Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
+6
ரிபாஸ்
கலைவேந்தன்
balakarthik
வேணு
சிவா
ARR
10 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
First topic message reminder :
திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
Last edited by ARR on Mon 17 May 2010 - 18:10; edited 6 times in total
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
கட்டபொம்மன் விழாவில் கலாட்டா - டிஎஸ்பிக்கு கத்தி குத்து !
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை உள்ளது. இங்கு கட்டபொம்மன் குல தெய்வமான வீரசக்க தேவி ஆலய 54 வது வழிபாட்டு விழா, கட்டபொம்மன் விழா ஆகியன நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.
இதனைமுன்னிட்டு, கீழவேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கட்டபொம்மன் நினைவு ஜோதி கொண்டு செல்லப்பட்டது.
அப்போது சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர்.
இதில் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
இதனால், ஆத்திரமடைந்த ஜோதி கொண்டு சென்றவர்கள், மதுரை - தூத்துக்குடி சாலையில் திடீர் மறியல் செய்தனர். மேலும் கற்களை வீசியதில் அந்த வழியாக வந்த ஒரு பஸ் கண்ணாடி உடைந்தது.
விளாத்திகுளம் டி.எஸ்.பி. லயேலா இக்னேஷியஸ் ஜீப் கல்வீசி தாக்கப்பட்டது.
அப்போது, ஏ.டி.எஸ்.பி.மார்ஸ்டன் லியோ, மற்றும் ஏட்டுக்கள் படு காயமடைந்தனர். மேலும், டிஎஸ்பி லயேலா இக்னேஷியஸ்- ஐ மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை உள்ளது. இங்கு கட்டபொம்மன் குல தெய்வமான வீரசக்க தேவி ஆலய 54 வது வழிபாட்டு விழா, கட்டபொம்மன் விழா ஆகியன நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.
இதனைமுன்னிட்டு, கீழவேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கட்டபொம்மன் நினைவு ஜோதி கொண்டு செல்லப்பட்டது.
அப்போது சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர்.
இதில் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
இதனால், ஆத்திரமடைந்த ஜோதி கொண்டு சென்றவர்கள், மதுரை - தூத்துக்குடி சாலையில் திடீர் மறியல் செய்தனர். மேலும் கற்களை வீசியதில் அந்த வழியாக வந்த ஒரு பஸ் கண்ணாடி உடைந்தது.
விளாத்திகுளம் டி.எஸ்.பி. லயேலா இக்னேஷியஸ் ஜீப் கல்வீசி தாக்கப்பட்டது.
அப்போது, ஏ.டி.எஸ்.பி.மார்ஸ்டன் லியோ, மற்றும் ஏட்டுக்கள் படு காயமடைந்தனர். மேலும், டிஎஸ்பி லயேலா இக்னேஷியஸ்- ஐ மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
திருப்பதிக்கே லட்டா.. ஆசிரியருக்கே முட்டியா..?
வேலூரில் தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த அவலம்
வேலூரில் தலைமை ஆசிரியர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் துன்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் தாஞகா மேல்களத்த;ர் கிராமப் பளளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார் சலபதி. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒவருக்கும் இடையே நிலம் விற்றது தொடர்பான கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தி்ல் சலபதி அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் போலீசாரோ புகார் யார் மீது கொடுக்கப்பட்டதோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு சலபதியை மிரட்டி பணம் வாங்கியுள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் முட்டி போடுமாறும் துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் சலபதி தனக்கு நேர்ந்த கொடுமையை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வேலூரில் தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த அவலம்
வேலூரில் தலைமை ஆசிரியர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் துன்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் தாஞகா மேல்களத்த;ர் கிராமப் பளளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார் சலபதி. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒவருக்கும் இடையே நிலம் விற்றது தொடர்பான கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தி்ல் சலபதி அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் போலீசாரோ புகார் யார் மீது கொடுக்கப்பட்டதோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு சலபதியை மிரட்டி பணம் வாங்கியுள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் முட்டி போடுமாறும் துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் சலபதி தனக்கு நேர்ந்த கொடுமையை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
இன்னொரு வீரப்பன் 'உயிரோடு' பிடிபட்டான்..
உடுமலை அருகே சந்தனக் கட்டை கடத்தல் கும்பல் தலைவன் கைது
உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆயிரக்கணக்கான சந்தனமரங்களை வெட்டிக் கடத்திய கும்பலின் தலைவனை, உடுமலை வனத்துறையினர் 'பொறி' வைத்து பிடித்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன், ஒரு சில மலைவாழ் மக்கள் மற்றும் வன எல்லை கிராமங்களை சேர்ந்தவர்களோடு கூட்டணி அமைத்து சந்தனக்கட்டை கடத்தல் தொழிலில் கொடிகட்டி பறந்தான். சந்தனக்கட்டையுடன் பலர் சிக்கினாலும், வெங்கட்ராமன் மட்டும் வனத்துறையினரிடம் சிக்காமல் கண்ணில் மண்ணை தூவி தப்பினான். பல மாதமாக தலைமறைவாக இருந்த வெங்கட்ராமன், பொள்ளாச்சி பசும்பொன் நகரிலுள்ள தனது வீட்டிற்கு வந்து செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடுமலை வனச்சரகர் சரவணன், வனவர்கள் கணேஷ்ராம், பார்த்தசாரதி குழுவினர் நேற்று முன்தினம் இரவு அவன் வீட்டை சுற்றி வளைத்தனர். சுதாரித்துக் கொண்ட வெங்கட்ராமன், பின்வாசல் வழியாக தப்பி ஓடி, அருகிலிருந்த ஓலைக்குடிசையில் பதுங்கிக் கொண்டான். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஒடுங்கி, பதுங்கியிருந்த வெங்கட்ராமன், வனத்துறையினரிடம் சிக்கினான். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வெங்கட்ராமன் மீது ஆனைமலை புலிகள் காப்பகத்தில் எட்டு வழக்குகள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில் மட்டும் ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூன்று வழக்குகளில் நேரடியாக கைது செய்யப்பட்டும், இரண்டு வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றும், ஒரு வழக்கில் தேடப்படும் ற்றவாளியாகவும் வெங்கட்ராமன் இருந்தான், என்றனர்.
உடுமலை அருகே சந்தனக் கட்டை கடத்தல் கும்பல் தலைவன் கைது
உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆயிரக்கணக்கான சந்தனமரங்களை வெட்டிக் கடத்திய கும்பலின் தலைவனை, உடுமலை வனத்துறையினர் 'பொறி' வைத்து பிடித்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன், ஒரு சில மலைவாழ் மக்கள் மற்றும் வன எல்லை கிராமங்களை சேர்ந்தவர்களோடு கூட்டணி அமைத்து சந்தனக்கட்டை கடத்தல் தொழிலில் கொடிகட்டி பறந்தான். சந்தனக்கட்டையுடன் பலர் சிக்கினாலும், வெங்கட்ராமன் மட்டும் வனத்துறையினரிடம் சிக்காமல் கண்ணில் மண்ணை தூவி தப்பினான். பல மாதமாக தலைமறைவாக இருந்த வெங்கட்ராமன், பொள்ளாச்சி பசும்பொன் நகரிலுள்ள தனது வீட்டிற்கு வந்து செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடுமலை வனச்சரகர் சரவணன், வனவர்கள் கணேஷ்ராம், பார்த்தசாரதி குழுவினர் நேற்று முன்தினம் இரவு அவன் வீட்டை சுற்றி வளைத்தனர். சுதாரித்துக் கொண்ட வெங்கட்ராமன், பின்வாசல் வழியாக தப்பி ஓடி, அருகிலிருந்த ஓலைக்குடிசையில் பதுங்கிக் கொண்டான். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஒடுங்கி, பதுங்கியிருந்த வெங்கட்ராமன், வனத்துறையினரிடம் சிக்கினான். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வெங்கட்ராமன் மீது ஆனைமலை புலிகள் காப்பகத்தில் எட்டு வழக்குகள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில் மட்டும் ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூன்று வழக்குகளில் நேரடியாக கைது செய்யப்பட்டும், இரண்டு வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றும், ஒரு வழக்கில் தேடப்படும் ற்றவாளியாகவும் வெங்கட்ராமன் இருந்தான், என்றனர்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து குஷ்பு அதிரடி நீக்கம்
இதுகுறித்து ஜாக்பாட் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுத் தரப்பில் கூறுகையில், தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.
திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.
ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.
அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
2006 தேர்தல் சமயத்தில், ராதிகா அதிமுகவில் இணைந்தபோது, சன் டிவியில் அவரது தொடர்கள் எவ்வித பாதிப்புமின்றித் தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜாக்பாட் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுத் தரப்பில் கூறுகையில், தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.
திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.
ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.
அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
2006 தேர்தல் சமயத்தில், ராதிகா அதிமுகவில் இணைந்தபோது, சன் டிவியில் அவரது தொடர்கள் எவ்வித பாதிப்புமின்றித் தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியர் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி..!
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். அந்த பகுதியில் உள்ள பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். செருபுழா பகுதியில் அவர் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
நேற்று காலை அங்குள்ள வீட்டில் கணக்கெடுக்க சென்றார். அப்போது அந்த வீட்டில் 40 வயதான பெண் தனியாக இருந்தார். அங்கு சென்ற மனோஜ்குமார் தனியாக இருந்த அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கத்தி கூச்சல் போட்டதும் அங்கிருந்து மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த மனோஜ்குமார் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மனோஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். அந்த பகுதியில் உள்ள பகுதியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். செருபுழா பகுதியில் அவர் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
நேற்று காலை அங்குள்ள வீட்டில் கணக்கெடுக்க சென்றார். அப்போது அந்த வீட்டில் 40 வயதான பெண் தனியாக இருந்தார். அங்கு சென்ற மனோஜ்குமார் தனியாக இருந்த அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கத்தி கூச்சல் போட்டதும் அங்கிருந்து மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த மனோஜ்குமார் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மனோஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
17ம் தேதி காளஹஸ்தியில் ஜெ. சிறப்புப் பூஜை..!
இதற்காக 17ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து காளஹஸ்தி செல்கிறார் ஜெயலலிதா. காலை 9 மணிக்கு காளஹஸ்தி வந்து சேரும் அவர் அங்கு சிறப்பு பூஜைகளை மேற்கொள்கிறார். பரிகார பூஜையையும் அவர் செய்யவுள்ளார்.
காளஹஸ்தி கோவில் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
இதற்காக 17ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து காளஹஸ்தி செல்கிறார் ஜெயலலிதா. காலை 9 மணிக்கு காளஹஸ்தி வந்து சேரும் அவர் அங்கு சிறப்பு பூஜைகளை மேற்கொள்கிறார். பரிகார பூஜையையும் அவர் செய்யவுள்ளார்.
காளஹஸ்தி கோவில் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
77 வயதில் பிளஸ்டூ பாஸ் செய்த ஓய்வு பெற்ற அதிகாரி
மதுரையை சேர்ந்தவர் வீரமுத்து. தற்போது 77 வயதாகிறது. எஸ்.எஸ்.எல்.சி. படித்து இளநிலை உதவியாளராக அரசு [^] பணியில் சேர்ந்தவர். பதவி உயர்வு மூலம் கூட்டுறவு துணை பதிவாளராகி ஓய்வு பெற்ற அவருக்கு கல்வியில் இருந்த தாகம் தணியவில்லை.
இளமைக்காலத்தில் படிக்க முடியாத குறையை போக்குவதற்காக, ஓய்வு பெற்றபின் படித்து பட்டதாரியாக விரும்பினார். கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதிய அவர், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் (1200-க்கு 742) பெற்று தேர்ச்சி பெற்றார். அடுத்து பி.ஏ. (யோகா), எம்.ஏ. பட்டம் பெறப் போவதாக அறிவித்த வீரமுத்து, பிளஸ்-2வில் 1000-க்கு மேல் மதிப்பெண்களை எதிர்பார்த்ததாக கூறினார்.
படிப்புத் தாகம் குறையாமல் இந்த வயதிலும் பிளஸ்டூ படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள வீரமுத்துவின் 2 மகன்களும் டாக்டர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையை சேர்ந்தவர் வீரமுத்து. தற்போது 77 வயதாகிறது. எஸ்.எஸ்.எல்.சி. படித்து இளநிலை உதவியாளராக அரசு [^] பணியில் சேர்ந்தவர். பதவி உயர்வு மூலம் கூட்டுறவு துணை பதிவாளராகி ஓய்வு பெற்ற அவருக்கு கல்வியில் இருந்த தாகம் தணியவில்லை.
இளமைக்காலத்தில் படிக்க முடியாத குறையை போக்குவதற்காக, ஓய்வு பெற்றபின் படித்து பட்டதாரியாக விரும்பினார். கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதிய அவர், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் (1200-க்கு 742) பெற்று தேர்ச்சி பெற்றார். அடுத்து பி.ஏ. (யோகா), எம்.ஏ. பட்டம் பெறப் போவதாக அறிவித்த வீரமுத்து, பிளஸ்-2வில் 1000-க்கு மேல் மதிப்பெண்களை எதிர்பார்த்ததாக கூறினார்.
படிப்புத் தாகம் குறையாமல் இந்த வயதிலும் பிளஸ்டூ படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள வீரமுத்துவின் 2 மகன்களும் டாக்டர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
ARR wrote:77 வயதில் பிளஸ்டூ பாஸ் செய்த ஓய்வு பெற்ற அதிகாரி
நா +2 முனாம் ஆண்டு படிக்கும்பொழுது இந்த செய்தி வந்துற்க்ககூடாதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
கல்விக்கு வயதில்லை என்பதை நிரூபித்து இருக்கிறார்... பெரியவர்... வியக்கிறேன்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆப்கன் வங்கியில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் சாவு
» மும்பை ஏர்போர்ட்டில் விமானவிபத்து தவிர்ப்பு
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» தலிபான் கைதிகளை விடுவிக்க முடியாது: ஆப்கன் அதிபர்
» மும்பை ஏர்போர்ட்டில் விமானவிபத்து தவிர்ப்பு
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» தலிபான் கைதிகளை விடுவிக்க முடியாது: ஆப்கன் அதிபர்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|