Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ
3 posters
Page 1 of 1
கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ
நதி நீர்ப் பகிர்வு பிரச்சனைகளில் கேரளாவை கண்டித்து மதிமுக சார்பில் நாளை அந்த மாநிலத்துக்குச் செல்லும் 12 சாலைகளிலும் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர்ப் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கிறது கேரளம். சட்டத்தை உடைக்கிறது, நீதியைக் குப்பையில் வீசுகிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே காலில் போட்டு மிதித்து விட்டதே!.
அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் நயவஞ்சகத்தைத் தானே மத்திய அரசு செய்கிறது. அப்படியானால், நம்மைக் காக்க என்ன வழி? போராட்டம் தானே ஒரே வழி, அதுவும், அறப்போராட்டம், வன்முறை துளியும் தலைகாட்டாத போராட்டம். இந்தப் போராட்டத்தை, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நடத்தவில்லை நாம்.
நாடு சுற்றி வந்து, லட்சோபலட்சம் மக்களைச் சந்தித்து, மாதக்கணக்கில், வருடக்கணக்கில், பிரச்சனையை எடுத்து விளக்கி, நாளை நடக்கும் அறப்போரையும், ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நகரங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று, பிரச்சாரம் செய்து, மக்களை ஆயத்தப்படுத்தி உள்ளோம்.
அறபோருக்கு எதிர்பார்த்தைவிட பலத்த ஆதரவு. தமிழகம் எங்கும் குறிப்பாக, பாதிக்கப்படும் பகுதிகளிலும் வலுவாக ஏற்பட்டிருப்பது, தெம்பைத் தருகிறது.
இந்தப் போராட்டத்தில், நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது, ஒழுங்கும், கட்டுப்பாடும். எள் முனை அளவு வன்முறையும் தலைகாட்ட நாம் அனுமதிக்கக் கூடாது. கேரள மக்களிடம் நம்மைத் தவறாகச் சித்தரிக்கவே அது பயன்படும்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில், 2, 17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம், 65 லட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்.
பாம்பாறு பிரச்சனையால், 78,000 ஏக்கர் பாசனத்தை இழக்க நேரும் அவலம். செண்பகவல்லி தடுப்பு அணையால், 30 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்கும் இன்னல். நெய்யாறு இடதுகரைச்சானலில், 9,200 ஏக்கர் பாசனத்தை இழந்து நிற்கும் துயரம்.
இது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் எதிர்காலத்தில் வறண்டு, ஒன்றரைக் கோடி மக்கள் குடி தண்ணீரை இழக்கின்ற விபரீதம். இவற்றையெல்லாம், கவலையோடு கவனத்தில் கொண்டே, அறப்போரை நடத்துகிறோம்.
முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போலவும், லட்சக்கணக்கான கேரள மக்கள் மடிவதைப்போலவும், மாயாஜால கிராபிக்ஸ் காட்சிகளைக் குறுந்தகடுகளாகத் தயாரித்து, கேரள மாநிலம் முழுவதும் ஐந்து லட்சம் சி.டிக்களை வழங்கி, மக்களிடம் பதற்றத்தை பீதியை ஏற்படுத்தி வரும் அச்சுதானந்தன் அரசு, உச்ச நீதிமன்றத்திலும் இதை ஆவணமாக ஆக்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும் கேரள அரசு திட்டமிடுகிறது.
இந்த அறப்போர், கேரள மக்களுக்கு, உண்மையை உணர்த்தட்டும், நியாயத்தின் கதவுகள் திறப்பதற்கு வழி அமைக்கட்டும். 28ம் தேதியோடு போராட்டம் நின்று விடாது. உரிமைகாக்கும் அறப்போர்ப் பயணத்தில் இதுவும் ஒரு மைல்கல் ஆகும். கேரள முற்றுகை- சாலை மறியல் என்று, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.
அறப்போரில் 12 சாலைகளிலும் பங்கு ஏற்கும் தலைவர்களோடு, மதிமுக தோழர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்வார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த இடங்களில் கலந்து கொள்வார்கள் என்பது முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க நடைபெறும் இந்த அறப்போரில் விவசாயப் பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லைகளைக் கடந்து பெருமளவில் பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் வைகோ
இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர்ப் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கிறது கேரளம். சட்டத்தை உடைக்கிறது, நீதியைக் குப்பையில் வீசுகிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே காலில் போட்டு மிதித்து விட்டதே!.
அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் நயவஞ்சகத்தைத் தானே மத்திய அரசு செய்கிறது. அப்படியானால், நம்மைக் காக்க என்ன வழி? போராட்டம் தானே ஒரே வழி, அதுவும், அறப்போராட்டம், வன்முறை துளியும் தலைகாட்டாத போராட்டம். இந்தப் போராட்டத்தை, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நடத்தவில்லை நாம்.
நாடு சுற்றி வந்து, லட்சோபலட்சம் மக்களைச் சந்தித்து, மாதக்கணக்கில், வருடக்கணக்கில், பிரச்சனையை எடுத்து விளக்கி, நாளை நடக்கும் அறப்போரையும், ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நகரங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று, பிரச்சாரம் செய்து, மக்களை ஆயத்தப்படுத்தி உள்ளோம்.
அறபோருக்கு எதிர்பார்த்தைவிட பலத்த ஆதரவு. தமிழகம் எங்கும் குறிப்பாக, பாதிக்கப்படும் பகுதிகளிலும் வலுவாக ஏற்பட்டிருப்பது, தெம்பைத் தருகிறது.
இந்தப் போராட்டத்தில், நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது, ஒழுங்கும், கட்டுப்பாடும். எள் முனை அளவு வன்முறையும் தலைகாட்ட நாம் அனுமதிக்கக் கூடாது. கேரள மக்களிடம் நம்மைத் தவறாகச் சித்தரிக்கவே அது பயன்படும்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில், 2, 17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம், 65 லட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்.
பாம்பாறு பிரச்சனையால், 78,000 ஏக்கர் பாசனத்தை இழக்க நேரும் அவலம். செண்பகவல்லி தடுப்பு அணையால், 30 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்கும் இன்னல். நெய்யாறு இடதுகரைச்சானலில், 9,200 ஏக்கர் பாசனத்தை இழந்து நிற்கும் துயரம்.
இது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் எதிர்காலத்தில் வறண்டு, ஒன்றரைக் கோடி மக்கள் குடி தண்ணீரை இழக்கின்ற விபரீதம். இவற்றையெல்லாம், கவலையோடு கவனத்தில் கொண்டே, அறப்போரை நடத்துகிறோம்.
முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போலவும், லட்சக்கணக்கான கேரள மக்கள் மடிவதைப்போலவும், மாயாஜால கிராபிக்ஸ் காட்சிகளைக் குறுந்தகடுகளாகத் தயாரித்து, கேரள மாநிலம் முழுவதும் ஐந்து லட்சம் சி.டிக்களை வழங்கி, மக்களிடம் பதற்றத்தை பீதியை ஏற்படுத்தி வரும் அச்சுதானந்தன் அரசு, உச்ச நீதிமன்றத்திலும் இதை ஆவணமாக ஆக்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும் கேரள அரசு திட்டமிடுகிறது.
இந்த அறப்போர், கேரள மக்களுக்கு, உண்மையை உணர்த்தட்டும், நியாயத்தின் கதவுகள் திறப்பதற்கு வழி அமைக்கட்டும். 28ம் தேதியோடு போராட்டம் நின்று விடாது. உரிமைகாக்கும் அறப்போர்ப் பயணத்தில் இதுவும் ஒரு மைல்கல் ஆகும். கேரள முற்றுகை- சாலை மறியல் என்று, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.
அறப்போரில் 12 சாலைகளிலும் பங்கு ஏற்கும் தலைவர்களோடு, மதிமுக தோழர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்வார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த இடங்களில் கலந்து கொள்வார்கள் என்பது முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க நடைபெறும் இந்த அறப்போரில் விவசாயப் பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லைகளைக் கடந்து பெருமளவில் பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் வைகோ
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ
இங்க இருந்து போற எல்லா பொருள்களையும் நாலு நாளைக்கு
நிறுத்தினால போதும்.தன்னாலா கேரளாக்காரன் நம்ம வழிக்கு வந்துடுவான்.
நிறுத்தினால போதும்.தன்னாலா கேரளாக்காரன் நம்ம வழிக்கு வந்துடுவான்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ
உதயசுதா wrote:இங்க இருந்து போற எல்லா பொருள்களையும் நாலு நாளைக்கு
நிறுத்தினால போதும்.தன்னாலா கேரளாக்காரன் நம்ம வழிக்கு வந்துடுவான்.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ
மெயின் இடத்திலயே அவன் கை வைக்கிறானே அக்கா மற்றும் ரபீக் அண்ணா அவனுக்கு இப்படி செய்தால் போதுமா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» 28ல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மதிமுக ஆர்பாட்டம்: வைகோ
» இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது!
» மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளைக் கண்டித்து போடியில் தீவைப்பு, சாலை மறியல்!
» இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது!
» மின் தடையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளைக் கண்டித்து போடியில் தீவைப்பு, சாலை மறியல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|