Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
+6
ரிபாஸ்
கலைவேந்தன்
balakarthik
வேணு
சிவா
ARR
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
First topic message reminder :
திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
Last edited by ARR on Mon May 17, 2010 4:40 pm; edited 6 times in total
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாமாண்டு நினைவு தினக் கூட்டம் - பாமக புறக்கணிப்பு?
: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பாமக சார்பில் யாரும் பங்கேற்பதாக இதுவரை தெரியவில்லை.[b]
: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பாமக சார்பில் யாரும் பங்கேற்பதாக இதுவரை தெரியவில்லை.[b]
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அக்னி-2 ஏவுகணை நாளை சோதனை
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த அக்னி-2 ஏவுகணை நாளை பரிசோதித்துப் பார்க்கப்படவுள்ளது.
இந்த ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியதாகும். ஒரிசாவில் உள்ள ஏவுதளத்தில் இந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
வீலர் தீவிலில் வைத்து கடலில் ஏவி இந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்படும். எந்தத் தவறும் ஏற்படாத வகையில் பரிசோதனையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை படைத்த அக்னி-2 ஏவுகணை நாளை பரிசோதித்துப் பார்க்கப்படவுள்ளது.
இந்த ஏவுகணை 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியதாகும். ஒரிசாவில் உள்ள ஏவுதளத்தில் இந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
வீலர் தீவிலில் வைத்து கடலில் ஏவி இந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்படும். எந்தத் தவறும் ஏற்படாத வகையில் பரிசோதனையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
முத்துக்குமார் சிலை திறப்புக்கு போலீஸ் தடை..!
தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்துக்குமாரின் சிலையைத் திறக்க போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இதனால் சிலை அமைப்பாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஈழத் தமிழ் போராட்டம் தீவிரமாக இருந்தபோது சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்து உயிர் நீத்தார் முத்துக்குமார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பலர் தமிழகத்தில் உயிர் நீத்த சம்பவங்கள் நடைபெற்றன.
தற்போது முத்துக்குமாருக்கு தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு என்பவர், முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது.
இன்று(மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுடர் ஓட்டம் ஆரம்பித்து மாலை 5 மணிக்கு சிலை அருகே வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் சிலையை திறந்து வைக்கவிருந்தார். சிலை திறப்பு விழாவில் புலமைபித்தன், காசி ஆனந்தன், முத்துக்குமார் தந்தை குமரேசன், இயக்குநர் ராம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொள்வதற்காக அனைவரும் சிலை திறப்பு விழா இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.
ஆனால், இந்த சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்காததால் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் மட்டும் நடைபெறுகிறது.
தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்துக்குமாரின் சிலையைத் திறக்க போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இதனால் சிலை அமைப்பாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஈழத் தமிழ் போராட்டம் தீவிரமாக இருந்தபோது சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்து உயிர் நீத்தார் முத்துக்குமார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பலர் தமிழகத்தில் உயிர் நீத்த சம்பவங்கள் நடைபெற்றன.
தற்போது முத்துக்குமாருக்கு தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு என்பவர், முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது.
இன்று(மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுடர் ஓட்டம் ஆரம்பித்து மாலை 5 மணிக்கு சிலை அருகே வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் சிலையை திறந்து வைக்கவிருந்தார். சிலை திறப்பு விழாவில் புலமைபித்தன், காசி ஆனந்தன், முத்துக்குமார் தந்தை குமரேசன், இயக்குநர் ராம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொள்வதற்காக அனைவரும் சிலை திறப்பு விழா இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.
ஆனால், இந்த சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்காததால் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் மட்டும் நடைபெறுகிறது.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
அக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது (முழு விவரம்)
திரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதித்தது.ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை உலக அளவில் இந்தியாவுக்கு கூடுதல் மதிப்பை உயர்த்தும் என்றால் மிகையாக இருக்க முடியாது.
ஏனெனில் கடந்த மார்ச் மாம் விண்ணில் ஏவப்பட்ட அக்னி -1 ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது இது ( அக்னி -2 ) செல்லும் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டில் கடலில் உள்ள எதிரிகளின் இலக்கை கப்பலில் இருந்து தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி- 2 சிறியரக ஏவுகணை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மேலும் ஒரு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அக்னி- 2 ஏவுகணை அணுகுண்டை சுமந்து சென்று சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 17 டன் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் டன் எடையை சுமக்கும் வல்லமை கொண்டது. நமது இந்திய ராணுவ தொழில்படையினர் இந்த தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்தினர்.
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் : சொன்னதை செய்யும் கிளிப்புள்ள போல இந்த இடத்தை அழித்து விட்டு வா என்று அதற்கு கட்டளையிட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த முறை இன்று ( 17 ம் தேதி ) வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. பதிலுக்கு ஒரு ஏவுகணையை . பாகிஸ்தான் இப்போதே வண்ணம் பூச துவங்கியிருக்கும் என்பது சம்பிரதாயம்.
திரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதித்தது.ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை உலக அளவில் இந்தியாவுக்கு கூடுதல் மதிப்பை உயர்த்தும் என்றால் மிகையாக இருக்க முடியாது.
ஏனெனில் கடந்த மார்ச் மாம் விண்ணில் ஏவப்பட்ட அக்னி -1 ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது இது ( அக்னி -2 ) செல்லும் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டில் கடலில் உள்ள எதிரிகளின் இலக்கை கப்பலில் இருந்து தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி- 2 சிறியரக ஏவுகணை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மேலும் ஒரு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அக்னி- 2 ஏவுகணை அணுகுண்டை சுமந்து சென்று சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 17 டன் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் டன் எடையை சுமக்கும் வல்லமை கொண்டது. நமது இந்திய ராணுவ தொழில்படையினர் இந்த தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்தினர்.
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் : சொன்னதை செய்யும் கிளிப்புள்ள போல இந்த இடத்தை அழித்து விட்டு வா என்று அதற்கு கட்டளையிட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த முறை இன்று ( 17 ம் தேதி ) வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. பதிலுக்கு ஒரு ஏவுகணையை . பாகிஸ்தான் இப்போதே வண்ணம் பூச துவங்கியிருக்கும் என்பது சம்பிரதாயம்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
ஜோதிடர் பேச்சைக் கேட்டுத்தான் கோபாலபுரம் வீட்டை தானம் தருகிறார் கருணாநிதி - ஜெ.
திடீரென்று கருணாநிதி தான் வள்ளலாகி மாறிவிட்டதாக ஒரு தோற்றம் அளிக்கப்பார்க்கிறார். தான் குடியிருக்கும் வீட்டையே தானம் செய்யப் போகிறாராம். முதலில் என்னுடைய காலத்திற்குப் பிறகு, என் மனைவி காலத்திற்குப் பிறகு என்று சொன்னவர் இப்போது ஒரு ஜோதிடர் கூறிய அறிவுரையை கேட்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ குடியேறப்போகிறார்.
இந்த வீட்டில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் ஆட்சி பறி போய் விடும் என்பதால்தான் அவசரம் அவசரமாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று ஜெ. கூறியுள்ளார்.
திடீரென்று கருணாநிதி தான் வள்ளலாகி மாறிவிட்டதாக ஒரு தோற்றம் அளிக்கப்பார்க்கிறார். தான் குடியிருக்கும் வீட்டையே தானம் செய்யப் போகிறாராம். முதலில் என்னுடைய காலத்திற்குப் பிறகு, என் மனைவி காலத்திற்குப் பிறகு என்று சொன்னவர் இப்போது ஒரு ஜோதிடர் கூறிய அறிவுரையை கேட்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ குடியேறப்போகிறார்.
இந்த வீட்டில் ஜூன் மாதத்திற்கு மேல் தங்கக் கூடாது. அப்படி தங்கினால் ஆட்சி பறி போய் விடும் என்பதால்தான் அவசரம் அவசரமாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று ஜெ. கூறியுள்ளார்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
எம்.பி.பி.எஸ். சேர்க்கை: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கட்-ஆஃப் 194.75
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவகற்கு பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.5 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய கட்-ஆஃப் மதிப்பெண் 195.75 முதல் 194.75 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்பு ரம், திருவாரூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
அதே போல சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை திருவேற்காட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்தக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு தலா 97 (65 சதவீதம்) எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
இதனால் கட்-ஆஃப் மதிப்பெண் 197.75லிருந்து 197.50ஆகக் குறைகிறது.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவகற்கு பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.5 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்குரிய கட்-ஆஃப் மதிப்பெண் 195.75 முதல் 194.75 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்பு ரம், திருவாரூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
அதே போல சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை திருவேற்காட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்தக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு தலா 97 (65 சதவீதம்) எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
இதனால் கட்-ஆஃப் மதிப்பெண் 197.75லிருந்து 197.50ஆகக் குறைகிறது.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
வன்னிப் படுகொலை - வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி
வன்னியில் இலங்கைப் படையினர் நடத்தி முடித்த மனிதப் பேரவலத்தின் ஒரு ஆண்டு நிறைவு தினத்தையொட்டி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடம் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள் [^] போரில் உயிர் நீத்த தமிழ் மக்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஜெயராஜா கூறுகையில், சுதந்திரம், நீதியை மதிக்கும் ஒரு நாட்டின் இதயப் பகுதியில் நின்று கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். உலகம் பார்த்துக்கொண்டிருக்க முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழர்களை மொத்தமாக கொன்று குவித்த பேரவலத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
இதை நினைவு கூறும் வகையில் முதலில் வெள்ளை மாளிகை முன்பு கூடி கூட்டம் நடத்தினோம். பின்னர் ஒரு மைல் நீளத்திற்கு பேரணியாக சென்று தற்போது லிங்கன் மெமோரியல் முன்பு கூடியுள்ளோம்.
மனிதப் பேரவலத்தை நடத்திய கொடூரர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்றார்.
வன்னியில் இலங்கைப் படையினர் நடத்தி முடித்த மனிதப் பேரவலத்தின் ஒரு ஆண்டு நிறைவு தினத்தையொட்டி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடம் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள் [^] போரில் உயிர் நீத்த தமிழ் மக்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஜெயராஜா கூறுகையில், சுதந்திரம், நீதியை மதிக்கும் ஒரு நாட்டின் இதயப் பகுதியில் நின்று கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். உலகம் பார்த்துக்கொண்டிருக்க முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழர்களை மொத்தமாக கொன்று குவித்த பேரவலத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
இதை நினைவு கூறும் வகையில் முதலில் வெள்ளை மாளிகை முன்பு கூடி கூட்டம் நடத்தினோம். பின்னர் ஒரு மைல் நீளத்திற்கு பேரணியாக சென்று தற்போது லிங்கன் மெமோரியல் முன்பு கூடியுள்ளோம்.
மனிதப் பேரவலத்தை நடத்திய கொடூரர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்றார்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் எலின் சான்டர் கூறுகையில், இலங்கையில் தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தினத்தை நினைவு கூற இங்கு அனைவரும் கூடியுள்ளோம். ஒரே நாளில் 40 ஆயிரம் பேரைக் கொல்லும் செயலை எந்த வார்த்தையில் விவரிப்பது என்றே தெரியவலில்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் கொல்லப்படுவதற்கு முன்பு உயிர்ப் பிரச்சினை கேட்டு கதறியுள்ளனர், கெஞ்சியுள்ளனர். ஆனால் அவர்கள் மிருகத்தனமான முறையில் சிதைக்கப்பட்டுள்ளனர்.
நாகரீகமடைந்த உலக நாடுகள் நம்மைக் காக்கும் என போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் மிகவும் உறுதியாக நம்பினர். ஆனால் அவர்களது நம்பிக்கை வீண் போய் விட்டது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், இனப்படுகொலைகளுக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளே கிடையாது.
இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ வந்து நம்மைக் காப்பாற்றும் என அந்த அப்பாவி மக்கள் உறுதியாக நம்பினர். ஆனால் ஒருவரும் வராதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களது கதறல் யாருடைய காதுகளையும் எட்டவில்லை. யாருமே அப்பாவித் தமிழர்களை கொல்லாதீர்கள் என்று இலங்கை அரசை கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளவில்லை என்றார்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
புதிய சட்டசபை கட்டடம், சென்டிரல் ரயில் நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் ஒரு நபர் போனில் பேசியுள்ளார். அதில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தையும், புதிய சட்டசபை வளாகத்தையும், மனித வெடிகுண்டு மூலம் தாக்கப்போகிறோம். அது முடியாவிட்டால், வான்வெளி தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி மிரட்டல் புரளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பேசிய தொலைபேசி அழைப்பு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்துள்ளது.
புரளியாக இருக்கலாம் என கருதினாலும், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் ஒரு நபர் போனில் பேசியுள்ளார். அதில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தையும், புதிய சட்டசபை வளாகத்தையும், மனித வெடிகுண்டு மூலம் தாக்கப்போகிறோம். அது முடியாவிட்டால், வான்வெளி தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி மிரட்டல் புரளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பேசிய தொலைபேசி அழைப்பு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்துள்ளது.
புரளியாக இருக்கலாம் என கருதினாலும், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆப்கன் வங்கியில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் சாவு
» மும்பை ஏர்போர்ட்டில் விமானவிபத்து தவிர்ப்பு
» ஆப்கன் அமைதி நடவடிக்கையில் தாலிபான்களை ஈடுபடுத்த உலக நாடுகள் ஆதரவு!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» சுரங்கத் தொழிலில் முதலீடு இந்தியாவுக்கு ஆப்கன் அழைப்பு
» மும்பை ஏர்போர்ட்டில் விமானவிபத்து தவிர்ப்பு
» ஆப்கன் அமைதி நடவடிக்கையில் தாலிபான்களை ஈடுபடுத்த உலக நாடுகள் ஆதரவு!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» சுரங்கத் தொழிலில் முதலீடு இந்தியாவுக்கு ஆப்கன் அழைப்பு
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|