ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:41

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் சிங்கம்- பட விமர்சனம்

2 posters

Go down

பெண் சிங்கம்- பட விமர்சனம் Empty பெண் சிங்கம்- பட விமர்சனம்

Post by ரபீக் Sat 5 Jun 2010 - 12:33

நடிப்பு: மீரா ஜாஸ்மின், உதய் கிரண், ரிச்சர்ட், ரோகிணி, ராதாரவி, விவேக், வாகை சந்திரசேகர்

கதை, வசனம்: முதல்வர் கருணாநிதி

இசை: தேவா

ஒளிப்பதிவு: விஜய் ராகவ்

இயக்கம்: பாலி ஸ்ரீரங்கம்

தயாரிப்பு: ஆறுமுகனேரி எஸ்பி முருகேசன் (நந்தினி ஆர்ட்ஸ்)

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

வயது ஏற ஏற பொதுவாக மனிதர்கள் முடங்கிப் போவார்கள் என்பது நடைமுறையில் நாம் பார்ப்பது. ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி விஷயத்தில் இயற்கையின் நியதி எதிர்மறையாக உள்ளது. வயது கூடக் கூட அவர் மனதுக்கு வாலிபம் திரும்பிவிட்டது போலிருக்கிறது. பெண் சிங்கத்தின் வசனங்கள் அதற்கு சாட்சி!.

இந்த 87வது வயதில், இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றபடி ஒரு படத்தை உருவாக்குவது சாதாரண விஷயமல்ல. பல படங்களில் பார்த்த பழிவாங்கும் கதைதான் என்றாலும், இன்றைய பாணியில் தர முயன்றிருக்கிறார்கள்.

வன இலாகா அதிகாரி உதய்கிரண். அவர் தாய் நீதிபதி ரோகி்ணி. புது ஊருக்கு மாற்றலாகி வருகிறார்கள். உதய்கிரண் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஏழை பெண் மீரா ஜாஸ்மின் ஐபிஎஸ் படிக்க விரும்புகிறார். அவரது நிலைமை புரிந்து அவருக்கு உதய்கிரண் உதவுகிறார். அந்த உதவி காதலாக மாறுகிறது, வழக்கம் போல.

அதே ஊரில் போலீஸ் துணையுடன் காட்டு மரங்களை வெட்டி கடத்துகிறார் ராதாரவி. உதய்கிரணையும் கைக்குள் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார். ஆனால் மரம் கடத்தலை கடுமையாக எதிர்க்கும் உதய்கிரண் லாரிகளை சிறைப்பிடித்து நஷ்டம் உண்டாக்குகிறார்.

இதனால் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. உதய்கிரணின் நண்பன் ரிச்சர்ட். இவர் பெண் விடுதலை பற்றி மேடைகளில் வாய் கிழியப் பேசுகிறார். இதை நம்பி இவரைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் சுதர்ஸனா சென். ஆனால் பின்னர்தான் ரிச்சர்ட் சுயரூபம் தெரிகிறது. மனைவியை வரதட்சிணை கேட்டு சித்தரவதை செய்யும் சைக்கோ ஆசாமி இவர்.

இதை சுதர்ஸனா, இருவருக்கும் பொதுவான நண்பர் உதய்கிரண் மூலம் தட்டிக் கேட்கிறார். ஆனால் திடீரென்று சுதர்ஸனா சுட்டுக் கொல்லப்படுகிறார். கொலைப்பழி உதய்கிரண் மீது விழுகிறது. போலீஸ் கைது செய்கிறது. ஆனால், தப்பித்து தலைமறைவாகிறார்.

அப்போது படிப்பை முடித்துவிட்ட மீரா ஜாஸ்மின் ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்கிறார். உதய்கிரண் கேஸை விசாரிக்கும் பொறுப்பையும் ஏற்கிறார்.

இன்னொரு பக்கம் உதய்கிரணை காப்பாற்ற அவர் தாய் ரோகிணி, நீதிபதி பதவியை ராஜினாமா செய்து வக்கீலாகிறார். இந்த இரு பெண்களும் சேர்ந்து உதய்கிரணை காப்பாற்ற முடிகிறதா என்பது தான் க்ளைமாக்ஸ்!

விறுவிறுப்பான திரைக்கதைதான்... ஆனால் அதை எடுத்த விதம்தான் சொதப்பலாக உள்ளது.

காட்சிகள் தாவுகின்றன. சில இடங்களில் லாஜிக் இல்லை. ஐபிஎஸ் பயிற்சி முடித்துவிட்டு ஊர் திரும்பும் மீரா ஜாஸ்மின், எடுத்த எடுப்பில் கமிஷனராவதும், கொலை கேஸை ஏற்பதும் தமாஷ்.

இலக்கிய, மேடை ஆர்வமுள்ள புத்திசாலி பெண்ணாக வரும் சுதர்ஸனா, திருமணத்துக்கு முன்பே ரூ 50 லட்சம் 'கல்யாணப் பரிசு' கேட்கும் ரிச்சர்டை, ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம். அதை விட்டு, திருமணம் செய்து கொண்டு, முதலிரவுக்கு முன் ரூ 50 லட்சத்துக்கு செக் கொடுப்பதாகக் காட்டுவது நெருடுகிறது.

இத்தனை குறைகள் இருந்தாலும், படம் முழுக்க இலக்கியத் தமிழ், நடைமுறைத் தமிழ், எள்ளல் தமிழ் என மாறி மாறி வார்த்தை ஜாலம் காட்டும் முதல்வரின் பேனா ஈர்க்கத்தான் செய்கிறது. சூழ்நிலைக்கேற்ப வார்த்தைகளைப் பிரயோகிப்பதில் மனிதர் கில்லாடிதான்!.

சாமி நகைகளை திருடும் அர்ச்சகரை விமர்சிக்கும் விதமும், போலிச் சாமியார்களுக்கு எதிரான விமர்சனமும், நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வாதாடும் அரசு வக்கீல், குற்றம்சாட்டப்பட்டவர் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து தனது வாதங்களை வாபஸ் பெற்றுக் கொள்வதும் பளிச் காட்சிகள்.

இந்த அரசு வழக்கறிஞர் வேடத்தில் ஜே.கே.ரித்தீஷ் தோன்றும்போதும், வழக்கை அவர் நடத்தும் விதத்துக்கும் தியேட்டரில் பலத்த கைத்தட்டல்!.

வன அதிகாரியாக வருகிறார் உதய்கிரண். அக்மார்க் தெலுங்கு வாடை. அவர் என்னதான் தமிழ் பேசினாலும், ஆவேசமாக ஆக்ஷன் காட்டினாலும் மனசுக்குள் வர மறுக்கிறார். ஆனால் ஒரு டிபிகல் அரசு அலுவலர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார்.

தமிழ் அறிஞன் போர்வையில் வரும் வில்லன் ரிச்சர்ட், இனி வில்லனாக ஒரு ரவுண்ட் வர வாய்ப்புள்ளது.

பெண் சிங்கமாக மீரா ஜாஸ்மின். தனியாகப் பார்த்தால் அழகாக இருக்கிறார். உதய்கிரண் ஜோடியாக வரும் காட்சிகளில் அக்கா மாதிரி இருக்கிறார். அந்த எஃபெக்டைக் குறைக்க மேக்கப்பில் மெனக்கெட்டிருக்கிறார்கள். வீர மங்கை வேலு நாச்சியார் நாடகத்தில் மிடுக்காக வருகிறார் (ஆனால் நாடகம் செம மொக்கை!)

நீதிமன்றக் காட்சிகளில் முதல்வரின் வசனங்களை கடித்துக் குதறுகிறார் ரோகிணி. அதற்கு ஜேகே ரித்தீஷ் எவ்வளவோ பரவாயில்லை. ரம்பா சிறிது நேரம் வந்தாலும் திருப்பு முனை பாத்திரம்.

ராதாரவி, தலைவாசல் விஜய், ஓ.ஏ.கே. சுந்தர் என அந்தக் கால செட் ப்ராபர்ட்டி மாதிரி வில்லன்கள். வாகை சந்திரசேகர், மாணிக்க விநாயகம், நிழல்கள் ரவி ஆகியோரும் வந்து போகிறார்கள். சந்திரசேரரின் மேக்-அப்பை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது!

படத்தின் முக்கிய ப்ளஸ் பாய்ண்ட் தேவாவின் இசைதான்.

முதல்வரே எழுதிய 'வீணையில் எழுவது வேணு கானமா...' பாடலில், வரிகளும், மெட்டும், அதை எஸ்பிபி பாடும் அழகும்...உண்மையிலேயே தேனிசைதான். பாரதிதாசன் பாடலுக்கும் தன் கம்பீர குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார் பாலு.

லாரன்ஸ், லட்சுமிராய் போடும் குத்தாட்டப் பாட்டில், காமசூத்திரத்தையே படு லோக்கலாகத் தந்திருக்கிறார் வாலி!.

விஜய்ராகவ் ஒளிப்பதிவு ஓகே.

கதை வசனத்தை யார் எழுதினாலும் அதை எடுக்கிற விதம், காட்சியமைப்புகளே ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும். அந்த வகையில் இந்த பெண் சிங்கத்தின் ரிங் மாஸ்டரான இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். குறிப்பாக சண்டைக் காட்சிகளின் பேக்ட்ராப்பில் அத்தனை செயற்கை. காட்சிகளை மேம்போக்காகவே எடுத்திருக்கிறார்.
நல்ல திருப்புமுனைக் காட்சிகளைக்கூட சவசவ என்று அமைத்திருப்பதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகின்றன!

பெண் சிங்கம்... ரிங் மாஸ்டர் சரியாக இருந்திருந்தால் கர்ஜனையில் கலக்கியிருக்கும்!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண் சிங்கம்- பட விமர்சனம் Empty Re: பெண் சிங்கம்- பட விமர்சனம்

Post by ப்ரியா Sat 5 Jun 2010 - 12:37

நன்றி அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum