Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
+6
வேணு
செங்கை ஆழியன்
சிவா
ஹாசிம்
கலைப்பிரியன்
ப்ரியா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
First topic message reminder :
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள்..
தமிழ் மொழி சம்பந்தமான தெளிவின்மைகள், சந்தேகங்கள், இலக்கணம் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடும் கருத்துக் களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரியை ஆரம்பித்து வைக்கின்றேன்.எமக்கு ஏற்படும் தெளிவின்மைகளை எமது ஆசான்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்....
என்னங்க யாருங்க ஆரம்பித்து வைப்பது .
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள்..
தமிழ் மொழி சம்பந்தமான தெளிவின்மைகள், சந்தேகங்கள், இலக்கணம் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடும் கருத்துக் களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரியை ஆரம்பித்து வைக்கின்றேன்.எமக்கு ஏற்படும் தெளிவின்மைகளை எமது ஆசான்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்....
என்னங்க யாருங்க ஆரம்பித்து வைப்பது .
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
செங்கை ஆழியன் wrote:நன்றி பிரியன் , நாளை மறுதினம் அரசபணிக்கு ஒரு தேர்வு இருக்கு எனக்கு ரொம்ப பயன்படும் ....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எனக்கும் தான் இருக்கு கண்ணா ...
கை + நூல் = .......................?
வெண்மை +நெய் =.........................?
உம்பர் என்பதன் பொருள் ?
விடை பகிரவும் ......
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
அப்போ இன்னும் தமிழ்ல நிறைய கத்துக்கணும் போல இருக்கே சொல்லுங்க
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
ஆமா நீங்க நிறைய கத்துக்கணும் மணி ....maniajith007 wrote:அப்போ இன்னும் தமிழ்ல நிறைய கத்துக்கணும் போல இருக்கே சொல்லுங்க
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
நிர்மல் wrote:ஆமா நீங்க நிறைய கத்துக்கணும் மணி ....maniajith007 wrote:அப்போ இன்னும் தமிழ்ல நிறைய கத்துக்கணும் போல இருக்கே சொல்லுங்க
உண்மை உண்மை பெரியவர்கள் வழிநடத்துங்கள்
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
பயனுள்ள திரி பதிவர்களிற்கு நன்றிகள் ![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
ஏன் இந்த அற்புதமான தொடர் கருத்துக்கள் நின்று விட்டன. உறுப்பினர்களில் யாரும் தமிழ் ஆசிரியர் இல்லையா? யாராவது ஒருவர் சந்து இலக்கணம் - அதாவது இரண்டு சொற்களை இணைக்கும் க், ப், த், போன்றவை எப்போது எங்கே வரும் என்பதை சொல்லும் இலக்கணம் - சொல்லிக் கொடுத்தால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தெரிந்தவர்கள் யாரேனும் செய்வீர்களா?
tdrajeswaran- பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
தமிழ்மொழியை கற்க விரும்புவோரும் அதன் இலக்கண நடையை அறிய அனைவருக்கும் பயன்படும் வகையில் விரிவாக எழுதப்பட்ட இலக்கண ஆய்வுநூல்
இந்நூலின் ஆசிரியர் திரு.எம்.ஏ.நுஃமான்
இதை pdf கோப்பாக தரவிறக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்.
தரவிறக்கம்
நன்றி
www.noolaham.org
இந்நூலின் ஆசிரியர் திரு.எம்.ஏ.நுஃமான்
இதை pdf கோப்பாக தரவிறக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்.
தரவிறக்கம்
நன்றி
www.noolaham.org
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
பகிர்விற்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
சந்தி இலக்கணம்
தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும்பெரிய பகுதியாகவும்
இருப்பது சந்தி இலக்கணம் ஆகும். சந்திஇலக்கணம் என்பது இரண்டு சொற்கள்
சேரும்போது ஏற்படும்மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும். இலக்கண
நூல்களைஇயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சிஇலக்கணம் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டாக
இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும்இடையில் ப் என்ற மெய் எழுத்து தோன்றி இருக்கிறது. இவ்வாறுஇரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள்ஏற்படும்.
சந்தி வகைகள்
இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும்.
எனவே இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக
வருதல்,தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும்வரும் என
அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன.முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லைவருமொழி என்றும்
கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின்இறுதி எழுத்துக்கும், வருமொழியின்
முதல் எழுத்துக்கும் ஏற்பஅமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும்
இறுதிஎழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.
வல்லின மெய்கள் அல்லது ஒற்றெழுத்துக்கள் மிகுமிடங்கள், மிகா
இடங்களை அறிந்து கொள்வதால் பிழையின்றித் தமிழை எழுதிட இயலும்.
எளிமையான சில இலக்கண விதிகளை விளக்கிக் கூறுவதால் அவர்கட்கு மொழிப்பயிற்சி இலகுவாகலாம்.
கல்லி கேள்வியா? கல்விக் கேள்வியா?
பத்து பதினைந்தா? பத்துப் பதினைந்தா?
பாடா பெண்ணா? பாடாப் பெண்ணா?
எழுத தெரியுமா? எழுதத் தெரியுமா?
இவை
போல்வன குழப்பம் தரும் சில சான்றுகள். இவற்றில் அடிக்கோடிட்ட எழுத்துக்கள்
ஒற்று / புள்ளி எழுத்துக்கள், இவை தொடரில் மிகுந்து வருதலே 'ஒற்று
மிகுதல்' அல்லது 'வல்லினம் மிகுதல்' ஆகும்.
எ-காட்டு
வேலை செய்தான்
வேலைச் செய்தான்
'வேலை
செய்தான்' என்பதில் ஒற்று மிகவில்லை. இது, பணியைச் செய்தான் என்ற பொருள்பட
அமைந்தது. 'வேலைச் செய்தான்' என்பதில் ஒற்று (ச்) மிகுந்தது. 'வேல்' எனும்
கருவியைச் (வேல்+ஐ) செய்தான் என்ற பொருள் பெற்றது.
இவ்விரு தொடர்களும் ஒற்று மிகுந்தாலும், ஒற்று மிகாமலும் இரு வேறு பொருள்பட்டன.
இரு சொற்கள் இணையுமிடத்தில் 'ஒற்று மிகுதல்' உண்டாகும். சொற்கள் இணைவதைப் ‘புணர்ச்சி’ என்பர்.
புணர்ச்சி என்பதன் விளக்கம்
மெய், உயிர் ஆகியவற்றை முதலும் இறுதியுமாகக் கொண்ட பகாப்பதம்
(பிரிக்க
முடியாத சொல்) பகுபதம் (பிரிக்கக் கூடிய சொல்) ஆகிய இரு பதங்களும்
தன்னொடுதானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிப்பொருள் அல்லது வேற்றுமைப்
பொருளினால் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவோ,
விகாரமாகவோ புணருவது 'புணர்ச்சி' எனப்படும்.
(நன்னூல். சூத்: )
எ-காட்டு
பூ + கூட்டம் = பூக்கூட்டம்
'பூ' என்பது - நிலைமொழி (நின்ற சொல்)
'கூட்டம்' என்பது - வருமொழி (வருகின்ற சொல்)
'க்' என்ற ஒற்று / மெய் / புள்ளியெழுத்து இவ்விரண்டின் இடையே மிக்கு நின்றது. 'பூக்கூட்டமானது.
வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம் - ய் ர் ல் வ் ழ் ள் - (18 மெய்கள்)
என
3 வகையாக மெய்யெழுத்துக்களமையும். வல்லின மெய்களுள் ட், ற் நீங்கிய பிற
நான்கும் (க், ச், த் ப்) 12 உயிரெழுத்துக்களுடன் சேருகின்றன. உயிர்மெய்யாக
மாறி சொல்லின் முதலில் வருகின்றன. (ட், ற் என்பன - மொழி முதலில் வாரா).
வருமொழியில் க், ச், த், ப் - வரும்பொழுது எந்த மெய் வருகிறதோ அந்த
மெய்க்கு ஏற்ற மெய்யெழுத்து புணர்ச்சியில் மிகுதலை 'வல்லினம் மிகுதல்'
என்பர்.
புணர்ச்சியின் மாற்றங்கள்:
இரு சொற்கள்
(நிலை மொழி + வருமொழி) சேருமிடத்துப் புணர்ச்சி மாற்றங்கள் நிகழும்.
அவ்விடத்து சொற்கள் இயல்பாகப் புணருதலை 'இயல்புப் புணர்ச்சி'
என்றும், விகாரமாக/ மாற்றங்களுடன் புணருதலை 'விகாரப் புணர்ச்சி' என்றும்
இரு வகைப்படுத்துவர்.
இயல்புப் புணர்ச்சி:
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாது சேருவது இயல்புப் புணர்ச்சி.
எ-காட்டு
வாழை + மரம் = வாழைமரம்
பொன் + மலை = பொன்மலை
விகாரப் புணர்ச்சி:
புணர்ச்சியில், ஓர் (1) எழுத்தோ, சாரியையோ புதிதாகத் தோன்றுதல்,
(2) வேறுபடுதல் (3) கெடுதல் - என்ற மூன்று நிலைகளில் மாற்றம் பெறலாம்.
அம்மாற்றம், நிலைமொழி, வருமொழிகளின் முதல், இடை, கடை எனும்
மூன்று இடங்களிலும் நிகழலாம். இத்தகைய புணர்ச்சியை 'விகாரப் புணர்ச்சி'
என்பர்.
அ. 'தோன்றல் விகாரம்':
நிலைமொழி, வருமொழிகட்கிடையே புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது ‘தோன்றல் விகாரம்’ ஆகும்.
எ-காட்டு
வாழை + பழம் = வாழைப்பழம்
('ப்' - புதிதாகத் தோன்றியது)
ஆ. 'திரிதல் விகாரம்':
இரு மொழிகளிலும் உள்ள எழுத்துக்கள் மாறி வருவது, ‘திரிதல் விகாரம்’.
எ-காட்டு
மண் + குடம் = மட்குடம்
'ண்', 'ட்' ஆகத் திரிந்தது.
இ. 'கெடுதல்' விகாரம்:
இருமொழிகட்கிடையேயான எழுத்து கெட்டுப்பின் சேருவது.
எ-காட்டு
மரம் + வேர் = மரவேர்
'ம்' கெட்டது; பின் சேர்ந்தது.
மேற்சுட்டிய
புணர்ச்சி மாற்றங்களில் ஒன்றான 'தோன்றல் விகாரம்' என்பதனை ஒட்டியே நாம்
காண இருக்கும் 'வல்லினம் மிகுதல்' அல்லது 'ஒற்று மிகுதல்' அமைகிறது.
வல்லினம் மிகுதலின் விதிகள்:
1. 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே'
(நன். சூத்: 165)
-என்பது
இலக்கணவிதி. அதாவது நிலைமொழியில் உயிர் எழுத்துக்கள் இறுதியாக நிற்க,
வருமொழி முதலில் கசதப வரின், அவ்விடத்து வந்த வல்லின மெய்கள் மிகுந்து
வரும். சிறுபான்மை மிகாமலும் வரும் என்பது பொதுவிதி.
எ-காட்டு
ஆடூஉ + குறியன் = ஆடூஉக் குறியன்
நிலைமொழி - ஆடூஉ (ஆண்மகன்)
'உ'கரம்* என்பது இதன் இறுதி எழுத்து. அதாவது உயிரீறு.
வருமொழி - குறியன் (சிறியவன்)
(க்+உ = கு)
வருமொழி
'க்' என்ற மெய்யே, இரு சொற்களின் இடையில் மிகுந்து வந்த வல்லின
மெய்யாகும். எனவே 'ஆடூஉக்குறியன்' என்றானது இதனை அல்வழிப்புணர்ச்சியில்
அடக்குவர்.
எ-காட்டு
செட்டி + தெரு = செட்டித்தெரு
(ட் + இ) (த் + எ)
நிலைமொழியில்
'இ' என்ற உயிரீறு நிற்க, வருமொழியில் 'த்' என்ற மெய்முதல் சேருமிடத்து
'த்' என்ற மெய், இடையே மிகுந்தது. ‘செட்டித்தெரு’ என்றானது, இதனை
வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.
இவ்வல்லின மெய்கள் உயிரீற்றின் முன் இவ்வாறு புணரும். இனி, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்பதன் விளக்கம் காணலாம்.
*கரம், காரம் - என்பன சாரியைகள்
கரம் - குறில் எழுத்தையும் ('எ'கரம்), ('உ'கரம்)
காரம் - நெடில் எழுத்தையும் ('ஏ'காரம்), ('ஐ'காரம்) சுட்டுவன.
புணர்ச்சியின் வகைகள்
1.வேற்றுமைப் புணர்ச்சி,
2.அல்வழிப் புணர்ச்சி
என இருவகையாகப் புணர்ச்சியைக் குறிப்பர்.
எ-காட்டு
'கடவுட் கருணை' - வேற்றுமைப் புணர்ச்சி
‘கடவுள் கருணை செய்தார்’ - அல்வழிப் புணர்ச்சி
இவை எவ்விதம் வேறுபட்டன?
'ஐ' முதல் 'கண்' வரை உள்ள வேற்றுமை உருபுகள் மறைந்தோ அல்லது வெளிப்பட்டோ வருமாறு சொற்கள் புணருதல், 'வேற்றுமைப் புணர்ச்சி'.
வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணருதல் 'அல்வழிப் புணர்ச்சி'.
தொகையும் விரியும்:
வேற்றுமைஉருபுகள் மறைந்து வந்தால் 'வேற்றுமைத் தொகை' என்றும்; மறையாமல் வெளிப்படையாக வந்தால் 'வேற்றுமை விரி' என்றும் கூறுவர்.
வேற்றுமைத் தொகை
வேற்றுமை விரி
நிலங்கடந்தான் ('ஐ' - மறைந்தது)
'நிலத்தைக் கடந்தான்'
('ஐ' - வெளிப்படை / விரிந்தது)
கல்லெறிந்தான் ('ஆல்' மறைந்தது)
'கல்லால் எறிந்தான்'
('ஆல்' / வெளிப்படை)
கொற்றன் மகன் ('கு' - மறைந்தது)
'கொற்றனுக்கு மகன்'
('கு' - வெளிப்படை)
மலை வீழருவி ('இன்' - மறைந்தது)
மலையின் வீழருவி
('இன்' - வெளிப்படை)
சாத்தன் கை ('அது' - மறைந்தது)
சாத்தனது கை
('அது' - வெளிப்படை)
குன்றக்குகை ('கண்' - மறைந்தது)
குன்றத்தின் கண் குகை
('கண்' - வெளிப்படை)
வேற்றுமையாவது யாது?
பொருளை வேறுபடுத்துவது வேற்றுமையாம்.
எ-காட்டு
'அமுதன் கொடுத்தான்' - எம்மாற்றமும் இல்லாத எழுவாய்த்தொடர்.
'அமுதனுக்குக் கொடுத்தான்' - மாற்றமுள்ள தொடர்.
பொருள் மாற்றம் தரும் எழுத்தான 'கு' என்பது வேற்றுமை உருபாகும்.
தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும்பெரிய பகுதியாகவும்
இருப்பது சந்தி இலக்கணம் ஆகும். சந்திஇலக்கணம் என்பது இரண்டு சொற்கள்
சேரும்போது ஏற்படும்மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும். இலக்கண
நூல்களைஇயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சிஇலக்கணம் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டாக
ஓடி + போனான் = ஓடிப்போனான் என்று வரும்.
இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும்இடையில் ப் என்ற மெய் எழுத்து தோன்றி இருக்கிறது. இவ்வாறுஇரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள்ஏற்படும்.
சந்தி வகைகள்
இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும்.
1. | கதவு + மூடியது = கதவுமூடியது - இயல்பாக இருக்கிறது. |
2. | மாலை + பொழுது = மாலைப்பொழுது - ஒரு மெய்எழுத்துத் தோன்றியது. |
3. | மரம் + நிழல் = மரநிழல் - ஓர் எழுத்துக் கெட்டது(அழிந்தது) |
4. | கல் + சிலை = கற்சிலை - ல் என்ற எழுத்து ற் என்றஎழுத்தாகத் திரிந்தது (மாறியது). |
எனவே இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக
வருதல்,தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும்வரும் என
அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன.முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லைவருமொழி என்றும்
கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின்இறுதி எழுத்துக்கும், வருமொழியின்
முதல் எழுத்துக்கும் ஏற்பஅமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும்
இறுதிஎழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.
வல்லின மெய்கள் அல்லது ஒற்றெழுத்துக்கள் மிகுமிடங்கள், மிகா
இடங்களை அறிந்து கொள்வதால் பிழையின்றித் தமிழை எழுதிட இயலும்.
எளிமையான சில இலக்கண விதிகளை விளக்கிக் கூறுவதால் அவர்கட்கு மொழிப்பயிற்சி இலகுவாகலாம்.
கல்லி கேள்வியா? கல்விக் கேள்வியா?
பத்து பதினைந்தா? பத்துப் பதினைந்தா?
பாடா பெண்ணா? பாடாப் பெண்ணா?
எழுத தெரியுமா? எழுதத் தெரியுமா?
இவை
போல்வன குழப்பம் தரும் சில சான்றுகள். இவற்றில் அடிக்கோடிட்ட எழுத்துக்கள்
ஒற்று / புள்ளி எழுத்துக்கள், இவை தொடரில் மிகுந்து வருதலே 'ஒற்று
மிகுதல்' அல்லது 'வல்லினம் மிகுதல்' ஆகும்.
எ-காட்டு
வேலை செய்தான்
வேலைச் செய்தான்
'வேலை
செய்தான்' என்பதில் ஒற்று மிகவில்லை. இது, பணியைச் செய்தான் என்ற பொருள்பட
அமைந்தது. 'வேலைச் செய்தான்' என்பதில் ஒற்று (ச்) மிகுந்தது. 'வேல்' எனும்
கருவியைச் (வேல்+ஐ) செய்தான் என்ற பொருள் பெற்றது.
இவ்விரு தொடர்களும் ஒற்று மிகுந்தாலும், ஒற்று மிகாமலும் இரு வேறு பொருள்பட்டன.
இரு சொற்கள் இணையுமிடத்தில் 'ஒற்று மிகுதல்' உண்டாகும். சொற்கள் இணைவதைப் ‘புணர்ச்சி’ என்பர்.
புணர்ச்சி என்பதன் விளக்கம்
மெய், உயிர் ஆகியவற்றை முதலும் இறுதியுமாகக் கொண்ட பகாப்பதம்
(பிரிக்க
முடியாத சொல்) பகுபதம் (பிரிக்கக் கூடிய சொல்) ஆகிய இரு பதங்களும்
தன்னொடுதானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிப்பொருள் அல்லது வேற்றுமைப்
பொருளினால் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவோ,
விகாரமாகவோ புணருவது 'புணர்ச்சி' எனப்படும்.
(நன்னூல். சூத்: )
எ-காட்டு
பூ + கூட்டம் = பூக்கூட்டம்
'பூ' என்பது - நிலைமொழி (நின்ற சொல்)
'கூட்டம்' என்பது - வருமொழி (வருகின்ற சொல்)
'க்' என்ற ஒற்று / மெய் / புள்ளியெழுத்து இவ்விரண்டின் இடையே மிக்கு நின்றது. 'பூக்கூட்டமானது.
வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம் - ய் ர் ல் வ் ழ் ள் - (18 மெய்கள்)
என
3 வகையாக மெய்யெழுத்துக்களமையும். வல்லின மெய்களுள் ட், ற் நீங்கிய பிற
நான்கும் (க், ச், த் ப்) 12 உயிரெழுத்துக்களுடன் சேருகின்றன. உயிர்மெய்யாக
மாறி சொல்லின் முதலில் வருகின்றன. (ட், ற் என்பன - மொழி முதலில் வாரா).
வருமொழியில் க், ச், த், ப் - வரும்பொழுது எந்த மெய் வருகிறதோ அந்த
மெய்க்கு ஏற்ற மெய்யெழுத்து புணர்ச்சியில் மிகுதலை 'வல்லினம் மிகுதல்'
என்பர்.
புணர்ச்சியின் மாற்றங்கள்:
இரு சொற்கள்
(நிலை மொழி + வருமொழி) சேருமிடத்துப் புணர்ச்சி மாற்றங்கள் நிகழும்.
அவ்விடத்து சொற்கள் இயல்பாகப் புணருதலை 'இயல்புப் புணர்ச்சி'
என்றும், விகாரமாக/ மாற்றங்களுடன் புணருதலை 'விகாரப் புணர்ச்சி' என்றும்
இரு வகைப்படுத்துவர்.
இயல்புப் புணர்ச்சி:
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாது சேருவது இயல்புப் புணர்ச்சி.
எ-காட்டு
வாழை + மரம் = வாழைமரம்
பொன் + மலை = பொன்மலை
விகாரப் புணர்ச்சி:
புணர்ச்சியில், ஓர் (1) எழுத்தோ, சாரியையோ புதிதாகத் தோன்றுதல்,
(2) வேறுபடுதல் (3) கெடுதல் - என்ற மூன்று நிலைகளில் மாற்றம் பெறலாம்.
அம்மாற்றம், நிலைமொழி, வருமொழிகளின் முதல், இடை, கடை எனும்
மூன்று இடங்களிலும் நிகழலாம். இத்தகைய புணர்ச்சியை 'விகாரப் புணர்ச்சி'
என்பர்.
அ. 'தோன்றல் விகாரம்':
நிலைமொழி, வருமொழிகட்கிடையே புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது ‘தோன்றல் விகாரம்’ ஆகும்.
எ-காட்டு
வாழை + பழம் = வாழைப்பழம்
('ப்' - புதிதாகத் தோன்றியது)
ஆ. 'திரிதல் விகாரம்':
இரு மொழிகளிலும் உள்ள எழுத்துக்கள் மாறி வருவது, ‘திரிதல் விகாரம்’.
எ-காட்டு
மண் + குடம் = மட்குடம்
'ண்', 'ட்' ஆகத் திரிந்தது.
இ. 'கெடுதல்' விகாரம்:
இருமொழிகட்கிடையேயான எழுத்து கெட்டுப்பின் சேருவது.
எ-காட்டு
மரம் + வேர் = மரவேர்
'ம்' கெட்டது; பின் சேர்ந்தது.
மேற்சுட்டிய
புணர்ச்சி மாற்றங்களில் ஒன்றான 'தோன்றல் விகாரம்' என்பதனை ஒட்டியே நாம்
காண இருக்கும் 'வல்லினம் மிகுதல்' அல்லது 'ஒற்று மிகுதல்' அமைகிறது.
வல்லினம் மிகுதலின் விதிகள்:
1. 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே'
(நன். சூத்: 165)
-என்பது
இலக்கணவிதி. அதாவது நிலைமொழியில் உயிர் எழுத்துக்கள் இறுதியாக நிற்க,
வருமொழி முதலில் கசதப வரின், அவ்விடத்து வந்த வல்லின மெய்கள் மிகுந்து
வரும். சிறுபான்மை மிகாமலும் வரும் என்பது பொதுவிதி.
எ-காட்டு
ஆடூஉ + குறியன் = ஆடூஉக் குறியன்
நிலைமொழி - ஆடூஉ (ஆண்மகன்)
'உ'கரம்* என்பது இதன் இறுதி எழுத்து. அதாவது உயிரீறு.
வருமொழி - குறியன் (சிறியவன்)
(க்+உ = கு)
வருமொழி
'க்' என்ற மெய்யே, இரு சொற்களின் இடையில் மிகுந்து வந்த வல்லின
மெய்யாகும். எனவே 'ஆடூஉக்குறியன்' என்றானது இதனை அல்வழிப்புணர்ச்சியில்
அடக்குவர்.
எ-காட்டு
செட்டி + தெரு = செட்டித்தெரு
(ட் + இ) (த் + எ)
நிலைமொழியில்
'இ' என்ற உயிரீறு நிற்க, வருமொழியில் 'த்' என்ற மெய்முதல் சேருமிடத்து
'த்' என்ற மெய், இடையே மிகுந்தது. ‘செட்டித்தெரு’ என்றானது, இதனை
வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.
இவ்வல்லின மெய்கள் உயிரீற்றின் முன் இவ்வாறு புணரும். இனி, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்பதன் விளக்கம் காணலாம்.
*கரம், காரம் - என்பன சாரியைகள்
கரம் - குறில் எழுத்தையும் ('எ'கரம்), ('உ'கரம்)
காரம் - நெடில் எழுத்தையும் ('ஏ'காரம்), ('ஐ'காரம்) சுட்டுவன.
புணர்ச்சியின் வகைகள்
1.வேற்றுமைப் புணர்ச்சி,
2.அல்வழிப் புணர்ச்சி
என இருவகையாகப் புணர்ச்சியைக் குறிப்பர்.
எ-காட்டு
'கடவுட் கருணை' - வேற்றுமைப் புணர்ச்சி
‘கடவுள் கருணை செய்தார்’ - அல்வழிப் புணர்ச்சி
இவை எவ்விதம் வேறுபட்டன?
'ஐ' முதல் 'கண்' வரை உள்ள வேற்றுமை உருபுகள் மறைந்தோ அல்லது வெளிப்பட்டோ வருமாறு சொற்கள் புணருதல், 'வேற்றுமைப் புணர்ச்சி'.
வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணருதல் 'அல்வழிப் புணர்ச்சி'.
தொகையும் விரியும்:
வேற்றுமைஉருபுகள் மறைந்து வந்தால் 'வேற்றுமைத் தொகை' என்றும்; மறையாமல் வெளிப்படையாக வந்தால் 'வேற்றுமை விரி' என்றும் கூறுவர்.
வேற்றுமைத் தொகை
வேற்றுமை விரி
நிலங்கடந்தான் ('ஐ' - மறைந்தது)
'நிலத்தைக் கடந்தான்'
('ஐ' - வெளிப்படை / விரிந்தது)
கல்லெறிந்தான் ('ஆல்' மறைந்தது)
'கல்லால் எறிந்தான்'
('ஆல்' / வெளிப்படை)
கொற்றன் மகன் ('கு' - மறைந்தது)
'கொற்றனுக்கு மகன்'
('கு' - வெளிப்படை)
மலை வீழருவி ('இன்' - மறைந்தது)
மலையின் வீழருவி
('இன்' - வெளிப்படை)
சாத்தன் கை ('அது' - மறைந்தது)
சாத்தனது கை
('அது' - வெளிப்படை)
குன்றக்குகை ('கண்' - மறைந்தது)
குன்றத்தின் கண் குகை
('கண்' - வெளிப்படை)
வேற்றுமையாவது யாது?
பொருளை வேறுபடுத்துவது வேற்றுமையாம்.
எ-காட்டு
'அமுதன் கொடுத்தான்' - எம்மாற்றமும் இல்லாத எழுவாய்த்தொடர்.
'அமுதனுக்குக் கொடுத்தான்' - மாற்றமுள்ள தொடர்.
பொருள் மாற்றம் தரும் எழுத்தான 'கு' என்பது வேற்றுமை உருபாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
அன்புடையீர், தங்களின் நீண்ட, மிக தெளிவான விளக்கத்திற்கு மிகுந்த நன்றி! என்னுடைய கேள்வியை பொருட்டாக மதித்து பொறுமையாக பதிலளித்தற்கு மீண்டும் நன்றி! என் நீண்ட கால சந்தேகங்களுக்கு இன்று விடை கிடைத்தது. இதை ஈகரை நண்பர்களின் சிறப்பாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.
tdrajeswaran- பண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» “தமிழுக்கு அமுதென்று பேர்..”
» தமிழுக்கு அமுதென்று பேர்...! கவிதைப்போட்டி 101
» தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?
» தமிழுக்கு அமுதென்று பேர் ! கவிதைப்போட்டி எண் 038
» தமிழுக்கு அமுதென்று பேர்...! போட்டிக்கவிதை எண் 016
» தமிழுக்கு அமுதென்று பேர்...! கவிதைப்போட்டி 101
» தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?
» தமிழுக்கு அமுதென்று பேர் ! கவிதைப்போட்டி எண் 038
» தமிழுக்கு அமுதென்று பேர்...! போட்டிக்கவிதை எண் 016
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|