ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 6 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 6 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்

+35
ச. சந்திரசேகரன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
யினியவன்
DERAR BABU
Ahanya
அச்சலா
ராஜா
ஹர்ஷித்
இரா.பகவதி
மகா பிரபு
ரா.ரா3275
dhilipdsp
ஜாஹீதாபானு
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
Manik
bhuvi19
அருண்
Ganesh1
nandhtiha
Thanjaavooraan
V.Annasamy
சிவா
அன்பு தளபதி
T.N.Balasubramanian
சாந்தன்
சரவணன்
ரபீக்
மஞ்சுபாஷிணி
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
Aathira
balakarthik
39 posters

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 04, 2010 10:38 am

கலை wrote:சிலேடை நயம் வியந்தேன்... அதிலும் அந்த மேளதாளமே அருமை பாலா..!
நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 04, 2010 10:40 am

T.N.Balasubramanian wrote:உண்மையில் மேளதாளமே சிலேடை சிரிப்புகள் - Page 6 806360
கொட்டி வாழ்திடவேண்டும் பாலா!

அருமையான சிலேடை..

ரமணீயன்.

நன்றி ஐயா அது சரி தேருவருதே அப்படினா மேளம் கொட்டளாம் எனக்கு எதுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by V.Annasamy Sat Dec 04, 2010 11:01 am

விகடகவி அமர்ந்த தேருவருதே !
சுகமாய் தங்கியது மேளதாளமே
சுவைக்கு பானகநீர் மோருபோருமோ
இவற்றையும் கசடற கற்க
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 04, 2010 11:12 am

V.Annasamy wrote:விகடகவி அமர்ந்த தேருவருதே !
சுகமாய் தங்கியது மேளதாளமே
சுவைக்கு பானகநீர் மோருபோருமோ
இவற்றையும் கசடற கற்க

அண்ணா இது என்ன மாயமா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 04, 2010 11:53 am

தமிழிலக்கியத்தில் இரட்டைக் கவிராயர்களுக்கு தனியிடம் உண்டு. இந்த இரட்டையர்களில் ஒருவர் "குருடர்", மற்றவர் "முடவர்". ஆனாலும் கவிபாடுவதில் மிக்கவல்லவர்கள். குருடர் தோளில் முடவர் ஏறி அமர்ந்துகொள்வார். முடவர் வழிகாட்ட, குருடர் நடப்பார். ஊரூராக சென்று பாடல் புனைவது இவர்கள் வழக்கம். ஒருவர் முதல் இரு அடிகளை பாட, மற்றவர் பின்னிரு அடிகளை பாடி பாடலை முடித்துவைப்பார்.

ஒருமுறை இரட்டையர்கள் திருவாரூர் நடராசரை தரிசித்துவிட்டு, ஒரு மடத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த சமயம், குருடர்

நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம்
பாணந்தான்...

என்று கூறி, பாடலை தொடரமுடியாது போகவே அதை அந்த மடத்தின் சுவரில் எழுதிவிட்டு சென்றனர். பின்னாளில் அந்தப்பாடல் முறையாக எழுதி முடிக்கப்பட்டு அதன்கீழ் "காளமேகம்" என ஒப்பமிடப்பட்டிருந்தது.

நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம்
பாணந்தான் மண்டின்ற பாணமே - தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீயெப்படியோ
நேரார் புரமெரித்த நேர்.


சிவனின் வில்லில் பூட்டிய நாண் - ஒரு பாம்பு, ஆதிசேடன் (அதனால் தான் நஞ்சிருக்கும்). விஷப்பாம்பை நாணாக கொண்டு, "மண் தின்ற திருமாலை" அம்பாக (பாணமாக) செய்து நீ எப்படித்தான் முப்புரங்களை எரித்தாயோ சிவனே! என்று அந்தப் பாடல் வருகிறது.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by V.Annasamy Sat Dec 04, 2010 1:36 pm

நாணென்றால் இடப்புறத்தாள் நாணியதைக் கண்டு
பாணம் தொடுக்க மறந்த வீணரை,
நஞ்சை அமுதென உண்டவன், எப்புரமும்
மிஞ்சினான் வெற்றி கண்டு.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by V.Annasamy Sat Dec 04, 2010 1:46 pm

balakarthik wrote:
V.Annasamy wrote:விகடகவி அமர்ந்த தேருவருதே !
சுகமாய் தங்கியது மேளதாளமே
சுவைக்கு பானகநீர் மோருபோருமோ
இவற்றையும் கசடற கற்க

அண்ணா இது என்ன மாயமா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கடவுளே வாசவா, இது என்ன மாயமா, இந்நிலை நீடிப்படது மோசமோ !!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 04, 2010 1:50 pm

V.Annasamy wrote:நாணென்றால் இடப்புறத்தாள் நாணியதைக் கண்டு
பாணம் தொடுக்க மறந்த வீணரை,
நஞ்சை அமுதென உண்டவன், எப்புரமும்
மிஞ்சினான் வெற்றி கண்டு.

அருமை நவீன காளமேக புலவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 04, 2010 2:21 pm

V.Annasamy wrote:
balakarthik wrote:
V.Annasamy wrote:விகடகவி அமர்ந்த தேருவருதே !
சுகமாய் தங்கியது மேளதாளமே
சுவைக்கு பானகநீர் மோருபோருமோ
இவற்றையும் கசடற கற்க

அண்ணா இது என்ன மாயமா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கடவுளே வாசவா, இது என்ன மாயமா, இந்நிலை நீடிப்படது மோசமோ !!

மோசமோ என கலங்கவேண்டாம் கவிஞ்சரே தினமும் சிவா சிவா என வாசித்தால் அனைத்தும் வசமாகும்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 11, 2010 1:09 pm

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான் - கம்பர்.
பால காண்டம் . ஆற்றுப் படலம் 10 வது பாடல்

இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வௌ;வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
இப்பேற்பட்ட ராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 6 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum