புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
91 Posts - 61%
heezulia
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
7 Posts - 5%
eraeravi
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
1 Post - 1%
viyasan
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
283 Posts - 45%
heezulia
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
19 Posts - 3%
prajai
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
2025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_m102025-ல் குடிநீர் பஞ்சம்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2025-ல் குடிநீர் பஞ்சம்....


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Sep 24, 2009 7:58 am

2025-ல் குடிநீர் பஞ்சம்....
ஒரு அதிர்ச்சி தகவல்



பஞ்ச பூதங்களில் ஒன்றும், ஒவ்வொரு உயிரின் ஜீவனுமாக உள்ளது தண்ணீர்.

2025-ல் குடிநீர் பஞ்சம்.... L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljNy9yYWlucy5qcGc=


நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்

வானின்றி அமையாது ஒழுக்கு.

என்ற வள்ளுவரின் வாக்குப்படி, உயிர்களின் ஆதாரம் நீர்தான். இயற்கை வழிபாட்டில் நீரை வருணபகவானாக நம் முன்னோர்கள் வணங்கி வந்தனர்.

மழை பெய்தால்தான் தாவரம்முதல் மனிதன் வரை உயிர்வாழ முடியும். நம் உடலும் இரத்தம் என்ற செந்நீரில்தான் இயங்குகிறது. உயிர்களின் பிரதான சக்தியாக நீர் விளங்குகிறது.

குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீர் அவசியம் தேவை. இந்த புவியானது மூன்றுபங்கு நீரால் சூழப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவையான நீரைப் பற்றி ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் (W.H.O.) தந்துள்ளது.

2025ல் உலகின் முக்கியப் பகுதியான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும், மேலும் நிலத்தடி நீர் சில இடங்களில் கிடைக்காது என்றும், மற்ற இடங்களில் உவர்ப்பு நீர்தான் கிடைக்கும் என்றும் நீருக்காக நாட்டுக்கு நாடு போர் தொடுக்கும் நிலை வரலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மூன்றில் இரண்டு சதவிகித மக்கள் நோய்களால் அவதிப்படுவார்கள் என்றும் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மராட்டியம், குஜராத், இராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதியுறும் என்றும் கூறியுள்ளது. ஏன் நீர் இல்லாமல் போகிறது. இந்த நிலை வரக் காரணம் என்ன? இதற்கு தீர்வுதான் என்ன என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் மனிதனே முதல்காரணமாகத் தெரிகிறான்.

தற்போதுகூட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சோமாலிய நாட்டில் வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அங்கு பிறக்கும் குழந்தைகளை பறவைகளும், மிருகங்களும் வேட்டையாடுவதை அண்மையில் நாளிதழ் ஒன்று படமாக வெளியிட்டுள்ளது.

இத்தகைய கொடுமையான நிகழ்வுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கமோ புயல், மழை, பூகம்பம் என்ற இயற்கை நிகழ்வுகளால் மனிதன் இனம் அஞ்சி அஞ்சி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இயற்கையின் சீற்றத்திற்கும் மனித இனமே காரணமாகியுள்ளது.

வற்றாத ஜீவநதிகளும், பொங்கிவரும் ஆறுகளும் நிறைந்த தேசத்தில் குடிநீர் பற்றாக்குறையா என்று நினைக்கத் தோன்றும். ஆண்டுதோறும் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் இருந்தும் இந்த நிலை உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் பெருகி வந்ததும், மனித இனம் வாழ காடுகளையும், மரங்களையும் அழித்ததன் விளைவே இது.

மழை நீரை நம் முன்னோர்கள் ஏரி, குளங்களில் தேக்கி வைத்து தங்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படுத்திவந்தனர்.

இன்றுகூட தென்மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்தின் நடுவில் பெரிய குளம் இருக்கும். அதைச் சுற்றி முள்வேலி அமைத்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்த குளத்திற்கு நீர் வரத்து உள்ள வாய்க்கால்கள் கூட சுத்தமாக பராமரிக்கப் பட்டிருக்கும்.

அதுபோல் கிணற்று நீர், ஊற்றுநீர், ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது தொழிற்சாலைகளின் கழிவு நீரால் கிணற்று நீர், ஊற்றுநீர், ஆற்று நீரும் மாசடைந்துள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். மாநகரங்களில் குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் சுத்தமான குடிநீர் என்று கூறமுடியாது.

மக்களைத் தாக்கும் நோய்களில் நீரினால் பரவும் நோய்கள் 62% ஆக உள்ளது. நல்ல சுத்தமான சுகாதாரமான நீரே ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகிறது.

ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குளிர்பான கம்பெனிகள், தொழிற்கூடங்கள் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி வறட்சியடையச் செய்துவிட்டன. ஆற்றுநீர் அனைத்தும் சாக்கடை நீராக மாறி குடிநீருக்கு பயன்படாமல் போய்விட்டது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் எந்த அளவுக்கு நிவர்த்தி செய்யும் என்று புரியவில்லை. தற்போது உள்ள நிலை நீடித்தால் 2025க்கு பின் குடிநீருக்காக ஆயுதம் ஏந்தி போராடும் நிலை நிச்சயம் உருவாகும். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையில் உள்ள நீர் எந்த அளவுக்கு சுகாதாரமாக உள்ளது என்பதை ஆராய்ந்தோமானால் அதிலும் தோல்விதான் மிஞ்சும்.

இந்த நிலையை மாற்ற மனிதர்களாகிய நம்மால்தான் முடியும். ஏரி குளங்களை ஆக்கிரமிக்காமல் அவற்றை சீராக தூர்வாரி மழைக்காலங்களில் கடலில் கலந்து உதவாமல் போகின்ற நீரை தேக்கி வைக்க வேண்டும்.

அரசின் அறிவுரைப்படி வீட்டின் சுற்றுப்புறங்களில் சிமெண்ட் தளம் அமைக்காமல் புல்தரைகளை அமைக்கவேண்டும். வீட்டிற்கு வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீரை சேகரிக்க வேண்டும்.

(குறிப்பு - 2002-ல் அரசின் கடுமையான உத்தரவால் சென்னை போன்ற பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் செயல் படுத்தப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது)

விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி

என்ற வாசகத்திற்கு ஏற்ப மழைநீரை உயிர் நீராக நினைத்து சேகரித்து எதிர்கால சந்ததியினருக்கு குடிநீர் கிடைக்கச் செய்வோம். ஏரி, குளங்களை சீர் செய்தும், ஆற்று நீரில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலக்காமலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இப்போதே குடிநீரின் தேவை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே குடிநீர் என்னும் உயிர் நீர் பாதுகாக்கப்படுவதோடு, எதிர்கால தலைமுறைக்கும் உதவும். அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று கருதாமல் ஒவ்வொருவரும் நீர் சேகரிப்பில் ஆர்வம் கொண்டு செயல்பட்டால்தான் குடிநீர் பற்றாக் குறையிலிருந்து விடுபட முடியும்
by
sikaar

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Sep 24, 2009 7:58 am

by
sikaar 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 2:43 pm

2025-ல் குடிநீர் பஞ்சம்.... Affraid 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642 2025-ல் குடிநீர் பஞ்சம்.... 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக