ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது

Go down

வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது Empty வங்கி ஏ.டி.எம். முன்பு காவலாளி கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 5 பேர் மீது குண்டு பாய்ந்தது

Post by arularjuna Wed May 12, 2010 12:00 pm

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு வீதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம்.மில் 3 நாட்களுக்கு ஒரு முறை 75 லட்ச ரூபாய் வைக்கப்படுவது வழக்கம். இதற்கான பணத்தை வங்கி ஊழியர்கள் தஞ்சையில் இருந்து ஜீப்பில் கொண்டு வருவார்கள். அப்போது துப்பாக்கி ஏந்திய காவலாளி ஒருவரும் பாதுகாப்புக்காக உடன் வருவார்.

இதே போல நேற்றும் தஞ்சையில் இருந்து ஜீப்பில் பணம் கொண்டு வரப்பட்டது. அந்த ஜீப்பில் பாதுகாப்புக்காக ராஜேந்திரன் (வயது 51) என்பவர் கையில் துப்பாக்கியுடன் காவலாளியாக வந்தார். இவர் மன்னார்குடியைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர்.

பகல் 2 மணியளவில் அந்த ஜீப், ஏ.டி.எம். முன்பு வந்து நின்றது. அதில் இருந்த ஊழியர்கள் ஏ.டி.எம்.முக்குள் சென்று இயந்திரத்தில் பணத்தை வைக்கும் பணியில் ஈடுபட்டனர். காவலாளி ராஜேந்திரனும் அவர்களுடன் ஏ.டி.எம்.மையத்துக்குள் பாதுகாப்புக்காக நின்று இருந்தார். ஏ.டி.எம். மையத்தில் பணியாற்றி வரும் மற்றொரு காவலாளி வெளியே நின்று கொண்டு இருந்தார்.

இந்த நேரத்தில் சிலர் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். வெளியே நின்று இருந்த ஏ.டி.எம். மைய காவலாளி அவர்களை தடுத்து நிறுத்தி, "உள்ளே இயந்திரத்தில் பணம் நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள், அதனால் சிறிது நேரம் கழித்து வாருங்கள்'' என்று கூறினார். மோட்டார் சைக்கிள்களை ஓரமாக நிறுத்துங்கள் என்றும் கூறினார். இதனால் அந்த காவலாளிக்கும் பணம் எடுக்க வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப்பார்த்ததும் ஏ.டி.எம். மையத்துக்குள் நின்று இருந்த காவலாளி ராஜேந்திரன் துப்பாக்கியுடன் வெளியே ஓடி வந்தார். அவரும் பணம் எடுக்க வந்தவர்களை பார்த்து சத்தம்போட்டார். இதனால் தகராறு முற்றியது.

அவர்கள் போட்ட சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள கடைகாரர்கள் சிலரும் கடைகளுக்கு பொருள்வாங்க வந்த பொது மக்களும் விரைந்து வந்து என்ன பிரச்சினை என்று விசாரித்தார்கள். இதனால் அங்கு பெரிய கூட்டம் கூடியது.

இதற்கிடையே ஏ.டி.எம். மையம் இருக்கும் இடத்துக்கு சொந்தக்காரரான சுவாமி நாதன் அங்கு வந்து ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று விசாரித்தார். அப்போது காவலாளி ராஜேந்திரன் சுவாமிநாதனை பிடித்து தள்ளியதாக தெரிகிறது.

இதைப் பார்த்த சுவாமிநாதனின் தம்பி சீனிவாசன் (42) மற்றும் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி சுவாமிநாதன் (58), பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் சோமநாதராவ் (45), ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பாரதிதாசன் (35) ஆகியோர் காவலாளி ராஜேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த காவலாளி ராஜேந்திரன், திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். உடனே அங்கு கூடிநின்றவர்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ராஜேந்திரன் சுட்டதில் சீனிவாசனுக்கு கையிலும், சுவாமிநாதனுக்கு வயிற்றிலும், சோமநாதராவிற்கு மார்பிலும், பாரதிதாசனுக்கு தொடையிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

அந்த நேரத்தில் அருகே பஸ்சில் இருந்து இறங்கிய தஞ்சை நாலுகால் மண்டபம் ராஜராஜன் (61) என்பவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது நேரம் பகல் 2.15 மணி.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்றபட்டது. சிறிது நேரத்தில் பொதுமக்கள் மீண்டும் அங்கு திரண்டு வந்து ஏ.டி.எம். நிலையத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் தாக்குவார்கள் என்று பயந்த காவலாளி ராஜேந்திரன் ஏ.டி.எம். உள்ளே சென்று, கதவை மூடிவிட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாபநாசம் டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஏ.டி.எம். நிலையத்துக்குள் சென்று, காவலாளி ராஜேந்திரன் வைத்திருந்த துப்பாக்கியை வாங்கி ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் ராஜேந்திரனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வமும், மற்ற போலீசாரும் ராஜேந்திரனை போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றபோது அவர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்தனர். அப்போது காவலாளி ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கையில் இருந்த துப்பாக்கியை மின்னல் வேகத்தில் பறித்து சுட்டார்.

துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தின் இடது மார்பில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

உடனே, அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார், காவலாளி ராஜேந்திரனை மடக்கிப்பிடித்து ஜீப்பில் ஏற்றி கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாபநாசத்தில் பதற்றம் நிலவியது. பாபநாசம் கடைத்தெருவில் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்திவேலன் பாபநாசம் விரைந்து சென்றார். தாசில்தார் குணசேகரன், துணை தாசில்தார் பிச்சைபிள்ளை, கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், பன்னீர்செல்வத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவலாளி ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஏ.டி.எம். காவலாளியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் (56), இதற்கு முன் திருவிடைமருதூரில் பணியாற்றி வந்தார். திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு மனைவி சுந்தரி, மகன் வெங்கடேஷ், மகள் விஜயராணி ஆகியோர் உள்ளனர்.

பன்னீர்செல்வத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு ஆணை நேற்று முன் தினம் கிடைத்தது. நுண்ணறிவு பிரிவில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற அவர் இன்று சென்னைக்குச் சென்று பொறுப்பு ஏற்பதாக இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த சம்பவத்தில் பரிதாபமாக இறந்தார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
» எகிப்து நாட்டில் மீண்டும் கலவரம்; ராணுவம் சுட்டதில் 8 பேர் பலி 260 பேர் காயம்
» மாமல்லபுரம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கழுத்தை அறுத்து படுகொலை
» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
» வெளிநாட்டுச் செய்திகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum