Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியத்துக்குரிய ரஹ்மானுக்கு...சாரு நிவேதிதா
5 posters
Page 1 of 1
பிரியத்துக்குரிய ரஹ்மானுக்கு...சாரு நிவேதிதா
பிரியத்துக்குரிய ரஹ்மானுக்கு...சாரு நிவேதிதா
May 10th, 2010
(28.4.2010 அன்று எழுதப்பட்ட இந்தக் கடிதம் தமிழ்நாட்டின் எல்லாப் பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டு மலையாள வாரப் பத்திரிகையான கலா கௌமுதியில் கவர் ஸ்டோரியாக இன்றைய தினம் வெளிவந்துள்ளது. மிகுந்த அவமானத்துடன் இதை இங்கே பதிவேற்றம் செய்கிறேன்).
அன்புள்ள ஏ.ஆர். ரஹ்மான்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு கால கட்டத்தில் இளையராஜாவின் இசை அதன் சத்தை இழந்து வெறும் சத்தமாக மாறிய போது ’சின்ன சின்ன ஆசை’யுடன் சினிமா இசையின் உள்ளே வந்தீர்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவே உங்களைக் கொண்டாடியது. அதிலிருந்து உங்களுடைய ராஜ்யம்தான். வாத்தியக் கருவிகளை இசைப்பவர்கள் உட்பட ஒரு பாடலின் உருவாக்கத்தில் யார்யாரெல்லாம் பங்கேற்கிறார்களோ அவர்கள் அனைவரின் பெயரும் உங்களால்தான் வெளியே தெரிய வந்தது. அதுவரை அவர்களின் பெயரை யாரும் போடுவதில்லை. உலக அளவில் பிரபலமான ட்ரம்ஸ் சிவமணியின் பெயரைக் கூட நீங்கள்தான் முதல்முதலில் ஆல்பத்தில் வெளியிட்டு கௌரவித்தீர்கள் என்று அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
நாடி வந்தவர்களுக்குத் தண்ணீர் கூட கொடுக்க மனம் இல்லாதவர்கள் பெருமளவில் நிறைந்திருக்கும் சினிமா உலகில் நீங்கள் வித்தியாசமாக இருந்தீர்கள். உங்களிடமிருந்துதான் தன்னடக்கம் என்ற பண்பைக் கற்றேன். உங்கள் ஆன்மீக ஈடுபாடு மனித நேயம் கொண்டதாக இருந்தது. உங்களிடமிருந்து அறிந்து கொண்ட பிறகுதான் நான் கடப்பா சென்று பெட்டா தர்காவில் அடங்கியிருக்கும் ஔலியாவை தரிசித்து வந்தேன். ’சகோதரனே, எனக்காகப் பிரார்த்தனை செய்’ என்ற ஆங்கிலப் பாடலில் உங்கள் மனித நேயம் வெளிப்பட்டது. அதைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அநேகமாக தமிழிலும், மலையாளத்திலும் என்னளவுக்கு உங்களைப் புகழ்ந்து எழுதியவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு உங்களுடைய ஒவ்வொரு படத்தைப் பற்றியும் இரண்டு மொழிகளிலும் எழுதி வருகிறேன். உங்கள் பெயர் ஆஸ்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதே உங்களுக்கு ஆஸ்கர் பரிசு கிடைக்கும் என்று எழுதினேன். இரண்டு பரிசுகள் கிடைத்தன.
உங்களுடைய திறமை வெளிப்பட தமிழை விட இந்தி சினிமா அதிக இடம் கொடுத்தது. ’ரங் தே பசந்தி’யிலிருந்து ’தில்லி 6’ வரை. மேலும், உங்கள் பாடல்களைக் கேட்கும் போது உலக இசையின் பல்வேறு வடிவங்களுடன் உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த பரிச்சயம் தெரிய வந்தது. ’ரங்க் தே பசந்தி’யின் ஒரு பாடலில் ரய் இசையின் சாயலைப் பார்த்தேன்.
’தில்லி 6’ இல் உங்கள் பாடல்களைக் கேட்டு கொண்டாடியிருக்கிறேன்; அதன் ’மோலா’ என்ற கவ்வாலியில் உருகியிருக்கிறேன்.
ஆனால் உங்களுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழில் முதல்முதலாக வந்த ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் உங்கள் இசை மிகவும் பலவீனமாக இருந்தது. ரோஸானா என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் கேட்கும்படியாகவே இல்லை.
அப்போது எனக்கு உங்கள் மீதான ஆர்வம் குறைந்தது. இனிமேல் நீங்களும் இளையராஜாவைப் போல் பென்ஷன் வாங்குவோர் பட்டியலில் சேர்ந்து விடுவீர்களோ என்று நினைத்தேன். இப்போது ’ராவண்’ பாடல்களைக் கேட்கும்போது அந்த சந்தேகம் வலுக்கிறது. நாராசமாக இருந்தன என்பதற்கு மேல் வேறு எதுவும் எழுத முடியவில்லை. உதாரணமாக, ’பெஹனே தே’ பாடலின் கடைசியில் வரும் கோரஸ் சகிக்க முடியாததாக இருந்தது. இதே போன்ற ஒரு கோரஸை ’குலால்’ படத்தின் ’ஆரம்ப்’ என்ற பாடலில் நீங்கள் கேட்கலாம். அந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஒரு காவிய உணர்வைக் கொண்டு வருவார் பியூஷ் மிஷ்ரா. அரசர் காலத்து சங்கின் முழக்கமும் எக்காளமும் பியூஷ் மிஷ்ராவின் குரலும் சேர்ந்து ஒரு மாபெரும் புரட்சியில் நாமே பங்கேற்பதைப் போன்ற ஒரு உணர்வைத் தருகிறது அந்தப் பாடல். ஆனால் ’குலால்’ படத்தின் பாடல்களுக்கு நிகரான பாடல்களுக்கு உரிய கதைக் களனையும் வாய்ப்பையும் கொண்டுள்ள ராவணில் நீங்கள் மிக பலவீனமான ஆட்டத்தை ஆடியிருக்கிறீர்கள். பியூஷ் மிஷ்ராவும்,
ரஹ்மான், நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? ராவணின் பாடல்களைத்தான் ’திருடா திருடா’விலேயே போட்டு விட்டீர்களே, இன்னும் ஏன் அந்தக் காலத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்?
’தேவ்.டி’யில் அமித் திர்வேதியும், ’குலாலி’ல் பியுஷ் மிஷ்ராவும், ‘இஷ்கியா’வில் விஷால் பாரத்வாஜும், ’லவ், செக்ஸ் ஔர் தோக்கா’வில் ஸ்நேகா கன்வல்கரும் இந்தித் திரையிசையில் செய்து கொண்டிருக்கும் புரட்சி பற்றி அறிவீர்களா? அந்தப் பாடல்களையெல்லாம் கேட்டீர்களா? அவர்களைத் தாண்டுவதாகக் கூட வேண்டாம்; அவர்களின் பக்கத்தில் கூட நீங்கள் செல்வதாகத் தெரியவில்லையே? ‘பா’வில் இளையராஜாவும், ‘ராவணி’ல் நீங்களும் கொடுத்திருக்கும் பாடல்களைப் பார்க்கும் போது நீங்கள் இருவருமே இருபது ஆண்டுகள் பின்தங்கி இருப்பது புரிகிறது.
இந்தத் தேக்கத்தை நீங்கள் நிச்சயமாகத் தாண்ட முடியும். அதற்கான தகுதியும் மேதமையும் உங்களுக்கு உண்டு. ஆனால், அதற்கு நீங்கள் கருணாநிதி எழுதிய ‘கவிதை’க்கெல்லாம் இசை அமைப்பதை நிறுத்தி விட்டு (அதற்கு இசையமைக்காவிட்டால் அவர் என்ன உங்களை ஜெயிலிலா போட்டு விடுவார்?) சில உலகத் தரமான இசைக் கலைஞர்களைக் கேட்க வேண்டும். ஷாப் ஹாஸ்னி (அல்ஜீரியா), நான்ஸி அஜ்ரம் (லெபனான்), ரிக்கார்தோ மொந்தனர் (அர்ஜெண்டினா), பின் நவீனத்துவ இசைக்கு ஐயானிஸ் ஸெனகிஸ் (க்ரீஸ்) என்று சில உதாரணங்களை சொல்ல முடியும்.
உங்கள் மீது மிகுந்த பிரியம் கொண்ட ஒருவனின் ஆதங்கமாகவே இதை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
சாரு நிவேதிதா
May 10th, 2010
(28.4.2010 அன்று எழுதப்பட்ட இந்தக் கடிதம் தமிழ்நாட்டின் எல்லாப் பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டு மலையாள வாரப் பத்திரிகையான கலா கௌமுதியில் கவர் ஸ்டோரியாக இன்றைய தினம் வெளிவந்துள்ளது. மிகுந்த அவமானத்துடன் இதை இங்கே பதிவேற்றம் செய்கிறேன்).
அன்புள்ள ஏ.ஆர். ரஹ்மான்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு கால கட்டத்தில் இளையராஜாவின் இசை அதன் சத்தை இழந்து வெறும் சத்தமாக மாறிய போது ’சின்ன சின்ன ஆசை’யுடன் சினிமா இசையின் உள்ளே வந்தீர்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவே உங்களைக் கொண்டாடியது. அதிலிருந்து உங்களுடைய ராஜ்யம்தான். வாத்தியக் கருவிகளை இசைப்பவர்கள் உட்பட ஒரு பாடலின் உருவாக்கத்தில் யார்யாரெல்லாம் பங்கேற்கிறார்களோ அவர்கள் அனைவரின் பெயரும் உங்களால்தான் வெளியே தெரிய வந்தது. அதுவரை அவர்களின் பெயரை யாரும் போடுவதில்லை. உலக அளவில் பிரபலமான ட்ரம்ஸ் சிவமணியின் பெயரைக் கூட நீங்கள்தான் முதல்முதலில் ஆல்பத்தில் வெளியிட்டு கௌரவித்தீர்கள் என்று அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
நாடி வந்தவர்களுக்குத் தண்ணீர் கூட கொடுக்க மனம் இல்லாதவர்கள் பெருமளவில் நிறைந்திருக்கும் சினிமா உலகில் நீங்கள் வித்தியாசமாக இருந்தீர்கள். உங்களிடமிருந்துதான் தன்னடக்கம் என்ற பண்பைக் கற்றேன். உங்கள் ஆன்மீக ஈடுபாடு மனித நேயம் கொண்டதாக இருந்தது. உங்களிடமிருந்து அறிந்து கொண்ட பிறகுதான் நான் கடப்பா சென்று பெட்டா தர்காவில் அடங்கியிருக்கும் ஔலியாவை தரிசித்து வந்தேன். ’சகோதரனே, எனக்காகப் பிரார்த்தனை செய்’ என்ற ஆங்கிலப் பாடலில் உங்கள் மனித நேயம் வெளிப்பட்டது. அதைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அநேகமாக தமிழிலும், மலையாளத்திலும் என்னளவுக்கு உங்களைப் புகழ்ந்து எழுதியவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு உங்களுடைய ஒவ்வொரு படத்தைப் பற்றியும் இரண்டு மொழிகளிலும் எழுதி வருகிறேன். உங்கள் பெயர் ஆஸ்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதே உங்களுக்கு ஆஸ்கர் பரிசு கிடைக்கும் என்று எழுதினேன். இரண்டு பரிசுகள் கிடைத்தன.
உங்களுடைய திறமை வெளிப்பட தமிழை விட இந்தி சினிமா அதிக இடம் கொடுத்தது. ’ரங் தே பசந்தி’யிலிருந்து ’தில்லி 6’ வரை. மேலும், உங்கள் பாடல்களைக் கேட்கும் போது உலக இசையின் பல்வேறு வடிவங்களுடன் உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த பரிச்சயம் தெரிய வந்தது. ’ரங்க் தே பசந்தி’யின் ஒரு பாடலில் ரய் இசையின் சாயலைப் பார்த்தேன்.
’தில்லி 6’ இல் உங்கள் பாடல்களைக் கேட்டு கொண்டாடியிருக்கிறேன்; அதன் ’மோலா’ என்ற கவ்வாலியில் உருகியிருக்கிறேன்.
ஆனால் உங்களுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழில் முதல்முதலாக வந்த ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் உங்கள் இசை மிகவும் பலவீனமாக இருந்தது. ரோஸானா என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் கேட்கும்படியாகவே இல்லை.
அப்போது எனக்கு உங்கள் மீதான ஆர்வம் குறைந்தது. இனிமேல் நீங்களும் இளையராஜாவைப் போல் பென்ஷன் வாங்குவோர் பட்டியலில் சேர்ந்து விடுவீர்களோ என்று நினைத்தேன். இப்போது ’ராவண்’ பாடல்களைக் கேட்கும்போது அந்த சந்தேகம் வலுக்கிறது. நாராசமாக இருந்தன என்பதற்கு மேல் வேறு எதுவும் எழுத முடியவில்லை. உதாரணமாக, ’பெஹனே தே’ பாடலின் கடைசியில் வரும் கோரஸ் சகிக்க முடியாததாக இருந்தது. இதே போன்ற ஒரு கோரஸை ’குலால்’ படத்தின் ’ஆரம்ப்’ என்ற பாடலில் நீங்கள் கேட்கலாம். அந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஒரு காவிய உணர்வைக் கொண்டு வருவார் பியூஷ் மிஷ்ரா. அரசர் காலத்து சங்கின் முழக்கமும் எக்காளமும் பியூஷ் மிஷ்ராவின் குரலும் சேர்ந்து ஒரு மாபெரும் புரட்சியில் நாமே பங்கேற்பதைப் போன்ற ஒரு உணர்வைத் தருகிறது அந்தப் பாடல். ஆனால் ’குலால்’ படத்தின் பாடல்களுக்கு நிகரான பாடல்களுக்கு உரிய கதைக் களனையும் வாய்ப்பையும் கொண்டுள்ள ராவணில் நீங்கள் மிக பலவீனமான ஆட்டத்தை ஆடியிருக்கிறீர்கள். பியூஷ் மிஷ்ராவும்,
ரஹ்மான், நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? ராவணின் பாடல்களைத்தான் ’திருடா திருடா’விலேயே போட்டு விட்டீர்களே, இன்னும் ஏன் அந்தக் காலத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்?
’தேவ்.டி’யில் அமித் திர்வேதியும், ’குலாலி’ல் பியுஷ் மிஷ்ராவும், ‘இஷ்கியா’வில் விஷால் பாரத்வாஜும், ’லவ், செக்ஸ் ஔர் தோக்கா’வில் ஸ்நேகா கன்வல்கரும் இந்தித் திரையிசையில் செய்து கொண்டிருக்கும் புரட்சி பற்றி அறிவீர்களா? அந்தப் பாடல்களையெல்லாம் கேட்டீர்களா? அவர்களைத் தாண்டுவதாகக் கூட வேண்டாம்; அவர்களின் பக்கத்தில் கூட நீங்கள் செல்வதாகத் தெரியவில்லையே? ‘பா’வில் இளையராஜாவும், ‘ராவணி’ல் நீங்களும் கொடுத்திருக்கும் பாடல்களைப் பார்க்கும் போது நீங்கள் இருவருமே இருபது ஆண்டுகள் பின்தங்கி இருப்பது புரிகிறது.
இந்தத் தேக்கத்தை நீங்கள் நிச்சயமாகத் தாண்ட முடியும். அதற்கான தகுதியும் மேதமையும் உங்களுக்கு உண்டு. ஆனால், அதற்கு நீங்கள் கருணாநிதி எழுதிய ‘கவிதை’க்கெல்லாம் இசை அமைப்பதை நிறுத்தி விட்டு (அதற்கு இசையமைக்காவிட்டால் அவர் என்ன உங்களை ஜெயிலிலா போட்டு விடுவார்?) சில உலகத் தரமான இசைக் கலைஞர்களைக் கேட்க வேண்டும். ஷாப் ஹாஸ்னி (அல்ஜீரியா), நான்ஸி அஜ்ரம் (லெபனான்), ரிக்கார்தோ மொந்தனர் (அர்ஜெண்டினா), பின் நவீனத்துவ இசைக்கு ஐயானிஸ் ஸெனகிஸ் (க்ரீஸ்) என்று சில உதாரணங்களை சொல்ல முடியும்.
உங்கள் மீது மிகுந்த பிரியம் கொண்ட ஒருவனின் ஆதங்கமாகவே இதை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
சாரு நிவேதிதா
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பிரியத்துக்குரிய ரஹ்மானுக்கு...சாரு நிவேதிதா
இன்று எந்த பக்கம் திரும்பினாலும் ராவணனின் இசையே ஒலித்துக்கொண்டு உள்ள
நேரத்தில் இப்படி ஒரு விமர்சனம் மனதுக்கு கஷ்டமளித்தாலும் அவரது ஆதங்கத்தை
புரிந்துகொள்ள முடிகிறது.
நேரத்தில் இப்படி ஒரு விமர்சனம் மனதுக்கு கஷ்டமளித்தாலும் அவரது ஆதங்கத்தை
புரிந்துகொள்ள முடிகிறது.
Re: பிரியத்துக்குரிய ரஹ்மானுக்கு...சாரு நிவேதிதா
பிரபலமானவர்களை குறைசொல்லி த்ன்னை பிரபலப்படுத்திக்கொள்ளும் கலாச்சாரம் தற்போது பெருகிவருகிறது..
மேற்படி கடிதத்தில் தனக்கு அதிக விடயங்கள் தெரியும் என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் பங்கே விஞ்சி நிற்பதாகப்படுகிறது..
சாரு, ஜெயமோஹன், ஞாநி போன்றோரால் சர்ச்சைகளின்றி உயிர்வாழ இயலாது.
மேற்படி கடிதத்தில் தனக்கு அதிக விடயங்கள் தெரியும் என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் பங்கே விஞ்சி நிற்பதாகப்படுகிறது..
சாரு, ஜெயமோஹன், ஞாநி போன்றோரால் சர்ச்சைகளின்றி உயிர்வாழ இயலாது.
Re: பிரியத்துக்குரிய ரஹ்மானுக்கு...சாரு நிவேதிதா
ஆமா ஆமா விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு நல்லாவே இல்ல..ராவணன் சுத்த மோசம்
...
ரஹ்மான் இருபது வருடம் பின்தங்கி இருக்கட்டும் ....ஒரு வேலை இப்படி
இருக்குமோ..சாறு யூத்தா இருக்குறப்ப ரெஹ்மான் பாடல் இனிமையாக
இருந்திருக்கலாம்.இப்போ வயசானதுனால பிடிக்காம போயிருக்கலாம்.எனா ஓல்ட் ஏஜ்
பீபிளுக்கு ரெஹ்மான் இசை பிடிக்காது .
ஆனால் எது எப்படியோ ..ரெஹ்மானின் வளர்ச்சிக்கு இந்த கடிதம் நிச்சயமாக ஒரு
தூண்டுதலா இருக்கும் .அதுவரைக்கும் மகிழ்ச்சி
...
ரஹ்மான் இருபது வருடம் பின்தங்கி இருக்கட்டும் ....ஒரு வேலை இப்படி
இருக்குமோ..சாறு யூத்தா இருக்குறப்ப ரெஹ்மான் பாடல் இனிமையாக
இருந்திருக்கலாம்.இப்போ வயசானதுனால பிடிக்காம போயிருக்கலாம்.எனா ஓல்ட் ஏஜ்
பீபிளுக்கு ரெஹ்மான் இசை பிடிக்காது .
ஆனால் எது எப்படியோ ..ரெஹ்மானின் வளர்ச்சிக்கு இந்த கடிதம் நிச்சயமாக ஒரு
தூண்டுதலா இருக்கும் .அதுவரைக்கும் மகிழ்ச்சி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Similar topics
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார் வாய்ப்பு
» நேனோ - சாரு நிவேதிதா
» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
» இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்!!
» சாரு நிவேதிதாவின் நாவல்கள்
» நேனோ - சாரு நிவேதிதா
» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
» இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்!!
» சாரு நிவேதிதாவின் நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|