புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
91 Posts - 61%
heezulia
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
7 Posts - 5%
viyasan
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
283 Posts - 45%
heezulia
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
19 Posts - 3%
prajai
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாட்டுத்திறத்தாலே.... Poll_c10பாட்டுத்திறத்தாலே.... Poll_m10பாட்டுத்திறத்தாலே.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுத்திறத்தாலே....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 9:36 pm

வெற்றிகளைப்பாடி, வீரத்தைப்பாடி, போக்களத்தைப்பாடி கொடைப்பறும்
நம்பிக்கையை ஊட்டிய தமிழ் சங்ககாலத் தமிழ். வழங்கி வழ்ங்கிச் சிவந்த
கரத்தினையும், வாங்கி வாங்கிச் சிழித்த திறத்தையும் , வரிசை வரிசையாகப்
பாடி பரிசுகளைக் குவிக்க ஏதுவாக இருந்த தமிழ் பழந்தமிழ். சங்க
காலத்திற்குப் பிறகு, பக்தி காலத்தில் பாலோடு ஞானத்தைச் சம்பந்தருக்கு
ஊட்டிய கொஞ்சு தமிழ், நாவுக்கரசரின் சூலை நோயைப் போக்கிய பக்திச் சுடர்
கமழும் நெஞ்சு தமிழ், ஓலை காட்டி சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி ஆட்கொண்ட
நெஞ்சு தமிழ், பிட்டுக்கு மண் சுமந்து பக்தனைக் காத்த விஞ்சு தமிழ் ஆகிய
அத்தனை தமிழும் மக்களைப் பார்க்கத்தவறியது. தமிழ் மன்னனைப் பார்த்தது;:
மகுடங்களைப் பார்த்தது:: மணி முடியைப் பார்த்தது: இறைவியைப் பார்த்த்து:
இறைவனின் திருவிளையாடல்களைப் பார்த்தது: ஆனால் மக்களின் தேவைகளைப்
பார்க்கத்தவறியது. சஙக இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியலைச்
சித்தரித்தார்களே அன்றி அவர்களின் தேவைகளை உணர்த்துகின்ற கவிதைகள் காணக்கிடைத்தில.

தமிழோடு தமிழாக, மக்கள் தங்களோடு தமிழாகக் கலந்த காலத்தை உருவாக்கிய கவிஞன் மகாகவி பாரதி என்று துணிந்து கூறலாம். அவன் காலத்தில்தான் தமிழ் அனைவருக்கும் பொதுவுடைமை ஆயிற்று. “எங்கே தமிழ்? எங்கே தமிழ்? என்று எந்தமிழர் ஏங்குகையில் இங்கே தமிழ் என்று இழுத்து வந்தாய் நீ வாழ்க” என்று கண்ணதாசன் பாராட்டிக் கூறியது இமாலய உண்மையன்றோ!!

”தமிழரின் உயிர்நிகர் தமிழ் நிலை தாழ்ந்தால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம் தமிழுக்குத் தரும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்”

தமிழுக்கு அருவியின் துள்ளல் உண்டா? உண்டு என்று சொன்னவன் பாரதி. தமிழுக்கு அமுதின் சுவை உண்டா? உண்டு என்று சொன்னவன் பாரதி. தமிழில் அணலைக் காட்டியவன் பாரதி. தமிழில் அகிலின் மணத்தைக் கூட்டியவன் பாரதி. வாளின் கூர்மையும், வழியும் பனியின் குளிர்மையும் தமிழுக்கு உண்டு என்று சொன்னவன் பாரதி. மின்னல் வரிகளையும், மீட்டும் இடிமுழக்கச் ச்ந்தங்களையும் “தீம் தீம்
தீம்” எனக் குவித்தவன் பாரதி. அந்தப் பாரதியின் கண்கள் ஆங்கில ஆட்சியில்
தீப் பொறிகளைக் கொட்டியதால் அவன் கவிதைகள் எல்லாம் கூர் தீட்டிய
வாட்களாயிற்று.


”ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி”

என்ற இந்த பூகம்ப வரிகளால்தான் பாரத மாதவை புத்தியிர் ஊட்டினான். ”எந்த
நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே த்ரமன்றோ” என அவர் பூனையையா பாடினார்?
சாதி, மத, இன, மொழி என்ற வேறுபாட்டால் பிரிந்து இருந்த பாரதச் சேனையைப்
பாடினார். அந்த எழுத்துதான் பரங்கியரைப் பயமுறுத்தியது. இந்தியாவை
ஆளவேண்டும், இன்னும் ஆளவேண்டும் என்ற ஆசை கொண்ட போதெல்லாம், வெள்ளைப் பரங்கியரைப் பாரதியின் மீசை வெறுட்டியது. இந்தியர்கலை அடிமையாக்க வேண்டும், அடிமையாக்க வேண்டும் என்று வெள்ளையர்கள் ஆசைபட்ட போதெல்லாம் அவர்களைப் பாரதியின் கவிதை ஓசை மிறட்டியது. “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று விடுதலைக்கு முன்பாகவே நம் தலையில் மணிமுடியைத் தரித்தவன் பாரதி. தேசப்பற்றும் தெய்வீகப்பற்றும் கொண்ட அவனால் தமிழ் வாசம் பெற்றது. பராசக்தியைக்கூட அவன் பாரத மாதாவுக்காகவே வேண்டினான. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே” எனச் சொல்லிச் சொல்லி அவன் துள்ளிய துள்ளல் அருவியில் இன்று விடுதலை பெற்ற பாரத மாதா மஞ்சள் குளிக்கிறாள்.

ஆன்மீகத்தைப் பாடிய பாரதி ஆயிரம் தெய்வங்களா? என்று அதிசயத்தான். சக்தி
வழிபாடே சஞ்சலத்தைப் போக்கும் என்றான். விடுதலை வேட்கையில் வெள்ளையனை விறட்ட விருத்தப்பாக்களைப் பாடியவன், மக்களிடம் மண்டிக் கிடந்த அறியாமையைப் போக்க அகவல்களைச் சிந்தினான். இத்ற்கெல்லாம் மணிமுடியாக அவன் பாரில் எவரும் மனத்தில் எண்ணியும் பாராத பெண்ணுரிமைப் பேருணர்வைப் படைத்தான். பெண்ணைப் பெண்ணாகவா பர்த்தான் பாரதி?


”உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவ ளென்று அறியீரோ?”

என்று தெய்வ நிலைக்கு ஏற்றினான். அவன் பெண்ணைச் சமைப்பவளாகவோ சமைந்தவளாகவோ பார்க்கவில்லை. இந்த உலகைச் சுமப்பவளாக அன்றோ பார்த்தான்.அதனால்தான்

”பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கையே இல்லை

என்று உறுதிபடக் கூறினார். பாரதி கொண்ட பெண்ணுரிமைத்தீயின் மிச்சமே பாவேந்தரின் பெண்ணுரிமை என்றால் அது மிகையில்லை.
பள்ளித்தளங்களைக் கோயிலாக்கும் அற்புத முயற்சியைச் செய்து, அந்து வளர் மனிதப் பயிர்களுக்கு,

சொல்லின் இந்து தமிழ்ச் சொல்லே
அதனைத் தொழுது படித்திடடி பாப்பா”

என்று நெஞ்சில் மழலை மனதில் நெய்மணத்தைத் தடவிய பாரதி, தமிழுணர்வைத்
தமிழ்நாட்டில் பெய் மழையாகப் பெய்தான். எந்த மொழியும் தெரியாமல் “தமிழ்
எங்கள் உயிர்” என்று வறட்டுக் கூச்சல் இடாமல், எல்லா மொழிகளையும் கற்றுத்
தேர்ந்து,


யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணேன்”

என்று சொன்ன பாரதியின் வாக்கு நம் சிந்த்னைக்கு உரியது. அந்தச் சிந்தனையின் விளைவுதான் பாவேந்தர் பார்வையில் பைந்தமிழ்ப் பாகனாக, செந்தமிழ்த்தேனியாக, சிந்துக்குத் தந்தையாக, குவிக்கும் கவிதைக் குயிலாக பாரதியார் மிளிர்ந்தார்.

சுவை புதிது, வளம் புதிது, பொருள் புதிது, சொல் புதிது, என்று எதிலும்
புதுமை படைத்த பாரதி யாப்புக் கடலில் மூழ்கி முத்தெடுக்கப் பழகியவன்.
புதுக்கவிதையில் முறுவலித்தான். அவன் காதலித்தது மரபுக்கவிதையை என்றாலும்
கண் சிமிட்டியது புதுக்கவிதையில்.

”நமக்குத் தொழில் கவிதை: நாட்டுக்குழைத்தல்: இமைப்பொழுதும் சோராதிருத்தல்”
இதுவே அவன் தாரக மந்திரம். இந்த அடிகள் நம் மனதில் ஆழமாகப் பதிந்து பாரதி
என்றாலே கண்களில் ஈரத்தைக் காட்டும் அடிகள். மனிதர்கள் பிறப்பார்கள்;
ஈசல்களாய் வாழ்ந்து இறப்பார்கள்; ஆனால் கவிஞர்கள் பிறப்பார்கள்; என்றும்
இருப்பார்கள் நித்தியமாய். காலனைக் காலால் உதைத்த பாரதியும் இருக்கிறான்
எல்லோர் மனத்திலும் சத்தியமாக.

இன்று தமிழகத்து மேடைகளே அன்றி பிற மண்ணிலும் உதிரும் சுடர் வரிகளில்
பாரதியின் வரிகளே மின்னலாக மின்னுகின்றன. புனையும் கவிதைகளில் பாரதியின்
மீசை துடிப்பே அதிகமாகக் காணலாகிறது. புலவர்களின் விழித்திரையில்
பாரதியின் ஒளித்திரையே மிளிர்கிறது வண்ண மயமாக. எழுதுகோல்கள் திறக்கும்
போதெல்லாம் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த பாரதியே சிறகு
விறிக்கிறான். எண்ணத்தில் சிரிக்கிறான்; எழுத்தில் சிரிக்கிறான்;
கருத்தில் சிரிக்கிறான்; கற்பனையில் சிரிக்கிறான். தமிழை உச்சரிக்கும்
போது உதடுகள் ஈரமாவது போல பாரதியின் நினைவுகள் நம் நெஞ்சங்களில் ஈரமாகவே இருக்கின்றன. அந்த பாரதி என்றும் நம்மோடு! நாம் என்றும் அவனோடு!!


ஆதிரா..




பாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Tபாட்டுத்திறத்தாலே.... Hபாட்டுத்திறத்தாலே.... Iபாட்டுத்திறத்தாலே.... Rபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 9:40 pm

நிதர்சனம் உணர்த்தும் வரிகள் ஆதிரா...

மிக அருமை...

மன்னனின் மகுடம் பார்த்தது மக்களை பார்க்க தவறியது சத்தியமான உண்மை இது...

பாரதியாரின் அருமையான வரிகள் மனதை நிறைவாக்கியது ஆதிரா..

அன்பு பாராட்டுக்கள் பகிர்ந்தமைக்கு..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாட்டுத்திறத்தாலே.... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 9:42 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சனம் உணர்த்தும் வரிகள் ஆதிரா...

மிக அருமை...

மன்னனின் மகுடம் பார்த்தது மக்களை பார்க்க தவறியது சத்தியமான உண்மை இது...

பாரதியாரின் அருமையான வரிகள் மனதை நிறைவாக்கியது ஆதிரா..

அன்பு பாராட்டுக்கள் பகிர்ந்தமைக்கு..

பதியுமுன்பே சுடச்சுடக் கருத்து பகிர்ந்த தோழி ம்ஞ்சுவுக்கு என் மனமார்ந்த நன்றியும் அன்பும்.. பாட்டுத்திறத்தாலே.... 678642 பாட்டுத்திறத்தாலே.... 678642 பாட்டுத்திறத்தாலே.... 154550 பாட்டுத்திறத்தாலே.... 154550



பாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Tபாட்டுத்திறத்தாலே.... Hபாட்டுத்திறத்தாலே.... Iபாட்டுத்திறத்தாலே.... Rபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 9:45 pm

ஹௌது ஆதிரா... பாட்டுத்திறத்தாலே.... 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாட்டுத்திறத்தாலே.... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 9:47 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹௌது ஆதிரா... பாட்டுத்திறத்தாலே.... 154550
இது ஏனிது கன்னடா?? கொத்தா? நனெகே பால சந்தோஷ.. பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463



பாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Tபாட்டுத்திறத்தாலே.... Hபாட்டுத்திறத்தாலே.... Iபாட்டுத்திறத்தாலே.... Rபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 13, 2010 9:55 pm

பாட்டுத் திறத்தாலே, அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட பாரதி பற்றிய படைப்பு அருமை அக்கா!




பாட்டுத்திறத்தாலே.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 9:59 pm

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஹௌது ஆதிரா... பாட்டுத்திறத்தாலே.... 154550
இது ஏனிது கன்னடா?? கொத்தா? நனெகே பால சந்தோஷ.. பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463

ஊட்டா மாடியாய்த்தா ஆதிரா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாட்டுத்திறத்தாலே.... 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 13, 2010 10:01 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஹௌது ஆதிரா... பாட்டுத்திறத்தாலே.... 154550
இது ஏனிது கன்னடா?? கொத்தா? நனெகே பால சந்தோஷ.. பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463

ஊட்டா மாடியாய்த்தா ஆதிரா?

அடக்கடவுளே! இங்க என்ன நடக்குது? அநியாயம்



பாட்டுத்திறத்தாலே.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 10:12 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஹௌது ஆதிரா... பாட்டுத்திறத்தாலே.... 154550
இது ஏனிது கன்னடா?? கொத்தா? நனெகே பால சந்தோஷ.. பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463

ஊட்டா மாடியாய்த்தா ஆதிரா?
ஆயித்து மஞ்சு..நானு ஈவாக நித்தே மாடா ஹோத்தானே... நீவு ஊட்ட மாடி ஆயித்தா?



பாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Tபாட்டுத்திறத்தாலே.... Hபாட்டுத்திறத்தாலே.... Iபாட்டுத்திறத்தாலே.... Rபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 10:13 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஹௌது ஆதிரா... பாட்டுத்திறத்தாலே.... 154550
இது ஏனிது கன்னடா?? கொத்தா? நனெகே பால சந்தோஷ.. பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463 பாட்டுத்திறத்தாலே.... 705463

ஊட்டா மாடியாய்த்தா ஆதிரா?

அடக்கடவுளே! இங்க என்ன நடக்குது? அநியாயம்

எங்கேயோ புகையர மாதிரி இருக்கே!!!! பாட்டுத்திறத்தாலே.... 139731 பாட்டுத்திறத்தாலே.... 139731 பாட்டுத்திறத்தாலே.... 139731



பாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Tபாட்டுத்திறத்தாலே.... Hபாட்டுத்திறத்தாலே.... Iபாட்டுத்திறத்தாலே.... Rபாட்டுத்திறத்தாலே.... Aபாட்டுத்திறத்தாலே.... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக