ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்து சக்தியின் மகிமை

+6
அன்பு தளபதி
கோவை ராம்
சபீர்
பிளேடு பக்கிரி
சாந்தன்
seethamani
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வித்து சக்தியின் மகிமை - Page 2 Empty வித்து சக்தியின் மகிமை

Post by seethamani Tue May 04, 2010 3:00 pm

First topic message reminder :

நாம் உண்ணும் உணவுதான் இரசமாகி இரத்தம், கொழுப்பு, தசை, எலும்பு மஜ்ஜையாகி, இறுதியாக 7-வது தாதுவான விந்து நாதமாக மாறுகிறது.

விந்து நாதம் மூளையில் உற்பத்தியானாலும் உடல் முழுவதும் பரவியுள்ளது. வித்து கழிவினால் மட்டுமே பிறப்பு, இறப்பு உண்டாகிறது.

சீவ வித்துக் குழம்பில்தான் உயிர்த்துகள்கள் உற்பத்தியாகின்றன. இதிலிருந்துதான் Ectoplasm என்கிற தூய சக்தி உண்டாகிறது. நல்ல குழந்தை உருவாக வேண்டும் என்கிற காரணத்திற்காக மட்டும் வித்து வெளியேற்றம் வேண்டும். மற்ற இன்பத்திற்காக வெளியேறுமாயின் அது நோய் உண்டாக்கும். அதை வெளியேற்றாமல் பாதுகாப்பது நமது தலையாயக் கடமையாகும்.

அவசியமற்ற முறையில் செலவாகாமல் போதிய அளவில் வித்துவை சேமித்து வைத்துக் கொண்டால், 120 வருடங்கள் கண்டிப்பாக வாழலாம்.

வித்துவை அடக்கி வைப்பதோ, அல்லது அதிகம் செலவழிப்பதோ கூடாது.

ஒரு முறை விந்து வெளியேறும்போது அதன் அளவு சுமார் 2.5 ml ஆக இருக்கும். இது 10 முட்டைகள், 6 ஆரஞ்சுப் பழம், 2 எலுமிச்சைப் பழம் 100 gm. மாமிசம் இவற்றிற்கு ஈடான புரதச் சத்து, விட்டமின்கள், தாது உப்புக்கள் இவற்றிற்கு ஈடாகும்.

2.5 ml விந்துவில் 250 முதல் 350 மில்லியன் உயிரணுக்கள் (Sperms), 3cm/minute என்ற வேகத்தில் நீந்திச் செல்லும் தன்மையுடையது.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இரத்த வகைகள் உள்ளதுபோல், சீவவித்துக் குழம்பில் வெவ்வேறு இரசாயனத் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முறை தவறி இனச் சேர்க்கை செய்தால், வெவேறு இரசாயன மாற்றம் உள்ள விந்து கர்ப்பப் பையில் சேர்ந்தால், கர்ப்பப்பை புண்ணாகி அதில் புற்றுநோய் உண்டாகி அதை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலும் இந்த நோய் உள்ள பெண்ணோடு தொடர்பு கொண்டால் AIDS என்னும் கொடிய நோய் வேரும்.

சீவ வித்துக் குழம்பின் தரத்தையும், தன்மையையும் திணிவையும் பொறுத்துத்தான் உடலின் தன்மை அமையும்.

விந்து நாத விரயம் இன்பம் அல்ல. துன்பம்தான். அதை காயகல்பப் பயிற்சியின் மூலம் மேலே கொணடு சென்றால் தேகம் விழாது. கீழே இருந்தால் அடிக்கடி வெளியேற்ற வேண்டும் எனத் தூண்டும். அதனால் தேகம் கீழே விழுந்து விடும்.

இப்பேர்ப்பட்ட உன்னதமான வித்துவை வித்து சுழற்சி மூலம், உடல் முழுவதும் பரவ விட்டுத் தொடர்ந்து செய்தால் நீள் ஆயுள், நிறை செல்வத்துடன் வாழலாம்.
seethamani
seethamani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Back to top Go down


வித்து சக்தியின் மகிமை - Page 2 Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by T.N.Balasubramanian Sun Aug 30, 2015 5:39 pm

வாங்க raghuindian !
ஈகரை நல்வரவு கூறி வரவேற்கிறது !
எப்பிடி இப்பிடி ஒரு பழைய திரியை மேலே கொண்டு வந்துள்ளீர் ?
நண்பர்கள் உதவுவார்கள் .

நீங்கள் அறிமுகப்பகுதிக்கு சென்று (முகப்பு --வரவேற்பறை-அறிமுகம் ) பதிவிடுங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை - Page 2 Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by Dr.S.Soundarapandian Sun Aug 30, 2015 5:53 pm

வித்து சக்தியின் மகிமை - Page 2 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை - Page 2 Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by Namasivayam Mu Sun Aug 30, 2015 7:12 pm

seethamani wrote:இளமைகாத்து நீண்ட காலம் இந்த நிலவுலகில் வாழ்வது என்பது மனிதனது சாதனைக்கு உட்பட்டதே. இதற்கான வழி வகைகளை நம் நாட்டுச் சித்தர்கள் எழுத்து வடிவில் விட்டுச் சென்றிருந்தாலும், அவர்கள் கையாண்ட பரிபாஷைச் சொற்றொடர்களின் முழுப்பொருளும் விளங்காதிருந்த காரணத்தாலே "காயகல்பப் பயிற்சி'யானது பல நூற்றாண்டுகளாக மூடுமந்திரமாகவே இருந்தது. தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 40 ஆண்டு காலம் தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாகக் "காயகல்பப் பயிற்சி' அனைத்து மக்களுக்கும் கைகூடி வருகின்ற அளவுக்குத் தெளிவாக்கி உள்ளார்கள். இது குண்டலினி யோகத்தின் உச்சக்கட்டப்பேறாகும். இந்த அருமையான பயிற்சியைக் கற்றுக் கொள்ளும் முன் அதற்கு ஆதாரமான தத்துவத்தினையும் விஞ்ஞான ரீதியாக நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

உடல், உயிர்ச் சக்தி, விந்துநாதம், சீவகாந்தம், மனம் இவை ஐந்தும் ஒரு சேர இயங்கும் அமைப்பே மனிதன் என்கிற வடிவமாகும்.

கோடிக்கணக்கான சிற்றறைகள் (Cells) சேர்ந்து அடுக்கடுக்காக இயங்குவது இந்த உடல். ஒவ்வொரு சிற்றறைக்கும் இருபுறமும் காந்தக் கவர்ச்சி உண்டு. உடல் நிலைத்திருக்க வேண்டுமானால் அதில் அமைந்துள்ள சிற்றறைகளின் எண்ணிக்கைக்கும், பளுவுக்கும் ஏற்ற ஜீவகாந்த அழுத்தம் தேவை. "ஜீவகாந்தம்' என்பது உயிர்ச்சக்தி இயங்குவதால் எழும் அலையாகும். ஒவ்வொரு உயிர்த்துகளும் தன்னைத்தானே மிக விரைவாகச் சுற்றிக் கொண்டு இருப்பதால், அதிலிருந்து விரிந்து கொண்டே இருக்கும் அலை தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருக்கிறது. ஓர் உடலில் உள்ள உயிர்த்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஜீவகாந்த அழுத்தம் நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் இருக்கும் வரையில்தான், உடலில் உள்ள சிற்றறைகளின் அடுக்குக் குலையாமல் நிலைத்து இருக்கும்.

இரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், இம்மூன்றும் சிதறாது ஒழுங்காக ஓடி, உயிருக்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவை நிலைக்கச் செய்யும். எனவே உடலைத்தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை.

ஜீவகாந்தத்தைப்பெருக்க வேண்டுமெனில், அதற்கு வேண்டிய எண்ணிக்கையுள்ள உயிர்த் துகள்கள் தேவை.

உயிர்த்துகள்களோ விந்துநாத திரவத்தின் அளவையும், தன்மையையும் பொறுத்திருக்கும். போதிய அளவு விந்து (ஆண் வித்து) அல்லது நாதம் (பெண் வித்து) இருந்தால்தான் உடலை நடத்தப் போதுமான ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உடலில் உயிர்ச் சக்தித்துகள்கள் நிலைத்திருக்கும். ஜீவகாந்த அளவு சரியாக இருந்தால்தான் பரு உடலானது சிற்றறைகளின் ஒழுங்கான இயக்கத்தால் சீராக இயங்கிக் கொண்டிருக்கும்; மனமும் நல்ல முறையில் இயங்கும். ஜீவ காந்தத்தின் ஒரு பகுதி உடல் சிற்றறைகளின் மூலம் உடலியக்கமாகவும், (Metabolic routine) , மற்றொரு பகுதி மூளையின் சிற்றறைகள் மூலமாக மன அலைகளாகவும் இயங்கிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடல், விந்து, உயிர்ச் சக்தி, ஜீவகாந்தம், உடல் மன இயக்கம் என்ற தொடரினை நன்றாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்தில் ஒன்று குறைந்தாலும், இயக்க ஒழுங்கு குலைந்தாலும் அது மற்றவற்றையும் ஒவ்வொன்றாகப் பாதிக்கும். அப்படி ஒன்றுக்கு ஒன்று ஏற்படும் இயக்க முரண்பாட்டிற்கு ஏற்ப வலி, வியாதி, மரணம் இவை சம்பவிக்கும்.

தனது செயல்கள் மூலமாகவோ, வெளிப்புற மோதுதல் அல்லது கோள்களின் காந்த அலைவீச்சு மூலமாகவோ உடலுடைய ஜீவகாந்தம் அல்லது உடலியக்கம் பாதிக்கப்படலாம். உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் இந்த ஐந்து வகையில் அலட்சியம், மிதமிஞ்சிய உபயோகம், முரண்பட்ட உபயோகம் இவற்றால் உடல் இயக்கம் பாதிக்கப் படலாம். இது தன்னுடைய செயல் மூலமாக வரும் விளைவு. இது தவிர தட்ப வெப்ப ஏற்றத் தாழ்வு மற்றும் தற்செயல் விபத்துக்களால் (Accident) ஏற்படும் குழப்பங்கள், கோள்கள் சஞ்சாரத்தில் அண்மை சேய்மை, ஒன்றோடு ஒன்று நேர்படுதல், ராசி மாற்றம் ஆகிய காரணங்கள், ஒவ்வொருவரின் பிறந்த நாள் கோள்கள் நிலைகளுக்கு ஏற்ப ஜீவகாந்தம் ஏற்றத் தாழ்வடைதல், இப்படி அநேக அம்சங்களால் குழப்பம் வரலாம்.

எந்த விதத்தில் உடல் நலம் குழப்பமடைந்தாலும், தானே அதனைச் சரிப்படுத்தி உடலை நலமாக்கிக் கொள்கின்ற இயற்கை நியதி உடலிலேயே ஒவ்வொருவருக்கும் ஓரளவு அமைந்திருக்கிறது; இதனை ""குழப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் இயற்கை நியதி'' (Immunity against disturbance) என்று கூறு வார்கள். இந்த இயற்கை நியதி அமைந்த அளவுக்கு மேலாக குழப்பம் மீறினால்தான் அது உடலியக்கத்தைப் பாதிக்கும். அவ்வாறு பாதிப்பு ஏற்படும் பொழுது, மனிதன் தன்னுடைய முயற்சியினால் உடற்பயிற்சி, உளப்பயிற்சி, உணவு முறை உடல் நலத்தைக் காத்துக் கொள்ளலாம்.

முதுமை வரும் காரணம் :

மனிதன் நிலவுலகத்தின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். 25,000 மைல் சுற்றளவு கொண்டு, மண், உலோகங்கள், ரசாயனங்கள் இவை அடங்கிய ஒரு பெரிய கோளம் நிலவுலகம். அது, ஒரு மணிக்குச் சுமார் 1,000 மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. சூரியனை மணிக்குச் சுமார் 66,000 மைல் வேகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தன்னைத் தானே சுற்றும் வேகத்தால், எந்தக் கெட்டிப் பொருளையும் மையத்தை நோக்கி இழுக்கும் இயற்கை நியதி அதற்கு அமைந் திருக்கிறது. அதனால் மனிதனின் பரு உடலிலுள்ள சிற்றறைகள் (Cells) எல்லாம் பூமியின் மையம் நோக்கி இழுக்கப்படவும், அதே உடலில் உள்ள உயிர் அணுக்கள் உடலைவிட்டு மேலே தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கவும், பூமியின் தற்சுழற்சி காரணமாக இருக்கிறது. பூமியின் கவர்ச்சிச் சக்தியால் உடலை விட்டு உயிர் பிரியாதிருக்க, ஒவ்வொரு உயிருக்கும் ஒரு காலம் அமைந்து உள்ளது. அந்தக் காலம் வரையில், ஒவ்வொரு நாளும் உயிர்ச் சக்தியின் விலகல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கடைசியில் பிரிந்துவிடும். இந்த நியதியின் விளை வாகவே, மனிதனுக்கு 40 வயது வரையிலே வளர்ச்சியும், 80 வயதிற்கு மேலாகத் தளர்ச்சியும் உடலில் ஏற்படுகின்றன.

ஆறாவது அறிவிற்கு இயற்கையின் நியதிகளை உணர்ந்து, அதை ஓரளவு வெல்லும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் உடலில் இருந்து பிரியும் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டால் மரணத்தை நீண்ட நாட்கள் தள்ளிப் போடலாம்.

உயிர் தாங்கியான வித்தைப் போதிய அளவு கெட்டிப் படச் செய்துவிட்டால், உயிர் பிரியாமலே அதனை உடலிலேயே நிலைக்க வைத்து விடவும் செய்யலாம். வாழ்ந்தது போதுமென்ற நிறைவு ஏற்படும் போது மன இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். மன இயக்கம், உடல் இயக்கம் இரண்டும் நின்று விட்ட பின், உடலிலேயே உயிர் அடக்கம் பெற்று இருக்குமானால், அதனை ஜீவசமாதி என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையை அடைய வேண்டுமானால் வித்தின் நீர்ப்புத் தன்மையைக் குறைத்து, உடலை விட்டு பல வகையிலே வெளியேறும் தன்மையையும் குறைத்து விட்டால், மூலாதாரத்திலேயே தேக்கமுறும். வித்திலிருந்து சுத்த சக்தியான, ஓஜஸை பதங்கமாகப் பிரித்து முதுகுத் தண்டு வழியாக மேலேற்றி, மூளையில் உற்பத்தியாகும் வித்துச் சக்தியோடு இணையச் செய்ய முடியும். இதனை ஆங்கிலத்தில் Recycling of Sexual Vital Fluid என்று கூறலாம்.
இதற்கு முறையான பயிற்சியினைப் பின்பற்ற வேண்டும். முதுமையைத் தடுக்க, ஒவ்வொரு நாளும், தளர்ச்சியுறும் நரம்புகளைப் பயிற்சியினால் முறுக்கேற்றிக் கொண்டிருக்க வேண்டும். மரணத்தைத் தடுக்க, வித்துச் சக்தியைப் பதங்கமாக்கி, அதன் உற்பத்தி நிலையத்தோடு இணைக்க வேண்டும். இந்த இரண்டு பயிற்சிகளும் ஒன்றிணைந்ததே காயகல்பப் பயிற்சியாகும்.
அரியதோர் சித்தர் கலையாகிய இந்தக் காயகல்பப் பயிற்சி காலை, மாலை மற்றும் உணவுக்கு பிறகும், இரவு படுக்கும் முன்பும் அததற்கேற்ற இருப்பு நிலையில் செய்து வாருங்கள்.

முதல் வாரம், நரம்பூக்கம் என்ற பயிற்சியினை ஒவ்வொரு நிலையிலும் பத்துத் தடவைகள் செய்து, ஓஜஸ்மூச்சு ஒன்று வீதம் போட்டு வாருங்கள். உங்கள் உடலுக்கு பொருந்திவிட்ட பிறகு, நரம்பூக்கப் பயிற்சி இருபதும், ஓஜஸ் மூச்சுப் பயிற்சி இரண்டும் ஒவ்வொரு நிலையிலும் போடலாம். முதலிலேயே அதிகமாக ஓஜஸ் மூச்சுப் போட்டால் உடலில் சூடு அதிகமா கலாம். உள் சதைகளில் சிறிது பொருந்தா உணர்வு ஏற்படலாம். உடல் சூடானாலும், உள்சதைகளில் சிறிது வலி தெரிந்தாலும் ஓரிரு நாளைக்கு அல்லது சில வேளைகளுக்கு ஓஜஸ் மூச்சுப் பயிற்சியை நிறுத்தி வைக்கவும்.

காயகல்பப் பயிற்சியின் பயன்கள் :

காயகல்பப் பயிற்சி மிகவும் மதிப்புடையது. மனிதனின் வாழ்வில் உடல் நலம், மனவளம், பொருள் செழிப்பு, தொழில் திறம், உயர் நட்பு ஆகிய அனைத்தும் அளித்துச் சிறப்பிக்க வல்லது. அதன் முழுப் பயனையும் அடைய வேண்டுமானால், தொடக்கத்தில் ஒரு வாரம் உடல் உறவுகொள்ளாமலிருப்பது மிக்க நலம் தரும்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் முதல் மூன்று நாட்கள் இப்பயிற்சியைச் செய்யக் கூடாது. இரண்டு மாத கர்ப்பத்திற்கு (pregnancy) மேல் ஓஜஸ் மூச்சுப் பயிற்சியை நிறுத்தி விடவும். நரம்பூக்கப் பயிற்சி மட்டிலும் காலை, பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் செய்து வரலாம். எளிய, இயற்கையான பிள்ளைப்பேறு (child delivery) உண்டாகும்.

காயகல்பப் பயிற்சியினால் உடல் நலமும், மனவளமும் நன்றாக இருப்பதோடு, ஆண்மை ஓங்கும், உடல் உறவு விருப்பம் எப்பொழுதும் மனதுக்குக் கட்டுப்பட்டிருக்கும். இளமையிலேயே துறவு கொள்வோர் மற்றும் பொதுத் தொண்டில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோர் தங்கள் கற்பு மற்றும் உடல் நலத்தைக் காத்துக் கொள்ள இந்தப் பயிற்சி ஒரு வரப் பிரசாதமாகும். நாளுக்கு நாள் அறிவு மேலோங்கி, மெய்ப் பொருள் விளக்கம் ஏற்படும். நீண்ட காலமாக இருந்து வரும் நோய்கள் படிப்படியாகக் குணமடைந்து உடல் நலமுறும். திருமணத்திற்குப் பின் உடல் நலமும், அறிவு வளமும் உடைய குழந்தைகள் உண்டாவார்கள். தானே விரும்பும்வாறு குழந்தை பெற்றுக் கொள்வதோ, தடுத்துக் கொள்வதோ இயல்பாக முடியும்.

சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களும் நீங்கி, அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
மேற்கோள் செய்த பதிவு: 260265
வாழ்க வளமுடன்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

வித்து சக்தியின் மகிமை - Page 2 Empty Re: வித்து சக்தியின் மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum