ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சிவா Fri May 07, 2010 5:06 pm

ஒரு நகரத்தில் ஒரு நெசவாளியும் ஒரு தச்சனும் வாழ்ந்த வந்தனர்.

அவர்கள் இருவரும் உயிர் நண்பர்கள். தத்தம் தொழிலில் நல்ல தேர்ச்சியும் திறமையும் பெற்றவர்காக விளங்கினார்கள்.

தொழில் மூலம் அவர்களுக்கு நல்ல வருவாய் வந்து கொண்டிருந்தது. இருவரும் மணமாகாத இளைஞர்கள் கிடைக்கும் வருமானத்தைச் செலவழித்து உல்லாசமாகப் பொழுது போக்கி வந்தனர்.

வருவாய் நிறையக் கிடைக்கும் காரணத்தால் ஒரு குறைந்த நேரத்தான் தொழில் செய்வார்கள்.

பிறகு பகட்டாக உடையணிந்துக் கொண்டு வாசனா திரவியங்கள் தரித்து இருவரும் உல்லாசமாக ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள்.

கோயில்கள், திருவிழாக்கள், வேடிக்கை விளையாட்டுகள் எங்கு நடந்தாலும் இரு நண்பர்களும் அங்கு போய் விடுவார்கள் சந்தடியும் வட்டமும் நிறைந்த எந்த இடத்திலும் நண்பர்கள் இருவரையும் நிச்சயம் பார்க்கலாம். அந்த அளவுக்கு அவர்கள் கவலையற்ற உல்லாச புருஷர்களாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாரகள்.

ஒரு நாள் அந்த நாட்டு மன்னன் அரசாங்க விழா ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தினான்.

அரண்மனை வாசலில் நடைபெற்ற அந்த விழாவில் குடிமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

வாண வேடிக்கைகள், நடன நிகழ்ச்சிகள் என பலபொழுது போக்கு அம்சங்கள் விழாவில் முக்கியம் இடம் வகித்தன.

அவ்வளவு அமர்க்களமாக நடைபெறும் பொழுது போக்கு விழாவில் நண்பர்களான நெசவாளியும், தச்சனும் கலந்துக் கொள்ளாமலிருப்பார்களா ?

இராஜகுமாரர்கள் போல அவ்வளவுபகட்டாக தங்களை அலங்கரித்துக் கொண்டு வந்து நெசவாளியும் தச்சனும் அந்த விழாவில் வசதியான ஓரிடத்தில் இருந்து நிகழ்ச்சிகளை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

நெசவாளியின் பார்வை தற்செயலாக அரண்மனை உப்பரிக்கையின் மீது சென்றது.

அங்கே இளவரசி தன் தோழிகள் புடைசூழ அமர்ந்திருந்து விழா நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசிப்பதை நெசவளாயி கண்டுவிட்டான்.

அவனுக்கு கண்கள் அப்படியிப்படித் திரும்பால் இளவரசியின் கட்டழகு மேனியின் மீது பதிந்துவிட்டது.

பக்குவமான பருவ வயது, கைதேர்ந்த சிற்பி கடைந்தெடுத்த வடித்த சிலை போன்ற வளாளிப்பான உடல் அமைப்பு பகும் பொன்னை உருக்கிப் பூசியது போன்ற மேடனி செவ்விளநீர் போன்று உருண்டு திரண்மு மதர்தது பிறர் கண்களை உறுத்திக் கவர்ந்திழுக்கும் மார்பகங்கள், திருத்தமாக அமைந்திருந்த செம்பவள உதடுகள். சஞ்சலமுடன் சதா சூழன்று பேசும் விழிகள், மாறன் கனை தொடுக்கும் வில்லோ என வளைந்து அற்[தமாகக் காட்சி தந்த புருவங்கள், இளம்பிறை இறங்கி வந்து பொருந்தியது போன்ற நெற்றி பளப்ளபப்புடன் கூடிய நெளிவு தெளிவாகக் காட்சி தந்த கருங்கூந்தல் இவ்வளவும் அமைந்த கட்டழகுத் கருவூலமாகக் காட்சி தந்த இளவரசியை மனம் தடுமாற - மெய் மறந்து நோக்கியவாறு இருந்தான் நெசவாளி.

இளமைத் துடிப்புடன் திகழ்ந்து அவனது இதயம் கட்டவிழ்ந்து நெக்குறுகி அவன் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாகச் செயற்படலாயிற்று.

காம வெங்கனலால் அவனுடைய தேகம் கூட்டெரிக்கப்பட தாபம் தாள மாட்டாதவனாகத் தவியாகத் தவித்தான் நெசவாளி இளைஞன்.

விழா முடிவுற்றது இளவரசி விருட்டென்று எழுந்து தோழிகள் புடை சூழ உள்ளே போய்விட்டாள்.

உலக முழுவதையும் காரிருள் ஆக்கிரமித்து விட்டது போன்று ஏக்கத்தோடு இளவரசி சென்ற திசைபக்கமாகவே உன்மததம் பிடித்தவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் நெசவாளி.

மக்கள் கலைந்து செல்ல முற்பட்டனர்.

செதுக்கி வைத்தவன் சிலை போல ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்த நண்பனை அசைத்து உலுக்கி, என்ன நண்பா, உறங்கிவிட்டாயா ? வீட்டுக்குப் போக வேண்டாமோ ? என்று கேட்ட பிறகுதான் நெசவாளிக்கு உணர்வு திரும்பியது.

உறக்கத்தில் நடப்பவனைப் போல நடந்த நெசவாளி நண்பனை, தச்சன் கிட்டத்தட்ட தள்ளிக் கொண்டு வீட்டில் கொண்டுவந்து சேர்க்க வேண்டியவனாக இருந்தது.

இரவெல்லாம் நெசவாளி உறங்கவே இல்லை. இளவரசியின் நினைவிலேயே பொழுதைப் போக்கினான்.


நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சிவா Fri May 07, 2010 5:06 pm

கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான்.

இளவரசியுடன் உரையாடுவது போல் - உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.

விடிய விடியத் தூக்கமில்லாமல் படுக்கையில் கிடந்த நெசவாளி, விடிந்து நெடுநேரமாகியும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.

காலையில் வேலைக்குப் புறப்பட்ட தச்சன் நண்பனுடைய அறைக்கு வந்தான்.

வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடித் தயாராக இருக்கும் நெசவாளி அன்று அவ்வளவு நேரமாகியும் படுக்கையிலேயே கிடந்தது தச்சனுக்கு பெருவியப்பை அளித்தது.

அருகில் நெருங்கி நண்பனைக் கவனித்தான். அவன் தோற்றம் அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருந்தது.

கண்கள் குழிவிழுந்துக் கிடந்தன. உடல் வெளிறி இரத்தசோகை பிடித்தது போலக் காட்சியளித்தான். கை கால்கள் மெலிந்து - சோர்ந்து கிடந்தன.

முதல் நாள் இரவு அரண்மனை விழாவின் போது பார்த்த தன் நண்பனா இவன் என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது தச்சனுக்கு.

என்ன நண்பா ? இரவு என்ன ஆயிற்று. திடீரென ஏதாவது கடுமையான பிணிக்கு இலக்கானாயா ? என்று கவலையோடு கேட்டான் தச்சன்.

ஆமாம் படுமோசமான காம நோய் என்று சொல்ல வாயெடுத்த நெசவாளி பேச்சை மாற்றி, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இரவு சரியாக உறக்கமில்லை என்று மழுப்பினான்.

அவன் சொன்ன பதிலில் தச்சனுக்கு நம்பிக்கை எழவில்லை. திரும்பத் திரும்ப விசாரித்தும் நெசவாளியிடமிருந்து மழுப்பல் பதில்தான் கிடைத்தது.

இந்தப் பதிலைக் கேட்டுத் தச்சன் சலிப்பும் மனவருத்தமும் அடைந்தான்.

நண்பா நீ பேசுகிற விதம் ஒர் உண்மை நண்பன் தன் உற்ற நண்பனிடம் பேசுவது போல இல்லை. நண்பன் மன வருத்தப்படக்கூடும் என்று அஞ்சியோ, கேலி செய்வான் என்று வெட்கப்பட்டோ தன் மனத்தில் உள்ள உண்மையினைச் வெளிச் சொல்லாமல் மறைப்பவன் - மழுப்புபவனை உண்மை நண்பன் என்று கருதமுடியாது, நீ இரவு ஏதோ சகிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சல்பட்டு அவதியுற்றிருக்கிறாய் என்று தெளிவாகத் தெரிகின்றது. அப்படியிருந்தும் நீ என்னிடம் உண்மையை மறைக்கின்றாய் என்றால் இனி நான் உன் நண்பன் என்றோ - நீ என் நண்பன் என்றோ வீணாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. நான் வருகிறேன் என்ற கூறியவாறு தச்சன் மனவருத்தத்துடன் எழுந்தான்.

நெசவாளி படுக்கையிலிருந்து அவசர அவசரமாக எழுந்து தன் நண்பனின் கையைப் பிடித்து அமரச் செய்தான்.

பிறகு நண்பா என்னைத் தவறாகக் கருதிக் கொள்ளாதே உண்மை தெரிந்தால் என்னை நீ கேலி செய்வாயோ என்று வெட்கப்பட்டுத்தான் உண்மையைச் சொல்லத் தயங்கினேன். இப்போது எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன் என்ற கூறி இளவரசிமீது தனக்குக் கவர்ச்சி ஏற்பட்ட செய்தியினையும் அதன் விளைவாக இரவெல்லாம் தன் மனம் பட்ட பாட்டையும் விளக்கமாக எடுத்துரைத்தான்.

நண்பன் சொன்ன தகவலை தச்சன் அனுதாபத்துடன் செவிமடுத்தான்.

பிறகு, நண்பா, உன்னைப் போன்ற ஓர் இளைஞன் தன் பருவத்தையொத்த ஒரு இளம் பெண்மீது ஆசை கொள்வது முறைகேடோ - செய்யத் தகாத தவறோ அல்ல. ஆனால் நீயோ ஒரு நெசவுத் தொழிலாளி - அவளோ ஓர் அரசிளங்குமாரி, மடுவுக்கும் மலைக்குமுள்ள இந்தப் பெரிய வேறுபாட்டை எவ்வாறு சரி செய்யமுடியும் ? தவிரவும் விஷயம் வெளிப்பட்டால் மன்னருடைய கோபத்துக்கும் தண்டனைக்கும் இலக்காக நேரிடும். நண்பா, நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டான்.

நான் என்ன நினைக்க முடியும். இளவரசி மீது எனக்கு ஏற்பட்ட பற்றை எவ்விதமும்மாக மாற்றிக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. நீதான் இதற்கு ஏதாவது ஒரு உபாயம் செய்து தன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நெசவாளி மொழிந்தான்.

தச்சன் சிறிது நேரம் யோசித்தான்.

பிறகு நெசவாளியை நோக்கி, நண்பா, கவலையை விடு. எழுந்து குளித்துவிட்டு நிம்மதியாக உணவு கொள். நான் எப்பாடு பட்டாவது அந்த இளவரசியை நீ மணந்து இன்பமாக வாழ ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதி கொடுத்தான்.

நண்பனின் உறுதிமொழி நெசவாளிக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது. ஆகவே கவலையை விடுத்து தன் அன்றாட பணிகளில் ஊக்கமுடன் ஈடு பட்டான்.

நாலைந்து நாட்களுக்குப்பிறகு தச்சன் வினோதமான கருடவாகனம் ஒன்றை தயார் செய்து எடுத்துக் கொண்டு நெசவாளியிடம் வந்தான்.

தக்கவாறு வண்ணங்கள் பூசப்பட்டு உண்மையிலேயே உயிருடன் ஒரு கருடன் நிற்பதுபோல அது காட்சியளித்தது.

மற்றொரு அற்புதத்தையும் தச்சன் அந்தக் கருட வாகனத்தில் அமைத்திருந்தான்.

தரையிலிருந்து கருடன் ஆகாயத்தில் எழும்பிச் சென்று பறப்பதற்கும் விரும்பும் போது பறக்கும் கருடனை கீழே இறங்கச் செய்வதற்கும் உரிய விசைகள் அந்தக் கருட வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

தச்சன் எந்த விசையை எவ்வாறு இயக்கி ஆகாயத்தில் கருடனைப் பறக்கச் செய்யலாம் என்று என்பது குறித்தும் பறக்கும் கருடனை எவ்வாறு கீழே இறக்கலாம் என்பது குறித்தும் நெசவாளிக்கு விளக்கி அந்த விசைகளை இயக்குவதற்கான பயிற்சியினையும் அளித்தான்.

நண்பா, இளவரசியை எப்படியாவது அடையவழி சொல்லுமாறு கேட்டேன் நீ இந்த விளையாட்டுப் பொம்மையைக் கொண்டு வந்திருக்கிறாயே என்று நெசவாளி கேட்டான்.

தச்சன் சிரித்துக் கொண்டு, நண்பா இந்த கருட வாகனத்தை ஒரு நோக்கத்துடன் நான் செய்திருக்கின்றேன். நம்முடைய அரசரும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் மகாவிஷ்ணுவின் தீவிரமான பக்தர்களாகும். நீ மகாவிஷ்ணு போல வேடம் தரித்துக் கொண்டு இரவு நேரத்தில் இந்த கருடவாகனத்தில் ஏறி அமர்ந்து, அரண்மனை உப்பரிக்கையில் சென்று இறங்கு.

இளவரசி இரவு நேரத்தில் உப்பரிக்கையில்தான் உறங்குகிறாள். தோழிகள் எல்லாம் அவளை விட்டு விலகி சற்று மறைவான இடத்தில் உறங்குகின்றனர்.

நீ மகா விஷ்ணுவே மேல் உலகிலிருந்து இறங்கி வந்திருப்பதாக இளவரசி நம்புமாறு நடித்து அவள் அன்பையும் காதலையும் பெறு. பிறகு அவளைக் கந்தர்வ முறைப் படி திருமணம் செய்து கொள். அதற்கு பிறகு உன் சாமர்த்தியம் * என்று கூறினான்.

நெசவாளி மகிழ்ச்சிப் பெருக்குடன் தன் நண்பனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான அவனுக்குப் பலவாறாக நன்றி சொன்னான்.

தச்சன் பின்னர் நண்பனிடம் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டான்.

நெசவாளி பரபரப்புடனும், பெருந்தவிப்புடனும் பகல் பொழுது போய் இரவு பொழுது எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்திருந்தான்.

ஒருவழியாக இரவு வந்தது.

நெசவாளி எழுந்து நீராடினான். பட்டினால் ஆன அழகிய ஆடைகளை அணிந்து கொண்டான். நறுமணம் கமழும் வாசனா திரவியங்களை உடல் முழுவதிலும் பீசிக் கொண்டான். மணம் நிறைந்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டான். தாம்பூலம் தரித்து உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டான். தக்க அணிகலன்களை அணிந்து தலையில் ஒரு கிரீடத்தையும் சூட்டிக் கொண்டான்.

பிறகு கருட வாகனத்தில் ஆரோகணித்து அதனைப் பறக்க வைப்பதற்கான விசை முடுக்கினான்.

நெசவாளியைச் சுமந்து கொண்டு கருட வாகனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது.

கருடவாகனம் அரண்மணை உப்பரிகை மீது பறந்து கொண்டிருக்கும்போது நெசவாளி, அதனை கீழிறக்குவதற்காக விசை முடுக்கினான்.

கருட வாகனம் நெசவாளியைச் சுமந்தவாறு உப்பரிகையின் மீது இறங்கியது.

அந்தச் சமளத்தில் இளவரசி மட்டும். உறங்காமல் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பாதுகாவலாக இருந்த தோழியர் சற்றுத் தள்ளித் தனியிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த நிலா குளிர்ந்த ஒளியை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது. சிலுசிலுவென வீசிய இளந்தென்றல் இதயத்தைத் தடவிக் கொடுத்தது.

இன்பகரமான காதல் நினைவுகள் உள்ளத்திலே அலை மோத இனிய கனவுகளைக் கண்டாவாறு இளவரசி அமர்ந்திருந்தாள்.

கொஞ்ச காலமாக அவள் மனத்திலே திருமண ஆசை துளிர்விட்டுக் கொண்டிருந்தது.


நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சிவா Fri May 07, 2010 5:06 pm

தமக்கேற்ற நாயகன் எங்கு பிறந்து வளர்ந்து வருகின்றானோ, எப்பொழுது வந்து கைத்தலம் பற்றிக் கடிமணம் புரிவானோ என்று மனத்திலே ஏக்கம் குடிகொண்டிரந்தது.

திடீரென ஏதோ அரவம் கேட்கவே கண்களைத் திறந்து நோக்கியவள் திடுக்கிட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

தனக்கெதிரே மகாவிஷ்ணு தரிசனம் கொடுப்பதைக் கண்டு பெரு வியப்பும் திகைப்பும் அடைந்தாள்.

பக்திப் பரவசம் மேலிட்டவளாக மகாவிஷ்ணு வேடத்திலிருக்கும நெசவாளியின் கால்களில் வீழ்ந்து வணங்கினாள்.

நான் காண்பது கனவா ? தேவர்க்கெல்லாம் தேவராகத் திகழும் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைத்திருக்கின்றதா ? என் கண்களை என்னால் நம்ப முடியவில்லையே எனப் பலவாறு அரற்றினாள் - மிழற்றினாள் இளவரசி.

நெசவாளி இளவரசியை நெருங்கி அவள் கரங்களை ஆதரவுடன் பற்றி, கண்ணே, உன்னை ஆட்கொண்டு கடமணம் புரியும் நோக்கத்துடன் தான் இந்த மண்ணுலகிற்கு வந்துள்ளோம். கவலைப்படாதே. உன் மனோ பீஷ்டம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது என்று மிகவும் சாதுரியமாக உரையாடினான்.

ஆவனுடைய தந்திரப் பேச்சை இளவரசி முற்றிலுமாக நம்பிவிட்டாள். நெசவாளி மகாவிஷ்ணுவேதான் என்பதில் அவளுக்குச் சற்றும் சந்தேகம் தோன்றவில்லை.

பிரபோ * என் செவிகளை என்னாலேயே நம்பமுடியவில்லையே * தேவலோகப் பெண்களுக்கும் கிட்டாத பாக்கியம் எனக்கு கிட்டிவிட்டதா * ஆனால் எம்பெருமானே, நான் கேவலம் மானிடப் பெண்ணல்லவா * தங்களைத் திருமணம் செய்து கொள்ள எனக்கு அருகதை ஏது ? என்று தயக்கத்தோடு மொழிந்தாள் இளவரசி.

கண்ணே உனக்கு பூர்வ ஜென்ம நினைவு மறந்து விட்டது போலும். நீ என்னுடைய தர்மபத்தினியாகிய மகாலட்சுமி அல்லவா * ஒரு சாபம் காரணமாக நீ மண்ணுலகில் மானுடப்பிறவி எடுக்க வேண்டி நேரிட்டது. தக்க நேரத்தில் வந்து மணம் புரிந்து ஆட்கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அந்த வாக்குறதியை நிறைவேற்றும் நோக்கத்துடன் தான் வந்திருக்கின்றோம் எனக் கம்பீரமாக மொழிந்தான் நெசவாளி.

இளவரசி பேரானந்த வெள்ளத்தில் திளைக்கத் தொடங்கிவிட்டாள்.

பெருமானே நான் பெரும் பேறு பெற்றேன். நான் எடுத்த பிறவியும் நற்பயனை அடைந்தது என இளவரசி மெய்சிலிர்க்க கூறினாள்.

இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என எண்ணிய நெசவாளி இளவரசியைப் பேரார்வத்துடன் இழுத்து இறுக அணைத்துக் கொண்டு அவளுடைய மாங்கனிக் கன்னத்தில் முத்தமாரி பொழிந்தான்.

நெசவாளியும், இளவரசியும் அந்தக் கணமே காந்தருவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.

இரவெல்லாம் அவர்கள் இருவரும் உறங்காது இடைவிடாமல் இன்பம் அனுபவித்து மகிழ்ந்தனர்.

விடியற்காலையில் நெசவாளி இளவரசியை நோக்கி, இளவரசி இந்தக் கணமே உன்னை வைகுண்டத்துக்கு அழைத்தேகுவது பெரிய காரியமல்ல. ஆனால் மகாவிஷ்ணு ஒரு கன்னிப் பெண்ணை கள்ளத்தனமாகக் கடத்திச் சென்றுவிட்டதாக ஊர் பழதூற்றும். தக்க தருணத்தில் என் பெற்றோர் சம்மதத்துடன் பகிரங்கமாகத் திருமணம் செய்த உன்னை அழைத்தேகுவதே முறையாகும். இப்பொழுது நான் வைகுந்தத்திற்குப் புறப்படுகின்றேன். இரவு மீண்டும் வருவேன் எனக் கூறி இளவரசியிடம் பிரியா விடை பெற்றுத் தனது கருட வாகனத்திலேறி ஆகாய மார்க்கமாகப் புறப்பட்டான்.

அந்தக் காட்சியினை மெய்மறந்து நோக்கி புளகாங்கிதம் அடைந்தவறாறு சிiயாக அசைவற்று நின்றாள் இளவரசி.

ஒவ்வொரு நாள் இரவும் நெசவாளி மகாவிஷ்ணு உருவத்தில் கருட வாகனமேறி உப்பரிக்கைக்கு வந்து விடுவான். இளவரசியும் அவனும் விடிய விடிய இன்பத்தில் திளைத்துக் கிடப்பார்கள்.

அதிகாலையில் நெசவாளி புறப்பட்டு விடுவான்.

இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பிறர் அறியாமல் காதல் வயப்பட்டு ஆடவனுடன் கலவி இன்பம் அனுபவிக்கும் கன்னிப் பெண்களின் சில நடவடிக்கைகளைக் கொண்டும், அவர்கள் உடல் நிலையில் தோன்றும் மாறுதல் குறிகளைக் கொண்டும் எளிதாக யூகித்து உணர்ந்து கொள்ள முடியும்.

இளவரசியின் தோழிகளுக்கு இளவரசி நடவடிக்கைகள் - உடல் நிலை குறி ஆகியவற்றிலிருந்து அவள் காதல் வயப்பட்டு யாருடனோ கலவி இன்பம் பெறுகின்றாள் என்பது விளங்கிவிட்டது.

தாங்கள் அத்தனை பேர் பாதுகாவலுக்கு இருந்தும் இவ்வாறு நடந்து விட்டதே. விஷயம் மன்னர் செவிக்கு எட்டினால் மிகக் கடுமையாகத் தண்டித்து விடுவாரே என்று தோழிகள் நடுங்கினர்.

விஷயம் மன்னர் காதுகளுக்குத் தானாக எட்டி விட்டால் மன்னரின் சினத்துக்கு எல்லையே இல்லாது போய்விடும். அதைவிடத் தாங்களாக முந்திக் கொண்டு விட்டால் தண்டனையாவது குறைவாகக் கிடைக்கும் என எண்ணித் தோழிகள் மன்னரிடம் ஓடிச் சென்று இளவரசி தெடார்பாக தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஐயத்தைக் கூறி நடுங்கத்துடன் நின்றனர்.

மன்னன் மிகவும் கலக்கமும் குழப்பமும் அடைந்தான். பலவாறாக எண்ணங்களை அலைவிட்டு நிம்மதியிழந்தான்.

குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது என்றால் அதன் கூடவே பிரச்சினைகளும் பிறந்து விடுகின்றன. அந்தப் பெண் குழந்தை காரணமாகப் பெற்றோர் பலவிதமான கவலைகளுக்கு இலக்காகிறார்கள்.

திருமண வயதாகிவிட்டால் பெண் மனம் பேதலிக்காமல் இருக்க வேண்டும். பருவக் கோளாறு காரணமாக தெரிந்தோ - தெரிந்தோ - தெரியாமலோ தவறிழைத்துவிடக் கூடாதே என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியிருக்கின்றது.

பெண்ணுக்கு தகுந்த கணவன் கிடைக்க வேண்டுமே திருமணம் நன்றாக நடைபெற வேண்டுமே என்பது அடுத்து ஏற்படக்கூடிய கவலை.

மணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்ற பெண் பிறந்த வீட்டுப் பெருமையைக் காப்பாற்றி ஒழுக்கத்தோடு குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டுமே என்று ஒரு கவலை.

பெண் தாய்மைப் பேறு பெற்றால் நல்லபடியாகக் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டுமே என்று கவலை.

இப்படியாக ஒரு பெண் குழந்தை பிறந்தால்- பெற்ற அந்தக் குழந்தையின் பொருட்டு வாழ்நாள் முழுவதும் கவலைப்பட வேண்டியிருக்கின்றது. இந்த மாதிரி கவலைகள் ஓர் ஆண்டியின் குடும்பமாக இருந்தாலும் அரசனின் குடும்பமாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது.

என் மகள் அப்படியொன்றும் அப்பாவி அல்ல அறிவு கெட்டவள் அல்ல இயல்பிலேயே நல்ல குணச் சிறப்பும் பின்னர் முயற்சியின் மூலம் தகுந்த கல்விப்பயிற்சியும் பெற்றவள்தான். ஆழ்ந்த தெய்வபக்தி உள்ளவள் தான். அப்படியிருந்தும் அவளுடைய ஒழுக்கத்தை பற்றி ஐயப்படவேண்டிய நிலை வந்திருக்கின்றது.

இவ்வாறெல்லாம் எண்ணியெண்ணி மனம் நொந்தவாறு அந்தப்புரம் நோக்கிச் சென்றான் மன்னன்.

கோபாவேசத்துடன் வந்த மன்னரைக் கண்டு அரசி திடுக்குற்றாள்.


நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சிவா Fri May 07, 2010 5:07 pm

மன்னரை வரவேற்று அமரச் செய்து கணவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள்.

மன்னர் இளவரசி குறித்து தோழிகள் சொன்ன தகவலை மிகவும் மன வேதனையுடன் மனைவிக்கு எடுத்துரைத்தான்.

மகள் மீது ஓரேயடியாக சந்தேகப்பட அரசியின் மனம் இடந்தரவில்லை.

நாதா, நமது மகள் அப்படியொன்றும் சாதாரணப் பெண் அல்ல. நமது குல தெய்வமாம் மகா விஷ்ணுவின் தேவியாகிய மகாலட்சுமியின் அம்சம் அவள். ஆகவே சாமனிய மானிடப் பெண்போல அவள் கேவலமாக நடந்த கொள்வாள் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நமது மகள் எந்த வகையிலும் பொய் சொல்ல கூடியவள் அல்ல. எதற்கும் அவளை நேரடியாக அழைத்து விசாரித்து விடுவோம் என்று கூறியவாறு பணிப்பெண் ஒருத்தியை அனுப்பி இளவரசியை அழைத்து வரச் சொன்னாள்.

இளவரசி வந்தாள்.

மன்னரின் முன்னிலையிலேயே அரசி இளவரசியைத் தாங்கள் ஐயப்படும் விஷயம் குறித்து விசாரித்தாள்.

இளவரசி செய்தியைத் தனது வாயாலே சொல்வதற்கு சற்று வெட்கப்பட்டாளே தவிர, அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.

கருட வாகனத்தில் ஆரோகணித்து மகாவிஷ்ணு உப்பரிகையில் வந்து இறங்கியது முதல் அன்று வரை நிகழ்ந்த அவ்வளவு விஷயங்களையும் இளவரசி எடுத்துரைத்தாள்.

அரசியின் முகம் மகிழ்ச்சிப் பெருமிதத்தால் மலர்ந்தது. மன்னரும் மிகுந்த மகிழ்;;ச்சியடைந்தார்.

அன்று இரவு இளவரசியுடன் சேர்ந்து அரசனும் அரசியும் மகாவிஷ்ணுவைத் தரிசித்தனர். கருட வாகனத்தில் ஆகாய மார்க்கமாக வந்திறங்கிய நெசவாளி மகா விஷ்ணுவேதான் என அரசனும், அரசியும் அவன் பாதததில் வீழ்ந்து வணங்கினர்.

தங்கள் மகளை முறைப்படி திருமணம் செய்து ஏற்று தங்களக்கு அருள் பாலிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

மகாவிஷ்ணு உருவத்திலிருந்த நெசவாளி அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மரியாதைக்குரிய பக்த சிரோண்மணிகளே, உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். என்னுடைய தெய்வ உருவுடன் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆகவே சாமானிய மானிடர்களைப் போல உருமாறிக் கொள்கிறேன். எங்களுடைய திருமணம் வெளி உலகத்திற்குத் தெரிய வேண்டாம். சிலகாலம் மானிட உருவத்திலேயே இருந்து உங்களையெல்லாம் மகிழ்வித்து விட்டு, பிறகு இளவரசியைத் தெய்வ உருவிiளாக மாற்றி அழைத்துக் கொண்டு வைகுந்தம் செல்லுகிறேன். என மொழிந்தான்.

பின்னர் நெசவாளி மகாவிஷ்ணு வேடத்தைக் கலைந்து விட்டு இயல்பான உருவத்துடன் இளவரசியை மணந்து ஒரு தனி அரண்மனையில் சுகபோக வசதிகளுடன் இன்பம் அனுபவித்து வந்தான்.

ஒருநாள் அயல் நாட்டு மன்னன் ஒரு பெரும்படையுடன் படையயெடுத்துக் கொண்டு வந்து விட்டான்.

தன்னுடைய சிறிய சேனையை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியும் என்று மன்னனுக்கு தோன்றவில்லை.

தமது மருமகன் மகாவிஷ்ணுவாக இருப்பதால் அவருடைய உதவி கிடைத்தால் எதிரிப் படைகளைத் துவம்சம் செய்து எளிதாக வெற்றி பெற முடியும் என்று எண்ணி மன்னன் மகளிடம் தனது கருத்தைச் சொன்னான்.

இளவரசி தந்தையின் விருப்பத்தை கணவனிடம் சொன்னாள்.

நெசவாளியின் நிலை திருடனுக்குத் தேள் கொட்டியது போன்று ஆகிவிட்டது.

நெசவாளிக்குப் போர் பயிற்சியோ, போர் செய்வதற்கான வீரமோ - உடல் பலமோ கிடையாது.

போரில் உதவ முடியாது என்று சொன்னால் குட்டு வெளிப்பட்டுவிடும். நாய் வேடம் போட்டால் குரைக்கப் பின் வாங்கலாமா ?

சரி உதவுகிறேன் என்று நெசவாளி வாக்குறுதி அளித்து விட்டான்.

மறுநாள் நெசவாளி மகாவிஷ்ணு வேடம் தரித்து சங்கு சக்கரம் போன்ற ஆயுதங்களைத் தாங்கி, கருட வாகனத்தின் மீது ஏறி வான மார்க்கமாகப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டான்.

அந்தக் காட்சியை மகாவிஷ்ணுவின் வாகனமாகிய கருடன் கண்டு திடுக்கிட்டு மகாவிஷ்ணுவைச் சென்று சந்தித்து வணங்கியது.

பிரபோ, நெசவாளி ஒருவன் அரசிளங்குமரியின் மீது கொண்ட காதலால் தங்களைப் போன்று வேடமிட்டு அரசகுமாரியை மயக்கி திருமணம் செய்து கொண்டான். நெசவாளியை உண்மையாக மகாவிஷ்ணு என்று நம்பி தனது நாட்டின் மீது படையெடுத்த எதிரியை விரட்ட உதவுமாறு மன்னன் கேட்டுக் கொண்டான். வேறு வழி யில்லாமல் நெசவாளி தங்களைப் போன்று உரவம் தரித்த நிலையில் விசை அமைக்கப்பட்ட கருட வாகனத்தில் ஏறி ஆகாய மார்க்கமாகப் போர் முனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். எந்தவிதப் போர்முறையும் அறியாத நெசவாளியை எதிரி அரசன் கொன்றுவிட்டால் மகாவிஷணுவே போரில் தோற்று இறந்துவிட்டதாக மக்கள் நம்பி விடுவார்கள். அப்புறம் மக்களுக்குத் தெய்வ நம்பிக்கை அற்றுவிடும். கடவுளர்கள் சக்தி அற்றவர்களாகி விட்டார்கள் என எண்ணி மக்கள் நாத்திகர்களாகி விடுவார்கள். ஆகவே தாங்கள் எவ்விதமாவது நெசவாளிக்கு உதவ வேண்டும். எனக் கருடன் கேட்டுக் கொண்டது.

உடனே மகாவிஷ்ணு தம்முடைய பேராற்றலை நெசவாளியின் உடலில் புகுமாறு செலுத்தினர்.

தெய்வ ஆற்றல் கைவரப் பெற்றதால் நெசவாளி தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்து எதிரி மன்னனின் கழுத்தைத் துண்டித்தான்.

மகாவிஷ்ணுவே ஆகாய மார்க்கமாக வந்து சக்கராயுதத்தைப் பிரயோகித்து தங்கள் மன்னரின் கழுத்தைத் துண்டித்துப் போட்ட காட்சியைக் கண்ட எதிரிப் படைகள் உயிர் பிழைத்தால் போதும் எனச் சிதறி ஓடி விட்டன.

மன்னன் பெரு வெற்றி பெற்று - வெற்றிக்கு ஆதாரமாக இருந்த மருமகனான மகாவிஷ்ணு வேடத்திலிருந்த நெசவாளியின் பாதம் பணிந்து நன்றி தெரிவித்துக் கொண்டான்.

நாளடைவில் நெசவாளி உண்மை மகாவிஷ்ணு அல்ல என்ற உண்மை மன்னனுக்குத் தெரிய வந்தது.

மன்னன் அது குறித்து வருத்தமடையவில்லை. தமது மருமகன் தெய்வாம்சம் பெற்றவன் என்ற விஷயமே அவனுக்குத் திருப்பதியளிப்பதாக இருந்தது.

இளவரசியும் நெசவாளியும் நெடுங்காலம் இன்பத்துடன் வாழ்ந்தனர்.

மன்னர் மறைவிற்குப் பிறகு நெசவாளி மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து கொண்டான்.

ஒரு சந்தர்ப்பம் அமையும் போது மனிதன் செய்யும் முயற்சிக்குக் கடவுளும் துணை நிற்பார்.


நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சரவணன் Fri May 07, 2010 5:44 pm

நல்ல கதை. வாழ்த்துகள்!!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by Aathira Fri May 07, 2010 5:47 pm

சாரி.. அவசர வேலை.அரை மணியில் வந்து நிதானமாகப் படித்து விட்டு கருத்து சொல்றேன்.. நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு 154550


நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Aநெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Aநெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Tநெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Hநெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Iநெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Rநெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Aநெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சரவணன் Fri May 07, 2010 5:50 pm

Aathira wrote:சாரி.. அவசர வேலை.அரை மணியில் வந்து நிதானமாகப் படித்து விட்டு கருத்து சொல்றேன்.. நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு 154550

கைதான தட்ட போறீங்க. அத இப்பவோ தட்டிடுங்களேன்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சிவா Fri May 07, 2010 5:52 pm

பிச்ச wrote:
Aathira wrote:சாரி.. அவசர வேலை.அரை மணியில் வந்து நிதானமாகப் படித்து விட்டு கருத்து சொல்றேன்.. நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு 154550

கைதான தட்ட போறீங்க. அத இப்பவோ தட்டிடுங்களேன்!

இந்தக் கருத்துக்கும் எனக்கும் துளியும் தொடர்பில்லை! நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு 102564


நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சரவணன் Fri May 07, 2010 5:55 pm

சிவா wrote:
பிச்ச wrote:
Aathira wrote:சாரி.. அவசர வேலை.அரை மணியில் வந்து நிதானமாகப் படித்து விட்டு கருத்து சொல்றேன்.. நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு 154550

கைதான தட்ட போறீங்க. அத இப்பவோ தட்டிடுங்களேன்!
இந்தக் கருத்துக்கும் எனக்கும் துளியும் தொடர்பில்லை! நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு 102564

நீங்க சொல்லித்தானே எழுதுனேன். இப்படி கால வரிட்டீன்களே தல! நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Icon_eek


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சிவா Fri May 07, 2010 5:57 pm

பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:
Aathira wrote:சாரி.. அவசர வேலை.அரை மணியில் வந்து நிதானமாகப் படித்து விட்டு கருத்து சொல்றேன்.. நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு 154550

கைதான தட்ட போறீங்க. அத இப்பவோ தட்டிடுங்களேன்!
இந்தக் கருத்துக்கும் எனக்கும் துளியும் தொடர்பில்லை! நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு 102564

நீங்க சொல்லித்தானே எழுதுனேன். இப்படி கால வரிட்டீன்களே தல! நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Icon_eek

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Affraid நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Affraid


நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு Empty Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum