புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
1 Post - 25%
viyasan
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10எங்கெங்கு காணினும் இருள்! Poll_m10எங்கெங்கு காணினும் இருள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கெங்கு காணினும் இருள்!


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 06, 2010 2:35 pm

உரத்த சிந்தனை : எங்கெங்கு காணினும் இருள் : டாக்டர் பி.உமேஷ் சந்தர் பால்

"தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியே அவர்க்கொரு குணம் உண்டு...'நாமக்கல் கவிஞர் அப்படி பாடியது சரி தான்! தமிழன் யார்? மறக்குலவீரன்;வீரத்தில் சிங்கம்; விவேகத்தின் இமயம். சோம்பலே இல்லாமல் உழைப்பதில்
தமிழனுக்கு நிகர், உலகில் எவருமே இல்லை.

அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, ஆப்ரிக்கா, அரபு நாடுகளில் பணியாற்றியதனால், இந்த உண்மைகளை நான் அறிந்து இருக்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் நான் பணியாற்றிய போதும், இந்த உண்மைகளை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.சாட்டிலைட்டில் இருந்து உலகைப் பார்த்து எடுக்கப்பட்ட போட்டோக்களை அமெரிக்க அதிபர் ஒபாமா பார்த்துக் கொண்டு இருந்தார். சீனா பகுதியில் தேனீக்கள் போல திட்டாக அங்கங்கே கூட்டங்கள் தெரிந்தது."இது என்ன நீர்நிலைகளா?' என்று ஒபாமா கேட்டார். "இல்லை. ஐயா, இது தான் சீன மக்கள் கூட்டம், அவர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு சென்று கொண்டு இருக்கும் கூட்டங்களைத் தான் பார்க்கிறீர்கள்' என்று, அதிகாரிகள் சொன்னார்கள்."சுறுசுறுப்பானவர்கள்,சீனர்கள்...' என்றார் ஒபாமா. அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் போட்டோக்களைப் பார்த்தார். "இந்த பாலைவனத்தில் விண்ணை முட்டும் கட்டடங்களா?' என்று, வியந்தார்.

"ஐயா, இதுவெல்லாம் இந்திய-பாகிஸ்தானிய தொழிலாளிகள் கட்டிய மாபெரும் மாளிகைகள்...' என்று, பெருமிதத்தோடு முக்கிய அதிகாரி, ஒபாமாவுக்கு கூறினார். அந்த அதிகாரியும் ஒரு தமிழர் தான்.பிறகு, இந்தியா பற்றிய சாட்டிலைட் படங்களைப் பார்த்தார். டில்லி படங்களில், "என்ன பார்லிமென்ட் சுற்றி ஒரே கார்களாக இருக்கிறதே. நமது வெள்ளை மாளிகையை சுற்றிக்கூட இவ்வளவு கார்கள் நிறுத்தப்படுவதில்லையே' என்று, ஆச்சர்யத்துடன் சொன்னார்."ஐயா. அதுவெல்லாம் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு, 35 கோடி லஞ்சம் கொடுக்க ஓடோடி வந்து இருக்கும் சில கான்ட்ராக்டர்களுடைய கார்கள்...'என்று, அதிகாரிகள் கூறினர்.

பிறகு, தமிழகம் பற்றிய சாட்டிலைட் படங்களைப் பார்த்தார். "ஐய்யயோ! இது என்ன தமிழகம் முழுவதும் அங்கங்கே திட்டு திட்டாகத் தெரிவது நீர் நிலைகள் தானே? மறுபடியும் சுனாமி தமிழகத்தில் புகுந்து அங்கங்கே நீர்நிலைகளாக தெரிகிறதா?' என்று, ஒபாமா கவலையுடன் கேட்டார்." சுனாமி அல்ல. தமிழகத்தில் அங்கிங்கு என எங்கும் பரவி இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூடி நிற்கும் மக்கள் கூட்டம்' என்று கவலையோடு அந்த தமிழ் அதிகாரி கூறினார்.இது தான்,தமிழகத்திற்கு திரும்பிய உடன் நான் இப்போது பார்த்த முதல் காட்சி.டில்லியில் மது விற்கும் கடைகள் இருப்பதே தெரியாது; கூட்டங்களும் இருக்காது. கோல்கட்டாவில் மது விற்கும் கடைகளைத் தேடிப்பிடிக்க வேண்டி இருக்கும். மத்திய பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் இதே கதை தான்.கர்நாடகா பார்கள் நிறைந்த மாநிலம்.

ஆனால், அங்கே கூட பார்களிலும், மது விற்கும் கடைகளிலும் கூட்டம் நிறைந்து இருப்பது கிடையாது. நமது தமிழகத்திலோ, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் காலை, மாலை, இரவு என்று அலைமோதுகிறது. எந்த டாஸ்மாக் கடையின் விளிம்பிலும், ஒரு கிழிந்த பனியன் அணிந்து ஒரு பணியாளர், ஒரே பாத்திரத்தில் பீப், முட்டை என்று எல்லா வித கலப்பட உணவுகளையும் கொதிக்க வைத்து, கொடுத்துக் கொண்டு இருப்பார். பார்களையாவது கொஞ்சம் சுத்தமாக,பார்ப்பதற்கு சகிக்கிற வகையில் வைத்துக் கொள்ள கூடாதா?தமிழன், தனது உழைப்பு நேரங்களை, பொன்னான நேரங்களை தண்ணி போடுவதில் செலவழிக்கிறான்.பிறகு, வீட்டிற்குச் செல்வதற்கு இரவு பதினொன்று, பனிரெண்டு மணியாகிவிடுகிறது. பிறகு அவனது குடும்ப வாழ்க்கையில் என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது?மகாராஷ்டிராவில் நாக்பூர் அருகே பேலா என்ற இடத்தில் இருக்கும் சர்க்கரை ஆலையின் பாய்லரின் வெப்பத்திலேயே கரும்பு சக்கைகளைப் போட்டு, 32 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கின்றனர்.

நாக்பூர் மாநகராட்சியில் சாக்கடை தண்ணீரை சுத்திகரித்து, ஒரு மின் நிலையத்திற்கு கொடுத்து பத்து கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். துபாயில்,சிறிதளவு கிடைக்கும் அல்லது தேங்கும் தண்ணீரில் கூட மின்சாரம்
எடுக்கின்றனர்.தமிழன் ஏன் இன்னும் இப்படி ஆக்கபூர்வமாக உழைக்க மறுக்கிறான்? அவனுக்கு நேரம் கிடைக்க வில்லையா? இல்லை... இது எல்லாம் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுக்கள் தான். படித்தவர்கள் ஒருவர் கூட அரசியலை எண்ணிப் பார்க்க முடியாத சூழ்நிலை. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லாத அரசியல்வாதிகளால் நாடு எப்படி முன்னேறும்?ஆனால்,தமிழகத்தில் அரசியல் எப்படி உள்ளது? சுய கவுரவத்தை விட்டுவிட்டால் தான் படித்தவர்களால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும். துதி பாட வேண்டும்; அந்தந்த கட்சியின், கரை துண்டுகளை வேஷ்டிகளை கட்டிக் கொள்ள வேண்டும்; தமது மாவட்ட தலைவன் பின்னால் கண்டிப்பாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்;பிடிக்கிறதோ, இல்லையோ அந்த தலைவன் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டும்; அந்த தலைவனது கருத்துக்கள் தான் இந்த தொண்டனின் கருத்துக்களாக இருக்க வேண்டும்;மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

கருத்து சுதந்திரம் கிடையவே கிடையாது. அடிதடிகளுக்கு அஞ்சக்கூடாது. இதை படித்தவர்களும், பண்பாளர்களும் செய்ய முடியுமா?எவ்வளவுக்கெவ்வளவு படிக்கவில்லையோ, அவ்வளவுக்கு அவ்வளவு அரசியலில் தலைவனாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தொண்டன், தொண்டனாகவே சேவை செய்து கொண்டு இருக்க வேண்டியது தான். தலைவர்கள், அவரது குடும்ப வாரிசுகள் அல்லது அவரது நட்பு வட்டாரங்களுக்குத் தான், ஒரு சக்கரம் போல தலைமை அல்லது முக்கிய கட்சி பதவிகளுக்கு வந்து கொண்டே இருக்கிறது. தொண்டர்களை பற்றி யார்
கவலைப்படுகின்றனர்?

காங்கிரசிலிருந்து எந்த கட்சியை வேண்டுமானாலும், கடந்த 25 வருட அரசியலை நோக்குங்கள். பெரிய குடும்பங்களின் வாரிசுகள் தான் தலைவராக முன்னணி படுத்தப்பட்டு, வென்று அரசியல் கட்சி பதவிகளில் இருக்கின்றனர்.இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடந்தது மிக மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், கார்த்தி சிதம்பரம், எந்த தேர்தல் மூலம் தலைவரானார்? சசிகலாவின் குடும்பத்தினர் எந்தெந்த இடங்களில், எத்தனை முக்கிய பதவிகளில் அ.தி.மு.க.,வில் இருக்கின்றனர் என்பதை ஒரு குழந்தை கூட சொல்லிட முடியும்.
அன்புமணியைவிட, பலபல மூத்த தகுதியான தீவிர பா.ம.க., தொண்டர்கள் இருக்கும் போது, அவர்களுக்கு ஏன் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., பதவி பற்றி யாரும் யோசிப்பதில்லை. பால் தாக்கரேயை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது மகனும், நெருங்கிய உறவினரும் தான் அடுத்த தலைவர்களாக பிரகாசிக்கின்றனர்.அ.தி.மு.க.,வில் மாதம் ஒருமுறை எந்தெந்த கட்சி செயலர்கள் நீக்கப்பட்டனர் என்பதை செய்தித்தாள் படித்து தான் அறிந்துக் கொள்ள முடியும். பிடிக்காதவன் ஒரு சிறிய கார்டில் பொய் தகவலை, தனது கட்சி தலைவர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்கு அனுப்பினால், அடுத்த நாளே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர், எத்தனை நல்லவராக இருந்தாலும் பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவர்.

தன்னலம் கருதாத உண்மை தலைவர்களை, அ.தி.மு.க.,வில் விளக்குப்பிடித்து தான் தேட வேண்டும். அவர்கள் எல்லாம் செய்த குற்றம் மக்கள் மத்தியில் பிரபலமானது தான்.காமராஜரை போல, அண்ணாதுரையைப் போல, கக்கனைப் போல, எம்.ஜி.ஆரைப் போல, கருணாநிதியைப் போல இனி ஒரு சாமானியன் அரசியலில் முன்னேறுவதற்கு சாத்தியமே இல்லை அல்லது ஜாதியைப் பற்றியே பேசி மாயாவதியாக ஆக முயற்சி செய்யலாம். பின் எப்படி படித்தவர்கள் அரசியலுக்கு வர முடியும்?இது நாட்டிற்கு நல்லதல்ல.

நன்றி: தினமலர்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:47 pm

மகிழ்ச்சி அதிர்ச்சி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கெங்கு காணினும் இருள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:49 pm

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கெங்கு காணினும் இருள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 06, 2010 2:51 pm

balakarthik wrote:மகிழ்ச்சி அதிர்ச்சி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் :suspect:

அடப் பாவி என்ன இது கொண்டாட்டம்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:52 pm

பிச்ச wrote:
balakarthik wrote:மகிழ்ச்சி அதிர்ச்சி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் :suspect:

அடப் பாவி என்ன இது கொண்டாட்டம்?

நாடு நாசமா போகுதில்லே அதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கெங்கு காணினும் இருள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக