ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்

+35
ச. சந்திரசேகரன்
கரூர் கவியன்பன்
பாலாஜி
யினியவன்
DERAR BABU
Ahanya
அச்சலா
ராஜா
ஹர்ஷித்
இரா.பகவதி
மகா பிரபு
ரா.ரா3275
dhilipdsp
ஜாஹீதாபானு
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
Manik
bhuvi19
அருண்
Ganesh1
nandhtiha
Thanjaavooraan
V.Annasamy
சிவா
அன்பு தளபதி
T.N.Balasubramanian
சாந்தன்
சரவணன்
ரபீக்
மஞ்சுபாஷிணி
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
Aathira
balakarthik
39 posters

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Wed Dec 07, 2011 1:53 pm

மணிமேகலை என்கிற பெயரில் ஒரு பெரிய தத்துவம் இருக்கிறது.

Money-May-கலை, அதாவது செல்வம் நம்மை விட்டுக் கலைந்து போகலாம்.

இதைப் பார்த்து விட்டு சீத்தலை சாத்தனாரின் ஆவி என்னை தலையில் சாத்தியது என்றால் பார்க்கிறவர்கள்,

see, தலை சாத்தினார் என்பார்கள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by ஜாஹீதாபானு Wed Dec 07, 2011 2:01 pm

balakarthik wrote:மணிமேகலை என்கிற பெயரில் ஒரு பெரிய தத்துவம் இருக்கிறது.

Money-May-கலை, அதாவது செல்வம் நம்மை விட்டுக் கலைந்து போகலாம்.

இதைப் பார்த்து விட்டு சீத்தலை சாத்தனாரின் ஆவி என்னை தலையில் சாத்தியது என்றால் பார்க்கிறவர்கள்,

see, தலை சாத்தினார் என்பார்கள்.
எப்படி பாலா நீங்க நின்னுட்டே யோசிப்பீங்களா ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Wed Dec 07, 2011 2:07 pm

கலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்த நேரம்.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.பி.ஜி.கருத்திருமன் சட்டசபையில் கேட்டார்.

“நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”

இக்கட்டான இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உள்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.

“என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்கு செய்ய மாட்டேன் என்பதல்ல”


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by krishnaamma Wed Dec 07, 2011 8:17 pm

balakarthik wrote:கலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றிருந்த நேரம்.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.பி.ஜி.கருத்திருமன் சட்டசபையில் கேட்டார்.

“நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?”

இக்கட்டான இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உள்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.

“என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்கு செய்ய மாட்டேன் என்பதல்ல”

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 9:25 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 10, 2011 6:10 pm

தன்னுடைய கதாநாயகனுக்கு கோவலன் என்று இளங்கோ அடிகள் பெயர் சூட்டியதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

இளங் – கோ என்றால் இளவரசன். அவரோ துறவியானவர். அரசனாவதற்கு பதில் ஆண்டியானவர். அதாவது தலைகீழ்.

இளங் – கோ, கோ – இலன் ஆனார். (ங் ஈற்றெழுத்தாக வராது என்பதால் அதே ஓசை தரும் ன்)

கோ – இலன் என்றால் அரசனில்லை என்கிற பொருளும் வருகிறது. பெயரின் எழுத்துக்களைத் தலைகீழாக்கினால் பொருளும் தலை கீழாகிறது!

அலன், இலன் இரண்டுமே ஒரே பொருள் தரும் விகுதிகள்தான். ஆகவே கோ – அலன் என்றும் சொல்லலாம். கோ வும் அலனும் இணையும் போது கோவலன் ஆகிறது.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Sat Dec 10, 2011 6:15 pm

கண்ணகி என்றால் என்ன அர்த்தம்?

கண் + நஹி கண்ணில்லை என்று அர்த்தமா?

நகை என்றால் சிரிப்பு. கண் நகி என்றால் கண்ணால் சிரிக்கிறவள் என்று அர்த்தம்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by dhilipdsp Sat Feb 18, 2012 8:35 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by balakarthik Tue Mar 20, 2012 1:06 pm

வசை பாடல் - காளமேகம்

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!


இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம், மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா?

இனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.

கோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி. எவ்வளவு அருமையான விளக்கம்.


ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by ரா.ரா3275 Tue Mar 20, 2012 1:12 pm

balakarthik wrote:
இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம், மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதில்லையா?

இனி சிலேடையின் உட்பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.

கோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி. எவ்வளவு அருமையான விளக்கம்.

அற்புதம்...அருமை...சூப்பர்...
அருமையானப் பதிவு-பகிர்வு...
நன்றி பாலாகார்த்திக்...


சிலேடை சிரிப்புகள் - Page 11 224747944

சிலேடை சிரிப்புகள் - Page 11 Rசிலேடை சிரிப்புகள் - Page 11 Aசிலேடை சிரிப்புகள் - Page 11 Emptyசிலேடை சிரிப்புகள் - Page 11 Rசிலேடை சிரிப்புகள் - Page 11 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிலேடை சிரிப்புகள் - Page 11 Empty Re: சிலேடை சிரிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum