Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
+6
வேணு
செங்கை ஆழியன்
சிவா
ஹாசிம்
கலைப்பிரியன்
ப்ரியா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள்..
தமிழ் மொழி சம்பந்தமான தெளிவின்மைகள், சந்தேகங்கள், இலக்கணம் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடும் கருத்துக் களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரியை ஆரம்பித்து வைக்கின்றேன்.எமக்கு ஏற்படும் தெளிவின்மைகளை எமது ஆசான்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்....
என்னங்க யாருங்க ஆரம்பித்து வைப்பது .
தமிழ் மொழி சம்பந்தமான தெளிவின்மைகள், சந்தேகங்கள், இலக்கணம் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடும் கருத்துக் களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரியை ஆரம்பித்து வைக்கின்றேன்.எமக்கு ஏற்படும் தெளிவின்மைகளை எமது ஆசான்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்....
என்னங்க யாருங்க ஆரம்பித்து வைப்பது .
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
நானே ஆரம்பிக்கின்றேன்
பின்வருவனவற்றிற்கு விளக்கமும் உதாரணமும் தாருங்களேன் ..
அடுக்கு தொடர் :
அடுக்கிடுக்குத் தொடர் :
இடக்கரடக்கல் :
அங்கதம் :
பின்வருவனவற்றிற்கு விளக்கமும் உதாரணமும் தாருங்களேன் ..
அடுக்கு தொடர் :
அடுக்கிடுக்குத் தொடர் :
இடக்கரடக்கல் :
அங்கதம் :
Last edited by priyatharshi on Thu May 06, 2010 6:13 pm; edited 1 time in total
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
சிலேடை
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் தரும்படும்படி அமைவது சிலேடை எனப்படும்
சிலேடை இரண்டு வகைப்படும்
செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து
கொண்டே பலபொருள் தருவதாகும்
எடுத்துக்காட்டு:
அருஞ்சொல் பொருள்
இப்பாடல்
சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள
சொற்கள் சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது, ஒரு பொருளையும், சோழனோடு
பொருத்திப் பார்க்கும் போது வேறு ஒரு பொருளையும் தருகின்றன.
சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது :-
கரங்கள் - கதிர்கள், கற்றைகள்;
இரவு - இருள்;
பங்கயம் - தாமரை;
மாதர் - காதல்;
நலம் - அழகு;
பயிலல் - உண்டாதல்;
பொங்குதல் - மேல் நோக்கி வளர்தல்;
உதயம் -தோற்றம்;
ஓர் ஆழி -ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர்;
வெய்யோன் - சூரியன்;
உயர்ந்த நெறி - வான் வழி (விண் விசும்பு).
சோழனோடு பொருத்திப் பார்க்கும்போது:-
கரங்கள் - கைகள்;
இரவு - வறுமை;
பங்கய மாதர் - தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்;
நலம் - செல்வம்;
பயிலல் -பெருகுதல்;
பொங்குதல் - மேம்படுதல்;
உதயம் - பொருள் வருவாய்;
ஓர் ஆழி - தனி ஆணைச் சக்கரம்;
வெய்யோன் - விரும்பப்படுபவனாகிய சோழன்;
உயர்ந்த நெறி - உயர்ந்த ஒழுக்கமாகிய நெறி.
2. பிரிமொழிச் சிலேடை
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது
வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அருஞ்சொல் பொருள்
இப்பாடல்,
சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர்
நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள்,
பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின்
மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத்
தருகின்றன.
சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
தள்ளா
இடத்து- அழகு கெடாத விளைநிலத்தில்;
ஏர் - பகட்டேர் அதாவது உழும் எருது;
தடம்- பெரிய;
தாமரை - தாமரை மலர்;
எள்ளா - இகழாத;
அரி - நெற்சூடு;
மானிடர் - உழவர்;
மிகுப்ப - திரட்ட;
உள்வாழ்தேம் - உள்ளே உண்டாகிய தேன்;
சிந்தும் -பொழியும்;
நந்தும் தொழில் புரிந்தார் - விரும்பும் பணி செய்தோர்.
சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
விடத்தேர் - முள்ளுடைய ஒருவகை மரம்;
தள்ளா-அசையாத;
தடம்- மலை;
சிந்தும்- அழியும்;
தா மரை - தாவுகின்ற மரை என்னும் மான்;
எள்ளா - இகழாத;
அரி மான் - சிங்கப் போத்து, ஆண் சிங்கம்;
இடர்- துன்பம்;
மிகுப்ப - செய்ய;
உள்வாழ்தேம் - உள்ளத்தில் வாழும் நாடு;
நந்தும் தொழில் புரிந்தார் - வேறுபடும் தொழில் செய்தோர்.
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் தரும்படும்படி அமைவது சிலேடை எனப்படும்
சிலேடை இரண்டு வகைப்படும்
- செம்மொழிச் சிலேடை
- பிரிமொழிச் சிலேடை
செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து
கொண்டே பலபொருள் தருவதாகும்
எடுத்துக்காட்டு:
செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்புரிந்து பங்கய மாதர் நலம்பயிலப் - பொங்குஉதயத்து ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும் நீர்ஆழி நீள்நிலத்து மேல் |
அருஞ்சொல் பொருள்
இப்பாடல்
சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள
சொற்கள் சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது, ஒரு பொருளையும், சோழனோடு
பொருத்திப் பார்க்கும் போது வேறு ஒரு பொருளையும் தருகின்றன.
சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது :-
கரங்கள் - கதிர்கள், கற்றைகள்;
இரவு - இருள்;
பங்கயம் - தாமரை;
மாதர் - காதல்;
நலம் - அழகு;
பயிலல் - உண்டாதல்;
பொங்குதல் - மேல் நோக்கி வளர்தல்;
உதயம் -தோற்றம்;
ஓர் ஆழி -ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர்;
வெய்யோன் - சூரியன்;
உயர்ந்த நெறி - வான் வழி (விண் விசும்பு).
சோழனோடு பொருத்திப் பார்க்கும்போது:-
கரங்கள் - கைகள்;
இரவு - வறுமை;
பங்கய மாதர் - தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்;
நலம் - செல்வம்;
பயிலல் -பெருகுதல்;
பொங்குதல் - மேம்படுதல்;
உதயம் - பொருள் வருவாய்;
ஓர் ஆழி - தனி ஆணைச் சக்கரம்;
வெய்யோன் - விரும்பப்படுபவனாகிய சோழன்;
உயர்ந்த நெறி - உயர்ந்த ஒழுக்கமாகிய நெறி.
2. பிரிமொழிச் சிலேடை
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது
வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய எள்ளா அரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம் சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம் நந்தும் தொழில்புரிந்தார் நாடு |
அருஞ்சொல் பொருள்
இப்பாடல்,
சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர்
நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள்,
பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின்
மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத்
தருகின்றன.
சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
தள்ளா
இடத்து- அழகு கெடாத விளைநிலத்தில்;
ஏர் - பகட்டேர் அதாவது உழும் எருது;
தடம்- பெரிய;
தாமரை - தாமரை மலர்;
எள்ளா - இகழாத;
அரி - நெற்சூடு;
மானிடர் - உழவர்;
மிகுப்ப - திரட்ட;
உள்வாழ்தேம் - உள்ளே உண்டாகிய தேன்;
சிந்தும் -பொழியும்;
நந்தும் தொழில் புரிந்தார் - விரும்பும் பணி செய்தோர்.
சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
விடத்தேர் - முள்ளுடைய ஒருவகை மரம்;
தள்ளா-அசையாத;
தடம்- மலை;
சிந்தும்- அழியும்;
தா மரை - தாவுகின்ற மரை என்னும் மான்;
எள்ளா - இகழாத;
அரி மான் - சிங்கப் போத்து, ஆண் சிங்கம்;
இடர்- துன்பம்;
மிகுப்ப - செய்ய;
உள்வாழ்தேம் - உள்ளத்தில் வாழும் நாடு;
நந்தும் தொழில் புரிந்தார் - வேறுபடும் தொழில் செய்தோர்.
Last edited by கலைப்பிரியன் on Wed May 05, 2010 9:32 pm; edited 2 times in total
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
அருமையான பாடம் நடக்கட்டும் பாடமெடுக்க பின்னர்நான் வருகிறேன் இப்போது படித்துவிட்டேன் நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
அடுக்குத்தொடர்
பிரித்தாலும் பொருள்தரும் இரட்டைச் சொற்களை அடுக்குத் தொடர் என்பர்.
எடுத்துக்காட்டு:
மன்னரைக் கண்ட மக்கள் வாழ்கவாழ்க என்று வாழ்த்தினர்.
எடுத்துக்காட்டில் இடம்பெற்ற வாழ்கவாழ்க என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தாலும் பொருள் தரும்.
கொசுரு...
இரட்டைக்கிளவி
பிரித்தால் பொருள்தராத இரட்டைச் சொற்களை இரட்டைக் கிளவி என்பர்.
எடுத்துக்காட்டு:
புயல் அடித்ததால் மரம் மடமட எனமுரிந்தது.
எடுத்துக்காட்டில் இடம்பெற்ற மடமட என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தால் பொருள் ஏதும் தராது.
பிரித்தாலும் பொருள்தரும் இரட்டைச் சொற்களை அடுக்குத் தொடர் என்பர்.
எடுத்துக்காட்டு:
மன்னரைக் கண்ட மக்கள் வாழ்கவாழ்க என்று வாழ்த்தினர்.
எடுத்துக்காட்டில் இடம்பெற்ற வாழ்கவாழ்க என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தாலும் பொருள் தரும்.
கொசுரு...
இரட்டைக்கிளவி
பிரித்தால் பொருள்தராத இரட்டைச் சொற்களை இரட்டைக் கிளவி என்பர்.
எடுத்துக்காட்டு:
புயல் அடித்ததால் மரம் மடமட எனமுரிந்தது.
எடுத்துக்காட்டில் இடம்பெற்ற மடமட என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தால் பொருள் ஏதும் தராது.
Last edited by கலைப்பிரியன் on Wed May 05, 2010 9:35 pm; edited 2 times in total
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
சிறப்பான திரியைத் துவங்கிய பிரியாவிற்கும் அதனைச் சிறப்புடன் கொண்டுசெல்லும் கலைப் பிரியனுக்கும் நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
அங்கதம்
அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும்அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்;
சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.
தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.
தனிமனித அங்கதம்
மனிதன்,
கிடைத்த பொருளை அனுபவிக்கத் தெரியாதவனாக உள்ளான். தாமரையருகில் வாழும் தவளையாகத் தேனுண்ணத்
தெரியாமல் வாழ்கிறான். அறிவியல் வசதிகள் வாய்க்கப் பெற்றும், அதனைச் சிறப்புறப் பயன்கொள்ளத் தெரியாமல் பாழாக்குகின்றான்.
"கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்
கண்களை மட்டும்
மூடிவிட்டு "
- (மேத்தா)
என்னும் வரிகளில் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது. இம்முட்டாள்தனத்தை மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ள
மாட்டார்களா இக்கவிதையைக் கண்ட பின்பு?
சமுதாய அங்கதம்
தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை !
- (ஞானக்கூத்தன்)
என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.
சமுதாயத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றத்தினர்,
அவற்றில் வழுவுகின்ற நிலையைக் கருத்தில் கொண்டு,
வழக்கறிஞர்களுக்குள்
கடுமையான
வாதம்-
இறந்து போய்விட்ட
நீதியின் பிணத்தை
எரிப்பதா. . .
புதைப்பதா . . .
என்று !
-(மேத்தா)
என்னும் கவிதை உணர்த்துகின்றது.
அரசியல் அங்கதம்
அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்யப் பலவிதமாக முழக்கமிடுவார்கள்.
ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே !
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள்] !
-(தமிழன்பன்)
என்னும் கவிதை மக்களை முட்டாளாக்கவே முனையும்
அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றது.
அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும்அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்;
சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.
தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.
தனிமனித அங்கதம்
மனிதன்,
கிடைத்த பொருளை அனுபவிக்கத் தெரியாதவனாக உள்ளான். தாமரையருகில் வாழும் தவளையாகத் தேனுண்ணத்
தெரியாமல் வாழ்கிறான். அறிவியல் வசதிகள் வாய்க்கப் பெற்றும், அதனைச் சிறப்புறப் பயன்கொள்ளத் தெரியாமல் பாழாக்குகின்றான்.
"கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்
கண்களை மட்டும்
மூடிவிட்டு "
- (மேத்தா)
என்னும் வரிகளில் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது. இம்முட்டாள்தனத்தை மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ள
மாட்டார்களா இக்கவிதையைக் கண்ட பின்பு?
சமுதாய அங்கதம்
தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை !
- (ஞானக்கூத்தன்)
என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.
சமுதாயத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றத்தினர்,
அவற்றில் வழுவுகின்ற நிலையைக் கருத்தில் கொண்டு,
வழக்கறிஞர்களுக்குள்
கடுமையான
வாதம்-
இறந்து போய்விட்ட
நீதியின் பிணத்தை
எரிப்பதா. . .
புதைப்பதா . . .
என்று !
-(மேத்தா)
என்னும் கவிதை உணர்த்துகின்றது.
அரசியல் அங்கதம்
அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்யப் பலவிதமாக முழக்கமிடுவார்கள்.
ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே !
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள்] !
-(தமிழன்பன்)
என்னும் கவிதை மக்களை முட்டாளாக்கவே முனையும்
அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றது.
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
நன்றி பிரியன் , நாளை மறுதினம் அரசபணிக்கு ஒரு தேர்வு இருக்கு எனக்கு ரொம்ப பயன்படும் ....
செங்கை ஆழியன்- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
செங்கை ஆழியன் wrote:நன்றி பிரியன் , நாளை மறுதினம் அரசபணிக்கு ஒரு தேர்வு இருக்கு எனக்கு ரொம்ப பயன்படும் ....
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
priyatharshi wrote:
பின்வருவனவற்றிற்கு விளக்கமும் உதாரணமும் தாருங்களேன் ..
அடுக்கு தொடர் :
அடுக்கிடுக்குத் தொடர் :
இடக்கரடக்கல் :
அங்கதம் :
அப்பா சாமி ஆள விடுங்க தாயீ ......
Last edited by வேணு on Fri May 07, 2010 7:27 pm; edited 1 time in total
Page 1 of 2 • 1, 2
Similar topics
» “தமிழுக்கு அமுதென்று பேர்..”
» தமிழுக்கு அமுதென்று பேர்...! கவிதைப்போட்டி 101
» தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?
» தமிழுக்கு அமுதென்று பேர் ! கவிதைப்போட்டி எண் 038
» தமிழுக்கு அமுதென்று பேர்...! போட்டிக்கவிதை எண் 016
» தமிழுக்கு அமுதென்று பேர்...! கவிதைப்போட்டி 101
» தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?
» தமிழுக்கு அமுதென்று பேர் ! கவிதைப்போட்டி எண் 038
» தமிழுக்கு அமுதென்று பேர்...! போட்டிக்கவிதை எண் 016
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|