ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

3 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 1:48 pm

First topic message reminder :

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம்இ பல ஆண்டுகள் ஆய்வு செய்துஇ பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்புஇ அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும்இ அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லைஇ இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.


வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போதுஇ குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாதுஇ மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம்இ குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:50 pm

அல்லாஹ்வின் அருளே!


எனவே, எந்த குழந்தை பிறந்தாலும் அல்லாஹ் தனக்கு செய்த அருள் என்று கருதி அவனுக்கு நன்றிசெய்யும் பண்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டும். பெண் குழந்தை கொடுத்தவன் இறைவனே! அதனை பாதுகாப்பாக வளர்ப்பவனும் அவனே! என்ற ஆழமான இறை நம்பிக்கை நம்மில் வளர்ந்து மிளிர வேண்டும். தாம் விரும்பும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் உலகில் யாருக்கும் வழங்கப்பட வில்லை. அது சாத்தியமும் அன்று. யாருக்கு என்ன குழந்தையை தர வேண்டும் என்று தீர்மானிப்பதில் இறைவனைத்தவிர வேறு யாருடைய தலையீடும், அந்த தீர்மானத்தை மாற்றி எழுதும் வல்லமை பெற்ற யாரும் இந்த உலகில் இல்லை. இதனை பின்வரும் இறைவசனம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:51 pm

பெண்ணினத்தை வெறுப்பவன் இறைவனை வெறுப்பவனாகும்


வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும் அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண்மக்களை அன்பளிப்பு செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லதுஇ ஆண்மக்களையும்இ பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான் அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய) மிக்க ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 42: 49இ 50)
யாருக்கு என்ன குழந்தையைக் கொடுக்க வேண்டும்இ யாரை குழந்தைப் பாக்கியமற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது என்று இந்த வசனம் உரக்கப் பேசுவதைக் கவனியுங்கள்.


எனவேஇ பெண்குழந்தை பிறப்பதை வெறுக்கும் ஒருவன் இறைவன் செய்த தீர்மானத்தை வெறுத்தவனாக கருதப்பட்டு இஸ்லாத்தின் வட்டத்திலிருந்தே வெளியேறியவன் என்று முத்திரை குத்தப்படும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இறைவனுடைய தீர்மானம்இ அது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது இறைவிசுவாசியின் கடமைகளில் ஒன்றாகும். அதனை ஏற்றுக் கொள்ளாத போது அவன் ஒரு முஸ்லிமாக அறவே இருக்கமுடியாது. எனவே ஒருவனுக்கு பெண் குழந்தை பிறப்பதும்இ ஆண் குழந்தை பிறப்பதும் அல்லாஹ்வின் தீர்மானமாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:52 pm

இறைவன் மட்டும் அறிந்த இரகசியம்


ஆணின் உயிரணுவை மனித வடிவமாக மாற்றிஇ கண்இ காது மற்றும் பல உடலுறுப்புகளையும் உருவாக்க வேண்டும் எனும் கட்டளைகள் வழங்கப்பட்ட வானவருக்குஇ உரிய நேரம் வரும்வரை ஆணாக அல்லது பெண்ணாக அதனை ஆக்க வேண்டுமா? என்பது அறிவித்துக் கொடுக்கப்பட வில்லை. அதனால் அதனை ஆணாக அல்லது பெண்ணாக ஆக்க வேண்டுமா? என்பதற்கான அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னவாக ஆக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் கேட்டும் விடுகிறார்.


உண்மையில் உயிரணு கருவறைக்குள் செல்லும் போதே அது ஆணா அல்லது பெண்ணா என்பது தீர்மானமாகிவிடும். (இது குறித்து பின்பு உரிய இடத்தில் விளக்கப்படும்.) எனினும் பாலுறுப்புகளை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வரும் வரை அல்லாஹ் மட்டுமே அறிந்த இரகசியமாக அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. உரிய நேரம் வந்ததும்இ தான் எதுவாகப்படைக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தானோ அதற்குரிய பாலுறுப்பை வெளிப்படுத்த வானவருக்கு உத்தரவிடுகிறான். அந்த இறை உத்தரவைப் பெற்ற பிறகுதான் அந்த வானவர் அதனைச் செயல் படுத்துகிறார். அதற்கு முன்புவரை அந்த வானவராலும் அறிய முடியாது. அது மட்டுமா? வேறு எவ்வளவு பெரிய அதிநுட்பமான நவீன கருவியின் மூலமும் ஆணா? பெண்ணா? என்பதை அறவே அறிந்து கொள்ள முடியாது. வானவர் பாலுறுப்பை வெளிப்படுத்தியப்பின்புதான் அதனை நவீன கருவிகளைப் பயன் படுத்தி அதன் மூலம் மனிதர்களால் அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு பாலுறுப்பு வெளிப்படுத்தப்பட்டப்பின்பு நவீன கருவிகள் மூலம் பார்த்து ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்வதில் நமக்கு என்ன பெருமை இருக்க முடியும்?.

சிறு குழந்தை கூட இந்த நவீன கருவிகளின் துணை கொண்டு கருவறையை உற்று நோக்கி அதனுள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துத் தெள்ளத் தெளிவாக சொல்லி விடுமே. அதனைத் தெரிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வுகள் ஒன்றும் தேவையில்லையே! வெளிப்படுத்தப் பட்டுவிட்ட ஒரு பொருளை கருவிகளின் துணை கொண்டு அறிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?. பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு அந்த கரு ஆணா? பெண்ணா? என்பதை ஒருவரால் சொல்ல முடியும் என்றால் அது பெரிய சாதனைதான். அந்த அளவிற்கு விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்துள்ளதா? என்றால் அதுதான் இல்லை. இனி ஒரு போதும் அது சாத்தியமும் இல்லை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:54 pm

ஹார்மோன்களை ஆய்வு செய்து ஆணா? பெண்ணா?


என்பதைக் கண்டறியும் முறையும் இருப்பதாக இன்றைய விஞ்ஞானம் உலகம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ரோஜன் (யுனெசழபநn) என்ற ஆண்களுக்கான ஹார்மோன் கருவில் அதிமாக இருக்கும் போது அது ஆண் குழந்தை எனவும்இ ஈஸ்டோரஜன் (ழுநளவழசபநn) என்ற பெண்களுக்கான ஹார்மோன் அதிமாக இருக்கும் போது அந்தக் கரு பெண் குழந்தை எனவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த செயல் முறைச் சோதனை எப்போது சாத்தியமாகும் எனில் பாலுறுப்பு உண்டாகும் போதுதான். பாலுறுப்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும் முன்பு இந்த ஹார்மோன் சோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியாது என்பதை தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள் மருத்துவ மேதைகள். காரணம் பாலுறுப்பு வெளிப்படும் முன்பு கருக் குழந்தையிடம் உள்ள ஹார்மோன்கள்இ ஆணுக்குரியதுஇ பெண்ணுக்குரியது என வித்தியாசப்படுத்தியோஇ வேறுபடுத்தியோ பார்க்க முடியாத விகிதத்தில்தான் இருக்கும். அப்போது இந்த ஆய்வுஇ கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று மருத்துவ மேதைகள் பேசிக் கொள்வது நமது காதுகளில் விழுகிறது.


சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் மட்டுமே அறிந்த இந்த இரகசியம்இ உரிய நேரம் வரும் வரை யாரும் எந்த விதத்திலும் அறிந்து கொள்ள முடியாத படி எந்த அளவிற்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பார்த்தீர்களா? பாலுறுப்பு வெளியே தெரிய ஆரம்பித்ததும் அதனை முதலில் வானவர் அறிந்து கொள்கிறார். அப்போது அது அல்லாஹ் மட்டுமே அறிந்த இரகசியம் என்ற நிலையிலிருந்து மாறி பலரும் அறிந்து கொள்வதற்கு முடியும் என்ற நிலைக்கு ஆகிவிடுகிறது. ஆனால் அதைத் தெரிந்து கொள்வதற்குக் கூட நமக்கு நவீன கருவிகள் தேவைப்படுகிறது என்பதுதான் நமது அறிவாற்றலுக்குரிய பலஹீனத்தின் வெளிப்பாடாகும்.

இதில் நாம் பெருமை கொள்வதற்கும்இ இறைவனுடைய அறிவோடு போட்டிபோடுவதற்கும் என்ன இருக்கிறது என்பது இங்கே சிந்திக்கப்பட வேண்டிய தகவலாகும்.
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமானஇ அதே நேரத்தில் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன்.

அதாவது அல்லாஹ் மட்டும் அறிந்ததாக குறிப்பிடும் ஐந்து விஷயங்களில் கருவைறையில் இருப்பது என்ன? என்று அறிவது ஒன்றாகும். இது அத்தியாம் 31-ல் 34 வது வசனத்தில் இடம் பெற்றுள்ளது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:55 pm

கருவறைகளில் உள்ளவைகளை அவன் அறிகிறான். (அல்குர்ஆன் 31:34)
நவீன கருவிகள் மூலம் கருவறையில் இருப்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ள இந்தக் காலகட்டத்தில் கருவறையில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிகிறான் என்ற கருத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிலர் இந்த வசனத்தின் மீது ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள்.

இதற்கு நாம் மேலே சொன்ன பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு அறிந்திருப்பது அல்லாஹ்தான் என்று பொருள் கொள்ளும் போதுஇ மேற்கூறிய அனாவிசியமான கேள்வி எழுவதற்கு அறவே வாய்ப்பு இல்லாமல் போய்விடும். காரணம் பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு எந்த நவீன கருவிகளின் மூலமும் இந்த தகவலை அறிந்து கொள்ள முடியாது என்பது நிதர்சனமான சத்தியமாகும்.


அதனை அறிந்திருப்பது அல்லாஹ் மட்டும்தான் அவனைத்தவிர இந்த உண்மையை அறிந்தவர்கள் யாரும் இல்லை. நெருக்கமான வானவர்களாக இருந்தாலும் சரிஇ மிகப் பெரிய அந்தஸ்து பெற்ற நபிமார்களாக இருந்தாலும் சரிஇ எவராலும் அறிந்து கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் இந்த வசனத்தின் பொருளை சரிகாண்பதற்கும்இ அந்த வசனத்தின் மீது எழுப்பப்பட்ட வினாவிற்கு பதில் கூறுவதற்கும் நினைத்த சிலர்இ இந்த வசனத்துடன் பொருந்திவராத விதத்தில் சில பதில்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

எவ்வாறெனில் ஒரு சாரார்இ
கருவறையில் இருப்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்பதன் பொருள் அது ஆணா? பெண்ணா? என்பது பற்றியதல்ல. காரணம் பாலைக் (ளுநஒ) குறிக்கக்கூடிய வார்த்தை அந்த வசனத்தில் இடம் பெறவில்லை. (கவனிக்க வசனம்.)


மாறாக தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் தன்மையைத்தான் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்றும்இ அதன் படி கருவறையில் இருக்கும் அந்தக் குழந்தையின் தன்மைகள் என்ன? நல்லவனா? கெட்டவனா? அது தனது பெற்றோருக்கு அருட்கொடையாக இருக்குமா? சாபக்கேடாக இருக்குமா? அது சமுதாயத்திற்கு நன்மையாக அமையுமா? தீமையாக அமையுமா? சுவர்க்கத்திற்குச் செல்லுமா? நரகத்திற்குச் செல்லுமா? போன்ற அனைத்து விபரங்களையும் அறிந்தவன் அல்லாஹ்தான். வேறு யாரும் அறிந்திருக்க முடியாது. என்று பதில் கூறியுள்ளார்கள்.


மேலோட்டமாக இந்தப்பதிலை படித்துப் பார்க்கும் போது இந்த பதில் சரிதானே என்று தோன்றும். சற்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விஷயத்திற்கும் இந்த பதிலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது புரியவரும்.

அவர்களது பதிலில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தன்மைகளை அறிந்திருப்பது அல்லாஹ் மட்டும்தான் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு மட்டுமல்லஇ குழந்தை கருவில் உருவானதிலிருந்துஇ பிறந்துஇ வளர்ந்து மரணிக்கும் வரை உள்ள மேற்கூறிய அதனது தன்மைகள் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் மட்டும்தான். வேறு யாரும் எந்த நவீனக் கருவிகள் மூலமும் அறிந்து கொள்ள முடியாது. ஏன்? ஒருவன் மரணித்ததன் பின்பு கூட அவன் சுவர்க்கத்திற்குச் செல்வானா? நரத்திற்குச் செல்வானா? என்பதை கூட யாரும் அறிந்து கொள்ள முடியாதுஇ அதனையும் அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான். அவ்வாறெனில் இந்த வசனத்தில் கருவறையில் இருப்பதை அறிந்தவன் அல்லாஹ் மட்டும்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:56 pm

எனவே கருவறையில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிகிறான் என குறிப்பாக சொல்லப்பட்டதற்கு இது அல்லாத வேறு ஒரு பொருள் நிச்சயம் இருக்க வேண்டும். அது தான் நாம் மேலே குறிப்பிட்ட பதில். அதாவது கருவறையில் உள்ள குழந்தை பாலுறுப்பு வெளிப்படும் முன்பு அது ஆணா? பெண்ணா? என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்று பொருள் கொள்ளவதுதான் சரியாக இருக்கும்.


இந்த வசனத்தின் மீதான வினாவிற்கு பதில்கூற நினைத்த வேறு சிலர்இ இந்த வசனத்தின்
ما في الأرحام
என்ற சொற்றொடரில் (மா) என்ற அரபி எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதால்இ அது உயர்திணைக்கு (பகுத்தறிவுள்ள இனம்) பயன்படுத்தும் வார்த்தை அல்லஇ மாறாக அது அஃறிணைக்கு (பகுத்தறிவற்ற இனம்) பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். கருவில் வளரும் குழந்தை உயர்திணையாக இருப்பதால்இ அதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவது பொருத்தமற்றதுஇ எனவேஇ இந்த வசனத்தில் கருவறையில் உள்ளதை அறிவது என்பது கருவறையின் தன்மைகளை அறிவது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். காரணம் கருவறை ஒரு அஃறிணைப் பொருளாகும் என்று கூறுகிறார்கள். அதாவது கருவறை எத்தகைய தன்மையுடையதுஇ மலட்டுத் தன்மையுடையதா? பிரசவிக்கும் தன்மையுடையதா? அது ஆண் குழந்தையைப் பிரசவிக்குமா? பெண் குழந்தையைப் பிரசவிக்குமா? என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது என்பது அவர்களது விளக்கத்தின் சாராம்சமாகும்.



இந்த பதிலும் பொருத்தமானதல்ல. காரணம் மருத்துவம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணை பல மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திஇ குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவளா? இல்லையா? என்பதை தெளிவாக சொல்லிவிடுகின்ற அளவிற்கு விஞ்ஞான உலகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. எனவேஇ அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்று பொருள் கொள்வது பொருந்தி வரக் கூடியதல்ல.


மேலும்இ ஒரு கருவை ஆணாகஇ பெண்ணாக உற்பத்தி செய்கின்ற திறன் கருவறைக்கு இல்லை. அது ஒரு விளை நிலம் மட்டுமே! (பின்னர் இது குறித்து விவரிக்கப்படும்) எந்த விதையை ஆண் மகன் விதைக்கிறானோ அதைத்தான் விளைவிக்கும். ஆணா? பெண்ணா? என்பதைத் தீர்மானிப்பது பெண் கருவறையல்ல. ஆண் உயிரணுக்களின் மூலமே தீர்மானிக்கப்படும்.

எனவேஇ கருவறையில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் என்ற வசனத்திற்கு மேற்கூறிய விளக்கம் தொடர்புடையதல்ல என்பது தெளிவு.
மேலும்இ கரு உயிரூட்டப்படும் வரை அது அஃறிணைப் பொருளாகவே இருக்கிறது என்பதை குர்ஆனின் பின் வரும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பின்னர் அந்த உயிரணுவை அலக்காக (இதனைப் பின்பு விவரிக்கப்படும்.) படைத்தோம் பின்னர்இ அந்த அலக்கை மாமிசத் துண்டாகப் படைத்தோம் பின்னர் அந்த மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம் பின்னர்இ அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம் பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைக்கிறவர்களில் மிக அழகானவனான அல்லாஹ் மிக உயர்வானவன். (அல்குர்ஆன்: 23:14)



இந்த வசனத்தில் கருவின் ஆரம்ப நிலையிலிருந்து இறுதிக்கட்டம் வரை உள்ள அதன் பல நிலைகள் சொல்லப்பட்டிருக்கிறது. கருவின் ஆரம்ப நிலையான உயிரணு முதல் எலும்புகளுக்கு மாமிசம் அணிவிக்கப்படும் நிலை வரை அந்தக் கரு அஃறிணையாகவே இருக்கும். மாமிசம் அணிவிக்கப் பட்டப் பிறகுதான் அந்தக் கருவினை ஆணாக அல்லது பெண்ணாகப் படைக்க வேண்டுமா? என்பதை வானவர் இறைவனிடத்தில் கேட்டு செயல் படுத்துகிறார். (பார்க்க மேலே கூறப்பட்ட முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்ற நபி மொழி.) அதற்குப்பிறகு வேறு ஒரு படைப்பாக (முழு மனித வடிவமாக) மாறுகிறது. அப்போது அது உயர்திணை நிலையை அதாவது மனித நிலையை அடைகிறது.

பாலுறுப்பு வெளிப்படும் முன்புவரை கருவின் நிலை அஃறிணையாக இருப்பதால்தான் அந்த நிலையைக் குறிக்கஇ மேற்கூறிய இறை வசனத்தில் அஃறிணைக்கு பயன்படுத்தப்படும்ما (மா) என்ற எழுத்து உபயோகிக்கப் பட்டுள்ளது. மாறாக கருவறையைக் குறிப்பதற்கல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுஇ அஃறிணைக்குரிய எழுத்தான மா என்பது பயன்படுத்துப்பட்ட நோக்கமும் தெளிவாகிவிடும் இந்த வசனத்திற்கு நாம் கொடுத்த விளக்கம் எவ்வளவு யதார்த்தமாக உள்ளது என்பதும் தெரியவரும். (அல்லாஹ்வே மிக நன்கு அறிந்தவன்)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:57 pm

காரணம் இல்லையேல் காரியம் இல்லை


எனவே கருவறையில் உருவாகும் சிசுவினை ஆணாக பெண்ணாக படைப்பது அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளதாகும். எதுவாக படைக்க விரும்புகிறானோ அதுவாகவே படைக்கும் ஆற்றலுடையவன். எனினும் காரண காரிய மிகுந்த இந்த உலகில் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு சில காரணங்களை அமைத்து வைத்துள்ளான் ரப்புல் ஆலமீனான அல்லாஹ். (அவன் காரணம் இல்லாமலேயே காரியத்தை உண்டாக்குவதற்கு ஆற்றல் பெற்றவன் என்பது யாரும் சந்தேகம் கொள்ள முடியாத விஷயமாகும்.


ஆண் துணையின்றி மரியம் (அலை) அவர்கள் மூலம் ஈஸா நபியை பிறக்கச் செய்தது அவனது ஆற்றலுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.) காரணம் இருக்கும் போது காரியம் நடைபெறும். (நடைபெறாமலும் போய்விடலாம் என்பது வேறு விஷயம்.) இது அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு நியதியாகும். உதாரணமாக மழை பொழிவதற்கு கருமேகம் கூடுவதை காரணமாக ஆக்கியிருக்கிறான். விளை நிலம் விதைகளை முளைக்க வைப்பதற்கு நீரை காரணமாக ஆக்கி இருக்கிறான். இந்த காரணங்கள் இல்லாத போது இந்த காரியங்கள் நடப்பது அரிதாகும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 6:58 pm

யார் காரணம்?


அது போல் குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கும் அல்லாஹ் சில காரணங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அறிவியல் முதிர்ச்சி அடைந்த இந்த நவீன காலத்தில் பல ஆய்வுகளுக்குப் பிறகு குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு யார் காரணம் என்பதை சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த கண்டுபிடிப்புஇ பெண்கள் தான் அதற்கு காரணம் என்று இது நாள் வரை பாமரனாலும்இ படித்தவர்களாலும் நம்பப்பட்டு வந்த கருத்தோட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. அறிவியல் ஆய்வுகளின் படி ஆண்கள் தான் அதற்கு முழுக் காரணம்இ ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள்தான் ஆணா? பெண்ணா? என்பதைத் தீர்மானிக்க காரணமாக இருக்கிறது என்று மருத்துவ அறிஞர்கள் ஆதாரத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த தகவலை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மிகத் தெளிவாக கூறிவிட்டது.


அத்துடன் பெண்களை காரணமாக ஆக்கக்கூடாது என்ற செய்தியையும் அதில் தெளிவாக சொல்லப்பட்டிருப்பது வியக்கத்தக்க ஒரு தகவலாகும். பெண்களைக் காரணமாக ஆக்க முடியாது என்ற செய்தியை எந்த வசனத்தில்இ எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:00 pm

பெண்கள் விளை நிலங்களே!


கடந்த இதழ் தொடர்களில் பெண் சிசுக்கள் பிறப்பதற்கு பெண்களே காரணம் என்று கருதி தாயும், சேயும் எவ்வாறெல்லாம் கொடுமைகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பது குறித்துப்பார்த்தோம். இந்தந் தொடரில் பெண் சிசு பிறப்பதற்கு பெண்கள் காரணம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்வோம்.
نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ


உங்களது மனைவிகள் உங்களுக்குரிய விளை நிலங்களாகும். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள். அல் குர்ஆன்: 2:223

இந்த வசனத்தில் பெண்களை ஆண்களின் விளை நிலங்கள் என்று குறிப்பிடுகிறான். இதனை பார்க்கும் சிலர், பெண் உரிமையின் கழுத்து நெறிக்கப்படுகிறதே| என ஓநாய் கண்ணீர் வடிக்கிறார்கள். பெண்களை வெறும் விளைநிலங்களுக்கு ஒப்பிட்டு அவர்களின் சுயமரியாதை சாகடிக்கப்படுகிறதே இஸ்லாத்தில் என்று கூச்சலிடுகின்றன இந்த ஓநாய் கூட்டங்கள். இவர்களது மயக்கு வார்த்தையில் மதியிழந்த, புதுமைப் பெண்ணுலகம் படைக்கப்போவதாக வாய்சவடால் அடிக்கும் சில அபலைப் பெண்கள் கர்பப்பை சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள். அதனுடைய பின்விளைவுகளின் பரிணாமத்தை புரிந்து கொள்ளாமலேயே வெற்றுக் கோஷம் எழுப்பும் இவர்கள், இந்த இறைவசனத்தின் அர்த்தத்தை சரியான முறையில் சிந்தித்து புரிந்து கொண்டால், சில வார்த்தைகள் கொண்ட இந்த வரியில் இவ்வளவு ஆழமான அர்த்தம் மறைந்திருக்கிறதா? என வியந்து போய்விடுவார்கள். தான் ஏமாற்றப்பட்டு, சுரண்டப்படுவதையும் புரிந்து கொள்வார்கள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:01 pm

புதுமைப் பெண்ணே! உன்னைத் திரும்பிப்பார்!


குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்குஇ புதுமைப்பெண்ணே! நீதான் காரணம் என்று எத்தனை கொடுமைகளுக்கு உள்ளாக்கபட்டாய்! உன் கண் எதிரேயே நீ பெற்ற உன்னைச்சார்ந்த இனம் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டதே! பெண்ணுரிமை பேசப்படும் இந்த நவீன கம்யூட்டர் யுகத்தில்இ பெண்ணுக்கு ஆண் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில்தான் உன் நிலை உயர்ந்திருக்கிறதா?

நீ பெற்ற பெண் சிசுவை உன் கரத்தாலேயே கொலை செய்யப்படும் அளவிற்கல்லவா நீ துன்புறுத்தப்படுகிறாய்! ஏன்? பெண்குழந்தை பிறப்பதற்கு நீதான் காரணம் என்று இந்த ஆண்வர்க்கம் கருதிக் கொண்டிருப்பதால் தான். உண்மையில் அவர்கள்தான் காரணம் என்பதை அடியோடு மறைத்தே விட்டார்களே! குழந்தை பிறக்காவிட்டாலும் உனது பெண்மையில் தான் முதலில் இந்த ஆண் வர்க்கத்திற்கு சந்தேகம் ஏற்படுகிறதுஇ மருத்துவப் பரிசோதனைக்கு உன்னைத்தான் உட்படுத்துகிறது. இறுதியில் பிள்ளைப்பேறு இல்லாத மலடி என்று முத்திரை குத்தப்பட்டு காலமுழுவதும் தண்டனைக்கு உள்ளாவது நீதானே!

இவைகள் அனைத்திற்கும் ஆண்மகன் காரணமாக இருந்தாலும் தன்னை இந்த பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லைஇ தன்னில் உள்ள குறைகள் வெளியேறிவிடாமல் இருப்பதில் மிக கவனமாக இருக்கிறது இந்த ஆணாதிக்கம் படைத்தவவர்கள்.
இந்நிலையில் பாலைத் தீர்மானிப்பதற்கு பெண்கள் காரணமல்லஇ ஆண்கள்தான் காரணம் என்ற உண்மையை இந்த வசனம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துஇ திணறிக் கொண்டிருந்த பெண்ணினத்தைஇ அவர்கள் அனுபவித்து வந்த வன்கொடுமைகளிலிருந்து விடுதலைப் பெறச் செய்துஇ சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்துள்ளது.


குழந்தை பிறப்பதற்கு பெண் காரணம் அல்ல. அவள் ஒரு விளை நிலம். விதை விதைப்பவன் ஆண்மகன். அவன் எதை விதைக்கிறானோ அதனை அறுவடை செய்துக் கொள்வான். பெண் விதை விதைத்தால்இ பெண்ணையும்இ ஆண் விதை விதைத்தால் ஆணையும் அறுவடை செய்து கொள்வான்இ தன்னில் எந்த விதை விதைக்கப்படுகிறோ அதனை சரியாக பாதுகாப்பாக விளைவிப்பது மட்டும்தான் ஒரு பெண்ணின் பங்காக இருக்கமுடியும் என்ற உண்மையை இந்த இறைவசனம் தெளிவு படுத்துகிறது.


வினையை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான்இ திணையை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான் என்ற முதுமொழிக்கு ஏற்பஇ எதை விதைக்கிறானோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
புல்லை விதைத்த ஒரு விவசாயி நெல்லை அறுவடை செய்ய வேண்டும் என ஆசைப்படுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நெல்லை அறுவடை செய்ய முடியவில்லையேஇ வீணாப்போன இந்த நிலம் நெல்லை விளைவிக்க வில்லையே என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தால் அவனை பைத்தியக்காரன் என்று நாம் ஏசமாட்டமோ?


பெண் ஒரு விளைநிலம். நீ எதை விதைக்கிறாயோ அதனையே பெற்றுக் கொள்ள முடியும்இ அதற்கு மாற்றமாக எதையும் பெற்றுக்கொள்ளமுடியாது என்ற இந்த உண்மையை முதன் முதலில் உலகிற்கு சொன்னது இறைவேதம் குர்ஆன் அல்லவா? இதன் மூலம் எத்தனை கோடிப்பெண்களுக்கு உயிர் வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று புதுமைப் பெண்ணே! சிந்தித்துப்பார்!.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum