புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_lcapசிலேடை சிரிப்புகள் - Page 13 I_voting_barசிலேடை சிரிப்புகள் - Page 13 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்


   
   

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 2:28 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:என்னமோ சொல்லுரிங்க ... என்னன்னு தான் புரியல
எனக்கும்தான் பாஸ்

புரிந்தது புலாவ் அளவு புரியாதது புடலங்காய் அளவு
இன்று எது புரிந்ததோ அது நாளை புரியாமல் போகலாம்
இன்று எது புரியாமல்போனதோ அது நாளை புரிந்து போகலாம்
ஆகவே புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது அறிந்தது அறியாதது வழிந்தது வழியாதது விழுந்தது விழாதது இப்படி எத்தனை அது இருக்கோ அத்தனையும் நிறுத்தனும் அதுதுதுதுதுதுதுதுதுதுது சிலேடை சிரிப்புகள் - Page 13 Images?q=tbn:ANd9GcQLY60EWZo2q4Thy58XIU-j46aVP8pw1XO8MuW0GHi3sXjQAflaAbxYFdaZeg



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 4:35 pm

ஒரு சமயம் தமிழறிஞர் கி.வா.ஜ. தனது நண்பரும் வேத வித்தகருமான வாரணமாச்சாரியாருடன் மற்றொரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தார். நண்பரின் மனைவி இருவரையும் பார்த்து, "கேசரி சமைத்திருக்கிறேன்... பிடிக்குமா? சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்டாராம்.

அதற்கு வேதவித்தகர் வாரணமாச்சாரியார், "எனக்கு கேசரி பிடிக்காது... மேலும் எனக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், தயவுசெய்து வேண்டாம்' என்று மறுத்தார்.

அருகிலிருந்த கி.வா.ஜ., "வாரணத்திற்குக் கேசரியைப் பிடிக்காமல் இருப்பது இயற்கைதானே!' என்றாராம்.

பின்குறிப்பு :- வாரணம் என்பது யானையையும் கேசரி என்பது சிங்கத்தையும் குறிக்கும் தமிழ்ச் சொல்.

நன்றி:- தினமணி



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 4:52 pm

சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!

நன்றி :- கீற்று



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 5:34 pm

சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 25, 2012 5:45 pm

பெண்ணிற்குள் ஆண் அடக்கம்

பெண்களுக்கு உள்ளே ஆண்கள் அடக்கம் என்பது சில வார்த்தைகள் மூலம் புலப்படுகிறது.

Female என்பதில் male அடக்கம்
Lady என்பதில் lad அடக்கம்
Woman என்பதில் man அடக்கம்
She என்பதில் he அடக்கம்




ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 25, 2012 5:46 pm

சொல்லின் செல்வர் சிறப்பு.! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 25, 2012 6:50 pm

வெளுத்துக்கட்டுகிறீர்கள் மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 26, 2012 8:12 am

balakarthik wrote:பெண்ணிற்குள் ஆண் அடக்கம்

பெண்களுக்கு உள்ளே ஆண்கள் அடக்கம் என்பது சில வார்த்தைகள் மூலம் புலப்படுகிறது.

Female என்பதில் male அடக்கம்
Lady என்பதில் lad அடக்கம்
Woman என்பதில் man அடக்கம்
She என்பதில் he அடக்கம்

பாலாகார்த்திக் , கல்யாணத்திற்கு பிறகு கண்டுபிடித்த உண்மையோ இது.
இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு,

Male இல்லாவிட்டால் Female இல்லை.
Lad இல்லாவிட்டால் Lady இல்லை
Man இல்லாவிட்டால் woman இல்லை
He இல்லாவிட்டால் SHE இல்லை
என்று சொல்லுவார் என நம்புவோம் ஆக ,

ரமணியன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 2:39 am

அருமையே... :நல்வரவு:



சிலேடை சிரிப்புகள் - Page 13 Paard105xzசிலேடை சிரிப்புகள் - Page 13 Paard105xzசிலேடை சிரிப்புகள் - Page 13 Paard105xzசிலேடை சிரிப்புகள் - Page 13 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 1:41 pm

கி.வா.ஜ. ஒருமுறை, ‘‘நான் உண்மையிலேயே பேசிய சிலேடைத் துணுக்குகளைத் தவிர, நான் பேசாத சில சி‌லேடைகளும் என் பெயரில் பத்திரிகைகளில் இடம்பெற்று விடுகின்றன. சில துணுக்கு எழுத்தாளர்கள் அவர்களின் சி‌லேடைகளுக்கு என் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். ஒன்று ‌சொல்ல வேண்டும்... நான் சொன்ன சிலேடைகளை விட நான் ‌சொன்னதாக வரும் சில சிலேடைகள் மிக நன்றாகவே இருக்கின்றன.’’ என்று சொன்னார்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக