Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இத்தா பற்றிய விளக்கம்
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இத்தா பற்றிய விளக்கம்
First topic message reminder :
இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.
“இத்தா” – பொருள்:
“அத்த” என்றால் எண்ணினான் என்பது அர்த்தமாகும். நோயாளி-பயணிகளின் நோன்பு பற்றி அல்லாஹ் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்;
“எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கின்றாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேணடும்.
(2:185)
இங்கே றமழானில் விடப்பட்ட நோன்புகளை ஏனைய மாதங்களில் கணக்கிட்டு நோற்பதற்கு “இத்ததுன்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் “இத்தா” என்பது விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் காலத்தைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப் படுகின்றது.
இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.
“இத்தா” – பொருள்:
“அத்த” என்றால் எண்ணினான் என்பது அர்த்தமாகும். நோயாளி-பயணிகளின் நோன்பு பற்றி அல்லாஹ் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்;
“எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கின்றாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேணடும்.
(2:185)
இங்கே றமழானில் விடப்பட்ட நோன்புகளை ஏனைய மாதங்களில் கணக்கிட்டு நோற்பதற்கு “இத்ததுன்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் “இத்தா” என்பது விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் காலத்தைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப் படுகின்றது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
உஹதுப் போரில் ஷஹீதான நபித் தோழர்களின் மனைவியர் “இத்தா” இருந்தனர். அவர்கள் நபியவர்களிடம் வந்து தாம் ஒன்றாக ஒருவர் வீட்டிற்தங்க அனுமதி கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் பகலில் ஒன்றுசேர்ந்து ஒருவர் வீட்டில் இருக்குமாறும், இரவில் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுமாறும் கூறினார்கள்.
(கிதாபுல் உம்மு 5ஃ251, முஸன்னப் அப்துர்ரஷ்ஷாக்)
“தலாக்” விடப்பட்ட பெண்ணுக்கு கணவன் உணவும், இருப்பிடமும் அளிக்கவேண்டும். மூன்றாம் “தலாக்” சொல்லப்பட்ட பெண்ணுக்கு உணவு அளிக்க வேண்டியதில்லை. இந்த நிலையில் இருக்கும் பெண் உழைப்புக்காகப் பகலில் வெளியில் செல்லவும் நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
இது குறித்து ஜாபிர்(ரலி) அவர்கள் கூறும் போது;
“எனது மாமி மூன்றாம் “தலாக்” கூறப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஈத்தமரத்தில் ஈத்தம் பழங்களைப் பரிப்பதற்காகச் சென்றார்கள். அவர்களைச் சந்தித்த ஒரு நபித்தோழர் அவர்களைத் தடுத்தார். எனவே, இது குறித்து எனது மாமி நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது “நீ உனது தோட்டத்திற்குச் சென்று ஈத்தம்பழம் பறி! அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீ சிலபோது “ஸதகா” செய்யலாம் அல்லது ஏதேனும் நல்லது செய்யலாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜா)
இப்னுகுதாமா(ரலி) போன்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை வைத்துக் கணவனின் மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண் கூடத் தனது வாழ்வாதாரத் தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியமிருந்தால் செல்லலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
எனவே, “இத்தா” இருக்கும் பெண் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசியத் தேவைகளிருந்தால் தகுந்த முறையில் வெளியில் செல்வதில் தடையில்லை.
(கிதாபுல் உம்மு 5ஃ251, முஸன்னப் அப்துர்ரஷ்ஷாக்)
“தலாக்” விடப்பட்ட பெண்ணுக்கு கணவன் உணவும், இருப்பிடமும் அளிக்கவேண்டும். மூன்றாம் “தலாக்” சொல்லப்பட்ட பெண்ணுக்கு உணவு அளிக்க வேண்டியதில்லை. இந்த நிலையில் இருக்கும் பெண் உழைப்புக்காகப் பகலில் வெளியில் செல்லவும் நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
இது குறித்து ஜாபிர்(ரலி) அவர்கள் கூறும் போது;
“எனது மாமி மூன்றாம் “தலாக்” கூறப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஈத்தமரத்தில் ஈத்தம் பழங்களைப் பரிப்பதற்காகச் சென்றார்கள். அவர்களைச் சந்தித்த ஒரு நபித்தோழர் அவர்களைத் தடுத்தார். எனவே, இது குறித்து எனது மாமி நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது “நீ உனது தோட்டத்திற்குச் சென்று ஈத்தம்பழம் பறி! அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீ சிலபோது “ஸதகா” செய்யலாம் அல்லது ஏதேனும் நல்லது செய்யலாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜா)
இப்னுகுதாமா(ரலி) போன்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை வைத்துக் கணவனின் மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண் கூடத் தனது வாழ்வாதாரத் தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியமிருந்தால் செல்லலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
எனவே, “இத்தா” இருக்கும் பெண் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசியத் தேவைகளிருந்தால் தகுந்த முறையில் வெளியில் செல்வதில் தடையில்லை.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
(3) தலாக்கிற்கான இத்தா:
கணவன், மனைவியைத் “தலாக்” சொன்னால் அந்த மனைவியின் நிலையைப் பொருத்து இத்தாவின் சட்டம் 3 விதங்களாக அமையும்.
அ. உடலுறவுக்கு முன்னர் தலாக்:
திருமண ஒப்பந்தம் முடிந்து “ஈஜாப்-கபூல்” சொல்லப்பட்ட பின்னர் உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் கணவன், மனைவியைத் தலாக் கூறினால் அந்தப் பெண் “இத்தா” இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்த நிமிடமே அவள் வேறொருவரை மணம் முடிக்கலாம்.
கணவன், மனைவியைத் “தலாக்” சொன்னால் அந்த மனைவியின் நிலையைப் பொருத்து இத்தாவின் சட்டம் 3 விதங்களாக அமையும்.
அ. உடலுறவுக்கு முன்னர் தலாக்:
திருமண ஒப்பந்தம் முடிந்து “ஈஜாப்-கபூல்” சொல்லப்பட்ட பின்னர் உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் கணவன், மனைவியைத் தலாக் கூறினால் அந்தப் பெண் “இத்தா” இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்த நிமிடமே அவள் வேறொருவரை மணம் முடிக்கலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;
“நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கையாளர் களான பெண்களை நீங்கள் மணம் முடித்து, அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால், நீங்கள் கணக்கிடக் கூடிய “இத்தா” (எனும் காத்திருக்கும் காலம்) எதுவும் உங்களுக்காக அவர்கள் மீதில்லை. ஆகவே, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டு விடுங்கள்!” (33:49)
இவ்வாறு “தலாக்” கூறும் போது அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையாக அமையும் விதத்தில் போலிக் குற்றங்கள் சுமத்தக் கூடாது. சிலர் பெற்றோரின் நிர்ப்பந்தத்திற்காக மணம் முடித்து, அன்று இரவே வீட்டை விட்டும் ஓடி விடுகின்றனர். பின்னர் தனது செயலை நியாயப்படுத்தப் பெண்ணுக்கு அது சரியில்லை, இது சரியில்லையென குற்றம் சுமத்துகின்றனர். இது தவறாகும் என்பதை இந்த வசனத்தின் இறுதிப்பகுதி கூறுகின்றது.
அடுத்து, இவ்வாறு “தலாக்” கூறுவதால் அந்தப் பெண் பாதிக்கப்படுகின்றாள். எனவே மஹரின் அரைவாசியை அவளுக்குத் “தலாக்” விட்டவன் வழங்குவது கட்டாயமாகும். உதாரணமாக 1 இலட்சம் மஹர் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் 50 ஆயிரம் வழங்குவது கட்டாயம். 1 இலட்சத்தையும் வழங்குவது நல்லதாகும். இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்.
“நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கையாளர் களான பெண்களை நீங்கள் மணம் முடித்து, அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால், நீங்கள் கணக்கிடக் கூடிய “இத்தா” (எனும் காத்திருக்கும் காலம்) எதுவும் உங்களுக்காக அவர்கள் மீதில்லை. ஆகவே, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டு விடுங்கள்!” (33:49)
இவ்வாறு “தலாக்” கூறும் போது அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையாக அமையும் விதத்தில் போலிக் குற்றங்கள் சுமத்தக் கூடாது. சிலர் பெற்றோரின் நிர்ப்பந்தத்திற்காக மணம் முடித்து, அன்று இரவே வீட்டை விட்டும் ஓடி விடுகின்றனர். பின்னர் தனது செயலை நியாயப்படுத்தப் பெண்ணுக்கு அது சரியில்லை, இது சரியில்லையென குற்றம் சுமத்துகின்றனர். இது தவறாகும் என்பதை இந்த வசனத்தின் இறுதிப்பகுதி கூறுகின்றது.
அடுத்து, இவ்வாறு “தலாக்” கூறுவதால் அந்தப் பெண் பாதிக்கப்படுகின்றாள். எனவே மஹரின் அரைவாசியை அவளுக்குத் “தலாக்” விட்டவன் வழங்குவது கட்டாயமாகும். உதாரணமாக 1 இலட்சம் மஹர் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் 50 ஆயிரம் வழங்குவது கட்டாயம். 1 இலட்சத்தையும் வழங்குவது நல்லதாகும். இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்து விட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.” (2:237)
நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். அந்தப் பெண் “ஒரு இளவரசி ஒட்டகம் மேய்க்கும் இடையனுக்குத் தன்னை அர்ப்பணிப்பாளா?” எனக் கேட்டு, நபி(ஸல்) அவர்களுடன் வாழப் பிடிக்காததைக் கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளுக்குரிய சில அன்பளிப்புக்களை வழங்கி அவளை அவள் வழியிலேயே விட்டார்கள். (பார்க்க: புகாரி 5254, 5255, 5256, 5257)
அந்தப் பெண் நபி(ஸல்) அவர்களை அவமதித்தாள். அடுத்து, அவளாக விவாக பந்தத்தை முறித்தாய் இருந்தும் கூட நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பு வழங்கியது அவதானிக்கத்தக்கதாகும்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். அந்தப் பெண் “ஒரு இளவரசி ஒட்டகம் மேய்க்கும் இடையனுக்குத் தன்னை அர்ப்பணிப்பாளா?” எனக் கேட்டு, நபி(ஸல்) அவர்களுடன் வாழப் பிடிக்காததைக் கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளுக்குரிய சில அன்பளிப்புக்களை வழங்கி அவளை அவள் வழியிலேயே விட்டார்கள். (பார்க்க: புகாரி 5254, 5255, 5256, 5257)
அந்தப் பெண் நபி(ஸல்) அவர்களை அவமதித்தாள். அடுத்து, அவளாக விவாக பந்தத்தை முறித்தாய் இருந்தும் கூட நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பு வழங்கியது அவதானிக்கத்தக்கதாகும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
ஆ. தலாக் விடப்பட்ட மாதத்தீட்டு ஏற்படக்கூடிய பெண்களின் இத்தா:
இவர்களைப் பொருத்தவரை 3 மாதத் தீட்டுக்கள் ஏற்படும் வரை அல்லது 3 மாதத் தீட்டுக்கள் ஏற்பட்டுச் சுத்தமாகும் வரை “இத்தா” இருக்கவேண்டும்.
இது குறித்துப் பின்வருமாறு கூறுகின்றது;
“விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்..” (2:228)
இவர்களைப் பொருத்தவரை 3 மாதத் தீட்டுக்கள் ஏற்படும் வரை அல்லது 3 மாதத் தீட்டுக்கள் ஏற்பட்டுச் சுத்தமாகும் வரை “இத்தா” இருக்கவேண்டும்.
இது குறித்துப் பின்வருமாறு கூறுகின்றது;
“விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்..” (2:228)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
இ. மாதத்தீட்டு நின்ற அல்லது ஏற்படாத பெண்கள்:
இந்த நிலையில் இருக்கும் பெண்கள் பிறைக் கணக்கில் 3 மாதங்கள் “இத்தா” இருக்க வேண்டும்.
இது குறித்துப் பின்வரும் வசனம் பேசுகின்றது;
“உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயை விட்டும் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தா விடயத்தில்) நீங்கள் சந்தேகங்கொண்டால் அவர்களுக்கும் (இதுவரை) மாதவிடாய் ஏற்படாதவர்களுக்குமுரிய இத்தாக்காலம் மூன்று மாதங்களாகும்..” (65:4)
இந்த இத்தாவில் இருக்கும் பெண்களை வீட்டை விட்டும் வெளியேற்றவும் கூடாது. அவர்கள் தாமாக வெளியேறிச் சென்று விடவும் கூடாது.
“நபியே! நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்தால் அவர்களின் இத்தாவைக் கணக்கிடக் கூடிய (மாதவிடாய் இல்லாத) காலத்தில் விவாகரத்துச் செய்யுங்கள். மேலும், “இத்தா”வை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் இரட்சகனான அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக்கேடானதைச் செய்தாலேயன்றி, அவர்களை நீங்கள் அவர்களது வீடுகளை விட்டும் வெளியேற்ற வேண்டாம். அவர்கள் வெளியேறவும் வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவன் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றானோ, அவன் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டான். (சேர்ந்து வாழ) இதன் பின்னரும் அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.” (65:1)
இந்த நிலையில் இருக்கும் பெண்கள் பிறைக் கணக்கில் 3 மாதங்கள் “இத்தா” இருக்க வேண்டும்.
இது குறித்துப் பின்வரும் வசனம் பேசுகின்றது;
“உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயை விட்டும் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தா விடயத்தில்) நீங்கள் சந்தேகங்கொண்டால் அவர்களுக்கும் (இதுவரை) மாதவிடாய் ஏற்படாதவர்களுக்குமுரிய இத்தாக்காலம் மூன்று மாதங்களாகும்..” (65:4)
இந்த இத்தாவில் இருக்கும் பெண்களை வீட்டை விட்டும் வெளியேற்றவும் கூடாது. அவர்கள் தாமாக வெளியேறிச் சென்று விடவும் கூடாது.
“நபியே! நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்தால் அவர்களின் இத்தாவைக் கணக்கிடக் கூடிய (மாதவிடாய் இல்லாத) காலத்தில் விவாகரத்துச் செய்யுங்கள். மேலும், “இத்தா”வை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் இரட்சகனான அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக்கேடானதைச் செய்தாலேயன்றி, அவர்களை நீங்கள் அவர்களது வீடுகளை விட்டும் வெளியேற்ற வேண்டாம். அவர்கள் வெளியேறவும் வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவன் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றானோ, அவன் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டான். (சேர்ந்து வாழ) இதன் பின்னரும் அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.” (65:1)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
“இத்தா” இருக்கும் பெண்கள் தமது கருவில் சிசு இருந்தால் அதை மறைக்கலாகாது..
தலாக் ரஜ்பீக்கான “இத்தா” இருக்கும் பெண்ணுக்கு கணவன் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும். அது அவனது பொருளாதார வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும். அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பிரசவிக்கும் வரை அவளது செலவுகளை அவன் ஏற்றாக வேண்டும்.
“நீங்கள் குடியிருக்கும் இடத்தில் உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களை குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் தமது சுமையைப் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவழியுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே (இது குறித்துப் பேசி) நல்ல முறையில் முடிவு செய்துகொள்ளுங்கள்! இதை நீங்கள் சிரமமாகக் கருதினால் அவளுக்காக மற்றொருத்தி (குழந்தைக்கு) பாலூட்டட்டும்.
வசதி உள்ளவர் தமது வசதிற்கு ஏற்பச் செலவிடட்டும். யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ, அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்தின் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான்.” (65:6-7)
அவள் குழந்தையைப் பெற்று அந்தக் குழந்தைக்கு அவளே பாலூட்டுவதாகக் குழந்தையின் தந்தையும், தாயும் தீர்மானித்தால் பாலூட்டும் காலம் வரை அவன் – அவளுக்கு வாழ்வாதாரமும், ஊதியமும் அளிக்க வேண்டும். அத்துடன் குழந்தைக்குரிய தேவைகளையும் கணவன் நிறைவேற்ற வேண்டும். குழந்தையின் தந்தை இறந்தால் கூட அவரின் வாரிசாக இருப்பவர் இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
தலாக் ரஜ்பீக்கான “இத்தா” இருக்கும் பெண்ணுக்கு கணவன் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும். அது அவனது பொருளாதார வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும். அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பிரசவிக்கும் வரை அவளது செலவுகளை அவன் ஏற்றாக வேண்டும்.
“நீங்கள் குடியிருக்கும் இடத்தில் உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களை குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் தமது சுமையைப் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவழியுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே (இது குறித்துப் பேசி) நல்ல முறையில் முடிவு செய்துகொள்ளுங்கள்! இதை நீங்கள் சிரமமாகக் கருதினால் அவளுக்காக மற்றொருத்தி (குழந்தைக்கு) பாலூட்டட்டும்.
வசதி உள்ளவர் தமது வசதிற்கு ஏற்பச் செலவிடட்டும். யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ, அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்தின் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான்.” (65:6-7)
அவள் குழந்தையைப் பெற்று அந்தக் குழந்தைக்கு அவளே பாலூட்டுவதாகக் குழந்தையின் தந்தையும், தாயும் தீர்மானித்தால் பாலூட்டும் காலம் வரை அவன் – அவளுக்கு வாழ்வாதாரமும், ஊதியமும் அளிக்க வேண்டும். அத்துடன் குழந்தைக்குரிய தேவைகளையும் கணவன் நிறைவேற்ற வேண்டும். குழந்தையின் தந்தை இறந்தால் கூட அவரின் வாரிசாக இருப்பவர் இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
இது குறித்துப் பின்வரும் வசனம் விரிவாகப் பேசுகின்றது;
“பால்குடியை நிறைவு செய்ய விரும்புகின்ற (கண)வருக்காகத் (தலாக் விடப்பட்ட) தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூரணமாகப் பாலூட்ட வேண்டும். (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு முறைப்படி உணவளிப்பதும், அவர்களுக்கு உடையளிப்பதும் பிள்ளையின் தந்தை மீது கடமையாகும். எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமப்படுத்தப்பட மாட்டாது. தாய் தன் பிள்ளைக்காகவோ, தந்தை தன் பிள்ளைக்காகவோ சிரமத்துக்குள்ளாக்கப்பட மாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்கும் உண்டு. அவ்விருவரும் மனம் விரும்பியும் ஆலோசனை செய்தும் பால்குடியை நிறுத்தி விடக் கருதினால் அவ்விருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும்பி (பெற்ற தாய்க்குக்) கொடுக்க வேண்டியதை உரிய முறைப்படி கொடுத்து விட்டால் (அதிலும்) உங்கள் மீது குற்றம் கிடையாது. நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்!” (2:233)
“பால்குடியை நிறைவு செய்ய விரும்புகின்ற (கண)வருக்காகத் (தலாக் விடப்பட்ட) தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூரணமாகப் பாலூட்ட வேண்டும். (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு முறைப்படி உணவளிப்பதும், அவர்களுக்கு உடையளிப்பதும் பிள்ளையின் தந்தை மீது கடமையாகும். எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமப்படுத்தப்பட மாட்டாது. தாய் தன் பிள்ளைக்காகவோ, தந்தை தன் பிள்ளைக்காகவோ சிரமத்துக்குள்ளாக்கப்பட மாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்கும் உண்டு. அவ்விருவரும் மனம் விரும்பியும் ஆலோசனை செய்தும் பால்குடியை நிறுத்தி விடக் கருதினால் அவ்விருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும்பி (பெற்ற தாய்க்குக்) கொடுக்க வேண்டியதை உரிய முறைப்படி கொடுத்து விட்டால் (அதிலும்) உங்கள் மீது குற்றம் கிடையாது. நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்!” (2:233)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
குல்உவுக்கான இத்தா:
கணவன், மனைவியை விவாகரத்துச் செய்ய உரிமை இருப்பது போலவே, வேண்டாத கணவனை விட்டும் விலகிக்கொள்ள மனைவிக்கும் உரிமை உண்டு. ஒரு பெண் தன்னைக் கணவனிடமிருந்து விடுவித்துக்கொள்வதற்கு “குல்உ” என்று கூறப்படும். கணவனுடன் வாழப் பிடிக்காத மனைவி கணவரிடம் முறையிட்டு முறைப்படி திருமண ஒப்பந்தத்தை முறிப்பதற்கே “குல்உ” என்று கூறப்படும். இவ்வாறு விவாகபந்தத்தை முறிக்கும் போது பெண் தனது கணவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலன்றிக் “காழி” மூலமோ, தலைவர் மூலமோ விவாகபந்தம் முறிக்கப்பட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சில பெண்கள் இவ்வாறு விவாகபந்தத்தை முறித்துள்ளனர். பரீரா என்ற அடிமைப் பெண்ணை ஆயிஷா(ரலி) அவர்கள் வாங்கி விடுதலை செய்த போது அவர் தனது கருப்பரான அடிமைக் கணவரை விட்டும் பிரிந்தார். நபி(ஸல்) அவர்கள் சேர்ந்துவாழ ஆலோசனை கூறிய போது அப்பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளின் கணவர் அழுது அழுது இப்பெண்ணின் பின்னால் வந்தும் கூட அவள் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. (பார்க்க: புகாரி 5281, 5282, 5283)
இவ்வாறே, ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் தாபித்(ரலி) அவர்களின் மார்க்கப் பற்றையோ, குணத்தையோ குறை கூறவில்லை. ஆனால் அவருடன் வாழ என்னால் முடியவில்லை!” என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(அவர் மஹராகத் தந்த) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுக்கின்றாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். (பார்க்க: புகாரி 5274, 5275, 5276)
கணவன் – மனைவியைத் “தலாக்” சொன்னால் அவன் கொடுத்த மஹரில் எதையும் பெறமுடியாது. ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் பெறமுடியாது.
கணவன், மனைவியை விவாகரத்துச் செய்ய உரிமை இருப்பது போலவே, வேண்டாத கணவனை விட்டும் விலகிக்கொள்ள மனைவிக்கும் உரிமை உண்டு. ஒரு பெண் தன்னைக் கணவனிடமிருந்து விடுவித்துக்கொள்வதற்கு “குல்உ” என்று கூறப்படும். கணவனுடன் வாழப் பிடிக்காத மனைவி கணவரிடம் முறையிட்டு முறைப்படி திருமண ஒப்பந்தத்தை முறிப்பதற்கே “குல்உ” என்று கூறப்படும். இவ்வாறு விவாகபந்தத்தை முறிக்கும் போது பெண் தனது கணவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலன்றிக் “காழி” மூலமோ, தலைவர் மூலமோ விவாகபந்தம் முறிக்கப்பட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சில பெண்கள் இவ்வாறு விவாகபந்தத்தை முறித்துள்ளனர். பரீரா என்ற அடிமைப் பெண்ணை ஆயிஷா(ரலி) அவர்கள் வாங்கி விடுதலை செய்த போது அவர் தனது கருப்பரான அடிமைக் கணவரை விட்டும் பிரிந்தார். நபி(ஸல்) அவர்கள் சேர்ந்துவாழ ஆலோசனை கூறிய போது அப்பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளின் கணவர் அழுது அழுது இப்பெண்ணின் பின்னால் வந்தும் கூட அவள் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. (பார்க்க: புகாரி 5281, 5282, 5283)
இவ்வாறே, ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் தாபித்(ரலி) அவர்களின் மார்க்கப் பற்றையோ, குணத்தையோ குறை கூறவில்லை. ஆனால் அவருடன் வாழ என்னால் முடியவில்லை!” என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(அவர் மஹராகத் தந்த) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுக்கின்றாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். (பார்க்க: புகாரி 5274, 5275, 5276)
கணவன் – மனைவியைத் “தலாக்” சொன்னால் அவன் கொடுத்த மஹரில் எதையும் பெறமுடியாது. ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் பெறமுடியாது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இத்தா பற்றிய விளக்கம்
ஆனால், மனைவி கணவனைப் பிரிவதென்றால் அவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதேவேளை, “குல்உ” செய்த பெண் ஒரு மாதவிடாய்க் காலம் “இத்தா” இருந்தால் போதுமானதாகும். தாபித் பின் கைஸின் மனைவியிடம் நபி(ஸல்) அவர்கள் ஒரு “ஹைழ்” வரும் வரை “இத்தா” இருக்குமாறு கூறினார்கள். (நஸாஈ)
இந்த ஹதீஸின் அடிப்படையில் “குல்உ” செய்த பெண் ஒருமாதத் தீட்டு ஏற்படும் வரை “இத்தா” இருந்தால் போதுமானது. இதேவேளை, இவள் மீண்டும் அந்தக் கணவனுடன் சேர்ந்துவாழ முடியாது.
இதே கருத்தைத்தான் உஸ்மான்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), அர்ருபைப் பின்து முஅவ்வித்(ரலி) போன்றோர் கொண்டுள்ளனர்.
இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இந்த 4 ஸஹாபாக்களின் கூற்றுக்கு ஏனைய நபித்தோழர்களிடம் மாற்றுக்கருத்து இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறுகின்றார்கள். இமாம்களில் அஹ்மத் இப்னு ஹம்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, இப்னு தைமிய்யா போன்றோரும் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகின்றனர். எனவே, “குல்உ” செய்த பெண் ஒரு “ஹைல்” ஏற்படும் வரை “இத்தா” இருந்தால் போதுமானதாகும். (அல்லாஹு அஃலம்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் “குல்உ” செய்த பெண் ஒருமாதத் தீட்டு ஏற்படும் வரை “இத்தா” இருந்தால் போதுமானது. இதேவேளை, இவள் மீண்டும் அந்தக் கணவனுடன் சேர்ந்துவாழ முடியாது.
இதே கருத்தைத்தான் உஸ்மான்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), அர்ருபைப் பின்து முஅவ்வித்(ரலி) போன்றோர் கொண்டுள்ளனர்.
இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இந்த 4 ஸஹாபாக்களின் கூற்றுக்கு ஏனைய நபித்தோழர்களிடம் மாற்றுக்கருத்து இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறுகின்றார்கள். இமாம்களில் அஹ்மத் இப்னு ஹம்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, இப்னு தைமிய்யா போன்றோரும் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகின்றனர். எனவே, “குல்உ” செய்த பெண் ஒரு “ஹைல்” ஏற்படும் வரை “இத்தா” இருந்தால் போதுமானதாகும். (அல்லாஹு அஃலம்)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» முழுமையான நோன்பு பற்றிய விளக்கம்
» மூட்டு வலி பற்றிய விளக்கம்
» அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்
» சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
» Ubuntu பற்றிய விளக்கம் தரவும்
» மூட்டு வலி பற்றிய விளக்கம்
» அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்
» சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
» Ubuntu பற்றிய விளக்கம் தரவும்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|