புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
prajai
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
189 Posts - 37%
mohamed nizamudeen
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_m10உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 28, 2011 7:07 pm

உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்!

நல்ல ஊதியத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நிச்சயம் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பதற்கு கல்வி உதவித்தொகையும் கிடைக்கும் என்கிறார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா தென்மண்டலத் தலைவர் பி.ரவி.

கம்பெனி செக்ரட்டரி படிப்பு குறித்து ‘புதிய தலைமுறை கல்வி’க்கு அவர் அளித்த பேட்டி:
கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?
இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா கல்வி நிலையம், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும். மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் தில்லியில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லியில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் உள்ளன.

ரூ. 5 கோடியும் அதற்கு மேலும் மூலதனம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் கட்டாயம் ஒரு கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது இந்திய கம்பெனி சட்ட விதி. அதுபோல பங்குச் சந்தையில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கண்டிப்பாக கம்பெனி செக்ரட்டரியை நியமிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு வேறு படிப்பு படித்தவர்களை நியமிக்கக் கூடாது. இந்தப் பதவியில் அமர கண்டிப்பாக ஏ.சி.எஸ். என்று அழைக்கப்படும் அசோசியேட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்தப் படிப்பு படித்தவர்கள் ஒரு நிறுவனத்தில் என்ன பணியில் அமர்வார்கள்?
சி.எஸ். கோர்ஸ் முடித்து கம்பெனியில் கம்பெனி செக்ரட்டரி பதவியில் அமரும் ஒருவர் படிப்படியாக, நிர்வாக இயக்குனர், கம்பெனியின் தலைவர் பதவியில் அமர முடியும். இதுதவிர கம்பெனி ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கம்பெனி நீதிமன்றங்களில் ஆஜராக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்தலில் ஒரு கம்பெனி செக்ரட்டரியின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

சி.எஸ். படிப்பில் சேர அடிப்படை கல்வித் தகுதி என்ன?
பிளஸ் டூ படித்திருந்தாலே போதுமானது. பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பிரிவு எடுத்துப் படித்த மாணவர்களும் இதில் சேரலாம்.

சி.எஸ். படிப்பை பொருத்தவரை ஆரம்ப நிலை (ஃபவுண்டேஷன் புரோகிராம்), நிர்வாக நிலை (எக்ஸிகியூடிவ் புரோகிராம்), தொழில்முறை நிலை (புரபஷனல் புரோகிராம்) என்ற மூன்று படிகள் (stages) உண்டு. இதில் பிளஸ் டூ படித்து முடித்து வரும் மாணவர்கள் கண்டிப்பாக ஃபவுண்டேஷன் புரோகிராமில் படித்து முடித்த பிறகுதான் நிர்வாக நிலையில் சேர முடியும். இதுவே ஒரு மாணவர் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்கும் பட்சத்தில் அவர் நேரடியாக நிர்வாக நிலையில் படிப்பைத் தொடரலாம். நிர்வாக நிலையில் தேர்ச்சிப் பெற்றால்தான் தொழில்முறை நிலையில் சேர முடியும்.

இளநிலை பட்டப் படிப்பில் வணிகப்பிரிவும், முதுநிலைப் பட்டப் படிப்பில் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பிரிவும் எடுத்து தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு நிர்வாக நிலைப்பிரிவில் 3 தாள்கள் விலக்கு அளிக்கப்படுகிறது.

பொதுவாக நிர்வாக நிலைப்பிரிவில் தேர்வு எழுதும் மாணவர்கள் 6 தாள்களை எதிர்கொள்ள வேண்டும் ரூ.5கோடிக்கு குறைவாக முதலீடு செய்து நடத்தப்படும் நிறுவனத்தில் நிர்வாக நிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பணியில் சேர்ந்துகொள்ளலாம்.

இந்தப் படிப்பில் சேர பயிற்சிக் கட்டணம் எவ்வளவு?
ஆரம்ப நிலைப் படிப்புக்கான காலம் மொத்தம் எட்டு மாதங்கள். இந்தப் படிப்பில் சேர பயிற்சிக் கட்டணமாக ரூ.3,600வசூலிக்கப்படுகிறது. நிர்வாக நிலைப் படிப்பு மற்றும் தொழில்முறை நிலைப் படிப்புகளுக்கான காலம் தலா 9மாதங்கள். இதில் நிர்வாக நிலைப்பிரிவில் சேரும் மாணவர்கள் வணிகவியல் பட்டதாரிகளாக இருக்கும்பட்சத்தில் ரூ.7,000 கட்டணம். மற்ற மாணவர்களுக்கு ரூ.7,750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொழில்முறை நிலை படிப்புக்கு ரூ.7,500 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்தப் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறதா?
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு குறைவாகவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்திலிருந்து அனைத்துக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஆரம்ப நிலைப் படிப்புக்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பில் 75 சதவீதமும், இளநிலை பட்டப் படிப்பில்

60 சதவீதம் எடுத்து தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு நிர்வாக நிலைப் படிப்பில் சேர முழுக் கட்டணமும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஸ்டூடண்ட் எஜூக்கேஷன் ஃபண்ட் டிரஸ்ட் மூலம் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

இந்தப் படிப்பில் சேர அட்மிஷன் எப்போது?
வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சேரும் மாணவர்கள் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர்30ஆம் தேதிக்குள் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் அடிப்படைத் தேர்வை எழுதலாம். பிப்ரவரி 28க்குள் எக்ஸிகியூடிவ் கோர்ஸில் சேருபவர்கள் அதே ஆண்டு டிசம்பரில் 2 பிரிவுகளும்,மே31க்குள் சேருபவர்கள் அதே ஆண்டு டிசம்பரில் ஒரு பிரிவு மட்டும் தேர்வு எழுதலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் எக்ஸிகியூடிவ் கோர்ஸில் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2 பிரிவுகளும், நவம்பர் 30க்குள் சேரும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் ஒரு பிரிவு தேர்வையும் எழுத முடியும்.

இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. ஆனால், குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். இந்தியா முழுவதும் இந்தப் படிப்பில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் சேருகிறார்கள். ஆனால், இதில் முழுவதும் தேர்ச்சி பெறும் மாணவர்கள் வெறும் இரண்டாயிரம் மட்டுமே.

இந்தப் படிப்பு முடித்த பிறகு ஏதேனும் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறதா?
புரபஷனல் தேர்வை முடித்த மாணவர்கள், 16 மாத மேலாண்மை பயிற்சிக்கு (மேனேஜ்மெண்ட் டிரெயினிங்)செல்ல வேண்டும். அதற்குப் பிறகு இன்ஸ்டிட்யூட்டில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு அசோசியேட் கம்பெனி செக்ரட்டரி கோர்ஸ் முடித்ததற்கான சான்றிதழ் கிடைக்கும்.

பிராந்திய மொழியில் இந்தப் படிப்பை மேற்கொள்ள முடியுமா?
கம்பெனி செக்ரட்டரி படிப்பைப் பொருத்தவரை மாணவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் தேர்வு எழுதியாகவேண்டும்.

இந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு எப்படி?
சென்னை மண்டலத்தைப் பொருத்தவரை மொத்தம் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கு கொள்கின்றன. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயிலிருந்து7 லட்ச ரூபாய் வரை ஊதியத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், 30 ஆயிரம் கம்பெனி செக்ரட்டரி மட்டுமே பணியாற்றுகிறார்கள். அப்படியானால், இந்தப் பணிக்கான நபர்களின் தேவையை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், 2015ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 5,000 நிறுவனங்கள் கிராமப்புறத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் கண்டிப்பாக ஒரு கம்பெனி செக்ரட்டரி நியமிக்கப்படவேண்டியிருப்பதால், இந்தப் படிப்புக்கான தேவை இன்று இருப்பதைவிட எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும்.

மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக