Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
+24
வழிப்போக்கன்
balakarthik
பவதாரிணி
krishnaamma
ilakkiyan
கோவை ராம்
கலைவேந்தன்
சரவணன்
அன்பு தளபதி
ஹாசிம்
ராஜா
மீனா
சாந்தன்
பிளேடு பக்கிரி
Abarna
ரிபாஸ்
சிவா
sathyan
உதயசுதா
மஞ்சுபாஷிணி
srinihasan
சம்சுதீன்
ப்ரியா
சபீர்
28 posters
Page 10 of 19
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
First topic message reminder :
இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்
1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி
கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்
உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?
இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்
1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி
கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்
உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?
Last edited by சபீர் on Sun Jul 04, 2010 9:58 am; edited 5 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
என்னை தேர்ந்தெடுத்து கேள்வி கேட்டமைக்கு என் அன்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் சபீர்....
வாழ்க்கையில் நடந்த துக்கமான சம்பவம் இன்று வரை மறக்க முடியாமல் நாம் படும் அவஸ்தையை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்....
2000 இந்த வருடம் எல்லாருக்குமே சந்தோஷத்தை கொடுத்த வருடம் மில்லினியம் ஆண்டு அம்மாவுக்கு 50 வயது தொடங்குகிறது என்று கோலாகலமாய் சிறப்பாய் கொண்டாடினாங்க...
எழுத தொடங்கும்போதே அழுகை சட்டுனு அடைக்கிறது....
ஆனாலும் சொல்லியே ஆகனும்...
அதே ஜனவரி மாதம் நடந்த பிறந்தநாள் கல்யாண நாள் என்று இன்னும் ரெண்டு தம்பதியினரையும் கூப்பிட்டு சிறப்பித்தார்கள் எங்க அம்மாவின் மூத்த சகோதரி....
அம்மாவின் 50 வயது தொடக்கம்
இந்த விழா நடத்திய பெரியம்மாவின் மகன் எங்கள் மோகன் ராஜ் அண்ணாவின் கல்யாண நாள் ஜனவரி
சுரேஷ் எங்க சின்ன பெரியம்மாவின் மகன் அவன் கல்யாண நாளும் ஜனவரியில்....
இவர்கள் எல்லோரும் சந்தோஷமாக கொண்டாடி முடித்து அந்த வருடத்துக்குள்ளேயே முதல் பலி
மோகன் அண்ணா ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார் ஆபிசு ஆட்களாலேயே (Indian Airlines Computer Section Head) எங்க கம்ப்யூட்டர்ல என்ன பிரச்சனை என்றாலும் அண்ணனை தான் கூப்பிடுவாங்க....
பெரியம்மாவை இங்கே விசிட் விசா எடுத்து கூப்பிட்டோம் மே இறுதில வந்தாங்க...
அப்ப அவசரமா அண்ணன் டெல்லி போக வேண்டிய வேலை இருந்ததால் பார்க்க முடியலை யாரையும்...
அது தான் கடைசி எல்லோரும் அண்ணாவை பார்த்தது...
நாங்க இங்கே இருந்து அண்ணாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பினோம்.. அதை பிரிக்க கூட நேரமில்லாம சென்னைல இருந்து அவசர அழைப்பு டெல்லில இருந்து திரும்பி வந்தாங்க....
வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது அண்ணனின் பாஸ்வர்ட் உபயொகித்து 25 லட்சம் யாரோ அடித்துவிட்டது....
அண்ணா அதை கண்டுபிடிச்சு ஏ ஜி எம்மிடம் புகார் சொன்னபோது கூட அண்ணன் அறியவில்லை இந்த திருட்டில் ஏ ஜி எம்மும் கூட்டு என்று....
இப்ப ஒன்றும் யாரிடமும் சொல்லாதே நாளை பார்க்கலாம் என்று அனுப்பி வைத்துவிட்டு....
அடுத்த நாள் எங்களுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தபோது ஆபிசிலிருந்து அழைப்பு வரவே சாப்பிடாமல் உடனே கிளம்பினார் ஆபிசுக்கு...
அதன் பின் அண்ணாவை பற்றி ஒரு தகவலும் இல்லை....
நாங்கள் இங்கே நினைத்தோம் அண்ணாவுக்கு நேரமில்லை அதனால் கால் செய்யலை என்று...
