாகும். ஒரு தனி மனிதனைப் பூரணமாக்குவதே கல்வியின் நோக்கம் எனின் அதற்கு நடகத்தின் பங்களிப்பு எத்தகையது என்பதை நாம் ஊகித்தறியலாம். இற்றைக்கு இரண்டாயிரத்து நானூநுறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ என்பவர் "இசை நடனம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றவனே கல்விமான்" ஆவான் எனக் கூறியுள்ளார்.

"கல்வி என்பது குழந்தைகளிடமிருந்து முழூ மனிதனை வெளிக் கொணர்வது. முழூ மனிதனை உருவாக்குவது அவனுடைய ஆளுமை. எனவே மனிதனி உடல், உள்ளம், ஆன்மா, இருதயம் என்பவற்றை ஒருமித்த வகையில் விருத்தி செய்து ஆளுமையடையச் செய்வதே கல்வியின் பயனாகும்" என்பதே காந்தியடிகளின் கல்வித் தத்துவ விளக்கமாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:46 am

பரத நாட்டியம் தனி மனிதனின் ஆளுமையை விருத்தி செய்வதற்கு எவ்வளவு; வழி முறைகளில் அனுசரணையாக அமைகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஆளுமைக்குரிய வரைவிலக்கணத்தையும், ஆளுமைப் பண்புகளையும். ஆளுமையை எவ்வாறு அளவிடலாம் என்பதையும் அறிந்து கொள்வது பொருத்தமாகும்.

ஆளுமை என்பது ஒருவருடைய தோற்றம். மனப்பாங்கு தலைமை தாங்கும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது எனலாம். மேலும் ஒரு தனிநபரிடம் காணப்படும் எல்லா குணங்களும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்ததுதான் ஆளுமை எனவுங் கூறலாம். அதாவது ஒவ்வொரு தனி மனிதனும் திறமை. அடைவு ஆகியனவற்றில் மாத்திரமன்றி, மன எழுச்சி, கவர்ச்சிகள், மனப்பான்மைகள், பற்றுக்கள் ஆகியனவற்றிலும் வேறுபடுகின்றான். இவ் இயல்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான தன்மையே ஒருவனின் ஆளுமையாகும்.

ஆளுமை பற்றிக் கல்விமான்களும், உளவியலாளர்களும். அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களை நோக்குவோம்.

ஆளுமை பற்றிய வரைவிலக்கணங்களில் அதன் தனித்துவம். அமைப்பு, முழுமை ஆகிய இயல்புகள் வலியுறுத்தப்படுகின்றன. ஒரு சமூக நிலைமைக்கு ஒருவனுடைய அகம் கொண்ட உடல்-உள்ளத் தூண்டற் பேறுகளின் ஒருமையான அமைப்பே ஆளுமை என்று பேர்ட் என்னும் கல்வியியலாளர் கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:47 am

"ஒருவன் தனது சூழலுடன் கொண்ட தனியான பொருத்தப்பாடுகளை அவனுடைய அகத்தினுள் தீர்மானிக்கும் உளவியல் முறைகளின் அமைப்பே ஆளுமை என்று ஆல் போர்ட் என்னும் உளவியலறிஞர் கூறியுள்ளார். அதாவது சூழலுக்குத் தக்கவாறு இசைவாக்கம் அடைந்த உளத்தொகுதிகளின் ஒரு இயக்க நிலையே ஆளுமை ஆகும் என்பதே அவருடைய கருத்தாகும்.

ஒருவரிடம் காணப்படும் பற்றுணர்வும் சமூக மனப்பான்மையும் சேர்ந்த அடுக்கமைப்பும் ஆளுமையாகும் என செறில் என்னும் அறிஞர் கூறுகிறார்.

ஒருவனுடைய நடத்தைகள், மனப்பான்மைகள், திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றின் தனியான ஒருங்கிணைப்பே ஆளுமை என்பதே மண் என்னும் அறிஞரின் கருத்தாகும். அதாவது ஒருவனுடைய அமைப்பு. பழக்க வழக்கங்கள். ஆர்வம், ஆற்றல், மனப்பாங்கு, உளச்சார்வு ஆகியவற்றின் மிக லயமான ஒரு ஒருமைப்பாடே ஆளுமையாகும் என்பதே இவரது கருத்து.

பொறுப்புணர்ச்சி, நேர்மை, நல்லொழுக்கம், பரந்த மனப்பான்மை, உறுதியான சிந்தனை, முகமலர்ச்சி, நல்ல சமூக இசைவுகள் ஆகியவற்றை எவன் ஒருவன் உடைத்தாய் இருப்பானோ அவனே முதிர்ந்த ஆளுமையை உடையவன் என மதிக்கப்படுவான்.

இக் கூற்றுகளின்படி ஆளுமையைப் பல காரணிகள் கட்டு;ப்படுத்துவதால் எந்த இருவரிடையேயும ஒரே விதமான ஆளுமை காணப்படு;வதில்லை. இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த குழந்தைகளில் கூடஇ சுறுசுறுப்பு வாயாடித்தன்மை. கோபம் இ கவலை முதலிய உணர்வுகள் விவேக ஈவு ஆகிய இயல்புகளில்; ஆளுமை வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:47 am

இனி, ஒரு தனி மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் பரத நாட்டியத்தின் பங்களிப்பு பற்றி நோக்குவோம்.

பரத நடனக் கலையானது ஒருவனின் உடைலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தாளத்திற்கேற்ப பாதங்கள் நர்த்தனம் செய்வதும் ஒரு கட்டுக் கோப்புக்குள் தான் நடைபெறுகிறது. இதனைத்தான் லயம் என்கிறோம். லயத்துடன் ஆட வேண்டும் என்றால் உள்ளமும் லயித்துப் போக வேண்டும். மனமானது உடலைக் கட்டுப்பா ட்டிற்குள் வைத்திருக்கும். ஆகவே, இவ்விரு அம்சங்களிலும் நடனம் ஒருவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவுகிறது எனில் மிகையாகாது.

தவிர, ஆற்றல்களை விருத்தி செய்து ஒருவனின் ஆளுமையை வளர்ப்பதற்கு பரத நாட்டியம் எவ் எவ் வகைகளில் உதவி புரிகின்றது என்பதை ஈண்டு நோக்குவோம். ஆற்றல்கள் பலவகைப்படும். அவற்றுள், அறிவு, திறன், முதலியவற்றிலும் கற்பனை, சிந்தனை, செயற்பாடு, தலைமைத்துவம், நினைவாற்றல், வீரம் நெறியாள்கை போன்றவற்றிலும் ஒருவனிடத்தே காணப்படும் ஆற்றல்களை பரதம் வளர்க்கிறது.

ஆற்றல்கள் பலவகைப்படும். அவற்றுள், அறிவு, திறன், முதலியவற்றிலும் கற்பனை, சிந்தனை, செயற்பாடு, தலைமைத்துவம், நினைவாற்றல், வீரம் நெறியாள்கை போன்றவற்றிலும் ஒருவனிடத்தே காணப்படும் ஆற்றல்களை பரதம் வளர்க்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:49 am

அபிநயம்

அபிநயம்' என்பது ஒரு வடமொழிச் சொல். 'அபி' என்பதற்கு முன் என்று பொருள். 'நயம்' என்ற பதத்தின் வினைப்பகுதியான 'நீ' என்பதற்கு 'அடைவித்தல்' என்பது பொருள். ஆகையால் 'அபிநயம்' என்பது பார்ப்பவர்கள் முன்கொண்டு வருதல் எனப் பொருள்படும். ஒரு எண்ணக்கருவை அங்க அசைவுகளாலும், முக பாவங்களினாலும் வெளியிடுதல் என்றும் கூறலாம். கதாபாத்திரத்தின் தன்மையையும் மென்மையான உணர்வுகளையும் அவ்வப் பாத்திரங்களின் பல்வேறு வகைப்பட்ட மனோபாவங்களையும் பார்ப்பவர்கள் கண்டு இரசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டதே அபிநயம். அபிநயம் நால்வகைப்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by சிவா Tue Oct 07, 2008 10:52 am

ஸ்லோகம்

ஆங்கிகோ வாசிகஸ் சைவ ஆஹார்யஹ ஸாத்விகாஹ
சத்வாரோ அபிநயாத் த்யதே விக்ஙேயா நாட்யஸம்ஸ்ரயா


இதன் கருத்து என்னவெனில், ஆங்கிகம், வாசிகம், ஆஹார்யம், ஸாத்விகம் ஆகிய நான்கும் அபிநயத்தின் வகைகளாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரத நாட்டியம் Empty Re: பரத நாட்டியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum