Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேற்றுலக மனிதர்களால் பூமிக்கு ஆபத்தா?
3 posters
Page 1 of 1
வேற்றுலக மனிதர்களால் பூமிக்கு ஆபத்தா?
பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் உலகப் பிரசித்தி பெற்ற இயற்பியல் நிபுணர். 69 வயதான அவருக்கு அபூர்வ நோய். அவரால் நடமாட இயலாது. பேச இயலாது. செயற்கைக் குரல் மூலம் பேசுகிறார். இப்படிப்பட்ட நிலையிலும் அவர் பல மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அண்மையில் அமெரிக்காவில் நடந்த ஒரு மாநாட்டில் அவர் கூறிய கருத்து பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
""நமது பூமியைப் போல அண்டவெளியில் வேறு கிரகங்கள் உள்ளன. அவற்றில் நம்மைப் போலவே மனிதர்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த வேற்றுக் கிரக மனிதர்களுடன் நாம் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். அவர்களால் பூமிக்கு-மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படலாம்'' என்று அவர் கூறினார். பல நிபுணர்கள் இதை ஆட்சேபித்துள்ளனர். ஹாக்கின்ஸ் பேச்சு குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.
சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கக்கூடிய கிரகங்களில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்க நிறையவே வாய்ப்பு உள்ளது. ஆனால், நமது சூரிய மண்டலத்தில் உள்ள புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களில் நிச்சயம் எந்த உயிரினமும் இல்லை. அவற்றில் மனிதன் போன்று யாரும் கிடையாது. உயிரினம் இருக்க வேண்டுமானால் அதற்கு வாய்ப்பான நிலைமைகள் இருக்க வேண்டும். சூரிய மண்டலத்தில் பூமி தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் அப்படிப்பட்ட வாய்ப்பான சூழ்நிலைகள் கிடையாது. அது ஏன்?
சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகத்தில் பகலாக உள்ள இடங்களில் பயங்கர வெப்பம். இரவாக உள்ள இடங்களில் பயங்கரக் குளிர். தவிர, காற்று மண்டலமோ தண்ணீரோ கிடையாது. குறிப்பிட்ட சில காரணங்களால் வெள்ளி (சுக்கிரன்) கிரகத்திலும் பயங்கர வெப்பம். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் சூரியனிலிருந்து மிக அப்பால் இருப்பதால் எல்லாமே உறைந்து கிடக்கின்றன. அதாவது, இவை அனைத்தும் பனிக்கட்டி உருண்டைகள். செவ்வாய் கிரகம் பூமியை விட சற்றே தள்ளி இருக்கிறது. ஆனால், பல விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்ததில் செவ்வாயில் இதுவரை புழு பூச்சி கூட இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.
சூரிய மண்டலத்துக்கு அப்பால் பூமி போல வேறு கிரகம் இருக்கலாம் என்பதில் ஐயமில்லை. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் அறிவோம். அண்டவெளியில் சூரியன் போல கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இரவு வானைப் பார்த்தால் நிறைய நட்சத்திரங்கள் தெரிகின்றன. ஆனால் இந்த நட்சத்திரங்கள் பெரும்பாலும் - சினிமா உலக நட்சத்திரங்களைப் போல - ஜோடி ஜோடியாக உள்ளன. இரட்டை நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் சூரியன் ஒண்டிக்கட்டை நட்சத்திரம். ஒண்டிக்கட்டை நட்சத்திரம்தான் நிலையான கிரகங்களைப் பெற்றிருக்கும்.
ஒண்டிக்கட்டை நட்சத்திரமாக இருந்தால் மட்டும் போதாது. அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகிற கிரகங்களில் ஒன்று பூமி அளவில் இருக்க வேண்டும். பூமி போலவே அது அந்த நட்சத்திரத்திலிருந்து சற்றே தொலைவில் இருக்க வேண்டும். தவிர, அக் கிரகம் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்வதாக இருத்தல் கூடாது. (சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு. அப்படியாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் எல்லாமே பொசுங்கி விடும்). தவிர, அக் கிரகத்தில் பூமியில் உள்ளதைப்போல காற்று மண்டலம் இருக்க வேண்டும். தண்ணீர் இருக்க வேண்டும். இப்படியான நிலைமைகள் இருந்தால்தான் உயிரினம் தோன்ற வழி ஏற்படும்.
இப்படியான சாதக நிலைமைகள் உள்ள கிரகம் ஒன்று சூரிய மண்டலத்துக்கு அப்பால் அண்டவெளியில் எங்கோ இருக்கலாம். விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் இப்படியான கிரகங்கள் சுமார் 400 இருக்கலாம் என்று கருதுகின்றனர். எனினும், இவ்வித கிரகங்களில் உள்ள நிலைமைகள் பற்றி நம்மால் அறிய இயலவில்லை. ஏனெனில், பூமியிலிருந்து சக்தி மிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் இப்படியான கிரகங்கள் தெரியாது. அதற்குக் காரணம் உண்டு.
கிரகங்களுக்கு சுய ஒளி கிடையாது. அருகே உள்ள நட்சத்திரத்தின் ஒளி அக் கிரகத்தின் மீது பட்டு பிரதிபலித்தால் உண்டு. சூரிய மண்டலத்துக்குள்ளாக இருக்கின்ற யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் டெலஸ்கோப்பிலும் மங்கலாகத்தான் தெரிகின்றன. இவற்றைப்போல பல ஆயிரம் மடங்கு தொலைவில் உள்ள கிரகங்கள் டெலஸ்கோப்பிலும் புலப்படாமல் இருப்பதில் வியப்பில்லை. கும்மிருட்டில திறந்தவெளியில் இருக்கிறீர்கள். தொலைவில் எங்கோ பெட்ரோமாக்ஸ் லைட் தெரியலாம். இந்த லைட்டிலிருந்து சற்று தொலைவில் உட்கார்ந்திருக்கிறவர்களை உங்களால் பார்க்க முடியாது. இது அது போலத்தான்.
இருந்தபோதிலும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே கிரகங்களைத் தேடுவதில் ஈடுபட்டுள்ளனர். நமக்கு மிக அருகில் உள்ளது என்று சொல்லத்தக்க (நான்கு ஒளியாண்டு தொலைவு) நட்சத்திரத் தொகுப்பு செண்டாரி நட்சத்திரத் தொகுப்பாகும். இது பூமியிலிருந்து 37 லட்சம் கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு அருகருகே மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்த மூன்றில் எந்த நட்சத்திரத்துக்கும் கிரகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
விண்வெளியில் தொலைவில் (சுமார் 20 ஒளியாண்டு தொலைவு)உள்ள எப்ங்ண்ள்ங் 581 என்ற நட்சத்திரத்தைச் சுற்றுகிற கிரகங்களில் ஐந்தாவது கிரகம் பூமியை ஒத்ததாக உள்ளது. ஆனால், அதில் மனிதர்களை ஒத்தவர்கள் உள்ளனரா என்பது தெரியாது. அந்தக் கிரகம் சுமார் 2,00,00,000 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நம்மிடமுள்ள அதி வேக விண்கலத்தில் செல்வதானாலும் அந்தக் கிரகத்துக்குப் போய்ச் சேர பல கோடி ஆண்டுகள் ஆகும். ஆகவே, சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருக்கக்கூடிய எந்த ஒரு கிரகத்துக்கும் நம்மால் போக இயலாது. மனிதன் மிக நவீன விண்கலம் மூலம் எங்கெங்கோ இருக்கின்ற கிரகங்களில் இறங்குவது போன்று ஹாலிவுட் ஆங்கிலப் படங்களிலும் மற்றும் ஆங்கில சீரியல்களிலும் காட்டப்படலாம். அவையெல்லாம் பொய்.
வேற்றுலகவாசிகள் நம்மைப்போல கெட்டிக்காரர்களாக இருந்தால் வயர்லஸ் மூலம் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கலாம். அவ்விதம் செய்தி அனுப்பினால நமக்கு நிச்சயம் அது கிடைக்கும். இப்படி ஏதேனும் செய்தி வருகிறதா என்று அறிய கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்கென்றே நஉபஐ என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிபுணர்கள் இரவு, பகலாக விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். நாமும் சிக்னல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வேற்றுலக மனிதர்களிடமிருந்து சிக்னல் எதுவும் இல்லை.
இது ஒருபுறம் இருக்க 1972-ம் ஆண்டிலும் அதற்கு மறு ஆண்டிலும் அமெரிக்கா செலுத்திய பயனீர்-10 பயனீர்-11 விண்கலங்களின் இந்தியாவின் ""விசிட்டிங் கார்ட்'' வைத்து அனுப்பப்பட்டது. அதாவது, தங்க முலாம் பூசப்பட்ட உலோகத் தகட்டில் ஆண், பெண் உருவம், சூரிய மண்டலம், அதில் பூமி இருக்கிற இடம் முதலிய தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த இரு விண்கலங்களும் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிவிட்டன. இவற்றில் பயனீர் 10 விண்கலம், ரோகிணி நட்சத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த விண்கலம் ரோகிணி நட்சத்திரத்தை நெருங்க இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகலாம். என்றாவது ஒரு நாள் வேற்றுலகவாசிகள் இந்த இரு விண்கலங்களையும் கைப்பற்ற நேர்ந்தால் பூமி எங்கே உள்ளது என்ற தகவல் அவர்களுக்குக் கிட்டும். பின்னர் அனுப்பப்பட்ட இரு வாயேஜர் விண்கலங்களில் இதேபோன்று பூமியைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒலித் தட்டுகள் வைத்து அனுப்பப்பட்டன.
இந்த விண்கலங்களும் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி விட்டன. ஆகவே, நாம் இருக்கிற இடம் தெரியாதபடி வேற்றுலகவாசிகளிடமிருந்து நாம் ஒளிந்து கொள்ள முடியாது. தவிர, பூமியிலிருந்து எண்ணற்ற சக்திமிக்க வானொலி நிலையங்கள் சிக்னல்கள் வடிவில் ஒலிபரப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றன. வேற்றுலகவாசிகளிடம் சக்திமிக்க கருவிகள் இருந்தால் அவர்களால் இந்த சிக்னல்களைப் பெற முடியும். அதன் மூலம் அவர்கள் பூமி எங்கே உள்ளது என்று கண்டுபிடித்து விடலாம்.
மனிதன் சந்திரனுக்குச் சென்று விட்டு வந்திருக்கிறான். இது ஒரு சாதனையே. ஆனால், இதை வைத்து நம்மால் அண்டவெளியில் உள்ள எந்தக் கிரகத்துக்கும் செல்ல முடியும் என்று நினைத்தால் தவறு. நம்மிடம் இருக்கின்ற ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் பயன்படுத்தி இவ்விதம் செல்ல முடியாது. சில கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்துக்குப் போய்விட்டு வருவதற்கே குறைந்தது இரண்டரை ஆண்டுகள் ஆகும். செவ்வாய் கிரகத்துக்குப் பத்திரமாகப் போய்விட்டு வருவதற்கான விண்கலங்களை இனிமேல் தான் நாம் தயாரிக்க வேண்டும். சந்திரனுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட விண்கலங்கள் செவ்வாய் கிரகப் பயணத்துக்கு ஏற்றவை அல்ல.
வேற்றுலகவாசி இருக்கின்ற எந்தக் கிரகத்துக்கும் நம்மால் போக வாய்ப்பே இல்லை என்றாலும் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களைப் பற்றி அறிய வாய்ப்பு உள்ளதாகச் சொல்லலாம். ஆனால் இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பூமி போன்ற கிரகங்களில் பெரும்பாலானவை 300 ஒளியாண்டுக்கு அப்பால் உள்ளன.
ஆகவே, அவ்வித கிரகங்களுடன் ஏதேனும் ஒன்றுடன் தொடர்பு கொள்ள நாம் அனுப்பும் சிக்னல்கள் போய்ச் சேர 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். உதாரணமாக, அமெரிக்க நாஸô விஞ்ஞானி ஒருவர் "ஹலோ' என்று சொல்லி 600 அல்லது 700 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பதில் "ஹலோ' வந்து சேரும்.
÷நம்மால் வேற்றுலகு எதற்கும் செல்ல முடியாது என்பது போலவே வேற்றுலகவாசிகளாலும் பூமிக்கு வருவது என்பது சாத்தியமற்றதே.
÷இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது எந்த ஒரு வேற்றுலகிலிருந்தும் ""எந்த ஒரு பயலும்'' பூமியை நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது.
""நமது பூமியைப் போல அண்டவெளியில் வேறு கிரகங்கள் உள்ளன. அவற்றில் நம்மைப் போலவே மனிதர்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த வேற்றுக் கிரக மனிதர்களுடன் நாம் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். அவர்களால் பூமிக்கு-மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படலாம்'' என்று அவர் கூறினார். பல நிபுணர்கள் இதை ஆட்சேபித்துள்ளனர். ஹாக்கின்ஸ் பேச்சு குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.
சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கக்கூடிய கிரகங்களில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்க நிறையவே வாய்ப்பு உள்ளது. ஆனால், நமது சூரிய மண்டலத்தில் உள்ள புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களில் நிச்சயம் எந்த உயிரினமும் இல்லை. அவற்றில் மனிதன் போன்று யாரும் கிடையாது. உயிரினம் இருக்க வேண்டுமானால் அதற்கு வாய்ப்பான நிலைமைகள் இருக்க வேண்டும். சூரிய மண்டலத்தில் பூமி தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் அப்படிப்பட்ட வாய்ப்பான சூழ்நிலைகள் கிடையாது. அது ஏன்?
சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகத்தில் பகலாக உள்ள இடங்களில் பயங்கர வெப்பம். இரவாக உள்ள இடங்களில் பயங்கரக் குளிர். தவிர, காற்று மண்டலமோ தண்ணீரோ கிடையாது. குறிப்பிட்ட சில காரணங்களால் வெள்ளி (சுக்கிரன்) கிரகத்திலும் பயங்கர வெப்பம். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் சூரியனிலிருந்து மிக அப்பால் இருப்பதால் எல்லாமே உறைந்து கிடக்கின்றன. அதாவது, இவை அனைத்தும் பனிக்கட்டி உருண்டைகள். செவ்வாய் கிரகம் பூமியை விட சற்றே தள்ளி இருக்கிறது. ஆனால், பல விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்ததில் செவ்வாயில் இதுவரை புழு பூச்சி கூட இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.
சூரிய மண்டலத்துக்கு அப்பால் பூமி போல வேறு கிரகம் இருக்கலாம் என்பதில் ஐயமில்லை. சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை நாம் அறிவோம். அண்டவெளியில் சூரியன் போல கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இரவு வானைப் பார்த்தால் நிறைய நட்சத்திரங்கள் தெரிகின்றன. ஆனால் இந்த நட்சத்திரங்கள் பெரும்பாலும் - சினிமா உலக நட்சத்திரங்களைப் போல - ஜோடி ஜோடியாக உள்ளன. இரட்டை நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் சூரியன் ஒண்டிக்கட்டை நட்சத்திரம். ஒண்டிக்கட்டை நட்சத்திரம்தான் நிலையான கிரகங்களைப் பெற்றிருக்கும்.
ஒண்டிக்கட்டை நட்சத்திரமாக இருந்தால் மட்டும் போதாது. அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகிற கிரகங்களில் ஒன்று பூமி அளவில் இருக்க வேண்டும். பூமி போலவே அது அந்த நட்சத்திரத்திலிருந்து சற்றே தொலைவில் இருக்க வேண்டும். தவிர, அக் கிரகம் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்வதாக இருத்தல் கூடாது. (சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு. அப்படியாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் எல்லாமே பொசுங்கி விடும்). தவிர, அக் கிரகத்தில் பூமியில் உள்ளதைப்போல காற்று மண்டலம் இருக்க வேண்டும். தண்ணீர் இருக்க வேண்டும். இப்படியான நிலைமைகள் இருந்தால்தான் உயிரினம் தோன்ற வழி ஏற்படும்.
இப்படியான சாதக நிலைமைகள் உள்ள கிரகம் ஒன்று சூரிய மண்டலத்துக்கு அப்பால் அண்டவெளியில் எங்கோ இருக்கலாம். விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் இப்படியான கிரகங்கள் சுமார் 400 இருக்கலாம் என்று கருதுகின்றனர். எனினும், இவ்வித கிரகங்களில் உள்ள நிலைமைகள் பற்றி நம்மால் அறிய இயலவில்லை. ஏனெனில், பூமியிலிருந்து சக்தி மிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் இப்படியான கிரகங்கள் தெரியாது. அதற்குக் காரணம் உண்டு.
கிரகங்களுக்கு சுய ஒளி கிடையாது. அருகே உள்ள நட்சத்திரத்தின் ஒளி அக் கிரகத்தின் மீது பட்டு பிரதிபலித்தால் உண்டு. சூரிய மண்டலத்துக்குள்ளாக இருக்கின்ற யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் டெலஸ்கோப்பிலும் மங்கலாகத்தான் தெரிகின்றன. இவற்றைப்போல பல ஆயிரம் மடங்கு தொலைவில் உள்ள கிரகங்கள் டெலஸ்கோப்பிலும் புலப்படாமல் இருப்பதில் வியப்பில்லை. கும்மிருட்டில திறந்தவெளியில் இருக்கிறீர்கள். தொலைவில் எங்கோ பெட்ரோமாக்ஸ் லைட் தெரியலாம். இந்த லைட்டிலிருந்து சற்று தொலைவில் உட்கார்ந்திருக்கிறவர்களை உங்களால் பார்க்க முடியாது. இது அது போலத்தான்.
இருந்தபோதிலும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே கிரகங்களைத் தேடுவதில் ஈடுபட்டுள்ளனர். நமக்கு மிக அருகில் உள்ளது என்று சொல்லத்தக்க (நான்கு ஒளியாண்டு தொலைவு) நட்சத்திரத் தொகுப்பு செண்டாரி நட்சத்திரத் தொகுப்பாகும். இது பூமியிலிருந்து 37 லட்சம் கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு அருகருகே மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்த மூன்றில் எந்த நட்சத்திரத்துக்கும் கிரகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
விண்வெளியில் தொலைவில் (சுமார் 20 ஒளியாண்டு தொலைவு)உள்ள எப்ங்ண்ள்ங் 581 என்ற நட்சத்திரத்தைச் சுற்றுகிற கிரகங்களில் ஐந்தாவது கிரகம் பூமியை ஒத்ததாக உள்ளது. ஆனால், அதில் மனிதர்களை ஒத்தவர்கள் உள்ளனரா என்பது தெரியாது. அந்தக் கிரகம் சுமார் 2,00,00,000 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நம்மிடமுள்ள அதி வேக விண்கலத்தில் செல்வதானாலும் அந்தக் கிரகத்துக்குப் போய்ச் சேர பல கோடி ஆண்டுகள் ஆகும். ஆகவே, சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருக்கக்கூடிய எந்த ஒரு கிரகத்துக்கும் நம்மால் போக இயலாது. மனிதன் மிக நவீன விண்கலம் மூலம் எங்கெங்கோ இருக்கின்ற கிரகங்களில் இறங்குவது போன்று ஹாலிவுட் ஆங்கிலப் படங்களிலும் மற்றும் ஆங்கில சீரியல்களிலும் காட்டப்படலாம். அவையெல்லாம் பொய்.
வேற்றுலகவாசிகள் நம்மைப்போல கெட்டிக்காரர்களாக இருந்தால் வயர்லஸ் மூலம் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கலாம். அவ்விதம் செய்தி அனுப்பினால நமக்கு நிச்சயம் அது கிடைக்கும். இப்படி ஏதேனும் செய்தி வருகிறதா என்று அறிய கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்கென்றே நஉபஐ என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிபுணர்கள் இரவு, பகலாக விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். நாமும் சிக்னல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வேற்றுலக மனிதர்களிடமிருந்து சிக்னல் எதுவும் இல்லை.
இது ஒருபுறம் இருக்க 1972-ம் ஆண்டிலும் அதற்கு மறு ஆண்டிலும் அமெரிக்கா செலுத்திய பயனீர்-10 பயனீர்-11 விண்கலங்களின் இந்தியாவின் ""விசிட்டிங் கார்ட்'' வைத்து அனுப்பப்பட்டது. அதாவது, தங்க முலாம் பூசப்பட்ட உலோகத் தகட்டில் ஆண், பெண் உருவம், சூரிய மண்டலம், அதில் பூமி இருக்கிற இடம் முதலிய தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த இரு விண்கலங்களும் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிவிட்டன. இவற்றில் பயனீர் 10 விண்கலம், ரோகிணி நட்சத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த விண்கலம் ரோகிணி நட்சத்திரத்தை நெருங்க இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகலாம். என்றாவது ஒரு நாள் வேற்றுலகவாசிகள் இந்த இரு விண்கலங்களையும் கைப்பற்ற நேர்ந்தால் பூமி எங்கே உள்ளது என்ற தகவல் அவர்களுக்குக் கிட்டும். பின்னர் அனுப்பப்பட்ட இரு வாயேஜர் விண்கலங்களில் இதேபோன்று பூமியைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒலித் தட்டுகள் வைத்து அனுப்பப்பட்டன.
இந்த விண்கலங்களும் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி விட்டன. ஆகவே, நாம் இருக்கிற இடம் தெரியாதபடி வேற்றுலகவாசிகளிடமிருந்து நாம் ஒளிந்து கொள்ள முடியாது. தவிர, பூமியிலிருந்து எண்ணற்ற சக்திமிக்க வானொலி நிலையங்கள் சிக்னல்கள் வடிவில் ஒலிபரப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றன. வேற்றுலகவாசிகளிடம் சக்திமிக்க கருவிகள் இருந்தால் அவர்களால் இந்த சிக்னல்களைப் பெற முடியும். அதன் மூலம் அவர்கள் பூமி எங்கே உள்ளது என்று கண்டுபிடித்து விடலாம்.
மனிதன் சந்திரனுக்குச் சென்று விட்டு வந்திருக்கிறான். இது ஒரு சாதனையே. ஆனால், இதை வைத்து நம்மால் அண்டவெளியில் உள்ள எந்தக் கிரகத்துக்கும் செல்ல முடியும் என்று நினைத்தால் தவறு. நம்மிடம் இருக்கின்ற ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் பயன்படுத்தி இவ்விதம் செல்ல முடியாது. சில கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்துக்குப் போய்விட்டு வருவதற்கே குறைந்தது இரண்டரை ஆண்டுகள் ஆகும். செவ்வாய் கிரகத்துக்குப் பத்திரமாகப் போய்விட்டு வருவதற்கான விண்கலங்களை இனிமேல் தான் நாம் தயாரிக்க வேண்டும். சந்திரனுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட விண்கலங்கள் செவ்வாய் கிரகப் பயணத்துக்கு ஏற்றவை அல்ல.
வேற்றுலகவாசி இருக்கின்ற எந்தக் கிரகத்துக்கும் நம்மால் போக வாய்ப்பே இல்லை என்றாலும் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களைப் பற்றி அறிய வாய்ப்பு உள்ளதாகச் சொல்லலாம். ஆனால் இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பூமி போன்ற கிரகங்களில் பெரும்பாலானவை 300 ஒளியாண்டுக்கு அப்பால் உள்ளன.
ஆகவே, அவ்வித கிரகங்களுடன் ஏதேனும் ஒன்றுடன் தொடர்பு கொள்ள நாம் அனுப்பும் சிக்னல்கள் போய்ச் சேர 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். உதாரணமாக, அமெரிக்க நாஸô விஞ்ஞானி ஒருவர் "ஹலோ' என்று சொல்லி 600 அல்லது 700 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பதில் "ஹலோ' வந்து சேரும்.
÷நம்மால் வேற்றுலகு எதற்கும் செல்ல முடியாது என்பது போலவே வேற்றுலகவாசிகளாலும் பூமிக்கு வருவது என்பது சாத்தியமற்றதே.
÷இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது எந்த ஒரு வேற்றுலகிலிருந்தும் ""எந்த ஒரு பயலும்'' பூமியை நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வேற்றுலக மனிதர்களால் பூமிக்கு ஆபத்தா?
Very Interesting.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வேற்றுலக மனிதர்களால் பூமிக்கு ஆபத்தா?
பிச்ச wrote:Very Interesting.
தல ஏன் இந்த வெறி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» புங்குடுதீவு மாணவி படுகொலையாளிகளுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றவேண்டும் : சபையில் பிரதியமைச்சர் விஜயகலா
» சுய இன்பம் ஆபத்தா?
» அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
» அதிகம் என்பது ஆபத்தா?
» அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
» சுய இன்பம் ஆபத்தா?
» அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
» அதிகம் என்பது ஆபத்தா?
» அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|