சரியா ஜூன் 3 அன்று போன் என் தங்கை இடமிருந்து அவள் பேசியதை விட அழுதது அதிகம்... பெரியம்மாவை உடனே இந்தியாவுக்கு அனுப்பு...
ஏன் என்னாச்சு?
அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை....
அதனால் என்ன அதுக்கு ஏன் பெரியம்மாவை அனுப்பனும்...
சொன்னதை செய் மஞ்சு பாவா கிட்ட சொல்லி முதல்ல பெரியம்மாவை அனுப்பு என்று சொல்லி போன் வெச்சிட்டாள்...
அண்ணாக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதை கேட்டதுமே பெரியம்மா அப்டியே பொட்டுனு கீழ விழுந்துட்டாங்க... சத்தம் கேட்டு ஓடிப்போய் அவங்க மயக்கத்தை தீர்த்து உடனே இவருக்கு கால் செய்து டிக்கெட்டுக்கு புக் செய்து என்னாச்சோ ஏதாச்சோன்னு ஏர்ப்போர்ட்டுக்கு போனோம்...
மோகன்ராஜ் மதர் என்று குவைத் ஏர்போர்ட்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் கௌண்டரில் சொன்னபோது ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவர்கள் பெரியம்மாவை தோளணைத்து உள்ளே கொண்டு போனார்கள்...
எனக்கு மனதில் முதல் முறை கலக்கம் ஏற்பட்டது...
வீட்டுக்கு வந்தபோது ஃபேக்ஸ் மெஷின்ல இருந்து ஒரு பேப்பர்ல பெரிய பெரிய எழுத்தாய் மோகன் ரஜ் எக்ஸ்பையர்ட் அதை பார்த்தது தான் தெரியும் எனக்கு...
அதன் பின் அதிர்ச்சியில் எனக்கு நெஞ்சு அடைத்தது... இப்பவும் உடம்பு நடுங்குகிறது...
அந்த அதிர்ச்சியில் அம்மா நான் இருவருமே சிக்கானோம்... நோய் இல்லை ஆனால் நோய்வாய்ப்பட்டு இருந்தது போல் ஒரு நிலை.... எழமுடியலை ஒன்றும் நினைக்க முடியலை...
அண்ணாவை பற்றி ஒரு தகவலும் இல்லை... இங்கே எங்களுக்கு இந்த நிலை என்றால் பெரியம்மாவின் நிலை... நினைக்கவே பயமாக இருந்தது... ஒரே மகன் உயிரான மகன் இறந்தது தெரிந்தால்?
நாங்கள் பயந்தது போலவே நடந்தது... பெரியம்மாவை ஒன்றுமே சொல்லாமல் நேராக மார்ச்சுவரிக்கே கூட்டிட்டு போயிட்டாங்க.. அங்கே மயங்கி விழுந்தது தான்... பெரியம்மா தனக்காக ஒரு உலகம் சிருஷ்டித்து அதில் அண்ணாவோடு இருப்பது போல் ஒரு பைத்தியக்காரி போல் இருந்திருக்காங்க...
அண்ணாவின் சாவில் ஏதோ மர்மம் இருப்பது தெரிந்து ஆகஸ்ட் மாதம் நானும் அஞ்சான் அப்பாவும் இந்தியா வந்தோம்... இவரின் நண்பர் இந்தியன் ஏர்லைன்ஸ்ல போய் பார்த்தோம்.. அண்ணனின் நண்பர்கள் அத்தனை பேரையும் போய் பார்த்தோம்.. யாரிடமிருந்தும் தெளிவான தகவல்கள் இல்லை...
தொலைத்த இடத்திலேயே மீண்டும் இருப்பது போல் தோன்றவே அண்ணாவின் ஜாதகம் எடுத்துக்கொண்டு போனோம்.. செத்தவருக்கு ஜாதகம் பார்க்க முடியாது இந்த ஆள் உயிரோடு இல்லைன்னு தூக்கி போட்டுடாங்க..
காசு தரோம் நிறைய சொல்லுங்கன்னு சொன்னோம்... இவரின் சாவு இயற்கை சாவில்லை... அடித்து துன்புறுத்தி தண்ணீரில் அழுத்தி கொன்றுவிட்டார்கள்.... அதை கேட்கும் தைரியம் சக்தி எனக்கில்லை.... வண்டி எல்லாம் அழுதுக்கொண்டே வந்தேன்....
இனி சும்மா இருப்பதில் பிரயோஜனம் இல்லை போலிசு கம்ப்ளெயிண்ட் கொடுக்க எண்ணினபோது அண்ணனின் நெருங்கிய நண்பர் விஜயகுமார் என்னை போனில் அழைத்தார்.. மஞ்சு உடனே வீட்டுக்கு வா உன்னை பார்க்கனும்... உன்னிடம் பேசனும்... காத்துக்கிட்டு இருப்பேன்....
இவரை நான் கூட்டிச்செல்லாமல் சிவாவை ( பெரியம்மா மகளுடைய மகன் ) கூட்டிச்சென்றேன்... விஜயகுமார் அண்ணன் சொன்ன தகவல்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின...
அப்போது தெரிந்தது தான் மேலே நான் சொன்னது எல்லாமே.. 25 லட்சம் எடுத்தவர் பழியை அண்ணன் மேல் போட்டு அந்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டனர் உண்மை தெரியவந்த அண்ணன் போலிசில் கம்ப்ளெயிண்ட் கொடுக்க போவதை அறிந்து சமரச பேச்சுவார்த்தைக்காக கூப்பிட்டு அண்ணன் ஒத்துக்கொள்ளாததால் அடித்து குற்றுயிரும் குலையிருமாய் போரூர் ஏரியில் வீசிட்டாங்க... மூன்று நாள் என் அண்ணன் நீரில் மிதந்திருக்கார்... பாடி டிக்கம்பொஸ் ஆகிவிட்டது...
நான் சுயநினைவோடு எப்படி வீடு வந்து சேர்ந்தேன் தெரியவில்லை.. இறைவனிடம் வேண்டினேன்.. கொன்னவங்க அத்தனை பேரும் துடிதுடித்து சாகனும்...
ஈ எறும்புக்கும் துன்பம் விளைவிக்க தெரியாது ... கோவம்னா என்ன ?? சிரிக்கும் அண்ணன் முகம் தான் எப்பவும் என் கண்முன்...... அண்ணா அண்ணா திரும்பி பிறக்கனும்... என் அண்ணா திரும்பி பிறக்கனும்... எனக்கு வேணும் என் அண்ணா வேணும் என் அண்ணா வேணும்... அன்று முதல் விடாப்பிடியாய் எல்லா கோவிலிலும் எல்லா சர்ச்சிலும் எல்லா மாஸ்க்கிலும் என் வேண்டுதல் இது மட்டுமே.. என் அழுகை மட்டுமே சாட்சி என் அண்ணன் வேணும் எனக்கு என் அண்ணன் வேணும்.... நான் நம்பும் கடவுள் சத்தியம் என் அண்ணன் வரனும் உயிரோட.....
சுரேஷ் 32 வயது இரண்டாவது பெரியம்மா மகன் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டான்... எனக்கு மிகவும் நெருக்கமான தம்பி இவன்.... என் நல்லதுக்கெல்லாம் பாடுபட்டவன் இவன்...
2000 ஜனவரியில் தொடங்கிய சந்தோஷம் அந்த வருடத்திலேயே இரண்டு பலி.......
நெஞ்சு அடைக்கிறது எனக்கு..... பழைய நினைவுகளில் இருந்து மீள்வது மிக கொடுமையான விஷயம்... எல்லாம் மறந்து சந்தோஷத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருந்தாலும் இதெல்லாம் திரும்ப ரீகால் செய்தபோது மனம் ஒரு நிலையில் இல்லை.....
அன்பு நன்றிகள் சபீர்....
சந்தோஷ நிகழ்வும் உண்டு அதையும் பகிர்வேன்.. கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கிட்டு....
வாழ்க்கையில் நடந்த துக்கமான சம்பவம் இன்று வரை மறக்க முடியாமல் நாம் படும் அவஸ்தையை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்....
2000 இந்த வருடம் எல்லாருக்குமே சந்தோஷத்தை கொடுத்த வருடம் மில்லினியம் ஆண்டு அம்மாவுக்கு 50 வயது தொடங்குகிறது என்று கோலாகலமாய் சிறப்பாய் கொண்டாடினாங்க...
எழுத தொடங்கும்போதே அழுகை சட்டுனு அடைக்கிறது....
ஆனாலும் சொல்லியே ஆகனும்...
அதே ஜனவரி மாதம் நடந்த பிறந்தநாள் கல்யாண நாள் என்று இன்னும் ரெண்டு தம்பதியினரையும் கூப்பிட்டு சிறப்பித்தார்கள் எங்க அம்மாவின் மூத்த சகோதரி....
அம்மாவின் 50 வயது தொடக்கம்
இந்த விழா நடத்திய பெரியம்மாவின் மகன் எங்கள் மோகன் ராஜ் அண்ணாவின் கல்யாண நாள் ஜனவரி
சுரேஷ் எங்க சின்ன பெரியம்மாவின் மகன் அவன் கல்யாண நாளும் ஜனவரியில்....
இவர்கள் எல்லோரும் சந்தோஷமாக கொண்டாடி முடித்து அந்த வருடத்துக்குள்ளேயே முதல் பலி
மோகன் அண்ணா ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார் ஆபிசு ஆட்களாலேயே (Indian Airlines Computer Section Head) எங்க கம்ப்யூட்டர்ல என்ன பிரச்சனை என்றாலும் அண்ணனை தான் கூப்பிடுவாங்க....
பெரியம்மாவை இங்கே விசிட் விசா எடுத்து கூப்பிட்டோம் மே இறுதில வந்தாங்க...
அப்ப அவசரமா அண்ணன் டெல்லி போக வேண்டிய வேலை இருந்ததால் பார்க்க முடியலை யாரையும்...
அது தான் கடைசி எல்லோரும் அண்ணாவை பார்த்தது...
நாங்க இங்கே இருந்து அண்ணாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பினோம்.. அதை பிரிக்க கூட நேரமில்லாம சென்னைல இருந்து அவசர அழைப்பு டெல்லில இருந்து திரும்பி வந்தாங்க....
வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது அண்ணனின் பாஸ்வர்ட் உபயொகித்து 25 லட்சம் யாரோ அடித்துவிட்டது....
அண்ணா அதை கண்டுபிடிச்சு ஏ ஜி எம்மிடம் புகார் சொன்னபோது கூட அண்ணன் அறியவில்லை இந்த திருட்டில் ஏ ஜி எம்மும் கூட்டு என்று....
இப்ப ஒன்றும் யாரிடமும் சொல்லாதே நாளை பார்க்கலாம் என்று அனுப்பி வைத்துவிட்டு....
அடுத்த நாள் எங்களுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தபோது ஆபிசிலிருந்து அழைப்பு வரவே சாப்பிடாமல் உடனே கிளம்பினார் ஆபிசுக்கு...
அதன் பின் அண்ணாவை பற்றி ஒரு தகவலும் இல்லை....
நாங்கள் இங்கே நினைத்தோம் அண்ணாவுக்கு நேரமில்லை அதனால் கால் செய்யலை என்று...
சரியா ஜூன் 3 அன்று போன் என் தங்கை இடமிருந்து அவள் பேசியதை விட அழுதது அதிகம்... பெரியம்மாவை உடனே இந்தியாவுக்கு அனுப்பு...
ஏன் என்னாச்சு?
அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை....
அதனால் என்ன அதுக்கு ஏன் பெரியம்மாவை அனுப்பனும்...
சொன்னதை செய் மஞ்சு பாவா கிட்ட சொல்லி முதல்ல பெரியம்மாவை அனுப்பு என்று சொல்லி போன் வெச்சிட்டாள்...
அண்ணாக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதை கேட்டதுமே பெரியம்மா அப்டியே பொட்டுனு கீழ விழுந்துட்டாங்க... சத்தம் கேட்டு ஓடிப்போய் அவங்க மயக்கத்தை தீர்த்து உடனே இவருக்கு கால் செய்து டிக்கெட்டுக்கு புக் செய்து என்னாச்சோ ஏதாச்சோன்னு ஏர்ப்போர்ட்டுக்கு போனோம்...
மோகன்ராஜ் மதர் என்று குவைத் ஏர்போர்ட்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் கௌண்டரில் சொன்னபோது ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவர்கள் பெரியம்மாவை தோளணைத்து உள்ளே கொண்டு போனார்கள்...
எனக்கு மனதில் முதல் முறை கலக்கம் ஏற்பட்டது...
வீட்டுக்கு வந்தபோது ஃபேக்ஸ் மெஷின்ல இருந்து ஒரு பேப்பர்ல பெரிய பெரிய எழுத்தாய் மோகன் ரஜ் எக்ஸ்பையர்ட் அதை பார்த்தது தான் தெரியும் எனக்கு...
அதன் பின் அதிர்ச்சியில் எனக்கு நெஞ்சு அடைத்தது... இப்பவும் உடம்பு நடுங்குகிறது...
அந்த அதிர்ச்சியில் அம்மா நான் இருவருமே சிக்கானோம்... நோய் இல்லை ஆனால் நோய்வாய்ப்பட்டு இருந்தது போல் ஒரு நிலை.... எழமுடியலை ஒன்றும் நினைக்க முடியலை...
அண்ணாவை பற்றி ஒரு தகவலும் இல்லை... இங்கே எங்களுக்கு இந்த நிலை என்றால் பெரியம்மாவின் நிலை... நினைக்கவே பயமாக இருந்தது... ஒரே மகன் உயிரான மகன் இறந்தது தெரிந்தால்?
நாங்கள் பயந்தது போலவே நடந்தது... பெரியம்மாவை ஒன்றுமே சொல்லாமல் நேராக மார்ச்சுவரிக்கே கூட்டிட்டு போயிட்டாங்க.. அங்கே மயங்கி விழுந்தது தான்... பெரியம்மா தனக்காக ஒரு உலகம் சிருஷ்டித்து அதில் அண்ணாவோடு இருப்பது போல் ஒரு பைத்தியக்காரி போல் இருந்திருக்காங்க...
அண்ணாவின் சாவில் ஏதோ மர்மம் இருப்பது தெரிந்து ஆகஸ்ட் மாதம் நானும் அஞ்சான் அப்பாவும் இந்தியா வந்தோம்... இவரின் நண்பர் இந்தியன் ஏர்லைன்ஸ்ல போய் பார்த்தோம்.. அண்ணனின் நண்பர்கள் அத்தனை பேரையும் போய் பார்த்தோம்.. யாரிடமிருந்தும் தெளிவான தகவல்கள் இல்லை...
தொலைத்த இடத்திலேயே மீண்டும் இருப்பது போல் தோன்றவே அண்ணாவின் ஜாதகம் எடுத்துக்கொண்டு போனோம்.. செத்தவருக்கு ஜாதகம் பார்க்க முடியாது இந்த ஆள் உயிரோடு இல்லைன்னு தூக்கி போட்டுடாங்க..
காசு தரோம் நிறைய சொல்லுங்கன்னு சொன்னோம்... இவரின் சாவு இயற்கை சாவில்லை... அடித்து துன்புறுத்தி தண்ணீரில் அழுத்தி கொன்றுவிட்டார்கள்.... அதை கேட்கும் தைரியம் சக்தி எனக்கில்லை.... வண்டி எல்லாம் அழுதுக்கொண்டே வந்தேன்....
இனி சும்மா இருப்பதில் பிரயோஜனம் இல்லை போலிசு கம்ப்ளெயிண்ட் கொடுக்க எண்ணினபோது அண்ணனின் நெருங்கிய நண்பர் விஜயகுமார் என்னை போனில் அழைத்தார்.. மஞ்சு உடனே வீட்டுக்கு வா உன்னை பார்க்கனும்... உன்னிடம் பேசனும்... காத்துக்கிட்டு இருப்பேன்....
இவரை நான் கூட்டிச்செல்லாமல் சிவாவை ( பெரியம்மா மகளுடைய மகன் ) கூட்டிச்சென்றேன்... விஜயகுமார் அண்ணன் சொன்ன தகவல்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின...
அப்போது தெரிந்தது தான் மேலே நான் சொன்னது எல்லாமே.. 25 லட்சம் எடுத்தவர் பழியை அண்ணன் மேல் போட்டு அந்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டனர் உண்மை தெரியவந்த அண்ணன் போலிசில் கம்ப்ளெயிண்ட் கொடுக்க போவதை அறிந்து சமரச பேச்சுவார்த்தைக்காக கூப்பிட்டு அண்ணன் ஒத்துக்கொள்ளாததால் அடித்து குற்றுயிரும் குலையிருமாய் போரூர் ஏரியில் வீசிட்டாங்க... மூன்று நாள் என் அண்ணன் நீரில் மிதந்திருக்கார்... பாடி டிக்கம்பொஸ் ஆகிவிட்டது...
நான் சுயநினைவோடு எப்படி வீடு வந்து சேர்ந்தேன் தெரியவில்லை.. இறைவனிடம் வேண்டினேன்.. கொன்னவங்க அத்தனை பேரும் துடிதுடித்து சாகனும்...
ஈ எறும்புக்கும் துன்பம் விளைவிக்க தெரியாது ... கோவம்னா என்ன ?? சிரிக்கும் அண்ணன் முகம் தான் எப்பவும் என் கண்முன்...... அண்ணா அண்ணா திரும்பி பிறக்கனும்... என் அண்ணா திரும்பி பிறக்கனும்... எனக்கு வேணும் என் அண்ணா வேணும் என் அண்ணா வேணும்... அன்று முதல் விடாப்பிடியாய் எல்லா கோவிலிலும் எல்லா சர்ச்சிலும் எல்லா மாஸ்க்கிலும் என் வேண்டுதல் இது மட்டுமே.. என் அழுகை மட்டுமே சாட்சி என் அண்ணன் வேணும் எனக்கு என் அண்ணன் வேணும்.... நான் நம்பும் கடவுள் சத்தியம் என் அண்ணன் வரனும் உயிரோட.....
சுரேஷ் 32 வயது இரண்டாவது பெரியம்மா மகன் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டான்... எனக்கு மிகவும் நெருக்கமான தம்பி இவன்.... என் நல்லதுக்கெல்லாம் பாடுபட்டவன் இவன்...
2000 ஜனவரியில் தொடங்கிய சந்தோஷம் அந்த வருடத்திலேயே இரண்டு பலி.......
நெஞ்சு அடைக்கிறது எனக்கு..... பழைய நினைவுகளில் இருந்து மீள்வது மிக கொடுமையான விஷயம்... எல்லாம் மறந்து சந்தோஷத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருந்தாலும் இதெல்லாம் திரும்ப ரீகால் செய்தபோது மனம் ஒரு நிலையில் இல்லை.....
அன்பு நன்றிகள் சபீர்....
சந்தோஷ நிகழ்வும் உண்டு அதையும் பகிர்வேன்.. கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கிட்டு....
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
[You must be registered and logged in to see this image.] மஞ்சு அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நான்... பக்குவமும் இல்லாமல்...
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு, நீங்கள் வேண்டுவதை எவ்வுருவிலாது வழங்க, நான் வணங்கும் இறைவனையும் வேண்டுகின்றேன்...
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு, நீங்கள் வேண்டுவதை எவ்வுருவிலாது வழங்க, நான் வணங்கும் இறைவனையும் வேண்டுகின்றேன்...
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.] மஞ்சு அக்கா!
அன்பு தம்பிகள் இத்தனை பேர் இருக்கும்போது வலிகள் எல்லாம் மறக்கமுடிவதும் சாத்தியம் தான் சரவணா...
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
உங்க தம்பி அளவுக்கு நீங்க எங்க மேல பாசம் காட்ட முடியுமான்னு எனக்கு தெரியாது.....மஞ்சுபாஷிணி wrote:பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.] மஞ்சு அக்கா!
அன்பு தம்பிகள் இத்தனை பேர் இருக்கும்போது வலிகள் எல்லாம் மறக்கமுடிவதும் சாத்தியம் தான் சரவணா...
ஆனா,
உங்க தம்பியை விட அதிகமா உங்க மேல கரிசனமும், பாசமும் என்னால காட்ட முடியும் என்பதை மட்டும் உறுதியா சொல்ல முடியும் என்னால்..... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
srinihasan wrote:உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நான்... பக்குவமும் இல்லாமல்...
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு, நீங்கள் வேண்டுவதை எவ்வுருவிலாது வழங்க, நான் வணங்கும் இறைவனையும் வேண்டுகின்றேன்...
மரணம் மிக கொடியது வாசன்..... உயிருக்கு உயிராய் அன்பு வைப்போரை இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமை.....மோகன் அண்ணா சுரேஷ் தம்பி இருவருமே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்... இருவரின் இறப்புக்கு பின் அனாதை ஆனது போல் தனிமைப்பட்டதை போல் உணர்ந்தேன்.. எத்தனை உறவுகள் இருந்தும் இவர்கள் இல்லாததை சரிசெய்துக்கொள்ள எனக்கு நிறைய வருடங்கள் பிடித்தது....
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
பிச்ச wrote:உங்க தம்பி அளவுக்கு நீங்க எங்க மேல பாசம் காட்ட முடியுமான்னு எனக்கு தெரியாது.....மஞ்சுபாஷிணி wrote:பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.] மஞ்சு அக்கா!
அன்பு தம்பிகள் இத்தனை பேர் இருக்கும்போது வலிகள் எல்லாம் மறக்கமுடிவதும் சாத்தியம் தான் சரவணா...
ஆனா,
உங்க தம்பியை விட அதிகமா உங்க மேல கரிசனமும், பாசமும் என்னால காட்ட முடியும் என்பதை மட்டும் உறுதியா சொல்ல முடியும் என்னால்..... [You must be registered and logged in to see this image.]
சந்தோஷமாக இருக்கிறது சரவணா.... இறைவனுக்கு கோடி நன்றிகள்.. இப்பவும் அழுகை தான் வருது... ஆனா கண்டிப்பா இது சந்தோஷ அழுகை தான்.... [You must be registered and logged in to see this image.]
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
படித்து பார்த்தேன் கண்கள் கலங்குகின்றது அக்கா என்ன செய்வது ஒவ்வாரு மனிதனின் வாழ்கையில் ஒரு கசப்பான சம்பவம் இருக்கு அக்கா
உங்கள் மனதை தைரியபடுத்தி கொள்ளுங்கள் இங்க உங்கள் அண்ணன் மாதிரி உங்கள் தம்பி மாதிரி நாங்கள் இருக்கின்றோம் கவலைவேண்டாம் கண்ணீர் வேண்டாம் எப்போதும் சந்தோசமாக இருப்போம் இவ் உலகத்தில் வாழும் வரை
உங்கள் மனதை தைரியபடுத்தி கொள்ளுங்கள் இங்க உங்கள் அண்ணன் மாதிரி உங்கள் தம்பி மாதிரி நாங்கள் இருக்கின்றோம் கவலைவேண்டாம் கண்ணீர் வேண்டாம் எப்போதும் சந்தோசமாக இருப்போம் இவ் உலகத்தில் வாழும் வரை
Last edited by ரிபாஸ் on Tue Jun 22, 2010 12:45 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
ரிலாக்ஸ் அக்கா ரிலாக்ஸ் ....
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்....
கீதையின் வரிகளை மனதில் கொள்ளுங்கள் அக்கா ....
நமது கையில் ஒன்றும் இல்லை ... எல்லாம் அவன் செயல் ...
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
உங்களுக்கு இங்கே நிறைய தம்பிகள் அண்ணன்மார்கள் இருக்கிறோம் அக்கா ...
கண்டிப்பாக உங்கள் மனக்குறை தீர்க்க அந்த ஆண்டவனை வேண்டுகிறோம் ....
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்....
கீதையின் வரிகளை மனதில் கொள்ளுங்கள் அக்கா ....
நமது கையில் ஒன்றும் இல்லை ... எல்லாம் அவன் செயல் ...
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
உங்களுக்கு இங்கே நிறைய தம்பிகள் அண்ணன்மார்கள் இருக்கிறோம் அக்கா ...
கண்டிப்பாக உங்கள் மனக்குறை தீர்க்க அந்த ஆண்டவனை வேண்டுகிறோம் ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.
மஞ்சுபாஷிணி wrote:srinihasan wrote:உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நான்... பக்குவமும் இல்லாமல்...
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு, நீங்கள் வேண்டுவதை எவ்வுருவிலாது வழங்க, நான் வணங்கும் இறைவனையும் வேண்டுகின்றேன்...
மரணம் மிக கொடியது வாசன்..... உயிருக்கு உயிராய் அன்பு வைப்போரை இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமை.....மோகன் அண்ணா சுரேஷ் தம்பி இருவருமே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்... இருவரின் இறப்புக்கு பின் அனாதை ஆனது போல் தனிமைப்பட்டதை போல் உணர்ந்தேன்.. எத்தனை உறவுகள் இருந்தும் இவர்கள் இல்லாததை சரிசெய்துக்கொள்ள எனக்கு நிறைய வருடங்கள் பிடித்தது....
ஆமாம்.. உண்மை ....
நம் உயிர் பிரியும் நேரத்தை விட மற்ற உறவுகள் பிரியும் நேரம் மிகவும் கொடுமையானது...
பிறப்பால் அனாதை என்பதே ஒழிக்க படவேண்டும் என்று நினைப்பவன் நான்...ஆனால் வாழ்வின் மத்தியில் நீங்கள் அப்படி உணர்வ(ந்த)து எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது... காலங்கள் மாறும்...கோலங்கள் மாறும்... அலகோலங்கள் தீரும்....
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் ஆத்மா இருவரையும் வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்
Page 10 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|