Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
+6
ரிபாஸ்
கலைவேந்தன்
balakarthik
வேணு
சிவா
ARR
10 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக
தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
Last edited by ARR on Mon May 17, 2010 4:40 pm; edited 6 times in total
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
முழு நேர அரசியல்ன்னா, எப்பொழுதும் கருணாநிதியுடனே இருப்பார்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
மதக் கலவரம் நடத்த ரூ.60 லட்சம் 'பீஸ்'-முத்தலிக்கை அம்பலப்படுத்திய தெஹல்கா!
பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா.
கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார் முத்தலிக்.
47 வயதான முத்தலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர். 1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். 2004ம் ஆண்டு பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அரசியலில் நுழையத் துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. சீட் தரவில்லை. இதனால் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டுவெளியேறினார் முத்தலிக்.
பின்னர் கர்நாடக மாநில சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்டார்.அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார்.
பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மத ரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா.
இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந் நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்தலிக். இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா [^] டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.
பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தலிக்கும், அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ் டுடேவும்.
இந்து- முஸ்லீம் ஒற்றுமை குறித்த கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அதற்கு நல்ல பப்ளிசிட்டியை தேடித் தருமாறும் கூறி தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல அனுப்ப்ப்பட்ட நிருபரிடம் கலவரத்தை ஏற்படுத்துவது குறித்து இந்த மூன்று பேரும் பேசியுள்ளனர்.
பெங்களூர் அல்லது மங்களூரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், பிரபலமான முஸ்லீம் தலைவரை அழைக்குமாறும், அதில் தாங்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த மூன்று பேரும் கூறியுள்ளனர்.
இதற்காக ரூ. 60 லட்சம் செலவாகும் என்று முத்தலிக் கூறியுள்ளது அந்த வீடியோ பதிவில் உள்ளது.
முத்தலிக்கின் இந்தப் பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு
நீடித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை நீட்டிப்புக்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. போர் முடிந்து விட்டது, பிரபாகரன் உள்ளிட்ட அனைத்துப் புலிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்று கடந்த ஆண்டு மே 18ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.
இருப்பினும்
பிரபாகரன், பொட்டு அம்மான் மரணங்கள் தொடர்பாக தொடர்ந்து இரு வேறு
கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதற்கேற்றபடி இந்த இருவரின் மரணச்
சான்றிதழ்களையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவிடம் அளிக்காமல் உள்ளது.
இலங்கையில்
போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு
நீடித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை நீட்டிப்புக்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. போர் முடிந்து விட்டது, பிரபாகரன் உள்ளிட்ட அனைத்துப் புலிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்று கடந்த ஆண்டு மே 18ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.
இருப்பினும்
பிரபாகரன், பொட்டு அம்மான் மரணங்கள் தொடர்பாக தொடர்ந்து இரு வேறு
கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதற்கேற்றபடி இந்த இருவரின் மரணச்
சான்றிதழ்களையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவிடம் அளிக்காமல் உள்ளது.
இலங்கையில்
போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப்
புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்திருப்பது
குறிப்பிடத்தக்கது.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
இறந்ததாக கூறப்பட்டவர் சுடுகாட்டில் உயிர் பிழைத்தார்- மீண்டும் மருத்துவமனையில் மரணம்..!
மதுராந்தகம்: டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை
சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய
வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு
அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
மதுராந்தகத்தை
அடுத்த மோச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து-மணியம்மாளின் மகன்
சுந்தரமூர்த்தி (25). மணியம்மாளுக்கும், சுந்தரமூர்த்திக்கும் திடீரென
வாந்தி பேதி ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் மதுராந்தகம் அரசு
மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை
பெற்று வந்த நிலையில் நேற்று காலை சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக அவரது
உறவினர்களிடம் டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து சுந்தரமூர்த்தியின்
உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இறுதிச் சடங்குக்கான
ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென சுந்தரமூர்த்தி கண்
விழித்து தலையை உயர்த்திப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள்
அதிர்ச்சி அடைந்தனர். கை, கால்களில் அசைவு தெரியவே அவர் உயிருடன் இருப்பதை
உணர்ந்தனர்.
இதையடுத்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை ரத்து
செய்து விட்டு சுந்தரமூர்த்தைய தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு
விரைந்தனர். இந்த தகவல் பரவி மருத்துவமனையில் உறவினர்களும், கிராம
மக்களும் குவிந்து விட்டனர்.
சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக
கூறினீர்களே, இப்போது அவருடன் உயிருடன் இருக்கிறார். முறையாக மீண்டும்
சிகிச்சை அளியுங்கள் என்று டாக்டர்களை வலியுறுத்தினர். இதையடுத்து
டாக்டர்கள் மீண்டும் சிகிச்சையைத் தொடங்கினர்.
ஆனால் ஒரு மணி நேரம்
கழித்து வந்த டாக்டர்கள், சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக மீண்டும்
கூறினர். இதைக் கேட்ட உறவினர்களும், கிராமத்தினரும் கோபமடைந்தனர்.
போராட்டத்தில் குதித்தனர்.
டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காமல்
அஜாக்கிரதையாக நடந்து கொண்டதால் தான் சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக கூறி
போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது அவர்கள் மருத்துவமனையின்
கண்ணாடி ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பான
நிலை ஏற்பட்டது. மேலும் சுந்தரமூர்த்தியின் உடலை வாங்காமல் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
குறித்து தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். தாசில்தார் உள்ளிட்ட
அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அனைவரும், போராட்டம் நடத்தியவர்களை
அமைதிப்படுத்தினர்.
பின்னர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சுந்தரமூர்த்தியின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் வற்புறுத்தினர். இதையடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.அதன் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
மதுராந்தகம்: டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை
சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய
வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு
அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
மதுராந்தகத்தை
அடுத்த மோச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து-மணியம்மாளின் மகன்
சுந்தரமூர்த்தி (25). மணியம்மாளுக்கும், சுந்தரமூர்த்திக்கும் திடீரென
வாந்தி பேதி ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் மதுராந்தகம் அரசு
மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை
பெற்று வந்த நிலையில் நேற்று காலை சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக அவரது
உறவினர்களிடம் டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து சுந்தரமூர்த்தியின்
உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இறுதிச் சடங்குக்கான
ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென சுந்தரமூர்த்தி கண்
விழித்து தலையை உயர்த்திப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள்
அதிர்ச்சி அடைந்தனர். கை, கால்களில் அசைவு தெரியவே அவர் உயிருடன் இருப்பதை
உணர்ந்தனர்.
இதையடுத்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை ரத்து
செய்து விட்டு சுந்தரமூர்த்தைய தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு
விரைந்தனர். இந்த தகவல் பரவி மருத்துவமனையில் உறவினர்களும், கிராம
மக்களும் குவிந்து விட்டனர்.
சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக
கூறினீர்களே, இப்போது அவருடன் உயிருடன் இருக்கிறார். முறையாக மீண்டும்
சிகிச்சை அளியுங்கள் என்று டாக்டர்களை வலியுறுத்தினர். இதையடுத்து
டாக்டர்கள் மீண்டும் சிகிச்சையைத் தொடங்கினர்.
ஆனால் ஒரு மணி நேரம்
கழித்து வந்த டாக்டர்கள், சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக மீண்டும்
கூறினர். இதைக் கேட்ட உறவினர்களும், கிராமத்தினரும் கோபமடைந்தனர்.
போராட்டத்தில் குதித்தனர்.
டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காமல்
அஜாக்கிரதையாக நடந்து கொண்டதால் தான் சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக கூறி
போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது அவர்கள் மருத்துவமனையின்
கண்ணாடி ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பான
நிலை ஏற்பட்டது. மேலும் சுந்தரமூர்த்தியின் உடலை வாங்காமல் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
குறித்து தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். தாசில்தார் உள்ளிட்ட
அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அனைவரும், போராட்டம் நடத்தியவர்களை
அமைதிப்படுத்தினர்.
பின்னர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சுந்தரமூர்த்தியின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் வற்புறுத்தினர். இதையடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.அதன் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
Last edited by ARR on Fri May 14, 2010 9:32 pm; edited 1 time in total (Reason for editing : தேவையற்ற செய்தி என்பதால் நீக்கப்பட்டது ; ARR.)
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
குஷ்பு திமுகவில் இணைந்தது ஒரு செய்தியே அல்ல.
அதற்க்கு அவர் கூறிய காரணம் இருக்கிறதே ...... அட ராமா .........
" திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டே நான் இணைகிறேன் "
அம்மணியின் இந்த ஸ்டேட்மென்ட்தான் 2010 -இன் மிகபெரிய ஜோக்.
அதற்க்கு அவர் கூறிய காரணம் இருக்கிறதே ...... அட ராமா .........
" திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டே நான் இணைகிறேன் "
அம்மணியின் இந்த ஸ்டேட்மென்ட்தான் 2010 -இன் மிகபெரிய ஜோக்.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
மதுரையில் பரபரப்பு – மீனாட்சி அம்மன் கோவிலை வட்டமிட்ட மர்ம ஹெலிகாப்டர்
மதுரையில் உள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை ஒரு ஹெலிகாப்டர் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இருப்பதால் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு [^] அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று
பிற்பகலில் ஒரு மர்ம ஹெலிகாப்டர் மீனாட்சி அம்மன் கோவிலை வட்டமிட்டபடி
பறந்தது. ஆறு முறை இவ்வாறு வட்டமிட்ட அந்த ஹெலிகாப்டர் பின்னர் வடக்கு
நோக்கி போய் விட்டது.
இதைப் பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்தது.
இந்த
ஹெலிகாப்டர் எதற்காக கோவிலைச் சுற்றி வந்தது என்பது குறித்துத்
தெரியவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் போலத் தெரிவதாக
போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தைத் தொடர்பு
கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் உள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை ஒரு ஹெலிகாப்டர் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இருப்பதால் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு [^] அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று
பிற்பகலில் ஒரு மர்ம ஹெலிகாப்டர் மீனாட்சி அம்மன் கோவிலை வட்டமிட்டபடி
பறந்தது. ஆறு முறை இவ்வாறு வட்டமிட்ட அந்த ஹெலிகாப்டர் பின்னர் வடக்கு
நோக்கி போய் விட்டது.
இதைப் பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்தது.
இந்த
ஹெலிகாப்டர் எதற்காக கோவிலைச் சுற்றி வந்தது என்பது குறித்துத்
தெரியவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் போலத் தெரிவதாக
போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தைத் தொடர்பு
கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Re: உடனடி செய்திகள்.. ஆப்கன் விமானவிபத்து. 43 பேர் பலி?
முன்னாள் துணை ஜனாதிபதி பைரான் சிங் ஷெகாவத் மரணம்
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் மரணமடைந்தார்.
87 வயதான ஷெகாவத் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். இன்று முற்பகல் 11.10 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
இன்று காலை முதல் அவரது நிலை மோசமடைந்தது. இதையடுத்து செயற்கை சுவாசத்தில் அவர் வைக்கப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷெகாவத் பாஜக வின் மூத்த தலைவராக விளங்கியவர் ஆவார்.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் மரணமடைந்தார்.
87 வயதான ஷெகாவத் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். இன்று முற்பகல் 11.10 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
இன்று காலை முதல் அவரது நிலை மோசமடைந்தது. இதையடுத்து செயற்கை சுவாசத்தில் அவர் வைக்கப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷெகாவத் பாஜக வின் மூத்த தலைவராக விளங்கியவர் ஆவார்.
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆப்கன் வங்கியில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் சாவு
» மும்பை ஏர்போர்ட்டில் விமானவிபத்து தவிர்ப்பு
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» தலிபான் கைதிகளை விடுவிக்க முடியாது: ஆப்கன் அதிபர்
» மும்பை ஏர்போர்ட்டில் விமானவிபத்து தவிர்ப்பு
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
» தலிபான் கைதிகளை விடுவிக்க முடியாது: ஆப்கன் அதிபர்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|