ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பியன்களின் சாம்பியன்!

3 posters

Go down

சாம்பியன்களின் சாம்பியன்! Empty சாம்பியன்களின் சாம்பியன்!

Post by ரபீக் Mon May 24, 2010 11:27 am

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.​ ​
​ ​ பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ,​​ தன்னை எதிர்த்து விளையாடிய பல்கேரியாவின் வெஸ்லின் டொபலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.​ ​
​ ​ மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 6.5,​ 5.5 என்ற புள்ளிக்கணக்கில் டொபலோவை வென்றார்.​ 11-வது ​ சுற்றின் முடிவில் இரு வீரர்களும் தலா 5.5 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தனர்.​ கடைசி சுற்று ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.​ ​ ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.​ ஆனால்,​​ 31 மற்றும் 32 வது நகர்த்தலில் டொபலோவ் செய்த தவறுகள் மற்றும் ஆனந்தின் தற்காப்பு ஆட்டம்,​​ 56}வது நகர்த்தலின்போது அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
​ ​ ""இதுவரை நான் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகவும் பரபரப்பாக இருந்தது.​ போட்டியின் கடைசிநாளன்று நான் காலையில் எழுந்தபோது,​​ இன்று நமக்கு வெற்றி கிடைக்குமா?​ அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பதைபதைப்பு என் நெஞ்சில் இருந்தது.​ இருந்தபோதிலும் துணிவுடன் கடைசி சுற்று ஆட்டத்தை எதிர்கொண்டேன்.​ ​
​ ​ பொதுவாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முடிவு எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.​ சரி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு ஆடினேன்.​ ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு எனக்கு வெற்றி கிடைத்தது.​ எனவே கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்'' என்று ஆனந்த் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.​ ​
​ ​ விளையாட்டில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல;​ கடுமையான பயிற்சி மேற்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது போல சவால் நிறைந்தது ஆகும்.​ அந்த சாதனையை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
​ ​ ஏறக்குறையை 25 ஆண்டுகளுக்கு மேலாக செஸ் விளையாட்டில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் ஆனந்த்.​ பல்கேரியாவின் டொபலோவை வென்றதன் மூலம் ஆனந்த் இதுவரை நான்குமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.​ 5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.​ 1987}ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
​ ​ செஸ் விளையாட்டில் அவரது திறமையைப் பாராட்டி இந்திய அரசு 1985-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.​ 1987-ல் பத்மஸ்ரீ விருது இவரைத் தேடி வந்தது.
1992-ல் ​ ராஜீவ் கேல்ரத்னா விருது வழங்கி ​ இந்திய அரசு கௌரவித்தது.​ செஸ் விளையாட்டு தொடர்பான இவர் எழுதிய புத்தகத்தை பிரிட்டிஷ் செஸ் கூட்டமைப்பு பாராட்டி விருது வழங்கியது.​ ​ 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் பட்டம் கிடைத்தது.​ ​ இதைத் தொடர்ந்து 2007-ல் அவருக்கு பத்மவிபூஷன் பட்டம் வழங்கப்பட்டது.​ செஸ் ஆட்டத்தில் நாக் அவுட்,​​ டோர்னமென்ட்,​​ மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
​ ​ மனதை அலைபாயவிடாமல்,​​ ஒருநிலைப்படுத்தி,​​ மன உறுதியுடன் ஆடி,​​ தடைகளைக் கடந்து ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.​ போட்டிக்கு நாள் குறித்தவுடன்,​​ 6 மாதங்களுக்கு முன்னதாகவே எதிரியை வீழ்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.​ எதிரி எப்படி காயை நகர்த்துவார்.​ அவரை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றித்தான் என் சிந்தனை செல்லும்.​ எனது உழைப்பு வீண் போகவில்லை.
​ ​ உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவுக்குச் சென்ற போது போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னை முறையாக வரவேற்கவில்லை.​ எனக்கு இது வருத்தமாக இருந்தாலும்,​​ நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனது காரியத்திலேயே கண்ணாக இருந்தேன்.​ ​
​ ​ முதல் ஆட்டத்திலேயே எனக்குத் தோல்வி ஏற்பட்ட போதிலும் நான் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து போட்டியைத் தீவிரமாக எதிர்கொண்டேன்.​ ஒரு கட்டத்தில் நானும்,​​ டொபலோவும் தலா 5.5 புள்ளிகள் எடுத்திருந்தோம்.​ அப்போது பலரும் இந்த முறை உள்ளூர் ஹீரோவான டொபலோவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு;​ அவர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது உறுதி எனப் பேசி வந்தனர்.
​ ​ மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 12}வது சுற்று ஆட்டம் நடந்தது.​ நான் எதிர்பார்த்தபடியே டொபலோவ் தனது 31}வது நகர்த்தலில் தவறு செய்தார்.​ அது எனக்குச் சாதகமானது.​ மேலும் 40}வது நகர்த்தலின்போது நான் சிறிய தவறு செய்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு ஆட்டதைப் பின்பற்றினேன்.​ இது எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஆனந்த்.​ ​
​ ​ இன்று நம்நாட்டில் ​ பலரும் அதிகமாகப் பேசுவது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றித்தான்.​ கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் ​ ரசிகர்கள்​ அதிகம். ​ இந்திய அணியில் யாராவது சதம் அடித்துவிட்டால் அதை பெரிய சாதனையாக விளம்பரப்படுத்துவார்கள்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் தோற்றதன் மூலம் இந்திய அணி தகுதியை இழந்துவிட்டது.ஆனால்,​​ ஓசைப்படாமல் இந்தியரான விஸ்வநாதன் உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆனந்தின் சாதனை பல இளைஞர்களுக்கு செஸ் போட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.​ உலக அரங்கில் ராணுவ வல்லமையில் இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ செஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து வல்லரசாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
​ ​ இதுவரை இந்தியாவில் செஸ் விளையாட்டில் பிடே ரேட்டிங் பட்டியலில் 5 ஆயிரம் பேரும்,​​ 64 சர்வதேச மாஸ்டர்களும்,​​ 21 கிராண்ட் மாஸ்டர்களும் உள்ளனர்.​ இவர்களெல்லாம் இந்த வெற்றியைப் பெற முன்னோடியாக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த்.​ அவரை சாம்பியன்களின் சாம்பியன் என்றால் அது மிகையாகாது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாம்பியன்களின் சாம்பியன்! Empty Re: சாம்பியன்களின் சாம்பியன்!

Post by சிவா Mon May 24, 2010 11:31 am

மதுரைத் தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!


சாம்பியன்களின் சாம்பியன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாம்பியன்களின் சாம்பியன்! Empty Re: சாம்பியன்களின் சாம்பியன்!

Post by பயணி Mon May 24, 2010 11:54 am

தமிழன் புத்தியிலும் சிறந்தவன் என மீண்டும் ஒரு முறை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் நிரூபித்துள்ளார். நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன்.
பயணி
பயணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Back to top Go down

சாம்பியன்களின் சாம்பியன்! Empty Re: சாம்பியன்களின் சாம்பியன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum