புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
5 Posts - 14%
heezulia
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
8 Posts - 2%
prajai
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
4 Posts - 1%
mruthun
கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_m10கர்ப்பகாலம் (Pregnancy) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பகாலம் (Pregnancy)


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:34 pm

கர்ப்பகாலம் (Pregnancy) 20100503191515





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:34 pm

கர்ப்பகாலம் ஒரு சாதாரண விடயமாகும்.இது ஒவ்வொரு பெண்ணுக்கும்,ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவம்.நீங்கள் எதிர்கொள்ள போவது என்ன என்பதை யாராலும் கூற முடியாது.உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து வைத்திருத்தல் நன்மை பயக்கும்.


முதல் மூன்று மாதங்கள்(1-12 வாரம்) மாதவிடாய் நிறுத்தம்.
 காலையில் வாந்தி ஏற்படுதல்.
 மார்பகங்கள் பெருக்கும்;தொடும் போது வலியை தரும்.
 முலைகாம்பை சூழ நிறமடைதல்.
 முலைகாம்புகள் பெரிதாகி,நிறமடையும்.
 அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
 களைப்பு.
 மலச்சிக்கல்.
 நெஞ்சு எரிவு.
 உணவு மீது அதிக விருப்பம்.
இரண்டாவது மூன்று மாதங்கள்(13-28வாரம்) உடல் நிறை அதிகரிப்பு.
 குழந்தை உதைக்க ஆரம்பிக்கும்.
 மார்பகங்கள் பெருக்கும்.
 மலச்சிக்கல் மற்றும் மூலம்.
 நெஞ்சு எரிவு.
 கால்,கை,முகம் வீக்கம்.
 தொப்புளுக்கும் பெண் உறுப்புக்கு இடையே அடர்ந்த கோடு.
 பால் சுரத்தல்.
 கால் வலி.
யோனி வெளியேற்றம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:36 pm

மூன்றாம் மூன்று மாதங்கள்(28-40 வாரம்)

 அதிகளவான குழந்தை அசைவு.
 தொப்புள் வெளியாகுதல்.
 மூச்சு எடுக்க கக்ஷ்டமாயிருத்தல்.
 பொய்யான பிரசவ வலி.
 அடி வயிற்று வலி.(Braxton Hick)
 தூக்கமின்மை.
 கால் நாளங்கள் பெருத்தல்.


கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் பிரச்சினைகள்.

மார்பக வலிக்கு என்ன செய்வது?

நன்கு தாங்கக் கூடிய மார்பு கச்சை பாவிக்கவும்.
காலையில் வாந்தி எடுக்க வேண்டும். இதை தவிர்ப்பது எப்படி?
 படுக்கையிலிருந்து எழ முன்னர் 15 நிமிடம் இருக்கவும்.
 குறைவளவு உணவுகள் அடிக்கடி உண்ண வேண்டும்.
 சாப்பிட்ட பின் நீர் அருந்துங்கள்;சாப்பிடும் போது அல்ல.
 காரசாரமான எண்ணை உணவு வகைகளை தவிக்க.
எனக்கு எப்போதும் களைப்பாக இருக்கிறது. இதை தவிர்ப்பது எப்படி?
 சமநிலையான உணவுகளை உண்ணவும்.
 தனியாக எல்லா வேலைகளையும் செய்ய வேண்டாம்.நண்பர்களின் உதவியை நாடுங்கள்.
 உடற்பயிற்சி, தொடர்ச்சியாக எடுத்துக் கொள்க.
 எல்லா வேலைகளையும் ஒரே அடியாக செய்யாமல்,இளைப்பு நேரங்கள் எடுக்கவும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:37 pm

மலச்சிக்கல் காணப்படுகின்றது. என்ன செய்யலாம்?

அதிகளவு நீர் குடியுங்கள்.
நார் பொருட்கள் அதிகம் கொண்ட உணவுபொருட்கள்(பழங்கள்,மரக்கறி,பச்சை இலைகள்)உட்கொள்ளவும்.
தொண்டையில் எரிவு ஏற்படுகின்றது.என்ன செய்யலாம்?


 குறைவளவு உணவு, அடிக்கடி எடுக்கவும்.
 காரசாரமான உணவுகளை தவிர்க்க.
 உண்ணும் போது நீர் குடிக்காதீர்கள்.
 உட்காரும் போதும், படுக்கும் போதும் தலையை உயர்த்தி வைத்து கொள்க.
 சாப்பிட்ட உடன் படுப்பதை தவிக்க.
எனக்கு மூச்சு எடுக்க கக்ஷ்டமாயிருக்கின்றது. என்ன செய்யலாம்?
 படுக்கும் போதும் தலையை உயர்த்தி வைத்து கொள்க.
 வேலை நடுவில் சிறிய இடவேளை.

வேகமாக இடங்களுக்கு செல்வதையோ, சன நெருக்கடி உள்ள இடங்களுக்கு செல்வதையோ தவிர்த்து கொள்க.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:39 pm

அடிக்கடி சிறுநீர் கழிக்க தேவை. என்ன செய்யலாம்?

 இது சாதாரணமான ஒரு நிலை ஆகும். குழந்தை வளர்ச்சியினால் ஏற்படும் அமுக்கத்தால் சிறுநீர்ப்பை குறைவான சிறுநீரையே சேமிக்கும்.
 நீர் குடிப்பதை குறைக்க வேண்டாம்.
 சிறுநீர் கழிக்கும் போது, எரிவு ஏற்படின் வைத்தியரை நாடவும்.
யோனியில் இருந்து வெளியேற்றம் ஏற்படுகின்றது.என்ன செய்யலாம்?

 பருத்தியிலான உள்ளாடை அணியவும்.
 மென்மையான சவர்க்காரம் பாவிக்கவும்.
 சவர்க்காரம் நாளுக்கு இருமுறை பாவிக்கவும்.
 யோனியை எதுவும் கொண்டு துடைக்காதீர்கள்.
 யோனி பகுதியில் சவர்க்காரம்,பவுடர் பாவிக்காதீர்.
 உள்ளாடைகளை வெயிலில் காய்ச்சவும்.
 வெளியேற்றம்
மணமுடையதாகவோ,நிறமாற்றத்துடனோ காணப்பட்டால் சுகாதார சேவை வழங்குபவரை நாடவும்.

கால் வீக்கத்திற்கு என்ன செய்யலாம்?
 உட்காரும் போதும், படுக்கும் போதும் காலை உயர்த்தி வைக்கவும்.
 உங்கள் இடப்பக்கத்தில் படுக்கவும்.
 தொடர்ந்து உடற்பயிச்சி செய்யவும்.
 அதிகம் உப்புத்தன்மையான உணவுகளை தவித்து கொள்ளவும்.
 வீக்கம் அதிகரித்தால் சுகாதார சேவை வழங்குபவரை நாடவும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:40 pm

நீங்கள் கர்ப்பம் தரித்ததை அறிந்து கொள்வது எப்படி?

முதலாவதாக உங்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் (மற்றய அறிகுறிகள் பின் தொடரும்). மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டவுடன் குருதியில் hca பரிசோதிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படலாம். மாதவிடாய் தவறவிடப்பட்டு இரண்டு கிழமைகளில் சிறுநீர் பரிசோதனைகள் மூலம், ஒலிமூல ஸ்கேன் மூலமும் கர்ப்பம் தரித்தது கண்டுபிடிக்கப்படலாம்.
கர்ப்பம் தரித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
வேறு ஏதும் பிரச்சினைகள் இல்லை எனின், வைத்தியரை அவசரமாக நாட வேண்டிய தேவை இல்லை. பொது சுகாதார தாதியை சந்திக்க வேண்டும். அவர் கர்ப்ப காலத்துக்கான card ஒன்றை தருவார்; நீங்கள் அரச ஆஸ்பத்திரி ஒன்றில் பிரவச கிளினிக் ஒன்றில் பதிவு செய்ய வேண்டும்.
பிரசவம் ஏற்பட 2-3 மாதத்துக்கு முன் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டி ஏற்படலாம்.


கர்ப்பகாலத்தில் உங்கள் வாழ்க்கைமுறையை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும்?

 மரக்கறி,பழங்கள்,முட்டை,மாமிசம் என்பன கலந்த சமநிலையான உணவு வேளை.
 அதிகளவான நீர் மற்றும் குடிபானங்கள்(நீர் 10- குவளை).
 முதல் மூன்று மாதங்களில் போலிக் அமிலம் மட்டும் எடுக்க வேண்டும்.
 நான்காம் மாதம் முதல் இரும்பு,மற்றும் கல்சியம் போலிக் அமிலத்துடன் எடுக்கவும்.
 பூச்சி மருந்து இரண்டாம் மூன்று மாதங்களில் கொடுக்கப்படும்.
 உணவுகளுடன் பரிசோதனை செய்யாதீர்கள்.தெரிந்த உணவுகளை மட்டும் உட்கொள்ளவும்.பழக்கப்படாத உணவுகளை தவிக்கவும்.
 உங்கள் உடல் பருமன் சீராக அதிகரித்து செல்வதை காணலாம்.ஒரு மாதத்திற்கு 2 Kg அளவில் அதிகரிக்கும். இது கிளினிக்கில் கண்கானிக்கப்படும்.
 மெல்லிய ஆடைகள் அணியவும்
 சன நெருக்கடியான இடங்களை தவிர்த்து கொள்ளவும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:41 pm

கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன?

 சிறுநீர் பரிசோதனை.
 குருதியில் ஈமோகுளோபின் அளவு.
 விரதத்தில் குருதி குளுக்கோசு-இதில் அசாதாரன நிலை இருப்பின் PPBSஅல்லது OGTT.
 இரத்த வகை.
 VDRL-சிபிலிஸ் பார்ப்பதற்கு.


நிம்மதியாக மன உளைச்சலின்றி எவ்வாறு இருப்பது?

கர்ப்ப பெண்மணியுடன் தொடர்புள்ள வாழ்க்கை துணை,குடும்பம் மற்றும் அண்டை வீட்டார்,அப்பெண்மணியுடன் வாழ்க்கையை நிம்மதியாக நடத்தி செல்ல உதவ வேண்டும்.அன்றாட வீட்டு வேலைகளுக்கு அவளுக்கு உதவி செய்தல்,அவருடன் பேசுதல்,அவருடய பிரச்சினைகளை கேட்டு அவருக்கு உதவ வேண்டும்.


இது கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை குறைக்கும். மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வது, மென்மையான இசை கேட்பது என்பன உதவி செய்யும்.
சாதாரண தாம்பத்திய உறவை பேணலாமா?
கர்ப்பகாலத்தின் போது சில பெண்களுக்கு உடலுறவு தேவை அதிகரிக்கும். சிலருக்கு மாற்றம் இருக்காது. சிலருக்கு குறையும். கர்ப்பகாலம் முழுவதும் உடலுறவு கொள்ளாலாம். எனினும் வெவ்வேறு நிலைகளில் உடலுறவு கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளக்கூடிய நிலைகள்.
பக்கமாக : முன் -பின்
உங்கள் துணை உங்கள் பின் இருப்பர்.பின்புறமாக உங்களுக்குள் செல்வார்.
பக்கமாக : முன் –முன்
இது கர்ப்பகாலத்தின் முற்பகுதியில் செய்யலாம்,வயிறு வளர்ந்த பின் செய்ய முடியாது.இதன் நன்மைகள் உங்கள் துணையை நேருக்கு நேராக பார்க்கலாம்.


துணை மேலாக
கர்ப்பகாலம் முன்னேறும் போது இது ஒரு கக்ஷ்ரமான நிலையாகும்.ஒரு சிறிய மாற்றம் செய்யலாம்.உடல் நிறையை தனது கைகளில் தாங்கினால் உங்கள் வயிற்று பகுதியில் அமுக்கம் ஏற்படுவது குறைவாகும்.படுத்த நிலையில் அதிக நேரம் இருக்க கூடாது.


பின்னால் உட்செலுத்தல்
நீங்கள் கைகளாலும் முழங்கால்களாலும் இருக்கும் போது,உங்கள் துணை பின்னால் உட்செலுத்துவார். இது வயிறு வளர்ந்த பின் ஒரு சிறந்த நிலை ஆகும். இதன் போது வயிறு மீது அழுத்தம் கொடுப்பதும் குறைவாக இருக்கும்.
துணையின் மடி
இதன் போது உங்கள் துணையின் மாடியில் நீங்கள் உட்கார வேண்டும்.


பெண் மேலே
இதன் நன்மை,உங்கள் நிறையை உங்கள் முழங்கால்களால் தாங்கலாம்.இதன் போதும்,வயிறு மீது அழுத்தம் ஏற்பட்டது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:43 pm

செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்?
நடப்பதே சிறந்த உடற்பயிற்சி ஆகும்.இது பிரசவத்துக்கு உதவும்.நீச்சலும் சிறந்த உடற்பயிற்சி.வெளிப்புற உடற்பயிற்சியை தவிக்கவும்.


கர்ப்பகாலத்தில் எவ்வாறான விடயங்களுக்கு சுகாதார உதவியை நாட வேண்டும்


 அதிக குருதி வெளியேறல்.
 திடீரென திரவம் வெளியேறல்.
 குழந்தையின் அசைவு வெகுவாக குறைதல்.
 கடுமையான தலைவலி.
 அதிகப்படியான வாந்தி.
 கடும் வயிற்று வலி.
 உயர் காய்ச்சல்.


கர்ப்பகாலத்தின் போது இரத்த குறைவு (குருதிச்சோகை)
கர்ப்பகாலத்தின் அதிகப்படியான இரும்புசத்து தேவை என்பதால்,குருதிச்சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.உங்களுக்கு மயக்கம்,பலவீனம்,மூச்சுவிட கக்ஷ்டம் ஏற்படுமெனின்,குருதிச்சோகையாக இருக்கலாம்.உங்கள் குடும்ப மருத்துவர் ஒரு சிறு குருதி பரிசோதனை மூலம் இதனை கண்டு பிடிப்பார்.


இரும்பு சத்து கூடிய உணவுகள்-

இறைச்சி,மீன்,இலைகள்,மரக்கறிகள்,இரும்பு துணை மருத்துவங்களின் தேவை ஒரு வைத்தியரினால் நிர்ணயிக்கப்படும்.

கர்ப்பகாலத்தின் போது உயர் குருதி அமுக்கம்.
கை,கால்,முகம் போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டால்,ஒரு வைத்தியரை நாடவும்.கடுமையான அமுக்கம் உயர்குருதி அமுக்கத்தின் ஒரு அறிகுறியாகும்.
கர்ப்பகாலத்தின் போது நீரிழிவு நோய்
உயர் குருதி குளுக்கோசு- கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இது பிரசவ கிளினிக்கில் கண்டுபிடிக்கப்படலாம். 26-28 கிழமைகளில் செய்யப்படும் ‘Glucose tolerance test’மூலம் இதை ஊர்ஜிதப்படுத்தலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:44 pm

கர்ப்பகாலத்தில் வேறு சில பக்கவிளைவுகள்


வீக்கமடையும் நாளங்களும் தோலில் ஏற்படும் மாற்றங்களும் கர்ப்பகாலத்தில் பொதுவானவை. இது உங்களுக்கோ, உங்கள் குழந்தைக்கோ கேடு விளைவிக்காது.
சிறுநீர் தொகுதி நோய்கள் பொதுவாக காணப்பட்டாலும் கர்ப்பகால அறிகுறிகளினால் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம்.


எனினும்,பெண்ணுக்கு பெண் இந்த அறிகுறிகள் வேறுபடும்; பிரசவத்துக்கு பிரசவமும் இவை வேறுபடும். உங்கள் உடம்பு கர்ப்பகாலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி கொள்ளும். ஏதாவது பிரச்சினை இருப்பின் வைத்தியரை நாடவும்.


பிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய மாற்றங்கள்

Lochia- இது கர்ப்பப்பையில் இருந்து வெளியேறும் ஒரு திரவம் ஆகும். மாதவிடாயை ஒத்தது. எனினும் சற்று அடர்த்தியானது. இது ஆரம்பித்தில் சிவப்பாக இருந்து பின் மஞ்சள்-வெள்ளையாக மாறும். இது 2-3 கிழமைகள் வரை இருக்கும். 4 கிழமைகளுக்கு மேற்படின் வைத்தியரை நாடவும்.
இலிங்க உறுப்புகள்- உங்கள் யோனி துவாரம் பிரசவத்தின் போது இழுவைக்கு உட்படும். எனவே சில நாட்களுக்கு வலி காணப்படலாம். தையல்கள் இருப்பின் கக்ஷ்டமாயிருக்கலாம். சுடுநீரால் குளித்தல் சுகம் தரும்.


மார்பகங்கள்- பால் நிறைந்த மார்பகங்கள் சற்று கடினத்தை தரலாம். பாலூட்டல் ஆரம்பித்த பின் வலி குறையும். பாலூட்டல் பற்றி கற்றுக்கொள்ள தாதிமார் உதவி செய்வார்கள். ஏதாவது பிரச்சினை இருப்பின், பொது சுகாதார தாதியை நாடவும். பாலூட்டவில்லை எனின் வலுவான மார்பு கச்சை ஒன்றை பாவிக்கவும்.


சிறுநீர்பை/குடல்- பிரசவத்தின் போது சிறுநீர்ப்பை அழுத்தப்படும். எனவே, சிறுநீர் கழிப்பதில் கக்ஷ்டம் ஏற்படலாம். அதிகளவு நீர் ஆகாரங்கள் உட்கொள்ளவும். மலச்சிக்கல் பிரசவத்தை தொடர்ந்து – ஒரு வாரம் வரை காணப்படலாம். அதிகளாவு நீர், மரக்கறி வகைகள் உதவும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 04, 2010 2:44 pm

பிரசவத்தின் பின் வைத்தியரை நாடவேண்டியது எப்போது?
குழந்தையின் பிரச்சினைகள்


 மூச்சுவிட கக்ஷ்டம்.
 பால் குடித்தலின் பிரச்சினை.
 காய்ச்சல்.
 கடும்நிற சிறுநீர்.
 தொப்புள் கொடி சிவப்பு நிறமாக இருத்தல்/ திரவம் வெளியேறுதல்.
 20 மணித்தியாலங்களுக்கு மேல் தூக்கம்.
 சிறுநீர் குறைவாக கழித்தல்.

தாயின் பிரச்சினைகள்


 மார்பகங்களில் வலி.
 வயிற்று வலி.
 சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
 கால்களில் வலி.


பிரசவத்தின் பின் சிறந்த குடும்ப கட்டுப்பாடு என்ன?

குடும்ப கட்டுப்பாடு வில்லை- பாலூட்டுவோர் எனின் பிரசவத்திற்கு 6 மாதத்தின் பின்.
பாலூட்டவில்லை எனின் – 6 கிழமைகளின் பின்.
ஊசி மூலம் குடும்ப கட்டுப்பாடு- பாலூட்டுவோர் எனின் பிரசவத்திற்கு 6 கிழமைகளுக்கு பின்.
பாலூட்டவில்லை எனின் – 6 ஒரு மாதத்தின் பின்.
பாலூட்டுவதன் நன்மைகள்
குழந்தைக்கு


1. தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கூறுகள் மூலம் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள், ஒவ்வாமை நோய்கள், வயிற்றோட்டம் போன்றன குறையும்.
2. குழந்தையின் விருத்தியடையாத உணவு கால்வாய் தொகுதிக்கு உகந்ததாகவே தாய்ப்பால் அமைந்துள்ளது. எனவே, இலகுவாக சமிபாடையும்.
3. குழந்தையின் தேவைக்கேற்ப, தாய்ப்பாலில் உள்ள கூறுகளும் மாற்றமடையும். இது குழந்தைக்கு தேவயான புரதம், கொழுப்பு, விட்டமின் கனியுப்புக்களை வழங்கும்.
4. குழந்தையின் அறிவுத்திறன் கூடும்.
5. தாய்-சிசு அரவணைப்பு கூடும்.


தாய்க்கு.

1. பிரசவத்தை தொடர்ந்து பாலூட்டல் மூலம் கர்ப்பபை சுருங்கி- இரத்தம் வெளியேறுவதை குறைக்கும்.
2. குறைந்த பட்சம் 6 மாதங்கள் பாலூட்டுவதன் மூலம் மார்பக புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் குறையும்.
3. என்பு அடர்த்தி குறைவு மற்றும் கருப்பை கழுத்து புற்றுநோய் குறையும்.
4. குடும்ப கட்டுப்பாட்டு முறையாக கையாளலாம்.
தான் தன் குழந்தையின் பசியை தீர்க்கின்றார் என மன நிம்மதி அடைவார்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக