ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

3 posters

Go down

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் Empty ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by balakarthik Sat May 15, 2010 6:17 pm

அன்று எங்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு மின்னியல் துறைக்கும், மூன்றாமாண்டு இயந்திரவியல் துறைக்கும் கிரிக்கெட் போட்டி. ஏழு ஒரு நல்ல ஸ்பின்னர். சொல்லப் போனால் நாங்கள் இறுதிப் போட்டி வரை வந்ததற்கு முழுக் காரணமும் அவன் தான். எங்கள் கெட்ட நேரம் அதற்கு முந்தைய இரவு தலை ஃபுல் மப்பு. வழக்கம் போல காலையிலும் போதையுடனே கிரவுண்டிற்கு வந்தான். பாலாஜிதான் அணி கேப்டன்.
மச்சி. டாஸ் போடப் போறாங்க. என்ன எடுக்கலாம் என்றான் பாலாஜி.
மறக்காம டாஸ் போட்ட காச எடுத்துட்டு வந்துடு மச்சி என்ற ஏழுவை மிதித்துவிட்டு டாஸ் தோற்க சென்றான் பாலாஜி.
நான் ஏழுவிற்கு மோரும், மற்றவர்களும் ஆரஞ்சு ஜூசும் வாங்கி வந்தேன். மோரை குடித்த ஏழு கேட்டான் ஒரு கேள்வி ”இதுக்கு ஏன் ஆரஞ்சுன்னு பேரு வந்தது தெரியுமா?”
தல ஃபுல் ஃபார்மில் இருந்தத்தை அறிந்த நான் நீயே சொல்லு என்றேன்.
அதுக்குள்ள பதினோரு சுளை இருக்கும் மச்சி. ஆறும் அஞ்சும் பதின்னொனுதானே என்றவனை அடிக்கும் நிலையில் நானின்ல்லை. அவனை நம்பித்தானே மேட்ச்சே இருக்கு. டாஸ் தோத்த பாலாஜி வந்தான். “மச்சி.பவுலிங். ஓக்கேதானே?”
30 ரன் எடுத்த மேட்ச்சில் கூட ஏழு ஏழு விக்கெட் எடுத்து ஜெயிக்க வைத்தான். அப்படியிருக்க பாலாஜி டாஸ் வென்று பவுலிங் எடுக்க வாய்ப்பில்லை என்பதை நாங்களறிவோம். கையில் மோர் பாக்கெட்டுடன் களமிறங்கிய ஏழு சொன்னான் “பெப்சி கோக்குன்னு விளம்பரத்தில் வர வேண்டியவனை மோருக்கு ஆக்ட் பண்ண வச்சிட்டியேடா. அட்லீஸ்ட் ஒரு சன்ரைஸ்க்காவது விளம்பரம் பண்ணியிருக்கலாம்
முதல் ஓவரை வீச சென்றான் பாலாஜி. ஃபீல்டிங் செட்டப் செய்து கொண்டிருந்தான். ” ஏழு.ஸ்லிப்புல நில்லு” என்று கத்தினான்.
நானே நிக்க முடியாம ஸ்லிப் ஆயிட்டு இருக்கேன்.கேட்ச்ச விட்டா பர்வால்லையா என்று வடிவேலுவைப் போல கேட்டான்.
கடுப்பேத்தாத.ஃபைன் லெக்லயாவது நில்லு.
லெக்கு சரியா நிக்க மாட்டேங்குது. அதான் மச்சி பிரச்சினை.
சரி.பாயிண்ட்டுல நில்லு.
எவன்டா இவன். லெக்லயே நிக்க முடியலன்னு சொல்றேன். நீ வேற பாயிண்ட்டுல நிக்க சொல்ற. நான் என்ன சர்க்கஸ்காரனா என்றவனை முறைத்துக் கொண்டே எங்கேயாச்சும் நில்லு என்றான் பாலாஜி.
நாலு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள். ஏழு பால் போடு என ஏழுவை அழைத்தான் பாலாஜி. படு ஸ்டைலாக நடந்து வந்து பந்தை வாங்கிய ஏழு அமபையரிடம் சென்று எஸ்.பி என்று சொல்லிவிட்டு முதல் பந்தை போட்டான்.நோ பால் என்ற அம்பையர் காட்(guard) சொல்லவில்லை என்றார். சண்டைக்கு சென்றான் ஏழு,
நான் ஹாஃப் ஸ்பின்னர். அதுக்குத்தான் எஸ்.பி(SP) ன்னு சொன்னேனே என்றவனை அங்கேயே அடித்தான் பாலாஜி. ஒழுங்க காட் சொல்லிட்டு போடு என்று மிரட்டி நகர்ந்தான். அவன் காதில் விழும்படி சத்தமாக சொன்னான். “முருகன், பிள்ளையார், ஜீஸஸ்”.
பின் பாலாஜி வந்து கெஞ்சிக் கேட்டவுடன் ரைட் ஆர்ம் ஆஃப் ஸ்பின் என்று சொல்லிவிட்டு முதல் பந்திலே விக்கெட் எடுத்தான். சந்தோஷத்தில் துள்ளியது எங்கள் டீம். அந்த ஓவரில் மீதிப் பந்துகளில் ரன் ஏதும் அடிக்கவில்லை. ஆறு பந்து முடிந்ததும் ஏழு ஏழாவது பந்தை வீச வேண்டும் என்று அடம் பிடித்தான். ஏண்டா என்று ஓடிவந்தான் பாலாஜி சோகமாக.
நீதானே மச்சி. ஏழு பால் போடுன்னு முதல்ல சொன்ன. ஆறு பால் தான் ஆயிருக்கு என்றவனிடம் என்ன சொல்ல முடியும்? கோச்சிக்கிட்டு விக்கெட் எடுக்கவில்லை என்றால் பாலாஜியை காய்ச்சி விடுவார்கள். பாலாஜியை ஓரங்கட்டி விட்டு நானே ஏழுவை சமாளித்து போட வைத்தேன். எதிரணியை 62க்கு சுருட்டினோம்.
பிரேக்கில் வெஜ் ,நான் வெஜ் என இரண்டும் இருந்தது. நான் வெஜிட்டேரியன் என்றபடி வந்த ஏழுவை எங்கள் வகுப்பிற்கு கோவையில் இருந்து வந்த புது ஃபிகரான மாமி வந்து வாழ்த்தியது. குதுகலித்த ஏழு சாப்பிடறியா என்றான். ம்ம்ம் நான் சைவம் என்றது அந்தச் சிலை. நானும்தான் என்றான் ஏழு.
நான் வெஜ் சொன்னிங்க இப்போ.
அப்போ Non veg. இப்போ நான் veg என்றான்.
எப்பவுமே Naan veg தான்டா என்ற என்னைப் பார்த்து ஹாய் என்றாள். வளராத தாடியைத் தடவிக் கொண்டே நகர்ந்த ஏழு புலம்பினான் “gap விட மாட்டேனே.புதுசா ஒன்னு வந்து உடனே புடிச்சுடுவான்” என்றவன் காதில் சொன்னேன்
”Spinners seldom get new ball da”


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் Empty Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by balakarthik Sun May 16, 2010 1:52 pm

அன்று வழக்கம்போல தேவி பாரில் பீராபிஷேகம் முடிந்து, தேவி பேரடைசில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்ற அந்தக் காவியத்தை அரை மப்பிலும் முழுமையாக கண்டு களித்தார் ஏழு. அரங்கிற்குள் பாலாஜி மறைத்து எடுத்து வந்த பியர் பாட்டில் ஏழுவின் கண்களில் பட்டுவிட, எங்களை ஏமாற்றி அதில் பாதியை அடித்து விட்டான். வெளியே வந்தவன் அடுத்தக் காட்சிக்காக நின்றுக் கொண்டிருந்தவர்களிடம் சென்றான்.

அய்யா.அம்மா.. கெஞ்சிக் கேட்டுக்கறேன். இந்தப் படத்துக்கு மட்டும் போயிடாதீங்க.

ஏண்டா இப்படி செய்ற என்று அடித்து இழுத்து வந்தான் ஆறு. செஞ்ச பாவத்த இப்படியாவது கழுவிக்கலாம்ன்னு பார்த்தேன் மச்சி என்றான்.

வெளியே வந்தவனை பஸ்ஸில் ஏற்றுவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. இவன் ஏறும்போது கண்டக்டர் சாந்தி எல்லாம் இறங்கு என்று கத்திக் கொண்டிருந்தார். எதிரில் இறங்கிய ஃபிகரிடம் கேட்டார் ஏழு

சிஸ்டர். உங்க பேரு சாந்தியா?.

முறைத்துக் கொண்டே சென்றாள் சாந்தி. ச்சே. ஃபிகர். ச்சே. அந்தப் பெண். பஸ்சில் கொஞ்சம்தான் கூட்டம் என்றாலும் நாங்கள் அனைவரும் ஃபுட்போர்டிலே நின்றுக் கொண்டிருந்தோம். ஏழுவும் எங்களோடு வந்து சேர்ந்துக் கொண்டான். கையிலிருந்த புத்தகத்தை ஜன்னலோர ஆண்ட்டியிடம் கொடுத்தான். அவரும் முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டார்.

ஃபுட்போர்டுல நிக்கறவங்க டிக்கெட் எடுத்தாச்சா? ரெட் சட்டை..(ஏழுவைத்தான்)எங்க போறீங்க என்றார் கண்டக்டர்.

டிக்கெட் எடுத்தா நான் சொர்க்கதுக்கு. இவனுங்க எல்லாம் நரகத்துக்கு என்றான் ஏழு.

மெலிதாக சிரித்த கண்டக்டர், சொல்லுப்பா. அடுத்த ஸ்டாப்புல செக்கிங் இருக்காங்க. எங்க போனும் என்றார்.

ஹாஸ்டலுக்கு என்றான் ஏழு.

நக்கலா?இந்த முறை முறைந்துக் கொண்டே சொன்னார்.

ஆறு..அடையாறு.. மானிக் பாட்ஷா ரேஞ்சில் சொன்னான் ஏழு.

எத்தனை?

அதான் சொன்னேனில்ல. ஆறு.. அடையாறு.. என்றான் மீண்டும்.

24 ரூபாய் என்றபடி கைகளில் டிக்கெட்டை திணித்தார். 24 ரூபாயா என்று அலறியவன் கண்டக்டரிடம் கெஞ்சினான்.

சார். நான் ஸ்பான்சர்ஷிப்ல படிக்கிறேன் சார். எங்கம்மா கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைக்கறாங்க சார். இவ்ளோ காசு கொடுக்க முடியாது. கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க சார்.

கடுப்பான கண்டக்டர் எங்களை முறைத்தார். நரகத்துக்கு போவாங்கன்னு சொன்னா சிரிக்கறியா? மவனே அவன்கிட்ட மாட்டிட்டு சாவுன்னு மனதுக்குள் நினைத்துக் கொண்டு திரும்பி விட்டோம்.

டிக்கெட் எடுக்கலன்னு அடுத்த ஸ்டாப்புல புடிச்சிட்டா போச்சு. எங்கிட்டவே விளையாடறிங்களான்னு எஸ்.கேனார்(அதாங்க.. பொலம்பினார்) அவர்.

கட்டண உயர்வை எதிர்த்து நூதன முறையில் மாணவர்கள் போராட்டம் என்று சொன்ன ஏழு, “தமிழக அரசே தமிழக அரசே: என்றுக் கத்த தொடங்கியதும் ஆறுவிற்கு உதற தொடங்கியது. அவனே பணத்தைத் தந்தான். ஏழுவிடன் நோட்டைக் கொடுத்த ஆண்ட்டி, இது என்ன வெயிட்டாவா இருக்கு? கைல வச்சிக்க முடியாதான்னு கோவத்துடன் தந்தது.

நோட்டை வாங்கிய ஏழு சொன்னான்,” நாங்க மெக்கானிக்கல் ஸ்டூண்ட்ஸ் ஆண்ட்டி. மெக் வெய்ட்டு தெரியுமில்ல”

டேய்.பேசஞ்சர் கிட்ட கலாட்டா பண்ணா போலிஸ் ஸ்டேஷன்தான் போகனும் என்றார் கண்டக்டர்.

மச்சி. நம்மள எல்லாம் படிச்சு என்னத்த கிழிச்ச கேட்கறாங்களே. இவர கண்டக்டர் ஆகி என்னத்த கிழிச்சன்னு கேட்கவே முடியாதில்ல என்றான்.

கடுப்பான அவர், டிரைவரிடம் வண்டியை போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓட்ட சொன்னார். அந்த ரூட்டில் எந்த போலிஸ் ஸ்டேஷனுல்ம் இல்லை என்பதை அறிந்து சிரித்துக் கொண்டிருந்தோம் நாங்கள்.

உங்க ஃபோன் நம்பர் கொடுங்கண்ணா. இது ஏழு

எதுக்குடா? சும்மா வாயா மூடிட்டு வா என்றான் ஆறு.

இல்ல மச்சி. எத்தனை நாள்தான் கண்டக்டராவே இருப்பாரு. நாம ஒரு கால் போட்டா கண்”டா”க்டர் ஆயிடுவாரில்ல என்ற ஏழுவின் அறிவு செறிந்த ஜோக்கு புரியாமல் விழித்தார் நடத்துனர்.

மச்சி இப்படியே பேசிட்டு இரு. உன்னை ட்ரங்க அண்ட் ட்ரைவ்ல புடிச்சி உள்ளப் போட போறாங்க என்றேன் நான்.

டிரைவர் தான்டா ஓட்டறாரு. என்னை ஏன் புடிப்பாங்க?

நீயும் தண்ணியடிச்சிட்டு எல்லோரையும் ஓட்டிட்டுத்தானே வற்ர என்ற என்னை அடிக்க மொத்த குழுவும் துரத்தியது.


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் Empty Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by கலைவேந்தன் Sun May 16, 2010 2:06 pm

நலலா அருமையா கதை நகர்த்தும் விதம் கண்டு அதிசயிக்கிறேன்..

கிரிக்கெட் பற்றிய அறிவு இருப்பதால் முதல் கதையை நன்கு ரசிக்க முடிந்தது...

இளசுகளின் இரண்டாவது கொட்டம் யதார்த்தமாக இருந்தது,,,

இது எல்லாம் உங்கள் சொந்த அனுபவம் போல தெரிகிறது கார்த்திக்...

அசத்துறீங்கப்பு...

புதிதாக எதுவும் பதிவிடும் போது எனக்கு ஒரு தனிமடல் அலர்ட் கொடுங்க கார்த்திக்...

மிஸ் பண்ணாம முதல் ஆளா படிக்க ஆசை...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் Empty Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by balakarthik Sun May 16, 2010 2:08 pm

கலை wrote:நலலா அருமையா கதை நகர்த்தும் விதம் கண்டு அதிசயிக்கிறேன்..

கிரிக்கெட் பற்றிய அறிவு இருப்பதால் முதல் கதையை நன்கு ரசிக்க முடிந்தது...

இளசுகளின் இரண்டாவது கொட்டம் யதார்த்தமாக இருந்தது,,,

இது எல்லாம் உங்கள் சொந்த அனுபவம் போல தெரிகிறது கார்த்திக்...

அசத்துறீங்கப்பு...

புதிதாக எதுவும் பதிவிடும் போது எனக்கு ஒரு தனிமடல் அலர்ட் கொடுங்க கார்த்திக்...

மிஸ் பண்ணாம முதல் ஆளா படிக்க ஆசை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் Empty Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by சரவணன் Sun May 16, 2010 3:27 pm

நல்ல நகைச்சுவை உணர்வோடு உள்ளது,
மனமார்ந்த வாழ்த்துகள் & பாராட்டுக்கள்!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல் Empty Re: ஏழுவின் ஐ.பி.எல் அல்ல, இது இ.பி.எல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum