ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்ஷய திருதியை ! 29-04-2017

+12
monikaa sri
பிஜிராமன்
sgprabu85
பூஜிதா
கே. பாலா
ஹாசிம்
சம்சுதீன்
சரவணன்
அன்பு தளபதி
எஸ்.அஸ்லி
சிவா
krishnaamma
16 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Sat May 15, 2010 1:12 am

First topic message reminder :

அக்ஷய திருதியை  கொண்டாடுவது எப்படி என்பதை இங்கு காண்போம்.

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 JRMDCP3HQ6mBCVq4IWZp+sb1

சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெருக்கி விட்டனர். இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற
உலோகமான தங்கத்தை வாங்குவது சிறபென்று ஒரு ஐதிகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை.

(மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள். ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ஆகாதா? பொது மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.)

ஆல மர இலை யில்  மிருதுஞ்சய மந்திரத்தை ஜபித்து வியாதி யச்தேர்கள் தலையணை அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும்.

குழந்தைகள் தலையணை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும்.

இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய முக்கய கடமை என்னவென்றால் அது பெரியோரயும் பித்ருகளையும் வணங்குவது தான்.

இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது மிக நல்லது.

சத்ரு சாந்தி பூஜிக்கும் இது சிறந்த நாளாக கருதப்படுகிறது.

மிருத sanjevini மந்த்ரம் தெரிந்தவர்கள் அதை நெறைய ஜபிக்கலாம்.  இதனால் வியாதிகளின்
வீரியம் குறையும்.

கீழுள்ள  விவரங்களை இன்று ( 17-4-2015) இணைத்துள்ளேன் புன்னகை

1. ஆலமர இலையில் மிருத்யுஞ்ஜய
மந்திரத்தை ஜபித்து வியாதிஸ்தர்களின்
தலையணையின் அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும். குழந்தைகளின் தலையணைக்கடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும.

2. இந்த நன்னாளில் நாம் செய்ய
வேண்டிய முக்கியக் கடமை பெரியோர்களை வணங்கி ஆசியைக் பெருதல் ஆகும்.

3. அன்றையதினம் மகாலட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.

4. சத்ரு சாந்தி பூஜைக்கும் இந்நாள்
உகந்தது.

5. மிருத சஞ்ஜீவனி மந்திரம் தெரிந்தவர்கள், அட்சய திருதியதினத்தில் அதை நிறைய ஜபிக்கலாம். இதனால்
வியாதிகளின் வீரியம் குறையும்.

6. இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பென்று ஒரு ஐதீகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று
கூறுவது பேதமை.

7. ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும்.

எனவே, நம்மால் முடிந்தவரை ஏழைகளுக்கு
கொடுத்து உதவுங்கள்.அட்சய திருதியை கொண்டாடுங்கள் !!

இந்த நாந்நாளில் ஏழைகளுக்கு தானம் செய்வது மிக மிக சிறந்தது.

எனவே கண்டிப்பாக இதை செய்வோம், அவர்கள் வாழ்த்து நம்மை செலவசெழிப்போடு வாழவைக்கும்...... வியாபாரிகளின் வார்த்தைகளை நம்பி அதிக விலை கொடுத்து தங்கம் வாங்காதீர்கள் ! புன்னகை


Last edited by krishnaamma on Fri Apr 17, 2015 1:17 pm; edited 2 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Fri May 06, 2011 12:16 pm

அட்சய திருதியை நாளில் மற்ற சில முக்கியமான நிகழ்வுகள்:

1. திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர்"அட்சயவஸ்திரம்"அளித்ததாக வியாசர் கூறுகின்றார்.

2. மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்த நாள், அட்சய திருதியை. அதனால் இந்த நாள் திருமணத்திற்கு உகந்தது என்பர் பெரியோர்.

3. இந்நன்னாளில்தான் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்
பிறந்ததினால் அன்று "பரசுராம ஜயந்தி"யும் கொண்டாடப்படுகிறது.

4. நான்முகனாகிய பிரம்ம தேவன் இந்த பூமியை படைத்தது இந்த நாளில்தான்.

5. மகாபாரத காலத்தில் சூரியன் ஒரு அட்சய பாத்திரத்தை திரௌபதிக்குக் கொடுத்தான். அதுவும் இதே நாளில்தான்.

6. காசி அன்னபூரணி சிவ பெருமானுக்கு
அன்ன பிக்ஷை அளித்ததும் ஐஸ்வ்ர்ய
லக்ஷ்மி உதயமானதும் இதே நாளில்தான்.
7. குசேலர் கிருஷ்ணருக்கு அவல் கொடுத்ததும் இந்த நாளில் தான்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Fri May 06, 2011 12:17 pm

அட்சயம் என்றால், ‘வளருதல்’ என்று பொருள். சித்திரை மாதம், வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை. இந்த நாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் சிறப்புதான். அன்று, தான தர்மம், புதுக் கணக்கு ஆரம்பம், கல்வித் துவக்கம், விரதம், தெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்வது உத்தமம். இப்படிப்பட்ட அட்சய திருதியைப் பற்றி புராணக் கதைகள் பல உண்டு.

ஏழ்மையில் வாடிய ஸ்ரீ கிருஷ்ணரின்
நண்பர் குசேலர், ஒரு பிடி அவலை எடுத்துத் தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை
சந்திக்கச் சென்றார். குசேலரை வரவேற்று உபசரித்த கண்ணன், அந்த அவலை எடுத்துச் சாப்பிட்டபடி, ‘‘அட்சயம்!’’ என்றார். உடனே, குசேலரின் குடிசை, மாளிகை ஆனது; குசேலர் ‘குபேர சம்பத்து’ பெற்றார். குசேலருக்கு, கண்ணன் அருள் புரிந்தது அட்சயத் திருதியை திருநாள் ஆகும்.

கண்ணபிரான் அட்சய திருதியைப் பற்றி, தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. அந்தக் கதை:

சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சய திருதியையின்போது புனித நதியில் நீராடி, இயன்றளவு தான தர்மங்கள் செய்தான். இதனால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சய திருதியை திருநாளில் தான தர்மங்கள், யாகம் ஆகியவற்றைச் செய்து மென்மேலும் சிறப்பு பெற்றான். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சய திருதியை அன்று புனித நதியில் நீராடி, தான தர்மங்கள் செய்தால் உடல் பிணிகள் நீங்கும்.

இந்த நன்னாளில் சிவபார்வதி, ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீலட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்று பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிராத்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ண கௌரி என்ற விரதம் கடைப் பிடிக்கிறார்கள்.

அன்று, கௌரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவ தாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக ஸ்ரீவிநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

ஸ்ரீபரசுராமர் அவதரித்ததும், கிருத யுகம் தோன்றியதும் இந்த அட்சய திருதியை திருநாளில்தான். அட்சய திருதியை அன்று ஏழைக்கு ஆடை தானம் அளித்தால் மறுபிறவியில் ராஜ வாழ்வு கிட்டும்.

தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள் அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, அதை விடுத்து தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது எனறு நினைப்பது எந்த விதத்தில் சரி?

வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்ய முடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் தடாலடியாக நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம் பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அழியும் பொருளை வாங்க தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் - இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடு வேள்விகளிலும் மனதை செலுத்த முன்வரவேண்டும். தம்மை விட ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாக ஆகிவிடக்கூடாது நம் வாழ்க்கை.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது போய் ஆடிக்கழிவு என்று ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் அட்சய திருதியையின் உண்மையான நோக்கத்தை மக்கள் என்று புரிந்து கொள்ளப்போகிறார்களோ?

அட்சய திருதியை ஒட்டி நகை வாங்கினால் செல்வம் சேருமா?
சென்ற ஆண்டு நகை வாங்கியவர்களுக்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தது?

தமிழகத்தில் இப்படி என்றால் மத்தியப் பிரதேச மக்கள் அதையும் தாண்டி ஒரு படி மேலே போய்விட்டார்கள். அட்சயத் திருதியை தினம் நகை வாங்க உகந்த நாள் என்று தமிழகத்தில் கருதப்படுவது போல, ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநில மக்களுக்கு அந்த நாள் வேறு எந்த நாளைக் காட்டிலும் சுபமுகூர்த்த நாள் என்கிற எண்ணம் அதிகம். "சரி திருமணம்தானே! நடக்கட்-டுமே, நல்லதுதானே!' என்கிறீர்களா? அதுதான் இல்லை. . அத்தனையும் "பால்ய விவாகம்' எனப்படும் குழந்தைத் திருமணங்-கள். பத்து வயது, ஏழு வயது, ஆறு வயது, ஏன் மூன்று வயதுக் குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்து மகிழ்கிறார்கள் அந்த மாநில மக்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Fri May 06, 2011 12:19 pm

அட்சய
திருதியையில் என்ன செய்ய வேண்டும்?
அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள்
கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின்
(சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன
“விருந்தோம்பலை”க் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி
தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி
சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை
வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட
தொடங்கிவிட்டார்கள்.

தானம் போற்றுவோம்

பண்டிகைகளின் உண்மையான
நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால்
அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள்
ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து "அட்சயதிருதியை"
கொண்டாடுங்கள்.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by பூஜிதா Fri May 06, 2011 12:27 pm

பயனுள்ள தொகுப்பு நன்றிகள் பல
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by sgprabu85 Fri May 06, 2011 1:00 pm

மகிழ்ச்சி மிக மிக மிக மிக மிக அழகிய தகவல்கள் (தங்கம் போல)
sgprabu85
sgprabu85
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 18/04/2011

http://www.sgprabu85.blogspot.com , vedicresearch.blogspot.com

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma Fri May 06, 2011 1:10 pm

[quote="sgprabu85"] குஓட்டே
மறுபடி தங்கமா ? புன்னகை நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by பிஜிராமன் Fri May 06, 2011 2:09 pm

அக்ஷ்ய திருதி
எனக்கொரு கேள்வி......இந்த நாள் அன்று.....தங்கம் வாங்க வேண்டும் என்பது.....எப்போது இருந்து நடை முறையில் உள்ளது......என்று யாராவது......விளக்கினால்.....மகிழ்வேன்......
நன்றி கிருஷ்ணா


Last edited by pgraman on Fri May 06, 2011 7:34 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by கே. பாலா Fri May 06, 2011 7:26 pm

krishnaamma wrote:நன்றி பாலா புன்னகை நானே செய்யவேண்டும் என் நினைத்தேன் நீங்கள் செய்து விட்டீர்கள் . ரொம்ப நன்றி புன்னகை
அம்மா பரவாயில்லை ! நல்லது சொல்லத்தானே நாம் இருக்கிறோம்! அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 678642
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by கே. பாலா Fri May 06, 2011 11:17 pm

அட்சய திருதியை தங்க விற்பனை குறைந்தது!
இந்த ஆண்டு தங்கம் 5000 கிலோ விற்கப்பட்டது .
கடந்த ஆண்டு இது 7000 கிலோவாக இருந்தது . சென்னையில் மட்டும் இன்று 2400 கிலோ தங்கம் விற்பனையானது!


source: Sunnews: 11.00 pm today
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by அன்பு தளபதி Sat May 07, 2011 10:26 am

பிஜிராமன் wrote:அக்ஷ்ய திருதி
எனக்கொரு கேள்வி......இந்த நாள் அன்று.....தங்கம் வாங்க வேண்டும் என்பது.....எப்போது இருந்து நடை முறையில் உள்ளது......என்று யாராவது......விளக்கினால்.....மகிழ்வேன்......
நன்றி கிருஷ்ணா

இங்கே சென்று பாருங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 3 Empty Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum