புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
பட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_lcapபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_voting_barபட்டினிக்கு வயது பத்து - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினிக்கு வயது பத்து


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 1:25 am

First topic message reminder :

பட்டினிக்கு வயது பத்து

யாருக்காகவோ அவர்கள் நீண்ட நேரமாய் காத்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கசிந்த விடுதலை வேட்கையும், கொந்தளித்துப் பொங்கிய உணர்வு நிலையும் களம் நுழையும் முன்னால் தங்களது தலைவனின் கட்டளைக்காக காத்திருக்கும் போராளிகளின் நிலையை ஒத்திருந்தது.

ஆனால் அவர்கள் காத்திருந்தது அவர்களது கவிஞனுக்காக. தங்களது விடுதலைப் போருக்கான வெறியை, ஆவேசத்தை, வேட்கையை அவனது நான்கைந்து வரிகளால் சானை பிடித்து கூர் தீட்டிக்கொள்ளவே அவர்கள் காத்துக் கிடந்தார்கள்.

அவர்கள் அந்தக் கவிஞனின் ஜனங்கள்: அவனோ அந்த ஜனங்களின் கவிஞன்.

அவன் மாயோகோவஸ்கி

"தோழர்களே..."

அவனது ஒற்றை வார்த்தையில் கொந்தளித்து, ஆர்ப்பரித்து அடங்கியது கூட்டம்.

தொடர்ந்தான்

"தோழர்களே !
லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும் ஏந்தி..."

அவனை முடிக்க விடவில்லை கூட்டம். ஒரே குரலெடுத்து உரக்க முழங்கினார்கள்

" லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும்
எங்கள் மாயோகோவஸ்கியை
இதயங்களிலும் ஏந்தி
களத்திற்கு போகிறோம்"

உயிரோடு இருக்கும் போதே மாயோகோவஸ்கிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் நமது பாரதி மற்றும் பாரதி தாசன் இருவருக்கும் கிடைக்காத அங்கீகாரம். இன்குலாப் உள்ளிட்ட நமது சம கால மக்கள் கவிகளுக்கும் இதுதான் கதி. என்ன செய்வது உயிரோடு இருக்கும் வரை நல்லவர்களை கொண்டாடு வதில்லை என்று நாம்தான் யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்து விட்டோமே.



அதனால்தான் பெரும்பான்மை ஆசு கவிகள் காசு கவிகளாய் மாறி சொகுசாகிப் போனார்கள்.

எழுதுவது, பதிப்பிப்பது, பேட்டிகளை அளிப்பது, வாழ்வை சொகுசாக்கிக் கொள்வது என்று சுருங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் பசியில், அவலத்தில், போராட்டத்தில் அவர்களோடு நிற்பது என்பதாக தனது எழுத்துக்கு வாழ்க்கையை பொழிப்புரையாக தந்தவன் மாயோகோவஸ்கி. அவனது நேர்மைக்கும் தியாகத்திற்கும் கொஞ்சமும் குறையாத அங்கீகாரத்தை மக்கள் அவனுக்கு வழங்கினார்கள் என்பதும் சேர்த்தே கொள்ளத் தக்கது.

" பேனாதான் இருக்கும்
எப்போதும்
என் கைகளில்
என்று சொல்ல
நான் ஒன்றும் நீஅல்ல
நண்பனே

தேவைப் படுமெனில்
என் கைகள் காலம் தரும்
கருவி ஏந்தும்"

என்று வண்ணை வளவன் ஒரு முறை எழுதியாதாய் ஞாபகம். இந்த வரிகளில் பெருகி வழியும் மாயோகோவஸ்கியின் தாக்கத்தை யாரு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பரவசமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் தம்பி சுபாஷ் (கன்னகன்) அவர்களின் "பறவைக்குள் அடையும் கூடு" நூலை வெளியிட்டு பேசும் போது மனதைப் பிசையும் ஒரு காட்சியை ஏதோ ஒரு வேற்று மொழிப் படத்திலிருந்தோ சிறு கதையிலிருந்தோ சொன்னார் எஸ். ராமகிருஷ்ணன்.

குழந்தைகளையும் கூடைகளையும் முதுகுகளிலும் ரணங்களையும் வலியையும் தங்கள் உடல் முழுமையும் சுமந்தபடி தேயிலை கிள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

முதுகிலே சுமக்கும் தங்களது குழந்தைகளுக்கு பசியெடுத்து அலறினாலும் அவர்களுக்கு தாய்ப் பால் கொடுக்க அனுமதித்ததில்லை ஆண்டைகள். பசியால் அலறி அலறியே செத்துப் போன குழந்தைகள்

ஏராளம்: மாரிலே பால் கட்டி இறந்துபோன தாய்மார்களும் ஏராளம்.

கீழத் தஞ்சையில் நம் அம்மாயி மற்றும் அப்பாயிகளுக்கும் கிடைத்த அதே அனுபவம். உலகம் முழுவதும் ஆண்டைகள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

ஒரே வித்தியாசம் அவர்கள் குழந்தைகளை முதுகிலே சுமந்தபடி வேலை பார்த்தார்கள். நம் தாய்மார்கள் வரப்போரத்தில் இருக்கும் மரங்களின் கிளைகளில் தொட்டில் கட்டிப் போட்டிருப்பார்கள்.

இந்த வேதனையிலிருந்து தப்பிக்க நமது தாய்மார்கள் ஒரு மார்க்கம் கண்டனர். மார்கட்டி வலி எடுக்கும் பெண்ணை மற்ற பெண்கள் மறைத்தபடி சுற்றி நின்று கொள்வார்கள். அந்தப் பெண் தனது முலைப் பாலை வயலிலே பீய்ச்சி தன்னைத் தற்காத்துக் கொள்வாள். இதிலுங்கூட தாய்மார்களை காப்பாற்ற முடிந்ததே தவிர குழந்தைகளின் இழப்பை மட்டுப் படுத்த முடியவில்லை.

இப்படி காவேரித் தண்ணீரோடு எங்கள் தாய்மார்களின் தாய்ப் பாலையும் சேர்த்தே குடித்து வளர்ந்த நெல் சோறு சாப்பிட்டு வளர்ந்த ஒரு பெரியவர் தான் சொன்னார் "வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள்" என்று.

அவரிடம் போய் வந்த பத்துப் பன்னிரண்டு பேரைத் தவிர மற்றவர்களை அவருக்கு அப்படித்தான் தெரியும் பெருந்தன்மயோ என்னவோ " உழைக்கும் பெண்களில் பெரும் பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு எப்படி ஐயா? " என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம் காக்கிறது தமிழ்ச் சமூகம்.

அந்தக் கதைக்கு வருவோம் .

தேயிலைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கி வருகிறான் அவர்களின் கவிஞன். அவர்களது அவலத்தில், வாழ்வில், வலியில், கண்ணீரில், புன்னகையில் அவர்களோடு ஒருவனாய், அவர்களில் ஒருவனாய் அவர்களிடமிருந்து ஒரு அங்குளம் கூட அந்நியப் படாதவனாய் வாழ்பவன். அந்த ஜனங்கள் தங்கள் கவிஞனது வாக்கு பலிக்கும் என்று நம்பினார்கள்.

புன்னகைத்தவாரே அந்தப் பெண்களின் அருகே வந்தான் கவிஞன். அவனைக் கண்டதும் அவர்களது கவலைகளும் வலியும் பறந்தே போனது. மலர்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார்கள்.

"நலமா?"

நலமென்று எப்படி சொல்ல முடியும் அவர்களால்.



"நலமென்று கூட சொல்ல முடியாமல் என் ஜனங்களை மௌனக் கடலுக்குள் தள்ளியது எது?"

"உம்மால் எமக் கொன்று ஆக வேண்டும் கவியே!"

" என்னிடம் கேட்க என்ன தயக்கம். எது வேண்டும், கேள் தாயே!"

"முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு கவியே! . மார் கட்டாது நாங்களும் பசியாறி குழந்தைகளும் பிளைத்துக் கொள்வோம்."

அவர்களது சோகத்தில் கறைந்து நெகிழ்ந்து போன கவிஞன் சொன்னான் "அப்படியே ஆகட்டும்"

முதுகுக்கு நகர்ந்தன முலைகள்.

நடக்குமா? மூடத்தனமல்லவா? அதுபற்றியெல்லாம் நாம் கவலைப் படப் போவதில்லை. தங்களுக்காகவும் தங்களோடும் வாழ்ந்த கவிஞன் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் காட்டவே மேற்சொன்ன காட்சியை ஞாபகம் கொண்டோம்.

சமீபத்தில் "பெண்ணியம்" இணையதளம் வழியே ஒரு மாபெரும் மக்கள் கவியைக் கண்டேன். வாசித்து முடிந்ததும் கண்ணீரைக் கட்டுப் படுத்த படாத கஷ்டம் பட்டேன்.

"ஐரோம் ஷர்மிளா" மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கவிஞர். 1958ஆம் ஆண்டு "ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்" கொண்டு வரப் பட்டது. இதன்படி சந்தேகப் படும் யாரையும் விசாரனையின்றி கைது செய்யலாம், சுட்டும் கொல்லலாம். இந்த சட்டம் காவு கொண்ட எண்ணிக்கை மிக அதிகம்.

"பாலியல் இம்சைகள்" பற்றி எழுதினால் நீளும் , நீளும் , நீண்டுகொண்டே போகும்.

இதைக் கண்டித்து 02.11.2000 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா. பல் துலக்கினால் வாய் வழியே நீர் போய்விடும் என்பதால் பல் துலக்குவதை தவிர்க்கிறார். ஒரு பருத்தித் துணியால் பற்களைத் துடைத்துக் கொள்கிறார்.

அவரைக் கைது செய்த அரசாங்கம் கட்டாயப் படுத்தி மூக்கு வழியே அவருக்கு திரவ உணவை செலுத்திக் கொண்டிருக்கிறது.



எனக்கு இருக்கிற கேள்வி ஒன்றுதான். தங்களோடும் தங்களுக்காகவும் வாழ்ந்த கவிகளை அந்தந்த சமூகங்கள் அங்கீகரித்து கொண்டாடியிருக்கின்றன.

"கல்வி பாஷை" யில் சொன்னால் இரண்டு பிரிவேளைகளுக்கும் சற்று குறைவான நேரமே நடைபெற்ற , மிகச் சரியாய் சொல்வதெனில் "காலை சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடைப் பட்ட நேரத்தில்" நடந்த ஒரு கூத்தினை "உண்ணா விரதம்" என்றும் "தியாகத்தின் உச்சம்" என்றும் கூத்தாடிக் கொண்டாடிய நாம், தனது உடலை, இளமையை, வாழ்க்கையை தியாகித்துப் போராடும் இந்தப் போராளிக்கு என்ன செய்யப் போகிறோம்?

பின் குறிப்பு

இந்தக் கட்டுரையை முடிக்கிற தருவாயில் ஐரினா ஷர்மிளா விடுதலை செய்யப்பட்ட செய்தி வந்தது. இந்த தகவலை பத்துப் பேரிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்னமே சுகன் சொன்னார் "திரும்பவும் அந்த அம்மாவ கைது பண்ணீட்டாங்களாம் எட்வின்"



இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 17, 2010 5:23 am

அமுதா wrote:ஆமாம் எட்வின்

அந்தம்மா இப்ப விடுதலை ஆயிட்டாங்களா?

இல்ல அமுதா.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 17, 2010 5:26 am

பிளேடு பக்கிரி wrote:பட்டினிக்கு வயது பத்து - Page 2 677196 பட்டினிக்கு வயது பத்து - Page 2 677196 பட்டினிக்கு வயது பத்து - Page 2 677196 பட்டினிக்கு வயது பத்து - Page 2 677196

நன்றி தோழர்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 17, 2010 8:00 pm

ரபீக் wrote:மிகவும் சிறந்த பதிவு ,பகிர்வுக்கு நன்றி தோழரே

பதிவுக்கே நன்றி எனில் அந்த அம்மாவின் தியாகத்திற்கு எதைத் தருவோம்?

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 17, 2010 8:01 pm

மிக அருமையான பகிர்வு நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 17, 2010 8:11 pm

சபீர் wrote:மிக அருமையான பகிர்வு நன்றி தோழரே

எதையும் விட அதிகமான தியாகம் அந்த அம்மாவின் தியாகம் சபீர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 17, 2010 8:16 pm

இரா.எட்வின் wrote:
சபீர் wrote:மிக அருமையான பகிர்வு நன்றி தோழரே

எதையும் விட அதிகமான தியாகம் அந்த அம்மாவின் தியாகம் சபீர்

ஆமாம் அந்த தியாகத்தை நான் நிச்சயம் பாராட்டக்கடமைப்பட்டுள்ளோம் நன்றி தோழரே.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 17, 2010 10:16 pm

சபீர் wrote:
இரா.எட்வின் wrote:
சபீர் wrote:மிக அருமையான பகிர்வு நன்றி தோழரே

எதையும் விட அதிகமான தியாகம் அந்த அம்மாவின் தியாகம் சபீர்

ஆமாம் அந்த தியாகத்தை நான் நிச்சயம் பாராட்டக்கடமைப்பட்டுள்ளோம் நன்றி தோழரே.

நாம் வாழும் காலத்து தியாகத்தின் உச்சம்

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sat Jul 17, 2010 11:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 18, 2010 6:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jul 18, 2010 1:32 pm

drrajmohan wrote: பட்டினிக்கு வயது பத்து - Page 2 677196 பட்டினிக்கு வயது பத்து - Page 2 677196 பட்டினிக்கு வயது பத்து - Page 2 677196 பட்டினிக்கு வயது பத்து - Page 2 677196 பட்டினிக்கு வயது பத்து - Page 2 678642 பட்டினிக்கு வயது பத்து - Page 2 678642

நன்றி தோழர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக