புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
107 Posts - 49%
heezulia
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
9 Posts - 4%
prajai
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
234 Posts - 52%
heezulia
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
18 Posts - 4%
prajai
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
2 Posts - 0%
Barushree
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தாய்மை என்ன விலை? Poll_c10தாய்மை என்ன விலை? Poll_m10தாய்மை என்ன விலை? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மை என்ன விலை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 4:18 pm

தங்களுக்கென்று ஒரு குடும்பம் அமைந்ததும், பெற்ற தாயைத் தங்களுடன் வைத்துக் கொள்ள மகன்கள் தயங்குவதும், மறுப்பதும்கூட சாரதாவால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. வீட்டுக்கு வீடு நடப்பதுதானே? ஆனால், அதற்காக இன்று அவர்கள் சொன்ன காரணத்தைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. என்ன அநியாயம்? பல நாட்களாகவே மகேஷும், ரமேஷும் அவர்கள் மனைவியரும் நகர்ப்புறத்திலுள்ள சாந்தி நிலையம் என்ற முதியோர் இல்லத்தைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ரொம்ப நன்றாக கவனிக்கிறார்களாம். சாப்பாடு ரொம்ப நல்லா இருக்காம். பேச்சுத் துணைக்கு சமவயதில் நிறையபேர் இருப்பாங்க. போரடிக்காது.

கட்டணம்கூட ரொம்பக் குறைவாம் அதுதானே முக்கியம்.

இலவசப்பகுதியே ரொம்ப நல்லா இருக்காம்! என்றாள் சின்னவள் அவசரமாக.

இத்தனைக்கும் வீட்டில் தன்னாலான உதவிகளைச் செய்ய சாரதா என்றுமே தயங்கியதில்லை என்றாலும் அவள் தண்டச்சோறு தான். ஜாடைப் பேச்சுக்களை அவள் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் இன்று இப்படி அபாண்டமாகப் பழி சுமத்தி விட்டார்களோ?

என்னதான் கஷ்டம் வந்தாலும் ஒரு குடும்பப் பெண் இப்படியா செய்வது? சீ.... என்று காலையில் தொடங்கி வைத்தாள் பெரிய மருமகள்.

வாடகைக்கு எதைத்தான் கொடுப்பது என்று இல்லையா?

விதவைக்குக் குழந்தை பிறந்தது என்று கேட்கவே கூசுகிறது. உண்மையில் என்னவெல்லாம் நடந்ததோ.. யார் கண்டது?

அந்த வெள்ளைக்காரன் கிட்டத்தட்ட ஒரு வருடம் இங்கேதான் இருந்தானாம்.

இப்படிப்பட்டவர்களை வீட்டில் வைத்துக் கொண்டால் குழந்தைகள் கதி? இன்னும் பிறக்காத குழந்தைகளுக்காக இருவருமே கவலைப்பட்டனர்.

சாரதாவுக்கு மருமகள்கள் நாக்கூசாமல் பேசியதைவிட மகன்கள் பேப்பரையும் தொலைக்காட்சியையும் பார்க்கும் பாவனையில் உட்கார்ந்திருந்ததைக் காணத்தான் அருவருப்பாக இருந்தது. இவர்களா என் மகன்கள்? இவனுக்காகவா...?

எல்லோரும் அலுவலகம் சென்றுவிட தனிமையில் விடப்பட்ட சாரதாவின் மனம் இருபத்தேழு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது.

அன்பான கணவன், மாமியார், நான்கும் இரண்டும் வயதில் இரு மகன்கள், என அருமையான குடும்பம் அவளுடையது. ஆனால் அதைப் பார்க்க விதிக்குப் பொறுக்கவில்லை.

ஓருநாள் மூத்தவன் மகேஷுடன் சைக்கிளில் கடைக்குப் போன கணவன், திரும்பி வரவேயில்லை. சாலையில் ஒரு லாரி மோத, சம்பவ இத்திலேயே போய்விட்டான். பின்னால் உட்கார்ந்திருந்த குழந்தை தூக்கி எறியப்பட்டு, ஒரு வைக்கோற்போரின் மேல் விழுந்து உயிர் பிழைத்தது.

சாரதாவுக்கு அழக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. ஒரு தனியார் கம்பெனியில் கிடைத்த சிறு வேலையையே மிகப் பெரிய வரமாக எண்ணிப் போகத் தொடங்கினாள்.

விதிக்கு அதுவும் பொறுக்கவில்லை. மூன்று மாதங்களிருக்கும், மகேஷ் ஒரு நாள் திடீரென மயங்கி கீழே விழுந்தான். மருத்துவமனையில் தங்கி, பல பரிசோதனைகளுக்குப் பின் டாக்டர் கூறியதைக் கேட்டு சாரதாவுக்கும் மயக்கம் வந்துவிட்டது.

விபத்தின்போது மகேஷுக்கு மூலையில் இலேசாக இரத்தக் கசிவு ஏற்பட்டு கட்டியாகியிருக்கிறது. அது மூளையை அழுத்துவதால்தான் இந்த மயக்கம். இது இன்னும் பெரிதானால் உயிருக்கே ஆபத்து. அதனால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆபரேஷனுக்கும் அதற்கு முன்னும் பின்னுமாக வைத்தியச் செலவுக்கும் குறைந்தது ஒரு லட்சம் தேவை. அதுவும் உடனடியாக.

வெறும் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் மாதச் சம்பளக்காரி இவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? நகைகளை விற்றும் கடன் வாங்கியும் முப்பதாயிரம் ரூபாய் கூடத் தேறவில்லை. குழந்தையைக் காப்பாற்றும் வெறியில், சில பல குறுக்கு வழிகளைக் கூட எண்ணிப் பார்த்துச் சோர்ந்தது அந்தத் தாய்மை.

அப்போது அவள் வாழ்வில் நுழைந்தவர்கள்தாம் லூயியும் காஸ்ப்ரோவும். ஜெர்மனியைச் சேர்ந்த பணக்காரத் தம்பதி. இவளுக்கு உதவுவதற்காகவே தெய்வம் அவர்களுக்கு வேறு சோதனை கொடுத்ததோ?

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தையில்லை. பரிசோதித்துப் பார்த்ததில் லூயிக்கு கர்ப்பப்பையில் ஏதோ கோளாறு. கருமுட்டை உருவாவதில் அவளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாததால், அவளது முட்டையையும் காஸ்ப்ரோவின் உயிரணுவையும் இணைத்து ஒரு சோதனைக் குழாயில் கருவை உருவாக்கிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி உருவாகும் கருவை ஒரு நார்மல் கர்ப்ப்பபையில் வைத்து வளர்க்க வேண்டும். இப்போது அவர்களுக்குத் தேவை வாடகைக்குஒரு கர்ப்பப்பை. வாகைத்தாய். பல்வேறு நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் இதற்காக சென்னை வந்திருக்கிறார்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியமுள்ள, நேர்மையான இளம்பெண்தான் இன்னும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மகேஷின் வைத்தியத்தின் போது பழக்கமான நர்ஸ், அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். ஒருவருக்கொருவர் உதவலாம் என்பதை எடுத்துரைத்தாள்.

முதலில் சாரதாவுக்கு மிரட்சியாக இருந்தது. லூயி நேரில் அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். மருத்துவர்கள் சிகிச்சை முறையை விரிவாக விலக்கினர். காஸ்ப்ரோவை நேரில் சந்திக்கவே தேவையில்லை என்றனர். விவரமறிந்து மாமியாரும் தைரியம் கொடுத்தார். கடைசியில் சாரதா சம்மதித்தாள்.

அதன்பின் எல்லாமே மின்னல் வேகத்தில் சட்டப்படி நடந்து முடிந்தன. ஒருபுறம் மகேஷின் வைத்தியம் வெற்றிகரமாக நடக்க மறுபுரம் சாரதாவின் கர்ப்பப்பையில் வைக்கப்பட்ட கரு சீராக வளரத் தொடங்கியது. சரியாக பத்தாவது மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையைப் பிரியும்போது ஓர் இனம்புரியாத வலி தோன்றவே செய்தது. ஆனால் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால் சாரதா சமாளித்துவிட்டாள்.

அதன்பின் மீண்டும் வேலைக்குப் போய் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து.... எப்போதாவது யாராவது ஐரோப்பியரைப் பார்க்க நேர்ந்தால் தான் பெற்ற அந்தப் பிஞ்சுமுகம் அவளுக்கு ஞாபகம் வரும். நன்றாக இருக்கட்டும் என்று எண்ணிக் கொள்வாள்.

இப்போது மகன்களுக்கு நல்ல வேலை கிடைத்தது. திருமணமும் நடந்தாயிற்று. இனியென்ன கவலை என்ற இறுமாப்புடன் கொஞ்சம் உடல் பலவீனமும் சேர்ந்து கொள்ள சாரதா தன் வேலையை விட்டுவிட்டாள். அன்று தொடங்கியதுதான் வீட்டில் பிரச்னை. மாதச் சம்பளம் கொண்டு வரவில்லை என்றதும் அவள் சுமையாகிவிட்டாள். ஆனால் அதற்காக இப்படியா சேற்றை வாரியிறைப்பது? தாங்கமுடியவில்லை. இரண்டு தலைமுறை முந்தைய தன் மாமியாருக்கு அன்று புரிந்த வாடகைத் தாய் விவரம், இவர்களுக்குப் புரியவில்லையா? உயர்ந்த ஒரு விஷயத்தை அசிங்கப்படுத்திவிட்டாங்களே.

அழைப்பு மணி பலமாக இருமுறை அடித்துது. பெருமூச்சுடன் மெள்ளச் சென்று கதவைத் திறந்தாள். அவள் பெயருக்குத்தான் வெளிநாட்டிலிருந்து ஒரு பதிவுத்தபால்.

பிரித்துப் படித்தவளுக்கு பிரமிப்பாக இருந்தது. ஜெர்மனியிலிருந்து அந்த லூயி, காஸ்ப்ரோவின் மகன், மார்க் öன்று பெயராம், அனுப்பியிருந்தான்.

மார்க்கின் வக்கீல் மூலமாக வந்திருந்த நீண்ட கடிதத்தின் சுருக்கம் இதுதான். குழந்தையுடன் இங்கிரந்து சென்ற சில வாரங்களிலேயே தனிப்பட்ட சில காரணங்களுக்காக லூயியும் காஸ்ப்ரோவும் விவாகரத்து செய்து கொண்டார்களாம். நிறைய செல்வத்துடன் தன் உறவுக்காரப் பாட்டியிடம் வளர்ந்த மார்க்குக்கு இந்தியர்களிடம் ரொம்பவும் மரியாதை. சுயநலத்துக்காக சின்னஞ்சிறு குழந்தையை அநாதையாக விட்டுச் சென்ற தன் பெற்றோர் எங்கே? தன் குழந்தையைக் காப்பாற்றப் பத்து மாதம் ஒரு சிசுவை வயிற்றில் சுமந்த சாரதா எங்கே?

இந்தியர்களின் குடும்ப அமைப்பை, பாசப்பிணைப்பை, குறிப்பாகப் பெண்களின் தியாகம் கலந்த தாய்மையை அவன் மிகவும் மதிக்கிறான். அதற்கு அடையாளமாக இத்துடன் ஒரு காசோலையை இணைத்துள்ளான். இது அவன் சுயசம்பாத்தியம். தன் இந்திய, வாடகைத்தாயுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள அவன் விரும்புகிறான். சாரதாவுக்கு சம்மதமென்றால் இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்.

காசோலையை எடுத்துப் பார்த்தாள். இந்தியப் பணம் சுமார் பத்து லட்சத்துக்கான ஜெர்மன் காசோலை. இந்தப் பணத்தால், இந்த வீட்டில் அவள் செல்வாக்குப் போலியாகவாவது நிச்சயம் உயரும். ஏச்சு பேச்சுக் கேட்காமல் சௌகரியமாகவே வாழலாம். ஆனால்... என்றோ ஒரு நெருக்கடியில் பரஸ்பரம் உதவிக்கொண்டதற்கு இன்று இவள் மட்டும் பலன் பெறுவது நியாயமா? தன்னிடம் இந்தியர்களிடம் இந்தப் பையனுக்கு இருக்கும் அபிமானத்தைப் பணமாக்குவதா?

பிள்ளைகள் இந்த மார்க்கை மேலும் மேலும் சுரண்டமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதற்கு இவளே வழி வகுக்கலாமா? அது மார்க்குக்கு செய்யும் துரோகம் அல்லவா? உண்மை நிலையை மார்க் அறிந்தால் எவ்வளவு அசிங்கம்?

சாரதா நிதானமாக காசோலையைக் கிழித்துப் போட்டாள். மார்க் நன்றாக இருக்கட்டும் என்று வழக்கம்போல் மனமார வாழ்த்திக் கொண்டே சிவப்புப் படிவத்தில் அழுத்தமாகக் கையெழுத்திட்டாள். இனி அந்த சாந்தி நிலையத்தின் வழியைத் தேடிப் பிடிக்க வேண்டும்.



- லலிதா விஸ்வநாதன்



தாய்மை என்ன விலை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 5:38 pm

பாதிக்கப்பட்ட சாரதாவை நினைக்கும் போது மனம் கலங்குகிறது
அமைதியாகப் படித்தேன் அருமையான கதை நன்றி.




தாய்மை என்ன விலை? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக