ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

+3
மஞ்சுபாஷிணி
தண்டாயுதபாணி
balakarthik
7 posters

Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by balakarthik Thu May 13, 2010 12:07 pm

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது. ஆம், வெகு நாட்கள் வேலையே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததால் தண்ணியடிப்பதும், தலைக்குப்புற கவிழ்ந்து கிடப்பதுவுமே அவன் தலையாய வேலையாக இருந்தது. எங்களோடு படித்தும் உருப்பட்ட ஒரு நல்லவன் ஒருவன் அவனது நிறுவனத்திலே வேலை வாங்கித் தந்தான். ஒரே ஒரு நிபந்தனை, அங்கே ஏழு அவனை மேலதிகாரியாக பாவிக்க வேண்டும். வேலைக்கு திங்களன்று சேர வேண்டும். ஞாயிறு இரவு ட்ரீட் தந்தான் ஏழு. வழக்கம் போல் மறுநாள் எழுந்திருக்க லேட்டாகி விட்டது. அவசரமாக கிளம்பினான். பாலாஜி தன் பைக்கை எடுத்துட்டு போடா என்றான். உடனே குளிக்காமல் கிளம்பிய ஏழுவை கடிந்துக் கொண்டான் ஆறு.
குளிச்சிட்டு வண்டி ஓட்டினா போலிஸ் புடிக்கும்னு அன்னைக்கே சொன்னியே மச்சி என்ற ஏழு குடிப்பதைத்தான் குளிப்பது என்று சொல்லியதன் மூலம் மப்பு இன்னும் இறங்கவில்லை என்பது உறுதியானது. வேறு வழியில்லாமல் ஏழுவை வாழ்த்தி அனுப்பி வைத்தோம் முதல் பகலுக்கு. வீட்டுக்கு வெளியே வந்து லெஃப்டடில் திரும்பினான் ஏழு. எதிரே ஒருவர் ரைட் சைடில் முறுக்கிக் கொண்டு வந்து சடென் பிரேக் அடித்தார்.
சார். நான் வந்தது லெஃப்ட்டு. ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” எங்கேயோ படித்த மொக்கை கேள்வியை கேட்ட ஏழுவை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே சென்றார்.
பாலாஜி மட்டும் கத்தினான் “பார்த்து ஓட்டுடா”. அவன் பைக்.
முதல் நாளே அலுவலகத்துக்கு லேட்டாக வந்த ஏழுவை எங்கள் நண்பன் கடிந்துக் கொண்டான்.
ஹாய் மச்சி
ஆஃபிஸ்ல மச்சின்னு எல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன்னடா. மொத நாளே ஏழுமலை லேட்ன்னு பேரு வாங்க போறியா? சீக்கிரம் வரலாம் இல்ல?
பாலாஜி பைக்ல வந்தேன். ஃபாஸ்ட்டா வந்து, ஆக்ஸிடென்ட் ஆகி ”லேட்” ஏழுமலை ஆக விரும்பல.அதான்.
திஸ் இஸ் டூ மச் ஏழு.
இப்ப நீ மட்டும் எதுக்கு மச்சின்னு சொல்ற. தி இஸ் ஆஃபிஸ் யூ நோ?
ஏழுவை நன்கு அறிந்தவன் என்பதால் வேறு எதுவும் பேசாமல், அட்மினுக்கு சென்று ஜாயினிங் ஃபார்மிலிட்டிஸ் முடிக்க சொன்னான். அங்கே ஒரு ஃபிகர் அப்ளிகேஷனை நீட்டி ஏழுவை ஃபில் செய்ய சொன்னது
Last nameல் பேனாவை வைத்து இங்க என்ன எழுத என்றான் ஏழு
உங்க லாஸ்ட் நேமை எழுதுங்க
(மறுபடியும் ELUMALAI என்று எழுதினான்)
அச்சோ. லாஸ்ட் நேமை எழுத சொன்னேன்
எனக்கு ஃபர்ஸ்ட்டுல இருந்து லாஸ்ட் வரைக்கும் ஏழுமலைதாங்க பேரு
உங்க அப்பா பேர எழுதுங்க சார்.
ஓ. நான் அப்பான்னா fatherனு நினைச்சிட்டேன். Last னாலும் அப்பாவா?
சார். ஒழுங்கா ஃபில் பண்ணுங்க சார்.
இதுல இமெயில் கேட்டு இருக்காங்க
எழுதுங்க. ஏன்.ஐடி இல்லையா?
இருக்கு. ஆனா ஜிமெயில் ஐடிதான் இருக்கு. அதான் யோசிக்கிறேன்.
ஒல்லியா, தக்கையா ஒருத்தர் வருவாருன்னுதான் பாஸ் சொன்னாரு. இவ்ளோ மொக்கையா இருப்பிங்கன்னு தெரியாது. ஜிமெயிலும் இமெயில்தான் சார். எழுதுங்க.
மேடம். கோச்சிக்காம ரேட் எப்படின்னு சொல்றிங்களா?
வாட்????????
இல்ல மேடம். ரேட் என்ன ஸ்பெல்லிங்னு சொல்றீங்களா ப்ளீஸ்
எதுக்குங்க ரேட் எழுத போறீங்க?
என் மெயில் ஐடி வந்து ”ஏழுடாட்ஆறுஅட்தரேட்ஜிமெயில்.காம்”
அய்யோ சார் (@ எழுதி காட்டுகிறார்)
ஒவ்வொரு முறை கடிக்கும் போதும் ஏழு ஃபிகரையே முறைத்துப் பார்த்ததும், ரேட்டுக்கு ஸ்பெல்லிங்கை மார்க்கமாக கேட்டதும் அவரை கடுப்பேத்த பாஸிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். உள்ளே அழைத்த பாஸ் ”ஏண்டா அவளையே முறைச்சு பார்க்கிற” என்றார்.
தலை கவிழ்ந்த ஏழு சொன்னான் “பாலாஜி தான் சார் பார்த்து ஓட்டுன்னு சொன்னான். அதான் அவங்கள பார்த்து பார்த்து ஓட்டினேன்”.
அப்போ வேணும்னேதான் டீஸ் பண்ணியா. யூ ப்ளடி.
தொங்கிய முகத்துடன் வெளிய வந்த ஏழு சீட்டில் சென்று அமர்ந்தான். மாலை ஐந்து மணி ஆனது. தூக்க கலக்கத்தில் இருந்த ஏழுவுக்கு அது ஆறு மணி போல் தெரிய, வீட்டிற்கு கிளம்பினான். அதை கவனித்த பாஸ் கடுப்பாகி ”என்ன ஆச்சு ஏழு? வாட் ஹேப்பன்ட்” என்று மேஜர் சுந்தர்ராஜனாகி கொண்டிருந்தார்.
சுதாரித்த ஏழு சொன்னான் “ காலைலே லேட் ஆயிடுச்சு சார். அதான் ஈவ்னிங் சீக்கிரமா கிளம்பி காம்பென்சேட் பண்ணலாம்னு”.
ஜாயினிங் ஃபார்மை கிழித்த பாஸ், அப்படியே போயிடு. நாளைக்கு வராத என்றார். சோகத்துடன் வந்து எங்களிடம் விஷயத்தை விளக்கிய ஏழு “மச்சி. சந்தோஷத்தில் நான் ட்ரீட் தந்தேன் இல்ல. இப்போ நீங்க வாங்கி கொடுங்கடா” என்றான்.
பாலாஜியும் நானும் போய் ஆளுக்கொரு பியரும், ஏழுவுக்கு ஒரு மினிபியரும் வாங்கி வந்து பூஜையை ஆரம்பித்தோம். விஷயம் கேள்விப்பட்டு வந்த ஆறு கத்தினான். அது எப்படிடா உனக்கு மட்டும் டைம் ஆறுன்னு தெரியும்?
பாதி மப்பில் ஏழு சொன்னான் “என் கண்ணுக்கு எல்லாமே நீயா தெரியுது மச்சி. என்ன செய்ய?”


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by தண்டாயுதபாணி Thu May 13, 2010 12:14 pm

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 102564 ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 102564 ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 677196


ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:19 pm

ஹப்பா தாங்கமுடியல சாமி....

ஆனா விடாம முழுக்க படிச்சேன் ஒருவழியா...

பாலாகார்த்திக் அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....

பாவம் எத்தனை பேர் இதை படிச்சு புன்னகை ஒரு வழி ஆக போறாங்களோ தெரியலை புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by balakarthik Thu May 13, 2010 1:11 pm

இதுவரை ஏழுவை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வித யவ்வனமான நிலையில் கிணற்றின் மீது அமர்ந்தபடி நிலவைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
”காதலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள் தன் சீடரில் ஒருவனைப் பார்த்து கேட்டுவிட்டு. அருகில் இருந்த பியர் பாட்டிலை கோப்பைக்குள் கவிழ்த்தார் . அவர் ஊற்றிய பியருக்கு ஏற்ற அளவில் தண்ணீரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கோப்பையை சுவாமிகளிடம் தந்தான் ஒரு சீடன். கல்ப்பாக அடிப்பது ஆகம விதிப்படி ஆகாது என்பதால் சிப் சிப்பாக அடிக்கத் தொடங்கினார் சுவாமிஜி. முதல் சிப்பை சிப்பியபின் கோப்பையை கீழே வைத்துவிட்டு சீடர்களைப் பார்த்தார்.
”உன்னைத்தான் கேட்கிறேன்.காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்”
ஒரு சிப்பிலே குரு ஏகாந்த நிலை அடைந்துவிட்டதை புரிந்துக் கொண்ட சீடன் ஒருவன் பதில் சொன்னான் “அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.
ஆசிரமத்தில் சேர அடிப்படைத் தகுதியே இல்லாமல் பதில் சொன்னான் மூடன். இல்லை இல்லை சீடன். சுவாமிகளுக்கு கோவம் வந்துவிடுமோ என்று அஞ்சியபடி சீடனை முறைத்தார்கள் மற்ற இருவரும். ஆனால் ஒரு அகோர சிரிப்பு சிரித்து தன்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் அரை….. சுவாமிகள்.
சிஷ்யா.. பிசையப்படும் மைதா மாவு பரோட்டா ஆகுமா, பூரி ஆகுமா என்று மாவுக்கு தெரியாது. ஆனால் பிசையும் மாஸ்டருக்கு தெரியும் இல்லையா?
தலை சொறிந்தபடி ஆம் என்றான் ஒரு சீடன். இன்னொரு சீடன் ஞானம் பெற்றவன். அவனுக்கு சுவாமிகள் சொல்வது புரிந்து, ”ஆம். சுவாமி. பரோட்டா மாஸ்டர் தானே பெற்றவர்கள். அவர்களுக்கு தெரியாதா?” என்றான்.
”நீ அரைபியர் போலவே அரைஞானஸ்நானம் பெற்றிருக்கிறாய். நான் முடித்து விடுகிறேன். அந்த பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” சுவாமிகள் கேட்ட கேள்வியை விட கேட்டபின் விட்ட லுக் சீடர்களுக்கு அடிவயிற்றில் பிரளயத்தையே உண்டு பண்ணியது.
”காதலும் அவ்வாறுதான். இந்த பூமியில் பிறந்த யாருக்கும் அவர்கள் துணை யாரென்று தெரிவதில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது” என்றார் சுவாமிகள்.
காதல் எல்லாம் போலி குருவே. சில காலம் சென்ற பின் போரடித்துவிடும்.
”இல்லை சிஷ்யா. ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது”
இவர் பல்பு வாங்க போறது என்னவோ நிஜம்தான் என்று முனகிய இன்னொரு சீடன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “குருவே த்ரிஷா போனா திவ்யா. அல்லது ரஞ்சிதா போனா ரகசியா என்பதுதானே காதல்?”
மீண்டும் தன் அ”கோர” சிரிப்பை உதிர்த்த சுவாமிகள் ஒரு கேள்வியை முன் வைத்தார். “ஒரு பூனையின் முன் இரு தட்டுகள். ஒன்றில் மீன் துண்டு. இன்னொன்றில் பால். பூனையின் கண் எதன் மேலிருக்கும்?”
யோசித்த சீடர்கள் ஆளுக்கொரு விடையை சொன்னார்கள்.
இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா?
இதற்கு மேலும் புரியவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாத சிஷ்யர்கள் குருவோடு ஒத்துப் போனார்கள். இந்தக் கொடுமையெல்லாம் கேள்விப்பட்ட ஆறு, பாலாஜியை அழைத்துக் கொண்டு மடத்திற்கு, ச்சே கிணத்தடிக்கு சென்றான். சீடர்களை ஓடுங்கடா என்று விரட்டிவிட்டு என்னடா பிரச்சினை என்றான் . தன் காதலை விளக்கிய ஏழு அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. அது சாத்தியமில்லை என்றபடி மிச்ச பியரை குடித்தான். ஏற்கனவே பியரில் அரைபாட்டில் இல்லாததைக் கண்ட ஆறு, இனிமேல் இவனை இங்கே விட்டால் கிணத்துக்குள் விழுந்து விடுவான் என்பதால் பாலாஜியின் துணையோடு அவனை அறைக்கு தூக்கி சென்றான்.
பதறியபடி வந்த நண்பர்களிடம் ”இன்னைக்கும் அரை பீர முழுசா குடிச்சிட்டாண்டா. ராவா அடிச்சானா என்னன்னு தெரியல” என்று புலம்பினான் ஆறு. நிலைத் தடுமாறி படுக்கையில் விழுந்த ஏழு சொன்னான் “ஹாஃப் முடிஞ்சுதா? இந்த மொடா குடிகாரனை கட்டிக்கிட்டு என்ன செய்ய போறாளோ அவ”. ஆறுவைத் தவிர அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள், மொடா குடிகாரன் என்ற சொல்லாடலைக் கேட்டு.
மறுநாள் அரைபீர் மயக்கம் தெளிந்து எழுந்த ஏழு, தேடிப்பிடித்து அதிகம் அழுக்கில்லாத ஒரு ஜீன்ஸூம், டீஷர்ட்டும் அணிந்துக் கொண்டு ஆறு எழுதி தந்த காதல் கடிதத்தோடு புறப்பட்டான். முதலாம் ஆண்டு கணிணி துறையில் படிக்கும் ஏழுவின் காதலி சரியாக எதிரில் வந்துக் கொண்டிருந்தாள். நேராக எதிரில் சென்ற ஏழு கடிதத்தை தந்து படிக்க சொன்னான். எழுத்துக் கூட்டி கூட்டி ஒரே ஒரு பக்கத்தை 14 நிமிடம் படித்த பின் வாய் திறந்தாள் ஏழுவின் தேவதை

“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஏழு தன் சீடர்களோடு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by கலைவேந்தன் Thu May 13, 2010 2:04 pm

நல்ல நகைச்சுவைக் கதை எழுதும் திற்மை உள்ளது கார்த்திக் உங்களிடம்...

அருமை அருமை... தொடருங்கள்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by ஹாசிம் Thu May 13, 2010 4:37 pm

அருமயானது தொடருங்கள் நண்பா ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 677196


நேசமுடன் ஹாசிம்
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by balakarthik Mon Apr 18, 2011 7:24 pm

நியாபகம் வருதே நியாபகம் வருதே இது செகேண்டு ரிலீசு அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by கலைவேந்தன் Mon Apr 18, 2011 8:40 pm

மீண்டும் படித்து ரசித்து சிரித்தேன் பாலா..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by கார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 9:18 pm

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 502589


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by dsudhanandan Thu Apr 21, 2011 2:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Empty Re: ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய தலைமுறையின் இலங்கையின் கொலை களங்கள் - காணொளி கிடைத்துவிட்டது :)
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்
» பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... செபி நிறுவனத்தில் வேலை
» வேலை வாய்ப்பு பகுதியில் குறிப்பிட்ட கம்பெனி -இல் இருந்து வேலை வாய்ப்பு பற்றி போடலாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum