ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவத்துப் பிரச்சினைகள்

Go down

பருவத்துப் பிரச்சினைகள் Empty பருவத்துப் பிரச்சினைகள்

Post by சம்சுதீன் Sat May 15, 2010 12:20 am

பருவத்துப் பிரச்சினைகள் Sad-boy-thumb255970பருவத்துப் பிரச்சினைகள் Sadboythumb255970
பருவத்துப் பிரச்சினைகள் Sad-boy-thumb255970
பருவத்துப் பிரச்சினைகள் Sad-boy-thumb255970
இந்த உலகில் மனிதர்களாகப் பிறந்த
ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்கள்-சிறியவர்கள், பெண்கள்-ஆண்கள்,
திருமணம் ஆனவர்கள்-ஆகாதவர்கள், ஏழைகள்-பணக்காரர்கள், படித்தவர்கள்-படிக்காதவர்கள்,
வேலைக்கு செல்பவர்கள்-சுயதொழில் செய்பவர்கள் என எல்லோரையும் இந்த பிரச்சினை என்னும்
பெரும்பூதம் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. இதில் பிரச்சினைகளால் அதிகம்
பாதிக்கப்படுபவர்கள் பெண்களே! அதிலும் குறிப்பாக விடலைப்பருவம் என்று சொல்லக்கூடிய
பருவ வயதுகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லி
மாளாதவை.

விடலைப்பருவம் என்பது மகிழ்ச்சியும், பரவசமும் கலந்த உன்னதமான
பருவம் என்றாலும், உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இந்தக்
காலத்தில் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் என
எல்லாவற்றிலுமே மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும்
சில மாற்றங்களைக் கண்டு கூச்சமடைவதுடன், ஒருவிதமான பயமும், தயக்கமும் அவர்களை
ஆட்கொள்கின்றன.

பூப்படைதல், முகப்பரு, மாதவிடாய் பிரச்சினைகள்,
களைப்பு, உடல் பருமன் போன்ற உடலியல் ரீதியான மாற்றங்களில் ஏராளமான சந்தேகங்கள்
வந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கம் இல்லாமல் பேச,
ஒரு விசேஷ வழிகாட்டி தேவைப்படும் பருவமிது. இந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது மன
ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் குழப்பங்களுக்கு
ஆளாகிறார்கள்.


இந்த நிலையில்தான் தீய நண்பர்களின் சகவாசத்தால் போதை,
பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது.
இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. குறுக்கு
வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்களின் தவறான விளம்பரங்கள்
பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.


பெரும்பாலும் நான் அழகாக
இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல்
துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன
போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன. நாளாக நாளாக கவலைகளின்
எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு
ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம்
இருந்து விலகத் தொடங்குகிறார்கள். இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே,
அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர
வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.


இந்தப் பருவத்தில்
தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப்
பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும், வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொண்டாலே
போதும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாகத்
தப்பிக்கலாம்.

பெரும்பாலான பெண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. அதிலும்
குறிப்பாக டீன்ஏஜ் வயதுகளில் உள்ளவர்கள் ‘ஸ்லிம்‘மாக இருந்தால்தான் அழகு என
நினைத்து பட்டினி கிடக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல்
ரத்த சோகை, அதிகப்படியான சோர்வு போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக
படிப்பில் நாட்டம் குறைவதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. தொடர்ச்சியான இந்த
தாழ்வு மனப்பான்மையால் மன அழுத்தம் உண்டாகி தனிமையை நாடுகின்றனர். எனவே சத்தான
காய்கறிகள், பழங்கள் சாப்பிட அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பருவத்துப் பிரச்சினைகள் Empty Re: பருவத்துப் பிரச்சினைகள்

Post by சம்சுதீன் Sat May 15, 2010 12:22 am

பருவத்துப் பிரச்சினைகள் Stockphoto-sadgirl_goly
ஒருவருக்கு அழகாய்த் தோன்றும் ஒன்று, மற்றவருக்கு அழகற்றதாய் தெரியலாம். எனவே அழகு
என்பது நம்மிடம் இல்லை, பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது என்பதை விளக்க
வேண்டும். உயரமாக இல்லாமல் குட்டையாக இருக்கிறோம் என்ற கவலை இவர்களே தானாக
வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு ஹார்மோன் கோளாறு,
உணவுப்பற்றாக்குறை... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு வளர்ச்சி தள்ளிப்
போவதும் உண்டு. இவர்கள் சில வருடங்கள் சென்றபின் வேகமாக வளர்ந்து, தங்களின் சராசரி
உயரத்தை அடைவர். இது தெரியாமல் அவர்கள் மனக்குழப்பங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை
வீணாக்குகின்றனர். எனவே ஒருவருக்கு அழகு மட்டும் முக்கியமல்ல. அறிவு, கடின உழைப்பு,
விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என்பதை உணர வைக்க வேண்டும்.

பருவ
வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம்
பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள் அது தொடர்பான புத்தகங்களை
அவர்களுக்கு படிக்கத் தரலாம். உடல் மாற்றங்கள், பழக்க வழக்கங்கள், சமூக, கலாச்சார
மாறுதல்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுதந்திரமாக பேச
வேண்டும். இவ்வாறு பேசுவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தயங்குகிறார்கள். நாமும்
பருவ வயதுகளில் கண்ணாடி முன்னால் நின்று நம்மை ரசிப்பதிலேயே பாதி நேரத்தை
செலவிட்டவர்கள் தானே! என்பதை நினைத்துப் பாருங்கள். தயக்கம் தானாகவே
ஓடிவிடும்.

கட்டுரையாளர்: அபராசிதன்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum